ரால்ப் வால்டோ எமேர்சன்

விக்கிமேற்கோள் இலிருந்து
(எமர்சன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ரால்ப் வால்டோ எமேர்சன்

ரால்ப் வால்டோ எமேர்சன் (Ralph Waldo Emerson ) (மே 25, 1803 – ஏப்ரல் 27, 1882) என்பவர் ஐக்கிய அமெரிக்க நாடுகளைச் சார்ந்த எழுத்தாளராகவும், சொற்பொழிவாளராகவும், கவிஞராகவும் விளங்கி, 19ஆம் நூற்றாண்டின் மையப்பகுதியில் "கடப்புவாதம்" (Transcendentalism) என்னும் கொள்கையை முன்னெடுத்துச் சென்ற அறிஞர் ஆவார்.

மேற்கோள்கள்[தொகு]

  • காட்டுவாசி ஒருவன் கொட்டிய பாறையில்தான் கவிதை தோன்றியிருக்க வேண்டும்.
  • நமது அறிவுத் திண்மையும் செயல்படும் திறனும் வளர்வது அன்பினாலே.
  • பூக்களின் வாயிலாக பூமி சிரிக்கின்றது.
  • நான் மேற்கோள்களை வெறுப்பவன்; உனக்குத் தெரிந்ததைக் கூறு.
  • நீ முடிவெடுத்த உடனே, இந்த அண்டமே அதை நடத்திக்காட்ட தயாராகிவிடுகின்றது.
  • நீங்கள் கோபப்படும் ஒவ்வொரு நிமிடத்திலும் அறுபது விநாடிகள் நிம்மதியை இழக்கின்றீர்கள்.
  • உங்கள் நண்பரின் வீட்டிற்கு அடிக்கடி செல்லுங்கள்; பயன்படுத்தாத பாதையில் புதர் மண்டிவிடும்.
  • ஒவ்வொரு பேரறிவு-மிக்க செயல்களிலும் நாம் ஒதுக்கித்தள்ளிய நம் எண்ணங்களைக் காணலாம்; ஒருவித அயன்மை மிடுக்குடன் நம்மையே அவை வந்தடையும். In every work of genius we recognize our own rejected thoughts; they come back to us with a certain alienated majesty.
  • மறுசிந்தனையே சிறந்த சிந்தனை
  • ஒரு காலத்திய மதம் அடுத்த காலத்தின் இலக்கிய பொழுதுபோக்காகிறது.
  • சுறுசுறுப்புடன் எல்லாவற்றையும் செய்கிறவனுக்கு, எல்லாக் கதவுகளும் திறந்திருக்கும்.
  • திறமைதான் ஏழையின் மூலதனம்.
  • நூலகம் ஒரு மாயக்கூடம், அங்கு பலவகை வசீகர ஆவிகள் உலவுகின்றன.
  • நாம் விருந்துக்குப் போகும் போது உடுத்த வேண்டிய மிகச் சிறந்த உடைகளில் ஒன்று நகைச்சுவை.
  • நான் செய்யும் ஒவ்வொரு செயலும், நான் அனுபவிக்கும் ஒவ்வொரு வேதனையும், என்னை எல்லாவிதத்திலும் புதிய மனிதனாக மாற்றுகின்றன. வறுமை, அன்பு, அதிகாரம், கோபம், நோய், துயரம், வெற்றி எல்லாம் என் மனத்தில் புதைத்து கிடக்கும் பல்வேறு சக்திகளை வெளிக்கொணர்கின்றன. இவைகளினால் எனது அற்ப ஆசைகள் பாதிக்கப் பட்டாலும் எனது மனோசக்தி பெருகுவது தடைப்படுவதில்லை.[1]

அமைதி[தொகு]

  • உன்னைத் தவிர உனக்கு அமைதியை வேறு எதுவும் கொண்டுவர முடியாது தத்துவங்களின் வெற்றியாலேயே அமைதி ஏற்படும்.[2]

அரசாங்கம்[தொகு]

  • ஆண்டு அடக்குதல் குறையக் குறைய நமக்கு நல்லது. சட்டங்கள் குறைவாயிருப்பதும் அளிக்கப்படும் அதிகாரம் குறைந்திருப்பதும் நலம், சாதாரணமான அரசாங்கத்தால் விளையும் தீமைக்கு மாற்று. தனிப்பட்டவரின் ஒழுக்கமும், தனி மனிதரின் வளர்ச்சியும்.[3]

அறம்[தொகு]

  • நன்மை ஒரு நல்ல வைத்தியன். ஆனால், தீமை சில சமயங்களில் அதைவிட மிக நல்ல வைத்தியன்.[4]

அறிவியல்[தொகு]

  • விஞ்ஞானம். பழைய புராணக் கதைகளிலுள்ள அற்புதங்களையும் மிஞ்சிவிடுகின்றது.[5]

அறிவு[தொகு]

  • கடவுள் ஆலோசிப்பவன் ஒருவனை உலகிற்கு அனுப்பினால், ஜாக்கிரதை அப்பொழுது அனைத்தும் அபாய நிலை அடையும்![6]
  • பக்தர் 'தன்'னைத் துறத்தல் போலவே அறிஞரும் 'தன்'னைத் துறத்தல் அவசியமானதே.[6]

அறிவின்மை[தொகு]

  • அறியாதாரிடம் அனுதாபம் கொள்வது தலைசிறந்த பண்பாட்டிற்கு அறிகுறி.[7]

அற்ப விஷயம்[தொகு]

  • ஆயிரம் காடுகளை உண்டாக்கும் ஆற்றல் ஒரு விதையில் அடங்கியிருக்கின்றது.[8]

அழகு[தொகு]

  • அழகுள்ள எதையும் பார்க்கும் வாய்ப்பை ஒருகாலும் இழந்துவிட வேண்டாம்.[9]
  • ஆண்டவன் நல்லொழுக்கத்தின்மீது வைக்கும் முத்திரையே அழகு இயகையான எந்தச் செயலும் வழிலுடையது: ஒவ்வொரு வீரச்செயலும் நேர்த்தியானது. அது நிகழும் இடத்தையும், அருகில் நிற்பவர்களையும் ஒளியமாக்குகின்றது.[9]

அன்னை[தொகு]

  • தாய்மார்கள் உருவாக்கிய முறையிலேதான் மனிதர்கள் இருப்பார்கள். முரட்டுத் துணிகளை நெய்யும் தறியில் காஷ்மீரப் பட்டை எதிர்பார்ப்பதும், பொறியியல் நிபுணரிடம் கவிதையை எதிர்பார்ப்பதும், தரகுக்காரனிடம் புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்பை எதிர்பார்ப்பதும் வீணாகும்.[10]

ஆன்மா[தொகு]

  • ஆன்ம அபிவிருத்தி- மனிதனைப் பரிபூரண மாக்குவதே அதன் லட்சியம். அதனால் அது சரீர வாழ்வை யெல்லாம் சாதனமாகத் தாழ்த்திவிடும்.[11]

இசை[தொகு]

  • இசையே ஏழைகளின் கலா சொர்க்கம்.[12]

உரையாடல்[தொகு]

  • உரையாடல் என்ற கலையில் ஒரு மனிதனுக்கு உலகிலுள்ள எல்லா மனிதர்களும் போட்டியாயிருக்கின்றனர். - [13]
  • சம்பாஷணைதான் மாணவனுக்கு ஆராய்ச்சிக்கூடமும், தொழில் நிலையமும் ஆகும்.[13]

உதவி[தொகு]

  • பிறர் செய்த உபகாரம் அதிகமாக உன் கையில் தங்கவிடாமல் பார்த்துக்கொள், ஜாக்கிரதை.[14]

எதிர்ப்பு[தொகு]

  • ஊக்கமுள்ள ஆன்மா சிரமமில்லாத வெற்றியை வெறுக்கின்றது. தாக்குவோனுடைய ஆவேசமும் தற்காத்துக்கொள்பவனுடைய வேகத்தை அதிகப்படுத்தும்.[15]

கருத்து[தொகு]

  • உலக அபிப்பிராயத்தைத் தழுவிக்கொண்டு உலகிலே வாழ்வது எளிது. ஏகாந்தமான இடத்தில் நம் சொந்த அபிப்பிராயமுடன் வாழ்தல் எளிது. ஆனால், மக்கள் கூட்டத்தின் நடுவில் ஏகாந்தத்திலுள்ள சுதந்தரத்துடன் இனிதாக வாழ்பவேனே பெரிய மனிதன்.[16]

கல்வி[தொகு]

  • கற்பிப்பதன் இரகசியம் மாணவனுக்கு மதிப்பளிப்பதில் இருக்கின்றது.[17]

கவிதை[தொகு]

  •  கவிதை வெற்றி பெறுவது அழுவதை மாற்றுவதிலும் மனத்திற்குத் திருப்தி அளிப்பதிலுமில்லை. அடையமுடியாததை அடைவதற்காக மறுபடியும் முயற்சி செய்யும்படி நம்மை எழுப்பி விடுவதிலேயே உண்டு.[18]

கூட்டம்[தொகு]

  • ஜனக் கூட்டத்திற்குத் தன்னம்பிக்கையும், தனித்த செயல் திறமையும் கிடையாதென்பதால், வலிமை பெற்றவர்களுக்கு வாய்ப்புண்டாகிறது.[19]

கொள்கை[தொகு]

  • பரிசுத்தமான சித்தாந்தம் பரிசுத்தமான நன்மைகளின் மூலம் எப்பொழுதும் பயனளித்து வருகின்றது.[20]

சமூகச் செல்வாக்கு[தொகு]

  • பேரறிவும் புனித வாழ்வும் உலகம் வெளியிடும் சிந்தனைகள். உலகை மாற்றிவிடுகின்றன.[21]

சான்றோர்[தொகு]

  • சால்பின் சாரம் அறத்தைச் செய்வதற்கு அறமாகிய காரணமே போதும் என்பதே.[22]
  • பணம் படிப்பு பதவி முதலியவைகளில் பிறரைப்போல் இருப்பதே சுகம் என்று எண்ணுகிறோம். ஆனால் கடவுளோ துன்பத்தையும் தோல்வியையும் தந்து நமக்கு உயர்ந்த அன்பையும் உண்மையையும் அறிவித்துச் சான்றோனாக்க முயல்கிறார். -[22]
  • உயர்ந்த விஷயங்களை எளிய முறையில் கூறுவதே சால்பின் லட்சணம்.[22]

செல்வம்[தொகு]

  • இளைஞருக்கு வழி காட்டுதல், ஆற்றலைப் பெருக்குதல், நம்பிக்கை ஊட்டுதல், அணைக்கின்ற கரிக்கங்குகளை ஊதித் தீ மூட்டுதல், புதிய சிந்தனையாலும் உறுதியான செயலாலும் தோல்வியை வெற்றியாக்குதல் - இவையெல்லாம் எளிதான காரியங்களல்ல. இவை தெய்விக மனிதர்களின் வேலையாகும்.[23]

சொற்கள்[தொகு]

  • இந்த வாக்கியத்தின் பின்னால் ஒரு மனிதன் உள்ளனரா. இல்லையா? இது ஒரு ஆன்மாவைப் பிரதிபலிக்கின்றதா, இல்லையா? இதைப் பொறுத்ததே அதன் ஆற்றல்.[24]

சொற்பொழிவு[தொகு]

  • பேச்சாளரோ, ஆசிரியரோ, தம் கருத்துகளைவிடத் தம் சொற்கள் சிறியவைகளாக இருக்கும்படி செய்யக் கற்றுக்கொள்ளும்வரை வெற்றி பெற இயலாது.[25]

நன்மை செய்தல்[தொகு]

  • துன்பத்தைக் கண்டு இரங்குதல் மனித இயல்பு அதை நீக்குதல் தெய்விகமாகும்.[26]

நூலாசிரியர்[தொகு]

  • ஆசிரியராவதற்கு அறிவுத்திறன் மட்டும் போதாது நூலுக்குப் பின்னால் ஒரு மனிதன் இருக்கவேண்டும்.[27]

நேர்மையின்மை[தொகு]

  • நயனம் ஒன்று சொல்ல நாவொன்று சொல்லின், விஷயம் அறிந்தவன் நயன மொழிகளையே நம்புவான்.[28]
  • ஒவ்வொரு மனிதனும் தன் அண்டையில் இருப்பவர்கள் தன்னை ஏமாற்றாமலிருக்க வேண்டும் என்று கவனமாய், பார்த்துக்கொள்கிறான். ஆனால், பின்னால் ஒரு காலம் வருகின்றது. அப்பொழுது அவன் தான் எவரையும் ஏமாற்றாமலிருக்க வேண்டுமே என்று கவனமாயிருக்கத்தொடங்குகிறான். அது முதல் எல்லாம் சரியாக நடந்து வருகின்றது.[29]

நாகரிகம்[தொகு]

  • ஒரு தேசத்தின் நாகரிகத்தை அளக்குங்கோல் அதன் ஜனத்தொகையோ நகரங்களின் விசாலமோ செல்வத்தின் மிகுதியோ அன்று. அதில் பிறக்கும் மனிதரின் குணமேயாகும்.[30]
  • நாகரிகம் உண்டாக்கத் தக்க நிச்சயமான வழி பெண்களின் செல்வாக்கே.[30]
  • நாகரிகத்தின் உச்சிப் பொழுது வந்துவிட்டதாக எண்ணுகிறோம். ஆனால் இப்பொழுதுதான் கோழி கூவும் சமயம்.[30]

பிரபுக்கள்[தொகு]

  • சிலர் எப்பொழுதும் மற்றவர்களுக்கு மேலாகவே இருப்பர். இன்றுள்ள ஏற்றத்தாழ்வை அழித்துவிட்டால், அது நாளை மறுபடி தோன்றிவிடும்.[31]

மரியாதை[தொகு]

  • அமைதி ஆத்திரமோ ஆவேசமோ இல்லாமை ஆகிய இவை நேர்த்தியான பண்புகளைக் காட்டும்; கனவான் ஓசையுண்டாக்க மாட்டான். சீமாட்டி சாந்தமாயிருப்பாள்.[32]

மன எழுச்சி[தொகு]

  • உலகத்தின் வரலாற்றில் பெரிய இயக்கங்களுக்கெல்லாம் காரணம் மன எழுச்சிதான். அது இல்லாமல் பெரிய காரியம் எதையும் ஒரு காலத்தும் சாதிக்க முடிந்ததில்லை.[33]

மௌனம்[தொகு]

  • மௌனத்திற்கு ஆச்சரியமான எத்தகைய ஆற்றலிருக்கின்றது உதடுகள் மூடியிருக்கும் பொழுது எத்தனை தீர்மானங்கள் செய்யப்பெறுகின்றன. எத்தனை ஆன்மார்த்திகமான வெற்றிகள் அடையப்பெறுகின்றன:ஆன்மா, இறைவனின் பார்வை தன்மீது விழுவதை அந்தரங்கமாக எவ்வளவு உணர்கின்றது.[34]

வீரம்[தொகு]

  • தன்னைத்தான் நம்புதல் வீரத்தின் சாரம்.[35]

சான்றுகள்[தொகு]

  1. சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 31-40. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
  2. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 39-40. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  3. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 43-46. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  4. என். வி. கலைமணி (1984). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் (நாட்டுடமை நூல்). தேவகோட்டை: மெய்யம்மை நிலையம். pp. 13- 21. 
  5. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 313-314. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  6. 6.0 6.1 என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/அறிவு. நூல் 52- 61. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  7. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 65-66. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  8. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 75-77. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  9. 9.0 9.1 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 58-61. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  10. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 81-82. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  11. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/ஆன்மா. நூல் 44- 46. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  12. பொ. திருகூடசுந்தரம் (1959). அறிவுக் கனிகள்/இசை. நூல் 158-159. காந்தி நிலையம். Retrieved on 13 மே 2019.
  13. 13.0 13.1 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 126-127. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  14. பொ. திருகூடசுந்தரம் (1959). அறிவுக் கனிகள்/உபகாரம். நூல் 146-148. காந்தி நிலையம். Retrieved on 13 மே 2019.
  15. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 134-135. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  16. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 33-37. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  17. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 155-156. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  18. பொ. திருகூடசுந்தரம் (1959). அறிவுக் கனிகள்/கவிதை. நூல் 159-163. காந்தி நிலையம். Retrieved on 13 மே 2019.
  19. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 178-179. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  20. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 168. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  21. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 197-198. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  22. 22.0 22.1 22.2 என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/சான்றோர். நூல் 67 - 69. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  23. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 194-197. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  24. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/சொல். நூல் 85- 87. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  25. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 199-200. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  26. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 231. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  27. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 243-244. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  28. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/வஞ்சகம். நூல் 74- 75. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  29. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 40-41. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  30. 30.0 30.1 30.2 என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/நாகரீகம். நூல் 98- 99. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  31. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 268-269. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  32. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 297-298. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  33. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 300. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  34. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 307. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  35. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 316. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.

வெளியிணைப்புக்கள்[தொகு]

Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


"https://ta.wikiquote.org/w/index.php?title=ரால்ப்_வால்டோ_எமேர்சன்&oldid=36232" இலிருந்து மீள்விக்கப்பட்டது