கவிஞர்

விக்கிமேற்கோள் இலிருந்து

கவிஞர் (Poet) என்பவர் கவிதையை உருவாக்கும் நபர் ஆவார். இவர்கள் புலவர்கள் என்றும் அழைக்கப்பட்டனர்.

மேற்கோள்கள்[தொகு]

  • கவிஞன் உலகத்தின் உண்மைகளை, வாழ்க்கையின் ரகஸியங்களை வேறு விதமாகப் பார்க்கிறான். அவன் கண்கள் உணர்ச்சிக் கண்கள். கனவுக் கண்கள். -புதுமைப்பித்தன்[1]
  • கவிதையில், சரியான வார்த்தைகள், சரியான இடத்தில் அடைய வேண்டும். கவிஞன் வார்த்தைகளை எடுத்து கோர்ப்பதில்லை. உணர்ச்சியின் பெருக்கு, சரியான வார்த்தைகளைச் சரியான இடத்தில் கொண்டு கொட்டுகிறது. -புதுமைப்பித்தன்[1]
  • கத்தி விழுங்குபவனும் கவிராயனும் ஒன்றல்ல. கவிராயன் நாம் செய்யக் கூடிய காரியத்தைத்தான், நாம் எப்படிச் செய்ய விரும்புகிறோமோ அந்த அளவு ஆணித்தரமான அழுத்தத்துடன் செய்கிறான் என்பவை தவிர நாம் செய்ய முடியாத காரியத்தை அவன் செய்கிறான் என்பதல்ல. -புதுமைப்பித்தன்[1]
  • நமது இலக்கியமானது நெடு நாள் பட்ட வளர்ச்சி கண்டது. அதன் வார்த்தை அமைதிகளே கவிதைப் பண்பு கொண்டு, நடைபயிலும் சிறு குழந்தைக்கு நடைவண்டி போல அமைந்து கிடப்பதால், பேரிகை கொட்டி பிழைப்பதைவிட, கவிதை கட்டிப் பிழைப்பது இலகுவான காரியமாகி விட்டது.-புதுமைப்பித்தன்[1]
  • மோகனமான பகற் கனவுகள் காண்பதில் கவிஞனுக்கு இணையாகக் காதலர்களைத்தான் ஒருவாறு கூறலாம்.-புதுமைப்பித்தன்[1]
  • கவிஞன் எப்பொழுதும் ஒரு இலட்சிய உலகில் வசிப்பவன். அவனது உள் மனத்தின் உணர்ச்சி ஊற்றுக்களிலிருந்து ஜீவசக்தி பெற்று வரும் வார்த்தைகள் தாம் கவிதைகள்.-புதுமைப்பித்தன்[1]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 முல்லை பிஎல். முத்தையா (1998). புதுமைப்பித்தன் உதிர்த்த முத்துக்கள். நூல் 49. முல்லை பதிப்பகம். Retrieved on 22 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=கவிஞர்&oldid=19871" இலிருந்து மீள்விக்கப்பட்டது