வேமனா
Jump to navigation
Jump to search
குமரகிரி வேம ரெட்டி, தெலுங்கு கவிஞரும், மெய்யியலாளரும் ஆவார். இவரது பாடல்கள் இயல்பான, எளிமையான தெலுங்கிலேயே எழுதப்பட்டிருக்கும். அறிவு, நேர்மை உள்ளிட்ட குணங்களைப் பற்றியே இவரது பாடல்களில் போதித்திருப்பார். இவர் யோகி வேமனா எனவும் அழைக்கப்பட்டார்.
மேற்கோள்கள்[தொகு]
- நாள்தோறும் வேதத்தைக் கற்றாலும் கேட்டாலும், கொடியவன் புனிதமடைந்திடுவானா?[1]
- கற்களை மட்டும் வணங்கி, கண்கண்ட பரமனை நினைந்திடாதவர் மிருகம் போன்றவர்.[1]
- உயிருள்ள எருதுக்கு புல்லைக் கூட போடாதவர் உயிரற்ற நந்தியை வணங்குவதால் என்ன பயன்.[1]
- ஈட்டுகின்ற பெருஞ்செல்வம் செல்வம் அல்ல; இணையற்ற நன்மகவே செல்வம்.[1]
- தோன்றி வாட்டுகின்ற முதுமைவரை நேர்மையாக வாழ்வதுவே செல்வத்துள் சிறந்த செல்வம்.[1]
- கணவனுக் கடங்காப் புல்லிய மனையாள் காலனைப் பேயினை ஒப்பாள்.[1]
- நாதன் களிப்பே பெரிதென்னும் நல்லாள் உலகிற் கணியாவாள்.[1]
- சிற்றுணர்வோர் எப்பொழுதும் தற்பெருமை பேசித் திரிந்திடுவர்; பேரறிஞர் அமைதியுடன் வாழ்வர்.[1]