ஆண்ட்ரூ கார்னேகி

விக்கிமேற்கோள் இலிருந்து

ஆண்ட்ரூ கார்னேகி அல்லது ஆண்ட்ரூ கார்னெகீ, Andrew Carnegie, நவம்பர் 25, 1835 - ஆகத்து 11, 1919) ஐக்கிய அமெரிக்காவில் வாழ்ந்த புகழ் பெற்ற கைத்தொழில் அதிபரும் கொடைவள்ளலுமாவார். அவரது நன்கொடையினால் ஏற்படுத்தப்பட்ட பல்வேறு கல்வி மற்றும் கலை நிறுவனங்கள் இன்றும் மகத்தான சேவையைப் புரிந்து வருகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  • இறக்கும்போது செல்வனாக இறப்பது கேவலம் என்று பொதுவான உணர்ச்சி ஏற்படும்.[1]
  • துறப்பதுதான் இன்பத்தின் இரகசியம்.[2]
  • யுத்த தளவாடங்களைப் பெருக்க வேண்டுமென்று கூறுவோர்களுக்கு இரக்கப்பட்டு, நாம் அவர்களை மன்னிப்போம். ஏனெனில், அவர்கள் தாங்கள் என்ன செய்கிறோம். என்பதை அறியார்கள்:[3]
  • நிலையான கருத்துடன் இருத்தல் என்பது என்னுடைய இலட்சிய வாக்கியம். முதலில் யோக்கியதை, பிறகு சுறுசுறுப்பு. பிறகு நிலையான கருத்துக்கொள்ளல்.[4]

குறிப்புகள்[தொகு]

  1. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 194-197. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  2. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 293-294. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  3. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 307-309. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  4. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 318-319. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=ஆண்ட்ரூ_கார்னேகி&oldid=36271" இலிருந்து மீள்விக்கப்பட்டது