பெ. சுந்தரம் பிள்ளை

விக்கிமேற்கோள் இலிருந்து

பெ. சுந்தரம் பிள்ளை (ஏப்ரல் 4, 1855 - ஏப்ரல் 26, 1897) மனோன்மணீயம் என்ற புகழ்பெற்ற நாடக நூலைப் படைத்தவர், இதன் பொருட்டு மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை என்றே அழைக்கப்படுகிறார்.

மேற்கோள்கள்[தொகு]

  • அழுதீர் தொழுதீர் விடுவீர் விடுவீர் வீணான விசனமே
  • அன்பை அறியாது வாதிப்பவர் தன் தாயின் பாலையும் நஞ்சென சோதிப்பார்
  • இம்மையில் தம்மை இயக்க இன்பம் தரும் ஒர் இலக்கு வேண்டும்
  • இரவியைக் காண விளக்கின் உதவி எதற்கு.
  • உரிமைமேல் ஆண்மையில்லா சாந்தம் பெருமையில் பிணத்தில் பிறந்த சீதம்
  • உள்ளமது கலங்காத ஊக்கமே ஒருவனது ஆக்கத்து அளவு
  • எண்ணார் எண்ணித் துணிந்த பின் பண்ணார் தாமதம்
  • ஒருவனது ஆசைப்பெருக்கால் வரும் துன்பம் கடலினும் பெரிதெ
  • கருவியும் காலமும் அறிந்தால் அரியதென்னை
  • கள்ள மனம் துள்ளும் தன்னுள்ளம் தனையே தின்னும்
  • கொள்கையில் விலகாத நீதி உன்னிடமிருந்தால் வெற்றி நிச்சயமே
  • சாத்தியம் அசாத்தியம் ஆய்ந்தறிந்து ஆற்றும் திறமுள்ள யாகமே யோகம்
  • சிதைந்த போதும் உரம் உடையோர் பதையார் சிறிதும்
  • தனக்கென வாழ்பவன் தனி மிருகம் அவன் மனம் மாறட்டும்
  • தாய் முலைப்பாலிலும் நஞ்சுண்டு என ஆய்வாரே அற்பர்
  • துறந்தாரும் முற்றும் துறந்தவரல்ல மறந்தார் சிற்சில்
  • தொட்டே உணரும் தோல் பட்டே உணரும் முட்டாள்
  • நம்புதல் என்பதுவே அன்பிள் வலிமை
  • பற்பல அண்டம் வெடித்தடங்கிடும் தடுப்பவர் யார் விடுத்திடு வீன் விசனம்
  • மூட்டிடில் தீயும் மூளூம் மும்மடங்காய்
  • யாதே வரினும் மனவலி குன்றாதே மானமே பெரிது
  • விதியெனப்பாவனை பண்ணிக்கடமையை விலக்குதல் மடமையே
  • விரும்பி யாரும் உண்ணும் கரும்பு கசப்பது உன் வாயின் குற்றமே
  • வெந்த புண் அதிலே வந்திடும் நூறடி

புற இணைப்புகள்[தொகு]

Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:
"https://ta.wikiquote.org/w/index.php?title=பெ._சுந்தரம்_பிள்ளை&oldid=10794" இலிருந்து மீள்விக்கப்பட்டது