நாகரிக நடை

விக்கிமேற்கோள் இலிருந்து

நாகரிக நடை குறித்த மேற்கோள்கள்

  • ஒழுக்கத்திற்கும். காலத்திற்கேற்ற நடைக்கும் மிக நெருங்கிய சம்பந்தம் உண்டு. நமது கற்பனையில்தான் நாம் அவற்றைப் பிரித்து எண்ணுகிறோம். - ஸிஸரோ[1]
  • ஒருவன் எங்கு தங்கியிருக்கிறானோ அந்த இடத்திலுள்ள நாகரிக நடையை மேற்கொள்ள வேண்டும் என்பது விதிகளுக்கெல்லாம் மேலான விதி, சட்டங்களுக்கெல்லாம் மேலான பொதுச் சட்டம். -மாண்டேயின்[1]
  • நாகரிக நடை என்பது வெளித் தோற்றங்களுக்கு உரிய கலை. அது ஒருவருக்குக் காலத்திற்கேற்ற தோற்றத்தைப்பற்றி ஆசை உண்டாக்கும். - சேபின்[1]
  • ஒவ்வொரு தலைமுறையும் பழைய நாகரிக முறைகளை ஏளனம் செய்து சிரிக்கின்றது. ஆனால், புதிய முறைகளையே கண்டிப்பாகப் பின்பற்றுகின்றது. - தோரே
  • நாகரிகக் கோலம் ஒரு கொடுங்கோலனைப் போன்றது. அதன் பிடியிலிருந்து நம்மை எதுவும் விடுவிப்பது இல்லை. - பாஸ்கல்[1]
  • தனித் தன்மையை விட்டுவிடுங்கள். பழைய முறைகளைப் பிடித்துக்கொண்டிருப்பதைவிட புதிய முறையில் அதிகக் கர்வம் தோன்றாமலும் இருக்கலாம். அவை மூடர்கள் கண்டு பிடித்தவைகளாகவும் இருக்கலாம். அறிஞர்கள் அவைகளை மறுப்பதற்குப் பதிலாகப் பின்பற்றவும் செய்யலாம். - ஜோபெர்ட்[1]
  • புதுமைத் தோற்றம் உள்ளது ஒவ்வொன்றுமே தீயது என்றோ பழையது ஒவ்வொன்றும் நல்லது என்றோ கருதுவது முற்றிலும் தவறாகும். - மோமெரீ[1]
  • நாகரிகத் தோற்றம் எப்பொழுதும் புதுமையாகவே இருக்க வேண்டும். இல்லாவிட்டால், அது தெவிட்டிப் போய்விடும். - லோவெல்[1]
  • நவநாகரிகத்தில் மிகவும் முன்னதாகச் சேரவும் வேண்டாம் அதிக நாள்வரை பின்தங்கி இருக்கவும் வேண்டாம். எந்தக் காலத்திலும் அமிதமான இரண்டு எல்லைகளின் பக்கம் நிற்க வேண்டாம். - லவேட்டர்[1]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 233-134. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=நாகரிக_நடை&oldid=21832" இலிருந்து மீள்விக்கப்பட்டது