சோ ராமசாமி

விக்கிமேற்கோள் இலிருந்து

சோ ராமசாமி (பிறப்பு: அக்டோபர் 5, 1934), பத்திரிக்கை ஆசிரியர், நாடக ஆசிரியர், நடிகர், வக்கீல் போன்ற பல துறைகளில் ஈடுபாடு கொண்டவர்.

மேற்கோள்கள்[தொகு]

நபர் குறித்த மேற்கோள்கள்[தொகு]

  • உலக அரசியல் அறிவும், உயர்படிப்பும், சிந்திக்கும் ஆற்றலும், பேச்சாற்றலும் மிக்க சீரியஸான ஒரு மனிதர், என் போன்ற ஹீரோக்களுடன், கோமாளியாக, முட்டளாக நடித்தது கொடுமையாக இருந்தது. - சோவைப் பற்றி சிவகுமார் கூறியது.[1]
  • திருவல்லிக்கேணி என்.கே.டி. கலா மண்டபம் திறந்தவெளி அரங்கம். சிமெண்ட் படிக்கட்டுகள் அமைந்த காலரியில் ஒரு கோடியில் அமர்ந்து 'சரஸ்வதியின் சபதம்' நாடகம் பார்த்தேன். சுழலும் மேடையில் ஒவ்வொரு காட்சிகளையும் அவர் அமைத்த விதமும், அவரது நையாண்டி வசனமும், பார்வையாளர்களைப் பரவசப்படுத்தி ஐந்து நிமிடத்திற்கு ஒருமுறை கரவொலி எழச் செய்தன. - சோவைப் பற்றி சிவகுமார் கூறியது. [1]
Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 சிவகுமார் (2010). இது ராஜபாட்டை அல்ல. அல்லயன்ஸ். pp. 382-384. 
"https://ta.wikiquote.org/w/index.php?title=சோ_ராமசாமி&oldid=32069" இலிருந்து மீள்விக்கப்பட்டது