ஊக்கம்

விக்கிமேற்கோள் இலிருந்து

பழமொழிகள்[தொகு]

  • அச்சமில்லாதவன் அம்பலம் ஏறுவான்.
  • இளமையில் சோம்பல் முதுமையில் வருத்தம்.
  • இறைக்க ஊறும் மணற்கேணி, ஈயப் பெருகும் பெருஞ்செல்வம்.
  • உழுகிற நாளில் ஊருக்குப் போனால், அறுக்கிற நாளில் ஆள் தேவையில்லை.
  • ஏருழுகிறவன் இளப்பமானால் எருது மச்சான் முறை கொண்டாடும்.
  • ஒரு காசு பேணின் இரு காசு தேறும்.
  • கடுகத்தனை நெருப்பானாலும் போரைக் கொளுத்திவிடும்.
  • கடுகு சிறுத்தாலும் காரம் போகுமா?
  • கருமத்தை முடிக்கிறவன் கட்டத்தைப் பாரான்.
  • கள் விற்றுக் கலப்பணம் சம்பாதிப்பதைவிடக் கற்பூரம் விற்றுக் காற்பணம் சம்பாதிப்பது மேல்.
  • கற்கையில் கல்வி கசப்பு, கற்றபின் அதுவே இனிப்பு.
  • காய்த்த மரம் கல் அடிபடும்.
  • காரியமாகும் வரையில் கழுதையையும் காலைப்பிடி.
  • காற்று உள்ளபோதே தூற்றிக்கொள்.
  • குந்தி இருந்து தின்றால் குன்றும் மாளும்.
  • செய்வன திருந்தச் செய்.
  • சோம்பலே சோறு இன்மைக்குப் பிதா.
  • நடந்தால் நாடெல்லாம் உறவு , படுத்தால் பாயும் பகை.
  • பதறாத காரியம் சிதறாது.
  • பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை , மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை.
  • மலையைத் துளைக்கச் சிற்றுளி போதாதா?
  • முன் வைத்த காலைப் பின் வைக்கலாமா?முன்னவனே முன் நின்றால் முடியாத பொருள் உளதோ?
  • வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்.
  • வாயுள்ள பிள்ளை பிழைக்கும்.
  • வாழ்வும் தாழ்வும் சில காலம்.

திருக்குறள்கள்[தொகு]

  • உடைய ரெனப்படுவ தூக்கம்; அஃதிலார்
உடைய துடையரோ மற்று?
கருத்து - ஒருவர் ஒன்றை உடையவர் எனின், அவர் ஊக்கத்தை உடையவரே;
அவ்வூக்கம் இல்லாதவர் மற்றை எவற்றை உடையவராயினும் உடையவர்
ஆவரோ?
  • உள்ள முடைமை உடைமை; பொருளுடமை
நில்லாது நீங்கி விடும்..
கருத்து - ஊக்கம் உடைமையே நிலையான உடைமையாகும்;
பொருளுடைமையோ, நிலைபெறலின்றி நீங்கிப் போகும்.
  • ஆக்கம் இழந்தே மென் றல்லாவார்; ஊக்கம்
ஒருவந்தம் கைத்துதுடை யார்..
கருத்து - ஊக்கத்தை உறுதியான கைப்பொருளாக உடையவர்,எம் செல்வத்தை
இழந்து விட்டோம் என்று வருந்திக் கூறும் நிலைக்கு ஆட்படார்.
  • ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும்; அசைவிலா
ஊக்க முடையா னுழை
கருத்து - தளராத ஊக்கம் உடையவனிடத்து வழிகேட்டுச் செல்வம்
தானே வந்து சேரும்.
"https://ta.wikiquote.org/w/index.php?title=ஊக்கம்&oldid=10565" இலிருந்து மீள்விக்கப்பட்டது