வீரம்
வீரம் அல்லது மறம் (bravery, courage, valour) என்பது துணிவான ஒரு உணர்வு. தான் சந்திக்கும் எவ்வொரு சவாலையும் சந்தித்து, வலி, ஆபத்து, எதிர்பாரா நிகழ்வுகள், எதிர்ப்பு, என பலவற்றைக் கடந்து வெற்றி காண முயல்வதே வீரம். சரி என்று பட்டதை யார் தடுத்தாலும் சிரம் தாழ்த்தாது செய்து முடிப்பதே வீரம்.
மேற்கோள்கள்
- பலமே வாழ்வு; பலவீனமே மரணம் - சுவாமி விவேகானந்தர்
- வீரமே உருவென விளங்கிய அஞ்சா நெஞ்சன் மாயவரச் சிங்கம் நடராசன், சுயமரியாதை இயக்கத்தில் அவர் இடத்தைப் பூர்த்தி செய்கிற மாதிரி வேறு ஒருவரும் வரவில்லை. ஈ. வெ. இராமசாமி[1]
- அறத்திற்கு மட்டுமல்ல மறத்துக்கும் அன்பே காரணமாக உள்ளது. திருவள்ளுவர்
- அறத்திற்குப் போலவே மறத்திற்கும் பிராணத் தியாகிகள் உண்டு. -கோல்டன்[2]
சான்றுகள்
- ↑ 1.0 1.1 பகுத்தறிவாளர் நாள்குறிப்பு (2009, 2010, 2011, 2012, 2013 ஆண்டிற்கானது, நாட்குறிப்பின் ஒவ்வொரு நாளுக்கான தாளின் தலை பகுதியிலும் உள்ளது), பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன வெளியிடு
- ↑ என். வி. கலைமணி (1984). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் (நாட்டுடமை நூல்). தேவகோட்டை: மெய்யம்மை நிலையம். pp. 21- 23.
- ↑ "பெரியார் அறிவுரை" ஒன்பதாம் பதிப்பு, திராவிடர் கழக வெளியிடு
வெளி இணைப்புக்கள்