அகபடும் வரை திருடன் அரசனைப் போல் சுற்றித் திரிவான்.
அறுந்த கயிற்றை முடிக்கலாம், ஆனால் முடிச்சு இருக்கும்.
இரண்டு பெண்களும் ஒரு வாத்தும் இருந்தால் போதும் - அது ஒரு சந்தையாகிவிடும்.
ஒரு செந்நாய்க்கு மற்றொரு செந்நாயைத் தெரியும். அது போல் ஒரு திருடனுக்கு மற்றொரு திருடனின் குணம் தெரியும்.
ஒரே வீட்டில் இரண்டு சக்களத்திகள் இருப்பதைவிட இரண்டு பெண் புலிகள் இருப்பது நலம்.
குடியானவனுக்கு வேண்டியது நிலம், பிரபுவுக்குக் கௌரவங்கள், சிப்பாய்க்கு யுத்தம், வியாபாரிக்குப் பணம், விவசாயிக்கு அமைதி, தொழிலாளிக்கு வேலை, சித்திரக்காரனுக்கு அழகு, பெண்ணுக்கு உலகம் முழுவதும் தேவை.
பெண்ணால் துயரமே வரும், ஆயினும் பெண் இல்லாத வீடே இருக்க முடியாது.
பெண்பிள்ளைக்கு இருமுறை பயித்தியம் பிடிக்கும்: அவள் காதல் கொண்ட சமயம், தலை நரைக்கத் தொடங்கும் சமயம்.
மனிதன், தன்மனைவியைத் தவிர, மற்ற எதைப்பற்றிப் பேசினாலும், பொறுத்துக் கொண்டிருப்பான்.