தேரையர்

Wikiquote தளத்திலிருந்து

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடுக

தேரையர் தமிழ்நாட்டின் பதினெண் சித்தர்களில் ஒருவர். இவர் இயற்றிய "நோய் அணுகா விதி" என்னும் நூலில் இருந்து பின்வரும் பா தரப்படுகிறது:


உண்பது இருபொழுதொழிய முப்பொழுதும் உண்ணோம்.
    உறங்குவது இராவொழியப் பகலுறக்கம் செய்யோம்.
பெண்கடமை திங்களுக்கு ஓர்கால் அன்றி மருகோம்.
    பெருந்தாகம் எடுத்திடினும் பெயர்த்து நீர்-அருந்தோம்.
மண்பரவு கிழங்குகளில் கருணை-அன்றிப் புசியோம்
    வாழை-இளம் பிஞ்சொழியக் கனி-அருந்தல் செய்யோம்.
நண்பு-பெற உண்டபின்பு குறுநடையும் கொள்வோம்.
    நமனார்க்கு இங்கு-ஏது கவை நாம் இருக்கும் இடத்தே!

திங்கள்- மாதம்; ஓர்கால் - ஒரு தடவை; கருணை - கருணைக் கிழங்கு; நண்பு - நண்பர்கள்; பெற உண்ட பின்பு - (நண்பர்களோடு) பகிர்ந்து உண்ட பின்பு; நமனார் - எமன்; கவை - வேலை .

மூலம்:  சதாசிவம்பிள்ளை/ ஜே.ஆர்.அர்னால்டு , "பாவலர் சரித்திர தீபகம்",  ஏசியன் எஜுகேஷனல்  சர்வீஸஸ் [1] , 
புது தில்லி  (email: asianeds@nda.vsnl.net.in),  சென்னை  (email: asianeds@md3.vsnl.net.in)
"http://ta.wikiquote.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது
தனிப்பட்ட பயன்பாட்டுக் கருவிகள்