அரசியல்
- அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை பகைவனும் இல்லை - முரசொலி மாறன்
- தேர்தல் அரசியல் திருடர் பாதை - சீமான்?
- அரசியல்வாதிகள் பொறுக்கித் தின்ன அரசியல் - பெரியார்
- இறந்தகாலத்துக்கும் வருங்காலத்துக்கும் இடையே மரணத்துக்கான போராட்டம்தான் புரட்சி! - பிடல் காஸ்ட்ரோ
- விடுதலை என்பது எதிரி நமக்குக் கொடுப்பது அன்று. ரத்தம் சிந்தி உயிர்த் தியாகம் செய்து நாமே போராடிப் பெற வேண்டிய புனிதமான உரிமை! - பிரபாகரன்
- நான் இறந்த பிறகு என் துப்பாக்கியைத் தோழர்கள் எடுத்துக்கொள்வார்கள். அப்போதும் தோட்டாக்கள் சீறிப் பாயும்! - சே குவேரா
- உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள். நீங்கள் இழப்பதற்கு எதுவுமே இல்லை - அடிமைத்தளையைத் தவிர. ஆனால் வெல்வதற்கு உலகமே இருக்கிறது! - காரல் மார்க்சு
- எந்த ஒரு முக்கியச் சமூக மாற்றமும் புரட்சி இல்லாமல் ஏற்படுவதில்லை. புரட்சி என்பது சிந்தனையைச் செயலாக்குவது! - எம்மா கோல்ட்மேன்
- சிந்தனையாளர்கள் பெரும்பாலும் உலகத்தை விளக்குகிறவர்களாக இருக்கிறார்கள். ஆனால், நமது வேலை உலகத்தை மாற்றியமைப்பதுதான் - காரல் மார்க்சு
- புரட்சியாளனைச் சிறைப்பிடிக்கலாம். புரட்சியைச் சிறைப்பிடிக்க முடியாது! - ஹுவே நியூட்டன்
- ஜெயித்தால் புரட்சியாளன்... தோற்றால் தீவிரவாதி!
- புரட்சி யாளன் வாழ்ந்த நாட்களில் அவனை மனிதனாக ஏற்காதவர்கள், மறைந்த பின்னர் மகானாக மாற்றி விடுகிறார்கள் - லெனின்
- புரட்சி என்பது ஆபத்தையும் மரணத்தையும் அழிக்கும் விஷயம் அல்ல; அவை இரண்டையும் மதிப்புள்ள ஆக்குவதே புரட்சி! - ஹெச்.ஜி.வெல்ஸ்
- போராட்டமின்றி முன்னேற்றமில்லை- பிரடரிக் டக்ளஸ்
- ஐரோப்பாவில் பல சிம்மாசனங்கள் காலியாகி உள்ளன. தைரியம் உள்ளவன் ஏறி அமர்ந்துகொள்ளலாம்! - நெப்போலியன்
- புரட்சியின் கால அளவையும், முன்னேற்றத்தையும் தீர்மானிக்க முடியாது. அது தன்னுடைய சொந்த, புதிரான விதிமுறைகளின்படி இயங்குகிறது! - லெனின்
- அடிமைக்கும் அடிமைப்படுத்துபவனுக்கும் இடையே சமரசத்தை உண்டுபண்ணுவது என்பது எதிர்ப்பு உணர்ச்சியை ஒழிக்க வேண்டும் என்ற கேவலமான சூழ்ச்சியே ஆகும். அது புரட்சி அல்ல - மாக்சிம் கார்க்கி
- ஓர் அடிமைக்கு அவன் அடிமை என்பதை முதலில் உணர்த்து. பிறகு, அவன் தானாகவே கிளர்ந்து எழுவான் - அம்பேத்கர்
- விடுதலையின் விலை குருதி - சுபாஷ் சந்திர போஸ்
- கொஞ்சம் ரத்தம் தாருங்கள் நிறைய சுதந்திரம் தருகிறேன் - சுபாஷ் சந்திர போஸ்
- பலிபீடத்தில் வெட்டப்படுபவை ஆடுகள்தாம் சிங்கங்களல்ல. சிங்கங்களாக இருங்கள்- அம்பேத்கர்
- பார்ப்பனர்கள் படிப்பாளிகளாக இருக்கலாம். ஒருபோதும் அறிவாளிகளாக முடியாது.- அம்பேத்கர்