யூதப் பழமொழிகள்

விக்கிமேற்கோள் இலிருந்து
(யூதர் பழமொழிகள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இப்பக்கத்தில் யூதர்களின் பழமொழிகள் தொகுக்கபட்டுள்ளன.

  • இலவச வைத்தியம் - பயனற்ற மருந்தாயிருக்கும்.
  • இளமை ரோஜா மாலை, முதுமை முள் மகுடம்.
  • இளைஞர் இறக்கக்கூடும், முதியோர் இறந்தே ஆகவேண்டும்.
  • உலகம் மெச்சும் நல்லவனை அவன் மனைவி மட்டும் மோசமானவனாகக் கருதுவாள்.
  • உறவினர் செல்வமடையும் பொழுதுதான் நாம் அவர்களை மதிக்கிறோம்.
  • உன் மனைவி குள்ளமாயிருந்தால், நீ குனிய வேண்டும்.
  • ஊமை மனைவி வாயால் ஏசமாட்டாள், கைகளை நெரித்து ஏசுவாள்.
  • ஒரு பெண்ணுக்குப் பின்னால் செல்வதைவிட, ஒரு மனிதன் சிங்கத்தின் பின்னால் செல்வது மேல்.
  • ஒரு மனிதனைத் தெரிந்து கொள்வதினும், பத்து நாடுகளைத் தெரிந்து கொள்ளல் எளிது.
  • ஒரு வீட்டை வாங்குமுன், அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும்.
  • ஒரே வீட்டிலுள்ள மாமியாரும் மருமகளும் ஒரே பைக்குள் கிடக்கும் இரண்டு பூனைகள் போன்றவர்.
  • கலியாணம் செய்து கொள்ளும் மகன் தாயை விட்டுத் தாரத்தைப் பிடித்துக் கொள்கிறான்.
  • கழுதை ஏணிமேல் ஏறும்பொழுது, பெண்களிடம் நாம் ஞானத்தைக் காணலாம்.
  • காலம்தான் தலை சிறந்த வைத்தியர்.
  • கிழவன் ஒரு குமரியை மணந்து கொண்டால், அவன் இளைஞனாகி விடுவான், குமரி கிழவியாவாள்.
  • கூனன் தன் கூனலையும் சுமக்க வேண்டியிருக்கிறது.
  • கெட்ட பெண்களிடமிருந்து உன்னைக் காப்பாற்றும்படி ஆண்டவனை வேண்டு; நல்ல பெண்களிடமிருந்து நீயே உன்னைக் காத்துக்கொள்.
  • தந்தை யில்லாத குழந்தை பாதி அநாதை; தாயில்லாத குழந்தை முழு அநாதை.
  • தலைசிறந்த மரணத்தைவிட, மட்டமான வாழ்க்கையும் மேலானது.
  • தன் காலம் முடியாமல் எவனும் இறப்பதில்லை.
  • தாயிலே கெட்டவளுமில்லை, சாவிலே நல்லதுமில்லை.
  • நம் முன்னோர்கள் தேவர்களா யிருந்தால், நாம் மனிதர்களா யிருக்கிறோம்; அவர்கள் மனிதர்களா யிருந்தால், நாம் கழுதைகளா யிருக்கிறோம்.
  • நல்ல மாற்றாந்தாய்க்குச் சுவர்க்கத்தில் தங்க நாற்காலி காத்திருக்கிறது.

[அப்படி ஒருத்தி கிடைக்க மாட்டாள்.]

  • நிலம் வாங்குவதற்கு என்றால், வேகமாக ஓடு; விவாகம் செய்து கொள்வதற்கு என்றால், மெதுவாக நட
  • நீ உன் மனைவியை நேசித்தால், அவளுடைய உறவினரையும் நேசிக்க வேண்டும்.
  • நீ காலையைக் கண்டிருக்கிறாய், இன்னும் மாலையைக் காண வில்லை
  • பிராணிகளின் படைப்பில் பெண்ணே முதன்மையான எழிலுடையவள்.
  • பெண்களை அழவிடுவதில் மனிதர்கள் கவனமா யிருக்கவேண்டும்; ஏனெனில் ஆண்டவன் அவர்களுடைய கண்ணீர்த் துளிகளை எண்ணிப் பார்க்கிறான்.
  • பெரிய விருந்தும் சிறிது நேரம்தான்.
  • மரணம் உண்மையைப் புலப்படுத்துகின்றது.
  • மனைவி உறங்கும் பொழுது, (சாமான்) கூடையும் உறங்குகின்றது.
  • வயதான கன்னியைவிட இளமையான விதவை மேல்.
  • வாழ்க்கை மனிதனுக்குக் கொடுக்கப்பட்ட கடன்தான மரணம் என்னும் கடன்காரன் அதைப் பெற்றுக் கொள்ள ஒருநாள் வருவான்.
  • வைத்தியர் தூரத்திலிருந்து கொண்டே மருந்து அனுப்புதல், குருட்டுக் கண்ணால் பார்ப்பது போலாகும்.
"https://ta.wikiquote.org/w/index.php?title=யூதப்_பழமொழிகள்&oldid=38039" இலிருந்து மீள்விக்கப்பட்டது