விக்கிகோட்:விக்கிகோட்

Wikiquote தளத்திலிருந்து

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடுக


         == தமிழ்ப் பழமொழிகள் ==


   * அகத்தினழகு முகத்தில் தெரியும்.
   * அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு.
   * அடிமேல் அடியடித்தால் அம்மியும் நகரும்.
   * அடியாத மாடு படியாது.
   * அடியைப் போல அண்ணன் தம்பி உதவாது.
   * அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்.
   * அழுத பிள்ளைதான் பால் குடிக்கும்.
   * அழுதாலும் பிள்ளை அவள்தானே பெறவேண்டும்.
   * அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு.
   * அற்பருக்குப் பவிசு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பர்.
   * அற நனைந்தவனுக்குக் குளிரென்ன கூதலென்ன.
   * அறுக்க முடியாதவ இடுப்புல ஆயிறத்தெட்டு அறிவாள்.
   * ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள்.
   * ஆடத் தெரியாதவள் மேடை பிழையென்றாளாம்.
   * ஆடிக் காற்றுக்கு அம்மியும் பறக்கும்.
   * ஆடுற மாட்டை ஆடிக் கற, பாடுற மாட்டைப் பாடிக் கற.
   * ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு.
   * ஆயிரம் நட்சத்திரம் கூடினாலும் ஒரு சந்திரன் ஆகாது.
   * ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை.
   * ஆழம் தெரியாமல் காலை விடாதே.
   * ஆற்றிலே கரைத்தாலும் அளந்து கரை (அ) ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு.
   * ஆறிலும் சாவு நூறிலும் சாவு.
   * ஆனைக்கும் அடிசறுக்கும்.
   * இளகின இரும்பைக் கண்டால் கொல்லன் ஓங்கி அடிப்பான்.
   * இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை.
   * உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது.
   * உரலில் அகப்பட்டது உலக்கைக்குத் தப்புமா?
   * ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி
   * எரிகிற வீட்டில் பிடுங்கினது லாபம்.
   * எறும்பூரக் கல்லும் தேயும்.
   * ஏறச்சொன்னால் எருதுக்குக் கோபம் இறங்கச் சொன்னால் முடவனுக்குக் கோபம்.
   * ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது.
   * ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.
   * கடுகு சிறிதானாலும் காரம் பெரிது.
   * கண்களை விற்றுச் சித்திரம் வாங்குதல் போல்.
   * கணக்கறிந்த பிள்ளையிருந்தால் வீட்டில் வழக்குக்குக் குறைவில்லை.
   * கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்.
   * கரும்பு தின்னக் கைக்கூலி வேண்டுமா?
   * கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்.
   * கலங்கிய குட்டையில் மீன் பிடிப்பது போல.
   * கழுதை அறியுமா கற்பூர வாசனை?
   * காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு.
   * காகம் இருக்கப் பனம்பழம் விழுந்தது போல்.
   * காகம் திட்டி மாடு சாகாது.
   * காய்த்த மரம்தான் கல்லடிபடும்.
   * காவோலை விழக் குருத்தோலை சிரிப்பது போல்.
   * காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்.
   * கிணற்றுத் தவளைக்கு நாட்டு வளப்பமேன்?
   * குடிகாரன் பேச்சு விடிஞ்சாலே போச்சு.
   * குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல்.
   * குரங்குப் புண்ணுக்கு அருமை காட்டினால் கொப்பிலே கொப்பிலே தாவுமாம்.
   * குரைக்கிற நாய் கடிக்காது.
   * கெட்டாலும் செட்டி கிழிந்தாலும் பட்டு.
   * கொல்லன் தெருவில் ஊசி விற்பதுபோல்.
   * கோழி மிதித்துக் குஞ்சு சாகாது.
   * கைப் புண்ணுக்குக் கண்ணாடி வேண்டாம்.
   * சந்திரனைப் பார்த்து நாய் குரைப்பது போல.
   * சாட்சிக்காரனின் காலில் விழுவதிலும் சண்டைக்காரனின் காலில் விழுவது மேல்.
   * சிறு பிள்ளை வேளாண்மை விளைஞ்சும் வீடு வந்து சேராது.
   * சுவரிருந்தால்தான் சித்திரம் வரையலாம்.
   * சொல்லிக் கொடுத்த புத்தியும் கட்டிக் கொடுத்த சோறும் எத்தனை நாளுக்குக் கூட வரும்?
   * தடியெடுத்தவன் தண்டக்காரன்.
   * தம்பியுள்ளான் படைக்கஞ்சான்.
   * தன் வினை தன்னைச் சுடும்.
   * தனிமரம் தோப்பாகாது.
   * தாயும் பிள்ளையுமானாலும் வாயும் வயிறும் வேறு.
   * தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை.
   * தலைக்கு மேலே வெள்ளம் போனால் சாணென்ன முழமென்ன.
   * தினை விதைத்தவன் தினையறுப்பான் வினை விதைத்தவன் வினையறுப்பான்.
   * தெய்வம் வரங் கொடுத்தாலும் பூசாரி விடாதது போல்.
   * நக்கிற நாய்க்குச் செக்கென்ன சிவலிங்கமென்ன?
   * நடுக்கடலுக்குப் போனாலும் நாய்க்கு நக்குத் தண்ணீர்தான்.
   * நல்ல மாட்டுக்கு ஒரு சூடு நல்ல பெண்டாட்டிக்கு ஒரு வார்த்தை.
   * நிலவுக்கு அஞ்சிப் பரதேசம் போவது போல்.
   * நிழலின் அருமை வெய்யிலில் தெரியும்.
   * நிறைகுடம் தளம்பாது.
   * பசி வந்தால் பத்தும் பறந்திடும்.
   * படிக்கிறது தேவாரம் இடிக்கிறது சிவன் கோயில்.
   * பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும்.
   * பந்திக்கு முந்து படைக்குப் பிந்து.
   * பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது.
   * பனை மரத்தடியில் பால் குடித்தது போல.
   * பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும்.
   * பிச்சை எடுத்ததாம் பெருமாள் அதையும் பறித்ததாம் அனுமார்.
   * பிள்ளையையும் கிள்ளித் தொட்டிலையும் ஆட்டுவது போல்.
   * புதுமைக்கு வண்ணான் கரைகட்டி வெழுப்பான்.
   * புலி பசித்தாலும் புல்லுத் தின்னாது.
   * பூவோடு சேர்ந்த நாரும் மணம் வீசும்.
   * பொறுத்தார் அரசாள்வார் பொங்கினார் காடாள்வார்.
   * போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து.
   * மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.
   * மாமியார் உடைத்தால் மண்குடம் மருமகள் உடைத்தால் பொன் குடம்.
   * மின்னுவதெல்லாம் பொன்னல்ல.
   * முடக் குதிரைக்குச் சறுக்கினது சாட்டு.
   * முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்டது போல.
   * முள்ளை முள்ளால் எடுக்கவேண்டும்.
   * மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவது போல்.
   * யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன்.
   * யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே.
   * விடிய விடிய ராமாயணம் விடிந்த பிறகு சீதைக்கு ராமன் என்ன முறை.
   * விரலுக்குத் தக்கதே வீக்கம்.
   * விளையும் பயிரை முளையிலே தெரியும்.
   * வெண்ணெய் திரண்டுவர தாழி உடைவது போல்.
   * வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவானேன்.
   * வெளுத்ததெல்லாம் பாலல்ல.
   * வேலிக்கு ஓணான் சாட்சி.
   * வைக்கோற் போர் நாய் போல.
தனிப்பட்ட பயன்பாட்டுக் கருவிகள்