அரேபிய பழமொழிகள்

விக்கிமேற்கோள் இலிருந்து

அரபு மொழி பழமொழிகள் இந்தப் பக்கத்தில் தொகுக்கப்படுகின்றன.

  • அடுத்தவருக்கு அறிவுரை கூறுவதை விட முன்னுதாரணமாக இருந்து காட்டுவதே சிறந்தது.
  • அநாதைக் குழந்தைக்கு அழுவதற்குச் சொல்லிக் கொடுக்காதே
  • அல்லாவை நம்பு. ஆனால் ஒட்டகத்தைக் கட்டிப் போட மறக்காதீர்கள்.
  • ஆகாத காலத்தில் கிழவர்களுக் கெல்லாம் பற்கள் விழாமலிருக்கும்.
  • ஆடவர்கள் இதயங்களால் சிரிப்பார்கள், பெண்கள் உதடுகளால் மட்டும் சிரிப்பார்கள்.
  • இரத்தம் எப்போதும் நீராக மாறாது.
  • இரு திருடர்களின் சண்டையில் களவாடப்பட்ட பொருள் வெளியே வருகிறது.
  • இல்வாழ்வு முற்றுகைக்கு உட்பட்ட கோட்டை போன்றது; வெளியே யிருப்பவர்கள் உள்ளே செல்ல விரும்புகின்றனர், உள்ளே யிருப்பவர்கள் வெளியேற விரும்புகின்றனர்.
  • இளமையின் நினைவு வந்தால் நெட்டுயிர்ப்புத்தான்.
  • உங்கள் உணவை அடுத்தவர் மேசை மீது வைத்து உண்ணாதீர்கள்.
  • உன் காதலுக்கு ஒரு மணி நேரம், உன் இறைவனுக்கு ஒரு மணி நேரம் செலவிடு.
  • உன் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் உன் சரித்திரத்தில் ஓர் ஏடாகும்.
  • என் இதயம் என் மகனை நோக்கிச் செல்கின்றது, அவனுடைய இதயமோ ஒரு கல்லை நோக்கிச் செல்கின்றது.
  • ஒரு நகரத்திற்கு எதிராக மூன்று பேர்கள் ஒன்று சேர்ந்தால், அதை அழித்து விடுவார்கள்.
  • ஒரு பெண், பிறந்த வீட்டில் குடியிருப்பதைவிட, மரக்ட்டையையாவது மணந்து கொள்ளல் நலம்.
  • ஒரு கொசுவால் சிங்கத்தின் கண்களைக் கூட பழுதாக்க முடியும்
  • ஒவ்வொரு சொத்திற்குப் பின்னும் ஒரு குற்றம் ஒளிந்திருக்கிறது.
  • கழுகு தீமையுடையதாய் இருந்தால், அதன் இறக்கைகளை வெட்டியெறி.
  • காதலையும் கர்ப்பத்தையும் மறைத்து - வைக்க முடியாது.
  • காதல் ஏழு விநாடி, துக்கம் வாழ்க்கை முழுதும்.
  • குரைக்காத நாயும், கனைக்காத குதிரையும்,கருத்தைச் சொல்லாத மனிதனும் உள்ள நாட்டில் வாழாதே.
  • கூழாங்கற்கள் மலையிருந்தே உருவாகின்றன.
  • சகோதரர்களாயிருங்கள், ஆனால் கணக்கு வைத்துக் கொள்ளுங்கள்.
  • சிங்கத்தின் கோரைப் பற்களைக் காண நேர்ந்தால், அது சிரிப்பதாக நினைக்க வேண்டும்.
  • சுவர்க்கத்திற்குச் செல்வோரின் பயிற்சி நிலையமே வாழ்க்கை.
  • சொந்த சகோதரர்கள் கவனமாகக் கணக்கு வைத்திருப்பார்கள்.
  • தன் மனைவியை மதிக்காதவன் தன்னையே அவமதித்துக் கொள்கிறான்
  • தாயின் காலடியில்தான் சொர்க்கம் இருக்கிறது.
  • தீமையை விட்டு விலகுங்கள். தீமை உங்களை விட்டு விலகிவிடும்.
  • நானும் என் சகோதரனும் எங்கள் அத்தானுக்குப் பகையானாலும், அந்நியன் வந்தால், நானும் அத்தானும் அவனுக்குப் பகையா யிருப்போம்.
  • பெண்பிள்ளை பயணம் போகிறாள் என்றால், ஓர் ஆண்பிள்ளை அவளுக்குக் கதவைத் திறப்பது தான் காரணம்.
  • பெண் பிறந்தால், வீட்டுக் கதவு நிலை நாற்பது நாள் அழும்.
  • பேச்சு வெள்ளியென்றால், அமைதி தங்கமாகும்.
  • பொய்யனை விட்டு விலகியிருங்கள்.அப்படி விலகியிருக்க முடியாவிட்டால் அவனை நம்ப வேண்டாம்.
  • பொய்யுரைப்பது நோய், உண்மையைப் பேசுவது அதற்கான சிகிச்சை.
  • பொறாமைக்காரனின் பார்வையை விட சிங்கத்தினால் உண்டான காயம் மேலானது.
  • மலை இடம் பெயர்ந்து விட்டது என்று நீ கேள்விப்பட்டால் நம்பலாம்; ஆனால் ஒரு மனிதன் குணம் திருந்திவிட்டான் என்று கேட்டால், அதை நம்ப வேண்டாம்.
  • மனிதரைத் தவிர, மற்ற விலங்குகள் அனைத்திலும் பெண் இனமே மேலானது.
  • மனிதனும் விலங்குகளும் ஒன்றுபோலத்தான் இருக்கிறார்கள்.
  • மனைவியால் அவதிப்படுவோன்-அந்தோ பரிதாபம்!
  • முட்டாள் நண்பனை விட எதிரியே தேவலம்.
  • வாழ்க்கை இரு பகுதிகளுள்ளது: ஒன்று கழிந்தகாலம் என்ற கனவு, மற்றது வருங்காலம் என்ற விருப்பம்.
  • வாழ்க்கையின் இன்பத்திற்குப் பலவகை இன்பங்கள் தேவை; ஆதலால் அடிக்கடி உன் வீட்டை மாற்றிக் கொள்ளவும்.
  • விருந்தினன் நாத்திகனாயினும், அவனைக் கௌரவிக்க வேண்டும்.
"https://ta.wikiquote.org/w/index.php?title=அரேபிய_பழமொழிகள்&oldid=37883" இலிருந்து மீள்விக்கப்பட்டது