திரிபுரி பழமொழிகள்

விக்கிமேற்கோள் இலிருந்து

இப் பக்கத்தில் திரிபுரி பழமொழிகள் அதன் ஒலிபெயர்ப்புடனும், பொருளுடனும் தொகுக்கபட்டுள்ளன.

  • வட்டாய் கராய் ப்ரேங் காகா[1]
    • மழை இல்லை இடி உண்டு
      • மழை இல்லாதபோது இடி இடிக்கும் (ஒத்த தமிழ்ப் பழமொழி)
  • காக் கடார் கனாய் லங் கானி ராஜா[1]
    • பெரிய வார்த்தைகள் பேசுபவர் இலங்கை ராஜா
      • குரைக்கிற நாய் கடிக்காது (ஒத்த தமிழ்ப் பழமொழி)
  • அதி தக்க பான்மிலிகியா[1]
    • அதிக எண்ணை பளபளப்பு தராது
      • அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு (ஒத்த தமிழ்ப் பழமொழி)
  • அதி குலுங்கனி ததல் பராக்[1]
    • அதிக சலாம் போடுபவர் பொய்யன்
  • சொடாக் குபாங் பகாலி சாகியா[1]
    • அதிக ஆட்கள் குறைந்த மரச் சட்டங்கள் செய்தார்கள்
      • கண்ணுகளாச் சேர்ந்து களம் பறிச்சர் போல ஊர் கூடி செக்கு தள்ளினாற் போல (ஒத்த தமிழ்ப் பழமொழி)
  • பலாராக் குலாங்னலியா முனியா[1]
    • பல பெண்கள் சணல் கொதிக்கவைத்தது சில மரச்சட்டங்கள் செய்தது போல
  • கடா துயாடா புபாகோ[1]
    • குறைவாக நீர் இருந்தால் அது அதிகமாக துள்ளும்
      • குறைகுடம் கூத்தாடும் (ஒத்த தமிழ்ப் பழமொழி)
  • காசா ரூபாய் காசா தடால்[1]
    • பாதி உண்மை, பாதி பொய்
  • தகாபா தாம் புன்னுதியா தாங்[1]
    • காக்கை பசுவாகாது
      • உயர உயர பறந்தாலும் ஊர்குகுருவி பருந்தாகுமா? (ஒத்த தமிழ்ப் பழமொழி)
  • நாக் தோங் கைசே ஹுக்[1]
    • வீடு பெற்றால் நிலம் கேட்பான்
      • வீட்டைக் கொடுத்தால் மோட்டைப் புடுங்குவான். இருக்க இடம் கொடுத்தால் கிடைக்கு இரண்டு ஆடு கேக்குமாம் (ஒத்த தமிழ்ப் பழமொழிகள்)
  • முசுக் பல்நேச்சா மயாங் பல்கினாய் சா ஆவோ?[1]
    • பசு விற்கிரவனுக்கு யானையால் என்ன பயன்?
      • தங்கம் விற்ற கையால் தவிடு விற்கலாச்சே (ஒத்த தமிழ்ப் பழமொழி)
  • சாக் ஹம் கைச்சே பாய்பா காகங்[1]
    • நல்லவனுக்கு உலகம் நல்லது
  • ஆங் பசே கைச்சே புமா[1]
    • அப்பன் பெயரை பிள்ளை பெறுவான்
      • அப்பனுக்கு பிள்ளை தப்பாமல் பிறந்திருக்கான் (ஒத்த தமிழ்ப் பழமொழி)
  • அதி சதக் புனி நைதக்[1]
    • தனக்காக உண்ணவேண்டும், பிறர் மதிக்க உடை உடுத்த வேண்டும்
      • உனக்காகச் சாப்பிடு ஊருக்காக உடுத்து
  • தங் புரு சகனி இச்சா பைபுரு புருமு இச்சா[1]
    • உன் விருப்பப்படி போ; பிறர் விருப்பப்படி வா
  • ருனா வச்புச் தன்சாடி [1]
    • துணிக்கு தக்கபடி நெசவு செய்
      • செருப்புக்குத் தகுந்தாற்போல காலை வெட்டணுமா?
  • துய்மா நய் துயு ரிங்கனான் சுதாய்[1]
    • ஆற்றையும் பார்க்கலாம் சேலையையும் துவைக்கலாம்
      • ஒரே கல்லிலே இரண்டு மாங்காய், ஆட்டை மேய்ச்சாலுமாச்சு, அண்ணனுக்கு பொண்ணு பார்த்தாலுமாச்சு (ஒத்த தமிழ்ப் பழமொழி)
  • யாடொப்லா தூங்கலை புசுக் துனு[1]
    • அடிமரத்தை வெட்டினால் மரம் பட்டுப்போகும்
      • வேர் சாய்ந்தால் தூர் சாயும் (ஒத்த தமிழ்ப் பழமொழி)
  • சாங் சபுரு ககான் கமியா சிசாகா[1]
    • ஆரம்பத்திலேயே ஒன்று நல்லதாக வளருமா கெட்டதாக வளருமா என்று தெரிந்துவிடும்
      • விளையும் பயிர் முளையிலே தெரியும் (ஒத்த தமிழ்ப் பழமொழி)
  • சுகி தும்டே வசும்டாய் பெங்[1]
    • மூங்கில் குழாயில் நுழைத்தாலும் நாய்வால் நேராகாது
      • நாய் வாலை நிமிர்த்த முடியாது (ஒத்த தமிழ்ப் பழமொழி)
  • இயக்கா இயச்சா பாய் சராபாய் மணியா[1]
    • ஒரு கையால் ஓசை உண்டாகாது
      • இருகை தட்டினால்தான் ஓசை (ஒத்த தமிழ்ப் பழமொழி)
  • லாய் தங்மணி சுகான் சஜா ஞைய்யா?[1]
    • பழம்பெருமை பேசாதே
      • தாத்தா தாசில்பண்ணினார், பேரன் தெருத்தூக்குறான் (ஒத்த தமிழ்ப் பழமொழி)
  • நாகானி பாயங் தாமானி பைதா[1]
    • தெரிந்த பிராமணனுக்கு பூணூல் வேண்டியதில்லை
      • நாடறிந்த பாப்பாணுக்கு பூணூல் எதுக்கு? (ஒத்த தமிழ்ப் பழமொழி)
  • குடும் ஆசானி பலக்டி [1]
    • இரும்பு சிவப்பாக இருக்கும்போதே சம்மட்டியால் அடித்து வளைக்கவேண்டும்
      • காற்றுள்ளபோதே தூற்றிக்கொள் (ஒத்த தமிழ்ப் பழமொழி)
  • ரங்சோங் கயினா பரா கிங் ஜாகா [1]
    • பணமிருந்தால் மதிப்பு வரும்
      • பணம் பந்தியிலே (ஒத்த தமிழ்ப் பழமொழி)
  • சிகாகினி புகா கமியா [1]
    • திருடனின் மனம் அமைதியாக இராது
      • கள்ள மனம் துள்ளும், குற்றமுள்ள மனம் குறுகுறுக்கும் (ஒத்த தமிழ்ப் பழமொழி)
  • மைபுங்லே துகிவா சங்பிரா [1]
    • யானை இறந்தால் மனிதன் இடுப்புவரை இருக்கும்
      • யானை செத்தால் குதிரை மட்டம் (ஒத்த தமிழ்ப் பழமொழி)
  • ஜினிகா சடங்கா பேஸ் சாய்மனா[1]
    • வலியால் துன்பப்படுகிறவனுக்கு அதன் கொடுமை தெரியும்
      • தனக்கு வந்தால்தான் தெரியும் (ஒத்த தமிழ்ப் பழமொழி)
  • மனா ரக்கரக் நரி நாய் ரக்கசன்[1]
    • ஆசைபடுவது கிடைக்க கிடைக்க மேலும் மேலும் ஆசைப்படுவான்
      • யாசிக்க சம்சாரம் பெருத்தாற்போல (ஒத்த தமிழ்ப் பழமொழி)
  • ஜதனா ஹங்காய் ஒலவா ஹம்[1]
    • நல்லதாக முடிவெதெல்லாம் நல்லதுதான்
      • எங்கே சுற்றியும் ரங்கனை சேவி (ஒத்த தமிழ்ப் பழமொழி)
  • புசு திக்ளாயா நானிக்காயா புசூம் நாம்[1]
    • ஆணியை எடுக்க ஆணியை அடி
      • முள்ளை முள்ளால் எடு (ஒத்த தமிழ்ப் பழமொழி)
  • தாம் கலையாணி மருயா தயோதி பாய் தங்கா[1]
    • மலிவான காய்கறியில் புழு நிறைந்திருக்கும்
      • கை நிறைய கழுதை விட்டை (ஒத்த தமிழ்ப் பழமொழி)

குறிப்பு[தொகு]

  1. 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 1.11 1.12 1.13 1.14 1.15 1.16 1.17 1.18 1.19 1.20 1.21 1.22 1.23 1.24 1.25 1.26 1.27 1.28 1.29 1.30 1.31 நா. வானமாமலை. பழங்கதைகளும், பழமொழிகளும். நூல் 125-123. நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட். Retrieved on 27 திசம்பர் 2021.
"https://ta.wikiquote.org/w/index.php?title=திரிபுரி_பழமொழிகள்&oldid=37080" இலிருந்து மீள்விக்கப்பட்டது