சிவாஜி கணேசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தொடக்கம் (edited with ProveIt) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
10:41, 27 மே 2016 இல் நிலவும் திருத்தம்
சிவாஜி கணேசன் (அக்டோபர் 1, 1927 - ஜூலை 21, 2001) புகழ் பெற்ற தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். விழுப்புரம் சின்னையாப்பிள்ளை கணேசன் என்பது இவரது இயற்பெயர். இவர், பராசக்தி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார்.
மேற்கோள்கள்
நபர் குறித்த மேற்கோள்கள்
- "சிவாஜியின் மிகப்பெரிய சொத்து அவருடைய ஒனிமிக்க, உயிர்ப்புள்ள கண்கள்தான். அந்த்க் கண்களை வைத்துத்தான் பரிவை, பாசத்தை, பயத்தை, கோபத்தை, அழுகையை, ஆச்சர்யத்தை, அப்பாவித்தனத்தை, ஏக்கத்தை, ஏமாற்றத்தை, வீரத்தை, விவேகத்தை - அவர் அதிகமாக வெளிப்படுத்தினார்" - சிவாஜியைப் பற்றி சிவகுமார் கூறியது.[1]
- "தமிழை அவரைப்போல் உச்சரித்த நடிகர்கள் இதுவரை பிறக்கவில்லை." - சிவாஜியைப் பற்றி சிவகுமார் கூறியது.[1]
- "ஒரு நடிகன் வேஷம் கட்டுவதிலேயே 50% மார்க் வாங்கிவிட வேண்டும் என்று சொல்வார். விதவிதமான வேடம் அணிந்து பார்ப்பதில் அவருக்கு அடங்காத வெறி உண்டு." - சிவாஜியைப் பற்றி சிவகுமார் கூறியது.[1]
- "கவிதைகளில் ஒரு தாளம் இருப்பதுபோல, பேசும் வசனங்ளில் ஒரு ரிதம், நடக்கும் நடையிள் ஒரு தாளம் இருக்கிறது என்பதை அடிக்கடி சொல்வார்." - சிவாஜியைப் பற்றி சிவகுமார் கூறியது.[1]