அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு
Jump to navigation
Jump to search
- குறள்:1[1]
- பால்: அறத்துப்பால்
- இயல்: பாயிரம் இயல்
- அதிகாரம்: கடவுள் வாழ்த்து
குறள்:
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
விளக்கம்:[தொகு]
எழுத்துக்கள் எல்லாம் அகரம் என்னும் ஒலி எழுத்தை முதலாகக் கொண்டுள்ளன. அது போல, உலகத்தில் உள்ள உயிர்கள் எல்லாம் ஆதியாகிய கடவுளை முதலாகக் கொண்டுள்ளன.