அரிஸ்டாட்டில்
அரிஸ்டாட்டில் (அல்லது அரிசுட்டாட்டில் (Aristotle)) (கிமு 384 - மார்ச் 7, கிமு 322) ஒரு கிரேக்கத் தத்துவஞானியாவார்.
மேற்கோள்கள்
- தன் அச்சங்களிலிருந்து மீண்டு வருகிறவன் தான் உண்மையில் சுதந்திரம் அடைகிறான்.
- இடர்ப்பாடுகள் ஒருவனுக்கு உண்மையான நண்பர்களை எடுத்து காட்டும்.
- நல்ல ஆரம்பம் வேலையை பாதி ஆக்கிவிடும்.
- அன்பில் அச்சம் கலந்திருக்க முடியாது. நாம் கண்டு அஞ்சும் மனிதனிடம் நம்மால் அன்பு செலுத்த முடியாது.
- மனிதனை மனிதனாக்குபவை உதவிகளும் வசதிகளுமல்ல. இடையூறுகளும் துன்பங்களுமே.
- பெருந்தன்மையான குணம் எல்லா நற்குணங்களுக்கும் ஆபரணம் போன்றது.
- இன்பம் வரும்போது அதைப் பற்றி சிந்தனை செய்யாதே. அது போகும் போது அதைப் பற்றி சிந்தனை செய்.
- நம்முடைய நற்பண்புக்கும்,நம்முடைய அறிவாற்றலுக்கும் ஏற்றபடிதான் நாம் அடையும் மகிழ்ச்சி இருக்கும்.
- மனித இனம் மேலும் வளர்ச்சி பெற்ற நிலையில் இல்லாததற்குக் காரணம், வெள்ளங்களும் மற்ற இயற்கைப் பேரழிவுகளும்தான்.
- கனவானது தூக்க நிலையின் சிந்தனை.
வெளி இணைப்புக்கள்