ரிச்சர்ட் பிரின்ஸ்லி ஷெரிடன்

விக்கிமேற்கோள் இலிருந்து
ரிச்சர்ட் பிரின்ஸ்லி ஷெரிடன் 1751 - 1816

ரிச்சர்ட் பிரின்ஸ்லி பட்லர் ஷெரிடன் (Richard Brinsley Sheridan 30, அக்டோபர், 1751 - 7 சூலை 1816) ஒரு ஐரிஷ் நகைச்சுவைப் பேச்சாளர், நாடக ஆசிரியர், கவிஞர், அரசியல்வாதி ஆவார்.

மேற்கோள்கள்[தொகு]

அவதூறு[தொகு]

  • உண்மையாயிருக்கத் தகாத விஷயத்தைப் பொய்யென்றே நம்பு.[1]

கருணை[தொகு]

  • கருணை காட்டுபவன் எப்போதும் வெற்றி காண்பான்.[2]

சிந்தித்து ஆராய்தல்[தொகு]

  • ஆழ்ந்து சிந்தித்து ஆராயாதவர்கள் வாயால் உளற மட்டும் செய்வார்கள்.[3]

செயல்[தொகு]

  • வாழ்க்கை நல்ல முறையில் வாழப்பெற்றதா என்பதை ஆண்டுகளைக்கொண்டு கணக்கிடாமல், செயல்களைக் கொண்டு கணக்கிட வேண்டும்.[4]

பெண்[தொகு]

  • பெண்கள் நம்மை ஆட்சி புரிகின்றனர். அவர்கள் மேலும் நிறைவுடையவர்களாக விளங்கும்படி செய்வோம். அவர்கள் எவ்வளவுக்கு அறிவொளியைப் பெறுகின்றனரோ, அவ்வளவுக்கு நாம் அறிவு பெறுவோம். பெண்களின் மனங்களைப் பயிற்சி செய்வதையே ஆடவனின் அறிவு பொறுத்திருக்கின்றது.[5]

குறிப்புகள்[தொகு]

  1. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 52-56. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  2. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/கருணை. நூல் 69 - 70. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  3. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 182. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  4. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 190-191. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  5. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 278-281. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.