பிளேட்டோ

விக்கிமேற்கோள் இலிருந்து

பிளேட்டோ (Plato, கிமு 427 - கிமு 347 ) பெரும் செல்வாக்குள்ள கிரேக்கத் தத்துவஞானியாவார். இவர் சாக்கிரட்டீசின் சீடர், அரிஸ்டாட்டிலின் குரு.

மேற்கோள்கள்[தொகு]

  • நேர்மை பெரும்பாலான நேரங்களில் நேர்மையின்மையை விட குறைவான லாபம் உள்ளதாகவே இருக்கின்றது.
  • துவக்கமே ஒரு வேலையின் மிக முக்கியமான பகுதியாக இருக்கின்றது.
  • நாம் உறுதியான நம்பிக்கையுடன் போராடினால், நம்மிடம் இருமடங்கு ஆயுதம் இருப்பதைப் போன்றது.
  • ஆசை, உணர்ச்சி, அறிவு ஆகிய மூன்று முக்கிய ஆதாரங்களிலிருந்தே மனிதனின் நடத்தை வழிந்தோடுகிறது.
  • இன்றைய கற்பவர் நாளைய தலைவர்.
  • பரிசோதனை இல்லாத வாழ்க்கை, மதிப்புடைய வாழ்க்கை அல்ல.
  • தேவையே கண்டுபிடிப்பின் தாய்.
  • ஒரு மனிதன் தன்னை வெற்றிகொள்வதே அனைத்து வெற்றிகளுக்கும் முதலாவதும், உன்னதமானதும் ஆகும
  • நல்ல விஷயத்தைத் திரும்பச் செய்வதில் எந்த தீங்கும் இருக்கப் போவதில்லை.
  • எந்த வழியில் ஒரு மனிதனுக்கு கல்வி தொடங்குகின்றது என்பதே வாழ்க்கையில் அவனது எதிர்காலத்தைத் தீர்மானிக்கும்.
  • எதற்கெல்லாம் பயப்படக் கூடாது என்பதை அறிந்திருக்கும் செயலே தைரியம்.
  • நல்ல வேலைக்காரனாக இல்லாத ஒருவன், நல்ல எஜமானனாக இருக்க மாட்டான்.

அடிமைமுறை[தொகு]

  • அடிமைகளை வைத்துக்கொள்ளல் முற்றிலும் அநீதியான முறையாகும்.[1]

அநீதி[தொகு]

அரசாங்கம்[தொகு]

  • அரசாங்கம் என்பது, வெறும் ஆலோசனை கூறுவது மட்டுமன்று அதற்கு அதிகாரம் உண்டு. தன் சட்டங்களை அமல் நடத்தும் ஆற்றலும் உண்டு.[3]

அழகு[தொகு]

  • அழகு இயற்கை அளித்துள்ள பேறு.[4]

அறம்[தொகு]

  • அற வாழ்வில் ஆசையுள்ளவன் சத்தியத்தைச் சார்ந்து நிற்கும் பொழுதுதான் அவன் துக்கம் தொலைகிறது; அதற்கு முன்னால் அன்று.[5]

அறிவின்மை[தொகு]

  • கல்லாமையைவிடப் பிறவாமலிருத்தல் மேலாகும். ஏனெனில், அறிவின்மைதான் எல்லாத் துயரங்களுக்கும் வேர்.[6]

அற்ப விஷயம்[தொகு]

  • அற்பமான பயனற்ற விஷயங்களில், அவைகளுக்கு உரிய நேரத்திற்குக் கூடுதலாகச் செலவழிப்பதைவிட, ஓர் அறிவாளிக்குத் தகுதியில்லாததும். வருத்தப்படத்தக்கதும் வேறு எதுவுமில்லை.[7]

இறைமறுப்பு[தொகு]

  • நெருக்கடியான ஆபத்துக் காலத்திலும் ஒரு தெய்விக சக்தியை ஏற்றுக்கொள்ளாத பிடிவாதமுள்ளவர் சிலரே இருப்பர்.[8]

உணர்ச்சி[தொகு]

  • உணர்ச்சி மிகுந்தவர்கள் தலைகளைக் கீழே வைத்துக் கொண்டு நிற்பவர்கள் அவர்களுக்கு எல்லாம் தலைகீழாகவே தெரியும்.[9]

சமத்துவம்[தொகு]

  • இயற்கையில் எல்லா மனிதர்களும் சமத்துவமாக உள்ளவர்கள். எல்லோரும் ஒரே மண்ணால், ஒரே கடவுளால் படைக்கப் பெற்றவர்கள். நாம் நம்மை எவ்வளவுதான் ஏமாற்றிக் கொண்டாலும், கடவுளுக்கு வல்லமையுள்ள அரசன் எவ்வளவு வேண்டியவனோ அவ்வளவு வேண்டியவன் ஏழைக் குடியானவனும்.[10]

சிந்தனை[தொகு]

  • ஆன்மா தானே தன்னுடன் பேசிக்கொள்வது சிந்தனை.[11]

தண்டனை[தொகு]

  • தீயவன் ஒருவன் தண்டிக்கப்பெறுவது நோயாளிக்கு மருந்து கொடுப்பது போலாகும். எல்லா வகைத் தண்டனையும் ஒரு வகை மருந்துதான்.[12]

தன்னம்பிக்கை[தொகு]

  • தன்னுடைய இன்பத்திற்குத் தேவையான ஒவ்வொன்றையும். மற்றவர்கள் சார்பில்லாமல் தானே அமைத்துக்கொள்ளும் மனிதன், இன்பமாக வாழ்வதற்குத் தலைசிறந்த வழியைக் கடைப் பிடிக்கிறான்.இவனே நிதானமான தேவையுள்ளவன் ஆண்மையும் அறிவும் உள்ளவன்.[13]

நட்பு[தொகு]

  • ஆடவன் பெண்ணிடம் கொள்ளும் காதல் சாதாரணமானது. இயல்பானது. ஆரம்பத்தில் அது உணர்ச்சியால் ஏற்படுவது. ஒருவன் தானாகத் தேர்ந்து ஏற்படுத்திக்கொள்வதன்று. ஆனால் மனிதனுக்கு மனிதன் அமைத்துக்கொள்ளும் உண்மையான நட்பு எல்லையற்றது. நித்தியமானது.[14]

பாவம்[தொகு]

  • கடவுள் என்னை மன்னிப்பாரென்றும். மனிதர்கள் என் பாவத்தைத் தெரிந்துகொள்ளமாட்டார்கள் என்றும் எனக்கு உண்மையாகத் தெரிந்தால்கூட. நான் பாவம் செய்ய வெட்கப்படுவேன்; ஏனெனில், அதில் அவ்வளவு இழிவு ஒட்டியுள்ளது.[15]

குறிப்புகள்[தொகு]

  1. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல். நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  2. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 25-27. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  3. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 43-46. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  4. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 58-61. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  5. என். வி. கலைமணி (1984). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் (நாட்டுடமை நூல்). தேவகோட்டை: மெய்யம்மை நிலையம். pp. 13- 21. 
  6. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 65-66. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  7. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 75-77. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  8. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 236-237. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  9. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 118-120. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  10. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 174-175. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  11. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 182. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  12. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 203-204. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  13. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 207. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  14. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 226-227. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  15. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 265-266. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.

வெளி இணைப்புக்கள்[தொகு]

Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


Commons
Commons
விக்கி ஊடக நடுவத்தில் இத்தலைப்பு தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன:
"https://ta.wikiquote.org/w/index.php?title=பிளேட்டோ&oldid=32903" இலிருந்து மீள்விக்கப்பட்டது