யாத்திசை

விக்கிமேற்கோள் இல் இருந்து
Jump to navigation Jump to search

யாத்திசை (Yaathisai) என்பது 2023 இல் வெளியான ஒரு இந்தியத் தமிழ் வரலாற்று அதிரடித் திரைப்படம் ஆகும். இப்படத்தை தரணி இராசேந்திரன் எழுதி இயக்கியுள்ளார்.

கவனம் ஈர்த்த உரையாடல்கள்[தொகு]

  • ஆட்சிக்கு அடிப்படை அதிகாரம் மட்டுமே
  • பெரும் குடிகளுக்கு இடையே நிகழும் போர் சிறு குடிகளை அழித்து விடும்
  • காமமே நம் இளமைக்கு காரணம்
  • கொதி கூறுவது- என் பெற்றோரிடம் நான் கேட்ட அதே கேள்விகளை என் பிள்ளைகள் என்னிடம் கேட்க விடக்கூடாது.
  • சோழநாட்டு அந்தணர் கேட்பது- அந்தணர் என்கிறீர் ஆனால் கையில் காப்பு கட்டி உள்ளது. முறுக்கேறிய தசைகள், வீரத் தழும்புகள்.. எப்படி?
    கொதியின் பதில்: சேர அந்தணர்கள் பரசுராமர் வழி வந்தவர்கள்
  • பாண்டியன் இரணதீரன் கொதி குறித்து கூறுவது- மூன்று இலட்சம் படை வீரர்களைக் கொண்ட ஒரு அரசை ஆயிரம் வீரர்கள் கொண்ட ஒரு சிறு படை எதிர்க்கத் துணிந்தால் அவனே வீரன். அந்த வீரனுக்கு வீர சுவர்கத்தை பரிசாக அளிப்போம்.
  • தேவரடியார் பெண் கொதியிடம் கூறுவது- என் இசையில் உன் அழிவு தெரிகிறது.
    கொதியின் மறுமொழி-பெண்ணும், இசையும் ஆணின் விருப்பங்கள், அழிவுகளல்ல.
  • கொதியின் எள்ளல் கூற்று- ரணதீரன் ஒரு வீரன், ஒரு சில நூறு வீரர்களை எதிர்க்க பல ஆயிரம் படை வீரர்களுடன் வருகிறான்
  • மதம் கொண்ட யானை தானே நிலை சேரும், அதுவரை நாம் காத்ததிருப்போம்.
  • நீ உயர்ந்தவன், உன்னோடு இணைவதால் நானும் உயர்ந்தவன் ஆகிறேன்.
  • கொதியின் கூற்று- என் மகன் ஒரு நாள் அரசனாகவே பிறப்பான்.
  • ரணதீரன் மட்டுமல்ல, எல்லா அரசர்களும் அதிகாரத்திற்கு பயந்தனர், இங்கே அதிகாரம் மட்டுமே நிலையானது, அரசர்களோ, அரசுகளோ நிலையானது இல்லை.
  • அரசர்கள் அவர்களது அதிகாரத்தைதக்க வைக்கவே எல்லாப் போர்களையும் நிகழ்த்தினார்கள்.
"https://ta.wikiquote.org/w/index.php?title=யாத்திசை&oldid=37815" இருந்து மீள்விக்கப்பட்டது