இந்து சமய பழமொழிகள்

விக்கிமேற்கோள் இலிருந்து

கோ[தொகு]

  • கோவில் இல்லாத ஊரில் குடி இருக்க வேண்டாம்
  • கோபுர தரிசனம் கோடி புண்ணியம்
  • கோபுர தரிசனம் பாப விநாசம்
  • கோவில் இடிக்கத் துணிந்தவனா குளம் வெட்டப் போகிறான்
  • கோவில் உண்டைச் சோறு குமட்டின தேவடியாள் குத்துமித் தவிட்டுக்குக் கூத்தாடுகிறாள்
  • கோவிலை அடைத்துக் கொள்ளை இடுகிறவனா குருக்களுக்குத் தட்சினை கொடுப்பான்?
  • கோவிலைப் பார்த்துக் கும்பிடுகிறதா? கொள்ளை பார்த்துக் கும்பிடுகிறதா?
  • கோவில் மணியம் என்கிற பேர் இருந்தால் போதும்
  • கோவில் மணியம் போனால் நம்பியான் சுழலும் போச்சுதா?
  • கோவில் விளங்கக் குடி விளங்கும்
"https://ta.wikiquote.org/w/index.php?title=இந்து_சமய_பழமொழிகள்&oldid=6917" இலிருந்து மீள்விக்கப்பட்டது