தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும்

விக்கிமேற்கோள் இலிருந்து


[தொகு]

  • அஃகமும் காசும் சிக்கெனத் தேடு [அஃகம் = தானியம்]
  • அஃகம் சுருக்கேல்
  • அக்கக்கா என்றால் ரங்க ரங்கா என்கிறது
  • அக்கச்சி உடைமை அரிசி; தங்கச்சி உடைமை தவிடா?
  • அக்கப் போரும் சக்கிலியர் கூத்தும்
  • அக்கரைக்காரனுக்குப் புத்தி மட்டம்
  • அக்கரைக்கு இக்கரை பச்சை
  • அக்கரைப் பாகலுக்கு இக்கரைக் கொழுகொம்பு [பாகல் = பாகற்காய்க் கொடி]
  • அக்கரை மாட்டுக்கு இக்கரை பச்சை
  • அக்கரையானுக்கு ஆனது இக்கரையானுக்கும் ஆகட்டும்
  • அக்கரையில் இருக்கிற தாசப்பனைக் கூப்பிட்டு இக்கரையில் இருப்பவன் நாமத்தைப் பார் என்றானாம்
  • அக்கரை வந்து முக்காரம் போடுது [முக்காரம் = பிடிவாதம்]
  • அக்கறை தீர்ந்தால் அக்காள் புருஷன் என்ன கொக்கா?
  • அக்கறை தீர்ந்தால் அக்காள் மொகுடு குக்க
  • அக்கன்னா அரியன்னா, உனக்கு வந்த கேடு என்ன?
  • அக்காக்காயாகச் சுற்றுகிறான்
  • அக்காடு வெட்டிப் பருத்தி விதைக்கிறேன் என்றால், அப்பா எனக்கு ஒரு துப்பட்டி என்கிறான் பிள்ளை; அதற்கு அப்பன், கைகால் பட்டுக் கிழியப் போகிறது, மடித்துப் பெட்டியிலே வை என்கிறான் [துப்பட்டி = போர்வை]
  • அக்காடு வெட்டிக் பருத்தி விதைத்தால், அப்பா முழுச் சிற்றாடை என்கிறாளாம் பெண்
  • அக்காரம் கண்டு பருத்தி விளைந்தால் அம்மா எனக்கு ஒருதுப்பட்டி [அக்காரம் = ஆடை; துப்பட்டி = போர்வை]
  • அக்காரம் சேர்ந்த மணல் தின்னலாமா? [அக்காரம் = சருக்கரை]
  • அக்காள் அரிசி கொடுத்தால்தானே தங்கை தவிடு கொடுப்பாள்?
  • அக்காள் ஆனாலும் சக்களத்தி சக்களத்திதான்
  • அக்காள் இருக்கிற வரையில் மச்சான் உறவு
  • அக்காள் மணப்பந்தலில் இல்லாவிட்டால் தங்கை கழுத்தில் தாலி ஏறும்.
  • அக்காள் உண்டானால் மச்சான் உறவு உண்டு
  • அக்காள் உறவும் மச்சான் பகையுமா?
  • அக்காள் செத்தாள், மச்சான் உறவு அற்றுப் போச்சு
  • அக்காள்தான் கூடப் பிறந்தாள்: மச்சானும் கூடப் பிறந்தானா?
  • அக்காள் போவதும் தங்கை வருவதும் அழகுதான். {அக்காள் [மூதேவி வீட்டை விட்டுப்] போவதும், தங்கை [சீதேவி வீட்டுக்குள்] வருவதும் அழகுதான்.
  • அக்காள் மகள் ஆனாலும் சும்மா வரக் கூடாது
  • அக்காள் வந்தாள்; தங்கை போனாள்
  • அக்காள் வீட்டுக்குப் போனாலும் அரிசியும் பருப்பும் கொண்டு போக வேணும்
  • அக்காள் வீட்டுக் கோழியை அடித்து மச்சானுக்கு விருந்து வைத்தாளாம்
  • அக்காளைக் கொண்டவன் தங்கச்சிக்கு முறை கேட்பானா?
  • அக்காளைக் கொண்டால் தங்கையை முறை கேட்பானேன்?
  • அக்காளைப் பழித்துத் தங்கை மோசம் போனாள்
  • அக்காளோடு போயிற்று, அத்தான் உறவு
  • அக்கியானம் தொலைந்தால் அவிழ்தம் பலிக்கும் [அக்கியானம் = அஞ்ஞானம், அறிவின்மை; அவிழ்தம் = அமிழ்தம்]
  • அக்கிரகாரத்தில் ஆடு செத்தால் ஆளுக்கு ஒரு மயிர் [அக்கிரகாரம் = பார்ப்பனச் சேரி, பார்ப்பனர் குடியிருப்பு]
  • அக்கிரகாரத்தில் பிறந்தாலும் நாய் வேதம் அறியுமா?
  • அக்கிரகாரத்து நாய் அபிமானத்துக்குச் செத்தது
  • அக்கிரகாரத்து நாய்க்கு அகவிலை தெரியுமா? [அகவிலை = தானிய விலை]
  • அக்கிரகாரத்து நாய் பிரதிஷ்டைக்கு அழுதது போல
  • அக்கிரமக்காரன் முகத்தில் விழியாதே
  • அக்கினிக்கும் சாகாத தங்கத்தைப் போல
  • அக்கினி சாட்சி, அருந்ததி சாட்சி
  • அக்கினி தேவனுக்கு அபிஷேகம் செய்ததுபோல் இருக்கிறான்
  • அக்கினிப் பந்தலிலே வெண்ணெய்ப் பதுமை ஆடுமா?
  • அக்கினி மலையிலே கற்பூர பாணம் விட்டது போல்
  • அக்கினியால் சுட்ட புண் ஆறிப் போகும்
  • அக்கினியால் சுட்ட புண் விஷம் கக்குமா?
  • அக்கினியைக் குளிப்பாட்டி ஆனை மேல் வைத்தாற் போல
  • அக்கினியைக் குளிப்பாட்டினாற் போல
  • அக்கினியைத் தின்று சீரணிக்கிற பிள்ளை, அல்லித் தண்டைத் தின்றது அதிசயமா?
  • அக்குணிப் பிள்ளைக்குத் துக்குணிப் பிச்சை [அக்குணி = சிறிதளவு; துக்குணி = சிறிதளவு: சின்ன பிள்ளைக்குச் சின்ன பிச்சை]
  • அக்குத்தொக்கு இல்லாதவனுக்குத் துக்கம் என்ன வந்தது? [அக்குத்தொக்கு = ஒட்டுப் பற்று, உறவுப்பற்று]
  • அக்குத்தொக்கு இல்லாதவன் ஆண்மையும், [அக்குத்தொக்கு = ஒட்டுப் பற்று, உறவுப்பற்று]
  வெட்கஞ்சிக்கு இல்லாதவன் ரோஷமும் [சிக்கு = வெட்கம்]
  மிக்குத் துக்கப்படாதவன் வாழ்வும் நாய் கக்கி நக்கித் தின்றது ஒக்கும்
  • அக்குவேறு ஆணிவேறாகப் பிரிக்கிறான்
  • அகங்காரத்தால் அழிந்தான் துரியோதனன்
  • அகங்கை புறங்கை ஆனாற் போல
  • அகங்கையில் போட்டுப் புறங்கையை நக்கலாமா?
  • அகடவிகடமாய்ப் பேசுகிறான்
  • அகத்தி ஆயிரம் காய்த்தாலும் புறத்தி புறத்தியே
  • அகத்திக் கீரைக்கு மஞ்சள் போட்டு ஆவது என்ன?
  • அகத்தியன் நற்றமிழுக்கும் குற்றம் கூறுவார்
  • அகத்தில் போட்டாலும் அறிந்து போடணும்
  • அகத்திலே ஆயிரம் காய்த்தாலும் புறத்திலே பேசலாமா?
  • அகத்திலே இருப்பவன் அடிமுண்டை என்றானாம்; பிச்சைக்க வந்தவன் பீமுண்டை என்றானாம்
  • அகத்திலே உண்டானால் அம்பி சமத்து
  • அகத்துக்காரர் அத்து முண்டை என்றால், பிச்சைக்கு வந்தவன் பேய் முண்டை என்றானாம்
  • அகத்துக்காரர் இருந்த போது தலைநிறைய மயிர் வைத்துக் கொண்டிருந்தேன் என்றாளாம்
  • அகத்துக்கு அழகு அகமுடையாள்
  • அகத்துக்குப் பெண் பிறந்தால் அத்தை அசல்
  • அகத்துக்கு மூத்தது அசடு
  • அகத்துப் பிராம்மணன் அவிசாரி என்றால் பிச்சைக்கு வந்தவன் பேய் முண்டை என்கிறான்
  • அகத்துப் பிள்ளை ஊட்டுப் பிள்ளை; அடிக்கப் பிள்ளை அசல் வீட்டிலே
  • அகதிக்கு ஆகாசமே துணை
  • அகதிக்கு ஆண்டவன் துணை
  • அகதி சொல் அம்பலம் ஏறாது
  • அகதி தலையில் பொழுது விடிந்தது
  • அகதி பெறுவது பெண் பிள்ளை; அதுவும் வெள்ளி பூாாடம்
  • அகதியை அடித்துக் கொல்லுகிறதா?
  • அகதியைப் பகுதி கேட்கிறதா?
  • அகப்பட்டதைச் சுருட்டடா ஆண்டியப்பா
  • அகப்பட்ட நாயை அடிக்கும் போது, அதைக் கண்ட நாய் காதவழி ஓடும்
  • அகப்பட்டுக் கொண்டவனுக்கு அஷ்டமத்துச் சனி. ஓடிப் போனவனுக்கு ஒன்பதாம் இடத்தில் குரு
  • அகப்பட்டுக் கொண்டாரே விட்டல பட்டர்
  • அகப்பட்டுக் கொண்டான் தண்டம்பட்டுக் கணவாயில்
  • அகப்பட்டுக் கொள்வேன் என்றோ கள்வன் களவு எடுக்கிறது?
  • அகப்பை அறுசுவை அறியுமா?
  • அகப்பைக்கு உருவம் கொடுத்தது ஆசாரி; சோறு அள்ளிப் போட்டுக் குழம்பு ஊற்றியது பூசாரி
  • அகப்பைக்குக் கணை வாய்த்தது போல
  • அகப்பைக்குத் தெரியுமா அடிசிற் சுவை?
  • அகப்பைக்குத் தெரியுமா சோற்று ருசி?
  • அகப்பைக்கு வால் முளைத்தது ஆராலே? ஆசாரியாலே
  • அகப்பைக் கூழுக்குத் தோப்புக்கரணம் போடுகிறான்
  • அகப்பை குறைந்தால் கொழுப்பெல்லாம் அடங்கும்
  • அகப்பை பிடித்தவன் தன்னவன் ஆனால், அடிப்பந்தியில் இருந்தால் என்ன? கடைப்பந்தியில் இருந்தால் என்ன?
  • அகம் ஏறச் சுகம் ஏறும்
  • அகம் குளிர முகம் மலரும்
  • அகம் குறைந்தால் அஞ்சும் குறையும்
  • அகம் மலிந்தால் அஞ்சும் மலியும்
  • அகமுடையாள் நூற்றது அரைஞாண் கயிற்றுக்கும் போதாது
  • அகமுடையாளுக்குச் செய்தால் அபிமானம்
  • அகமுடையான் அடித்த அடியும் அரிவாள் அறுத்த அறுப்பும் வீண் போகா
  • அகமுடையான் அடித்ததற்கு அழவில்லை; சக்களத்தி சிரிப்பாள் என்று அழுகிறேன்
  • அகமுடையான் அடித்ததற்குக் கொழுநனைக் கோபித்துக் கொண்டாளாம்
  • அகமுடையான் அடைவானால் மாமியார் மயிர் மாத்திரம்
  • அகமுடையான் இல்லாத புக்ககமும் அம்மா இல்லாத பிறந்தகமும்
  • அகமுடையான் இல்லாத வெட்கம் அடுத்த வீட்டுக்காரனுக்கா?
  • அகமுடையான் அடித்தது உறைக்கவில்லை; அடுத்தகத்துக்காரன் சிரித்ததுதான் உறைக்கிறது
  • அகமுடையான் அடித்தது பாரம் இல்லை; கொழுந்தன் சிரித்தது பாரம் ஆச்சு
  • அகமுடையான் அடித்தது பெரிது அல்ல; சக்களத்தி சிரிப்பாள் என்று அழுகிறேன்
  • அகமுடையான் அடித்தாலும் அடித்தான்; கண் புளிச்சை விட்டது
  • அகமுடையான் கோப்பு இல்லாக் கூத்தும் குரு இல்லா ஞானமும் போல் இருக்கிறான்
  • அகமுடையான் சாதம் ஆனைபோல் இருக்கும்; பிள்ளை சாதம் பூனை போல் இருக்கும்
  • அகமுடையான் செத்த போதே அல்லலுற்ற கஞ்சி
  • அகமுடையான் செத்தவளுக்கு மருத்துவச்சி தயவு ஏன்?
  • அகமுடையான் செத்து அவதிப்படுகிறபோது அண்டை வீட்டுக்காரன் அக்குளைக் குத்தினானாம்
  • அகமுடையான் திட்டியதைப் பற்றி அடுத்த வீட்டுத் தச்சனைக் கோணல் நிமிர்த்தச் சொன்னாளாம்
  • அகமுடையான் திடம்கொண்டு குப்பை ஏறிச் சண்டை கொடுக்க வேணும்
  • அகமுடையான் பலமானால் குப்பை ஏறிச் சண்டை போடலாம்
  • அகமுடையான் பெண்டாட்டியானாலும் அடுப்புக்கட்டி மூணு
  • அகமுடையான் வட்டமாய் ஓடினாலும் வாசலால் வரவேண்டும்
  • அகமுடையான் வேண்டும் என்ற ஆசையும் இருக்கிறது; அடிப்பானோ என்ற பயமும் இருக்கிறது
  • அகமுடையான் வைததைப்பற்றி அசல் வீட்டுத் தச்சனைக் கோணல் நிமிர்த்தச் சொன்னாளாம்
  • அகமுடையானுக்கு அழுத குறை அந்தகன் வந்து வாய்த்தான்
  • அகமுடையானுக்கு இல்லாத வெட்கம் அடுத்த வீட்டுக்காரனுக்கு என்ன?
  • அகமுடையானுக்குத் தக்க இறுமாப்பு
  • அகமுடையானுக்குப் பெண்டாட்டிமேல் ஆசை, பெண்டாட்டிக்குப் புடைவைமேல் ஆசை
  • அகமுடையானுக்குப் பொய் சொன்னாலும் அடுப்புக்குப் பொய் சொல்லி முடியுமா?
  • அகமுடையானைக் கண்டபோது தாலியைத் தடவுவாளாம்
  • அகமுடையானைக் கொன்ற அற நீலி
  • அகமுடையானைக் கொன்ற பிறகு அறுதாலிக்குப் புத்திவந்தது
  • அகமுடையானை நம்பி அவிசாரி ஆகலாமா?
  • அகமுடையானை வைத்துக் கொண்டல்லவோ அவிசாரி ஆட வேண்டும்?
  • அகர நாக்காய்ப் பேசுகிறான்
  • அகராதி படித்தவன்
  • அகல் வட்டம் பகல் மழை
  • அகல இருந்தால் நிகள உறவு; கிட்ட இருந்தால் முட்டப் பகை
  • அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை
  • அகல இருந்தால் புகல உறவு
  • அகல இருந்து செடியைக் காக்கிறது
  • அகல உழுகிறதை விட ஆழ உழு
  • அகல உழுவதை ஆழ உழு
  • அகலக் கால் வைக்காதே
  • அகல விதை; ஆழ உழு
  • அகவிலை அறியாதவன் துக்கம் அறியாளன்
  • அகவிலையையும் ஆயுசையும் ஆர் கண்டார்?
  • அகன்ற வட்டம் அன்றே மழை; குறுவட்டம் பின்னால் மழை
  • அகன்ற வில் அடுத்து மழை; குறுகிய வில் தள்ளி மழை
  • அகன்று இருந்தால் நீண்ட உறவு; கிட்ட இருந்தால் முட்டப்பகை
  • அகழியில் விழுந்த முதலைக்கு அதுவே வைகுந்தம்
  • அகாரியத்தில் பகீரதப் பிரயத்தனம் பண்ணுகிறது
  • அகிருத்தியம் செய்கிறவன் முகத்தில் விழிக்கிறதா?
  • அகிலும் திகிலுமாக
  • அகோர தபசி வபரீத சோரன்
  • அங்கடி இங்கடி தெங்கடி புளியடி என்று அலைகிறான்
  • அங்கத்திலே குறைச்சல் இல்லை; ஆட்டடா பூசாரி
  • அங்கத்தை ஆற்றில் அலைசொணாதா?
  • அங்கத்தைக் கட்டித் தங்கத்தைச் சேர்ப்பார்
  • அங்கத்தைக் கொண்டு போய் ஆற்றில் அலைசினாலும் தோஷம் இல்லை
  • அங்கத்தைக் கொன்று ஆற்றில் சேர்க்க ஒண்ணாது
  • அங்கம் குளிர்ந்தால் லிங்கம் குளிரும்
  • அங்கம் நோவ உழைத்தால் பங்கம் ஒன்றும் வராது
  • அங்கரங்க வைபவமாய் இருக்கிறான்; அரைக்காசுக்கு முதல் இல்லை
  • அங்காடிக்காரியைச் சங்கீதம் பாடச் சொன்னால், வெங்காயம், கறி வேப்பிலை என்பாள்
  • அங்காடிக் கூடையை அதிர்ந்தடித்துப் பேசாதே
  • அங்காடிக் கூடையை அநியாய விலை கூறாதே
  • அங்காடி நாய் போல அலைந்து திரியாதே
  • அங்காடி மேயும் பழங்கன்று ஏறாதலும் உண்டு
  • அங்காடியில் தோற்றதற்காக அம்மாவை அறைந்தானாம்
  • அங்காளம்மைத் தெய்வம் அகப்பைக் கூடு வழியாய் வரும்
  • அங்கிடு தொடுப்பி எங்கடி போனாய்? சின்னண்ணன் செத்த இழவுக்குப் போனேன்
  • அங்கிடு தொடுப்பிக்கு இங்கு இரண்டுகுட்டு; அங்கு இரண்டுசொட்டு
  • அங்கு அங்குக் குறுணி அளந்து கொட்டியிருக்கிறது
  • அங்கு ஏண்டி மகளே, கஞ்சிக்கு அழுகிறாய்? இங்கே வந்தால் காற்றாய்ப் பறக்கலாம்
  • அங்குசம் இல்லாத ஆனையும் கடிவாளம் இல்லாத குதிரையும் அடங்கா
  • அங்கும் இருப்பான்; இங்கும் இருப்பாள்; ஆக்கின சோற்றுக்குப் பங்கும் இருப்பான்
  • அங்கும் குறுணி அளந்து போட்டிருக்கிறான்
  • அங்கும் தப்பி இங்கும் தப்பி அகப்பட்டுக் கொண்டான் தும்மட்டிப்பட்டன்
  • அங்கும் சோதி; அடியேனும் சோதி
  • அங்குஸ்தி இங்குஸ்தி
  • அங்கே ஏன் பிள்ளே கஞ்சிக்கு அழுகிறாய்? இங்கே வாடி காற்றாய்ப் பறக்கலாம்
  • அங்கே பார்த்தால் ஆடம்பரம்; இங்கே பார்த்தால் கஞ்சிக்குச் சாவு
  • அங்கே போனால் அப்படி; இங்கே வந்தால் இப்படி; ஆகிறது எப்படி?
  • அங்கே போனேனோ செத்தேனோ?
  • அங்கை நெல்லிக்கனி
  • அச்சம் அற்றவன் அம்பலம் ஏறுவான்
  • அச்சம் ஆண்மையைக் குறைக்கும்
  • அச்சாணி அன்னதோர் சொல்
  • அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது
  • அச்சி என்றால் உச்சி குளிருமா? அழுவணம் என்றால் கை சிவக்குமா?
  • அச்சிக்குப் போனாலும் அகப்பை அரைக்காசுதான்
  • அச்சியிலும் உண்டு பிச்சைக்காரன்
  • அச்சில் அடித்தால் போல, அகமுடையானுக்கு ஒத்தாற்போல
  • அச்சி வீடு தீப்பிடித்தால் பட்டர் முண்டு தோளில்
  • அச்சு இல்லாத தேர் ஓடவும் அகமுடையான் இல்லாதவள் பிள்ளை பெறவும் கூடுமா?
  • அச்சு இல்லாமல் தேர் ஓட்டி அகமுடையான் இல்லாமல் பிள்ளை பிறக்குமா?
  • அச்சு இல்லாமல் தேர் ஓடாது
  • அச்சு ஒன்றா வேறா?
  • அசடு வழிகிறது
  • அசத்துக்கு வாழ்க்கைப்பட்டு ஆயிரம் வருஷம் வாழ்வதைவிடச் சமர்த்தனுக்கு. வாழ்க்கைப்பட்டுச் சட்டென்று சாவதே மேல்
  • அசந்தால் வசந்தா
  • அசந்து நடப்பவன் அடிமடியில் அக்காள்; கடுகி நடப்பவன் காலிலே தேவி
  • அசல் அகத்து நெய்யே, என் பெண்டாட்டி கையே
  • அசல் அகத்துப் பிராம்மணா பாம்பைப் பிடி, அல்லித் தண்டைப் போல் குளிர்ந்திருக்கும்
  • அசல் வாழ்ந்தால் அஞ்சு நாள் பட்டினி கிடப்பான்
  • அசல் வாழ ஆறு மாசம் பட்டினி
  • அசல் வீட்டு அகமுடையான் ஆபத்துக்கு உதவுவானா?
  • அசல் வீட்டுக்காரன் அழைத்த கதை
  • அசல் வீட்டுப் பிள்ளை ஆபத்துக்கு உதவுவானா?
  • அசல் வீட்டுக்காரனுக்குப் பரிந்துகொண்டு அகமுடையானை அடித்தாளா?
  • அசல் வீட்டுக்குப் போகிற பாம்பைக் கையாலே பிடிக்கிறான்
  • அசல் வீட்டுச் சண்டை கண்ணுக்குக் குளிர்ச்சி
  • அசைந்து தின்கிறது யானை, அசையாமல் தின்கிறது வீடு
  • அசைப்புக்கு ஆயிரம் பொன் வாங்குகிறது
  • அசை போட்டுத் தின்னுவது மாடு; அசையாமல் விழுங்குவது வீடு
  • அசை போட ஏதாவது இருந்தால் அவனா நகருவான்?
  • அஞ்சலி பந்தனம் யாருக்கும் நன்மை
  • அஞ்சனக்காரன் முதுகிலே வஞ்சனைக்காரன் ஏறினான்
  • அஞ்சனம் குருட்டு விழிக்கு என்ன செய்யும்?
  • அஞ்சாத ஆனைக்குப் பஞ்சாங்கம் கோடரி
  • அஞ்சா நெஞ்சு படைத்தால் ஆருக்கு ஆவான்?
  • அஞ்சாவது பெண் பிறந்தால் அரசனும் ஆண்டி ஆவான்
  • அஞ்சாவது பெண்ணைக் கெஞ்சினாலும் தரமாட்டார்கள்
  • அஞ்சி அஞ்சிச் சாகிறான்
  • அஞ்சி ஆண்மை செய்ய வேணும்
  • அஞ்சி நடக்கிறவனுக்குக் காலம் இல்லை
  • அஞ்சி மணியம் பண்ணாதே; மிஞ்சிப் பிச்சை கேட்காதே
  • அஞ்சி மணியம் பர்ர்த்தது கிடையாது; கெஞ்சிக் கடன் கேட்டது கிடையாது
  • அஞ்சிய அரசன் தஞ்சம் ஆகான்
  • அஞ்சில் ஒரு மழை; பிஞ்சில் ஒரு மழை
  • அஞ்சிலே அறியாதவன் அம்பதிலே அறிவானா?
  • அஞ்சிலே பிஞ்சிலே கொஞ்சாமல் அறுபதுக்குமேல் கொஞ்சினான்
  • அஞ்சிலே வளையாதது அம்பதிலே வளையாது
  • அஞ்சிலே வளையாதது ஐம்பதிலே வளையுமா?
  • அஞ்சினவன் கண்ணுக்கு ஆகாசம் எல்லாம் பேய்
  • அஞ்சினவனுக்கு ஆனை; அஞ்சாதவனுக்குப் பூனை
  • அஞ்சினவனைக் குஞ்சும் மிரட்டும்
  • அஞ்சினவனைப் பேய் அடிக்கும்
  • அஞ்சினாரைக் கெஞ்ச அடியாதே
  • அஞ்சினாரைக் கெஞ்ச வைக்கும்; அடித்தாரை வாழ்விக்கும்
  • அஞ்சு அடி அடித்த பாவனையும் அப்பனேதான்
  • அஞ்சு அடி அடித்துப் போரிலே போட்டாச்சு
  • அஞ்சு அடித்தால் சோரும்; ஆறு அடித்தால் பாயும்
  • அஞ்சு பணம் கொடுத்தாலும் அத்தனை ஆத்திரம் ஆகாது
  • அஞ்சு பணம் கொடுத்து அடிக்கச் சொன்னானாம்; பத்துப் பணம் கொடுத்து நிறுத்தச் சொன்னானாம்
  • அஞ்சு பணம் கொடுத்துக் கஞ்சித் தண்ணீர் குடிப்பானேன்?
  • அஞ்சு பிள்ளைக்குமேல் அரசனும் ஆண்டி
  • அஞ்சு பிள்ளை பெற்றவளுக்குத் தலைச்சன் பிள்ளைக்காரி மருத்துவம் சொன்னாளாம்
  • அஞ்சு பெண்டாட்டி கட்டியும் அறுக்கப் பெண்டாட்டி இல்லை; பத்துப் பெண்டாட்டி கட்டியும் படுக்கப் பெண்டாட்டி இல்லை
  • அஞ்சு பெண் பெற்றால் அரசனும் ஆண்டி
  • அஞ்சு பேரல்லோ பத்தினிமார்? அஞ்சிலே இரண்டு பழுதில்லை
  • அஞ்சு பொன்னும் வாங்கார், அரைப்பணமே போது மென்பார்
  • அஞ்சும் இரண்டும் அடைவானால் அறியாப் பெண்ணும் கறியாக்கும்
  • அஞ்சும் சரியாக இருந்தால் அறியாப் பெண்ணும் கறிசமைப்பாள்
  • அஞ்சும் இருக்கிறது நெஞ்சுக்குள்ளே; அதுவும் இருக்கிறது. புந்திக்குள்ளே
  • அஞ்சும் பிஞ்சுமாக நிற்கிறது
  • அஞ்சும் மூன்றும் உண்டானால் அறியாப் பெண்ணும் கறிசமைக்கும்
  • அஞ்சும் மூன்றும் எட்டு; அத்தை மகளைக் கட்டு
  • அஞ்சு மாசம் வரைக்கும் தாய்க்கும் மறைக்கலாம், சூல்
  • அஞ்சுரு ஆணி இல்லாத் தேர் அசைவது அரிது
  • அஞ்சுருவுத் தாலி நெஞ்சுருகக் கட்டிக்கொண்டு வந்தாற்போல வலக்காரமாய்ப் பேசுகிறான்
  • அஞ்சு வந்தாலும் அவசரம் ஆகாது; பத்து வந்தாலும் பதற்றம் ஆகாது
  • அஞ்சு வயசில் அண்ணன் தம்பி; பத்து வயசில் பங்காளி
  • அஞ்சு வயசில் அரசிலை செய்யப் போனவன் திரட்சியின்போது திரும்பி வந்தானாம்
  • அஞ்சு வயசில் ஆதியை ஓது
  • அஞ்சு வயசு ஆண் பிள்ளைக்கு அம்பது வயசுப் பெண் அடக்கம்
  • அஞ்சு வயசுப் பிள்ளைக்கு அம்பது வயசுப் பெண் காலமுக்க வேணும்
  • அஞ்சு விரலும் அஞ்சு கன்னக் கோல்
  • அஞ்சு விரலும் சமமாக இருக்குமா?
  • அஞ்சுவோரைக் கெஞ்சடிக்கப் பார்க்கிறான்
  • அஞ்சூர்ச் சண்டை சிம்மாளம்; ஐங்கல அரிசி ஒரு கவளம்
  • அஞ்சூரான் பஞ்சு போல
  • அஞ்ஞானம் தீர்ந்தால் ஒளடதம் பலிக்கும்
  • அட்சதைக்கு விதி இல்லை; லட்சம் பிராமணச் சாப்பாடாம்
  • அட்டதரித்திரம் புக்ககத்திலே, அமராவதி போல வாழ்கிறேன்; நித்திய தரித்திரம் தகப்பனாரை நின்ற நிலையில் வரச்சொன்னாள்
  • அட்ட நாயும் பொட்டைக் குஞ்சுமாய்ச் சம்சாரம்
  • அட்டமத்துச் சனி கிட்ட வந்தது போல
  • அட்டமத்துச் சனி நட்டம் வரச்செய்யும்
  • அட்டமத்துச் சனி பிடித்துப் பிட்டத்துத் துணியும் உரிந்து கொண்டது
  • அட்டமத்துச் சனியை வட்டிக்கு வாங்கினாற்போல
  • அட்டாதுட்டிக் கொள்ளித் தேள்
  • அட்டாரைத் தொடாக் காலம் இல்லை
  • அட்டாலும் பால் சுவையில் குன்றாது
  • அட்டில் ஒருவருக்கு, ஆதில் இருவருக்கு, திரி இட்டால் மூவருக்கு
  • அட்டைக் கடியும் அரிய வழி நடையும் கட்டை இடறுதலும் காணலாம் கண்டியிலே
  • அட்டைக்குத் தெரியுமா கட்டில் சுகம்?
  • அட்டைக்கும் திருப்தி இல்லை; அக்கினிக்கும் திருப்தி இல்லை
  • அட்டை மாதிரி உறிஞ்சுகிறான்
  • அட்டை மாதிரி ஒட்டிக் கொள்கிறான்
  • அட்டையை எடுத்துத் தொட்டிலில் கிடத்தினாலும் அது கிடக்கும் குட்டையிலே
  • அட்டையை எடுத்துத் தொட்டிலில் விட்டாற்போல
  • அட்டையை எடுத்து மெத்தையில் வைத்தாலும் செத்தையைச் செத்தையை நக்கும்
  • அட்டையைக் கட்டிச் சட்டியிலே போட்டாலும் அது கிடக்குமாம் சாக்கடையில்
  • அட்டையைக் கழுவிக் கட்டையில் கிடத்தினாலும் அது கிடக்குமாம் சகதியிலே
  • அட்டையைப் பிடித்து மெத்தையில் வைத்தது போல
  • அடக்கத்துப் பெண்ணுக்கு அழகு ஏன்?
  • அடக்கம் ஆயிரம் பொன் பெறும்
  • அடக்கம் உடையார் அறிஞர்; அடங்காதார் கல்லார்
  • அடக்கம் உள்ளவன் பொருளுக்கு ஆபத்து இல்லை
  • அடக்கமே பெண்ணுக்கு அழகு
  • அடக்குவார் அற்ற கழுக்காணியும் கொட்டுவார் அற்ற மேளமும் போலத் திரிகிறான்
  • அடங்காத பாம்புக்கு ராஜா மூங்கில் தடி
  • அடங்காத பிடாரியைப் பெண்டு கொண்டது போல
  • அடங்காத பிள்ளைக்கு ஒரு வணங்காத பெண்
  • அடங்காத பெண்சாதியால் அத்தைக்கும் பொல்லாப்பு: நமக்கும் பொல்லாப்பு
  • அடங்காப் பெண்டிரைக் கொண்டானும் கெட்டான்; அறுகங்காட்டை உழுதவனும் கெட்டான்
  • அடங்காத மனைவியும் ஆங்காரப் புருஷனும்
  • அடங்காத மாட்டுக்கு அரசன் மூங்கில் தடி
  • அடங்கின பிடிபிடிக்க வேணுமே அல்லாமல் அடங்காத பிடி பிடிக்கலாகாது
  • அடடா கருக்கே அரிவாள் மணை சுருக்கே!
  • அடம்பங்கொடியும் திரண்டால் மிடுக்கு
  • அடம் பண்ணுகிற தேவடியாளுக்கு முத்தம் வேறே வேணுமா?
  • அடர்த்தியை அப்போதே பார்; புணக்கத்தைப் பின்னாலே பார்
  • அடர உழு; அகல விதை
  • அடர விதைத்து ஆழ உழு
  • அட ராவணா என்றானாம்
  • அடா என்பவன் வெளியே புறப்பட்டான்
  • அடாது செய்தவர் படாது படுவர்
  • அடாது செய்தவன் படாது படுவான்
  • அடாது மழை பெய்தாலும் விடாது நாடகம் நடக்கும்
  • அடி அதிசயமே, சீமைச் சரக்கே!
  • அடி அதிரசம்; குத்துக் கொழுக்கட்டை
  • அடி அற்ற பனைபோல் விழுந்தான்
  • அடி அற்ற மரம்போல அலறி விழுகிறது
  • அடி அற்றால் நுனி விழாமல் இருக்குமா?
  • அடி உதவுவது போல அண்ணன் தம்பி உதவமாட்டார்
  • அடி என்கிற ராஜாவும் இல்லை; பிடி என்கிற மந்திரியும் இல்லை
  • அடி என்பதற்கு அவளைக் காணோம்; பிள்ளை பிறந்தால் ராம கிருஷ்ணன் என்று பெயர் வைக்கவேண்டுமென்று ஆசைப் பட்டானாம்
  • அடி என்பதற்குப் பெண்டாட்டி இல்லை; அஷ்ட புத்திரர்கள் எட்டுப்பேராம்
  • அடி என்பதற்குப் பெண்டாட்டி இல்லை; பிள்ளை பெயர் அருணாசலமாம்
  • அடி என்று அழைக்கப் பெண்டாட்டி இல்லை; பிள்ளை எத்தனை, பெண் எத்தனை என்றானாம்
  • அடி என்று சொல்ல அகமுடையாளைக் காணோம்; பிள்ளைக்குப் பேர் என்ன வைக்கிறது என்றானாம்
  • அடி ஒட்டி அல்லவா மேற்கரணம் போட வேண்டும்?
  • அடி ஓட்டையாய் இருந்தாலும் கொழுக்கட்டை வேக வேண்டியது தானே?
  • அடிக்க அடிக்க அம்மியும் நகரும்
  • அடிக்க அடிக்கப் படுகிறவனும் முட்டாள்; படப்பட அடிக்கிறவனும் முட்டாள்
  • அடிக்க அடிக்கப் பந்து விசை கொள்ளும்
  • அடிக்க அடிக்கப் பிள்ளை வளரும்; முறுக்க முறுக்க மீசை வளரும்
  • அடிக்கடி அரசன் பிரவேசித்த கிராமம் அதிரூபத்தை அடையும்
  • அடிக்கிற காற்றுக்கும் காய்கிற வெயிலுக்கும் பயப்படு
  • அடிக்கிற காற்று வெயிலுக்குப் பயப்படுமா?
  • அடிக்கிற கைதான் அணைக்கும்
  • அடிக்கு ஆயிரம் பொன் கொடுக்க வேண்டும்
  • அடிக்குப் பயந்து அடுப்பில் விழுந்தாளாம்
  • அடிக்கும் ஒரு கை; அணைக்கும் ஒரு கை
  • அடிக்கும் காற்றிலே எடுத்துத் துரற்ற வேண்டும்
  • அடிக்கும் சரி, பிடிக்கும் சரி
  • அடிக்கும் பிடிக்கும் சரியாய்ப் போச்சு
  • அடிக்குழம்பு ஆனைக்குட்டி போல
  • அடிச்சட்டிக்குள்ளே கரணம் போடலாமா?
  • அடிச்சட்டியில் கரணம் போட்டுக் குண்டு சட்டியில் குதிரைச் சவாரி பண்ணினானாம்
  • அடி சக்கை பொடி மட்டை
  • அடி சக்கை, லொட லொட்டை
  • அடி செய்கிறது அண்ணன் தம்பி செய்யார்
  • அடி செருப்பாலே, ஆற்றுக்கு அப்பாலே
  • அடித்த இடம் கண்டுபிடித்து அழ ஆறு மாசம் ஆகும்
  • அடித்த எருக்கும் குடித்த கூழுக்கும் சரி
  • அடித்தது ஆட்டம், பிடித்தது பெண்டு
  • அடித்தது ஆலங்காடு
  • அடித்த நாய் உழன்றாற் போல
  • அடித்த மாடு சண்டி
  • அடித்தவன் பின்னால் போனாலும் போகலாம்; பிடித்தவன் பின்னால் போகக்கூடாது
  • அறுபதுக்குமேல் கொஞ்சினாலும் அஞ்சிலே வளையாதது அம்பதிலே வளையாது
  • அடித்தா பால் புகட்டுகிறது?
  • அடித்தால் அடி மறக்காது; அம்பு போட்டால் அம்பு பாயாது; சொன்னால் சொல் பிறக்காது
  • அடித்தால் கூட அழத் தெரியாது
  • அடித்தால் முதுகில் அடி, வயிற்றில் அடிக்காதே
  • அடித்தாலும் புடைத்தாலும் என் அகமுடையான்; அடுப்புக் கொழுக்கட்டையைத் தொடாதே
  • அடித்தாலும் புருஷன். உதைத்தாலும் புருஷன். அணைத்தாலும் புருஷன். புடைத்தாலும் புருஷன்.
  • அடித்தாற் போல அடிக்கிறேன்; நீ அழுகிறது போல அழு
  • அடித்தான் ஐயா பிரைஸ், காது அறுந்த ஊசி
  • அடித்தான் பிடித்தான் வியாபாரம்
  • அடித்து அழ விட்டால் அது ஒரு விளையாட்டா?
  • அடித்துப் பழுத்தது பழமா?
  • அடித்துப் பால் புகட்டுகிறதா?
  • அடித்துப் போட்ட நாய் மாதிரி கிடக்கிறான்
  • அடித்து வளர்க்காத பிள்ளையும் இல்லை; முறித்து வளர்க்காத முருங்கையும் இல்லை
  • அடித்து வளர்க்காத பிள்ளையும் ஊட்டி வளர்க்காத கன்றும்
  • அடித்து வளர்க்காத பிள்ளையும் முறித்து வளர்க்காத முருங்கையும்
  • அடித்து வளர்க்காத பிள்ளையும் முறுக்கி வளர்க்காத மீசையும் வாய்க்கு முன் ஏய்க்கும்
  • அடித்து விட்டவன் பின்னே போனாலும் பிடித்து விட்டவன் பின்னே போகலாகாது
  • அடி தெற்றினால் ஆனையும் சறுக்கும்
  • அடி நாக்கில் நஞ்சு; நுனி நாக்கில் அமிழ்தம்
  • அடி நாக்கிலே நஞ்சும் நுனி நாக்கில் அமுதமும்
  • அடி நொச்சி; நுனி ஆமணக்கா?
  • அடிப்பதும் ஒரு கை; அணைப்பதும் ஒரு கை
  • அடிப்பானேன்? பிடிப்பானேன்? அடக்குகிற வழியிலே அடக்குவோம்
  • அடிபட்ட நாய் போல
  • அடிபட்ட நாயைப் போல் காலைத் தூக்கி நடவாதே
  • அடிபட்டவன் அழுவான்
  • அடிபட்டாலும் ஆர்க்காட்டுச் சடாவால் அடிபட வேண்டும்
  • அடி பெண்ணே சோறு ஆச்சா? நொடிக்குள்ளே சோறு ஆச்சு
  • அடிபோன சட்டி ஆயா வீட்டில் இருந்தால் என்ன? மாமியார் வீட்டில் இருந்தால் என்ன?
  • அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்
  • அடிமை படைத்தால் ஆள்வது கடன்
  • அடியடா செருப்பாலே அறுநூறு; இந்தாடா நாயே திருநீறு
  • அடியாத பிள்ளை படியாது
  • அடியாத மாடு படியாது
  • அடியில் உள்ளது நடுவுக்கும் முடிவுக்கும் உண்டு
  • அடியுண்ட வேங்கை போல
  • அடியும் நுனியும் தறித்த கட்டை போல
  • அடியும் பிடியும் சரி
  • அடியே என்பதற்கு அகமுடையான் இல்லை; பிள்ளை பேர் சந்தான கோபால கிருஷ்ணன்
  • அடியைக் காத்து முடியை அடித்துக் கொண்டு போச்சு
  • அடியைப் பிடியடா பாரத பட்டா!
  • அடியை விட ஆவலாதி பெரியது
  • அடியோடு அடிக் கரணம்
  • அடிவண்டிக் கிடாப் போலே
  • அடிவயிற்றில் இடி விழுந்தாற் போல
  • அடிவயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டது போல
  • அடிவயிற்றில் புளியைக் கரைக்கிறது
  • அடுக்கல் குத்தினால், நடுக்கல் குத்துவாள்
  • அடுக்களை உறவு இல்லாமல் அம்பலத்து உறவா?
  • அடுக்களைக் கிணற்றிலே அமுதம் எழுந்தாற் போல்
  • அடுக்களைக்கு ஒரு பெண்ணும் அம்பலத்துக்கு ஓர் ஆணும்
  • அடுக்களைக் குற்றம் சோறு குழைந்தது; அகமுடையான் குற்றம் பெண்ணாய்ப் பிறந்தது
  • அடுக்களைப் பூனைபோல் இடுக்கிலே ஒளிக்கிறது
  • அடுக்களைப் பெண்ணுக்கு அழகு வேண்டுமா?
  • அடுக்குகிற அருமை உடைக்கிற நாய்க்குத் தெரியுமா?
  • அடுத்தகத்துக்காரிக்குப் பிள்ளை பிறந்ததென்று உலக்கையை எடுத்து இடித்துக்கொண்டாளாம்
  • அடுத்தகத்துப் பிராம்மணா பாம்பைப் பிடி; அல்லித் தண்டுபோல் குளிர்ந்திருக்கும்
  • அடுத்த கூரை வேகிறபோது தன் கூரைக்கும் மோசம்
  • அடுத்ததன் தன்மை ஆன்மா ஆகும்
  • அடுத்தவரை அகல விடலாகாது
  • அடுத்தவரைக் கெடுக்கலாகாது
  • அடுத்தவளுக்கு அகமுடையான் வந்தது போல
  • அடுத்தவன் தலையில் நரை என்பானேன்? அவன் அதைச் சிரை என்பானேன்?
  • அடுத்தவன் வாழப் பகலே குடி எடுப்பான்
  • அடுத்தவனை ஒரு போதும் கெடுக்கலாகாது
  • அடுத்தவனைக் கெடுக்கலாமா?
  • அடுத்த வீட்டில் மொச்சை வேகிறதென்று அடிவயிறு பிய்த்துக் கொண்டு போகிறது
  • அடுத்த வீட்டுக்காரனுக்கு அதிகாரம் வந்தால் அண்டை வீட்டுக்கு இரைச்சல் லாபம்
  • அடுத்த வீட்டுக்காரனுக்கு அதியோகம் வந்தால் அண்டை வீடு குதிரைலாயம்
  • அடுத்த வீட்டுக்காரனுக்கு அதிகாரம் வந்தால் அண்டை வீட்டுக்காரனுக்கு இரைச்சல் இலாபம்
  • அடுத்த வீட்டுக்காரனுக்கு மணியம் போகிறது; ஒன்றாகக் காது அறுத்துக் கொள்ளுங்கள்
  • அடுத்த வீட்டுக்காரி பிள்ளை பெற்றாள் என்று அம்மிக்குழவி எடுத்துக் குத்திக் கொண்டாளாம்
  • அடுத்தாரைக் கெடுக்கிறதா?
  • அடுத்தாரைக் கெடுத்து அன்னம் இட்டார் வீட்டில் கன்னம் இடுகிறான்
  • அடுத்தாரைக் கோபித்தால் கெடுத்தாலும் கெடுப்பார்
  • அடுத்து அடுத்துச் சொன்னால் தொடுத்த காரியம் முடியும்
  • அடுத்து அடுத்துப் போனால் அடுத்த வீடும் பகை
  • அடுத்துக் கெடுப்பவர்
  • அடுத்துக் கெடுப்பான் கபடன்; கொடுத்துக் கெடுப்பான் மார்வாடி; தொடுத்துக் கெடுப்பாள் மடந்தை
  • அடுத்துச் சொன்னால் எடுத்த காரியம் முடியும்
  • அடுத்து முயன்றாலும் ஆகும் நாள்தான் ஆகும்
  • அடுத்து வந்தவனுக்கு ஆதரவு சொல்கிறவன் குரு
  • அடுப்பங் கரையே கைலாசம், அகமுடையானே சொர்க்க லோகம்
  • அடுப்பங் கரையே சொர்க்கம்; அகமுடையானே தெய்வம்
  • அடுப்பங் கரையே திருப்பதி; அகமுடையானே கைலாசம்
  • அடுப்பு அடியில் பூனை தூங்க
  • அடுப்பு அடியில் வெண்ணெய் வைத்த கதை
  • அடுப்பு ஊதும் பெண்ணுக்குப் படிப்பு எதற்கு?
  • அடுப்பு எரிந்தால்தானே பொரி பொரியும்?
  • அடுப்பு எரிந்தால் பொரி பொரியும்; தாயார் செத்தால் வயிறு எரியும்
  • அடுப்பு எரியாத கோபத்தை அகமுடையான்மேல் காட்டினாளாம்
  • அடுப்புக் கட்டிக்கு அழகு வேணுமா?
  • அடுப்புக் கரகரப்பும் அகமுடையான் முணுமுணுப்பும்
  • அடுப்புக்கு ஒரு துடுப்பா?
  • அடுப்புக்குத் தகுந்த உலை, அகமுடையானுக்குத் தகுந்த இறுமாப்பு
  • அடுப்புக் குற்றம் சாதம் குழைந்தது: அகமுடையான் குற்றம் பெண் பிறந்தது
  • அடுப்பு நெருப்பும் போய் வாய்த் தவிடும் போச்சு
  • அடுப்பும் நெருப்பும் பயப்படுமா?
  • அடுப்பே திருப்பதி; அகமுடையானே குலதெய்வம்
  • அடே அத்தான் அத்தான். அம்மான் பண்ணினாற் போல் இருக்க வில்லையடா
  • அடைக்கலாங் குருவிக்கு ஆயிரத் தெட்டுக் கண்டம்
  • அடைத்தவன் காட்டைப் பார்; மேய்த்தவன் மாட்டைப் பார்
  • அடை தட்டின வீடு தொடை தட்டும்
  • அடைதட்டின வீடும் தொடை தட்டின வீடும் உருப்படா
  • அடைந்தோரை ஆதரி
  • அடைப்பான் குற்றம். துடைப்பான் குற்றம், அகமுடையான் குற்றம் பெண்ணாய்ப் பிறந்ததாம்
  • அடைப்பைப் பிடுங்கினால் பாம்பு கடிக்கும்
  • அடைபட்டுக் கிடக்கிறான் செட்டி; அவனை அழைத்து வா, பணம் பாக்கி என்கிறான் பட்டி
  • அடை மழைக் காலத்தில் ஆற்றங் கரையில் தண்ணீர்ப் பந்தல் வைத்தானாம்
  • அடை மழையில் ஆட்டுக்குட்டி செத்தது போல
  • அடை மழையும் உழவு எருதும்
  • அடை மழை விட்டும் செடி மழை விடவில்லை
  • அடையலரை அடுத்து வெல்
  • அடையா, அப்பமா, விண்டு காட்ட?
  • அடைவு அறிந்து காரியம் செய்தால் விரல் மடக்க நேரம் இராது
  • அண்டங் காக்காய் குழறுகிறது போல
  • அண்டத்தில் இல்லாதது பிண்டத்தில் உண்டா?
  • அண்டத்தில் உள்ளது பிண்டத்திலே
  • அண்டத்துக்கு ஒத்தது பிண்டத்துக்கு
  • அண்டத்தைக் கையில் வைத்து ஆட்டும் பிடாரிக்குச் சுண்டைக்காய் எடுப்பது பாரமா?
  • அண்டத்தைச் சுமக்கிறவனுக்குச் சுண்டைக்காய் பாரமா?
  • அண்ட நிழல் இல்லாமல் போனாலும் பேர் விருட்சம்
  • அண்டமும் பிண்டமும் அந்தரங்கமும் வெளியரங்கமும்
  • அண்டர் எப்படியோ, தொண்டரும் அப்படியே
  • அண்டாத பிடாரி ஆருக்கு அடங்குவாள்?
  • அண்டை அயலைப் பார்த்துப் பேசு
  • அண்டை நிலத்தையும் அயல் மனையையும் கை விடாதே
  • அண்டை மேலுள்ள கோபத்தை ஆட்டுக்கிடாயின் மேல் காட்டியதைப் போல
  • அண்டையில் சமர்த்தன் இல்லாத ராஜாவுக்கு அபகீர்த்தி வரும்
  • அண்டையில் வா என்றால் சண்டைக்கு வருகிறாயே!
  • அண்டை வீட்டு ஆட்டைப் பார்த்து நாய் குரைத்தது போல
  • அண்டை வீட்டுக் கடனும் பிட்டத்துச் சிரங்கும் ஆகா
  • அண்டை வீட்டுக் கல்யாணமே, ஏன் அழுகிறாய் கோவணமே?
  • அண்டை வீட்டுக்காரி பிள்ளை பெற்றாளென்று அயல் வீட்டுக்காரி அடி வயிற்றில் இடித்துக் கொண்டது போல
  • அண்டை வீட்டுக்காரி பிள்ளை பெற்றாளென்று உலக்கை எடுத்து அடித்துக் கொண்டாளாம்
  • அண்டை வீட்டுச் சண்டை கண்ணுக்குக் குளிர்ச்சி
  • அண்டை வீட்டுச் சுப்பிக்கும் எதிர்வீட்டுக் காமாட்சிக்குமா கவலை?\
  • அண்டை வீட்டு நெய்யே, என் பெண்டாட்டி கையே
  • அண்டை வீட்டுப் பார்ப்பான் சண்டை மூட்டித் திரிவான்
  • அண்ணற ஆயிரம் பொன்னிலும் நிண்ணற ஒரு காசு பெரிது
  • அண்ணன் உண்ணாதது எல்லாம் மதனிக்கு லாபம்
  • அண்ணன் எப்போது ஒழிவானோ? திண்ணை எப்போது காலி ஆகுமோ?
  • அண்ணன் கொம்பு பம்பள பளாச்சு
  • அண்ணன் சம்பாதிக்கிறது தம்பி அரைஞாணுக்குக் கூடப் போதாது
  • அண்ணன் தங்கை அப்ஸர ஸ்திரீ
  • அண்ணன் தம்பிதான் சென்மப் பகையாளி
  • அண்ணன் தம்பி பின்பாட்டு; அக்கா தங்கைகள் அடிகிரவணம்
  • அண்ணன் தம்பி வேண்டும், இன்னம் தம்பிரானே
  • அண்ணன்தான் கூடப்பிறந்தான்; அண்ணியும் கூடப் பிறந்தாளோ?
  • அண்ணன்தான் சொந்தம்; அண்ணியுமா சொந்தம்?
  • அண்ணன் பிள்ளையை நம்புகிறதற்குத் தென்னம் பிள்ளையை நம்பலாம்
  • அண்ணன் பிறந்து அடிமட்டம் ஆச்சு; தம்பி பிறந்து தரைமட்டம் ஆச்சு
  • அண்ணன் பெண்டாட்டி அரைப் பெண்டாட்டி; தம்பி பெண்டாட்டி தன் பெண்டாட்டி
  • அண்ணன் பெரியவன்; அப்பா அடுப்பூது
  • அண்ணன் பெரியவன்; அப்பா நெருப்பெடு என்கிற கதை
  • அண்ணன் பெரியவன்; சிற்றப்பா, சுருட்டுக்கு நெருப்புக் கொண்டு வா
  • அண்ணன் பேச்சைத் தட்டவும் மாட்டேன்; மேலைப் பங்கை விடவும் மாட்டேன்
  • அண்ணன் பேரில் இருந்த கோபத்தை நாய்பேரில் ஆற்றினான்
  • அண்ணன் வரும் வரையில் அமாவாசை நிற்குமா?
  • அண்ணனார் சேனையிலே அள்ளிப் போகிறான்
  • அண்ணனிடத்தில் ஆறு மாசம் வாழ்ந்தாலும் அண்ணியிடத்தில் அரை நிமிஷம் வாழலாமா?
  • அண்ணனுக்குத் தங்கை அபஸரஸ் ஸ்திரீ
  • அண்ணனுக்குத் தம்பி அல்ல என்று போகுமா?
  • அண்ணனுக்குப் பெண் பிறந்தால் அத்தை அசல் நாட்டாள்
  • அண்ணனை அகம் காக்க வைத்துவிட்டு மன்னி மல்லுக்குப் போனாளாம்
  • அண்ணனைக் கண்டாயோ என்று போய்விட்டான்
  • அண்ணனைக் கொன்ற பழியைச் சந்தையிலே தீர்த்துக் கொள்கிறது போல
  • அண்ணாக்கும் தொண்டையும் அதிர அடைத்தது போல
  • அண்ணா சம்பாதிப்பது அம்பி அரைஞாண் கயிற்றுக்கும் பற்றாது
  • அண்ணா செத்த பிறகு மன்னியிடம் உறவா?
  • அண்ணாண்டி வாரும்; சண்டையை ஒப்புக் கொள்ளும்
  • அண்ணா நங்கை அப்ஸ்ர ஸ்திரீ
  • அண்ணாதூர் பாடை, ஆலம்பாக்கத்து ஓடை, சதண்டி வைக்கோற் போர்
  • அண்ணாமலைக்கு அரோ ஹரா!
  • அண்ணாமலைச் சாமி மின்னினாற் போலே பயணம்
  • அண்ணாமலையார் அருள் இருந்தால் மன்னார் சாமி மயிர் பிடுங்குமா?
  • அண்ணாமலையாருக்கு அறுபத்து நாலு பூசை; ஆண்டிகளுக்கு எழுபத்து நாலு பூசை
  • அண்ணா மனசு வைத்தால் மதனிக்குப் பிள்ளை பிறக்கும்
  • அண்ணா வரும் வரையில் அமாவாசை காத்திருக்காது
  • அண்ணா வாரும்; சண்டையை ஒப்புக்கொள்ளும்
  • அண்ணாவி கால் இடறினால் அதுவும் ஒரு நடைமுறை
  • அண்ணாவி தவறு செய்தால் அதுவும் நடைமுறை
  • அண்ணாவி நின்று கொண்டே மோண்டால் பையன் ஓடிக் கொண்டே மோள்வான்
  • அண்ணாவி பிள்ளைக்குப் பணம் பஞ்சமா? அம்பட்டன் பிள்ளைக்கு, மயிர் பஞ்சமா?
  • அண்ணாவுக்கும் மன்னிக்கும் அனவரதமும் பிணக்கு
  • அண்ணி ஆண்டாளு, ஆறுமுகம் கூத்தியாரு
  • அணி இலாக் கவிதை பணி இலா வனிதை
  • அணி எல்லாம் ஆடையின்பின்
  • அணி பூண்ட நாய் போல
  • அணியத்திலே கிழிந்தாலும் கிழிந்தது; அமரத்திலே கிழிந்தாலும் கிழிந்தது
  • அணில் ஏற விட்ட நாய் போல
  • அணில் ஏறித் தென்னை அசையுமா?
  • அணில் ஓட்டமும் ஆமை நடையும்
  • அணில் கொம்பிலும், ஆமை கிணற்றிலும்
  • அணில் கொம்பிலே; ஆமை கிணற்றிலே
  • அணில் நொட்டிப் பனை முறியுமா?
  • அணில் நொட்டியா தென்னை சாயும்?
  • அணில் நொட்டினதும் தென்னமரம் வீழ்ந்ததும்
  • அணில் பிள்ளையின் தலை மீது அம்மிக் கல்லை வைத்தது போல
  • அணில் வாயாற் கெட்டாற் போல
  • அணிலைக் கொன்றால் ஆழாக்குப் பாவம்; ஓணானைக் கொன்றால் உழக்குப் புண்ணியம்
  • அணிற் பிள்ளைக்கு நுங்கு அரிதோ? ஆண்டிச்சி பிள்ளைக்குச் சோறு அரிதோ?
  • அணு அளவு பிசகாது
  • அணு மகா மேரு ஆகுமா?
  • அணு மலை ஆச்சு; மலை அணு ஆச்சு
  • அணுவுக்கு அணு, மகத்துக்கு மகத்து
  • அணுவும் மகமேரு ஆகும்
  • அணுவும் மலை ஆச்சு; மலையும் அணு ஆச்சு
  • அணை கடந்த வெள்ளத்தைத் தடுப்பவர் யார்?
  • அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வருமா?
  • அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வாராது
  • அத்தச் செவ்வானம் அடை மழைக்கு அடையாளம்
  • அத்தத்தின் மிகுதியல்லவா, அம்பட்டன் பெண் கேட்க வந்தது?
  • அத்தனைக்கு இத்தனை உயரம், ஐராவதம் போல் எங்கள் பசு
  • அத்தனையும் சேர்த்தும் உப்பிட மறந்தது போல
  • அத்தனையும்தான் செய்தாள், உப்பிட மறந்தாள்
  • அத்தான் அரை அகமுடையான்
  • அத்தான் செத்தால் மயிர் ஆச்சு; கம்பளி மெத்தை நமக்கு ஆச்சு
  • அத்தான் முட்டி, அம்மாஞ்சி உபாதானம், மேலகத்துப் பிராம்மணன் யாசகமென்று கேட்டானாம்
  • அத்திக்காய் தெரியுமா? வட்டைக்காய் தெரியுமா?
  • அத்திப் பழத்தைப் பிட்டால் அத்தனையும் சொத்தை
  • அத்திப் பழத்தைப் பிட்டுப்பார்த்தால் அத்தனையும் புழு
  • அத்திப் பூவை ஆர் அறிவார்?
  • அத்திப் பூவைக் கண்டவர் உண்டா? ஆந்தைக் குஞ்சைப் பார்த்தவர் உண்டா?
  • அத்தி பூத்தது ஆரும் அறியார்?
  • அத்தி பூத்தாற் போல்
  • அத்தி மரத்தில் தொத்திய கிளி போல
  • அத்தி முதல் எறும்பு வரை
  • அத்தியும் பூத்தது; ஆனை குட்டியும் போட்டது
  • அத்திரி மாக்கு, ஆறு தாண்டுகிறேனா. இல்லையா, பார்
  • அத்து மீறிப் போனான், பித்துக்குளியானான்
  • அத்து மீறினால் பித்து
  • அத்தை இல்லாப் பெண்ணுக்கு அருமை இல்லை; சொத்தை இல்லாப் பவழத்துக்கு மகிமை இல்லை
  • அத்தை இல்லாப் பெண்டாட்டி வித்தாரி, மாமியில்லாப் பெண்டாட்டி வயிறுதாரி
  • அத்தை இல்லாப் பெண் வித்தாரி; மாமி இல்லாப் பெண் மாசமர்த்தி
  • அத்தை இல்லா வீடு சொத்தை
  • அத்தை இறப்பாளா, மெத்தை காலி ஆகுமா என்று காத்திருப்பது போல
  • அத்தைக்கு ஒழியப் பித்தைக்கு இல்லை; ஒளவையார் இட்ட சாபத்தீடு
  • அத்தைக்குத் தாடி முளைத்தால் சிற்றப்பா என்னலாமா?
  • அத்தைக்குப் பித்தம்; அவருக்குக் கிறுகிறுப்பு
  • அத்தைக்கு மீசை முளைத்தால் சிற்றப்பா
  • அத்தை கடன்காரி; அடி நாளைய சத்துரு
  • அத்தைச் சொல்லடா சீமானே
  • அத்தைத்தான் சொல்வானேன்? வாயைத்தான் வலிப்பானேன்?
  • அத்தை பகையும் இல்லை; அம்மாமி உறவும் இல்லை
  • அத்தை மகன், அம்மான் மகள் சொந்தம் போல
  • அத்தைமகள் ஆனாலும் சும்மா வருவாளா?
  • அத்தை மகளைச் கொள்ள முறை கேட்க வேண்டுமா?
  • அத்தையடி அத்தை, அங்காடி விற்குதடி, கண்மணியாளே நெல்லுமணி தருகிறேன்
  • அத்தையடி மாமி, கொத்துதடி கோழி
  • அத்தையைக் கண்ட சகுனம் அத்தோடு போயிற்று
  • அத்தை வீட்டு ரேழியில் கொண்டுவிட்டால்தான் கிழக்கு மேற்குத் தெரியும்
  • அத்தோடு நின்றது அலைச்சல்; கொட்டோடே நின்றது குலைச்சல்
  • அதமனுக்கு ஆயிரம் ஆயுசு
  • அதர்மம் அழிந்திடும்
  • அதற்கும் இருப்பாள், இதற்கும் இருப்பாள், ஆக்கின சோற்றுக்குப் பங்கிற்கும் இருப்பாள்
  • அதற்கு வந்த அபராதம் இதற்கும் வரட்டும்
  • அதற்கெல்லாம் குறைவில்லை, ஆட்டடா பூசாரி
  • அதன் கையை எடுத்து அதன் கண்ணிலே குத்துகிறது
  • அதிக்கிரமமான ஊரிலே கொதிக்கிற மீன் சிரிக்கிறதாம்
  • அதிக ஆசை அதிக நஷ்டம்
  • அதிக ஆசை மிகு தரித்திரம்
  • அதிகக் கரிசனம் ஆனாலும் அகமுடையானை அப்பா என்று அழைக்கிறதா?
  • அதிகச் சிநேகிதம் ஆபத்துக்கு இடம்
  • அதிகம் விளைந்தால் எண்ணெய் காணாது
  • அதிகமாகக் குலைக்கும் நாய்க்கு ஆள் கட்டை
  • அதிகமான பழக்கம் அவமரியாதையைத் தரும்
  • அதிகாரம் இல்லாத சேவகமும் சம்பளம் இல்லாத உத்தியோகமும் எதற்கு?
  • அதிகாரம் இல்லாவிட்டாலும் பரிவாரம் வேண்டும்
  • அதிகாரிக்கு அடுப்புப் பயப்படுமா?
  • அதிகாரிக்கு முன்னும் கழுதைக்குப் பின்னும் போகக்கூடாது
  • அதிகாரி குசு விட்டால் அமிர்த வஸ்து; தலையாரி குசு விட்டால் தலையை வெட்டு
  • அதிகாரியுடனே எதிர்வாதம் பண்ணலாமா?
  • அதிகாரியும் தலையாரியும் கூடி விடியுமட்டும் திருடலாம்
  • அதிகாரி வந்தால் அடித்துக் காட்டு; கூத்தாடி வந்தால் கொட்டிக் காட்டு
  • அதிகாரி வீட்டில் திருடித் தலையாரி வீட்டில் வைத்தது போல
  • அதிகாரி வீட்டுக் கோழி முட்டை குடியானவன் வீட்டு அம்மிக் கல்லை உடைக்கும்
  • அதிசயம் அடி அம்மங்காரே, அம்மி புரண்டு ஓடுகிறது
  • அதிசயம் அடி ஆவடை, கொதிக்கிற கூழ் சிரிக்கிறது
  • அதிசயம் அதிசயம் அத்தங்காரே கொதிக்கிற குழம்பு சிரிக்கிறது
  • அதிசயமாய் ஒருத்திக்குப் பிள்ளை பிறந்ததாம், கடப்பாரையை எடுத்துக் காலில் குத்திக் கொண்டாளாம்
  • அதிசயமான ஊரிலே ஒரு பிள்ளை பிறந்ததாம்; அது தொப்புள் கொடி அறுப்பதற்குள் கப்பல் ஏறிப் போயிற்றாம்
  • அதிசயமான ரம்பை, அரிசி கொட்டுகிற தொம்பை
  • அதிர்ந்து அடிக்கிறவனுக்கு ஐயனாரும் இல்லை; பிடாரியும் இல்லை
  • அதிர்ந்து வராத புருஷனும் மிதந்து வராத அரிசியும் பிரயோசனம் இல்லை
  • அதிர்ந்து வரும் புருஷனும் முதிர்ந்து வரும் சோறும்
  • அதிர் வெடி கேட்ட குரங்கு
  • அதிர்ஷ்டக்காரன் மண்ணைத் தொட்டாலும் பொன்னாகும்
  • அதிர்ஷ்டம் ஆறாய்ப் பெருகுகிறது
  • அதிர்ஷ்டம் இல்லாதவனுக்குக் கலப்பால் இருந்தாலும் அதையும் பூனை குடிக்கும்
  • அதிர்ஷ்டம் கெட்ட கழுக்காணி
  • அதிர்ஷ்டம் கெட்டதுக்கு அறுபது நாழிகையும் தியாஜ்யம்
  • அதிர்ஷ்டம் வந்தால் தவிட்டுப் பானையிலும் தனம் இருக்கும்
  • அதிர்ஷ்டமும் ஐசுவரியமும் ஒருவர் பங்கல்ல
  • அதிர்ஷ்டவாள் மண்ணைத் தொட்டாலும் பொன் ஆகும்
  • அதிர அடித்தாருக்கு ஐயனாரும் இல்லை; பிடாரியும் இல்லை
  • அதிர அடித்தால் உதிர விளையும்
  • அதில் எல்லாம் குறைச்சல் இல்லை; ஆட்டடா பூசாரி
  • அதிலே இது புதுமை, அவள் செத்து வைத்த அருமை
  • அதிலே குறைச்சல் இல்லை; ஆட்டடா பூசாரி; மாவிலே வெல்லம் இல்லை; மாட்டிக்கொள்ளடா பூசாரி
  • அதி விநயம் தூர்த்த லட்சணம்
  • அதி விருஷ்டி, அல்லது அநாவிருஷ்டி
  • அது அதற்கு ஒரு கவலை; ஐயாவுக்கு எட்டுக் கவலை
  • அது ஏண்டி மாமியாரே, அம்மி புரண்டு ஓடுகிறது?
  • அதுக்கும் இருப்பான், இதுக்கும் இருப்பான், ஆக்கின சோற்றுக்குப் பங்கும் இருப்பான்
  • அது கெட்டது போ, எனக்கா கல்யாணம் என்றானாம்
  • அதுதான் ராயர் கட்டளையாய் இருக்கிறதே!
  • அதுவும் போதாதென்று அழலாமா இனி?
  • அதைக் கை கழுவ வேண்டியதுதான்
  • அதைத்தான் சொல்வானேன்? வாய்தான் நோவானேன்?
  • அதை நான் செய்யாவிட்டால் என் பேரை மாற்றிக் கூப்பிடு
  • அதை நான் செய்யாவிட்டால் என் மீசையைச் சிரைத்து விடுகிறேன்
  • அதைரியம் உள்ளவனை அஞ்சாத வீரன் என்றாற்போல
  • அதை விட்டாலும் கதி இல்லை; அப்புறம் போனாலும் விதி இல்லை
  • அந்த ஊர் மண்ணை மிதிக்கவே தன்னை மறந்துவிட்டான்
  • அந்தக் காலம் மலை ஏறிப் போச்சு
  • அந்தகனுக்கு அரசனும் ஒன்று; ஆண்டியும் ஒன்று
  • அந்தணர்க்குத் துணை வேதம்!
  • அந்தணர் மனையில் சந்தனம் மணக்கும்
  • அந்தப் பருப்பு இங்கே வேகாது
  • அந்தம் உள்ளவன் ஆட வேணும்; சந்தம் உள்ளவன் பாட வேணும்
  • அந்தம் சிந்தி அழகு ஒழுகுகிறது
  • அந்தரத்தில் கோல் எறிந்த அந்தகனைப் போல
  • அந்தரத்திலே விட்டு விட்டான்
  • அந்தர வீச்சு வீசி நாயைப் போல் வாலைச் சுருட்டி விட்டான்
  • அந்தலை கெட்டுச் சிந்தலை மாறிக் கிடக்கிறது
  • அந்த வெட்கக்கேட்டை ஆரோடு சொல்கிறது?
  • அந்தி ஈசல் அடை மழைக்கு அறிகுறி
  • அந்தி ஈசல் பூத்தால் அடைமழை அதிகரிக்கும்
  • அந்திக் கண்ணிக்கு அழுதாலும் வரானாம் அகமுடையான்
  • அந்திச் செவ்வானம் அப்போதே மழை
  • அந்திச் செவ்வானம் அழுதாலும் மழை இல்லை; விடியச் செவ்வானம் வேண மழை
  • அந்திச் செவ்வானம் அறிந்து உண்ணடி மருமகளே; விடியச் செவ்வானம் வேண்டி உண்ணடி மகளே
  • அந்திச் செவ்வானம் கிழக்கு; அதிகாலைச் செவ்வானம் மேற்கு
  • அந்திச் சோறு உந்திக்கு ஒட்டாது
  • அந்தி பிடித்த மழையும் அம்மையாரைப் பிடித்த வியாதியும் விடா
  • அந்தி மழை அழுதாலும் விடாது
  • அந்தி மழையும் அந்தி விருந்தாளியும் விடமாட்டார்கள்
  • அந்தி மழையும் ஒளவையாரைப் பிடித்த பிணியும் விடா
  • அந்தியில் அசுவத்தாமன் பட்டம் கட்டிக் கொண்டாற் போல
  • அந்து ஊதும் நெல் ஆனேன்
  • அந்துக் கண்ணிக்கு அழுதாலும் வரான் அகமுடையான்
  • அந்நிய மாதர் அவதிக்கு உதவார்
  • அநாதைக்குத் தெய்வமே துணை
  • அநாதைப் பெண்ணுக்குக் கல்யாணம்; ஆளுக்குக் கொஞ்சம் உதவுங்கள்
  • அநுபோகம் மிகும்போது ஔஷதம் பலிக்கும்
  • அநுமான் சீதையை இலங்கையில் தேடினது போல
  • அப்பச்சி குதம்பையைச் சூப்பப் பிள்ளை முற்றின தேங்காய்க்கு அழுகிறது போல
  • அப்பச்சி கோவணத்தை எடுத்துக் கொண்டு ஓடுகிறது; பிள்ளை வீரவாளிப் பட்டுக்கு அழுகிறது
  • அப்படிச் சொல்லுங்கள் வழக்கை; அவன் கையில் கொடுங்கள் உழக்கை
  • அப்பத்துக்கு மேல் நெய் மிஞ்சிப் போச்சு
  • அப்பத்துக்கு மேலே நெய் மிதந்தால் அப்பம் தெப்பம் போடும்
  • அப்பத்தை எப்படித்தான் சுட்டாளோ அதற்குள் தித்திப்பை எப்படித்தான் நுழைத்தாளோ?
  • அப்பத்தைத் திருடிய பூனைகளுக்கு நியாயம் வழங்கிற்றாம் குரங்கு
  • அப்பம் என்றால் பிட்டுக் காட்ட வேண்டும்
  • அப்பம் சுட்டது சட்டியில்; அவல் இடித்தது திட்டையில்
  • அப்பம் சுட்டுக் கூழ் ஆச்சு; தொன்னை தைத்துக் கொள் பிராம்மணா
  • அப்பம் தின்னச் சொன்னால் குழி எண்ணுவதா?
  • அப்பமும் தந்து பிட்டும் காட்டுவது போல
  • அப்பர் அடைந்த ஆளும் நாள் கப்பரை எடுப்பார் சுவாமி
  • அப்பன் அருமை மாண்டால் தெரியும்
  • அப்பன் அருமை அப்பன் மாண்டால் தெரியும்; உப்பின் அருமை உப்பு இல்லா விட்டால் தெரியும்
  • அப்பன் ஆனைச் சவாரி செய்தால் மகனுக்குத் தழும்பா?
  • அப்பன் இல்லாமல் பிள்ளை பிறக்குமா? அச்சு இல்லாமல் தேர் ஓடுமா?
  • அப்பன் சம்பாத்தியம் பிள்ளை அரைஞாணுக்கும் போதாது
  • அப்பன் செத்தபின் தம்பிக்கு அழுகிறதா?
  • அப்பன் சோற்றுக்கு அழுகிறான்; பிள்ளை கும்பகோணத்தில் கோதானம் செய்கிறான்
  • அப்பன் தர்மசாலி என்று பண்ணி விட்டான்
  • அப்பன் பவிசு அறியாமல் அநேக நாள் தவிசேற மகன் கனாக் காண்கிறான்
  • அப்பன் பிண்டத்துக்கு அழுகிறான்; பிள்ளை பரமான்னத்துக்கு அழுகிறது
  • அப்பன் பிறந்தது வெள்ளிமலை; ஆய் பிறந்தது பொன்மலை
  • அப்பன் பெரியவன்; சிற்றப்பா சுருட்டுக்கு நெருப்புக் கொண்டு வா
  • அப்பன் மகன்தான் ஆண் பிள்ளைச் சிங்கம்
  • அப்பனுக்குப் பிள்ளை தப்பாமல் பிறந்திருக்கிறான்
  • அப்பனுக்கு மூத்த சுப்பன்
  • அப்பா அடித்தால் அம்மா அணைப்பது போல
  • அப்பா அப்பா என்றால், ரங்கா ரங்கா என்கிறான்
  • அப்பா என்றால் உச்சி குளிருமா?
  • அப்பாச்சிக்கு அப்புறம் மரப்பாச்சி
  • அப்பா சாமிக்குக் கல்யாணம்; அவரவர் வீட்டிலே சாப்பாடு
  • அப்பா சாஸ்திரிக்குப் பெண்ணாய்ப் பிறந்து, குப்பா சாஸ்திரிக்கு வாழ்க்கைப்பட்டு, லவணம் என்றால் எருமைச் சாணி என்று தெரியாதா?
  • அப்பா வலக்கை; அம்மா இடக்கை
  • அப்பாவி உப்பு இல்லை
  • அப்பாவுக்கு இட்ட கப்பரை ஆரைச் சுவரில் கவிழ்த்திருக்கிறது
  • அப்பாவுடன் சொல்லட்டுமா? அரக்குப் பேலாவைக் காட்டட்டுமா?
  • அப்பாவும் இல்லை; வெட்டுக் கத்தியும் இல்லை
  • அப்பியாசம் குல விருது
  • அப்பியாசம் கூசா வித்தை
  • அப்பியாச வித்தைக்கு அழிவில்லை
  • அப்பியாச வித்தைக்கு அழிவு இல்லை
  • அப்பைக் கொண்டு உப்பைக் கட்டு, உப்பைக் கொண்டு ஒக்கக் கட்டு
  • அப்போது விஜயநகரம்; இப்போது ஆனைக்குந்தி
  • அப்போதைக்கு இப்போதே சொல்லிவைத்தேன்
  • அபத்தப் பஞ்சாங்கத்தில் அறுபது நாழிகையும் தியாஜ்யம்
  • அபரஞ்சிக் கொடி மாதிரி அகமுடையாள் இருக்கும் போது ஆதண்டங்காய்க் கொடியைக் கட்டிக் கொண்டானாம்
  • அபாயத்திற்கு உபாயம்
  • அபிடேகம் இட்ட கைக்குச் சுழிக் குற்றம் உண்டா?
  • அம்பட்டக்குடிக் குப்பையைக் கிளறக் கிளற மயிர்தான்
  • அம்பட்டக் குடியில் சிரைத்த மயிருக்குப் பஞ்சமா?
  • அம்பட்டக் குசும்பும் வண்ணார ஒயிலும் போகா
  • அம்பட்ட வேலை அரை வேலை
  • அம்பட்டன் குப்பையைக் கிளறினால் மயிர் மயிராக வரும்
  • அம்பட்டன் கைக் கண்ணாடி போல
  • அம்பட்டன் செய்தியை அறிந்து குடுமியைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ள வேணும்
  • அம்பட்டன் பல்லக்கு ஏறினது போல
  • அம்பட்டன் பிள்ளைக்கு மயிர் அருமையா?
  • அம்பட்டன் மாப்பிள்ளைக்கு மீசை ஒதுக்கினது போல
  • அம்பட்டன் வீட்டில் மயிருக்குப் பஞ்சமா?
  • அம்பட்டன் வெட்டு வெட்டு அல்ல; அரைப்படிப்பும் படிப்பு அல்ல
  • அம்பட்டன் வேலை செய்ய வந்தால் சரியாய்ச் செய்ய வேணும்
  • அம்பட்டனுக்கு மயிர்ப் பஞ்சமா?
  • அம்பட்டனை மந்திரித்தனத்துக்கு வைத்துக் கொண்டது போல
  • அம்பத்துர் வேளாண்மை ஆறு கொண்டது பாதி; துாறு கொண்டது பாதி
  • அம்பலக் கழுதை அம்பரிலே கிடந்தால் என்ன? அடுத்த திருமாகாளத்திலே கிடந்தால் என்ன?
  • அம்பலக் கழுதை அம்பலத்தில் கிடந்தால் என்ன? அடுத்த திருமாளிகையில் கிடந்தால் என்ன?
  • அம்பலத்தில் அவல்பொரி போலே
  • அம்பலத்தில் ஏறும் பேச்சை அடக்கம் பண்ணப் பார்க்கிறான்
  • அம்பலத்தில் கட்டுச் சோறு அவிழ்த்தாற்போல
  • அம்பலத்தில் பொதி அவிழ்க்கலாகாது
  • அம்பலம் தீப்பட்டது என்றால், அதைத்தான் சொல்வானேன், வாய்தான் நோவானேன் என்றானாம்
  • அம்பலம் வேகிறது
  • அம்பாணி தைத்தது போலப் பேசுகிறான்
  • அம்பா பாக்கியம் சம்பா விளைந்தது; பாவி பாக்கியம் பதராய் விளைந்தது
  • அம்பி கொண்டு ஆறு கடப்போர் நம்பிக்கொண்டு வால் கொள்வார்களா?
  • அம்பிட்டுக் கொண்டாரே. தும்பட்டிப்பட்டர்
  • அம்பு பட்ட புண் கையில் இழை கட்டினால் ஆறாது
  • அம்பு விற்று அரிவாள்மனை விற்றுத் தும்பு விற்றுத் துருவுபலகை விற்றுப் போட்டால் சொல்வாயா சொல்வாயா என்றானாம்
  • அம்மண தேசத்திலே கோவணம் கட்டினவன் பைத்தியக்காரன்
  • அம்மணமும் இன்னலும் ஆயுசு பரியந்தமா?
  • அம்மன் காசு கூடப் பெறாது
  • அம்மன் வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்க வேண்டாமா?
  • அம்மனுக்குப் பூஜை ஆகித்தான் சாமிக்குப் பூஜை ஆகவேணும்
  • அம்மா அடித்தால் வலிக்காது; அப்பா அடித்தால் வலிக்கும்
  • அம்மா ஆரோ வந்திருக்கிறார். ஆனைமேலா, குதிரைமேலா?
  • அம்மா குதிர் போல; அய்யா கதிர் போல
  • அம்மா கெட்ட கேட்டுக்கு முக்காடு ஒன்றா?
  • அம்மா கோதண்டராமன்
  • அம்மா திரண்டு வருவதற்குள் ஐயா உருண்டுபோய் விடுவா
  • அம்மாப் பெண் சமைக்க அஸ்தமனம்; கிருஷ்ணையர் பூஜை பண்ணக் கிழக்கு வெளுக்கும்
  • அம்மாப் பெண்ணுக்குக் கல்யாணம்; அவரவர் வீட்டிலே சாப்பாடு; கொட்டு மேளம் கோயிலிலே, வெற்றிலை பாக்குக் கடையிலே
  • அம்மா பாடு அம்மணமாம்; கும்பகோணத்தில் கோதானமாம்
  • அம்மாமி வாயைக் கிண்டினால் அத்தனையும் பழமொழியாம்
  • அம்மாயி நூற்ற நூலுக்கும் நொண்டி அரைநாண் கயிற்றுக்கும் சரயாய்ப் போச்சு
  • அம்மாவுக்குப் பின் அகமுடையான்
  • அம்மாள் கெட்ட கேட்டுக்கு முக்காடு ஒன்றா?
  • அம்மாள் மிடுக்கோ, அரைப்பவள் மிடுக்கோ?
  • அம்மாளு அம்மாள் சமைக்க அஸ்தமனம் ஆகும்; கிருஷ்ண வாத்தி யார் பூஜை செய்யக் கிழக்கு வெளுக்கும்
  • அம்மாளுக்குத் தமிழ் தெரியாது; ஐயாவுக்குத் தெலுங்கு தெரியாது
  • அம்மான் சொத்துக்கு மருமான் கருத்தாளி
  • அம்மான் மகளானாலும் சும்மா வருவாளோ?
  • அம்மான் மகளுக்கு முறையா?
  • அம்மான் வீட்டு வெள்ளாட்டியை அடிக்க அதிகாரியைக் கேட்க வேணுமா?
  • அம்மானும் மருமகனும் ஒரு வீட்டுக்கு ஆள் அடிமை
  • அம்மி இருந்து அரணை அழிப்பான்
  • அம்மிக்குழவி ஆலாய்ப் பறக்கும்போது எச்சில் இலையைக் கேட்பானேன்?
  • அம்மி மிடுக்கோ, அரைப்பவர் மிடுக்கோ?
  • அம்மி மிதித்து அருந்ததி பார்த்தவள்போல் பேசுகிறாள்
  • அம்மியும் உரலும் ஆலாய்ப் பறக்கச்சே எச்சில் இலை என்கதி என்ன என்று கேட்டதாம்
  • அம்மியும் குழவியும் ஆகாயத்தில் பறக்கும்போது எச்சில் இலை எனக்கு என்ன கதி என்றாற் போல்
  • அம்மியே ஆகாயத்தில் பறக்கும்போது எச்சில் இலைக்கு வந்தது என்ன?
  • அம்முக்கள்ளி ஆடையைத் தின்றால் வெண்ணெய் உண்டா?
  • அம்மை இல்லாப் பிறந்தகமும் அகமுடையான் இல்லாப் புக்ககமும்
  • அம்மைக்கு அமர்க்களம் ஆக்கிப் படை எனக்கு அமர்க்களம். பொங்கிப் படை
  • அம்மைக்கு அமர்க்களம் பொங்கிப் படையுங்கள்
  • அம்மை குத்தினாலும் பொம்மை குத்தினாலும் வேண்டியது அரிசி
  • அம்மையார் இருக்கும் இடத்தில சேமக் கலம் கொட்டாதே
  • அம்மையார் எப்போது சாவார்? கம்பளி எப்போது நமக்கு மிச்சம் ஆகும்?
  • அம்மையார் நூற்கிற நூலுக்கும் பேரன் அரைஞாண் கயிற்றுக்கும் சரி
  • அம்மையார் பெறுவது அரைக்காசு, தலை சிரைப்பது முக்காற் காசு
  • அம்மையார் வருகிற வரைக்கும் அமாவாசை காத்திருக்குமா?
  • அம்மையாருக்கு என்ன துக்கம்? கந்தைத் துக்கம்
  • அம்மையாரே வாரும்; கிழவனைக் கைக்கொள்ளும்
  • அம்மை வீட்டுத் தெய்வம் நம்மை விட்டுப் போமா?
  • அமர்க்களப்படுகிறது
  • அமர்த்தனுக்கும் காணி வேண்டாம்; சமர்த்தனுக்கும் காணி வேண்டாம்
  • அமரபட்சம் பூர்வபட்சம்; கிருஷ்ணபட்சம் சுக்கிலபட்சம்
  • அமரிக்கை ஆயிரம் பொன் பெறும்
  • அமாவாசை இருட்டிலே பெருச்சாளி போனதெல்லாம் வழி
  • அமாவாசை இருட்டு; சோற்றுப் பானையை உருட்டு
  • அமாவசைக்கும் அப்துல் காதருக்கும் என்ன சம்பந்தம்
  • அமாவாசைச் சோறு என்றைக்கும் அகப்படுமா?
  • அமாவாசைப் பணியாரம் அன்றாடம் கிடைக்குமா?
  • அமாவாசைப் பருப்புச் சோறு சும்மா சும்மா கிடைக்குமா?
  • அமாவாசைப் பானை என்று நாய்க்குத் தெரியுமா?
  • அமிஞ்சி உண்டோ கும்பு நாயக்கரே
  • அமிஞ்சிக்கு உழுதால் சரியாய் விளையுமா?
  • அமிஞ்சி வெட்டிக்கு ஆள் இருக்கிறது
  • அமிஞ்சி வேலை
  • அமுக்கினால் போல் இருந்து அரணை அழிப்பான்
  • அமுத்தல் பேர் வழி
  • அமுதம் உண்கிற வாயால் விஷம் உண்பார்களோ?
  • அமுதுபடி பூஜ்யம்; ஆடம்பரம் சிலாக்யம்
  • அமைச்சன் இல்லாத அரசும் அகமுடையான் இல்லாத ஆயிழையும்
  • அமைதி ஆயிரம் பெறும்
  • அமைதி கெட்ட நெஞ்சம் ஆடி ஆடிக் கொஞ்சும்
  • அயத்தில் ஒரு கால் செயத்தில் ஒரு கால்
  • அயல் ஊர் லாபமும் உள்ளூர் நஷ்டமும் ஒன்று
  • அயல் வீட்டு ஆண்மகன் அவஸ்தைக்கு உதவான்
  • அயல் வீட்டு நெய்யே, என் பெண்டாட்டி கையே
  • அயல் வீட்டுப் பிள்ளை ஆபத்துக்கு உதவுவானா?
  • அயல் வீட்டுப் பையா பாம்பைப் பிடி; அல்லித் தண்டு போல் குளிர்ந்திருக்கும்
  • அயல் வீடு வாழ்ந்தால் பரதேசம் போகிறது
  • அயலார் உடைமைக்குப் பேயாய்ப் பறக்கிறான்
  • அயலார் உடைமையில் அந்தகன் போல் இரு
  • அயலார்க்குத் துரோகம் ஐந்தாறு நாள் பொறுக்கும்; ஆத்மத் துரோகம் அப்போதே கேட்கும்
  • அயலார் வாழ்ந்தால் அஞ்சு நாள் பட்டினி கிடப்பான்
  • அயலார் வாழ்ந்தால் அடி வயிற்றில் நெருப்பு
  • அயலான் வீட்டுப் பிள்ளை ஆபத்துக்கு உதவுமா?
  • அயலூர் நாணயக்காரனைவிட உள்ளூர் அயோக்கியன் மேல்
  • அயலூரானுக்கு ஆற்றோரம் பயம், உள்ளூரானுக்கு மரத்திடியில் பயம்
  • அயன் அமைப்பை யாராலும் தள்ளக்கூடாது
  • அயன் இட்ட எழுத்தில் அணுவளவும் தப்பாது
  • அயன் இட்ட கணக்கு ஆருக்கும் தப்பாது
  • அயிரையும் சற்றே அருக்குமாம் வீட்டுக்குள் போட்டுப் பிசகாமல்
  • அயிலாலே போழ்ப அயில்
  • அயோக்கியர் அழகு அபரஞ்சிச் சிமிழில் நஞ்சு
  • அர்ச்சுனன்போல் அகமுடையான் இருக்க, அச்சான்யம்போல் திருமங்கல்யம் எதற்கு?
  • அர்ச்சுனன்போல் அகமுடையான் இருக்கையில் அஞ்ஞானம்போல் தாலி என்னத்துக்கு?
  • அர்ச்சுனன்போல் அகமுடையானும் அபிமன்யுபோல் பிள்ளையும்
  • அர்ச்சுனனுக்குக் கண் அரக்கு மாளிகையில்
  • அர்ச்சுனனுக்குப் பகை அரக்கு மாளிகை
  • அர்ப்பணித்து வாழ்ந்தால் அர்த்தராத்திரியிலும் கொடை கொடுப்பான்
  • அரக்கன் ஆண்டால் என்ன? மனிதன் ஆண்டால் என்ன?
  • அரக்குக் கூடு கட்டினால் வீட்டுப் பெண் தாய் ஆவாள்
  • அரக்கு முத்தி தண்ணீர்க்குப் போனாள்; புண் பிடித்தவன் பின்னாலே போனான்
  • அரகர சிவசிவ மகாதேவா, ஆறேழு சுண்டலுக்கு லவாலவா
  • அரகரன் ஆண்டால் என்ன? மனிதன் ஆண்டால் என்ன?
  • அரகரா என்கிறது பெரிதோ? ஆண்டி கிடக்கிறது பெரிதோ?
  • அரகரா என்கிறவனுக்குத் தெரியுமா? அமுது படைக்கிறவனுக்குத் தெரியுமா?
  • அரகரா என்பது பாரமா? அமுது படைப்பது பாரமா?
  • அரங்கன் சொத்து அக்கரை ஏறாது
  • அரங்கன் சொத்து அழகன் அங்கவடிக்குக் காணாது
  • அரங்கனைப் பாடிய வாயால் குரங்கனைப் பாடுவேனோ?
  • அரங்கு இன்றி வட்டாடலும் அறிவின்றிப் பேசுதலும் ஒன்று
  • அரங்கூடு குரங்கே, மரத்தை விட்டு இறங்கே
  • அரசங்கட்டையும் ஆபத்துக்கு உதவும்
  • அரசமரத்துப் பிள்ளையார் போல அகமுடையான் இருக்க அச்சான்யம் போலத் தாலி எதற்கு?
  • அரச மரத்தைப் பிடித்த சனியன் ஆலமரத்தைப் பிடித்ததாம்
  • அரச மரத்தைப் பிடித்த பிசாசு அடியில் இருந்த பிள்ளையாரையும் பிடித்ததாம்
  • அரசன் அதிகாரம் அவன் நாட்டோடே
  • அரசன் அருள் அற்றால் அனைவரும் அற்றார்
  • அரசன் அளவிற்கு ஏறிற்று
  • அரசன் அன்று அறுப்பான்; தெய்வம் நின்று அறுக்கும்
  • அரசன் அன்று கொல்லும்; தெய்வம் நின்று கொல்லும்
  • அரசன் ஆட்சிக்கு ஆகாச வாணியே சாட்சி
  • அரசன் ஆண்டால் என்ன? மனிதன் ஆண்டால் என்ன?
  • அரசன் ஆனைமேல் வருகிறான் என்று வீட்டுக் கூரைமேல் ஏறினானாம்
  • அரசன் இருக்கப் பட்டணம் அழியுமா?
  • அரசன் இல்லாத நாடு அச்சில்லாத தேர்
  • அரசன் இல்லாத நாடு, புருஷன் இல்லாத வீடு
  • அரசன் இல்லாப் படை அம்பலம்
  • அரசன் இல்லாப் படை வெட்டுமா?
  • அரசன் இல்லாப் படை வெல்வது அரிது
  • அரசன் உடைமைக்கு ஆகாச வாணி சாட்சி
  • அரசன் எப்படியோ அப்படியே குடிகள்
  • அரசன் எவ்வழி மக்கள் அவ்வழி
  • அரசன் ஒன்றை இகழ்ந்தால் ஒக்க இகழ வேண்டும். ஒன்றைப் புகழ்ந்தால் ஒக்கப் புகழ வேண்டும்
  • அரசன் கல்லின்மேல் வழுதுணை காய்க்கும் என்றால் கொத்தில் ஆயிரம் குலையில் ஆயிரம் என்பார்கள்
  • அரசன் குடுமியையும் பிடிக்கலாமென்று அம்பட்டன் வேலையை விரும்பினது போல
  • அரசன் நினைத்த அன்றே அழிவு
  • அரசன் மகளானாலும் புருஷனுக்கு பொண்டாட்டிதான்.
  • அரசன் மெச்சியவள் ரம்பை
  • அரசன் வரை எட்டியது
  • அரசன் வழிப்பட்டதே அவனி
  • அரசன் வழிப்படாதவன் இல்லை
  • அரசன் வீட்டுக் கோழி முட்டை ஆண்டி வீட்டு அம்மியை உடைத்தது
  • அரசனுக்கு அஞ்சி வலியார் எளியாருக்கு அநுகூலம் ஆகிறது
  • அரசனுக்கு ஒரு சொல், அடிமைக்குத் தலைச் சுமை
  • அரசனுக்கு ஓர் ஆனை இருந்தால் ஆண்டிக்கு ஒரு பானையாவது இராதா?
  • அரசனுக்குச் செங்கோல்; சம்சாரிக்கு உழவு கோல்
  • அரசனுக்குத் துணை வயவாள்
  • அரசனுக்கு வலியார் அஞ்சுவது எளியாருக்கு அநுகூலம்
  • அரசனும் சரி, அரவும் சரி
  • அரசனும் சரி அழலும் சரி
  • அரசனும் ஆண்டி ஆவான்; ஆண்டியும் அரசன் ஆவான்
  • அரசனும் நெருப்பும் பாம்பும் சரி
  • அரசனே முட்டி எடுக்கிறான்; அவன் ஆனை கரும்புக்கு அழுகிறதாம்
  • அரசனைக் கண்ட கண்ணுக்குப் புருஷனைக் கண்டால் கொசுப் போல இருக்கிறது
  • அரசனைக் காட்டிக் கொடுப்பது அமைச்சனுக்குத் தர்மம் அல்ல
  • அரசனை நம்பிப் புருஷனைக் கை விட்டது போல
  • அரசனோடு எதிர்த்த குடிகள் கெட்டுப்போகும்
  • அரசாங்கத்துக் கோழிமுட்டை அம்மிக் கல்லையும் உடைக்கும்
  • அரசிலையும் மண்ணாங் கட்டியும் உறவு கொண்டாடினவாம்
  • அரசு அறிய வீற்றிருந்த வாழ்வு விழும்
  • அரசு இல்லா நாடு அலைக்கழிந்தாற் போல
  • அரசு இல்லாப் படை வெல்வது அரிது
  • அரசு உடையானை ஆகாசம் காக்கும்
  • அரசுக்கு இல்லை சிறுமையும் பெருமையும்
  • அரண்மனை ஆனைக்கு அம்பாரி வைத்தாலும் ஆலய ஆனைக்குக் கொட்டு மேளம் போதுமே
  • அரண்மனை உறவைக் காட்டிலும் அடுக்களை உறவுதான் மேல்
  • அரண்மனைக் காரியம் அறிந்தாலும் சொல்லாதே
  • அரண்மனை காத்தவனுக்கும் அடுக்குள் காத்தவனுக்கும் குறைவு இல்லை
  • அரண்மனை காத்தவனும் ஆலயம் காத்தவனும் வீணாகப் போக மாட்டார்கள்
  • அரண்மனை ரகசியம் அங்காடிப் பரசியம்
  • அரண்மனை லங்கா தகனம்; அரசனுக்கோ சங்கீத கவனம்
  • அரண்மனை வாசல் காத்தவனும் பறிமடை வாசல் காத்தவனும் பறிபோகிறது இல்லை
  • அரணை அலகு திறக்காது
  • அரணை கடித்தால் உடனே மரணம்
  • அரத்தை அரம் கொண்டும் வயிரத்தை வயிரம் கொண்டும் அறுக்க வேண்டும்
  • அரபிக் குதிரையானாலும் ஆள் ஏறி நடத்த வேண்டும்
  • அரபிக் குதிரையிலும் ஐயம்பேட்டைத் தட்டுவாணி மேல்
  • அரமும் அரமும் கூடினால் கின்னரம்
  • அரவணைச் சோறு வேண்டுமானால் அறைக்கீரைக்குப் பின்தான் கிடைக்கும்
  • அரவத்தைக் கண்டால் கீரி விடுமா?
  • அரவத்தோடு ஆடாதே; ஆற்றில் இறங்காதே
  • அரவின் வாய்த் தேரைபோல
  • அரவுக்கு இல்லை சிறுமையும் பெருமையும்
  • அரன் அருள் அல்லாது அணுவும் அசையாது
  • அரன் அருள் அற்றால் அனைவரும் அற்றார்
  • அரன் அருள் உற்றால் அனைவரும் உற்றார்
  • அராமி கோபால் தெய்வத்துக்குப் பாடுகோ பாதிரி
  • அரி அரி என்றால் ராமா ராமா என்கிறான்
  • அரி என்கிற அக்ஷரம் தெரிந்தால் அதிக்கிரமம் பண்ணலாமா?
  • அரி என்றால் ஆண்டிக்குக் கோபம்; அரன் என்றால் தாதனுக்குக் கோபம்
  • அரிக்கிற அரிசியை விட்டுச் சிரிக்கிற சின்னப் பையனைப் பார்த்தாளாம்
  • அரிகரப் பிரம்மாதிகளாலும் முடியாத காரியம்
  • அரிச்சந்திரன் அவன் வீட்டுக் கொல்லை வழியாகப் போனானாம்
  • அரிச்சந்திரன் வீட்டுக்கு அடுத்த வீடு
  • அரிசி அள்ளின காக்கைபோல
  • அரிசி ஆழாக்கு ஆனாலும் அடுப்புக்கட்டி மூன்று வேண்டும்
  • அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்
  • அரிசி இருந்தால் பிட்டு ஆகுமா?
  • அரிசி இல்லாவிட்டால் பருப்பும் அரிசியுமாய்ப் பொங்கு
  • அரிசி இறைத்தால் ஆயிரம் காக்கை
  • அரிசி உழக்கு ஆனாலும் திருவந்திக் காப்புக்குக் குறைவு இல்லை
  • அரிசி உண்டானால் வரிசை உண்டு. அக்காள் உண்டானால் மச்சான் உண்டு
  • அரிசி என்று அள்ளிப் பார்ப்பாரும் இல்லை, உமி என்று ஊதிப் பார்ப்பாரும் இல்லை
  • அரிசிக்குத் தக்க உலையும் அகமுடையானுக்குத் தக்க வீறாப்பும்
  • அரிசிக்குத் தக்க கனவுலை
  • அரிசிக் குற்றம் சாதம் குழைந்தது; அகமுடையான் குற்றம் பெண்ணாய்ப் பிறந்தது
  • அரிசி கொடுத்து அக்காள் உறவு என்ன?
  • அரிசி கொடுத்து அக்காள் வீட்டில் சாப்பாடா?
  • அரிசி கொண்டு அக்காள் வீட்டுக்குப் போவானேன்?
  • அரிசி சிந்தினால் அள்ளி விடலாம்; வார்த்தை சிந்தினால் வார முடியுமா?
  • அரிசிப் பகையும் அகமுடையாள் பகையும் கிடையாது
  • அரிசிப் பல்காரி அவிசாரி, மாட்டுப் பல்காரி மகராஜி
  • அரிசிப் பானையும் குறையக் கூடாது; ஆண்மகன் முகமும் வாடக் கூடாது
  • அரிசிப் பிச்சை எடுத்து அறுகங் காட்டில் கொட்டினாற் போல
  • அரிசிப் பிச்சை வாங்கி அரிக்கம் சட்டியில் கொட்டினேனே!
  • அரிசிப் புழு சாப்பிடாதவர் இல்லை; அகமுடையானிடம் அடிபடாத வளும் இல்லை
  • அரிசிப் பொதியுடன் திருவாரூர்
  • அரிசி பருப்பு இருந்தால் ஐப்பசி மாசம் கல்யாணம்; காய்கறி இருந்தால் கார்த்திகை மாசம் கல்யாணம்
  • அரிசி மறந்த கூழுக்கு உப்பு ஒன்று குறைவா?
  • அரிசியும் கறியும் உண்டானால் அக்காள் வீடு வேண்டும்
  • அரிசியும் உமியும் போல
  • அரிசியும் காய்கறியும் வாங்கிக் கொண்டு அக்காள் வீட்டுக்குச் சாப்பிடப் போன மாதிரி
  • அரித்தவன் சொறிந்து கொள்வான்
  • அரித்து எரிக்கிற சுப்பிக்கு ஆயம் தீர்வை உண்டோ?
  • அரிதாரம் கொண்டு போகிற நாய்க்கு அங்கு இரண்டு அடி: இங்கு இரண்டு அடி
  • அரிது அரிது, அஞ்செழுத்து உணர்த்தல்
  • அரிது அரிது, மானிடர் ஆதல் அரிது
  • அரிப்புக்காரச் சின்னிக்கு அடுப்பங்கரைச் சோறு; எரிப்புக்கார எசக்கி எத்திலே தின்பாள் சோறு
  • அரியக்குடி நகரம் அத்தனையும் அத்தனையே
  • அரிய சரீரம் அந்தரத்தில் எறிந்த கல்
  • அரியது செய்து எளியதுக்கு ஏமாந்து நிற்கிறான்
  • அரியும் சிவனும் ஒண்ணு; அறியாதவன் வாயில் மண்ணு
  • அரிவாள் ஆடுமட்டும் குடுவையும் ஆடும்
  • அரிவாள் சுருக்கே, அரிவாள் மணை சுருக்கே
  • அரிவாள் சூட்டைப் போலக் காயச்சல் மாற்றவோ?
  • அரிவாள் பிடி பிடித்தால் கொடுவாள் பிடியில் நிற்கட்டுமே
  • அரிவாள் வெட்டுகிற மரம் ஆனைக்குப் பல்லுக் குச்சி
  • அரிவாளுக்கு வெட்டினால் கத்திப் பிடிக்காவது உதவும்
  • அரிவாளும் அசைய வேண்டும்; ஆண்டை குடியும் கெடவேண்டும்
  • அரிவை மொழி கேட்டால் அறிஞனும் அவத்தன் ஆவான்
  • அருக்காணி நாச்சியார் குரங்குப் பிள்ளையைப் பெற்றாளாம்
  • அருக்காணி முத்து கரிக்கோலம் ஆனாள்
  • அருக்காணி முருக்கப்பூப்போலச் சரக்குப் பிரியப் பண்ணுகிறது
  • அருக்காமணி முருக்கம் பூ
  • அருக்கித் தேடிப் பெருக்கி அழிப்பதா?
  • அருகாகப் பழுத்தாலும் விளாமரத்தில் வெளவால் சேராது
  • அருங்கொம்பில் தேன் இருக்கப் புறங்கையை நக்கினால் வருமா?
  • அருங்கோடை தும்பு அற்றுப் போகிறது
  • அருஞ்சுனை நீர் உண்டால் அப்பொழுதே ஜூரம்
  • அருட்செல்வம் ஆருக்கும் உண்டு; பொருட் செல்வம் ஆருக்கும் இல்லை
  • அருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்
  • அருணாம்பரமே கருணாம்பரம்
  • அருணோதயத்துக்கு அரிசி களைந்து வைத்தால் அஸ்தமிக்க வடிக்க மாட்டேனா?
  • அருத்தியைப் பிடுங்கித் துருத்தியிலே போட்டுத் துருத்தியைப் பிடுங்கி அருத்தியிலே போடுகிறது
  • அரும்பு ஏறினால் குறும்பு ஏறும்
  • அரும்பு கோணினால் அதன் மணம் குன்றுமா?
  • அருமந்த பெண்ணுக்கு அடியெல்லாம் ஓட்டை
  • அருமை அற்ற வீட்டில் எருமையும் குடி இராது
  • அருமை அறியாதவன் அற்றென்ன? உற்றென்ன?
  • அருமை அறியாதவன் ஆண்டு என்ன? மாண்டு என்ன?
  • அருமை அறியாதவனிடத்தில் போனால் பெருமை எல்லாம் குறைந்து போம்
  • அருமை பெருமை அறிந்தவன் அறிவான்
  • அருமை மருமகன் தலைபோனால் போகட்டும்; ஆதிகாலத்து உரல் போகலாகாது
  • அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது
  • அருவருத்த சாப்பாட்டை விட மொரமொரத்த பட்டினி மேலானது
  • அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது
  • அருவருப்புச் சோறும் அசங்கியக் கறியும்
  • அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை; பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை
  • அருள் வேணும்; பொருள் வேணும்; அடக்கம் வேணும்
  • அருள் வேணும்; பொருள்வேணும்; ஆகாய வாணி துணையும் வேணும்
  • அரே அரே என்பார் எல்லாம் அமுது படைப்பார்களா?
  • அரை அடி ஏறினால் ஓரடி சறுக்குகிறது
  • அரைக் கல்வி முழு மொட்டை
  • அரைக்கவும் மாயம்; இரைக்கவும் மாயம்
  • அரைக்காசு என்றாலும் அரண்மனைச் சேவகம் நல்லது
  • அரைக் காசுக் கல்யாணத்துக்கு ஆனை விளையாட்டு வேறா?
  • அரைக் காசுக்கு அழிந்த கற்பு ஆயிரம் மரக்கால் பொன் கொடுத்தாலும் வருமா?
  • அரைக் காசுக்குக் கல்யாணம்; அதிலே கொஞ்சம் வாண வேடிக்கை
  • அரைக் காசுக்குக் குதிரை வாங்கவும் வேண்டும்; ஆற்றைக் கடக்கப் பாயவும் வேண்டும்
  • அரைக் காசுக்குப் போன மானம் ஆயிரம் கொடுத்தாலும் வராது
  • அரைக் காசுக்கு மலம் தின்பவன்
  • அரைக் காசுக்கு வந்த வெட்கம் ஆயிரம் பொன் கொடுத்தாலும் போகாது
  • அரைக் காசு கொடுத்து அழச்சொல்லி அஞ்சு காசு கொடுத்து நிறுத்தச் சொன்னாற் போல
  • அரைக் காசு கொடுத்து ஆடச் சொல்லி, ஒரு காசு கொடுத்து ஓயச் சொன்னாளாம்
  • அரைக் காசு சேர்த்து முடிப்பணம் ஆக்குவது போல
  • அரைக் காசு பெறாத பாட்டியம்மாவுக்கு மூன்று காசு கொடுத்து மொட்டை அடிக்க வேண்டும்
  • அரைக் காசும் முதல் இல்லை; அங்கங்கே வைபோகம்
  • அரைக் காசு வேலை ஆனாலும் அரசாங்க வேலை
  • அரைக் காசை ஆயிரம் பொன் ஆக்குகிறவளும் பெண்சாதி; ஆயிரம் பொன்னை அரைக் காசு ஆக்குகிறவளும் பெண்சாதி
  • அரைக்கிற அரிசியை விட்டுவிட்டுச் சிரிக்கிற சிற்றப்பனோடே போனாளாம்
  • அரைக்கிறவன் ஒன்று நினைத்து அரைக்கிறான்; குடிக்கிறவள் ஒன்று நினைத்துக் குடிக்கிறான்
  • அரைக்கீரை போட்டால் சிறுகீரை முளைக்கும்
  • அரைக்குடம் தளும்பும்; நிறைகுடம் தளும்பாது
  • அரைகட்டி நாய்க்கு உரிகட்டித் திருநாளா?
  • அரை குழைத்தாலும் குழைத்தாள்; அரிசியாக வைத்தாலும் வைத்தாள்
  • அரை குறை வித்தையுடன் அம்பலத்தில் ஏறினால் குறையும் நிறைவாகிவிடும்
  • அரை குறை வேலையை ஆசானுக்குக் காட்டாதே
  • அரைச் சல்லியை வைத்து எருக்கு இலையைக் கடந்ததுபோல
  • அரைச் சீலை கட்டக் கைக்கு உபசாரமா?
  • அரைச் செட்டு முழு நஷ்டம்
  • அரைச்சொல் கொண்டு அம்பலம் ஏறினால் அரைச்சொல் முழுச்சொல் ஆகுமா?
  • அரைச்சொல் வித்தை கொண்டு அம்பலம் ஏறலாமா?
  • அரைஞாண் கயிறும் தாய்ச்சீலையும் ஆய்விடுகிறவள் பெண்சாதி
  • அரைத்ததும் மீந்தது அம்மி; சிரைத்ததும் மீந்தது குடுமி
  • அரைத்ததையே அரைப்பது போல
  • அரைத்தவளுக்கு ஆட்டுக்கல்; சுட்டவளுக்குத் தோகைக் கல்
  • அரைத்தாலும் சந்தனம் அதன்மணம் மாறாது
  • அரைத் துட்டிலே கல்யாணம்; அதிலே கொஞ்சம் வாண வேடிக்கை
  • அரைத் துட்டுக்குப் பீத் தின்றவன்
  • அரைத்துணியை அவிழ்த்து மேல்கட்டுக் கட்டியது போல
  • அரைத்து மீந்தது அம்மி; சிரைத்து மீந்தது குடுமி
  • அரைப்படி அரிசியில் அன்னதானம்; அதிலே கொஞ்சம் மேளதாளம்
  • அரைப்படி அரிசியில் அன்னதானம்; விடியும் மட்டும் மேளதாளம்
  • அரைப் படிப்பைக் கொண்டு அம்பலம் ஏறலாமா?
  • அரைப்பணச் சேவகம் ஆனாலும் அரண்மனைச் சேவகம் போல் ஆகுமா?
  • அரைப் பணத்திலே கல்யாணம், அதிலேகொஞ்சம் வாணவேடிக்கை
  • அரைப் பணத்துக்கு வாய் அதிகம்; ஐந்தாறு அரிசிக்குக் கொதி அதிகம்
  • அரைப் பணத்துக்கு மருத்துவம் பார்க்கப் போய் அஞ்சு பணத்து நெளி உள்ளே போய்விட்டது
  • அரைப் பணம கொடுக்கப் பால் மாறி அம்பது பணம் கொடுத்து அரி சேவை செய்த கதை
  • அரைப் பணம் கொடுககப் பால்மாறி ஐம்பது பணம் கொடுத்துச் சேவை செய்த கதை
  • அரைப் பணம் கொடுத்து அழச்சொல்லி, ஒரு பணம் கொடுத்து ஓயச் சொன்னானாம்
  • அரைப் பணம் கொடுத்து ஆடச் சொன்னால், ஒருபணம் கொடுத்து ஓயச் சொல்ல வேணும்
  • அரைப் பணம் சேவகம் ஆனாலும் அரண்மனைச் சேவகம் போல் ஆகுமா?
  • அரை பறக்கத் தலை பறக்கச் சீராட்டல்
  • அரை மிளகுக்கு ஆற்றைக் கட்டி இறைத்தான் செட்டி
  • அரையிலே புண்ணும் அண்டையிலே கடனும் ஆகா
  • அரையும் குறையும்
  • அரைவித்தை கொண்டு அம்பலம் ஏறினால் அரைவித்தை முழுவித்தை ஆகுமா?
  • அரை வேலையைச் சபையிலே கொண்டு வருகிறதா?
  • அரோகரா என்பவனுக்குப் பாரமா? அமுது படைப்பவனுக்குப் பாரமா?
  • அல்லக் காட்டு நரி பல்லைக் காட்டுகிறது போல
  • அல்லல் அற்ற படுக்கை அழகிலும் அழகு
  • அல்லல் அற்ற படுக்கையே அமைதியைத் தரும்
  • அல்லல் ஒரு காலம்; செல்வம் ஒரு காலம்
  • அல்லல் காட்டு நரி பல்லைக் காட்டிச் சிரித்ததாம்
  • அல்லல் பட்டு அழுத கண்ணீர் செல்வத்தைக் குறைக்கும்
  • அல்லவை தேய அருள் பெருகும்
  • அல்லாத வழியில் பொருள் ஈட்டல், காமம் துய்த்தல் ஆகியவை ஆகா
  • அல்லாதவன் வாயில் கள்ளை வார்
  • அல்லார் அஞ்சலிக்கு நல்லார் உதை மேல்
  • அல்லாவுக்குக் குல்லாப் போட்டவன் முல்லாவுக்குச் சல்லாப் போட்டானாம்
  • அல்லாவை நம்பிக், குல்லாவைப் போட்டால் அல்லாவும் குல்லாவும் ஆற்றோடே போச்சு
  • அல்லி பேரைக் கேட்டாலும் அழுத பிள்ளை வாய் மூடும்
  • அல்லும் பகலும் கசடு அறக் கல்
  • அல்லோல கல்லோலப் படுகிறது
  • அலுத்துச் சலித்து அக்காள் வீட்டுக்குப் போனாளாம்; அக்காள் இழுத்து மச்சானிடம் விட்டாளாம்
  • அலுத்துச் சலித்து அம்பட்டன் வீட்டுக்குப் போனதற்கு இழுத்துப் பிடித்துத் தலையைச் சிரைத்தானாம்
  • அலுத்து வியர்த்து அக்காள் வீட்டுக்குப் போனால், அக்காள் இழுத்து மச்சானண்டை போட்டாளாம்
  • அலுவல் அற்றவன் அக்கிரகாரத்துக்குப் போக வேணும்
  • அலுவலகத்தில் ஐயா அதிகாரம்; அகத்தில் அம்மா அதிகாரம்
  • அலை அடங்கியபின் ஸ்நானம் செய்ய முடியுமா?
  • அலை எப்பொழுது ஓயும்? தலை எப்பொழுது முழுகுகிறது?
  • அலை ஓய்ந்த பிறகு ஸ்நானம் செய்வது போல
  • அலை ஒய்ந்து கடல் ஆடுவது இல்லை
  • அலைகடலுக்கு அணை போடலாமா?
  • அலை நிற்கப் போவதும் இல்லை; தம்பி தர்ப்பணம் செய்து வரப் போவதும் இல்லை
  • அலை போல நாக்கும் மலைபோல மூக்கும் ஆகாசம் தொட்ட கையும் அரக்கனுக்கு
  • அலை மோதும் போதே கடலாட வேண்டும்
  • அலையில் அகப்பட்ட துரும்பு போல
  • அலையும் நாய் பசியால் இறக்காது
  • அலைவாய்த் துரும்பு போல் அலைகிறது
  • அவ்வளவு இருந்தால் அடுக்கி வைத்து வாழேனோ?
  • அவகடம் உடையவனே அருமை அறியான்
  • அவகுணக்காரன் ஆகாசம் ஆவான்
  • அவசம் அடைந்த அம்மங்காள் அரைப்புடைவை இல்லா விட்டால் சொல்ல லாகாதா?
  • அவசரக்காரனுக்கு ஆக்கிலே பெட்டு; நாக்குச் சேத்திலே பெட்டு
  • அவசரக்காரனுக்குப் புத்தி மட்டு
  • அவசரக் குடுக்கை
  • அவசரக் கோலம் அள்ளித் தெளித்தாளாம்
  • அவசரச் சுருக்கே, அரிவாள் மனணக் கருக்கே
  • அவசரத்தில் குண்டுச் சட்டியிலும் கை நுழையாது
  • அவசரத்தில் செத்த பிணத்துக்குப் பீச்சூத்தோடு மாரடிக்கிறான்
  • அவசரத்திலும் உபசாரமா?
  • அவசரத்துக்கு அரிக்கும் சட்டியிலும் கை நுழையாது
  • அவசரத்துக்குத் தோஷம் இல்லை
  • அவசரப்பட்ட மாமியார் மருமகனைக் கணவனென்று அழைத்தாளாம்
  • அவசரப் படேல்
  • அவசரம் ஆனால் அரிக்கும் சட்டியிலும் கை நுழையாது
  • அவசரம் என்றால் அண்டாவிலும் கை நுழையாது
  • அவத்தனுக்கும் காணி வேண்டாம்; சமர்த்தனுக்கும் காணி வேண்டாம்
  • அவத்தனுக்கும் சமர்த்தனுக்கும் காணிக்கை இல்லை
  • அவத்தனைக் கட்டி வாழ்வதை விடச் சமர்த்தனைக் கட்டி அறுத்துப் போடலாம்
  • அவதந்திரம் தனக்கு அந்தரம்
  • அவதிக் குடிக்குத் தெய்வமே துணை
  • அவப் பொழுதிலும் தவப்பொழுது வாசி
  • அவமானம் பண்ணி வெகுமானம் பேசுகிறான்
  • அவர் அவர் அக்கறைக்கு அவர் அவர் படுவார்
  • அவர் அவர் எண்ணத்தை ஆண்டவன் அறிவான்
  • அவர் அவர் எண்ணத்தை ஆண்டவன் ஆக்கினாலும் ஆக்குவான்; அழித்தாலும் அழிப்பான்
  • அவர் அவர் மனசே அவர் அவர்க்குச் சாட்சி
  • அவர்களுக்கு வாய்ச்சொல்; எங்களுக்குத் தலைச் சுமை
  • அவருடைய இறகு முறிந்து போயிற்று
  • அவரை எம்மாதம் போட்டாலும் தை மாதம் காய்க்கும்
  • அவரை ஒரு கொடியும் வடமன் ஒரு குடியும்
  • அவரைக்கு ஒரு செடி; ஆதீனத்துக்கு ஒரு பிள்ளை
  • அவரை நட்டால் துவரை முளைக்குமா?
  • அவல் பெருத்தது ஆர்க்காடு
  • அவலக் குடித்தனத்தை அம்பலப்படுத்தாதே
  • அவலட்சணம் உள்ள குதிரைக்குச் சுழி சுத்தம் பார்க்கிறது இல்லை
  • அவலப் பிணத்துக்கு அத்தையைக் கொண்டது
  • அவலமாய் வாழ்பவன் சபலமாய்ச் சாவான்
  • அவலை நினைத்துக்கொண்டு உரலை இடிப்பது போல
  • அவலை முக்கித் தின்னு; எள்ளை நக்கித் தின்னு
  • அவள் அவள் என்பதைவிட அரி அரி என்பது நலம்
  • அவள் அழகுக்குத் தாய் வீடு ஒரு கேடா?
  • அவள் அழகுக்குப் பத்துப் பேர் வருவார்கள்; கண் சிமிட்டினால் ஆயிரம் பேர் மயங்கிப் போவார்கள்
  • அவள் ஆத்தாளையும் அவள் அக்காளையும் கூத்தாடிப் பையன் அழைக்கிறான்
  • அவள் எமனைப் பலகாரம் பண்ணுவாள்
  • அவள் சம்பத்து அறியாமல் கவிழ்ந்தது
  • அவள் சமத்து, பானை சந்தியிலே கவிழ்ந்தது
  • அவள் சாட்டிலே திரை சாட்டா?
  • அவள் சொல் உனக்குக் குரு வாக்கு
  • அவள் பாடுவது குயில் கூவுவது போல
  • அவள் பேர் கூந்தலழகி; அவள் தலை மொட்டை
  • அவள் பேர் தங்கமாம்; அவள் காதில் பிச்சோலையாம்
  • அவள் மலத்தை மணிகொண்டு ஒளித்தது
  • அவளிடத்தில் எல்லோரும் பிச்சை வாங்க வேண்டும்
  • அவளுக்கு இவள் எழுந்திருந்து உண்பாள்
  • அவளுக்கு எவள் ஈடு; அவளுக்கு அவளே சோடு
  • அவளுக்கு நிரம்பத் தளுக்குத் தெரியும்
  • அவளைக் கண்ட கண்ணாலே இன்னொருத்தியைக் காணுகிறதா?
  • அவளைத் தொடுவானேன்? கவலைப் படுவானேன்?
  • அவன் அசையாமல் அனுவும் அசையாது
  • அவன் அதிகாரம் கொடிகட்டிப் பறக்கிறது
  • அவன் அருள் அற்றார் அனைவரும் அற்றார்; அவன் அருள் உற்றார் அனைவரும் உற்றார்
  • அவன் அவன் எண்ணத்தை ஆண்டவன் ஆக்கினாலும் ஆக்குவான்; அழித்தாலும் அழிப்பான்
  • அவன் அவன் செய்த வினை அவன் அவனுக்கு
  • அவன் அவன் மனசே அவன் அவனுக்குச் சாட்சி
  • அவன் அவன் தலையெழுத்தின்படி நடக்கும்
  • அவன் அவன் நிழல் அவன் அவன் பின்வரும்
  • அவன் அன்றி ஓரணுவும் அசையாது
  • அவன் ஆகாரத்தை வடுப்படாமல் கடிப்பேன் என்கிறான்
  • அவன் இட்டதே சட்டம்
  • அவன் இவன் என்பதைவிட அரி அரி என்பது நலம்
  • அவன் உள் எல்லாம் புண்; உடம்பெல்லாம் கொப்புளம்
  • அவன் உனக்குக் கிள்ளுக் கீரையா?
  • அவன் எங்கே இருந்தான்? நான் எங்கே இருந்தேன்?
  • அவன் எரி பொரி என்று விழுகிறான்
  • அவன் என் தலைக்கு உலை வைக்கிறான்
  • அவன் என்னை ஊதிப் பறக்கடிக்கப் பார்க்கிறான்
  • அவன் எனக்கு அட்டமத்துச் சனி
  • அவன் ஒரு குளிர்ந்த கொள்ளி
  • அவன் ஓடிப் பாடி நாடியில் அடங்கினான்
  • அவன் கணக்குப் புத்தகத்தில் ஒரு பத்திதான் எழுதியிருக்கிறது
  • அவன் கல்வெட்டான ஆள்; அவன் பேச்சுக்கு மறு பேச்சு இல்லை
  • அவன் கழுத்துக்குக் கத்தி தீட்டுகிறான்
  • அவன் காலால் இட்ட வேலையைத் தலையால் செய்வான்
  • அவன் காலால் கீறினதை நான் நாவால் அழிக்கிறேன்
  • அவன் காலால் முடிந்ததைக் கையால் அவிழ்க்க முடியாது
  • அவன் கிடக்கிறான் குடிகாரன்; எனக்கு ஒரு திரான் போடு
  • அவன் கெட்டான் என் கொட்டிலின் பின்னே
  • அவன் கெட்டான் குடியன்; எனக்கு இரண்டு திரான் வாரு
  • அவன் கேப் மாறி, அவன் தம்பி முடிச்சு மாறி
  • அவன் கை மெத்தக் கூர் ஆச்சே
  • அவன் கை மெத்த நீளம்
  • அவன் கையைக் கொண்டே அவன் கண்ணில் குத்தினான்
  • அவன் கொஞ்சப் பள்ளியா?
  • அவன் சாண் ஏறினால் முழம் சறுக்குகிறது
  • அவன் சாதி அறிந்த புத்தி, குலம் அறிந்த ஆசாரம்
  • அவன் சாதிக்கு எந்தப் புத்தியோ குலத்துக்கு எந்த ஆசாரமோ அதுதான் வரும்
  • அவன் சாயம் வெளுத்துப் போய்விட்டது
  • அவன் செய்த வினை அவனைச் சாரும்
  • அவன் சொன்னதே சட்டம்; இட்டதே பிச்சை
  • அவன் சோற்றுக்குத் தாளம் போடுகிறான்
  • அவன் சோற்றை மறந்துவிட்டான்
  • அவன் தம்பி அங்கதன்
  • அவன் தம்பி நான்தான்; எனக்கு ஒன்றும் வராது
  • அவன் தலையில் ஓட்டைக் கவிழ்ப்பான்
  • அவன் தவிடு தின்று போவான்
  • அவன் தன்னாலேதான் கெட்டால், அண்ணாவி என்ன செய்வான்?
  • அவன் தொட்டுக் கொடுத்தான்; நான் இட்டுக் கொடுத்தேன்
  • அவன் நடைக்குப் பத்துப்பேர் வருவார்கள்; கைவீச்சுக்குப் பத்துப் பேர் வருவார்கள்
  • அவன் நா அசைந்தால் நாடு அசையும்
  • அவன் நிரம்ப வைதிகமாய்ப் பேசுகிறான்
  • அவன் நின்ற இடம் ஒரு சாண் வெந்து இருபது சாண் நீறாகும்
  • அவன் பசியாமல் கஞ்சி குடிக்கிறான்
  • அவன் பிடித்த முயலுக்கு மூன்றே கால்
  • அவன் பின்புறத்தைத் தாங்குகிறான்
  • அவன் பூராய மாயம் பேசுகிறான்
  • அவன் பேச்சு விளக்கெண்ணெய்ச் சமாசாரம்
  • அவன் பேச்சைத் தண்ணீரில்தான் எழுதி வைக்க வேணும்
  • அவன் பேசுகிறது எல்லாம் தில்லுமுல்லு, திருவாதிரை
  • அவன் போட்டதே சட்டம்; இட்டதே பிச்சை
  • அவன் மனசே அவனுக்குச் சாட்சி
  • அவன் மிதித்த இடத்தில் புல்லும் முளையாது
  • அவன் மூத்திரம் விளக்காய் எரிகிறது
  • அவன் மெத்த அத்து மிஞ்சின பேச்சுக்காரன்
  • அவன் ராஜ சமூகத்துக்கு எலுமிச்சம்பழம்
  • அவன் வம்புக்கும் இவன் தும்புக்கும் சரி
  • அவன் வல்லாள கண்டனை வாரிப் போர் இட்டவன்
  • அவன் வலத்தை மண் கொண்டு ஒளித்தது
  • அவனண்டை அந்தப் பருப்பு வேகாது
  • அவனியில் இல்லை ஈடு; அவளுக்கு அவளே சோடு
  • அவனுக்கு ஆகாசம் மூன்று விரற்கடை
  • அவனுக்குக் கத்தியும் இல்லை; கபடாவும் இல்லை
  • அவனுக்குக் கபடாவும் இல்லை; வெட்டுக்கத்தியும் இல்லை
  • அவனுக்குச் சாண் ஏறினால் முழம் சறுக்குகிறது
  • அவனுக்கச் சுக்கிாதசை அடிக்கிறது
  • அவனுக்குப் பொய்ச் சத்தியம் பாலும் சோறும்
  • அவனுக்கும் அவளுக்கும் ஏழாம் பொருத்தம்
  • அவனுக்கும் இவனுக்கும் அஜகஜாந்தரம்
  • அவனுக்கும் இவனுக்கும் எருமைச் சங்காத்தம்
  • அவனுக்குள்ளே அகப்பட்டிருக்கிறதா என் பிழைப்பு எல்லாம்?
  • அவனுக்க ஜெயில் தாய் வீடு
  • அவனுடைய பேச்சுக் காற் சொல்லும் அரைச் சொல்லும்
  • அவனுடைய வாழ்வு நண்டுக்குடுவை உடைந்ததுபோல இருக்கிறது
  • அவனே இவனே என்பதை விடச் சிவனே சிவனே என்பது நல்லது
  • அவனே வெட்டவும் விடவும் கர்த்தன்
  • அவனை அவன் பேசிவிட்டுப் பேச்சு வாங்கி ஆமை மல்லாத்தினாற் போல மல்லாத்திப் போட்டான்
  • அவனை உரித்து வைத்தாற்போல் பிறந்திருக்கிறான்
  • அவனோடு இவனை ஏணிவைத்துப் பார்த்தாலும் காணாது
  • அவிக்கிற சட்டியை விட மூடுகிற சட்டி பெரிதாக இருக்கிறது
  • அவிசல் கத்தரிக்காய் ஐயருக்கு
  • அவிசாரி அகமுடையான் ஆபத்துக்கு உதவுவானா?
  • அவிசாரி ஆடினாலும் அதிர்ஷ்டம் வேண்டும்; திருடப் போனாலும் திசை வேண்டும்
  • அவிசாரி ஆனாலும் ஆனைமேல் போகலாம்; திருடன் தெருவழியே கூடப் போக முடியாது
  • அவிசாரி என்று ஆனைமேல் ஏறலாம்; திருடி என்று தெருவில் வரலாமா?
  • அவிசாரி என்று பெயர் இல்லாமல் ஐந்து பிராயம் கழித்தாளாம்
  • அவிசாரிக்கு ஆணை இல்லை; திருடிக்குத் தெய்வம் இல்லை
  • அவிசாரிக்கும் ஆற்றில் விழுகிறவளுக்கும் காவல் போட முடியுமா?
  • அவிசாரிக்கு வாய் பெரிது; அஞ்சாறு அரிசிக்குக் கொதி பெரிது
  • அவிசாரி கையில் சாப்பிடாதவனும் அரிசிப் புழுத் தின்னாதவனும் இல்லை
  • அவிசாரி பிள்ளை கோத்திரத்துக்குப் பிள்ளை
  • அவிசாரி பிள்ளை சபைக்கு உறுதி
  • அவிசாரி போக ஆசையாய் இருக்குது; அடிப்பானென்று பயமாய் இருக்குது
  • அவிசாரி போனாலும் முகராசி வேணும்; அங்காடி போனாலும் கைராசி வேணும்
  • அவிசாரியிலே வந்தது பெரு வாரியிலே போகிறது
  • அவிசாரி வாயாடுகிறாற் போலே
  • அவிட்டத்தில் பிறந்த தங்கச்சியை அந்நியத்தில் கொடுக்கக் கூடாது
  • அவிட்டத்தில் பிறந்தால் தவிட்டுப் பானையிலும் பொன்
  • அவிட்டத்துப் பெண் தொட்டதெல்லாம் பொன்
  • அவித்த பயறு முளைக்குமா?
  • அவிர்ப் பாகத்தை நாய் மோந்த மாதிரி
  • அவிவேகி உறவிலும் விவேகி பகையே நன்று
  • அவிழ்த்துக் கொண்டதாம் கழுதை; எடுத்துக் கொண்டதாம் ஓட்டம்
  • அவிழ்த்து விட்ட காளை போல
  • அவிழ்த்து விட்டதாம் கழுதை; எடுத்து விட்டதாம் ஓட்டம்
  • அவிழ்த்து விட்டால் பேரளம் போவான்
  • அவிழ்தம் என்ன செய்யும்? அஞ்சு குணம் செய்யும்; பொருள் என்ன செய்யும்? பூவை வசம் செய்யும்
  • அவுங்க என்றான், இவுங்க என்றான்; அடிமடியிலே கையைப் போட்டான்
  • அவையிலும் ஒருவன், சவையிலும் ஒருவன்
  • அழ அழச் சொல்வார் தமர்; சிரிக்கச் சிரிக்கச் சொல்வார் பிறர்
  • அழகர் கோயில் மாடு தலை ஆட்டினது போல
  • அழகன் நடைக்கு அஞ்சான்; செல்வன் சொல்லுக்கு அஞ்சான்
  • அழகால் கெட்டாள் சீதை, வாயால் கெட்டாள் திரெளபதி
  • அழகிலே அர்ஜூனனாம்; ஆஸ்தியிலே குபேரனாம்
  • அழகிலே பவளக் கொடி; அந்தத்திலே மொந்தை மூஞ்சி
  • அழகிலே பிறந்த பவளக்கொடி, ஆற்றிலே மிதந்த சாணிக் கூடை
  • அழகிற்கு மூக்கை அழிப்பார் உண்டா?
  • அழக இருந்து அழும்; அதிர்ஷ்டம் இருந்து உண்ணும்
  • அழகு இருந்து உண்ணுமா? அதிருஷ்டம் இருந்து உண்ணுமா?
  • அழக இருந்து என்ன? அதிருஷ்டம் இருக்க வேண்டும்
  • அழகு இல்லாதவள் மஞ்சள் பூசினாள்: ஆக்கத் தெரியாதவள் புளியைக் கரைத்து ஊற்றினாள்
  • அழக ஒழுகுகிறது; நாய் வந்து நக்குகிறது: ஓட்டைப் பானை கொண்டு வா, பிடித்து வைக்க
  • அழகு ஒழுகுகிறது, மடியில் கட்டடி கலயத்தை
  • அழகுக்கா மூக்கை அறுப்பாள்?
  • அழகுக்கு அணிந்த ஆபரணம் ஆபத்துக்கு உதவும்
  • அழகுக்கு அழகு செய்வது போல
  • அழகுக்கு இட்டால் ஆபத்துக்கு உதவும்
  • அழகுக்குச் செய்தது ஆபத்துக்கு உதவும்
  • அழகுக்கு மூக்கை அழித்து விட்டாள்
  • அழகு கிடந்து அழும்; அதிர்ஷ்டம் கிடந்து துள்ளும்
  • அழகு கிடந்து புலம்புகிறது; அதிர்ஷ்டம் கண்டு அடிக்கிறது
  • அழகு சொட்டுகிறது
  • அழகு சோறு போடுமா? அதிர்ஷ்டம் சோறு போடுமா?
  • அழகுப் பெண்ணே காத்தாயி, உன்னை அழைக்கிறாண்டி கூத்தாடி
  • அழகு வடியது; கிளி கொஞ்சுது
  • அழச் சொல்கிறவன் பிழைக்கச் சொல்லுவான்; சிரிக்கச சொல்கிறவன் கெடச் சொல்லுவான்
  • அழப் பார்த்தான் கல்யாணம் போய்ப் பார்த்தால் தெரியும்
  • அழலாம் என்று நினைப்பதற்குள் அகமுடையான் அடித்தானாம்
  • அழிக்கப் படுவானைக் கடவுள் அறிவினன் ஆக்குவார்
  • அழித்தால் ஐந்த ஆள் பண்ணலாமே!
  • அழித்துக் கழித்துப் போட்டு வழித்து நக்கி என்று பெயர் இட்டானாம்!
  • அழிந்த கொல்லையில் ஆனை மேய்ந்தால் என்ன? குதிரை மேய்ந்தால் என்ன?
  • அழிந்த கொல்லையில் குதிரை மேய்ந்தாலென்ன, கழுதை மேய்ந்தாலென்ன?
  • அழிந்த கொல்லையில் குதிரை மேய்ந்து என்ன? கழுதை மேய்ந்து என்ன?
  • அழிந்தவன் ஆரோடு போனால் என்ன?
  • அழிய உழுது அடர விதை
  • அழியாச் செல்வம் விளைவே ஆகும்
  • அழியாத செல்வத்துக்கு அசுவம் வாங்கிக் கட்டு
  • அழி வழக்குச் சொன்னவன் பழி பொறுக்கும் மன்னவன்
  • அழிவுக்கு முன்னால் அகந்தை
  • அழுக்குக்குள் இருக்கும் மாணிக்கம்
  • அழுக்குச் சீலைக்குள் மாணிக்கம்
  • அழுக்குத் துணியில் சாயம் தோய்ப்பது போல
  • அழுக்கை அழுக்குக் கொல்லும்; இழுக்கை இழுக்குக் கொல்லும்
  • அழுக்கைத் துடைத்து மடியிலே வைத்தாலும் புழுக்கைக் குணம் போகாது
  • அழுகலுக்கு ஒரு புழுத்தல்
  • அழு கள்ளன், தொழு கள்ளன், ஆசாரக் கள்ளன்
  • அழுகிற ஆணையும், சிரிக்கிற பெண்ணையும் நம்பக்கூடாது
  • அழுகிறதற்கு அரைப்பணம் கொடுத்து ஓய்கிறதற்கு ஒரு பணம் கொடு
  • அழுகிற பிள்ளைக்கு வாழைப்பழம்
  • அழுகிற பிள்ளையும் வாயை மூடிக் கொள்ளும்
  • அழுகிற வீட்டில் இருந்தாலும் ஒழுகுகிற வீட்டில் இருக்கக் கூடாது
  • அழுகிற வீட்டுக்குப் போனாலும் திருட்டுக் கை சும்மா இராது
  • அழுகிற வேளை பார்த்து அக்குளில் பாய்ச்சுகிறான்
  • அழுகின பழம் ஐயருக்கு
  • அழுகை ஆங்காரத்தின் மேலும், சிரிப்புக் கெலிப்பின் மேலுந்தான்
  • அழுகைத் தூற்றல் அவ்வளவும் பூச்சி
  • அழுகையும் ஆங்காரமும் சிரிப்புக் கெலிப்போடே
  • அழுகையும் சிணுங்கலும் அம்மான் வீட்டில்; சிரிப்பும் களிப்பும் சிற்றப்பன் வீட்டில்
  • அழுத்தந் திருத்தமாய் உழுத்தம் பருப்பு என்றான்
  • அழுத்த நெஞ்சன் ஆருக்கும் உதவான்; இளகின நெஞ்சன் எவருக்கும் உதவுவான்
  • அழுத கண்ணீரும் கடன்
  • அழுத கண்ணும் சிந்திய மூக்கும்
  • அழுத பிள்ளை உரம் பெறும்
  • அழுத பிள்ளைக்கு வாழைப்பழம்
  • அழுத பிள்ளை சிரித்ததாம்; கழுதைப் பாலைக் குடித்ததாம்
  • அழுத பிள்ளை பசி ஆறும்
  • அழுத பிள்ளை பால் குடிக்கும்
  • அழுத பிள்ளையும் வாய் மூடும் அதிகாரம்
  • அழுத மூஞ்சி சிரிக்குமாம்; கழுதைப் பாலைக் குடிக்குமாம்
  • அழுதவளுக்கு வெட்கம் இல்லை; துணிந்தவளுக்குத் துக்கம் இல்லை
  • அழுதவனுக்கு ஆங்காரம் இல்லை
  • அழுதால் துக்கம்; சொன்னால் வெட்கம்
  • அழுதால் தெரியாதோ? ஆங்காரப் பெண் கொள்ளாதோ?
  • அழுதாலும் பிள்ளை அவளே பெற வேண்டும்
  • அழுது கொண்டு இருந்தாலும் உழுது கொண்டிரு
  • அழுது முறையிட்டால் அம்பலத்தில் கேட்கும்
  • அழுபிள்ளைத் தாய்ச்சிக்குப் பணம் கொடுத்தால் அநுபவிக்க ஒட்டுமா குழந்தை?
  • அழுவார் அழுவார் தம் தம் கரைச்சல்; திருவன் பெண்டிருக்கு அழுவார் இல்லை
  • அழுவார் அழுவார் எல்லாம் தன் கரைச்சல்; திருவன் பெண்டிருக்கு அழுவார் இல்லை
  • அழுவார் அழுவார் தம் துக்கம்; அசலார்க்கு அல்ல
  • அழுவார் அற்ற பிணமும் சுடுவார் அற்ற சுடலையும்
  • அழையாத வீட்டில் நாய்போல நுழையாதே
  • அழையாத வீட்டில் நுழையாத விருந்து
  • அழையாத வீட்டுக்கு விருந்துக்குப் போனால் மரியாதை நடக்காது
  • அழையாத வீட்டுக்குள் நுழையாத சம்பந்தி
  • அழையா வீட்டுக்குள் நுழையாச் சம்பந்தி
  • அள்ளப் போனாலும் அதிர்ஷ்டம் வேண்டும்
  • அள்ளரிசி புள்ளரிசி அவளானால் தருவாள்; அறியாச் சிறுக்கி இவள் என்ன தருவாள்?
  • அள்ளாது குறையாது; இல்லாது பிறவாது
  • அள்ளிக் குடிக்கத் தண்ணீர் இல்லை; அவள் பேர் கங்காதேவி
  • அள்ளிக் கொடுத்தால் சும்மா; அளந்து கொடுத்தால் கடன்
  • அள்ளிக் கொண்டு போகச்சே கிள்ளிக்கொண்டு வருகிறான்
  • அள்ளித் துள்ளி அரிவாள் மணையில் விழுந்தாளாம்
  • அள்ளி நடுதல் கிள்ளி நடுதல்
  • அள்ளிப்பால் வார்க்கையிலே கொள்ளிப்பால் வார்த்திருக்குது
  • அள்ளிய காரும் கிள்ளிய சம்பாவும்
  • அள்ளுகிறவன் இடத்தில் இருந்தாலும் கிள்ளுகிறவன் இடத்தில் இருக்கக் கூடாது
  • அள்ளும்போதே கிள்ளுவது
  • அள்ளுவது எல்லாம் நாய் தனக்கு என்று எண்ணுமாம்
  • அளக்கிற நாழி அகவிலை அறியுமா?
  • அளகாபுரி கொள்ளை ஆனாலும் அதிர்ஷ்ட ஈனனுக்கு ஒன்றும் இல்லை
  • அளகாபுரியிலும் விறகு தலையன் உண்டு
  • அளகேசன் ஆனாலும் அளவு அறிந்து செலவு செய்ய வேண்டும்
  • அளந்த அளந்த நாழி ஒளிஞ்சு ஒளிஞ்சு வரும்
  • அளந்த நாழி கொண்டு அளப்பான்
  • அளந்தால் ஒரு சாண் இல்லை; அரிந்தால் ஒரு சட்டி காணாது
  • அளந்து ஆற்றிலே ஒழிக்க வேணும்
  • அளவு அறிந்து அளித்து உண்
  • அளவு அறிந்து உண்போன் ஆயுள் நீளும்
  • அளவு அறிந்து வேலை செய்தால் விரல் மடக்கப் பொழுது இல்லை
  • அளவு இட்டவரைக் களவு இடலாமா?
  • அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் விஷம்
  • அளிஞ்சு பழஞ் சோறாய்ப் போச்சுது
  • அளுக்கு வீட்டு நாய் உளுக்கையிலே; ஐயா வீட்டு நாய் சவுக்கையிலே
  • அளுங்குப்பிடி பிடித்தாற் போல
  • அற்ப ஆசை கோடி தவத்தைக் கெடுக்கும்
  • அற்பக் கோபத்தினால் அறுந்த மூக்கு ஆயிரம் சந்தோஷம் வந்தாலும் வருமா?
  • அற்பச் சகவாசம் பிராண சங்கடம்
  • அற்ப சகவாசம் பிராண சங்கடம்
  • அற்ப சந்தோஷம்
  • அற்ப சுகம், கோடி துக்கம்
  • அற்பத்திற்கு அரைக்காசு அகப்பட்டால் திருக்குளத்தில் போட்டுத் தேடி எடுக்குமாம்
  • அற்பத்திற்கு அழகு குலைகிறதா?
  • அற்பத் துடைப்பம் ஆனாலும் அகத் தூசியை அடக்கும்
  • அற்பப் படிப்பு ஆபத்தை விளைவிக்கும்
  • அற்பம் அற்பம் அன்று
  • அற்பன் கை ஆயிரம் பொன்னிலும் சற்புத்திரன் கைத் தவிடு நன்று
  • அற்பன் பணம் படைத்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான்
  • அற்பன் பணம் படைத்தால் வைக்க வகை அறியான்
  • அற்பன் பவிஷு அரைக்காசு பெறாது
  • அற்பனுக்குப் பவிஷு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான்
  • அற்றதுக்கு உற்ற தாய்
  • அற்றது கழுதை, எடுத்தது ஓட்டம்
  • அறக்கப் பறக்கப் பாடுபட்டாலும் படுக்கப் பாய் இல்லை
  • அறிக் கல்வி முழு மொட்டை
  • அறக்காத்தான் பெண்டு இழந்தான்; அறுகாத வழி சுமந்து அழுதான்
  • அறக் காய்ந்தால் வித்துக்கு ஆகாது
  • அறக் கூர்மை முழு மொட்டை
  • அறங்கையும் புறங்கையும் நக்குதே
  • அறச் செட்டு முழு நட்டம்
  • அறச் செட்டு முழு நஷ்டம்
  • அறத்துக்கும் பாடி, கூழுக்கும் பாடி
  • அற நனைந்தவருக்குக் கூதல் என்ன?
  • அறப்படித்த பூனை காடிப் பானையில் தலையை விடும்
  • அறப்படித்த மூஞ்சூறு கழுநீர்ப் பானையில் விழுந்தாற் போல
  • அறப்படித்தவர் கூழ்ப் பானையில் விழுவாராம்
  • அறப்படித்தவன் அங்காடி போனால், விற்கவும் மாட்டான் கொள்ளவும் மாட்டான்
  • அறப்படித்தவன் அங்காடி போனால் விற்கவும் மாட்டான்; வாங்கவும் மாட்டான்
  • அறப்பத்தினி அகமுடையானை அப்பா என்று அழைத்தாளாம்
  • அறப் பேசி உறவாட வேண்டும்
  • அறம் இருக்க மறம் விலைக்குக் கொண்டவாறு
  • அறம் கெட்ட நெஞ்சு திறம்கெட்டு அழியும்
  • அறம் செய்ய அல்லவை நீங்கி விடும்
  • அறம் பெருக மறம் தகரும்
  • அறம் பொருள் இன்பம் எல்லார்க்கும் இல்லை
  • அறம் வெல்லும்; பாவம் தோற்கும்
  • அறமுறுக்கினால் அற்றும் போகும்
  • அற முறுக்கினால் கொடி முறுக்குப் படும்
  • அற முறுக்குக் கொடும்புரி கொண்டு அற்று விடும்
  • அறவடித்த ...........சோறுகழுநீர்ப் பானையில் விழுந்தாற் போல்
  • அறவில்............. வாணிகம்
  • அறவும் கொடுங்கோலரசன் கீழ்க் குடியிருப்பிலும் குறவன் கிழ்க் குடியிருப்பு மேல்
  • அறவைக்கு வாய் பெரிது; அஞ்சாறு அரிசிக்குச் கொதி பெரிது
  • அறிவுக்கு அழகு அகத்து உணர்ந்து அறிதல்
  • அறிந்த ஆண்டை என்று கும்பிடப் போனால் உங்கள் அப்பன் பத்துப்பணம் கொடுக்கவேணும் கொடு என்றான்
  • அறிந்த பார்ப்பான் சிநேகிதக்காரன், ஆறு காசுக்கு மூணு தோசை
  • அறிந்தவன் அறிய வேண்டும், அரியாலைப் பனாட்டை
  • அறிந்தவன் என்று கும்பிட அடிமை வழக்கு இட்டாற் போல
  • அறிந்தறிந்து செய்கிற பாவத்தை அழுதழுது தொலைக்கவேண்டும்
  • அறிந்து அறிந்து கெட்டவர் உண்டா?
  • அறிந்து அறிந்து செய்கிற பாவத்தை அழுது அழுது தொலைக்க வேணும்
  • அறிந்து அறிந்து பாவத்தைப் பண்ணி அழுது அழுது அனுபவித்தல்
  • அறிந்து கெட்டேன்; அறியாமலும் கெட்டேன்; சொறிந்தும் புண்ணாச்சு
  • அறிய அறியக் கெடுவார் உண்டா?
  • அறியாக் குளியாம் கருமாறிப் பாய்ச்சல்
  • அறியாத ஊருக்குப் புரியாத வழி காட்டினாற் போல்
  • அறியாத நாள் எல்லாம் பிறவாத நாள்
  • அறியாப் பாவம் பறியாய்ப் போச்சு
  • அறியாப் பிள்ளை ஆனாலும் ஆடுவான் மூப்பு
  • அறியாப் பிள்ளை புத்தியைப் போல
  • அறியாமல் தாடி வளர்த்து அம்பட்டன் கையிற் கொடுக்கவா?
  • அறியா விட்டால் அசலைப் பார்; தெரியா விட்டால் தெருவைப்பார்
  • அறிவார் அறிவார், ஆய்ந்தவர் அறிவார்
  • அறிவில்லார் சிநேகம் அதிக உத்தமம்
  • அறிவிலே விளையுமா? எருவிலே விளையுமா?
  • அறிவினை ஊழே அடும்
  • அறிவீனர் தமக்கு ஆயிரம் உரைக்கினும் அவம்
  • அறிவீனனிடத்தில் புத்தி கேளாதே
  • அறிவு அற்றவனுக்கு ஆண்மை ஏது?
  • அறிவு அற்றவனுக்கு ஆர் சொன்னால் என்ன?
  • அறிவுடை ஒருவனை அரசனும் விரும்புவான்
  • அறிவு இருந்தென்ன? அதிருஷ்டம் வேண்டும்
  • அறிவு இல்லாச் சயனம் அம்பரத்திலும் இல்லை
  • அறிவு இல்லாதவன் பெண்களிடத்திலும் தாழ்வு படுவான்
  • அறிவு இல்லாதவனுக்கு வேலை ஓயாது
  • அறிவு இல்லார் சிநேகம் அதிக உத்தமம்
  • அறிவு இல்லார் தமக்கு ஆண்மையும் இல்லை
  • அறிவு இல்லார் தமக்கு ஆண்மையுமில்லை
  • அறிவு உடையார் ஆவது அறிவார்
  • அறிவு உடையாரை அடுத்தால் போதும்
  • அறிவு உடையாரை அரசனும் விரும்பும்
  • அறிவு உள்ளவனுக்கு அறிவது ஒன்று இல்லை
  • அறிவு கெட்ட நாய்க்கு அவலும் சர்க்கரையுமா?
  • அறிவு கெட்டவனுக்கு ஆர் சொல்லியும் என்ன?
  • அறிவுடன் ஞானம்; அன்புடன் ஒழுக்கம்
  • அறிவுடையாரை அரசனும் விரும்புவான்
  • அறிவு தரும் வாயும் அன்பு உரைக்கும் நாவும்
  • அறிவு புறம் போய் ஆடினது போல
  • அறிவு பெருத்தோன், அல்லல் பெருத்தோன்
  • அறிவு மனத்தை அரிக்கும்
  • அறிவு யார் அறிவார்? ஆய்ந்தவர் அறிவா
  • அறிவேன், அறிவேன், ஆல் இலை புளியிலை போல் இருக்கும் என்றானாம்
  • அறுக்க ஊறும் பூம் பாளை, அணுக ஊறும் சிற்றின்பம்
  • அறுக்க ஒரு யந்திரம்; அடிக்க ஒரு யந்திரம்
  • அறுக்க மாட்டா கையிலே 56 கறுக்கு அறிவாளாம்
  • அறுக்கத் தாலி இல்லை; சிரைக்க மயிரும் இல்லை
  • அறுக்கப் பிடித்த ஆடுபோல
  • அறுக்க மாட்டாதவன் இடையில் அம்பத்தெட்டு அரிவாள்
  • அறுக்கு முன்னே புடுக்கைத்தா: தீக்கு முன்னே தோலைத்தா என்ற கதை
  • அறுக்கையிலும் பட்டினி; பொறுக்கையிலும் பட்டினி; பொங்கல் அன்றைக்கு பொழுதன்றைக்கும் பட்டினி
  • அறுகங் கட்டைபோல் அடிவேர் தளிர்க்கிறது
  • அறுகங் கட்டையும் ஆபத்துக்கு உதவும்
  • அறுகங் காட்டை உழுதவனும் கெட்டான்; அடங்காப் பெண்ணைக் கொண்டவனும் கெட்டான்
  • அறுகங் காட்டை விட்டானும் கெட்டான்; ஆன மாட்டை விற்றவனும் கெட்டான்
  • அறுகு போல் வேர் ஓடி
  • அறுகு முளைத்த காடும் அரசை எதிர்த்த குடியும் கெடும்
  • அறுத்த கைக்குச் சுண்ணாம்பு தர மாட்டான்
  • அறுத்த தாலியை எடுத்துக் கட்டினாற் போல
  • அறுத்தவள் ஆண்பிள்ளை பெற்றது போல
  • அறுத்தவளுக்கு அகமுடையான் வந்தாற் போல
  • அறுத்தவளுக்கு அறுபது நாழிகையும் வேலை
  • அறுத்தவளுக்குச் சாவு உண்டா?
  • அறுத்த விரலுக்குச் சுண்ணாம்பு தரமாட்டான்
  • அறுத்துக் கொண்டதாம் கழுதை; எடுத்துக் கொண்டதாம் ஓட்டம்
  • அறுத்தும் ஆண்டவள் பொன்னுருவி
  • அறுதலி பெண் காலால் மாட்டிக் கிழிக்கும்
  • அறுதலி மகனுக்கு வாழ்க்கைப்பட்டு விருதாவியா அறுத்தேன்
  • அறுந்த மாங்கனி பொருந்திய செங்கம்
  • அறுந்த விரலுக்குச் சுண்ணாம்பு கிடையாது
  • அறு நான்கில் பெற்ற பிள்ளையும் ஆவணி ஐம்மூன்றில் நடுகையும் அநுகூலம்
  • அறு நான்கில் பெற்ற புதல்வன்
  • அறுப்புக் காலத்தில் எலிக்கு ஐந்து பெண்சாதி
  • அறுப்புக் காலத்தில் எலிக்கு நாலு கூத்தியார்
  • அறுபத்து நாலடிக் கம்பத்திலேறி ஆடினாலும், அடியில் இறங்கி தான் தியாகம் வாங்கவேண்டும்
  • அறுபத்து நாலு அடிக்கம்பத்தில் ஏறி ஆடினாலும் அடியில இறங்கித்தான் தியாகம் வாங்க வேண்டும்
  • அறுபத் தெட்டுக்கு ஓர் அம்பலம்
  • அறுபதாம் கலக்கம்
  • அறுபது அடிக் கம்பம் ஏறினாலும் கீழே வந்துதான் யாசகம் வாங்கவேண்டும்
  • அறுபதுக்கு அப்புறம் பொறுபொறுப்பு
  • அறுபதுக்கு அறுபது சென்றால் வீட்டுக்கு நாய் வேண்டாம்
  • அறுபதுக்கு மேல் அடித்ததாம் யோகம்
  • அறுபதுக்கு மேல் அறிவுக் கலக்கம்
  • அறுபது நாழிகையும் பாடுபட்டும் அரை வயிற்றுக்கு அன்னம் இல்லை
  • அறுபது நாளைக்கு எழுபது கதை
  • அறுபது வயது சென்றால் அவன் வீட்டுக்கு நாய் வேண்டாம்
  • அறுவடைக் காலத்தில் எலிக்கும் ஐந்து பெண் சாதி
  • அறுவாய்க்கு வாய்பெரிது; அரிசிக்குக் கொதி பெரிது
  • அறைக் கீரைப் புழுத் தின்னாதவனும் அவிசாரி கையில் சோறு உண்ணாதவனும் இல்லை
  • அறைக்குள் நடந்தது அம்பலத்தில் வந்து விட்டது
  • அறை காத்தான் பெண்டு இழந்தான்; அங்கேயும் ஒரு கை தூக்கி விட்டான்
  • அறை காத்தான் பெண்டு இழந்தான்; ஆறு காதம் சுமந்தும் செத்தான்
  • அறையில் ஆடி அல்லவோ அம்பலத்தில் ஆடவேண்டும்?
  • அறையில் இருந்த பேர்களை அம்பலம் ஏற்றுகிற புரட்டன்
  • அறையில் சொன்னது அம்பலத்துக்கு வரும்
  • அறையில் நடப்பது அம்பலத்துக்கு வரலாமா?
  • அறைவீட்டுச் செய்தி அம்பலத்தில் வரும்
  • அன்பான சிநேகிதனை ஆபத்தில் அறியலாம்
  • அன்பின் பணியே இன்ப வாழ்வு
  • அன்பு அற்ற மாமிக்குக் கும்பிடும் குற்றமே
  • அன்பு அற்றார் பாதை பற்றிப் போகாதே
  • அன்பு இருக்கும் இடம் அரண்மனை
  • அன்பு இருந்தால் ஆகாததும் ஆகும்
  • அன்பு இல்லாக் கூழும் இன்பம் இல்லா உடன்பிறப்பும்
  • அன்பு இல்லாத தாயும் அறிவு இல்லாத புத்திரனும் இன்பம் இல்லாத உடன்பிறப்பும் எதற்குப் பிரயோசனம்?
  • அன்பு இல்லாதவர்க்கு ஆதிக்கம் இல்லை
  • அன்பு இலாதார் பின்பு செல்லேல்
  • அன்பு இலாள் இட்ட அமுது ஆகாது
  • அன்பு உடையானைப் பறிகொடுத்து அலையறச்சே அசல் வீட்டுக் காரன் வந்து அழைத்தானாம்
  • அன்பு உள்ள இடத்தில் ஆண்டவன் இருக்கிறான்
  • அன்பு உள்ள குணம் அலை இல்லா நதி
  • அன்புக்குத் திறக்காத பூட்டே இல்லை
  • அன்புடனே ஆண்டவனை வணங்கு
  • அன்பே சிவம்
  • அன்பே பிரதானம்; அதுவே வெகுமானம்
  • அன்பே மூவுலகுக்கும் ராஜா
  • அன்றாடம் காய்ச்சி
  • அன்றாடம் சோற்றுக்கு அல்லாடி நிற்கிறது
  • அன்று அடிக்கிற காற்றுக்குப் படல் கட்டிச் சாத்தலாம்
  • அன்று அற ஆயிரம் சொன்னாலும் நின்று அற ஒரு காசு பெரிது
  • அன்று இல்லை, இன்று இல்லை; அழுகற் பலாக்காய் கல்யாண வாசலிலே கலந்துண்ண வந்தாயே
  • அன்று இறுக்கலாம்; நின்று இறுக்கலாகாது
  • அன்று எழுதினவன் அழித்து எழுத மாட்டான்
  • அன்று எழுதிவன் அழித்து எழுதுவானா?
  • அன்று கட்டி அன்று அறுத்தாலும் ஆக்கமுள்ள ஆண் மகனுக்கு வாழ்க்கைப்பட வேண்டும்
  • அன்று கண்டதை அடுப்பில் போட்டு ஆக்கின பானையைத் தோளில் போட்டுக் கொண்டு திரிகிறது போல
  • அன்று கண்ட மேனிக்கு அழிவில்லை
  • அன்று கண்டனர் இன்று வந்தனர்
  • அன்று கழி, ஆண்டு கழி
  • அன்று கிடைக்கிற ஆயிரம் பொன்னிலும் இன்று கிடைக்கிற அரைக்காசு பெரிது
  • அன்று குடிக்கத் தண்ணீர் இல்லை ஆனைமேல் அம்பாரி வேணுமாம்
  • அன்று கொள், நின்று கொள், என்றும் கொள்ளாதே
  • அன்று சாப்பிட்ட சாப்பாடு இன்னும் ஆறு மாசத்துக்குத் தாங்கும்
  • அன்று தின்ற ஊண் ஆறு மாசத்துக்குப் பசியை அறுக்கும்
  • அன்று தின்ற சோறு ஆறு மாசத்துக்கு ஆகுமா?
  • அன்று தின்னும் பலாக்காயினும் இன்று தின்னும் களாக்காய் மேல்
  • அன்று நடு; அல்லது கொன்று நடு; தப்பினால் கொன்று நடு
  • அன்று பார்த்ததற்கு அழிவில்லை
  • அன்றும் இல்லை காற்று; இன்றும் இல்லை குளிர்
  • அன்றும் இல்லை தையல்; இன்றும் இல்லை பொத்தல்
  • அன்று விட்ட குறை ஆறு மாசம்
  • அன்றே போச்சுது நொள்ளைமடையான்; அத்தோடே போச்சுது கற்றாழை நாற்றம்
  • அன்றை ஆயிரம் பொன்னிலும் இன்றை ஒரு காசு பெரிது
  • அன்றைக்கு அடித்த அடி ஆறு மாசம் தாங்கும்
  • அன்றைக்கு அறுத்த கார் ஆறு மாசச் சம்பா
  • அன்றைக்கு ஆடை; இன்றைக்குக் கோடை; என்றைக்கு விடியும் இடையில் தரித்திரம்
  • அன்றைக்கு இட்டது பிள்ளைக்கு
  • அன்றைக்கு எழுதியதை அழித்து எழுதப் போகிறானா?
  • அன்றைக்குக் கிடைக்கிற ஆயிரம் பொன்னிலும் இன்றைக்குக் கிடைக்கிற அரைக்காசு பெரிது
  • அன்றைக்குச் சொன்ன சொல் சென்மத்துக்கும் போதும்
  • அன்றைக்குத் தின்கிற பலாக்காயை விட இன்றைக்குத் தின்கிற களாக்காய் மேல்
  • அன்றைப்பாடு ஆண்டுப் பாடாய் இருக்கிறது
  • அன்னக் கொட்டிக் கண்ணை மறைக்குது
  • அன்னச் சுரணை அதிகமானால் அட்சர சுரணை குறையும்
  • அன்னத் துவேஷமும் பிரம்மத் துவேஷமும் கடைசிக் காலத்துக்கு
  • அன்னதானத்துக்கு நிகர் என்ன தானம் இருக்கிறது?
  • அன்னதானம் எங்கு உண்டு; அரன் அங்கு உண்டு
  • அன்ன நடை நடக்கத் தன் நடையும் போச்சாம்
  • அன்ன நடை நடக்கப் போய்க் காகம் தன் நடையும் இழந்தாற் போல
  • அன்னப் பாலுக்குச் சிங்கி அடித்தவன் ஆவின் பாலுக்குச் சர்க்கரை தேடுகிறான்
  • அன்னப்பிடி வெல்லப் பிடி ஆச்சுது
  • அன்னம் அதிகம் தின்பானும் ஆடை அழுக்கு ஆவானும் பதர்
  • அன்னம் இட்டார் வீட்டில் கன்னம் இடலாமா?
  • அன்னம் இறங்குவது அபான வாயுவால்
  • அன்னம் ஒடுங்கினால் அஞ்சும் ஒடுங்கும்
  • அன்னம் பித்தம்; கஞ்சி காமாலை
  • அன்னம் மிகக் கொள்வானும் ஆடை அழுக்கு ஆவானும் பதர்
  • அன்னம் முட்டானால் எல்லாம் முட்டும்
  • அன்னம் வில்வாதி லேகியம்
  • அன்னமயம் இன்றிப் பின்னை மயம் இல்லை
  • அன்னமயம் பிராண மயம்
  • அன்னமும் தண்ணீரும் கேட்காமல் இருந்தால் பெற்ற பிள்ளைக்கு மேலே பத்துப் பங்காய் வளர்ப்பேன்
  • அன்னமோ ராமசந்திரா
  • அன்ன வலையில் அரன் வந்து சிக்குவான்
  • அன்னிய சம்பத்தே அல்லாமல் அதிக சம்பத்து இல்லை என்றான்
  • அன்னிய சம்பந்தமே அல்லாமல் அத்தை சம்பந்தம் இல்லை என்கிறான்
  • அன்னிய மாதர் அவதிக்கு உதவார்
  • அன்னைக்கு உதவாதான் ஆருக்கும் உதவான்
  • அன்னைக்கு உதவாதவன் யாருக்கும் ஆகான்
  • அன்னைக்குப் பின் பெற்ற அப்பன் சிற்றப்பன்
  • அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
  • அனந்தங் காட்டிலே என்ன இருக்கப் போகிறது?
  • அனந்தத்துக்கு ஒன்றாக உறையிட்டாலும் அளவிடப் போகாது
  • அனல், குளிர், வெதுவெதுப்பு இம்மூன்று காலமும் ஆறு காலத்துக்குள் அடங்கும்
  • அனலில் இட்ட மெழுகுபோல
  • அனற்றை இல்லா ஊரிலே வண்ணார் இருந்து கெட்டார்கள்
  • அனுபோகக்காரனுக்கு ஆளாய்க் காக்கிறான்
  • அனுபோகம் தெளிகிற காலத்தில் ஒளஷதம் பலிக்கும்
  • அனுமந்தராயரே, அனுமந்தராயரே என்றானாம்; பேர் எப்படித் தெரிந்தது என்றானாம்; உன் மூஞ்சியைப் பார்த்தாலே தெரியாதா என்றானாம்
  • அனுமந்தராயனுக்குத் தெப்பத் திருநாளாம்
  • அனுமார் இலங்கையைத் தாண்டினாராம்; ஆனை எதைத் தாண்டும்?
  • அனுமார் தம்பி அங்கதன் போலே
  • அனுமார் வால் நீண்டது போல
  • அஜகஜாந்தரம்
  • அஜாகளஸ்தம் போல்
  • அஷ்ட சஹஸ்ரத்துக்குப் பிரஷ்ட தோஷம் இல்லை
  • அஷ்ட சஹஸ்ரப் பிலுக்கு
  • அஷ்டதரித்திரம்
  • அஷ்டதரித்திரம் ஆற்றோடு போ என்றால் நித்திய தரித்திரம் நேரே வருகிறது
  • அஷ்ட தரித்திரம் தாய் வீடு; அதிலும் தரித்திரம் மாமியார் வீடு
  • அஷ்டதரித்திரம் பிடித்தவன் அமராவதியில் வாழ்கிறான் என்று நித்திய தரித்திரம் பிடித்தவன் நின்ற நிலையிலே நட்டுக் கொண்டு வந்தான்
  • அஷ்டதரித்திரம் புக்ககத்திலே ஆறாவது போது வாடுகிறேன்
  • அஷ்டதிக்குக் கஜம் மாதிரி குடித்தனத்தைத் தாங்குகிறான்
  • அஷ்டப் பிரபந்தம் கற்றவன் அரைப் புலவன்
  • அஷ்டமத்துச் சனி அழுதாலும் விடாது
  • அஷ்டமத்துச் சனி போல
  • அஷ்டமத்துச் சனியன் கிட்ட வந்தது போல
  • அஷ்டமி இல்லை; நவமி இல்லை; துஷ்ட வயிற்றுக்குச் சுருக்க வேணும்
  • அஷ்டமி நவமி ஆகாச பாதாளம்
  • அஷ்டமி நவமி ஆசானுக்கு ஆகாது
  • அஷ்டமி நவமியிலே தொட்டது துலங்காது
  • அஷ்டமியிலே கிருஷ்ணன் பிறந்து வேஷ்டி வேஷ்டி என்று அழுகிறானாம்
  • அஸ்தச் செவ்வானம் அடை மழைக்கு லட்சணம்
  • அஸ்தி சகாந்தரம் என்றது போல் இருக்கிறது
  • அஸ்தியிலே ஜூரம்
  • அஸ்மின் கிராமே ஆச்சாள் பிரசித்தா
  • அக்ஷர லக்ஷம் பெறும்

[தொகு]

  • ஆ ஆ என்பவருக்கு என்ன? அன்னம் படைப்பவர்க்கல்லவா தெரியும்.
  • ஆ என்ற ஏப்பமும் அலறிய கொட்டாவியும் ஆகா.
  • ஆ என்று போனபிறகு அள்ளி இடுகிறதா?
  • ஆக்கம் கெட்ட கூகை
  • ஆக்க அறியாவிட்டால் புளியைக் கரை; அழகு இல்லாவிட்டால் மஞ்சளைப் பூசு.
  • ஆக்க பொறுத்தவன் ஆற பொறுக்கமாட்டையா?
  • ஆக்கப் பிள்ளை நம் அகத்தில்; அடிக்கப் பிள்ளை அயல் வீட்டிலோ?
  • ஆக்கப் பொறுத்தவன் ஆறப் பொறுக்கல் ஆகாதா?
  • ஆக்கம் கெட்ட அக்காள் மஞ்சள் அரைத்தாலும் கரி கரியாக வரும்.
  • ஆக்கம் கெட்ட அண்ணன் வேலைக்குப் போனால் வேலை கிடைக்காது; வேலை கிடைத்தாலும் கூலி கிடைக்காது.
  • ஆக்க மாட்டாத அழுகல் நாரிக்குத் தேட மாட்டாத திருட்டுச் சாவான்.
  • ஆக்க மாட்டேன் என்றால் அரிசியைப் போடு.
  • ஆக்கவில்லை, அரிக்கவில்லை; மூக்கெல்லாம் முழுக்கரியாக இருக்கிறதே!
  • ஆக்க வேண்டாம், அரிக்க வேண்டாம் பெண்ணே; என் அருகில் இருந்தால் போதுமடி பெண்ணே.
  • ஆக்கி அரித்துப் போட்டவள் கெட்டவள்; வழி காட்டி அனுப்பினவள் நல்லவள்.
  • ஆக்கிக் குழைப்பேன்; அரிசியா இறக்குவேன்.
  • ஆக்கிப் பெருக்கி அரசாள வைத்தேன்; தேய்த்துப் பெருக்கித் திரிசமம் பண்ணாதே.
  • ஆக்கினவள் கள்ளி; உண்பவன் சமர்த்தன்.
  • ஆக்கினையும் செங்கோலும் அற்றன அரை நாழிகையிலே.
  • ஆக்குகிறவள் சலித்தால் அடுப்புப் பாழ்; குத்துகிறவள் சலித்தால் குந்தாணிபாழ்.
  • ஆக்குகிறவளும் பெண்; அழிக்கிறவளும் பெண்.
  • ஆகட்டும் போகட்டும், அவரைக் காய் காய்க்கட்டும்; தம்பி பிறக்கட்டும்; தம்பட்டங்காய் காய்க்கட்டும்; அவனுக்குக் கல்யாணம் ஆகட்டும்; உன்னைக் கூப்பிடுகிறேனா, இல்லயா பார் என்றானாம்.
  • ஆகடியக்காரன் போகடியாய்ப் போவான்.
  • ஆக வேணும் என்றால் காலைப் பிடி; ஆகா விட்டால் கழுத்தைப்பிடி.
  • ஆகாசத் தாமரை.
  • ஆகாசக் கோட்டை கட்டியது போல.
  • ஆகாசத்தில் எறிந்தால் அங்கேயே நிற்குமா?
  • ஆகாசத்தில் பறக்க உபதேசம் சொல்லுகிறேன்; என்னை ஆற்றுக் கப்பால் தூக்கிவிடு என்கிறார் குரு.
  • ஆகாசத்திலிருந்து அறுந்து விட்டேன்; பூமி தேவி ஏற்றுக் கொண்டாள்.
  • ஆகாசத்தக்கு மையம் காட்டுகிறது போல்.
  • ஆகாசத்துக்கு வழி எங்கே என்றால் போகிறவன் தலைமேலே.
  • ஆகாசத்தைப் பருந்து எடுத்துக் கொண்டு போகிறதா?
  • ஆகாசத்தையும் வடிகட்டுவேன்.
  • ஆகாசத்தை வடுப்படாமல் கடிப்பேன் என்றான்.
  • ஆகாசம் பார்க்கப் போயும் இடுமுடுக்கா?
  • ஆகாசம் பெற்றது, பூமி தாங்கினது.
  • ஆகாசமே விழுந்தாற் போலப் பேசுகிறாயே!
  • ஆகாசம் பூமி பாதாளம் சாட்சி.
  • ஆகாச வர்த்தகன்.
  • ஆகாச வல்லிடி அதிர இடித்தது.
  • ஆகாத்தியக்காரனுக்கு ஐசுவரியம்; அஷ்ட தரித்திரனுக்குப் பெண்ணும் பிள்ளையும்.
  • ஆகாத்தியக்காரனுக்கு ஐசுவரியம் வந்தால் பிரம்மகத்திக்காரனுக்குப் பிள்ளை பிள்ளையாய்ப் பிறக்குது.
  • ஆகாத்தியக்காரனுக்குப் பிரம்மகத்திக்காரன் சாட்சி.
  • ஆகாததும் வேகாததும் ஆண்டவனுக்கு; அதிலும் கெட்டது குருக்களுக்கு.
  • ஆகாத நாளில் பிள்ளை பிறந்தால் அண்டை விட்டுக்காரனை என்ன செய்யும்?
  • ஆகாத பஞ்சாங்கத்துக்கு அறுபது நாழிகையும் தியாச்சியம்.
  • ஆகாதவற்றை ஏற்றால் ஆராய்ந்து ஏற்றுக் கொள்.
  • ஆகாதவன் குடியை அடுத்துக் கெடுக்க வேண்டும்.
  • ஆகாத வேளையில் பிள்ளை பிறந்தால் அப்பனையும் ஆத்தாளையும் கொல்லுமேயொழிய, பஞ்சாங்கம் சொன்ன பார்ப்பானை என்ன செய்யும்?
  • ஆகாதே உண்டது நீலம் பிறிது.
  • ஆகாயத்தில் எறிந்த கல் அங்கேயே நிற்குமா?
  • ஆகாயத்தில் கூட அரைக் குழிக்கு அவகாசம் இல்லை.
  • ஆகாயத்தில் போகிற சனியனை ஏணி வைத்து இறக்கின மாதிரி.
  • ஆகாயத்துக்கு மையம் காட்டுகிறது போல.
  • ஆகாயத்தைப் படல் கொண்டு மறைப்பது போல.
  • ஆகாயத்தை வில்லாக வளைப்பான்; மனலைக் கயிறாகத் திரிப்பான்.
  • ஆகாயப் புரட்டனுக்கு அந்தரப் புரட்டன் சாட்சி சொன்னானாம்.
  • ஆகாயம் பார்க்கப் போயும் இடுமுடுக்கா?
  • ஆகாயம் போட்டது; பூமி ஏந்திற்று.
  • ஆகாயம் மணல் கொழித்தால் அடுத்தாற் போல் மழை.
  • ஆகாயம் விழுந்து விட்டது போல.
  • ஆகாயம் மட்டும் அளக்கும் இருப்புத் தூணைச் செல் அரிக்குமா?
  • ஆகிற காலத்தில் அடியாளும் பெண் பெறுவாள்.
  • ஆகிற காலத்தில் அவிழ்தம் பலிக்கும்.
  • ஆகிற காலத்திலெல்லாம் அவிசாரி ஆடி, சாகிற காலத்தில் சங்கரா என்றாளாம்.
  • ஆகிறது அரைக் காசில் ஆகும்; ஆகாதது ஆயிரம் பொன்னாலும் ஆகாது.
  • ஆகிறவன் அரைக்காசிலும் ஆவான்; ஆகாதவனுக்கு ஆயிரம் கொடுத்தாலும் ஆகான்.
  • ஆகும் காய் பிஞ்சிலே தெரியும்.
  • ஆகும் காலம் ஆகும்; போகும் காலம் போகும்.
  • ஆகும் காலம் வந்தால் தேங்காய்க்கு இளநீர் போல் சேரும்.
  • ஆங்காரத்தாலே அழிந்தவர் அனந்தம் பேர்.
  • ஆங்காரிகளுக்கு அதிகாரி.
  • ஆங்காரியை அடக்குபவன் அதிகாரி.
  • ஆச்சாபுரம் காட்டிலே ஐம்பது புலி குத்தினவன்
  • ஆச்சானுக்குப் பீச்சான்; மதனிக்கு உடன் பிறந்தான்; நெல்லுக் குத்துகிறவளுக்கு நேர் உடன் பிறந்தான். பறைச்சேரி நாயோடே பங்கம் அழிகிறான்.
  • ஆச்சா விதைத்தால் ஆமணக்கு விளையுமா?
  • ஆச்சி, ஆச்சி, மெத்தப் படித்துப் பேசாதே.
  • ஆச்சி திரளவும் ஐயா உருளவும் சரியாக இருக்கும்.
  • ஆச்சி நூற்கிற நூல் ஐயர் பூணூலுக்குச் சரி.
  • ஆச்சி நூற்பது ஐயர் பூணூலுக்கும் காணாது.
  • ஆசந்திரார்க்கம்.
  • ஆசன கீதம் சீவன நாசம்.
  • ஆசரித்த தெய்வமெல்லாம அடியோடே மாண்டது என்கிறான்.
  • ஆசாரக் கள்ளன்.
  • ஆசாரத்துக்கு ஆசாரம்; கைத்துக்குச் சுகம்.
  • ஆசாரப் பூசைப்பெட்டி; அதன்மேல் கவிச்சுச் சட்டி.
  • ஆசாரம் இல்லா அசடருடன் கூடிப் பாசாங்கு பேசிப் பதி இழந்து போனேனே!
  • ஆசாரி குத்து.
  • ஆசாரி செத்தான் என்று அகத்திக் கழி கட்டி அழுகிறாற்போல்.
  • ஆசாரி பெண்ணுக்கு அழகா பார்க்கிறது?
  • ஆசாரி வீட்டுக்கு அடுப்பு இரண்டு.
  • ஆசானுக்கும் அடைவு தப்பும்; ஆனைக்கும் அடி சறுக்கும்.
  • ஆசிரியர் சொல் அம்பலச் சொல்,
  • ஆசீர்வாதமும் சாபமும் அறவோர்க்கு இல்லை.
  • ஆசை அண்டாதானால் அழுகையும் ஆண்டாது.
  • ஆசை அண்டினால் அழுகையும் அண்டும்.
  • ஆசை அதிகம் உள்ளவனுக்கு ரோசம் இருக்குமா?
  • ஆசை அவள் மேலே; ஆதரவு பாய் மேலே.
  • ஆசை அறுபது நாள்; மோகம் முப்பது நாள்; தொண்ணுாறு நாளும் போனால் துடைப்பக் கட்டை அடி.
  • ஆசை இருக்கிறது. ஆனை மேல் ஏற; அம்சம் இருக்கிறது கழுதை மேய்க்க.
  • ஆசை இருக்கிறது தாசில் பண்ண; அதிருஷ்டம் இருக்கிறது மண் சுமக்க.
  • ஆசை உள்ளளவும் அலைச்சலும் உண்டு.
  • ஆசை உண்டானால் பூசை உண்டு.
  • ஆசை உள்ள இடத்தில் பூசை நடக்கும்.
  • ஆசை உள்ள இடத்தில் பூசையும் அன்பு உள்ள இடத்தில் தென்பும்.
  • ஆசை உள்ளளவும் அலைச்சலும் உண்டு.
  • ஆசைக்கு இல்லை அளவென்ற எல்லை.
  • ஆசை உறவு ஆகுமா? ஆதரவு சோறு ஆகுமா?
  • ஆசை நோய்க்கு அவிழ்தம் ஏது?.
  • ஆசை எல்லாம் தீர அடித்தான் முறத்தாலே.
  • ஆசைக்காரனுக்கு ரோசம் இல்லை.
  • ஆசைக்காக அக்காளுக்கு தாலி கட்டினானாம். கொஞ்சுவதற்காக கொழுந்தியாளுக்கு தாலி கட்டினானாம்.
  • ஆசைக்கு அளவு இல்லை.
  • ஆசைக்கு ஒரு பெண்ணும் ஆஸ்திக்கு ஒரு பிள்ளையும்.
  • ஆசைக்கு ரோசம் இல்லை.
  • ஆசை கடுக்குது; மானம் தடுக்குது.
  • ஆசை காட்டி மோசம் செய்கிறதா?
  • ஆசை கொண்ட பேருக்கு ரோசம் இல்லை.
  • ஆசைப்பட்டது கிடைக்கவில்லையென்றால் ஆண்பிள்ளை அடுத்த கண்ணும் பாரான்.
  • ஆசை தீர்ந்தால் அல்லல் தீரும்.
  • ஆசைப்பட்ட பண்டம் ஊசிப் போயிற்று.
  • ஆசைப்பட்டு மோசம் போகாதே.
  • ஆசை பெரிதோ? ஆனை பெரிதோ?
  • ஆசை பெருக அலைச்சலும் பெருகும்.
  • ஆசை மருமகன் தலைபோனாலும் ஆதிகாலத்து உரல் போகக் கூடாது.
  • ஆசையினால் அல்லவோ பெண்களுக்கு மீசை முளைப்ப தில்லை?
  • ஆசையும் நாசமும் அடுத்து வரும்.
  • ஆசை ரோசம் அறியாது.
  • ஆசை வெட்கம் அறியுமா?
  • ஆசை வைத்தால் நாசந்தான்.
  • ஆட்காட்டி சொந்தக்காரனையும் திருடனையும் காட்டிக் கொடுக்கும்.
  • ஆட்டு உரம் ஒராண்டு நிற்கும்; மாட்டு உரம் ஆறாண்டு நிற்கும்.
  • ஆட்டுச் சாணம் அவ்வருடம், மாட்டுச் சாணம் மறு வருடம்
  • ஆட்டுக்கடாச் சண்டையிலே நரி அகப்பட்டதுபோல.
  • ஆட்டம் நாலு பந்தி; புறத்தாலே குதிரை.
  • ஆட்டாளுக்கு ஒரு மோட்டாள்; அடைப்பக் கட்டைக்கு ஒரு துடைப்பக் கட்டை.
  • ஆட்டம் போட்ட வீட்டுக்கு விட்டம் ஒரு கேடா?
  • ஆட்டம் எல்லாம் ஆடி ஓய்ந்து நாட்டுப் புறத்துக்கு வந்தான்.
  • ஆட்டத்துக்குத் தகுந்த மேளம்; மேளத்துக்குத் தகுந்த ஆட்டம்.
  • ஆட்காட்டி தெரியாமல் திருடப் போகிறவன் கெட்டிக்காரனோ? அவன் கால் அடிபிடித்துப் போகிறவன் கெட்டிக்காரனோ?
  • ஆட்டு உரம் பயிர் காட்டும்; ஆவாரை நெல் காட்டும்.
  • ஆட்டைக் காட்டி வேங்கை பிடிக்க வேண்டும்.
  • ஆட்டு வெண்ணெய் ஆட்டு மூளைக்கும் காணாது.
  • ஆட்டுக்குட்டி எவ்வளவு துள்ளினாலும் ஆனைஉயரம் வருமா?.
  • ஆட்டுக்கடா பின் வாங்குவது பாய்ச்சலுக்கு அடையாளம்.
  • ஆட்டுக்குட்டிக்கு ஆனை காவு கொடுக்கிறதா?.
  • ஆட்டுக் குட்டி வந்து வேட்டியைத் தின்கிறது; ஓட்டு ஓட்டு.
  • ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து ஆளையே கடித்ததாம்.
  • ஆட்டுக்கு வேகம் பள்ளத்திலே; ஆனைக்கு வேகம் மேட்டிலே.
  • ஆட்டுக்கும் மாட்டுக்கும் இரண்டு கொம்பு; அறிவு இல்லாதவனுக்கு மூன்று கொம்பு.
  • ஆட்டுக்குத் தோற்குமா கிழப்புலி?
  • ஆட்டைத் தூக்கி மாட்டில் போட்டு மாட்டைத் தூக்கி மந்தையில் போடுகிறான்.
  • ஆட்டைத் தேடி அயலார் கையில் கொடுப்பதைவிட வீட்டைக் கட்டி நெருப்பு வைப்பது மேல்.
  • ஆட்டைத் தோளில் போட்டுக் கொண்டு காடெங்கும் தேடினது போல.
  • ஆட்சி புரிய அரண்மனை வாசலிலே பாரக் கழுக்காணி பண்ணிப் புதைத்திருக்கிறது.
  • ஆட்டி அலைத்துக் காசு வாங்கினேன்; செல்லுமோ செல்லாதோ? அதைக் கொண்டு எருமை வாங்கினேன்; ஈனுமோ, ஈனாதோ?
  • ஆடத் தெரியாதவள் கூடம் கோணல் என்றாளாம்.
  • ஆடப் பாடத் தெரியாதவருக்கு இரண்டு பங்கு உண்டு.
  • ஆடப்போன கங்கை அண்டையில் வந்தாற் போல.
  • ஆட மாட்டேன், பாட மாட்டேன், குடம் எடுத்துத் தண்ணீர்க்குப் போவேன்.
  • ஆடவிட்டு நாடகம் பார்ப்பது போல்.
  • ஆடடா சோமாசி, பெண்டாட்டி பாடையில் போய்ப் படுத்தாளாம்.
  • ஆடம்பரம் டம்பம், அபிஷேகம் சூன்யம்.
  • ஆட லோகத்து அமுதத்தை ஈக்கள் மொய்த்துக் கொண்டது போல.
  • ஆடவன் செத்த பின்பு அறுதலிக்கும் புத்தி வந்தது.
  • ஆடாட பூதிக்கு ஆயிரம் சொர்க்கம்.
  • ஆடாச் சாதி ஊடாச் சாதியா?
  • ஆடாதது எல்லாம் ஆடி அவரைக்காயும் பறித்தாச்சு.
  • ஆடாததும் ஆடி ஐயனாருக்குக் காப்பும் அறுத்தாச்சு.
  • ஆடாதே, ஆடாதே, கம்பங்கதிரே; அதற்கா பயந்தாய் சிட்டுக்குருவி?.
  • ஆடிக் காற்றில் அம்மியும் பறக்கும்.
  • ஆடி அமர்ந்தது ஒரு நாழிகையில்.
  • ஆடி அரை மழை.
  • ஆடி ஐந்தில் விதைத்த விதையும் புரட்டாசி பதினைந்தில் நட்ட நடவும் பெரியோர்கள் வைத்த தனம்
  • ஆடி மாதத்தில் நாய் போல.
  • ஆடி அழைக்கும்; தை தள்ளும்.
  • ஆடி அறவெட்டை, அகவிலை நெல் விலை.
  • ஆடி அறவெட்டை, போடி உன் ஆத்தாள் வீட்டுக்கு.
  • ஆடி அவரை தேடிப் போடு.
  • ஆடி அடி அமுங்கினால் கார்த்திகை கமறடிக்கும்.
  • ஆடி அடி பெருகும்; புரட்டாசி பொன் உருகும்.
  • ஆடிச்சீர் தேடி வரும்.
  • ஆடிப் பட்டம் தேடிவிதை
  • ஆடிப் பட்டத்து மழை தேடிப் போனாலும் கிடைக்காது.
  • ஆடி அமாவாசையில் மழை பெய்தால் அரிசி விற்ற விலை நெல் விற்கும்.
  • ஆடிக்கு ஒரு தரம், அமாவாசைக்கு ஒரு தரம்.
  • ஆடி ஆனை வால் ஒத்த கரும்பு, புரட்டாசி பதினைந்தில் விதைத்த வித்து.
  • ஆடி ஒரு குழி அவரை போட்டால் கார்த்திகை ஒரு சட்டி கறி.
  • ஆடி இருந்த இடமும் அகம்படியான் இருந்த இடமும் உருப்படா.
  • ஆடி ஓடி நிலைக்கு வந்தது.
  • ஆடினது ஆலங்காடு; அமர்ந்தது தக்கோலம்; மணக்கோலம் பூண்டது மணவூர்.
  • ஆடி ஓடி நாடியில் அடங்கிற்று.
  • ஆடிச் செவ்வாய் தேடிக் குளி; அரைத்த மஞ்சளைத் தேய்த்துக் குளி.
  • ஆடி மாதத்தில் விதைத்த விதையும் ஐயைந்தில் பிறந்த பிள்ளையும் ஆபத்துக்கு உதவும்.
  • ஆடியில் போடாத விதையும் அறுநான்கில் பிறக்காத பிள்ளையும் பிரயோசனம் இல்லை.
  • ஆடிக் காற்றில் ஆனையும் அசையும் போது கழுதைக்கு என்ன கதி?
  • ஆடிக்கு ஒரு விதை போட்டால் கார்த்திகைக்கு ஒரு காய் காய்க்கும்.
  • ஆடி பிறந்தால் ஆசாரியார்; தை பிறந்தால் தச்சப்பயல்.
  • ஆடிக்குத் தை ஆறு மாசம்.
  • ஆடி விதைப்பு, ஆவணி நடவு.
  • ஆடிக் கீழ்காற்றும் ஐப்பசி மேல்காற்றும் அடித்தால் அவ்வாண்டும் இல்லை, மறு ஆண்டும் இல்லை மழை.
  • ஆடிக் கறக்கிற மாட்டை ஆடிக் கறக்க வேண்டும்; பாடிக் கறக்கிற மாட்டைப் பாடிக் கறக்க வேண்டும்.
  • ஆடி கழிந்த எட்டாம் நாள் கோழி அடித்துக் கும்பிட்டானாம்.
  • ஆடிச் செவ்வாய் நாடிப் பிடித்தால் தேடிய கணவன் ஓடியே வருவான்.
  • ஆடி பிறந்தால் வெல்லப் பானையைத் திற; தை பிறந்தால் உப்புப் பானையைத் திற.
  • ஆடி முதல் பத்து, ஆவணி நடுப்பத்து, புரட்டாசி கடைப்பத்து, ஐப்பசி முழுதும் நடலாகாது.
  • ஆடிய காலும் பாடிய நாவும் சும்மா இரா.
  • ஆடு அடித்தால் அந்தப் பக்கம்; அகப்பை தட்டினால் இந்தப் பக்கம்.
  • ஆடு அடித்தாலும் அன்றைக்குக் காணாது; மாடு அடித்தாலும் மறு நாள் காணாது.
  • ஆடு அப்பூ, ஆவாரை முப்பூ.
  • ஆடு அறியுமோ அங்காடி வாணிபம்?
  • ஆடு அறுபது என்பானாம்; வெள்ளாட்டைக் கண்டால் விலுக்கு விலுக்கு என்பானாம்.
  • ஆடு இருக்கப் புலி இடையனை எடாது.
  • ஆடு இருந்த இடத்தில் அதர் இல்லை; மாடு இருந்த இடத்தில் மயிர் இல்லை.
  • ஆடு இருந்த இடமும் அகம்படியான் இருந்த இடமும் உருப்படா.
  • ஆடு உதவுமா குருக்களே என்றால், கொம்பும் குளம்பும் தவிரச் சமூலமும் ஆகும் என்கிறான்.
  • ஆடு ஊடாடக் காடு விளையாது.
  • ஆடு எடுத்த கள்ளனைப் போல் விழிக்கிறான்.
  • ஆடு ஓடின காடும் அரசன் போன வீதியும் அம்மா வீடு தேடிப் போன பெண்ணும் அடுத்த மாதம் குட்டிச் சுவராம்.
  • ஆடு கடிக்கிறதென்று அறையில் இருப்பாளாம்; அகமுடையான் சம்பாதிக்கப் பேயாய்ப் பறப்பாளாம்.
  • ஆடு கறக்கவும் பூனை குடிக்கவும் சரியாக இருந்தது.
  • ஆடு கொண்டவன் ஆடித் திரிவான்; கோழி கொண்டவன் கூவித் திரிவான்.
  • ஆடு கொண்டு உழுது ஆனை கொண்டு போர் அடித்தாற் போல் இருக்கிறது.
  • ஆடு கொழுக்கக் கொழுக்கக் கோனானுக்குச் சந்தோஷம்.
  • ஆடு கொழுத்தால் என்ன? ஆனை கட்டி வாழ்ந்தால் என்ன?.
  • ஆடு கோழி ஆகாது; மீன் கருவாடு ஆகும்.
  • ஆடு கோனான் இன்றித் தானாய்ப் போகுமா?.
  • ஆடுதன் துருப்புச் சொல்லி ஆர் வாழ்ந்தார் அம்மானை?.
  • ஆடு தழை மேய்ந்தாற் போல.
  • ஆடுதன் ராஜா மாதிரி.
  • ஆடு திருடுகிற கள்ளனுக்கு ஆக்கிப் போடுகிறவள் கள்ளி.
  • ஆடு தின்பாளாம், ஆட்டைக் கண்டால் சீசீ என்பாளாம்.
  • ஆடு நனைகிறதென்று ஓநாய் அழுததாம்.
  • ஆடு நினைத்த இடத்தில் பட்டி போடுகிறதா?.
  • ஆடு பகை, குட்டி உறவா?.
  • ஆடு பிடிக்கக் கரடி அகப்பட்டது போல்.
  • ஆடு போல் சாப்பிட வேண்டும்; ஆனைபோல் குளிக்க வேண்டும்.
  • ஆடு மாடு இல்லாதவன் அடைமழைக்கு ராஜா; பெண்டு பிள்ளை இல்லாதவன் தண்டுக்கு ராஜா.
  • ஆடு மிதியாக் கொல்லையும் ஆளன் இல்லாப் பெண்ணும் வீண்.
  • ஆடு மேய்த்தாற் போலவும் அண்ணனுக்குப் பெண் பார்த்தாற் போலவும்.
  • ஆடு வாங்கப் போனவன் ஆனை விலை கேட்டானாம்.
  • ஆடு வீட்டிலே, ஆட்டுக்குட்டி காட்டிலே.
  • ஆடு வெட்டுகிற இடத்திலே பார்ப்பானுக்கு என்ன வேலை?.
  • ஆடை இல்லாத மனிதன் அரை மனிதன்.
  • ஆடை உடையான் அவைக்கு அஞ்சான்.
  • ஆடை வாய்க்கவும் ஆபரணம் வாய்க்கவும் அதிர்ஷ்டம் வேணும்.
  • ஆடை வாய்ப்பதும் அகமுடையான் வாய்ப்பதும் அவரவர் அதிர்ஷ்டம்.
  • ஆடைக்கும் கோடைக்கும் ஆகாது.
  • ஆடே பயிர், ஆரியமே வேளாண்மை.
  • ஆண் அழகனும் சோறும் அடைவாய் இருந்தால் வீடெல்லாம் பிள்ளை விட்டெறிந்து பேசும்.
  • ஆண் அவலம், பெண் அவலம், ஆக்கி வைத்த சோறும் அவலம்.
  • ஆண்மையற்ற வீரன் ஆயுதத்தைப் பழிப்பான்.
  • ஆண்பிள்ளையை அடித்து வளர்; முருங்கையை ஒடித்து வளர்.
  • ஆண் தாட்சண்யப் பட்டால் கடன்; பெண் தாட்சண்யப் பட்டால் விபசாரம்.
  • ஆண்பிள்ளை அழுதால் போச்சு; பெண்பிள்ளை சிரிச்சால் போச்சு.
  • ஆண் இன்றிப் பெண் இல்லை; பெண் இன்றி ஆண் இல்லை.
  • ஆண் பிள்ளைக்கு அநியாயப்பட்டால் தீரும்; பெண் பிள்ளைக்கு அழுதால் தீரும்.
  • ஆண் உறவும் உறவல்ல; வேலி நிழலும் நிழலல்ல.
  • ஆண் முந்தியோ? பெண் முந்தியோ?
  • ஆண் சிங்கத்தை ஆனை அடுக்குமா?
  • ஆண் பிள்ளைச் சிங்கத்திற்கு யார் நிகர்?
  • ஆண் மூலம் அரசாளும்; பெண் மூலம் நிர்மூலம்.
  • ஆண் பிள்ளைகள் ஆயிரம் ஒத்திருந்தாலும் அக்காளும் தங்கையும் ஒத்திரார்கள்.
  • ஆண் இணலிலே நின்று போ; பெண் இணலிலே இருந்து போ.(யாழ்ப்பாண வழக்கு. இணல் - நிழல்.)
  • ஆண்ட பொருளை அறியாதார் செய் தவம் மாண்ட மரத்துக்கு அணைத்த மண்.
  • ஆண்டவர் தரிசனம் அன்பர் விமோசனம்.
  • ஆண்டவன் ஒருவன் இருக்கிறான்.
  • ஆண்டவன் விட்ட வழி.
  • ஆண்டவன் பலம் இருந்தால் குப்பை ஏறிச் சண்டை போடலாம்.
  • ஆண்டார் அன்னத்தை அதிரப் பிடிக்கவும் போகாது; செட்டியார் எட்டிக் கன்னத்தில் அடிக்கவும் போகாது.
  • ஆண்டார் இருக்கும் வரையில் ஆட்டும் கூத்தும்.
  • ஆண்டாருக்குக் கொடுக்கிறாயோ? சுரைக் குடுக்கைக்குக் கொடுக்கிறாயோ?
  • ஆண்டாருக்கும் பறப்பு; கோயிலுக்கும் சிறப்பு.
  • ஆண்டாரைப் பூதம் அஞ்சும்; மாண்டால் ஒழியப் போகாது.
  • ஆண்டால் அம்மியும் தேயும்.
  • ஆண்டி அடித்தானாம்; கந்தை பறந்ததாம்.
  • ஆண்டி அண்ணாமலை, பாப்பாரப் பஞ்சநதம்.
  • ஆண்டி அன்னத்துக்கு அழுகிறான்; அவன் நாய் அப்பத்துக்கு அழுகிறது.
  • ஆண்டி ஆனைமேல் ஏறிவர நினைத்தது போல.
  • ஆண்டிக்கு அரண்மனை இருந்தால் என்ன? எரிந்தால் என்ன?
  • ஆண்டிக்கு இடுகிறாயோ? சுரைக்குடுக்கைக்கு இடுகிறாயோ?
  • ஆண்டிக்கு அவன் பாடு; தாசனுக்குத் தன் பாடு.
  • ஆண்டிக்கு அம்பாரக் கணக்கு என்ன?
  • ஆண்டிக்கு இடச் சொன்னால் தாசனுக்கு இடச் சொல்வான்.
  • ஆண்டிக்கு இடுகிறதே பாரம்.
  • ஆண்டிக்கு எதற்கு அரிசி விலை?
  • ஆண்டிக்கு எதற்கையா ஆனை?
  • ஆண்டிக்கு எந்த மடம் சொந்தம்?
  • ஆண்டிக்கு என்ன பித்து? கந்தல் பித்து.
  • ஆண்டிக்கு வாய்ப் பேச்சு; அண்ணாவுக்கு அதுவும் இல்லை.
  • ஆண்டிகள் கூடி மடம் கட்டுவதும் நாய் போர்வை வாங்கியதும் போல.
  • ஆண்டி கிடக்கிறான் அறையிலே; அவன் சடை கிடக்கிறது தெருவிலே.
  • ஆண்டி கிடப்பான் அறையிலே; கந்தை கிடக்கும் வெளியிலே.
  • ஆண்டி கிடப்பான் மடத்திலே; சோளி கிடக்கும் தெருவிலே.
  • ஆண்டிச்சி பெற்றது அஞ்சும் குரங்கு.
  • ஆண்டி கையில் அகப்பட்ட குரங்குபோல் அலைதல்.
  • ஆண்டி குண்டியைத் தட்டினால் பறப்பது சாம்பல்.
  • ஆண்டி சங்கை ஏன் ஊதுகிறான்?
  • ஆண்டி செத்தான்; மடம் ஒழிந்தது.
  • ஆண்டி சொன்னால் தாதனுக்குப் புத்தி எங்கே போச்சு?
  • ஆண்டிச்சி பெற்ற அஞ்சும் குரங்கு; பாப்பாத்தி பெற்ற பத்தும் பதர்.
  • ஆண்டி சோற்றுக்கு அழுகிறான்; லிங்கம் பஞ்சாமிர்தத்துக்கு அழுகிறது.
  • ஆண்டி பெற்ற அஞ்சும் அவலம்.
  • ஆண்டி பெற்ற அஞ்சும் குரங்கு; முண்டச்சி பெற்ற மூன்றும் முண்டைகள்.
  • ஆண்டி பெற்ற அஞ்சும் பேய்; பண்டாரம் பெற்ற பத்தும் பாழ்.
  • ஆண்டி மகன் ஆண்டி.
  • ஆண்டி மகன் ஆண்டியானால் நேரம் அறிந்து சங்கு ஊதுவான்.
  • ஆண்டி மடம் கட்டினது போலத்தான்.
  • ஆண்டியும் ஆண்டியும் கட்டிக் கொண்டால் சாம்பலும் சாம்பலும் ஒட்டிக் கொள்ளும்.
  • ஆண்டியும் தாசனும் தோண்டியும் கயிறும்.
  • ஆண்டியே சோற்றுக்கு அலையும் போது லிங்கம் பால் சோற்றுக்கு அழுகிறதாம்.
  • ஆண்டியைக் கண்டால் லிங்கன்; தாசனைக் கண்டால் ரங்கன்.
  • ஆண்டியை அடித்தானாம்; அவன் குடுவையைப் போட்டு உடைத்தானாம்.
  • ஆண்டி வேஷம் போட்டும் அலைச்சல் தீரவில்லை.
  • ஆண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவரோ மாநிலத்தில்.
  • ஆண்டு மறுத்தால் தோட்டியும் கும்பிடான்.
  • ஆண்டு மாறின காரும் அன்று அறுத்த சம்பாவும் ஆளன் கண்ணுக்கு அரிது.
  • ஆண்டைக்கு ஆளைக் காட்டுகிறான்; ஆண்டை பெண்டாட்டிக்கு ஆள் அகப்படுவது இல்லை.
  • ஆண்டை கூலியைக் குறைத்தால் சாம்பான் வேலையைக் குறைப்பான்.
  • ஆண்டைமேல் வந்த கோபத்தைக் கடாவின்மேல் காண்பித்தான்.
  • ஆணவம் அழிவு.
  • ஆணமும் கறியும் அடுக்கோடே வேண்டும்.
  • ஆணன் உறவுண்டானால் மாமி மயிர் மாத்திரம்.
  • ஆணிக்கு இணங்கின பொன்னும் மாமிக்கு இணங்கின பெண்ணும் அருமை.
  • ஆணாய்ப் பிறந்தால் அருமை; பெண்ணாய்ப் பிறந்தால் எருமை.
  • ஆணுக்கு அவகேடு செய்தாலும் பெண்ணுக்குப் பிழை கேடு செய்யாதே.
  • ஆணுக்குப் பெண் அழகு.
  • ஆணுக்குக் கேடு செய்தாலும் பெண்ணுக்குப் பிழை செய்தல் ஆகாது.
  • ஆணுக்குப் பெண் அஸ்தமித்துப் போச்சா?
  • ஆணுக்கு மீசை அழகு; ஆனைக்குத் தந்தம் அழகு.
  • ஆணும் அவலம்; பெண்ணும் பேரவலம்.
  • ஆணை அடித்து வளர்; பெண்ணைப் போற்றி வளர்.
  • ஆணையும் வேண்டாம்; சத்தியமும் வேண்டாம்; துணியைப் போட்டுத் தாண்டு.
  • ஆத்தாடி நீலியடி, ஆயிரம் பேரைக் கொன்றவன்டி.
  • ஆத்தாள் அம்மணம்; அன்றாடம் கோதானம்.
  • ஆத்தாள் என்றால் சும்மா இருப்பான்; அக்காள் என்றால் மீசைமேல் கை போட்டுச் சண்டைக்கு வருவான்.
  • ஆத்தாள் படுகிற பாட்டுக்குள்ளே மகள் மோருக்கு அழுகிறாள்.
  • ஆத்தாள் வீட்டுப் பெருமை அண்ணன் தம்பியோடே சொல்லிக் கொண்டாளாம்.
  • ஆத்தாளும் மகளும் காத்தானுக்கு அடைக்கலம்; அவன் காத்தாலும் காத்தான்; கை விட்டாலும் விட்டான்.
  • ஆத்தாளை அக்காளைப் பேசுகிறதில் கோபம் இல்லை; அகமுடையாளைப் பேசுகிறதற்குத்தான் கோபம் பொங்கிப் பொங்கி வருகிறது.
  • ஆத்தாளோடு போகிறவனுக்கு அக்காள் எது? தங்கச்சி ஏது?
  • ஆத்தி நார் கிழித்தாற்போல் உன்னைக் கிழிக்கிறேன்.
  • ஆத்திரக்காரன் கோத்திரம் அறிவானா?
  • ஆத்திரத்துக்கு அவிசாரி ஆடினால் கோத்திரம் பட்ட பாடுபடுகிறது.
  • ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு.
  • ஆத்திரத்தை அடக்கினாலும் அடக்கலாம்; மூத்திரத்தை அடக்க முடியாது.
  • ஆத்திரப் பட்டவனுக்கு அப்போது இன்பம்.
  • ஆத்திரம் உடையான் தோத்திரம் அறியான்.
  • ஆத்திரம் கழிந்தால் ஆண்டவன் ஏது?
  • ஆத்திரம் கஷ்டத்தைக் கொடுக்கும்.
  • ஆத்திரம் பெரிது; ஆனாலும் புத்தி மிகப் பெரிது.
  • ஆத்தும சுத்தியாகிய நெஞ்சிலக்கணம் தெரியாதவனுக்குப் பஞ்ச லக்ஷணம் தெரிந்து பலன் என்ன?
  • ஆத்துமத் துரோகம் செய்தால் அப்போதே கேட்கும்.
  • ஆத்தூர் பாலூர் அழகான சீட்டஞ்சேரி, அழகு திருவானைக் கோவில் இருந்துண்ணும் விச்சூரு முப்போகம் நிலம் விளைத்தாலும் உப்புக்காகாத காவித்தண்டலம்.
  • ஆத்தூரான் பெண்டாட்டி ஆரோடோ போனாளாம்; சேத்தூரான் தண்டம் அழுதானாம்.
  • ஆத்துரு அரிசியும் வேற்றூர் விரகும் இருந்தால் சாத்தூர் சௌக்கியம்
  • ஆத்தை படுகிற பாட்டுக்குள்ளே மகன் மோருக்கு அழுகிறான்.
  • ஆத்தை வீட்டுச் சொண்டே, மாமியார் வீட்டேயும் வந்தாயோ.
  • ஆத்ம ஸ்துதி ஆறு அத்தியாயம்; பர நிந்தை பன்னிரண்டு அத்தியாயம்.
  • ஆதரவு அற்ற வார்த்தையும் ஆணி கடவாத கை மரமும் பலன் செய்யாது.
  • ஆதரவும் தேவும் ஐந்து வருடத்திலே பலன் ஈயும்.
  • ஆதவன் உதிப்பதே கிழக்கு; அக்கம நாயக்கர் சொல்வதே வழக்கு; அதைக் கேட்டு நடத்தல் மினுக்கு; எதிர்த்துப் பேசினால் தொழுக்கு.
  • ஆதவன் உதிப்பதே கிழக்கு; கணக்கன் எழுதுவதே கணக்கு.
  • ஆதனக் கோட்டைக்கும் செவ்வாய்க் கிழமையாம்.
  • ஆதாயம் இல்லாத செட்டி ஆற்றைக் கட்டி இறைப்பானா?
  • ஆதாயம் உள்ளவரை ஆற்றைக் கட்டி இறைத்து விட்டுப் போகிறான்.
  • ஆதாயமே செலவு; அறை இருப்பதே நிலுவை.
  • ஆதி அந்தம் இல்லா அருமைப் பொருளே கர்த்தன்.
  • ஆதி கருவூர், அடுத்தது. வெஞ்சமாக் கூடலூர்.
  • ஆதி கருவூர், அழும்பப் பயல் வேலூர்.
  • ஆதித்தன் தெற்கு வடக்கு ஆனாலும் சாதித்தொழில் ஒருவரையும் விடாது.
  • ஆதி முற்றினால் வியாதி.
  • ஆதீனக்காரனுக்குச் சாதனம் வேண்டுமா?
  • ஆந்தை சிறிது; கீச்சுப் பெரிது.
  • ஆந்தை விழிக்கிறது போல விழிக்கிறான்.
  • ஆந்தை விழி விழித்தால் அருண்டு போவாரோ?
  • ஆப்பக்காரியிடம் மாவு விலைக்கு வாங்கின மாதிரி.
  • ஆப்பைப் பிடுங்கின குரங்கு நாசம் அடைந்தது போல.
  • ஆபத்தில் அறியலாம் அருமைச் சிநேகிதனை.
  • ஆபத்தில் காத்தவன் ஆட்சியை அடைவான்.
  • ஆபத்தில் காத்தவன் ஆண்டவன் ஆவான்.
  • ஆபத்துக்கு உதவாத நண்பனும் சமயத்துக்கு உதவாத பணமும் ஒன்றுதான்.
  • ஆபத்துக்கு உதவாத பெண்டாட்டியை அழகுக்கா வைத்திருக்கிறது?
  • ஆபத்துக்கு உதவினவனே நண்பன்.
  • ஆபத்துக்கு உதவுவானா அவிசாரி அகமுடையான்.
  • ஆபத்துக்குப் பயந்து ஆற்றில் நீந்தினது போல.
  • ஆபத்துக்குப் பாபம் இல்லை.
  • ஆபத்து சம்பத்து.
  • ஆபத்தும் சம்பத்தும் ஆருக்கும் உண்டு?
  • ஆபஃபுனந்து, ஒருபிடி நாகக் கொழுந்து.
  • ஆபால கோபாலம்.
  • ஆம் என்ற தோஷம், கனத்தது வயிற்றிலே.
  • ஆம் என்றும் ஊம் என்றும் சொல்லக் கூடாது.
  • ஆம் காலம் ஆகும்; போம் காலம் போகும்.
  • ஆம் காலம் எல்லாம் அவிசாரி ஆடிச் சாங்காலம் சங்கரா சங்கரா என்றாளாம்.
  • ஆமணக்கு எண்ணெய் வார்த்துப் புட்டம் கழுவினாற் போல.
  • ஆமணக்கும் பருத்தியும் அடர விதைத்தல் ஆகாது.
  • ஆமணக்கு முத்து ஆணி முத்து ஆகுமா?
  • ஆமணக்கு விதைத்தால் ஆச்சா முளைக்குமா?
  • ஆமை அசையாமல் ஆயிரம் முட்டையிடும்.
  • ஆமை எடுக்கிறது மல்லாத்தி; நாம் அதைச் சொன்னால் பொல்லாப்பு.
  • ஆமைக்குப் பத்து அடி என்றால் நாய்க்கு நாலு அடி.
  • ஆமை கிணற்றிலே, அணில் கொம்பிலே.
  • ஆமை தன் வாயால் கெட்டது போல.
  • ஆமை திடலில் ஏறினாற் போல.
  • ஆமை பிடிப்பார் மல்லாத்துவார்; நாம் அதைச் சொன்னால் பாவம்.
  • ஆமை புகுந்த வீடும் அமீனா புகுந்த விடும் உருப்படா.
  • ஆமை புகுந்த வீடும் வெள்ளைக்காரன் காலடி வைத்த ஊரும் பாழ்.
  • ஆமை மல்லாத்துகிறாற் போல.
  • ஆமையுடனே முயல் முட்டையிடப் போய் கண் பிதுங்கிச் செத்ததாம்.
  • ஆமையைக் கவிழ்த்து அடிப்பார்களோ; மல்லாத்திச் சுடுவார்களோ? நான் சொன்னால் பாவம்.
  • ஆமை வேகமா, முட்டை வேகமா?
  • ஆய்ந்து ஓய்ந்து பாராதான் தான் சாவக் கடவான்.
  • ஆய்ந்து ஓய்ந்து அக்காளிடம் போனால் அக்காள் இழுத்து மாமன்மேல் போட்டாளாம்.
  • ஆய்ச்சல் ஆய்ச்சலாய் மழை பெய்கிறது.
  • ஆய்ந்து பாராதான் காரியந் தான் சாந்துயரந் தரும்.
  • ஆய் பார்த்த கல்யாணம் போய்ப் பார்த்தால் தெரியும்.
  • ஆய் பிச்சை எடுக்கிறான்; பிள்ளை நீதிபதி வேலை பார்க்கிறான்.
  • ஆய உபாயம் அறிந்தவன், அரிது அல்ல வெல்வது.
  • ஆயிரம் அரைக் காசு.
  • ஆயிரக் கல நெல்லுக்கு ஓர் அந்து போதும்.
  • ஆயிரத்தில் ஒருவனே அலங்காரப் புருஷன்.
  • ஆயிரம் ஆனாலும் ஆரணிச் சேலை ஆகாது.
  • ஆயிரத்திலே பிறந்து ஐந்நூற்றிலே கண் விழிக்கிறது.
  • ஆயிரத்திலே பிறந்து ஐந்நூற்றிலே கால் நீட்டினது போல.
  • ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன்.
  • ஆயிரம் பேருக்கு போய் சொல்லி திருமணத்தை நடத்தலாம்.
  • ஆயிரம் அகணியால் கட்டிய வீட்டுக்கு ஆனைப்பலம்.
  • ஆயிரம் ஆனாலும் அவிசாரி சமுசாரி ஆகமாட்டாள்.
  • ஆயிரம் ஆனாலும் பெண் புத்தி பின்புத்தி.
  • ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகாது.
  • ஆயிரம் ஆனாலும் மாயூரம் வெண்ணெய் ஆகுமா?
  • ஆயிரம் இரவுகள் வந்தாலும் அது முதலிரவுக்கு ஈடாகுமா?
  • ஆயிரம் உடையார் அமர்ந்திருப்பார்; துணி பொறுக்கி தோம் தோம் என்று கூத்தாடுவான்.
  • ஆயிரம் உளி வாய்ப்பட்டு ஒரு லிங்கம் ஆக வேணும்.
  • ஆயிரம் உடையான் அமர்ந்திருப்பான்; அரைப்பணம் உடையான் ஆடி விழுவான்.
  • ஆயிரம் எறும்பும் ஆனைப்பலம்.
  • ஆயிரம் கட்டு ஆனைப் பலம்.
  • ஆயிரம் கட்டு அண்டத்தைத் தாங்கும்.
  • ஆயிரம் கப்பியில் நழுவின சுப்பி.
  • ஆயிரம் காக்கைக்கு ஒரு கல்.
  • ஆயிரம் காக்கைக்குள் ஓர் அன்னம் அகப்பட்டது போல.
  • ஆயிரம் காலத்தில் ஆனி அடி அருகும்; தேக்கு நீர் வற்றும்; தேவதாரு பால் வற்றும்.
  • ஆயிரம் காலத்துப் பயிர்.
  • ஆயிரம் காலம் குழலில் இட்டாலும் நாயின் வால் நிமிர்ந்து விடுமா?
  • ஆயிரம் காலே அரைக்காற் பணம்.
  • ஆயிரம் காலே மாகாணி.
  • ஆயிரம் குணத்துக்கு ஒரு லோப குணம் தட்டு.
  • ஆயிரம் குதிரையை அற வெட்டின சிப்பாய்தானா இப்போது பறைச் சேரியில் நாயோடு பங்கம் அழிகிறான்?
  • ஆயிரம் குருடர்கள் சேர்ந்தாலும் சூரியனைப் பார்க்க முடியுமா?
  • ஆயிரம் கொடுத்து ஆனை வாங்கி அங்குசம் வாங்கப் பேரம் பண்ணினானாம்.
  • ஆயிரம் கொடுத்து ஆனை வாங்குகிறோமே, அது பல் விளக்குகிறதா?
  • ஆயிரம் கோவிந்தம் போட்டாலும் அமுது படைக்கிறவனுக்கு அல்லவோ தெரியும் வருத்தம்?
  • ஆயிரம் கோழி தின்ற வரகு போல்.
  • ஆயிரம் செக்கு ஆடினாலும் அந்திக்கு எண்ணெய் இல்லை.
  • ஆயிரம் சொல்லுக்கு அரை எழுத்து.
  • ஆயிரம் சொன்னாலும் அவிசாரி சமுசாரி ஆவாளா?
  • ஆயிரம் தடவை சொல்லி அழுதாச்சு.
  • ஆயிரம் தலை படைத்த ஆதிசேடனாலும் சொல்ல முடியாது.
  • ஆயிரம் நட்சத்திரம் கூடினாலும் ஒரு சந்திரன் ஆகாது.
  • ஆயிரம் நற்குணம் ஒரு லோப குணத்தால் கெடும்.
  • ஆயிரம் நாள் இருந்தாலும் அநியாயச் சாவு.
  • ஆயிரம் பசுக்களில் ஒரு பசு உதைத்துக் கொண்டால் நஷ்டமா?
  • ஆயிரம் பட்டும் அவம் ஆச்சு; கோயிலைக் கட்டியும் குறை ஆச்சு.
  • ஆயிரம் பனை உள்ள அப்பனுக்குப் பிறந்தும் பல்லுக் குத்த ஓர் ஈர்க்கு இல்லை.
  • ஆயிரம் பாட்டுக்கு அடி தெரியும்; நூறு பாட்டுக்கு நுனி தெரியும்.
  • ஆயிரம் பாம்பில் ஒரு தேரை பிழைக்கிறாற் போல.
  • ஆயிரம் பேர் கூடினாலும் ஓர் அந்துப்பூச்சியைக் கொல்லக் கூடாது.
  • ஆயிரம் பேர் இடத்தில் சிநேகம் பண்ணினாலும் ஆண்பிள்ளைகளுக்கென்ன?
  • ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணம் செய்து வை.
  • ஆயிரம் பொய் சொல்லிக் கோயிலைக் கட்டு.
  • ஆயிரம் பொன் பெற்ற குதிரைக்கு அரைப்பனத்தில் சவுக்கு.
  • ஆயிரம் பொன் போட்டு ஆனை வாங்கி அரைப் பணத்து அங்குசத்துக்குப் பால் மாறுகிறதா?
  • ஆயிரம் பொன் பெற்ற குதிரையானாலும் சவுக்கடி வேண்டும்.
  • ஆயிரம் பொன்னுக்கு ஆனை வாங்கினாலும் அரைக் காசுக்குத் தான் சாட்டை வாங்க வேணும்.
  • ஆயிரம் மாகாணி அறுபத்திரண்டரை.
  • ஆயிரம் முடி போட்டாலும் ஆனைப் பலம் வருமா?
  • ஆயிரம் ரூபாய் முதலில்லாமல் பத்து ரூபாய் நஷ்டம்.
  • ஆயிரம் வந்தாலும் அவசரம் ஆகாது.
  • ஆயிரம் வந்தாலும் ஆயத்தொழில் ஆகாது.
  • ஆயிரம் வந்தாலும் கோபம் ஆகாது.
  • ஆயிரம் வருஷம் ஆனாலும் ஆனை மறக்குமா?
  • ஆயிரம் வருஷம் சென்று செத்தாலும் அநீதிச் சாவு ஆகாது.
  • ஆயிரம் வித்தை கற்றாலும் உலகத்தில் ஆடம்பரம் வேண்டும்.
  • ஆயில்யத்தில் மாமியார் ஆசந்தியிலே.
  • ஆயுசுக்கும் வியாதிக்கும் சம்பந்தம் இல்லை.
  • ஆயுசு கெட்டியானால் ஒளடதம் பலிக்கும்.
  • ஆயுசு பூராவாக இருந்தால் மாந்தம் மயிரைப் பிடுங்குமா?
  • ஆயுதப் பரீட்சை அறிந்தவன் ஆயிரத்தில் ஒருவன்.
  • ஆயுதம் இல்லாரை அடிக்கிறதா?
  • ஆயோதன முகத்தில் ஆயுதம் தேடுகிறது போல.
  • ஆர் அடா என் கோவிலிலே ஆண் நாற்றம், பெண் நாற்றம்?
  • ஆர் அடா விட்டது மான்யம்? நானே விட்டுக் கொண்டேன்.
  • ஆர் அற்றுப் போனாலும் நாள் ஆற்றும்.
  • ஆர் ஆக்கினாலும் சோறு ஆகவேணும்.
  • ஆர் ஆத்தாள் செத்தாலும் பொழுது விடிந்தால் தெரியும்.
  • ஆர் ஆர் என்பவர்கள் எல்லாம் தீக்குளிப்பார்களா?
  • ஆர் ஆருக்கு ஆளானேன், ஆகாத உடம்பையும் புண்ணாக்கிக் கொண்டு.
  • ஆர் இட்ட சாபமோ அடி நாளின் தீவினையோ?
  • ஆர் கடன் ஆனாலும் மாரி கடன் ஆகாது.
  • ஆர் கடன் நின்றாலும் மாரி கடன் நிற்காது.
  • ஆர் கடன் பட்டாலும் மாரி கடன் வைக்கக் கூடாது.
  • ஆர் குடியைக் கெடுக்க ஆண்டி வேஷம் போட்டாய்?
  • ஆர் குத்தினாலும் அரிசி ஆவது ஒன்று.
  • ஆர் கெட்டால் என்ன? ஆர் வாழ்ந்தால் என்ன?
  • ஆர் சமைத்தாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்.
  • ஆர் சுட்டாலும் பணியாரம் ஆகவேண்டும்.
  • ஆர்த்தார் எல்லாம் போருக்கு உரியவர் அல்லர்.
  • ஆர் புருஷனை ஆர் கல்யாணம் பண்ணிக் கொள்ள முடியும்?
  • ஆர்மேல் கண்? அனந்திமேல் கண்.
  • ஆர் வாழ்வு ஆருக்கு நின்றது?
  • ஆர் வாழ்வுதான் சதம்?
  • ஆர் வைத்த கொள்ளியோ வீடு பற்றி எரிகிறது.
  • ஆரக் கழுத்தி அரண்மனைக்கு ஆகாது.
  • ஆரணியமான அழகாபுரிக்கு ஒரு கோரணியான குரங்கு வந்து தோன்றிற்று.
  • ஆரம்ப சூரத்தனம்.
  • ஆரல்மேல் பூனை அந்தண்டை பாயுமோ இந்தண்டை பாயுமோ?
  • ஆராகிலும் படி அளந்து விட்டதா?
  • ஆரால் கேடு, வாயால் கேடு.
  • ஆராய்ந்து பாராதவன் காரியம் தான் சாந் துயரம் தரும்.
  • ஆராய்ந்து பாராமுன் தலையிடாதே.
  • ஆராவது என்னைத் தூக்கி மாத்திரம் பிடிப்பார்களானால் நான் பிணக்காடாக வெட்டுவேன் என்று முடவன் கூறியது போல.
  • ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு.
  • ஆருக்கு அழுவேன் அப்பா ஹைதர் அலி.
  • ஆருக்கு ஆகிலும் துரோகம் செய்தால் ஐந்தாறு நாள் பொறுத்துக் கேட்கும்; ஆத்மத் துரோகம் செய்தால் அப்போதே கேட்கும்.
  • ஆருக்கு ஆர் சதம், ஆருக்கு என்று அழுவேனடா ஹைதர் அலி?
  • ஆருக்குப் பிறந்து மோருக்கு அழுகிறாய்?
  • ஆருக்கும் அஞ்சான், ஆர் படைக்கும் தோலான்.
  • ஆருக்கும் பண்ணிய பயிரில் புண்ணியம் தெரியும்.
  • ஆருக்கும் மாட்டாதவன் பெண்டுக்கு மாட்டுவான்.
  • ஆருக்கு வந்ததோ, எவருக்கு வந்ததோ என்று இருக்காதே.
  • ஆருக்கு வந்த விருந்தோ என்று இருந்தால் விருந்தாளி பசி என்னாவது?
  • ஆரும் அகப்படாத தோஷம், மெத்தப் பதிவிரதை.
  • ஆரும் அற்றதே தாரம்; ஊரில் ஒருத்தனே தோழன்.
  • ஆரும் அற்றவருக்குத் தெய்வமே துணை.
  • ஆரும் அறியாத அரிச்சந்திரன் கட்டின தாலி.
  • ஆரும் அறியாமல் கொண்டு கொடுத்தானாம்; காடு மேடெல்லாம் கரி ஆக்கினானாம்.
  • ஆரும், ஆரும் உறவு? தாயும் பிள்ளையும் உறவு.
  • ஆரும் இல்லாத ஊரிலே அசுவமேதம் செய்தான்.
  • ஆரும் இல்லாப் பெண்ணுக்கு அண்டை வீட்டுக்காரன் மாப்பிள்ளை.
  • ஆரே சாரே என்கிறவனுக்குத் தெரியுமா? அக்கினி பார்க்கிறவனுக்குத் தெரியுமா?
  • ஆரை இறுக்கி முகம் பெறுகிறது? பிள்ளையை இறுக்கி முகம் பெறுகிறது.
  • ஆரைக் காது குத்துவது?
  • ஆரைப் பகைத்தாலும் ஊரைப் பகைக்காதே.
  • ஆரை நம்பித் தோழா, ஆற்றுக்கு ஏற்றம் போட்டாய்?
  • ஆரை நம்பினாலும் அரங்கியை நம்பக் கூடாது.
  • ஆரை பற்றிய நஞ்சையும் அறுகு பற்றிய புஞ்சையும்.
  • ஆரோக்கியம் பெரும் பாக்கியம்.
  • ஆரோக்கியமே ஆயுசு விருத்தி.
  • ஆரோ செத்தாள்? எவளோ அழுதாளாம்.
  • ஆரோடு போனாலும் போதோடு வந்துவிடு.
  • ஆல் என்னிற் பூல் என்னுமாறு.
  • ஆல் பழுத்தால் அங்கே கிளி; அரசு பழுத்தால் இங்கே கிளி.
  • ஆல்போல் தழைத்து அறுகுபோல் வேரோடி மூங்கில்போல் சுற்றம் முசியாமல் வாழ்ந்திருப்பீர்.
  • ஆலகால விஷம் போன்றவன் அந்தரம் ஆவான்.
  • ஆலங்காட்டுப் பேய் மாதிரி அலைகிறான்.
  • ஆலசியம் அதிக விஷம்.
  • ஆலம்பாடி அழகு எருது; உழவுக்கு உதவா இழவு எருது.
  • ஆலமரத்துக்கு அறுகம்புல்லின் வேரா?
  • ஆலமரத்தைச் சுற்றி வந்து அடிவயிற்றைத் தொட்டுப் பார்த்தது போல.
  • ஆலமரத்தைப் பிடித்த பேய் அத்தி மரத்தைப் பிடித்ததாம்.
  • ஆலமரத்தை விழுது தாங்குவது போல.
  • ஆலமரம் பழுத்தால் பறவைக்குச் சீட்டு அனுப்புவார்களா?
  • ஆலயத்துக்கு ஓர் ஆனையும் ஆஸ்தானத்துக்கு ஒரு பிள்ளையும்.
  • ஆலயம் அறியாது ஓதிய வேதம்.
  • ஆலயம் இடித்து அன்னதானம் பண்ணப் போகிறான்.
  • ஆலயம் தொழுவது சாலவும் நன்று.
  • ஆலின்மேற் புல்லுருவி.
  • ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும்[ நாலடியார்] இரண்டும்[குறள்] சொல்லுக்குறுதி.
  • ஆலூரு, சாலுரு, அறுதலிப் பாக்கம், முண்டை களத்துாரு; மூதேவி முறப்பாக்கம்.
  • ஆலே பூலே என்று அலம்பிக் கொண்டிருக்கிறது.
  • ஆலை இல்லாத ஊரிலே இலுப்பைப் பூச்சக்கரை.
  • ஆலைக் கரும்பு போலவே நொந்தேன்.
  • ஆலைக் கரும்பும் வேலைத் துரும்பும் போல ஆனேன்.
  • ஆலைக்குள் அகப்பட்ட சோலைக் கரும்பு போல.
  • ஆலை பாதி; அழிம்பு பாதி.
  • ஆலை வாயிலே போன கரும்பு போல்.
  • ஆலை விழுது தாங்கினது போல.
  • ஆவணி அழகன்.
  • ஆவணி அழுகல் தூற்றல்.
  • ஆவணி அவிட்டத்திற்கு அசடியும் சமைப்பாள்.
  • ஆவணி இலை அசையக் காவேரி கரை புரள.
  • ஆவணி தலை வெள்ளமும் ஐப்பசி கடை வெள்ளமும் கெடுதி.
  • ஆவணி பறந்தால் புரட்டாசி வரும்; தாவணி பறந்தால் புடைவையாகி வரும்.
  • ஆவணி மருதாணி அடுக்காய்ப் பற்றும்.
  • ஆவணி மாதம் அழுகைத் துாற்றல்.
  • ஆவணி மாதம் ஐந்தாந் தேதி சிங்க முழக்கம், அவ்வருஷம் மழை.
  • ஆவணி மாதம் தாவணி போட்டவள் புரட்டாசி மாதம் புருஷன் வீடு போனாளாம்.
  • ஆவணியில் அகல நடு; ஐப்பசியில் அனைத்து நடு.
  • ஆவணி முதல் நட்ட பயிர் பூவணி அரசன் புகழ் போலும்.
  • ஆவணியில் நெல் விதைத்தால் ஆனைக் கொம்பு தானாய் விளையும்.
  • ஆவத்தை அடரான் பாவத்தைத் தொடரான்.
  • ஆவதற்கும் அழிவதற்கும் பேச்சே காரணம்.
  • ஆவது அஞ்சிலே தெரியும்; காய்ப்பது பிஞ்சிலே தெரியும்.
  • ஆவதும் பெண்ணாலே; அழிவதும் பெண்ணாலே.
  • ஆவர்க்கும் இல்லை; தேவர்க்கும் இல்லை.
  • ஆவர் மாத்திரம் இருந்தால் என்ன? அன்னம் இறங்கினால் அல்லவோ பிழைப்பான்.
  • ஆவாரை இலையும் ஆபத்துக்கு உதவும்.
  • ஆவாரை பூத்திருக்கச் சாவாரைக் கண்டதுண்டோ?
  • ஆவுடையாரையும் லிங்கத்தையும் ஆறு கொண்டு போகச்சே சுற்றுக் கோயில் சுவாமி எல்லாம் சர்க்கரைப் பொங்கலுக்கு அழுகின்றனவாம்.
  • ஆவுடையார் கோயில் அடங்கலுக்குப் புறத்தி.
  • ஆவும் தென்னையும் ஐந்து வருடத்தில் பலம் தரும்.
  • ஆவும் தென்னையும் அஞ்சு வருஷத்தில் பலன் ஈயும்.
  • ஆவென்று போனபின் அள்ளி இடுவது ஆர்?
  • ஆ வேறு நிறம் ஆனாலும் பால் வேறு நிறம் ஆகுமா?
  • ஆழ்வார் சாதித்தது ஆயிரம்; அம்மையார் சாதித்தது பதினாயிரம்.
  • ஆழ்வாரே போதாதோ? அடியாரும் வேண்டுமோ?
  • ஆழ அமுக்கினாலும் நாழி நானாழி கொள்ளாது.
  • ஆழ உழுதால் ஆட்டுரத்துக்கும் அதிகம்.
  • ஆழமறியாமல் காலை இடாதே.
  • ஆழ உழுதாலும் அடுக்க உழு.
  • ஆழ உழுது அரும் பாடு பட்டாலும் பூமி விளைவது புண்ணியவான்களுக்கே.
  • ஆழங்கால் சேற்றில் அழுந்தியிருக்கிறான்.
  • ஆழப் பொறுத்தாலும் வாழப் பொறுக்க மாட்டார்கள்.
  • ஆழம் அறியாமல் காலை விட்டுக் கொண்டேன்; அண்ணாமலை அப்பா காலை விடு.
  • ஆழம் அறியும் ஓங்கில்; மேளம் அறியும் அரவம்.
  • ஆழாக்கு அரிசி அன்ன தானம்; போய் வருகிற வரைக்கும் புண்ணிய தானம்.
  • ஆழாக்கு அரிசி, மூழாக்குப் பானை, முதலியார் வருகிற வீறாப்பைப் பார்.
  • ஆழாக்கு அரிசி வாங்கி ஐந்து கடை மீனை வாங்கிப் பொல்லாத புருஷனுக்குப் போட நேரம் இல்லை.
  • ஆழி எல்லாம் வயல் ஆனால் என்ன? அவனி எல்லாம் அன்னமயம் ஆனால் என்ன?
  • ஆழி கொண்டாலும் காழி கொள்ளாது.
  • ஆழுக்கும் பாழுக்கும் ஒருவந்துாரான்; கடா வெட்டுக்கு மோகனுராான்.
  • ஆழும் பாழும் அறைக்கீரைப் பாத்தியும்.
  • ஆழும் பாழும் ஆகிறது.
  • ஆள் கொஞ்சமானாலும் ஆயுதம் மிடுக்கு.
  • ஆள் அகப்பட்டால் மிரட்டுகிறதா?
  • ஆள் அண்டிப் பேசாதவனும் செடி அண்டிப் பேளாதவனும் ஒன்று.
  • ஆள் அரை முழம்; கோவணம் முக்கால் முழம்.
  • ஆள் அற்ற பாவம் அழுதாலும் தீராது.
  • ஆள் அறிந்து ஆசனம் போடு; பல் அறிந்து பாக்குப் போடு.
  • ஆள் ஆளும் பண்ணாடி எருது ஆர் மேய்க்கிறது?
  • ஆள் ஆளை இடிக்கும்; ஆள் மிடுக்குப் பத்துப் பேரை இடிக்கும்.
  • ஆள் ஆளைக் குத்தும்; பகரம் பத்துப் பேரைக் குத்தும்.
  • ஆள் ஆனையை மறந்தாலும் ஆனை ஆனை மறக்குமா?
  • ஆள் இருக்கக் குலை சாயுமா?
  • ஆள் இருக்கும் இளக்காரத்தில் ஆவாரையும் பீயை வாரி அடிக்கும்.
  • ஆள் இல்லா ஊருக்கு அழகு பாழ்.
  • ஆள் இல்லாத இடத்தில் அசுவமேத யாகம் பண்ணினது போல.
  • ஆள் இல்லாப் படை அம்பலம்.
  • ஆள் இல்லாப் பத்தினி, இடம் இல்லாப் பத்தினி, ஆளைக் கண்டால் ஈடு இல்லாப் பத்தினி.
  • ஆள் இல்லாமல் அடிக்கடி ஓடுமா?
  • ஆள் இல்லாமல் ஆயுதம் வெட்டுமா?
  • ஆள் இளந்தலை கண்டால் தோணி மிதக்கப் பாயும்.
  • ஆள் இளப்பமாய் இருந்தால் எமனையும் நமனையும் பலகாரம் பண்ணுவான்.
  • ஆள் இளப்பமாய் இருந்தால் எருதும் மச்சான் முறை கொண்டாடும்.
  • ஆள் இளைத்ததைக் கண்டால் ஆவாரையும் பீ வாரி அடிக்கும்.
  • ஆள் உள்ளுக்குள்ளே இருக்கிறான்.
  • ஆள் ஏற நீர் ஏறும்.
  • ஆள் ஏறினால் உலை ஏறும்; உலை ஏறினால் உப்பு ஏறும்.
  • ஆள் கண்ட சமுத்திரம்.
  • ஆள் கண்டு ஏய்க்குமாம் ஆலங்காட்டு நரி.
  • ஆள் காட்டி சொந்தக்காரனையும் திருடனையும் பிடித்துக் கொடுக்கும்.
  • ஆள் காட்டி தெரியாமல் திருடப் போகிறவன் கெட்டிக்காரனா? அவன் காலடி பிடித்துப் போகிறவன் கெட்டிக்காரனா?
  • ஆள் காட்டிய விரலுக்கும் அன்னதானப் பலன்.
  • ஆள் கால், வாய் முக்கால்.
  • ஆள்கிறவளும் பெண்; அழிக்கிறவளும் பெண்.
  • ஆள் கொஞ்சம் ஆகிலும் ஆயுதம் மிடுக்கு.
  • ஆள் பஞ்சையாய் இருந்தாலும் ஆயுதம் திறமாய் இருக்க வேண்டும்.
  • ஆள் பாதி, அலங்காரம் பாதி.
  • ஆள் பாதி, ஆடை பாதி.
  • ஆள் பாதி, ஏர் பாதி.
  • ஆள் பாரம் பூமியிலே.
  • ஆள் போகிறது அதமம்; மகன் போகிறது மத்தியமம்; தான் போகிறது உத்தமம்.
  • ஆள் போனால் சண்டை வருமென்று நாயை விட்டு ஏவின மாதிரி.
  • ஆள் மதத்தால் கீரை; ஆனை மதத்தால் வாழை.
  • ஆள் மெத்தக் கூடினால் மீன் மெத்தப் பிடிக்கலாம்.
  • ஆள் மறந்தாலும் ஆனை மறக்காது.
  • ஆள் ஜம்பமே தவிர வேலை ஜம்பம் கிடையாது.
  • ஆளனில்லாத மங்கைக்கு அழகு பாழ்.
  • ஆளத் தெரியாத அண்ணாக்கள்ளன் ஒரு குழம்பு வைக்கத் தெரியவில்லை என்றானாம்.
  • ஆள மாட்டாதவனுக்குப் பெண்டாட்டி ஏன்?
  • ஆளவந்தாரும் உடையவரும் சேர்ந்தால் வைகுண்டத்துக்குப் படி கட்டியிருப்பார்கள்.
  • ஆளன் இல்லாத துக்கம் அழுதாலும் தீராது.
  • ஆளன் இல்லாத மங்கைக்கு அழகு பாழ்.
  • ஆளன் இல்லாதவள் ஆற்று மணலுக்குச் சரி.
  • ஆளன் உறவு உண்டானால் மாமி மயிர் மாத்திரம்.
  • ஆளனைப் பிரிந்திருத்தல் அரிவையர்க்கு அழகன்று.
  • ஆளான ஆள் புகுந்தால் ஆமணக்கு விளக்கெண்ணெய் ஆகும்.
  • ஆளான ஆளுக்கு அவிழ் அகப்படாக் காலத்திலே காக்காய்ப் பிசாசு கஞ்சிக்கு அழுகிறது.
  • ஆளில் கட்டை அரண்மனைக்கு உதவான்.
  • ஆளிலும் ஆள் அம்மாப் பேட்டை ஆள்.
  • ஆளுக்கு ஆள் வித்தியாசம்.
  • ஆளுக்கு ஒத்த ஆசாரமும் ஊருக்கு ஒத்த உபசாரமும்.
  • ஆளுக்கு ஒரு குட்டு வைத்தால் அடியேன் தலை மொட்டை.
  • ஆளுக்கு ஒரு குட்டுக் குட்டினாலும் அவனுக்குப் புத்தி வராது.
  • ஆளுக்கு ஒரு மயிர் பிடுங்கினால் அடியேன் தலை மொட்டை.
  • ஆளுக்குக் கீரைத்தண்டு; ஆனைக்கு வாழைத்தண்டு.
  • ஆளுக்குத் தக்கபடி வேஷம் போடுதல்.
  • ஆளுக்குத் தகுந்த சொட்டுக் கொடுக்கிறது.
  • ஆளுக்குத் துக்குணி ஆள் பாரம்.
  • ஆளுக்குள்ளே ஆளாய் இருப்பான்.
  • ஆளும் அம்பும்.
  • ஆளும் கோளும் படைத்தவனை வேலும் கோலும் என்ன செய்யும்?
  • ஆளை அடித்தால் அரைப்பணம்.
  • ஆளை அறிந்து தாண்டுகிறதா?
  • ஆளை அறிந்துதான் அறுக்கிறான்.
  • ஆளை ஆள் அறிய வேண்டும்; மீனைப் புளியங்காய் அறிய வேண்டும்.
  • ஆளை ஆள் குத்தும்; ஆள் மிடுக்குப் பத்துப் பேரைக் குத்தும்.
  • ஆளை ஏய்க்குமாம் நரி: அதனை ஏய்க்குமாம் ஒற்றைக்கால் நண்டு.
  • ஆளைக் கண்டால் ஆறு மணி; ஆளைக் காணா விட்டால் மூன்று மணி.
  • ஆளைக் கண்டு ஏமாற்றுமாம் ஆலங்காட்டுப் பேய்.
  • ஆளைக் கண்டு மலைக்காதே; ஊது காமாலை.
  • ஆளைச் சுற்றிப் பாராமல் அளக்கிறதா?
  • ஆளைச் சுற்றிப் பாராமல் அழுகிறாள் ஒரு காலே.
  • ஆளைச் சேர்த்தாயோ? அடிமையைச் சேர்த்தாயோ?
  • ஆளை நீட்டிப் போடு.
  • ஆளைப் பார் சோளக்காட்டிலே.
  • ஆளைப் பார், சோளக் கொல்லைப் பொம்மை மாதிரி.
  • ஆளைப் பார்த்தால் அழகுதான்; ஏரில் கட்டினால் குழவுதான்.
  • ஆளைப் பார்த்தால் அழகுபோல; வேலையைப் பார்த்தால் குழவு போல.
  • ஆளைப் பார்த்தால் அழகு மலை; வேலையைப் பார்த்தால் குழவு மலை.
  • ஆளைப் பார்த்தான்; தலையில் அடித்தான்.
  • ஆளைப் பார்த்தான் வாயால் ஏய்த்தான்.
  • ஆளைப் பார்த்து ஆசனம் போடுவான்.
  • ஆளைப் பார்த்துக் கூலி கேட்கிறது; அவனைப் பார்த்துப் பெண்டு கேட்கிறது.
  • ஆளைப் பார்த்து மலைக்காதே; ஊது கணை.
  • ஆளைப் பார்; முகத்தைப் பார்.
  • ஆற்றங்கரை மரம் விழும்.
  • ஆற்க்காட்டு நவாபு என்றாலும் அரைக்காசுக்குப் பயன் இல்லை.
  • ஆற்றித் தூற்றி அம்பலத்திலே வைக்கப் பார்க்கிறான்.
  • ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு.
  • ஆற்றங்கரையில் தண்ணீர்; அடுப்பங்கரையில் வெந்நீர்.
  • ஆற்றப் புழுதி ஈரம் தாங்கும்.
  • ஆற்றாக் குலைப் பொல்லாப்பு அடித்துக் கொள்ளுகிறான்.
  • ஆற்றில் இருந்து அரகராப் பாடினாலும் சோற்றில் இருக்கிறான் சொக்கப்பன்.
  • ஆற்றில் கரைத்த புளியும் அங்காடிக்கு இட்ட பதரும் ஆயிற்று.
  • ஆற்றில் கரைத்த பெருங்காயம் போல்.
  • ஆற்றில் கரைத்த மஞ்சள்.
  • ஆற்றில் நிறையத் தண்ணீர் போனாலும் அள்ளிக் குடிக்கப் போகிறதா நாய்?
  • ஆற்றில் நிறையத் தண்ணீர் போனாலும் நாய் நக்கித்தான் குடிக்கும்.
  • ஆற்றில் பெரு வெள்ளம் நாய்க்கு என்ன? சளப்புத் தண்ணீர்.
  • ஆற்றிலே ஆயிரம் காணி தானம் பண்ணினாற் போலே.
  • ஆற்றிலே இறங்கினால் ஐம்பத்தெட்டுத் தொல்லையாம்.
  • ஆற்றிலே ஊறுகிறது, மணலிலே சுவருகிறது.
  • ஆற்றிலே ஒரு கால்; சேற்றிலே ஒரு கால்.
  • ஆற்றிலே கணுக்கால் தண்ணீரிலும் அஞ்சி நடக்க வேண்டும்.
  • ஆற்றிலே போகிற தண்ணீரை அப்பா குடி, ஐயா குடி.
  • ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு; குப்பையிலே போட்டாலும் குறிப்பேட்டில் பதிந்து போடு.
  • ஆற்றிலே போட்டுக் குளத்திலே தேடுவது போல.
  • ஆற்றிலே போனாலும் போவேனே அன்றித் தெப்பக்காரனுக்குக் காசு கொடுக்க மாட்டேன் என்றானாம்.
  • ஆற்றிலே வந்தது மடுவிலே போயிற்று.
  • ஆற்றிலே வருகிறது, மணலிலே சொருகுகிறது.
  • ஆற்றிலே விட்ட தர்ப்பை போல் தவிக்கிறேன்.
  • ஆற்றிலே விட்ட தெப்பத்தைப் போலத் தவிக்கிறேன்.
  • ஆற்றிலே விளைகிறது மணலிலே சிதறுகிறது.
  • ஆற்றிலே வெள்ளம் போனால் அதற்கு மேலே தோணி போகும்.
  • ஆற்றிலே வெள்ளம் வந்தால் ஆனை தடுக்குமா?
  • ஆற்று அருகில் இருந்த மரமும் அரசு அறிந்த வாழ்வும் நிலை அல்ல.
  • ஆற்றுக்கு அருகில் குடியிருந்த கதை.
  • ஆற்றுக்கு ஒரு நாணல்; நாட்டுக்கு ஒரு பூணல்.
  • ஆற்றுக்குச் செய்து அபத்தம்; கோயிலுக்குச் செய்து குற்றம்.
  • ஆற்றுக்கு நெட்டையும் சோற்றுக்குக் குட்டையும் வாசி.
  • ஆற்றுக்குப் பார்ப்பான் துணையா? சோற்றுக்குப் பயற்றங்காய் துணையா?
  • ஆற்றுக்குப் போகிறதும் இல்லை; அழகரைக் கும்பிடுகிறதும் இல்லை.
  • ஆற்றுக்குப் போவானேன்? செருப்பைக் கழற்றுவானேன்?
  • ஆற்றுக்குப் போன ஆசாரப் பாப்பாத்தி துலுக்கச்சி மேலே துள்ளி விழுந்தாளாம்.
  • ஆற்றுக்கும் பயம்; காற்றுக்கும் பயம்.
  • ஆற்றுக்கு மிஞ்சி அரகராப் போட்டாலும் சோற்றுக்கு மிஞ்சித் சொக்கேசன்.
  • ஆற்றுக்குள்ளே போய் அரகரா சிவசிவா என்றாலும் சோற்றுக்குள்ளே இருக்கிறானாம் சொக்கலிங்கம்.
  • ஆற்றுதே, என்னைத் தேற்றுதே, அம்பலத்திலே என்னை ஏற்றுதே என்றான்.
  • ஆற்றுநீர் ஊற்றி அலசிக் கழுவினாலும் வேற்று நீர் வேற்று நீர் தான்.
  • ஆற்று நீர் பித்தம் போக்கும்; குளத்து நீர் வாதம் போக்கும்; சோற்று நீர் எல்லாம் போக்கும்.
  • ஆற்று நீர் வடிந்த பின் ஆற்றைக் கடக்க நினைத்தானாம்.
  • ஆற்று நீரில் அலசிக் கழுவினாலும் அலை.
  • ஆற்று நீரை நாய் நக்கிக் குடிக்குமோ? எடுத்துக் குடிக்குமோ?
  • ஆற்றுப் பெருக்கும் அரச வாழ்வும் அரை நாழிகை.
  • ஆற்று மண்ணுக்கு வேற்று மண் உரம்.
  • ஆற்று மணலிலே தினம் புரண்டாலும் ஒட்டுகிறதுதான் ஒட்டும்.
  • ஆற்று மணலை அரைத்துக் கரைத்தாலும் வேற்று முகம் வேற்று முகந்தான்.
  • ஆற்று மணலை அளவிடக் கூடாது.
  • ஆற்று மணலை எண்ணினாலும் எண்ணலாம்; அருச்சுனன் மனைவியரை எண்ண முடியாது.
  • ஆற்று மணலையும் ஆகாசத்து நட்சத்திரத்தையும் அளவிடப்படுமோ?
  • ஆற்று வண்டல் தேற்றும் பயிரை.
  • ஆற்றுவார் இல்லாத துக்கம் நாளடைவில் ஆறும்.
  • ஆற்றுவாரும் இல்லை; தேற்றுவாரும் இல்லை.
  • ஆற்று வெள்ளம் ஆனையை என்ன செய்யும்?
  • ஆற்றுார் அரிசியும் வேற்றூர் விறகும் இருந்தால் சாத்தூர் செளக்கியம்.
  • ஆற்றுார் சேற்றுார் ஆற்றுக்கு அடுத்த ஊர், ஆறுமுக மங்கலம் ஆர் ஒருவர் போனாலும் சோறு கொண்டு போங்கள் சொன்னேன், சொன்னேன்.
  • ஆற்றை அடைக்கும் அதிவிடையம்.
  • ஆற்றைக் கட்டிச் செட்டியார் இறைத்தால் சும்மாவா இறைப்பார்?
  • ஆற்றைக் கடக்க ஒருவன் உண்டானால் அவனைக் கடக்கவும் ஒருவன் உண்டு.
  • ஆற்றைக் கடக்கும்வரையில் அண்ணன் தம்பி; அப்புறம் நீ ஆர்? நான் ஆர்?
  • ஆற்றைக் கடத்தி விடு; ஆகாசத்தில் பறக்கக் குளிகை தருகிறேன் என்கிறான் மந்திரவாதி.
  • ஆற்றைக் கடந்தால் ஓடக்காரனுக்கு ஒரு சொட்டு.
  • ஆற்றைக் கண்டாயோ? அழகரைச் சேவித்தாயோ?
  • ஆற்றைக் காணாத கண்களும் அழகரை வணங்காத கைகளும் இருந்தும் பயன் இல்லாதவை.
  • ஆற்றைக் கெடுக்கும் நாணல்; ஊற்றைக் கெடுக்கும் பூணுால்.
  • ஆற்றைத் தாண்டியல்லவோ கரை ஏறவேண்டும்?
  • ஆற்றோடு போகிற பிள்ளையில் பெண்ணுக்கு ஓர் அகமுடையான் கருப்பாகப் போச்சோ?
  • ஆற்றோடு போகிறவன் நல்ல வேலைக்காரன்.
  • ஆற்றோடு போனாலும் ஆற்றூரோடே போகாதே.
  • ஆற்றோடு போனாலும் கூட்டோடு போகாதே.
  • ஆற்றோடு போனாலும் தெப்பக்காரனுக்குக் காசு தர மாட்டேன்.
  • ஆற்றோடு போனாலும் போவான் செட்டி; தோணிக்காரனுக்கு அரைக்காசு கொடுக்கமாட்டான்.
  • ஆற்றோடு வந்த நீர் மோரோடு வந்தது.
  • ஆறாம் குழந்தை பெண்ணாகப் பிறந்தால் ஆனான குடித்தனமும் நீறாய் விடும்.
  • ஆறாம் திருநாள் ஆனை வாகனம்.
  • ஆறாம் மாசம் அரைக் கல்யாணம்.
  • ஆறா மீனின் ஓட்டம்.
  • ஆறாவது பிள்ளை ஆனை கட்டி வாழ்வான்.
  • ஆறாவது பிள்ளை பிறந்தால் ஆனை கட்டி வாழலாம்.
  • ஆறிலுஞ் சாவு நூறிலுஞ் சாவு.
  • ஆறின கஞ்சி பழங் கஞ்சி.
  • ஆறிலே செத்தால் அறியா வயசு; நூறிலே செத்தால் நொந்த வயசு.
  • ஆறின சோறு ஆளனுக்கு மிஞ்சும்.
  • ஆறின சோறு பழஞ் சோறு.
  • ஆறின புண்ணிலும் அசடு நிற்கும்.
  • ஆறினால் அச்சிலே வார்; ஆறாவிட்டால் மிடாவிலே வார்.
  • ஆறு அல்ல, நூறு அல்ல, ஆகிறது ஆகட்டும்.
  • ஆறு கடக்கிறவரையில் அண்ணன் தம்பி, ஆறு கடந்தால் நீ யார் நான் யார்?
  • ஆறு இல்லா ஊருக்கு அழகு பாழ்.
  • ஆறு இல்லா ஊருக்குக் கேணியே கங்கை.
  • ஆறு எல்லாம் கண்ணீர்; அடி எல்லாம் செங்குருதி.
  • ஆறு எல்லாம் பாலாய் ஓடினாலும் நாய் நக்கித்தானே குடிக்கும்?
  • ஆறுக்கு இரண்டு பழுதில்லை.
  • ஆறு கடக்கைக்குப் பற்றின தெப்பம் போகவிடுமாப் போலே.
  • ஆறு கல்யாணம்; மூன்று பெண்கள்; மார்போடே மார்பு இடிபடுகிறது.
  • ஆறு காதம் என்கிறபோது கோவணத்தை அவிழ்ப்பானேன்?
  • ஆறுகெட நாணல் இடு, ஊரு கெட நூலை விடு.
  • ஆறு காதம் என்ன, அவிழ்த்துக் கொண்டானாம் அரைத்துணியை.
  • ஆறு போவதே போக்கு அரசன் சொல்வதே தீர்ப்பு.
  • ஆறு காதம் என்கிற போதே கோவனம் கட்டினானாம்.
  • ஆறு கெட நாணல் இடு; ஊறு கெடப் பூணூல் இடு; காடு கெட ஆடு விடு; மூன்றும் கெட முதலையை விடு.
  • ஆறு கெடுத்தது பாதி; தூறு கெடுத்தது பாதி.
  • ஆறு கொத்து, நூறு இறைப்பு; ஆறு சீப்பு, நூறு காய்.
  • ஆறு கொத்து, நூறு தண்ணீர்.
  • ஆறு கோணலாய் இருந்தாலும் நீரும் கோணலோ? மாடு கோணலாய் இருந்தாலும் பாலும் கோணலோ?
  • ஆறு நாள் நூறு உழவிலும் நூறு நாள் ஆறு உழவு மேல்.
  • ஆறு நிறையத் தண்ணீர் போனாலும் அள்ளிக் குடிக்கப் போகிறதா நாய்?
  • ஆறு நிறையத் தண்ணீர் போனாலும் பாய்கிறது கொஞ்சம், சாய்கிறது கொஞ்சம்.
  • ஆறு நீந்தின எனக்குக் குளம் நீந்துவது அரிதோ?
  • ஆறு நீந்தினவனுக்கு வாய்க்கால் எவ்வளவு?
  • ஆறு நூறு ஆகும்; நூறும் ஆறு ஆகும்.
  • ஆறு நேராய்ப் போகாது.
  • ஆறு நேரான ஊர் நில்லாது.
  • ஆறு நேரான ஊரும், அரசனோடு எதிர்த்த குடியும், புருஷனோடு ஏறு மாறான பெண்டிரும் நீறு நீறு ஆகிவிடும்.
  • ஆறு பாதிக் குரங்கே, மரத்தை விட்டு இறங்கே.
  • ஆறு பார்த்து வந்தாலும் நாய் நக்கிக் குடிக்கும்.
  • ஆறு பார்க்கப் போக ஆய்க்குப் பிடித்தது சளிப்பு.
  • ஆறு பார்ப்பானுக்கு இரண்டு கண்.
  • ஆறு பிள்ளை அழிவுக்கு லட்சணம்.
  • ஆறு பிள்ளை பெற்றவளுக்குத் தலைச்சன் பிள்ளைக்காரி மருத்துவமாம்.
  • ஆறு போவதே கிழக்கு; அரசன் செல்வதே வழக்கு.
  • ஆறும் கடன்; நூறும் கடன், பெரிசாச் சுடடா பணியாரத்தை.
  • ஆறும் கருவில் அமைத்தபடி.
  • ஆறும் நாலும் பத்து; நாலும் ஆறும் பத்து.
  • ஆறு மாசப் பயணம் அஞ்சி நடந்தால் முடியுமா?
  • ஆறு மாசம் பழுத்தாலும் விளா மரத்தில் வௌவால் சேராது.
  • ஆறு மாதத்துக்குச் சனியன் பிடித்தாற் போல.
  • ஆறு மாதத்துக்கு வட்டி இல்லை; அப்புறம் முதலே இல்லை.
  • ஆறு மாதம் வீட்டிலே; ஆறு மாதம் காட்டிலே.
  • ஆறுமுக மங்கலத்துக்கு ஆர் போனாலும் சோறு உண்டு போங்கள், சொன்னேன்; சொன்னேன்.
  • ஆறு வடியும் போது கொல்லும்; பஞ்சம் தெளியும் போது கொல்லும்.
  • ஆறு வடிவிலேயும் கருப்புத் தெளிவிலேயும் வருத்தும்.
  • ஆன காரியத்துக்கு மேளம் என்ன? தாளம் என்ன?
  • ஆன குலத்தில் பிறந்து ஆட்டை மாட்டை மேய்க்காமல் ஓலைவாரியாய்ப் போனானே!
  • ஆனதுக்கு ஓர் ஆகாதது; ஆகாததற்கு ஓர் ஆனது.
  • ஆனது அல்லாமல் ஆவதும் அறிவமோ?
  • ஆன தெய்வத்தை ஆறு கொண்டு போகிறது; அனுமந்தராயனுக்குத் தெப்பத் திருவிழாவா?
  • ஆனந்த தாண்டவபுரத்தில் எல்லோரும் அயோக்கியர்கள், உங்களைத் தவிர.
  • ஆனந்த பாஷ்பத்துக்கு அரைப்பலம் மிளகு.
  • ஆனமட்டும் ஆதாளி அடித்துப் போட்டு ஆந்தை போல் விழிக்கிறான்.
  • ஆன மாட்டை விற்றவனும் அறுகங் காட்டைத் தொட்டவனும் கெட்டான்.
  • ஆன முதலை அழிப்பவன் மானம் இழப்பது அரிதல்ல.
  • ஆனா ஆதிவாரம் ஆகாவிட்டால் சோமவாரம்
  • ஆனவன் ஆகாதவன் எல்லாவற்றிலும் உண்டு.
  • ஆனாங் கோத்திரத்துக்கு ஏனாந் தர்ப்பயாமி.
  • ஆனால் ஆதி வாரம்; ஆகாவிட்டால் சோம வாரம்.
  • ஆனால் அச்சிலே வார்; ஆகா விட்டால் மிடாவிலே வார்.
  • ஆனால் தெரியாதா? அழுகைக் குரல் கேட்காதா?
  • ஆனால் பிரம்ம ரிஷி; ஆகாவிட்டால் ரோம ரிஷி.
  • ஆனால் விட்டு அடுப்பு எரியும்; போனால் விட்டுப் புத்தி வரும்.
  • ஆனான ஆளெல்லாம் தானானம் போடுகிறபோது, கோணல் கொம்பு மாடு கொம்பைக் கொம்பை அலைக்கிறது.
  • ஆனானப்பட்ட சாமி எல்லாம் ஆடிக் காற்றில் பறக்குது; அனுமந்தப் பெருமாளுக்குத் தெப்பத் திருநாளாம்.
  • ஆனானப் பட்டவர்கள் எல்லாம் தானானம் அடிக்கறச்சே அழுகற் பூசணிக்காய் தெப்பம் போடுகிறதே!
  • ஆனி அடி எடார்; கூனி குடி புகார்.
  • ஆனி அடை சாரல், ஆவணி முச்சாரல், ஆடி அதி சாரல்.
  • ஆனி அரணை வால் பட்ட கரும்பு, ஆனை வால் ஒத்தது.
  • ஆனி அரை ஆறு; ஆவணி முழு ஆறு.
  • ஆனி அறவட்டை, போடி உங்கள் ஆத்தாள் வீட்டுக்கு.
  • ஆனி ஆவணியில் கிழக்கு வில் பூண்டால் பஞ்சம் உண்டு.
  • ஆனி ஆனை வால் ஒத்த கரும்பு.
  • ஆனித் தூக்கம்.
  • ஆனி மாதம் போடுகிற பூசணியும் ஐயைந்து வயசிற் பிறந்த பிள்ளையும் ஆபத்துக்கு உதவும்.
  • ஆனி முற்சாரல்; ஆடி அடைசாரல்.
  • ஆனியில் அடி கோலாதே; கூனியில் குடி போகாதே.
  • ஆனியும் கூனியும் ஆகா.
  • ஆனை அசைந்து உண்ணும்.
  • ஆனை அசைந்து தின்னும்; வீடு அசையாமல் தின்னும்.
  • ஆனை அசைந்து வரும்; அடி பெயர்ந்து வரும்.
  • ஆனை கறுத்தால் ஆயிரம் பொன்.
  • ஆனைக்கு ஒரு காலம் பூனைக்கு ஒரு காலம்.
  • ஆனைக்கும் அடிசறுக்கும்.
  • ஆனை படுத்தால் ஆள் மட்டம்.
  • ஆனை வரும் பின்னே. மணி ஓசை வரும் முன்னே.
  • ஆனை அசைந்து வரும்; அடி மேகம் சுற்றி வரும்.
  • ஆனை அசைந்து வரும்; பூனை பாய்ந்து வரும்.
  • ஆனை அசைந்து வாங்கும், வீடு அசையாமல் வாங்கும்.
  • ஆனை அடம் பிடிக்கிறது போல.
  • ஆனை அடம் வைத்தாற்போல் அமர அமரப் பதித்த வைத்திருக்கிறார்.
  • ஆனை அடமும் பூனைப் பாய்ச்சலும்.
  • ஆனை அடியில் அடங்கா அடி இல்லை.
  • ஆனை அடியும் சரி, குதிரை குண்டோட்டமும் சரி.
  • ஆனை அத்தனை தீப்போட்டாலும் பானை அடியிலேதான்.
  • ஆனை அம்பலம் ஏறும்; ஆட்டுக்குட்டி அம்பலம் ஏறுமா?
  • ஆனை அயர்ந்தாலும் பூனை அயராது.
  • ஆனை அரசன் கோட்டையைக் காக்கும்; பூனை எலிவளையைக்காக்கும்.
  • ஆனை அரசு செய்த காட்டிலே பூனை அரசு செய்வது போல.
  • ஆனை அரைக் காசுக்குக் கிடைத்தாலும் வேண்டாம்.
  • ஆனை அழிகுட்டி போட்டாற் போல.
  • ஆனை அழிப்பது தெரிய வில்லையாம்; ஆடுஅழிப்பது தெரிகிறதாம்.
  • ஆனை அழுக்கு அலம்பினால் தெரியும்.
  • ஆனை அழுதால் பாகன் பழியா?
  • ஆனை அறிந்து அறிந்தும் பாகனையே கொல்லும்.
  • ஆனை அறிவு பூனைக்கு ஏது?
  • ஆனை ஆங்காரம் அடி பேரு மட்டும்.
  • ஆனை ஆசார வாசலைக் காக்கும்; பூனை புழுத்த மீனைக் காக்கும்.
  • ஆனை ஆயிரம் கேட்டாலும் கொடுப்பானே கர்ணப்பிரபு.
  • ஆனை ஆயிரம் பெற்றால் அடியும் ஆயிரம் பெறுமா?
  • ஆனை ஆனை என்றால் தந்தம் கொடுக்குமா?
  • ஆனை இருக்கும் இடத்தைக் காட்ட வேண்டாம்.
  • ஆனை இருந்த இடமும் அரசன் இருந்த இடமும் ஒரு நாளும் பொய்யாகா.
  • ஆனை இருந்தால் சேனைக்குப் பலம்.
  • ஆனை இருந்தாலும் ஆயிரம் பொன்; இறந்தாலும் ஆயிரம் பொன்.
  • ஆனை இருந்து அரசாண்ட இடத்தில் பூனை இருந்து புலம்பி அழுகிறது.
  • ஆனை இல்லாத ஊர்வலம் பருப்பு இல்லாத கல்யாணம்.
  • ஆனை இல்லாத ஊர்வலம் மாதிரி.
  • ஆனை இளைத்தால் ஆடு ஆகுமா?
  • ஆனை இளைத்தால் எவ்வளவு இளைக்கும்?
  • ஆனை உயரம் பூனை ஆகுமா?
  • ஆனை உண்ட விளாங்கனி போல.
  • ஆனை உறங்குவதும் ஆட்டுக்கிடா பிந்துவதும்.
  • ஆனை ஊர்வலத்தில் அடைபட்டதாம் காவேரி.
  • ஆனை ஊற்றுக்குக் கொசு எம்மட்டோ?
  • ஆனை எதிர்த்து வந்தாலும் ஆனைக்காவில் நுழையாதே.
  • ஆனை எவ்வளவு பெரிதானாலும் அங்குசக் குச்சிக்கு அடக்கந்தானே?
  • ஆனை ஏற அங்குசம் இல்லாமல் முடியுமா?
  • ஆனை ஏற ஆசை; தாண்டி ஏறச் சீவன் இல்லை.
  • ஆனை ஏறிச் சந்தின் வழியாக நுழைவானேன்?
  • ஆனை ஏறித் திட்டிவாசலில் நுழைவதுபோல.
  • ஆனை ஏறி விழுந்தவனைக் கடா ஏறி மிதித்தாற்போல.
  • ஆனை ஏறினால் மாவுத்தன்; குதிரை ஏறினால் ராவுத்தன்.
  • ஆனை ஏறினால் வானம் எட்டுமோ?
  • ஆனை ஏறினாலும் அம்பலத்தில் இறங்கத்தான் வேண்டும்.
  • ஆனை ஏறும் பெரும்பறையன் ஆரூரில் இருப்பான்.
  • ஆனை ஒட்டினாலும் மாமி ஒட்டான்.
  • ஆனை ஒரு குட்டி போட்டும் பலன்; பன்றி பல குட்டி போட்டும் பலன் இல்லை.
  • ஆனை ஒரு குட்டி போடுவதும் பன்றி பல குட்டி போடுவதும் சரி ஆகுமா?
  • ஆனைக்கண் ஐசுவரியம்.
  • ஆனைக் கண்ணிலே மோதிரம் பண்ணி வானக் கண்ணி போட்டாளாம்.
  • ஆனைக்கண் விழுந்த பலாக்காய் போல.
  • ஆனைக் கவடும் பூனைத் திருடும்.
  • ஆனைக் கறுப்பைக் கண்ட அட்டை, எனக்கு என்ன குறைச்சல் என்று சொல்லிக் கொண்டதாம்.
  • ஆனைக் கன்றும் வளநாடும் கொண்டு வந்தானோ?
  • ஆனைக்காரன் ஆனைக்குத் தன் வீட்டைக் காண்பித்துக் கொடாதது போல.
  • ஆனைக்காரன் பெண் அடைப்பைக்காரனுக்கு வாழ்க்கைப் பட்டாளாம்.
  • ஆனைக்காரன் பெண்டாட்டி பூனைக்குட்டியைப் பெற்றாளாம்.
  • ஆனைக்காரன் மனைவி ஆண் பிள்ளை பெற்றால் காச்சு மூச்சென்றிருக்கும்.
  • ஆனைக்காரனுக்கு ஆனையாலே சாவு.
  • ஆனைக்கால்காரன் மிதித்து விடுவதாகப் பயங்காட்டலாம்; மிதிக்கக் கூடாது.
  • ஆனைக் காலில் அகப்பட்ட செல்லுப் போல.
  • ஆனைக் காலில் பாம்பு நுழைந்தாற் போல.
  • ஆனைக் காலில் மிதிபட்ட சுண்டெலி போல.
  • ஆனைக் காலின்கீழ் எறும்பு எம்மாத்திரம்?
  • ஆனைக்கு அகங்காரமும் பெண்களுக்கு அலங்காரமும்.
  • ஆனைக்கு அடி தூரம், எறும்புக்கு ஏழு காதம்.
  • ஆனைக்கு அம்பாரி அழகு; அரசனுக்கு முடி அழகு.
  • ஆனைக்கு அரைஅடி; எலிக்கு எட்டு அடி.
  • ஆனைக்கு அறுபது முழம், அறக்குள்ளனுக்கு எழுபது முழம்.
  • ஆனைக்கு ஆயிரம் பாத்தி வேணும்; தோட்டக்காரன் என்ன செய்வான்?
  • ஆனைக்கு ஆயிர முழம் அகல வேணும்
  • ஆனைக்கு ஆறு அடி; பூனைக்கு இரண்டு அடி.
  • ஆனைக்கு ஆனை கைகொடுத்தாற் போல.
  • ஆனைக்கு இல்லை கானலும் மழையும்.
  • ஆனைக்கு உடல் எல்லாம் தந்தம்; மனிதனுக்கு உடல் எல்லாம் பொய்.
  • ஆனைக்கு எதிரி நெருஞ்சி முள்.
  • ஆனைக்கு ஏற்ற கோடாலி.
  • ஆனைக்கு ஒரு கவளம்; ஆளுக்கு ஒரு வேளைச் சோறு.
  • ஆனைக்கு ஒரு காலம்; பூனைக்கு ஒரு காலம்.
  • ஆனைக்கு ஒரு பிடி; எறும்புக்கு ஒன்பது பிடி.
  • ஆனைக்குக் கட்டிய கூடாரம் போல.
  • ஆனைக்குக் கண் அளந்தார்; ஆட்டுக்கு வால் அளந்தார்.
  • ஆனைக்குக் கண் அளந்து வைத்திருக்கிறது.
  • ஆனைக்குக் கண் சிறுத்து வர, காது அசைந்து வர.
  • ஆனைக்குக் கரும்பு; கழுதைக்குத் தாள்; நாய்க்குக் கருப்புக் கட்டி.
  • ஆனைக்குக் கரும்பும் நாய்க்கு வெள்ளெலும்பும் போல.
  • ஆனைக்குக் கால் குட்டை; பானைக்குக் கழுத்துக் குட்டை.
  • ஆனைக்குக் கொட்டாங்கச்சித் தண்ணீர் போதுமா?
  • ஆனைக்குக் கோபம் வந்தால் அகத்தைப் பிளக்கும்; பூனைக்குக் கோபம் வந்தால் புல்லுப்பாயைப் பிறாண்டும்.
  • ஆனைக்குக் கோவணம் கட்ட ஆராலே முடியும்?
  • ஆனைக்குச் சிட்டுக்குருவி மத்தியஸ்தம் போனாற்போல.
  • ஆனைக்குச் செருப்புத் தைத்தாற்போல.
  • ஆனைக் குட்டிக்குப் பால் வார்த்துக் கட்டுமா?
  • ஆனைக் குட்டி கொழுக்கவில்லையே என்று உட்கார்ந்து அழுததாம் சிங்கக் குட்டி.
  • ஆனைக்குத் தலை மட்டம்; தவளைக்குத் தொடை மட்டம்.
  • ஆனைக்குத் தீனி அகப்பையில் கொடுத்தால் போதாது.
  • ஆனைக்குத் தீனி இடும் வீட்டில் ஆட்டுக்குட்டிக்குப் பஞ்சமா?
  • ஆனைக்குத் தீனி வைத்துக் கட்டுமா?
  • ஆனைக்குத் துறடும் அன்னத்துக்கு மிளகாயும் வேண்டும்.
  • ஆனைக்குத் தெரியுமா அங்காடி விலை?
  • ஆனைக்குத் தேரை இட்டது போல.
  • ஆனைக்கு நீச்சம், முயலுக்கு நிலை.
  • ஆனைக்குப் பகை சுள்ளெறும்பு.
  • ஆனைக் குப்பத்தான் போலே
  • ஆனைக்குப் பனை சர்க்கரை.
  • ஆனைக்குப் புண் வந்தால் ஆறாது.
  • ஆனைக்குப் பூனை போலவும் வால் இல்லையே!
  • ஆனைக்கும் அசையாதது ஆட்டுக்கு அசையும்.
  • ஆனைக்கும் அடி சறுக்கும்.
  • ஆனைக்கும் அடி தவறும்; பூனைக்கும் எலி தவறும்.
  • ஆனைக்கும் அடி தவறும்; வேடனுக்கும் குறி தவறும்.
  • ஆனைக்கும் உண்டா ஏழரை நாட்டுச் சனி?
  • ஆனைக்கும் உண்டு அவகேடு.
  • ஆனைக்கும் சரி, பூனைக்கும் சரி.
  • ஆனைக்கும் பானைக்கும் சரியாய்ப் போச்சு.
  • ஆனைக்கும் புலிக்கும் நெருப்பைக் கண்டால் பயம்.
  • ஆனைக்கு மங்கள ஸ்நானம்; கிண்ணத்தில் எண்ணெய் எடு.
  • ஆனைக்கு மதம் பிடிக்க, பாகனுக்குக் கிலி பிடிக்க.
  • ஆனைக்கு மதம் பிடித்தால் காடு கொள்ளாது.
  • ஆனைக்கு முன் முயல் முக்கினது போல.
  • ஆனைக்கு ராஜா மூங்கில் தடி.
  • ஆனைக்கு லாடம் அடித்ததைக் கண்டதுண்டா?
  • ஆனைக்கு வாழைத்தண்டு; ஆளுக்குக் கீரைத்தண்டு.
  • ஆனைக்கு வேகிற வீட்டில் பூனைக்குச் சோறு இல்லையா?
  • ஆனைக் கூட்டத்தில் சிங்கம் புகுந்தது போல.
  • ஆனைக் கூட்டம் எதிர்த்தால் பூனைக்குட்டி என்ன செய்யும்?
  • ஆனைக் கேடும் அரசு கேடும் உண்டா?
  • ஆனை கட்டச் சங்கிலியைத் தானே எடுத்துக் கொடுக்கும்.
  • ஆனை கட்டத் தாள்; வானை முட்டப் போர்.
  • ஆனை கட்டி ஆண்டால் அரசனும் ஆண்டி ஆவான்.
  • ஆனை கட்டி ஆளும் அரசனோ?
  • ஆனை கட்டி உழுகிறான்.
  • ஆனை கட்டித் தீனி போட முடியுமோ?
  • ஆனை கட்டியார் வீட்டில் வாழ்க்கைப்பட்டால் ஆறு கலம் அரிசி யாவது சிறப்பு வைக்க வேண்டாமா?
  • ஆனை கட்டி வாழ்ந்தவன் வீட்டில் பானை சட்டிக்கு வழி இல்லை.
  • ஆனை கட்டின மரம் ஆட்டம் கொடுக்கும்.
  • ஆனை கட்டும் தொழுவத்தில் பூனை கட்டலாமா?
  • ஆனை கண்ட பிறவிக் குருடன் அடித்துக் கொள்கிறது போல.
  • ஆனை கண் பருத்தால் அகிலத்தை ஆளாதா?
  • ஆனை கலக்குகிற குட்டையில் கொக்கு மீனைப் பிடிக்கச் சென்றதாம்.
  • ஆனை கவுளில் அடக்கிய கல்லைப்போல.
  • ஆனை கறுத்தால் ஆயிரம் பொன்; அட்டைகறுத்தால் உதவி என்ன?
  • ஆனை கறுத்தால் ஆயிரம் பொன், பூனை கறுத்தால் என்ன பெறும்?
  • ஆனை கறுத்தால் என்ன? அசல் வீடு வாழ்ந்தால் என்ன?
  • ஆனை கறுத்திருந்தும் ஆயிரம் பொன் பெறும்.
  • ஆனைகறுப்போ வெள்ளையோ, கொம்பு வெள்ளைதான்.
  • ஆனை காட்டுக்கு ராஜாவாக இருந்தாலும் பாகனுக்கு அடிமை.
  • ஆனை காணாமற் போனால் இரண்டு சட்டியில் தேடினால் அகப்படுமா?
  • ஆனை காதில் கட்டெறும்பு புகுந்தாற் போல.
  • ஆனை கிட்டப் போக ஆசையாக இருக்கிறது; மாணி எட்ட வில்லை.
  • ஆனை குட்டி போட்டாற் போல்.
  • ஆனை குட்டி போட்டதென்று முயல் முக்கினாற்போல.
  • ஆனை குட்டி போடுகிறது என்று ஆடும் போட்டால் புட்டம் கீறி விடும்.
  • ஆனை குட்டி போடும் போடும் என்று எண்ணி லத்தி போட்டதாம்.
  • ஆனை குட்டையைக் குழப்புவது போல.
  • ஆனை குடிக்கும் தண்ணீர் பூனை குடிக்குமா?
  • ஆனை குண்டு சட்டியிலும் குழிசியிலும் உண்டோ?
  • ஆனை குப்புற விழுந்தால் தவளைகூட உதைத்துப் பார்க்குமாம்.
  • ஆனை குளிக்கச் செம்பு தண்ணீரா?
  • ஆனை குளித்த குளம் போல.
  • ஆனை குறட்டில் அவல் அடக்குகிறதுபோல எந்த மட்டும் அடக்குகிறது?
  • ஆனை கெட்டுக் குடத்தில் கை இடுகிறதா?
  • ஆனை கெட்டுப் போகக் குடத்தில கைவிட்டுப் பார்க்கிறதா?
  • ஆனை கெடுத்தவன் குடத்தில் கை இட்டாற் போல.
  • ஆனை கெடுத்தவன் பானையில் தேடினாற் போல.
  • ஆனை கேட்ட வாயால் ஆட்டுக்குட்டி கேட்கிறதா?
  • ஆனை கேடு, அரசு கேடு உண்டா?
  • ஆனை கொடுத்தவன் அங்குசம் கொடானா?
  • ஆனை கொடுத்து ஆடு வாங்கினான்.
  • ஆனை கொடுத்தும் அங்குசத்துக்குப் பிணக்கா?
  • ஆனை கொழுத்தால் மண்ணை அள்ளிப் போட்டுக்கொள்ளும்
  • ஆனை கொழுத்தால் வாழைத்தண்டு; மனிதன் கொழுத்தால் கீரைத்தண்டு.
  • ஆனை கொடிற்றில் அடக்குகிறது போல எந்த மட்டும் அடக்குகிறது?
  • ஆனைச் சிவப்பிலும் அதிகச் சிவப்பு!
  • ஆனைக் கவடும் பூனைத் திருடும்.
  • ஆனைச் சொப்பனம் கண்டவருக்குப் பானைப் பொன்.
  • ஆனை சிங்கக்குட்டி போடுவது போல.
  • ஆனை சிந்திய சிறு கவளம் எறும்புக் கூட்டத்துக்குப் பெருவளம்.
  • ஆனை சீர் தந்த எங்கள் அம்மான் கத்திரிக்காய்க்குக் குண்டா கரணம் போடுகிறான்.
  • ஆனை செத்தாலும் ஆயிரம் பொன்.
  • ஆனை சொற்படி பாகன்; பாகன் சொற்படி ஆனை.
  • ஆனைத் தலையளவு பெருங்காயம் கரைத்த வீடா?
  • ஆனைத் துதிக்கையில் எலும்பே கிடையாது.
  • ஆனைத் தோலை எலி கரண்டினது போல.
  • ஆனை தம்பட்டம் அடிக்க ஓநாய் ஒத்து ஊதிற்றாம்.ஆனை தம்பட்டம் அடிக்க ஓநாய் ஒத்து ஊதிற்றாம்.
  • ஆனை தரைக்கு ராஜா; முதலை தண்ணீருக்கு ராஜா.
  • ஆனை தழுவிய கையால் ஆட்டுக்குட்டியைத் தழுவுகிறதா?
  • ஆனை தன் கோட்டிடை வைத்த கவளம் போல.
  • ஆனை தன் தலையிலே மண்ணைப் போட்டுக் கொள்வது போல.
  • ஆனை தன் பலம் அறியாது.
  • ஆனை தன் பலம் அறியாமல் மத்தகத்தில் மண்ணை வாரிப் போட்டுக் கொண்டது போல.
  • ஆனை தன் பலம் அறியாமல் மத்தகத்தை மதில் சுவரில் முட்டிக் கொண்டது போல.
  • ஆனை தன்னைக் கட்டும் சங்கிலியைத் தானே எடுத்துக் கொடுத்தது போல.
  • ஆனை தாழ்ந்து அரசு வளர்ந்தது.
  • ஆனை திரும்ப அரைக்கால் நாழிகை.
  • ஆனை தின்ற விளாங்கனி போல.
  • ஆனை தும்பிக்கையில் வீசுகிறது என்று கழுதை வாலால் வீசினது போல.
  • ஆனை துரத்தி வந்தாலும் ஆலயத்தில் நுழையலாகாது.
  • ஆனை துறடு அறியும்; பாகன் நோக்கு அறிவான்.
  • ஆனை தொட்டாலும் மரணம் வரும்.
  • ஆனை தொடுவுண்ணின் மூடும் கலம் இல்லை.
  • ஆனை நடைக்கும் குதிரை ஓட்டத்துக்கும் சமம்.
  • ஆனை நிழல் பார்க்கத் தவளை அழித்தாற் போல.
  • ஆனை நிற்க நிழல் உண்டு; மிளகு உருட்ட இலை இல்லை.
  • ஆனை நீட்டிப் பிடிக்கும்; பூனை தாவிப் பிடிக்கும்.
  • ஆனை நுழைய அடுக்களை பிடிக்குமா?
  • ஆனைப் பசிக்கு ஆத்திக் கீரையா?
  • ஆனைப் பசிக்குச் சோளப் பொறியா?
  • ஆனைப் பாகன் மனைவி ஆறுமாசத்துக்கு விதவை.
  • ஆனைப் பாகன் வீட்டை ஆனைக்குக் காட்ட மாட்டான்.
  • ஆனைப் பாகனுக்கு ஆனையால் சாவு.
  • ஆனைப் பாகனும் குதிரைப் பாகனும் சவாரி செய்தாற் போல.
  • ஆனை பட்டால் கொம்பு; புலி பட்டால் தோல்.
  • ஆனை படுத்தால் ஆட்டுக்குட்டி உயரமாவது இருக்காதா?
  • ஆனை படுத்தால் ஆட்டுக்குட்டிக்குத் தாழுமா?
  • ஆனை படுத்தால் ஆள் மட்டம்.
  • ஆனை படுத்தால் குதிரை உயரம் வராதா?
  • ஆனை பழக்க ஆனை வேண்டும்.
  • ஆனை பாய்ந்தால் ஆர் பிடிப்பார்?
  • ஆனை பார்க்க வெள்வெழுத்தா?
  • ஆனை பிடிக்கப் பூனைச் சேனை.
  • ஆனை பிடிப்பவனுக்குப் பூனை எம்மாத்திரம்?
  • ஆனை புக்க புலம் போல.
  • ஆனை புகுந்த கரும்புத் தோட்டமும் அமீனா புகுந்த வீடும் உருப்படா.
  • ஆனை புலி வந்தாலும் தாண்டுவான்.
  • ஆனை பெரிது, ஆனாலும் அதன் கண் சிறிது.
  • ஆனை பெருத்தும் ஊனம் உதறாதே.
  • ஆனை பெருமாளது; ஆர் என்ன சொன்னால் என்ன?
  • ஆனை போக அதன் வால் போகாதோ?
  • ஆனை போகிற வழியிலே எறும்பு தாரை விட்டது போல்.
  • ஆனை போய் ஆறு மாசம் ஆனாலும் தாரை மறையுமா?
  • ஆனை போல் ஐந்து பெண் இருந்தாலும் பூனை போல் ஒரு நாட்டுப் பெண் வேண்டும்.
  • ஆனை போல வந்தான்; பூனை போலப் போகிறான்.
  • ஆனை போனதே வீதி.
  • ஆனை போன வீதியிலே ஆட்டுக்குட்டி போகிறது வருத்தமா?
  • ஆனை போன வீதியையும் கேட்க வேண்டுமா?
  • ஆனை போனாலும் அடிச்சுவடு போகாது.
  • ஆனை மதத்தால் கெட்டது; அரசன் பயத்தால் கெட்டான்.
  • ஆனை மதம் பட்டால் அழகாகும்; பூனை மதம் பட்டால் என்ன ஆகும்?
  • ஆனை மதம் பட்டால் காடு கொள்ளாது; சாது மதம் பட்டால் ஊர் கொள்ளாது.
  • ஆனை மதத்தால் வாழைத்தண்டு; ஆண் பிள்ளை மதத்தால் கீரைத்தண்டு.
  • ஆனை மயிர் கட்டின ஆண் சிங்கம்.
  • ஆனை மிதித்த காசு பானை நிரம்பும்.
  • ஆனை மிதித்தால் பிழைப்பார்களா?
  • ஆனை மிதித்து ஆள் பிழைக்கவா?
  • ஆனை மிதித்துக் கொல்லும்; புலி இடிந்து கொல்லும்.
  • ஆனை முட்டத் தாள்; வானம் முட்டப் போர்.
  • ஆனை முட்டத் தேர் நகரும்.
  • ஆனை முதல் எறும்பு வரைக்கும்.
  • ஆனை முன்னே ஆட்டுக்குட்டி; பின்னே சிங்கக்குட்டி.
  • ஆனை முன்னே முயல் முக்கினது போல.
  • ஆனை மூத்திரத்தை நம்பிக் கட்டுச் சோற்றை அவிழ்த்தானாம்.
  • ஆனை மேய்கிற காட்டில் ஆட்டுக்குட்டிக்குப் புல் கிடைக்காமல் போகுமா?
  • ஆனை மேயும் காட்டில் ஆடு மேய இடம் இல்லையா?
  • ஆனைமேல் அங்கு மணி எடுத்தாலும் ஆனை வால் கூழை வால்.
  • ஆனைமேல் அங்குமணிச் சீர் எடுத்துக் கொண்டு வந்தாலும் மாமியார் இல்லை என்பாள்.
  • ஆனைமேல் அம்பாரி போனால் பூனைக்கு என்ன புகைச்சலா?
  • ஆனைமேல் அம்பாரி வைத்து வரிசை வந்தாலும் ஆனை வால் கூழை என்பார்.
  • ஆனைமேல் இடும் பாரத்தைப் பூனை மேல் இடலாமா?
  • ஆனைமேல் இருக்கிற அரசன் சோற்றைக் காட்டிலும் பிச்சை எடுக்கிற பார்ப்பான் சோறு மேல்.
  • ஆனைமேல் இருப்பவனைச் சுண்ணாம்பு கேட்டாற் போல.
  • ஆனைமேல் உட்கார்ந்திருப்பவன் வெறிநாய் கடிக்குமென்று அஞ்சுவானா?
  • ஆனைமேல் ஏறிப் பாறை மேல் விழுவதா? நாயின் மேல் ஏறி மலத்தின்மேல் விழுவதா?
  • ஆனைமேல் ஏறினால் ஆருக்கு லாபம்?
  • ஆனை மேல் ஏறு என்றால் பானை மேல் ஏறுவார்? பானைமேல் ஏறு என்றால் ஆனைமேல் ஏறுவார்.
  • ஆனைமேல் ஏறுவேன்; வீரமணி கட்டுவேன்.
  • ஆனைமேல் திருமஞ்சனம் வருவதென்றால் பெருமாளுக்கு யோகந்தான்.
  • ஆனைமேல் போகிறவன் அந்து காலன்; குதிரை மேல் போகிறவன் குந்து காலன்.
  • ஆனைமேல் போகிறவனையும் பானையோடு தின்றான் என்கிறது.
  • ஆனைமேல் வந்தானா? குதிரை மேல் வந்தானா?
  • ஆனையின் அதிகாரம் சிற்றெறும்பினிடம் செல்லாது.
  • ஆனையின் கண்ணுக்குச் சிற்றெறும்பும் மலையாம்.
  • ஆனையின் கரும்புக்குக் காட்டெருமை வந்ததாம்.
  • ஆனையின் காதில் எறும்பு புகுந்தது போல.
  • ஆனையின் மூச்சில் அகப்பட்ட கொசுப் போல.
  • ஆனையின்மேல் இருப்பவனைச் சுண்ணாம்பு கேட்டால் அகப்படுமா?
  • ஆனையின் வாலைப் பிடித்துக் கரை ஏறலாம்; ஆட்டின் வாலைப் பிடித்துக் கரை ஏறலாமா?
  • ஆனையும் அறுகம் புல்லினால் தடைப்படும்.
  • ஆனையும் ஆனையும் உரசிக் கொள்ளக் கொசுவுக்குப் பிடித்ததாம் அனர்த்தம்.
  • ஆனையும் ஆனையும் மோதும் போது இடையிலே அகப்பட்ட கொசுவைப் போல.
  • ஆனையும் நாகமும் புல்லினால் தடைப்பட்டன.
  • ஆனையும் பானையும் ஒன்றானால் பானையே நல்லது.
  • ஆனையை அடக்கலாம்? அடங்காப் பிடாரியை அடக்க முடியாது.
  • ஆனையை அடக்கலாம்? ஆசையை அடக்க முடியாது.
  • ஆனையை அடக்குபவனும் அகமுடையாளுக்கு அடக்கம்.
  • ஆனையை ஆயிரம் பொன்னுக்கு வாங்கி இரும்பு அங்குசத்துக்கு ஏமாந்து நிற்பானேன்?
  • ஆனையை இடுப்பிலே கட்டிச் சுளகாலே மறைப்பான்.
  • ஆனையைக் கட்ட ஊணான் கொடி போதுமா?
  • ஆனையைக் கட்டி ஆள ஆண்டியால் முடியுமா?
  • ஆனையைக் கட்டி ஆளலாம்; அரைப் பைத்தியத்தைக் கட்டி ஆள முடியாது.
  • ஆனையைக் கட்டிச் சுளகாலே மறைப்பாள்.
  • ஆனையைக் கட்டித் தீனி போட முடியுமா?
  • ஆனையைக் கண்டு அஞ்சாதவன் ஆனைப் பாகனைக் கண்டால் அஞ்சுவானா?
  • ஆனையைக் குடத்தில் அடைக்க முடியுமா?
  • ஆனையைக் குத்தி முறத்தினால் மறைப்பாள்.
  • ஆனையைக் குளிப்பாட்ட அண்டா நீர் போதுமா?
  • ஆனையைக் கெடுத்தவன் பானையில் தேடினாற் போல்.
  • ஆனையைக் கொட்டத்தில் அடைத்தாற் போல.
  • ஆனையைக் கொடுத்துத் துறட்டுக்கு மன்றாடினாற் போல.
  • ஆனையைக் கொன்றவன் பூனையை வெல்ல மாட்டானா?
  • ஆனையைக் கொன்று அகப்பையால் மூடினாற் போல்.
  • ஆனையைச் சுளகால் மறைப்பது போல.
  • ஆனையைத் தண்ணீரில் இழுக்கிற முதலை பூனையைத் தரையில் இழுக்குமா?
  • ஆனையைத் துரத்த நாயா?
  • ஆனையைத் தேடப் பானையில் கை விட்டது போல.
  • ஆனையை நம்பிப் பிழைக்கலாம்; ஆண்டியை நம்பிப் பிழைக்க முடியுமா?
  • ஆனையை நோண்டினால் அது உன்னை நோண்டிவிடும்.
  • ஆனையைப் படைத்த பகவான் பூனையையும் படைத்திருக்கிறார்.
  • ஆனையைப் பார்க்க ஆயிரம் பேர்.
  • ஆனையைப் பார்க்க வெள்ளெழுத்தா?
  • ஆனையைப் பார்த்த கண்ணுக்குக் கரடியைப் பார்ப்பதுபோல் இருந்ததாம்.
  • ஆனையைப் பார்த்துவிட்டுப் பூனையைப் பார்த்தால் பிடிக்குமா?
  • ஆனையைப் பிடிக்க ஆனைதான் வேண்டும்.
  • ஆனையைப் பிடிக்க எலிப் பொறியா?
  • ஆனையைப் பிடித்துக் கட்ட அரை ஞாண் கயிறு போதுமா?
  • ஆனையைப் பிடிப்பதும் கரகத்தில் அடைப்பதும் அதுவே செல்லப் பிள்ளைக்கு அடையாளம்.
  • ஆனையைப் பிடிப்பான் ஆண் பிள்ளைச் சிங்கம்; பானையைப் பிடிப்பாள் பத்தினித் தங்கம்.
  • ஆனையைப் புலவனுக்கும் பூனையைக் குறவனுக்கும் கொடு.
  • ஆனையைப் பூனை மறைத்ததாம்.
  • ஆனையைப் போக்கினவன் குடத்திலே தேடின மாதிரி.
  • ஆனையைப் போல் சுவர் எழுப்பினால் ஆர் தாண்டுவார்கள்?
  • ஆனையைப் போல வஞ்சனை; புலியைப் போலப் போர்.
  • ஆனையை முறுக்கி ஆளச் சாமர்த்தியம் இருந்தாலும் அகமுடையாளை அடக்கி ஆளத் திறமை இல்லாதவன் இருந்தென்ன பிரயோசனம்?
  • ஆனையை வாங்கலாமா லஞ்சம்?
  • ஆனையை வாங்கிவிட்டுத் துறட்டுக்கு மன்றாடுகிறான்.
  • ஆனையை வித்துவானுக்கும் பூனையைக் குறவனுக்கும் கொடு.
  • ஆனையை விழுங்குவான்; கடைவாயில் ஒட்டிய ஈயைக் கண்டு நடுங்குவான்.
  • ஆனையை விற்றா பூனைக்கு மருத்துவம் பார்ப்பது?
  • ஆனையை விற்றுத் துறட்டுக்கு மன்றாடுகிறான்.
  • ஆனையோடு பிறந்த அலங்காரி, சேனையோடு பிறந்த சிங்காரி.
  • ஆனை லத்தி ஆனை ஆகுமா?
  • ஆனை லத்தி போடுகிற மாதிரி குதிரை லத்தி போட்டால் குண்டி கிழிந்து போகும்.
  • ஆனை வந்தால் ஏறுவேன்; சப்பாணி வந்தால் நகருவேன்.
  • ஆனை வந்தாலும் ஏற வேண்டும்; சப்பாணி வந்தாலும் ஏற வேண்டும்.
  • ஆனை வந்தாலும் தாண்டுவான்; புலி வந்தாலும் தாண்டுவான்.
  • ஆனை வந்து விரட்டினாலும் ஆனைக் காவில் நுழையாதே.
  • ஆனை வயிறு ஆனாலும் பானைக்குள்ளேதான்.
  • ஆனை வயிறு நிறைந்தாலும் ஆட்டுக் குட்டிக்கு வயிறு நிறையாது.
  • ஆனை வரும் பின்னே; மணி ஓசை வரும் முன்னே:
  • ஆனை வலம் கிடைத்தாலும் பூனை வலம் கிடைக்காது.
  • ஆனை வாகனம் ராச லட்சணம்.
  • ஆனைவாய்க் கரும்பும் பாம்பின் வாய்த் தேரையும் யமன்கைக் கொண்ட உயிரும் திரும்பி வரா.
  • ஆனை வாயில் அகப்பட்ட கொசுவைப் போல்.
  • ஆனை வாயில் போன விளாம் பழம் போல.
  • ஆனை வால் பிடித்துக் கரை ஏறலாம்; ஆட்டின் வால் பிடித்துக் கரை ஏறலாமா?
  • ஆனை வால் பிடித்துக் கரை ஏறலாம்; நாய் வால் பிடித்து ஆவது என்ன?
  • ஆனை வாழ்ந்தால் என்ன? பூனை தாலி அறுத்தால் என்ன?
  • ஆனை விலை, குதிரை விலை.
  • ஆனை விழுங்கிய அம்மையாருக்குப் பூனை ஒரு சுண்டாங்கி.
  • ஆனை விழுந்தால் அதுவே எழுந்திருக்கும்.
  • ஆனை விழுந்தாலும் குதிரை மட்டம்.
  • ஆனை விற்றால் ஆனை லாபம்; பானை விற்றால் பானை லாபம்
  • ஆனை விற்றும் துறட்டுக்குப் பிணக்கா?
  • ஆனை வீட்டிலே பிறந்து அடைப்பக்காரனுக்கு வாழ்க்கைப் பட்டாளாம்.
  • ஆனை வெளுக்கத் தாழி செய்தது போல.
  • ஆனை வேகம் அடங்கும் அங்குசத்தால்.
  • ஆச்சியம் பூச்சியம்.
  • ஆஸ்தி இல்லாதவன் அரை மனிதன்.
  • ஆஸ்தி உள்ளவன் ஆஸ்திக்கு அடிமை.
  • ஆஸ்தி உள்ளவனுக்கு நாசம் இல்லை.
  • ஆஸ்திக்கு ஓர் ஆணும் ஆசைக்கு ஒரு பெண்ணும்.
  • ஆஸ்திக்கு மிகுந்த அபராதமும் இல்லை; தலைக்கு மிஞ்சின தண்டமும் இல்லை.
  • ஆஸ்தி பாஸ்தி.

[தொகு]

  • இக்கரைக்கு அக்கரை பச்சை
  • இக்கரையில் பாகலுக்கு அக்கரையில் பந்தல்
  • இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை
  • இகழ்ச்சி உடையோன் புகழ்ச்சி அடையான்
  • இங்கிதம் தெரியாதவளுக்குச் சங்கீதம் தெரிந்து பலன் என்ன?
  • இங்கு அற்றவருக்கு அங்கு உண்டு
  • இங்கு அற்றவருக்கு அங்கு ஒரு விஸ்வரூப தரிசனம்
  • இங்கு இருந்த பாண்டம் போல
  • இங்கும் புதையல் இருக்குமா ரங்கா? அதற்குச் சந்தேகமா வெங்கா?
  • இங்கே தலையைக் காட்டுகிறான்; அங்கே வாலைக் காட்டுகிறான்
  • இங்கே வாடா திருடா, திருட வந்தாயா என்றாளாம்; உன் வீடு இருக்கிற அழகுக்கா விழித்துக் கொண்டிருக்கிறாய் என்றானாம்
  • இங்கே வா நாயே என்றால் மூஞ்சியை நக்குகிறது
  • இச்சிக் கொண்டே என்னோடே நிற்கிறான்
  • இச்சித்த காரியம் இரகசியம் அல்ல,
  • இச்சிப் பெட்டின வாரிக்கு இஞ்சினீரிங் டிபார்ட்மெண்ட்
  • இச்சை உள்ள காமுகர்க்குக் கண் கண்ட இடத்திலே
  • இச்சைச் சொல் யாசகத்தால் இடர்ப்பட்டவன் இல்லை
  • இச்சையாகிய பாக்கியம் இருக்கப் பிச்சைக்குப் போவானேன்?
  • இச்சையும் இல்லை; இருமையும் இல்லை
  • இசலிக் கொண்டே என்னோடே நிற்கிறான்
  • இசை இல்லாப் பாட்டு இழுக்கு
  • இசைவில்லாப் பாட்டு இழுக்கு
  • இசைவு வந்தது வடமலை அப்பா!
  • இஞ்சி இலாபம் மஞ்சளில்
  • இஞ்சி என்றால் தெரியாதா? எலும்மிச்சம் பழம் போலத் தித்திப்பாய் இருக்குமே!
  • இஞ்சி தின்ற குரங்கு போல
  • இஞ்சியில் பாய்ந்தால் என்ன? மஞ்சளில் பாய்ந்தால் என்ன? இஞ்சி லாபம் மஞ்சளிலே
  • இட்ட அடி கொப்புளிக்க எடுத்த அடி தள்ளாட
  • இட்ட உறவு எட்டு நாளைக்கு; நக்கின உறவு நாலு நாளைக்கு
  • இட்ட உறவு ஏனாதிக்கூட்டம்; வார்த்த உறவு வண்ணாரக் கூட்டம்
  • இட்ட எழுத்திற்கு மேல் ஏற ஆசைப்பட்டால் கிடைக்குமா?
  • இட்ட கடன் பட்ட கடனுக்கு ஈடாகாது
  • இட்ட குடி கெடுமா?
  • இட்ட குடியும் கெட்டது; ஏற்ற குடியும் கெட்டது
  • இட்ட கையை நத்துமா? இடாத கையை நத்துமா?
  • இட்டத்தில் ஒன்றும் குறையாது
  • இட்டத்தின் மேலே ஏறாசைப்பட்டால் கிடைக்குமோ?
  • இட்டது எல்லாம் கொள்ளும் பட்டி மகள் கப்பரை
  • இட்டது எல்லாம் பயிர் ஆகுமா? பெற்றது எல்லாம் பிள்ளை ஆகுமா?
  • இட்ட படியே ஒழிய ஆசைப்பட்டுப் பலன் இல்லை
  • இட்டம் அற்ற முனியன், அட்டமத்துச் சனியன்
  • இட்டலிக் குப்பன்
  • இட்டவர்கள் தொட்டவர்கள் கெட்டவர்கள்; இப்போது வந்தவர்கள் நல்லவர்கள்
  • இட்டவள் இடா விட்டால் வெட்டுப் பகை
  • இட்ட வீட்டுக்கு இரண்டகம் நினைக்கலாமா?
  • இட்ட வீட்டுக்குப் பிட்டு இட்டுக்கொண்டு, இடிந்த வீட்டுக்கு மண் இட்டுக் கொண்டு திரிகிறான்
  • இட்டார்க்கு இட்ட படி
  • இட்டார் பெரியோர்; இடாதார் இழிகுலத்தோர்
  • இட்டாருக்கு இட்ட பலன்
  • இட்டார்க்கு இட்ட பலன்; ஆண்டிக்கு அமைந்த பலன்
  • இட்டாருக்கு இடலும், செத்தாருக்கு அழுதலும்
  • இட்டாருக்கு இட வேணும்; செத்தாருக்கு அழ வேணும்
  • இட்டு ஆளாப் பெண்ணுக்குச் சுட்டாலும் தெரியாது
  • இட்டு உண்டான் செல்வம் தட்டுண்டாலும் கெடாது
  • இடம் கொடுத்தால் மடம் பிடுங்குவான்.
  • இட்டுக் கெட்டார் எங்குமே இல்லை
  • இட்டுக் கெட்டாரும் இல்லை; ஈயாது வாழ்ந்தாரும் இல்லை
  • இட்டுப் பிறந்தால் எங்கும் உண்டு
  • இட்டுப் பேர் பெறு; வெட்டிப் பேர் பெறு
  • இட்டு வைத்தால் தின்னவும் எடுத்து வைத்தால் அடுக்கவும் தெரியும்
  • இடக்கண், வலக்கண்
  • இடக்கனுக்கு வழி எங்கே? கிடக்கிறவன் தலை மேலே
  • இடக்காதில் வாங்கி வலக்காதில் விடுவது
  • இடக்குக் குடை பிடிக்கலாமா?
  • இடது கைக்கு வலது கை துணை; வலது கைக்கு இடது கை துணை
  • இடது கை பிட்டத்துக்கு எளிது
  • இடது கை வலது கை தெரியவில்லை
  • இடம் அகப்படாத தோஷம்; மெத்தப் பதிவிரதை
  • இடம் இராத இடத்தில் அகமுடையானைப் பெற்றவள் வந்தாளாம்; போதாக் குறைக்குப் புக்ககத்து அத்தையும் வந்தாளாம்
  • இடம் கண்டால் மடத்தைப் பிடிக்கலாம்
  • இடம் கண்டால் விடுவானோ யாழ்ப்பாணத்தான்
  • இடம் கொடுத்தால் மடத்தைப் பிடிக்கலாம்
  • இடம் பட வீடு இடேல்
  • இடம் வலம் தெரியாதவனோடு இணக்கம் பண்ணல் ஆகாது
  • இட மாட்டாதவன் எச்சில் என்றானாம்
  • இட வசதி இல்லாத பதிவிரதை
  • இடறின காலிலே இடறுகிறது
  • இடன் அறிந்து ஏவல் செய்
  • இடாதவனுக்கு இட்டுக் காட்டு
  • இடான், தொடான், மனுஷர்மேல் செத்த பிராணன்
  • இடி இடி எங்கே போகிறாய்? ஏழையின் தலையில் விழப் போகிறேன்
  • இடி இடித்தாலும் படபடப்பு ஆகாது
  • இடி ஓசை கேட்ட பாம்பு போல
  • இடிக்கிறவன் ஒன்றை நினைத்துக்கொண்டு இடித்தால், குடிக்கிறவன் ஒன்றை நினைத்துக்கொண்டு குடிப்பான்
  • இடிக்கிற வானம் பெய்யாது
  • இடிக்குக் குடை பிடிக்கலாமா?
  • இடி கொம்புக்காரன் கோழிக் குஞ்சின் சத்தத்திற்கு அஞ்சுவானா?
  • இடி கொம்பும் விட்டுப் பிடி கொம்பும் விட்டது போல
  • இடி சோறு தின்கிறான்
  • இடித்த புளி போல் இருக்கிறான்
  • இடித்தவளுக்கும் புடைத்தவளுக்கும் ஒன்று; ஏன் என்று வந்தவளுக்கு இரண்டு
  • இடித்த வானம் பெய்யாது
  • இடித்து அடித்து ஒரு கூடை இடுவதிலும் பிடி சோறு அன்பாய்ப் போடுவது போதும்
  • இடிந்து கிடந்த அம்பலம் போல
  • இடியேறு கேட்ட நாகம் போல
  • இடி விழுந்த ஊரில் குடி இருந்தாலும் இடை விழுந்த ஊரில் குடியிருக்கல் ஆகாது
  • இடி விழுந்த மரம்போல ஏங்குதல்
  • இடி விழுவானுக்கு வாழ்க்கைப்பட்டு எந்நேரமும் குடி சாமம்
  • இடுகிற தெய்வம் எங்கும் இடும்
  • இடுகிறவன் தன்னவன் ஆனால் இடைப் பந்தியில் இருந்தால் என்ன? கடைப் பந்தியில் இருந்தால் என்ன?
  • இடுப்பில் இரண்டு காசு இருந்தால் சருக்கென்று இரண்டு வார்த்தை வரும்
  • இடுப்பிலே காசு இருந்தால் அசப்பிலே வார்த்தை வரும்
  • இடுப்பு ஒடிந்த கோழிக்கு உரல் குழியே கதி
  • இடுப்புக்கு மேலே அந்தரங்கம் இல்லை
  • இடுப்புச் சுருங்குவது பெண்களுக்கு அழகு
  • இடுப்பு வைத்த இடமெல்லாம் அடுப்பு வைத்தான்
  • இடும்பனுக்கு வழி எங்கே? இருக்கிறவன் தலை மேலே
  • இடும்பு செய்வாருக்கு இராப்பகல் நித்திரை இல்லை
  • இடும்பும் கரம்பும் அழியும்
  • இடும்பைக்கு ஈன்ற தாய் போல
  • இடுவது பிச்சை; ஏறுவது மோட்சம்
  • இடுவார் இடுவதையும் கெடுவார் கெடுப்பார்
  • இடுவார்க்கு இல்லை கெடுவாழ்வு
  • இடுவார் பிச்சையைக் கெடுக்கிறதா?
  • இடுவான் இடுவான் என்று ஏக்கற்று இருந்தாளாம்; நாலு நாழி கொடுத்து நாலாசை தீர்த்தாளாம்
  • இடை ஆண்டியும் இல்லை; குயத் தாதனும் இல்லை
  • இடைக் கணக்கன் செத்தான்; இனிப் பிழைப்பான் நாட்டான்
  • இடைக் கிழவி எப்போது சாவாளோ? இடம் எப்போது ஒழியுமோ?
  • இடைக் கோழி இராத் தங்குமா?
  • இடைச்சன் பிள்ளைக்காரிக்குத் தலைச்சன் பிள்ளைக்காரி மருத்துவம் சொன்னாளாம்
  • இடைச்சி ஆத்தாள் தோளிக்கு
  • இடைச்சிக்கு எட்டுத் தாலி; பறைச்சிக்குப் பத்துத் தாலி
  • இடைச்சிக்கு மாப்பிள்ளை என்றைக்கிருந்தாலும் வருவான்
  • இடைச்சி சம்பத்தும் சாணாத்தி வாழ்வும் சரி
  • இடை சாய்ந்த குடம் கவிழும்
  • இடைத் தெருவில் ஊர்வலம் வரும்போது குசத்தெரு எங்கே என்கிறான்
  • இடைப் பிறப்பும் கடைப் பிறப்பும் ஆகா
  • இடைப் புத்தி பிடரியிலே
  • இடையன் எப்போது சாவானோ, கம்பளி எப்போது மிஞ்சுமோ?
  • இடையன் எறிந்த மரம் போல
  • இடையன் கரடிமேல் ஆசைப்பட்டது போல
  • இடையன் கல்யாணம் பொழுது விடிந்து போச்சு
  • இடையன் கல்யாணம் விடியும் பொழுது
  • இடையன் கெடுத்தது பாதி; மடையன் கெடுத்தது பாதி
  • இடையன் செய்வது மடையன் செய்யான்
  • இடையன் பிடரியிலே ஆட்டைப் போட்டுக்கொண்டு தேடினாற் போல்
  • இடையன் பெருத்தாலும் இடையன் கிடை நாய் பெருக்காது
  • இடையன் பேரிலே சந்நதம் வந்தது போல்
  • இடையன் பொறுத்தாலும் இடையன் நாய் பொறாதது போல
  • இடையன் வந்ததும் படுக்க வேண்டியதுதான்
  • இடையன் வெட்டின கொம்பு போல
  • இடையன் வெட்டு அறா வெட்டு
  • இடையனில் ஆண்டி இல்லை; குசவனில் தாதன் இல்லை
  • இடையனுக்குப் பிடரியிலே புத்தி
  • இடையனும் பள்ளியும் இறைத்த புலம் பாழ்
  • இடையாலும் கடையாலும் சங்கம் அழிவதாக
  • இடையூறு செய்தோன் மனையில் இருக்காது பேய் முதலாய்
  • இண்டம் பிடித்தவன்
  • இணக்கம் அறிந்து இணங்க வேண்டும்
  • இணக்கம் இல்லாதவனோடு என்ன வாது?
  • இணங்காரோடு இணங்குவது இகழ்ச்சி
  • இணங்கினால் தித்திப்பு; பிணங்கினால் கசப்பு
  • இணை பிரியா அன்றில் போல
  • இத்தனை அத்தனை ஆனால் அத்தனை எத்தனை ஆகாது?
  • இத்தனை பெரியவர் கைப்பிடித்து இழுத்தால் மாட்டேன் என்று எப்படிச் சொல்வது?
  • இத்தனை பேர் பெண்டுகளில் என் பிள்ளைக்கு ஒரு தாய் இல்லை
  • இத்தனையும் செய்து கத்தரி நட்டவன் இல்லையென்று சொன்னான்
  • இதற்கா பயப்பட்டேன் என் ஆண்டவனே, ஆனை குதிரை வந்தாலும் தாண்டுவனே
  • இது எமன் ஆச்சே!
  • இது எல்லாம் பொம்மலாட்டம்
  • இது என் குலாசாரம்; இது என் வயிற்று ஆகாரம்
  • இது என்ன வெள்ளரிக்காய் விற்ற பணமா?
  • இது சொத்தை; அது புழுத்தது
  • இது தெரியாதா இடாவே? நுகத்தடிக்கு நாலு துளை
  • இது பெரிய இடத்துப் பேச்சு
  • இதைச் சொன்னான் பரிகாரி; அதைக் கேட்டான் நோயாளி
  • இந்த அடிக்கு எந்த நாயும் சாகும்
  • இந்த அம்பலம் போனால் செந்தி அம்பலம்
  • இந்த அமாவாசைக்கும் வெட்கம் இல்லை; வருகிற அமாவாசைக்கும் வெட்கம் இல்லை
  • இந்த உலக வாழ்வு சதமா?
  • இந்த ஊருக்கு எமனாக வந்தான்
  • இந்த எலும்பைக் கடிப்பானேன்? சொந்தப் பல்லும் போவானேன்?
  • இந்தக் கண்ணிற் புகுந்து அந்தக் கண்ணிற் புறப்படுகிறான்
  • இந்தக் கருப்பிற் செத்தால் இன்னும் ஒரு கருப்பு மயிரைக் பிடுங்குமா?
  • இந்தக் குண்டுக்குத் தப்பினாலே மக்கமே கதி
  • இந்தக் கூழுக்கா இருபத்தெட்டு நாமம்?
  • இந்தக் கூழுக்கோ பதினெட்டுத் திருநாமமும் நடுவிலே ஒரு திருச்சூர்ணமும்
  • இந்தக் கைப் புழுதி தேவலையா? இந்தக் கைச் சாம்பல் தேவலையா?
  • இந்தச் சளுக்கனுக்கு இரண்டு பெண்சாதி; வந்தவாசி மட்டும் வல்ல வாட்டு
  • இந்தச் சிற்றுண்டி எனக்குத் தெவிட்டிப் போயிற்று
  • இந்த நாயை ஏன் இப்படிச் செய்கிறாய்?
  • இந்தப் பூராயத்தில் குறைச்சல் இல்லை
  • இந்தப் பூனையும் இந்தப் பாலைக் குடிக்குமா?
  • இந்தப் பெரிய கொள்ளையிலே அப்பா என்னப் பிள்ளை இல்லை
  • இந்தப் பெருமையையும் பந்தல் அழகையும் பார்த்தாயா பண்ணைக்காரா?
  • இந்தப் பையனுக்கு இந்த வீட்டு ஓதம் உறைத்து விட்டது
  • இந்த மடம் இல்லாவிட்டால் இன்னொரு சந்தை மடம்
  • இந்த மூஞ்சிக்குத் தஞ்சாவூர்ப் பொட்டு; வந்தவாசி வரையில் வல்லவாட்டு; அதைக் கழுவப் புழலேரித் தண்ணீர்
  • இந்த வளைவு சிக்கினால் எப்படித்தான் பிள்ளை பிழைக்கும்?
  • இந்த வீட்டிலே வைத்தது மாயமாய் இருக்கிறது
  • இந்த வீட்டுக்கு வந்தாலும் வந்தேன்; பக்கத்து வீட்டுக் கருவாட்டு நாற்றம் போச்சு
  • இந்திரன் கெட்டதும் பெண்ணாலே; சந்திரன் கெட்டதும் பெண்ணாலே
  • இந்திரனைச் சந்திரனை இலையாலே மறைப்பாள்; எமதர்ம ராசாவைக் கையாலே மறைப்பாள்
  • இந்திராணிக்கு இந்திரன் வாய்த்தது போல
  • இந்திராதி தேவர்க்கும் வந்திடும் தீவினை
  • இந்திரைக்கு மூத்தவள் மூதேவி
  • இப்படிப் பார்த்தால் ஸ்த்ரீ ஹத்தி; அப்படிப் பார்த்தால் பிரம்ம ஹத்தி
  • இப்போது இல்லையெனின் எப்போதும் இல்லை
  • இம்பூரல் தெரியாமல் இருமிச் செத்தான்
  • இம்மிய நுண்பொருள் ஈட்டி நிதியாக்கிக் கம்மியருள் மூவர் களிறு
  • இம்முனு போனாளாம்; பிள்ளையைப் பெற்றாளாம்
  • இமயம் சேர்ந்த காக்கையும் பொன்னாகும்
  • இமயம் முதல் குமரி வரையில்
  • இமைக்குற்றம் கண்ணுக்குத் தெரியாது
  • இயல்பாய் மணம் இல்லாச் சந்தனக் கட்டை இழைத்தாலும் மணக்காது
  • இயற்கை அழகே லேசான ஆபரணம்
  • இயற்கை வாசனையோ? செயற்கை வாசனையோ?
  • இரக்கப் போனாலும் சிறக்கப் போ
  • இரக்கம் இல்லாதவன் நெஞ்சு இரும்பினும் கொடிது,
  • இரங்காதவர் உண்டா? பெண் என்றால் பேயும் இரங்கும்
  • இரட்டைத் தோணியில் கால் வைத்தாற் போல
  • இரண்டு ஆட்டில் ஊட்டின குட்டியாய்த் தீர்ந்தது
  • இரண்டு ஆட்டிலே ஒட்டின குட்டி
  • இரண்டு எழுத்து மந்திரம், பச்சிலையால் தந்திரம்
  • இரன்டு ஏற்றம் இறைக்க எங்கள் அப்பனுக்குத் தெரியாது
  • இரண்டு ஓடத்தில் கால் வைக்கிறதா?
  • இரண்டு ஓடத்தில் கால் வைக்காதே
  • இரண்டு கண்ணும் பொட்டை; பெயர் புண்டரீகாக்ஷன்
  • இரண்டு கை தட்டினால்தான் ஓசை உண்டு
  • இரண்டு கை போதாது
  • இரண்டு கையும் போதாது என்று அகப்பையும் கட்டிக்கொண்டான்
  • இரண்டு சாஸ்திரிகள், இரண்டு ஜோசியர்கள், இரண்டு புலவர்கள், இரண்டு தாசிகள், இரண்டு வைத்தியர்கள், இரண்டு நாய்கள், இரண்டு கடிகாரங்கள், சேர்ந்து போக மாட்டார்கள்
  • இரண்டு தோணியில் கால் வைக்கிறதா?
  • இரண்டு நாய்க்கு ஓர் எலும்பு போட்டாற் போலே
  • இரண்டு பட்ட ஊரிலே குரங்கும் குடி இராது
  • இரண்டு பெண் கொண்டானுக்கு நடையிலே வாருகோல்; ஒரு பெண் கொண்டானுக்கு உறியிலே சோறு
  • இரண்டு பெண்டாட்டிக்காரன் பாடு திண்டாட்டம்
  • இரண்டு பெண்டாட்டிக்காரன் வீட்டில் நெருப்பு ஏன்?
  • இரண்டு பெண்டாட்டிக்காரனுக்குக் கொண்டை உண்டோடி?
  • இரண்டும் இரண்டு அகப்பை;
  • இரண்டும் கழன்ற அகப்பை
  • இரண்டும் கெட்டான் பேர்வழி
  • இரண்டு வீட்டிலும் கல்யாணம்; இடையே செத்ததாம் நாய்க்குட்டி
  • இரண்டு வீட்டு விருந்தாளி கெண்டை புரட்டிச் செத்தான்
  • இரத்தினத்தைச் சேர்ந்த இழை போல
  • இரந்தவன் சோறு என்றைக்கும் பஞ்சம் இல்லை
  • .இரந்து உண்டவன் இருந்து உண்ணான்
  • இரந்து குடித்தாலும் இருந்து குடி
  • இரந்தும் பரந்தவைக்குக் கொடுக்கவேணும்
  • இரந்தும் பருந்துக்கு இடு
  • இரந்தோர்க்கு ஈவது உடையார் கடன்
  • இரப்பவனுக்கு ஈவார் பஞ்சமா?
  • இரப்பவனுக்கு எங்கும் பஞ்சம் இல்லை
  • இரப்பவனுக்கு வெறுஞ் சோறு பஞ்சமா?
  • இரப்பான் சோற்றுக்கு எப்போதும் பஞ்சம் இல்லை
  • இரப்பான் சோற்றுக்கு வெண்சோறு பஞ்சமா?
  • இரப்பானைப் பிடித்ததாம் பறைப் பருந்து
  • இரவல் உடைமை இசைவாய் இருக்கிறது; என் பிள்ளை ஆணை, நான் கொடுக்கமாட்டேன்
  • இரவல் உடைமையும் இல்லாதாள் புடைவையும், அவிசாரி அக முடையானும் ஆபத்துக்கு உதவா
  • இரவல் கொடாதவை இருந்தாளமாட்டினம்
  • இரவல் சதம் ஆகுமா? மதனி உறவு ஆகுமா?
  • இரவல் சதமா? திருடன் உறவா?
  • இரவல் சீலையை நம்பி இடுப்புக் கந்தையை எறிந்தாளாம்
  • இரவல் சோறு தஞ்சம் தாங்காது
  • இரவல் துணியாம்; இரவல் துட்டாம்; இழுத்துக் கொட்டு மேளத்தை; இறுகிக் கட்டு தாலியை
  • இரவல் நகையும் இல்லாத வஸ்துவும் அவிசாரி அகமுடையானும் ஆபத்துக்கு உதவார்
  • இரவல் புடைவையிலே இது நல்ல கொய்சகந்தான்
  • இரவல் புருஷா, கதவைத் திற; ஏமாளிப் புருஷா, வீட்டை விடு
  • இரவற் சீலையை நம்பி இடுப்புக் கந்தையை எறியாதே
  • இரவிமுன் பணி போல
  • இரவில் உண்ணாமல் பகல் உண்ணாதவனுக்குப் பெருத்தல் இல்லை
  • இரவில் எதுசெய்தாலும் அரவில் செய்யாதே
  • இரவில் போனாலும் பரக்கப் போக வேண்டும்
  • இரவு உண்ணான் பருத்திருப்பான்
  • இரவு எல்லாம் இறைத்தும் பொழுது விடிந்து போச்சு
  • இரவு எல்லாம் திருடினாலும் கன்னக்கோல் சாத்த ஓர் இடம் வேண்டாமா?
  • இரவு வேளையில் ருத்திராட்சப் பூனை போல்
  • இராக் கண்ட கனவு மிடாப் போல வீங்கின கதை
  • இராகு திசையில் வாழ்ந்தவனும் இல்லை
  • இராச் செத்தால் பகல் பிழைக்கிறான்
  • இராச திசையில் கெட்டவணுமில்லை
  • இராசா மகளானாலும் கொண்டனுக்கு பெண்டுதான்
  • இராத்திரி செத்தால் விளக்கெண்ணெய்க்கு இல்லை; பகலில் செத்தால் வாய்க்கரிசிக்கு இல்லை
  • இராப்பகல் கண்ணிலே
  • இராப் பட்டினி கிடந்தவன் அகவிலை கேட்பானா?
  • இராப் பட்டினி கிடந்தவன் உரித்த வாழைப்பழம் விற்கிறதா என்று விசாரித்தானாம்
  • இராப் பட்டினி கிடந்தவனுக்குப் பாதித் தோசை போதாதா?
  • இராப் பட்டினி, பகல் கொட்டாவி
  • இராப் பட்டினி பாயோடே
  • இராப் பிறந்த குழவி பகலிலே கத்தும்; பகல் பிறந்த குழந்தை இராவிலே கத்தும்
  • இராப் பிறந்த பிள்ளையும் ஆகாது; பகல் பிறந்த பிள்ளையும் ஆகாது
  • இராமனைப் போல் அரசன் இருந்தால் அனுமனைப் போல் சேவகன் இருப்பான்
  • இரா முழுதும் ராமாயணம் கேட்டுச் சீதைக்கு ராமன் என்ன வேண்டும் என்றானாம்
  • இராவணன் என்றால் படையும் நடுங்கும்
  • இரிசிக்குப் புருஷன் ஆசை உண்டா?
  • இரிசியார் உடைமை இராத் தங்கப் போகாது
  • இருக்க இடம் கொடுத்தால் படுக்க இடம் கேட்டாற் போல்,
  • இருக்க இருக்க எல்லாம் இசைவாகும்
  • இருக்கச் சாண் இடம் இல்லாமல் போனாலும் பெருக்கப் பெருக்கப் பேசுவதில் மாத்திரம் குறைவில்லை
  • இருக்க வேண்டும் என்றால் இரும்பைத் தின்னு
  • இருக்கிற அளவோடு இருந்தால் எல்லாம் தேடி வரும்
  • இருக்கிற அன்றைக்கு எருமை மாடு தின்றாற் போல
  • இருட்டினால் எப்போதும் இரண்டு பணம் கேட்கிறான்
  • இருக்கிற இடத்தில் இருந்தால் சுகம்
  • இருக்கிற இடத்தை விளக்கேற்றித்தான் பார்க்க வேண்டும்
  • இருக்கிறது மூன்று மயிர்; அதில் இரண்டு புழுவெட்டு
  • இருக்கிறதை விட்டுப் பறக்கிறதைப் பிடித்தானாம்
  • இருக்கிறபோது பெருங்கும்பம்; இல்லாத போது காவிக் கும்பம்
  • இருக்கிற வரையில் இருள் மூடிச் போச்சாம்; செத்தவன் கண் செந்தாமரை என்றானாம்
  • இருக்கிறவன் செவ்வையாய் இருந்தால் சிரைக்கிறவன் செவ்வயாய்ச் சிரைப்பான்
  • இருக்கிறவன் நல்லவன் ஆனால் இடைப்பந்தியில் இருந்தால் என்ன? கடைப்பந்தியில் இருந்தால் என்ன?
  • இருக்கிறவனுக்கு ஒரு வீடு; இல்லாதவனுக்கு அநேக வீடு
  • இருக்கிறவனுக்கு ஒன்று; இல்லாதவனுக்குப் பத்து
  • இருக்கும் இடம் ஏவுமா?
  • இருக்கும் போதே இரக்கப் போவானேன்?
  • இருக்கும் வளையில் எலியையும் கொல்ல முடியாது
  • இருசி உடைமை இராந் தங்கல் ஆகாது
  • இரு சுழி இருந்து உண்டாலும் உண்ணும், இரந்து உண்டாலும் உண்ணும்
  • இருட்டில் உதட்டைப் பிதுக்கின மாதிரி
  • இருட்டில் சிவப்பாய் இருந்தால் என்ன; கறுப்பாய் இருந்தால் என்ன?
  • இருட்டில் போனால் திருட்டுக் கை நில்லாது
  • இருட்டிலே குருட்டு ஆண்டி
  • இருட்டு அறையில் மங்கு கறந்து எய்த்தாற் போல
  • இருட்டு உள், சுருட்டுப் பாய், முரட்டுப் பெண்டாட்டி
  • இருட்டுக்கு எல்லாம் சரி
  • இருட்டுக் குடிவாழ்க்கை திருட்டுக்கு அடையாளம்
  • இருட்டு வீட்டில் குருட்டுப் பிள்ளை பெற்றாளாம்
  • இருட்டு வீட்டில் நுழைந்தாலும் திருட்டுக் கை சும்மா இராது
  • இருட்டு வீட்டில் குருட்டுக் காக்காய் ஒட்டுகிறது போல;
  • இருட்டு வீட்டிலே குருட்டுக் கொக்குப் பிடித்தாற் போல
  • இருட்டு வேலையோ? குருட்டு வேலையோ?
  • இருட்டைக் கொண்டு ஓட்டையை அடைத்தது போல்,
  • இருத்தினவன் தோளில்தான் அழுத்துவார்கள்
  • இருதயத்தில் நினைத்தது எல்லாம் எழுதிக் கட்டு
  • இருதயத்து எழுந்த புண் போல
  • இருதலைக் கொள்ளி எறும்பு போல்
  • இருதலைக் கொள்ளியில் எறும்பு பிழையாது
  • இருதலை மணியன் பாம்பைப் போல்
  • இருதலை வழக்கு நூலினும் செம்மை
  • இரு தோணியில் கால் வைக்காதே
  • இருந்த இடத்து வேலை என்றால் எங்கள் வீட்டுக்காரரையும் கூப்பிடுங்கள்
  • இருந்த இடத்து வேலைக்காரன் எங்கள் வீட்டு ஆண் பிள்ளையாம்
  • இருந்த இடம் ஏழு முழம் ஆழம் வெந்து போகும்
  • இருந்த இடம் தெரியாமல் புல் முளைத்துப் போயிற்று
  • இருந்த கால் மூதேவி; நடந்த கால் சீதேவி
  • இருந்த நாள் எல்லாம் இருந்துவிட்டு ஊர்ப் பறையனுக்குத் தாரை வார்த்தது போல
  • இருந்தல்லவோ படுக்க வேணும்?
  • இருந்தவன் இருப்பவனுக்கு வழிகாட்டி
  • இருந்தவன் எழுந்திருக்கிறதற்குள்ளே நின்றவன் ஒரு காதம் போவான்
  • இருந்தவன் தலையிலே இடி விழுந்தாற் போல
  • இருந்தவனுக்குப் போனவன் குணம்
  • இருந்த வெள்ளத்தைத் தள்ளிற்றாம் வந்த வெள்ளம்
  • இருந்தால் அப்பன்; இல்லாவிட்டால் சுப்பன்
  • இருந்தால் இடுவது; இல்லையேல் விடுவது
  • இருந்தால் ஓணம்; இல்லா விட்டால் ஏகாதசி
  • இருந்தால் இருப்பீர்; எழுந்தால் நிற்பீர்
  • இருந்தால் செட்டி; எழுந்திருந்தால் சேவகன்
  • இருந்தால் துவாதசி; இல்லா விட்டால் ஏகாதசி
  • இருந்தால் நவாப் சாயபு; இல்லா விட்டால் பக்கிரி சாயபு
  • இருந்தால் பூனை; பாய்ந்தால் புலி
  • இருந்து அடித்தேன்; பறந்து போயிற்று
  • இருந்து இருந்து இடையனுக்கு வாழ்க்கைப்பட்டாளாம்
  • இருந்து இருந்து ஒரு பிள்ளை பெற்றாள், மலமும் ஜலமும் இல்லாமல்
  • இருந்து இருந்து ஒரு பெண்ணைக் கொண்டான்; மலஜலம் எல்லாம் வீட்டுக்குள்ளே
  • இருந்து இருந்து பார், இடி விழுவான் காரியத்தை
  • இருந்து கொடுத்தால் நடந்து வாங்கு
  • இருந்து பணம் கொடுத்து நடந்து வாங்க வேண்டியதாய் இருக்கிறது
  • இருந்தும் கெடுத்தான்; செத்தும் கெடுத்தான்
  • இரு நாய்க்கு இட்ட எலும்பு போல
  • இருப்பது எல்லாம் இருந்துவிட்டு இளித்த வாயன் ஆவானேன்?
  • இருப்பது பொய்; போவது மெய்
  • இருப்பவனுக்கும் கேளாதவனுக்கும் கொடுக்காதே
  • இருப்பிடம் தலைப்பிள்ளை; தலைக்கடை தென்னம் பிள்ளை
  • இரும்புக்கட்டியைக் காற்று அடித்தபோது இலவம் பஞ்சு எனக்கு என்ன புத்தி என்கிறதாம்
  • இரும்புக் கதவை இடித்துத் தவிட்டுக் கொழுக்கட்டை எடுப்பதா?
  • இரும்பு கோணினால் ஆனையை வெல்லலாம்; கரும்பு கோணினால் சுட்டியும் பாகும் ஆகும்
  • இரும்புச் சலாகையை விழுங்கிவிட்டு இஞ்சிச் சாற்றைக் குடிப்பதா?
  • இரும்பு செம்பு ஆனால் திரும்பிப் பொன் ஆகும்
  • இரும்பு செம்பு ஆனால் துரும்பு தூண் ஆகும்
  • இரும்புத் துறட்டுக்கு அசையாத புளியங்காய் திருப்பாட்டுக்கு அசையுமா?
  • இரும்புத் தூணை எறும்பு அரித்தாற்போல்
  • இரும்புத் தூணைச் செல் அரிக்குமா?
  • இரும்புப் பட்டறையில் ஈக்கு என்ன வேலை?
  • இரும்பு பிடித்த கையும் சிரங்கு பிடித்த கையும் சும்மா இரா
  • இரும்பும் குறும்பும் இருக்கக் கெடும்
  • இரும்பு முளைத்தாலும் கரும்பு முளைக்காது
  • இரும்பை எலி கவ்விற்று என்கிறான், படுக்காளி
  • இரும்பை எலி தின்னுமா?
  • இரும்பை எறும்பு அரிக்குமா?
  • இரும்பைக் கறையான் அரித்தால் குழந்தையைப் பருந்து கொண்டு போகாதா?
  • இருமலே இடி விழுகிறது; தும்மல் எப்படியோ?
  • இரு மனசு மங்கையோடு இணங்குவது அவம்
  • இருமும்போது கட்டிய தாலி தும்மும்போது அறுந்து விட்டது
  • இருவர் ஒத்தால் ஒருவருக்கும் பயம் இல்லை
  • இருவர் நட்புக்கு ஒருவர் பொறுமை
  • இருவர் நட்பு ஒருவர் பொறை
  • இருவரும் ஒத்தால் பிணக்கு வருவானேன்?
  • இருவிரல் தோலும் அவற்றின்மேல் மயிரும் எனக்கு இல்லையே!
  • இருளன் பிள்ளைக்கு எலி பஞ்சமா?
  • இருளன் பிள்ளைக்கு எலி பிடிக்கக் கற்றுக் கொடுக்க வேண்டுமா?
  • இருளன் ராஜவிழி விழிப்பானா?
  • இருளுட் ஒரு காலம்; நிலவும் ஒரு காலம்
  • இரை விழுங்கின பாம்பு போல
  • இல்லது வாராது; உள்ளது போகாது
  • இல்லறம் பெரிது; துறவறம் சிறிது
  • இல்லறம் அல்லது நல்லறம் அன்று
  • இல்லறம் நல்லறம்
  • இல்லாத சொல் அல்லல்படும்
  • இல்லாததைக் கொண்டு கல்லாததைக் கனா என்றால் யாரால் முடியும்?
  • இல்லாத பிள்ளைக்கு இலுப்பைப்பூச் சர்க்கரை
  • இல்லாதவன் கோபம் பொல்லாதது
  • இல்லாதவன் பெண்சாதி எல்லாருக்கும் தோழி
  • இல்லாதவன் பொல்லாதவன்
  • இல்லாதவனோ, பொல்லாதவனோ?
  • இல்லாத வீட்டுக்கு இலஞ்சியம்
  • இல்லாது சொல்லி அல்லற்படுதல்
  • இல்லாது பிறவாது; அள்ளாது குறையாது
  • இல்லாது இல்லன்; இருப்பதும் இல்லன்
  • இல்லார் இருமையும் நல்லது எய்தான்
  • இல்லாளை விட்டு வல்லாண்மை பேசுகிறதா?
  • இல்லிடம் இல்லார்க்கு நல்லிடம் இல்லை
  • இல்லு அலுக்கானே பண்டுக வச்சுனா
  • இல்லை என்கிற மகராசி இல்லை என்றாள்; தினம் போடுகிற மூதேவிக்கு என்ன வந்தது?
  • இல்லை என்ற வீட்டில் பல்லியும் சேராது
  • இல்லையா இலை மறைவு, காய் மறைவு?
  • இல்லையே ஒன்றுக்கும் உதவாத ஒன்று
  • இல்லோர் இரப்பது இயல்பு
  • இலக்கணப் பெண்சாதி மானியம் காக்கிறாள்
  • இலக்கணம் கற்றவன் கலக்கம் அற மன்னர் சபை காண்பான்
  • இலக்கணம் புலவர்க்கு அணிகலன்
  • இலங்கையில் பிறந்தவன் எல்லாம் இராவணன் ஆவது இல்லை
  • இலங்கையைச் சுட்ட குரங்கு
  • இலந்தைப் பழப் புழுப் போலத் துடிக்கிறது
  • இலவசமாய் வந்த மாட்டை நிலவிலே கட்டி ஓட்டு
  • இலவு காத்த கிளி போல
  • இலுப்பைச் சர்க்கரைக் கொடையாம்; துரைகள் மெச்சின நடையாம்
  • இலுப்பைப் பூப்போல்
  • இலுப்பைப் பூவைத் திருப்பினால் இரண்டு புறமும் பொத்தல்
  • இலை அசைந்தாலும் இலைக்குக் கேடு; முள் அசைந்தாலும் இலைக்குக் கேடு
  • இலைக்கும் உண்டு, மட்டையும் பழுப்பும்
  • இலை சாய்கிற பக்கம் குலை சாயும்
  • இலை தின்னி காய் அறியான்
  • இலைப் பழுப்பு ஆனாலும் குலப்பழுப்பு ஆகாது
  • இலைப் புரை கிளைத்தல்
  • இலைமறை காய் போல்
  • இலை மறைவு, காய் மறைவு
  • இலை மறைவு, தலை மறைவு
  • இலையும் பழுப்பும் எங்கும் உண்டு
  • இவ்வூர்ப் பூனையும் புலால் தின்னாது
  • இவருக்குச் சொல்லும் புத்தி கடலிற் பெருங்காயம் கரைத்தாற் போல் ஆகிறது
  • இவ நான் தாலி கட்டின பொண்டாட்டி. இவள நான் அடிப்பேன், உதைப்பேன், எதுவேண்டுமானாலும் செய்வேன்.
  • இவன் ஊராருக்குப் பிள்ளை
  • இவன் கல்லாது கற்றவன் உள்ளங்கையில் வைகுந்தம் காட்டுவான்
  • இவன் புத்தி உலக்கைக் கொழுந்து,
  • இவன் மகா பெரிய கள்ளன்; காலாலே முடிந்ததைக் கையாலே அவிழ்ப்பது அரிது
  • இவன் வாழ்ந்த வாழ்வு மறுகிலேன் மல்லாக்கினேன்
  • இவனுக்கும் அவனுக்கும் ஏழு பொருத்தம்
  • இழப்பாரை ஜயிப்பார் இல்லை; எதிர்ப்பாரை ஜயிப்பார் உண்டு
  • இழந்த சொத்துப் பெரிய சொத்து
  • இழவுக்கு வந்தவள் தாலி அறுப்பாளா?
  • இழவுக்கு வந்தவளை உழவுக்கு அழைத்தானாம்
  • இழவு கொடுப்பானுக்கு வாழ்க்கைப்பட்டு ஓட்டமே ஒழிய நடை இல்லை
  • இழவு சொன்னவன் மேலா பழி?
  • இழவு வீட்டுக்குப் போனாலும் இடக்கை நீளும்
  • இழவைத் துறப்பவர் எல்லாம் துறப்பார்
  • இழுக்கான பொன்னைப் புடத்தில் வைத்து எடுப்பார்
  • இழுக்குடைய பாட்டிற்கு இசை நன்று
  • இழுத்தபடி எல்லாம் வரும் தங்கக் கம்பி
  • இளங்கன்று பயமறியாது
  • இழுத்துப் பிடித்து நின்றாலும் வழுக்கி வழுக்கிப் போகும்
  • இழுத்து மூட வேணும்
  • இழுவை கண்டால் அடி பார்ப்பானேன்?
  • இழை ஆயிரம் பொன் பெற்ற இந்திர வர்ணப்பட்டு
  • இழை ஊடாடா நட்புப் பொருள் ஊடாடக் கெடும்
  • இழையத் தீட்டிக் குழைய வடித்தது போல
  • இளகின இரும்பைக் கண்டால் கொல்லன் குண்டியைத் தூக்கி அடிப்பான்
  • இளங் கன்று பயம் அறியாது
  • இளஞ்சிங்கம் மதயானைக்கு அஞ்சுமா?
  • இளநீர்க் காய் உதிர்க்கிறது போல
  • இளமைச் சோசியம்; முதுமை வைத்தியம்
  • இளமையில் கல்வி எப்போதும் நிற்கும்
  • இளமையில் கல்வி சிலையில் எழுத்து
  • இளமையிற் கல்வி கல் மேல் எழுத்து
  • இளமையில் சோம்பல் முதுமையில் வருத்தம்
  • இளமையில் சோம்பல், முதுமையில் வறுமை
  • இளமையில் பழக்கம் எப்போதும் மறவாது
  • இளமையில் பழக்கம் சுடுகாடு மட்டில்
  • இளமையில் பழக்கம் முதுமையில் சுபாவம்
  • இளமையில் முயற்சி முதுமையில் காக்கும்
  • இளமையும் முதுமையும் சரியான வயசு அல்ல
  • இளவெயில் காயாத நீயா தீப் பாயப் போகிறாய்?
  • இளிச்ச கண்ணி பிளிச்சை வாங்காள்
  • இளிச்ச வாயனைக் கண்டால் எல்லாருக்கும் இளக்காரம்
  • இளித்துக் கொண்டிருந்தாளாம் மடத்தாயி; ஏறி அடித்தானாம் தவசிப் பிள்ளை
  • இளைஞன் ஆனாலும் ஆடுவான் மூப்பு
  • இளைத்த உடம்புக்கு இரும்பைக் கொடு
  • இளைத்த நாயை ஏறி மிதிப்பது போல,
  • இளைத்த நேரத்துக்குப் புளித்த மோர்
  • இளைத்தவர் கிளைப்பார்; கிளைத்தவர் இளைப்பார்
  • இளைத்தவரைச் செயிப்பார் உண்டோ?
  • இளைத்தவன் இரும்பு தின்ன வேண்டும்
  • இளைத்தவன் இரும்பை உண்; வலுத்தவன் வாளம் உண்
  • இளைத்தவன் எள்ளு; வலுத்தவன் கரும்பு
  • இளைத்தவன் எள்ளு; வலுத்தவன் வாழை
  • இளைத்தவன் எள்ளு விதைக்க வேண்டும்; கொழுத்தவன் கொள்ளு விதைக்க வேண்டும்
  • இளைத்தவன் எள்ளு விதைப்பான்; பருத்தவன் கரும்பு போடுவான்
  • இளைத்தவன் ஒரு வருஷத்துக்கு எள் விதைக்க வேண்டும்
  • இளைத்தவன் சிநேகிதனைச் சேர்
  • இளைத்தவன் தலையில் ஈரும் பேனும்
  • இளைத்தவன் தலையில் சொட்டு
  • இளைத்தவன் பெண்டாட்டி எல்லாருக்கும் மச்சினி
  • இளைத்தவனைக் கண்டானாம், ஏணிப் பந்தம் பிடித்தானாம்
  • இளைத்தவனை வலியான் கோபித்தால் வலியானை வல்லவன் கேட்பான்
  • இளைத்து இனத்தாரிடம் போவானேன்?
  • இறங்கு பொழுதில் மருந்து குடி
  • இறடுங்கால் இறடும்
  • இறந்தவன் இருப்பவனுக்கு வழிகாட்டி
  • இறந்தவன் பிள்ளை இருந்தவன் அடைக்கலம்
  • இறந்தவனுக்கு எள்ளும் தண்ணீரும்
  • இறந்தால் போச்சு மூச்சு; மறந்தால் போச்சுக் காசு
  • இறந்தாலும் சிங்காரக் கழுவில் இறக்க வேண்டும்
  • இறந்து இறந்து பிறந்தாலும் இருவக்கரையானாய்ப் பிறக்க வேணும்
  • இறப்பில் இருந்த அகப்பை சோற்றில் விழுந்த மாதிரி
  • இறாக் கறியோ, புறாக் கறியோ?
  • இறுகினால் களி , இளகினால் கூழ்
  • இறுத்த குடிக்கு அனர்த்தம் இல்லை
  • இறுப்பானுக்குப் பணமும் கிடையாது; உழைப்பானுக்குப் பெண்ணும் கிடையாது
  • இறைக்க, இறைக்கக் கிணறு சுரக்கும்
  • இறைக்க ஊறும் மணற்கேணி; ஈயப் பெருகும் பெருஞ் செல்வம்
  • இறைக்கிறவன் இளிச்ச வாயனாக இருந்தால் மாடு மச்சான் முறை கொண்டாடும்
  • இறைக்கும் கிணறு ஊறும்
  • இறைச்சி தின்றவன் கடுப்புக்கு மருந்து அறிவான்
  • இறைச்சி தின்றாலும் எலும்பைக் கோத்துப் போட்டுக் கொள்ளலாமா?
  • இறைத்த கிணறு ஊறும், இறையாத கேணி நாறும்
  • இறைத்த கிணறு சுரக்கும்
  • இறைத்தோறும் ஊறும் கிணறு
  • இறையாத கிணறு பாழும் கிணறு
  • இறைவனை ஏற்று; அரசனைப் போற்று
  • இன்சொல் இடர்ப்படுவது இல்லை
  • இன்சொல்லால் இடர் வராது
  • இன்பத்தில் ஆசை எவர்க்கும் உண்டு
  • இன்ப துன்பம் இரண்டும் காவடிப் பானைகள் போல
  • இன்பம் உற்றிடில் துன்பம் இல்லை
  • இன்பம் வருவதும் துன்பம் வருவதும் எடுத்த உடலுக்கு வரம்
  • இன்பமும் துன்பமும் இணை விடா
  • இன்பமும் துன்பமும் இதயத்தே ஆம்
  • இன்பமும் துன்பமும் எடுத்த உடலுக்கு இயல்பு
  • இன்பமும் துன்பமும் பொறுமையிலே
  • இன்பமும் துன்பமும் யாருக்கும் உண்டு
  • இன்று அற்று இன்று போகிறதா?
  • இன்று இருப்பவர் நாளைக்கு இல்லை
  • இன்றைக்கு அரசன் நாளைக்கு ஆண்டி
  • இன்றைக்கு அறையில் இருந்தால் நாளைக்கு அம்பலத்தில் வந்தே தீரும்
  • இன்றைக்கு ஆகிறது நாளைக்கு ஆகட்டும்
  • இன்றைக்கு ஆவது நாளைக்கு ஆகுமா?
  • இன்றைக்கு ஆளுவார் நாடு; நாளைக்குக் கையில் ஆளுவார் ஓடு
  • இன்றைக்கு இருப்பார் நாளைக்கு இல்லை
  • இன்றைக்கு இலை அறுத்தவன் நாளைக்கும் இலை அறுப்பான்
  • இன்றைக்கு இலை அறுத்தவன் நாளைக்கு குலை அறுப்பான்.
  • இன்றைக்கு எல்லாம் பார்த்துக் கொண்டிருக்கலாம் அழகை; பசியாது
  • இன்றைக்கு என்பதும் நாளைக்கு என்பதும் இல்லை என்பதற்கு அடையாளம்,
  • இன்றைக்குச் சிரிப்பு; நாளைக்கு அழுகை,
  • இன்றைக்குச் சின்னதுக்கு வந்தால் நாளைக்குப் பெரியதுக்கு வரும்
  • இன்றைக்கு செத்தால் நாளைக்கு இரண்டு நாள் இன்னம் இருக்கிறது தேருக்குள் சிங்காரம் (இன்னும்) இன்னம் இன்னம் இசைச்சொல் அனேகம் இன்னமும் கெடுகிறேன் பந்தயம் என்ன என்றது போல இன்னமும் பேயோடேனும் பிரிவு
  • இன்றும் கிடக்குது ரியோ ரியோ இனக்கூட்டு ஆனாலும் நிலக்கூட்டு ஆகாது இனத்தால் இனம் ஆகும்;பணத்தால் ஜனம் ஆகும் இனத்தை இனம் சேரும் இனத்தை இனம் தழுவும்
  • இனம் இனத்தோடு சேரும்;பணம் பணத்தோடு சேரும் இனம் இனத்தோடே;வெள்ளாடு தன்னோடே இனம் கெட்ட ஏகாதசிக்கு என்ன பலகாரம்? இனம் பிரிந்த மான் போல
  • இனம் இனத்தோடே வெள்ளாடு தன்னோடே
  • இனாம் வந்த மாட்டை நிலவில் கட்டி ஓட்டு என்றானாம் இனிமேல் எமலோகம் பரியந்தம் சாதிக்கலாம் இனிமேல் ஒரு தெய்வத்தை கை எடுக்கிறதா? இஷ்கா இஷ்பாவாக இருக்கிறான் இஷ்டம் அற்ற முனியன் அஷ்டமத்து சனியன்
  • இஷ்ராவினால் தெரிந்து கொள்ளாதவன் என்ன சொன்னாலும் தெரிந்து கொள்ள மாட்டான்

[தொகு]

  • ஈ அடித்தான் காப்பி.
  • ஈ எறும்பு எண்ணாயிரமும் சிரிக்கிறது.
  • ஈ என்று போயிருக்கிறான்.
  • ஈ ஏறி மலை குலுங்கினது போல.
  • ஈ ஏறி மலை சாயுமா?
  • ஈ ஓட்டுகிறான்
  • ஈ முட்டுவது எருமைக்கடா முட்டுவது போல.
  • ஈ விழுந்தாலும் எடுத்தாலொழியப் போகுமா?
  • ஈ விஷ்டித்ததும் நாய் திருடித் தின்றதும்.
  • ஈகை உடையோன் எக்களிப்பு அடைவான்
  • ஈக் கடித்த பெண்ணுக்கு இழை ஒட்டுவதா?
  • ஈக் கலையாமல் தேன் எடுப்பார்கள்; எடுக்காமல் பிடிப்பார்கள்
  • ஈக்கு விடம் தலையில், தேளுக்கு விடம் கொடுக்கில்.
  • ஈக்கு விடம் தலையில்; தேளுக்கு விடம் கொடுக்கில்
  • ஈக்கும் ஆனைக்கும் சம்பந்தமா?
  • ஈக்கும் நாய்க்கும் தடை இல்லை.
  • ஈக்கும் பாலுக்கும் எச்சில் இல்லை.
  • ஈசல் இறகு எல்லாவற்றிலும் மிருது.
  • ஈசல் பறந்தால் மழை.
  • ஈசல் பிறந்தால் மழை மாறும்.
  • ஈசல் புற்றில் கரடி வாய் வைத்தாற் போல.
  • ஈசல் பெறும் போக்கில் சொறியாந் தவளை வேட்டை ஆடும்.
  • ஈசல் பெறும் போக்கில் தவளை தத்தி விழுங்குது.
  • ஈசல் பொறுக்கி பேசவும் அறியான்.
  • ஈசல் மடிந்தாற் போலே மாண்டதே சேனை.
  • ஈசனுடைய அடியார் மனம் எரிந்து புகைந்தால் வீண் போகுமா?3745
  • ஈசனைப் போற்று; அரசனை வாழ்த்து.
  • ஈசனைப் போற்று; அரசனை வாழ்த்து.
  • ஈசான்ய மின்னலுக்கு எருதும் நடுங்கும்
  • ஈசான்ய மின்னலுக்கு எருதும் நடுங்கும்.
  • ஈசுவரனுக்குத்தான் வெளிச்சம்
  • ஈசுவரன் கிருபை எல்லார்க்கும் போதும்.
  • ஈசுவரன் கிருபை எல்லார்க்கும் போதும்.
  • ஈசுவரன் கோவில் திருநாள் ஒரு நாள் கந்தாயம்.
  • ஈசூரும் பூதூரும் என்றும் இழப்பு.
  • ஈச்ச முள் கொண்டு இறுக இறுகத் தைத்தாலும் தேற்றிய வசனம் சொல்லாமல் விடான்.
  • ஈச்சங் கள் எதிலும் குளிர்ச்சி.
  • ஈச்சங் காட்டில் எருமை குடி இருந்தது போல.
  • ஈச்சங் குலையில் தேன் வைத்த மாதிரி.
  • ஈச்சமுள்ளாலே இருவாயும் தைத்தாலும் தேங்காய்க்கு மஞ்சள் இல்லை, பூவுக்கு மணம் இல்லை என்கிறான்.
  • ஈஞ்சைக் கண்டால் கிழி; எருக்கைக் கண்டால் சொடுக்கு.
  • ஈடன் பாடு அஞ்சான்? கூழை எருது நுளம்புக்கு அஞ்சாது.
  • ஈடு ஆகாதவனை எதிராக்காதே.
  • ஈடு இணை அற்றது
  • ஈடு உள்ள குடிக்குக் கேடு இல்லை.
  • ஈடு ஜோடு எங்கும் கிடையாது.
  • ஈடு ஜோடு சொல்ல முடியாது.
  • ஈடும் எடுப்பும் இல்லாதது.
  • ஈட்டி எட்டின மட்டும் பாயும்; பணம் பதின் காதம் குத்தும்.
  • ஈட்டி எட்டின மட்டும் பாயும்; பணம் பாதாளம் வரையில் பாயும்.
  • ஈட்டி எட்டு முழம் பாயும் பணம் பாதாளம் மட்டும் பாயும்.
  • ஈட்டி வாயன் தேடிக் கற்பூர வாயனுக்குக் கொடுத்தது போல
  • ஈட்டிய பொருளினும் எழுத்தே உடைமை
  • ஈட்டுக்கு ஈடும் சோட்டுக்குச் சோடுமாய் இருந்தால் வாசி.
  • ஈட்டுக்கும் பாட்டுக்கும் இருந்தாள் இரு குமரி.
  • ஈதல் உடையானை யாவரும் புகழ்வர்.
  • ஈந்து பார்த்தால் இம்மி வெளியாகும்.
  • ஈப் பறக்க இசை கேடு வந்தாற் போல் ஆச்சுது.
  • ஈப் பிசினி இரப்பதுகூடக் கஞ்சிசம்.
  • ஈப்பாக்கு வைத்த மாதிரி.
  • ஈமக் கடனை எழுந்து முறை செய்
  • ஈயத்தைக் காதில் காய்ச்சி ஊற்றினாற் போல.
  • ஈயத்தைக் காய்ச்சலாம்; இரும்பைக் காய்ச்சலாமா?
  • ஈயத்தைப் பார்த்து இளித்ததாம் பித்தளை
  • ஈயத்தைப் புடம் வைத்தால் ஈயம் வெள்ளி ஆகுமா?
  • ஈயப் பெருகும் பெருஞ் செல்வம்.
  • ஈயம் பிடித்தவன் எது சொல்லினும் கேளான்.
  • ஈயாத கருமிக்கு ஏராளச் செலவு.
  • ஈயாத பத்தினியிடம் ஈ என்றாலும், இல்லையே அது கொசு என்பாளாம்
  • ஈயாத புல்லர் இருந்தென்ன? போய் என்ன?
  • ஈயாத புல்லனை எவ்விடத்திலும் காணோம்.
  • ஈயாத லோபி இருந்தென்ன? போய் என்ன?
  • ஈயாதார் வாழ்ந்தென்ன? இண்டஞ்செடி பழுத்து என்ன?
  • ஈயாப் பத்தன் பேராசை கொண்டு பெருக்கத் தவிக்கிறான்
  • ஈயார் உறவும் ஈகை இல்லா அன்பும் பாழ்
  • ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்
  • ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்.
  • ஈயார் பொருளுக்குத் தீயார்.
  • ஈயுந்தனையும் எரு விடு; காயுந்தனையும் களை பறி
  • ஈயும் எறும்பும் எங்கும் உண்டு
  • ஈயைப் பிடித்தால் கை வேறு, கால் வேறு.
  • ஈயைப் போல் சுத்தமும் எறும்பைப்போல் சுறுசுறுப்பும்.
  • ஈர நாவிற்கு எலும்பில்லை.
  • ஈர நாவுக்கு எலும்பு இல்லை.
  • ஈர நிலத்தில் ஏரைப் பிடி.
  • ஈர நெஞ்சம் இரங்கும்; இரங்கா நெஞ்சம் அரங்கும்.
  • ஈரச் சீலையைப் போட்டுக் கழுத்தை அறுப்பான்.
  • ஈரத் துணியைப் போட்டுக் கழுத்தை வெட்டுவான்.
  • ஈரத்தில் ஏரைப் பிடி.
  • ஈரமும் கொங்கும் எதிர்த்து மின்னினால் சாமத்துக்கு மழை தப்பாமல் வரும்.
  • ஈரம் அற்ற இடத்திலே ஈ மொய்க்குமா?
  • ஈரம் இருக்கிற இடத்திலே ஈ மொய்க்கும்.
  • ஈரம் இல்லா நெஞ்சத்தார்க்கு என் செய்தும் என்ன?
  • ஈரம் உடையோரை யாவரும் புகழ்வர்.
  • ஈரம் உள்ள இடத்தில் ஈ மொய்க்கும்.
  • ஈரம் கண்டு அவிசாரி பிடிக்கிறவர்.
  • ஈரம் காய்ந்தால் பிட்டத்தில் மண் ஒட்டாது.
  • ஈரம் போகாமல் எருவை மூடு.
  • ஈரலிலே மயிர் முளைத்தவன்.
  • ஈரூரில் உழுதவனும் கெட்டான்; இரண்டு பெண் கட்டினவனும் கெட்டான்.
  • ஈரூர் வேளாண்மையும் தாரம் இரண்டும் தனக்குப் பகை.
  • ஈரை நினைப்பான், பேரை மறப்பான்.
  • ஈரைப் பேன் ஆக்கிப் பேனைப் பெருமாள் ஆக்குகிறது.
  • ஈர் உருவப் பேன் அகப்படும்.
  • ஈர் பேன் ஆகிப் பேன் பெருமாள் ஆனதுபோல,
  • ஈர்க்கிலே குத்தி இறப்பிலே வைத்தாற்போல.
  • ஈர்ந்து உழும் புன்செய் ஈரம் தாங்கும்.
  • ஈவதினும் மேல் இல்லை; இரப்பதினும் தாழ்வு இல்லை.
  • ஈவதைக் கண்டார் யாவரும் அண்டார்.3820
  • ஈவோனுக்கு ஒரு போது உணவு; இரப்போனுக்குப் பல போது உணவு.
  • ஈனம் மானம் அற்றவன் இரந்து வயிறு வளர்ப்பான்.
  • ஈனருக்கு இடம் கொடுத்தால் இல்லிடம் எல்லாம் பாழ்.
  • ஈனரை அடுத்தால் மானம் அழியும்.
  • ஈனவும் தெரியாது; எடுக்கவும் தெரியாது.
  • ஈனனுக்கு இரு செலவு.
  • ஈனாத மாட்டுக்கு ஒரு கடுக்காய்; இளம் பிள்ளைத்தாய்ச்சிக்கு ஏழு கடுக்காய்.
  • ஈனாப் பெண்கள் இருவர் கூடினால் காயா வரகு நீறாய்ப் போம்.

[தொகு]

  • உகம் முடிய மழை பெய்தாலும் ஓட்டாங் கிளிஞ்சல் பயிர் ஆகுமா?
  • உடல் உள்ள வரையில் கடல் கொள்ளாத கவலை.
  • உடம்பு போனால் போகிறது கை வந்தால் போதும்.
  • உடைமையும் வறுமையும் ஒரு வழி நில்லா
  • உடையவன் பாரா வேலை ஒரு முழங் கட்டை.
  • உச்சத்தில் சொன்னால் அச்சம் இல்லை
  • உச்சந் தலையில் செருப்பால் அடித்தது போல.
  • உச்சந் தலையில் முள் தைத்து உள்ளங்காலில் புரை ஓடிற்றாம்.
  • உச்சந் தலையில் செருப்பால் அடித்தாலும் உச்சி குளிருமா?
  • உச்சனை உச்சன் பார்த்தால் மச்சு வீடும் குச்சு வீடாகும்.
  • உங்கள் அப்பன் ஆர்க்காட்டு நவாபா?
  • உங்கள் அப்பன் ஏழரைக் கோடி.
  • உங்கள் அப்பன் சீமை ஆளுகிறானா?
  • உங்கள் அப்பன் செத்தான்; பழி உன்னை விடேன்.
  • உழக்கு அரிசி ஆனாலும் ஓயாது மெல்லுவாள்.
  • உலகம் பல விதம்
  • உச்சி குளிர்ந்தது.
  • உங்கள் அப்பன் பூச்சிக்குப் பயப்பட்டானா, உன் பூச்சிக்குப்பயப்பட?
  • உங்கள் உறவிலே வேகிறது ஒருகட்டு விறகிலே வேகிறது மேல்.
  • உங்களைக் கடலிலே கை கழுவினேன்.
  • உங்கள் பெண்டுகள் கொண்டான் அடித்தால் கண்கள் கொள்ளாது
  • உங்கள் வீட்டுப் பனங்கட்டை ஒற்றைப் பணத்தை முடிந்து கொண்டு கிடக்குமோ?
  • உடைத்த சங்கு ஊத்துப் பறியுமா?
  • உண்ட உடம்பிற்கு உறுதி, உழுத புலத்தில் நெல்லு.
  • உட்கார்ந்தால் அல்லவா படுக்க வேண்டும்.
  • உண்டு கொழுத்தால் நண்டு வலையில் இராது.
  • உண்ணாச் சொத்து மண்ணாய்ப் போகும்.
  • உண்ணீர் உண்ணீரென்றே ஊட்டாதார் தம் மனையில் உண்ணாமை கோடி பெறும்.
  • உத்திராடத்தில் ஒரு பிள்ளையும், ஊர் வாரியில் ஒரு நிலமும்.
  • உரலில் அகப்பட்டது உலக்கைக்கு தப்புமா?
  • உருட்டும் புரட்டும் ஒடுக்கும் சிறப்பை.
  • உலோபிக்கு இரட்டை செலவு.
  • உழுகிற நாளில் ஊருக்குப் போனால், அறுக்கிற நாளில் ஆள் தேவையில்லை.
  • உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கேனும் மிஞ்சாது.
  • உளவு இல்லாமல் களவு இல்லை.
  • உள்ளது சொல்ல ஊரு மல்ல நல்லது சொல்ல நாடுமல்ல
  • உள்ளது போகாது இல்லது வாராது.
  • உள்ளம் தீயெரிய உதடு பழஞ் சொரிய
  • உறியிலே வெண்ணெய் இருக்க நெய்க்கலைவானேன்
  • உறவு போகாமல் கெட்டது கடன் கேட்காமல் கெட்டது. [இதனை இப்படி கூட கூறுவார்கள்-பார்க்காத உறவும் கேட்காத கடனும் பாழ்]
  • உகிர்ச் சுற்றின்மேல் அம்மி விழுந்தாற் போல்.
  • உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம்.
  • உச்சனை உச்சன் பார்த்தால் பிச்சை எடுப்பார்.
  • உச்சஸ்தானே ஷு பூஜித.
  • உச்சாணிக் கிளையில் ஏறினால் உயிருக்கு ஆபத்துத்தானே?
  • உச்சி இட உச்சி இட உள்ளே குளிர்ந்தது.
  • உச்சி மீனுக்கு எட்டாம் மீன் உதய மீன்.
  • உசிர் இருந்தால் உப்பு மாற்றிக் குடிக்கலாம்.
  • உசு பிடி என்றால் நீ பிடி என்கிறது நாய்.
  • உஞ்ச விருத்திக்குப் போனாலும் பஞ்சம் இல்லாமல் இருக்க வேணும்.
  • உட்கார்ந்தவன் காலில் மூதேவி; ஓடுபவன் காலிலே சீதேவி.
  • உட்கார்ந்தவனைக் கட்டமாட்டாதவன் ஓடுகிறவனைக் கட்டுவானா?
  • உட்கார்ந்து அல்லவோ படுக்க வேண்டும்?
  • உட்கார்ந்து இருக்கச்சே அடித்தால் பொன்னாகும்; ஓடச்சே அடித்தால் செம்பானாலும் ஆகும்;இரும்பானாலும் ஆகும்.
  • உட்காரச் சொல்லாத சர்க்கரை போல் பேச்சு.
  • உட்சுவர் இருக்க வெளிச்சுவர் பூசலாமா
  • உட்சுவர் தீற்றிப் புறச்சுவர் தீற்று.
  • உட்புறத்துக்கு வெளிப்புறம் கண்ணாடி.
  • உடம்பிலே காய்த்துத் தொங்குகிறதா?
  • உடம்பிலே பயம் இருந்தால் நன்றாகச் செய்வான்.
  • உடம்பு உளைந்த கழுதை உப்புக் களத்துக்குப் போனது போல.
  • உடம்பு எங்கும் சுடுகிற தழலை மடியிலே கட்டுகிறாய்.
  • உடம்பு எடுத்தவன் எல்லாம் ஓடு எடுத்தவன்.
  • உடம்பு எல்லாம் புழுத்தவன் அம்மன் கோவிலைக் கெடுத்தானாம்.
  • உடம்பு எல்லாம் புளுகு; பல் எல்லாம் ஊத்தை.
  • உடம்புக்குப் பால் குடிப்பதா? ஊருக்குப் பால் குடிப்பதா?
  • உடம்பு தேற்றிக் கொண்டு அல்லவா யோகத்தில் போக வேண்டும்?
  • உடம்பு முழுவதும் நனைந்தவர்க்குக் கூதல் என்ன?
  • உடம்பை ஒடித்துக் கடம்பில் விடு.
  • உடம்பைச் செருப்பாகத் தைத்துப் போட்டாலும் சமானமாகாது.
  • உடம்போடே ஒரு நாட்டியம் உண்டா?

உடம்போடே பிறந்தது.

  • உடல் அளவு விரதம்; பொருள் அளவு தானம்.
  • உடல் இரண்டு, உயிர் ஒன்று.
  • உடல் உள்ள வரையில் கடல் கொள்ளாக் கவலை.
  • உடல் ஒருவனுக்குப் பிறந்தது; நாக்குப் பலருக்குப் பிறந்தது.
  • உடல் முழுவதும் எண்ணெய் தேய்த்துக் கொண்டு தெரு முழுவதும் புரண்டாலும் ஒட்டுவதுதான் ஒட்டும்.
  • உடல் மெச்சப் பால் குடிக்கிறாயா? ஊர் மெச்சப் பால் குடிக்கிறாயா?
  • உடலுக்குக் கை துரோகம்.
  • உடலுக்குள்ளே நாக்கை வளைக்கிறதா?
  • உடலுக்கோ பால் வார்த்து உண்பது? ஊருக்கோ பால் வார்த்து உண்பது?
  • உடலும் உயிரும் போல.
  • உடன் பிறந்தே கொல்லும் வியாதி.
  • உடன் பிறப்பால் தோள் வலி போம்.
  • உடன் பிறப்பு இல்லாத உடம்பு பாழ்.
  • உடாப் புடைவை பூச்சிக்கு இரை.
  • உடுக்காத புடைவையைச் செல் அரிக்கும்.
  • உடுக்கு அடிக்கிறவனுக்கு நடுக்கக் கை வேறு.
  • உடுக்கைக்கு இடை சிறுத்தால் ஓசை உண்டு; உரலுக்கு இடை சிறுத்தால் உதவி என்ன?
  • உடுத்த சீலை பாம்பாய்க் கடித்தது போல.
  • உடுத்துக் கெட்டான் துலுக்கன்; உண்டு கெட்டான் மாத்துவன்.
  • உடுத்துக் கெட்டான் வெள்ளைக்காரன்; உண்டு கெட்டான் சோனகன்; புதைத்துக் கெட்டான் தமிழன்.
  • உடுப்பது பீறல் ஆடை; நடப்பது தந்தக் குறடாம்.
  • உடுப்பாரைப் பார்த்தாலும் உண்பாரைப் பார்க்கலாமா?
  • உடும்பு உடும்பே இண்டிக்குப் போ.
  • உடும்புக்கு இரண்டு நாக்கு; மனிதனுக்கு ஒரு நாக்கு.
  • உடும்புப் பிடி.
  • உடும்பு பிடித்தது போதும்; கையை விடு.
  • உடும்பு போனால் போகிறது; கை வந்தால் போதும்.
  • உடும்பு வேண்டாம்; கை வந்தால் போதும்.
  • உடை குலைந்த பிறகு முறை கொண்டாடுவதோ?
  • உடைத்த சட்டி உலைக்கு உதவாது,

உடைத்து ஓடு பொறுக்குகிறான்.

  • உடைந்த சங்கில் காற்றுப் பரியுமா?
  • உடைந்த சங்கு ஊது பரியுமா?
  • உடைந்த தடியை ஒரு போதும் நம்பாதே.
  • உடை முள்ளுக்கு எதிரே உதைக்கலாமா?
  • உடைமை என்பது கல்வி உடைமை.
  • உடைமைக்கு ஒரு முழுக்கு; உடையவனுக்கு ஒன்பது முழுக்கு.
  • உடைமையும் கொடுத்து அருமையும் குலைகிறதா?
  • உடைமையும் வறுமையும் ஒரு வழி நில்லா.
  • உடையவன் அறிந்திடாத சடுக்கு இல்லை.
  • உடையன் இல்லாச் சேலை ஒருமுழம் கட்டை.
  • உடையவன் கண் ஓடாப் பயிர் உடனே அழியும்.
  • உடையவன் காற்றுப் படாப் பயிர் ஒருமுழம் கட்டை.
  • உடையவன் சொற்படி உரலைச் சுற்றிக் குழி பறி.
  • உடையவன் பாராப் பயிர் உருப்படுமா?
  • உடையவன் பாரா வேலை ஒரு முழம் கட்டை.
  • உடையவன் பொறுத்தாலும் உடையவன் வீட்டு நாய் பொறுக்காது.
  • உடையார் இல்லாவிட்டாலும் உடையார் பொல் இருக்கிறது.
  • உடையார் உண்டைக் கட்டிக்கு அழும் போது லிங்கம் பஞ்சாமிர்தம் கேட்கிறதாம்.
  • உடையார் வீட்டு மோருக்கு அகப்பைக் கணக்கு என்ன?
  • உண் உண் என்று உபசரிப்பான் இல்லாத வாசலிலே உண்ணுமை கோடி பெறும்.
  • உண்கிற சோற்றிலே கல்லைப் போடுகிறதா?
  • உண்கிற சோற்றிலே நஞ்சைக் கலக்கிறதா?
  • உண்கிற சோறு வெல்லம்.
  • உண்கிற வயிற்றை ஒளிக்கிறதா?
  • உண்ட இடத்தில் உட்கார்ந்திருந்தால் கண்ட பேர் கரிப்பார்கள்.
  • உண்ட இலையில் உட்கார்ந்தால் சண்டை வளரும்
  • உண்ட இளைப்புத் தொண்டருக்கும் உண்டு.
  • உண்ட உடம்பு உருளும்; தின்ற பாக்குச் சிவக்கும்.
  • உண்டவன் உடம்புக்கு உறுதி, உழுத புலத்தில் நெல்
  • உண்ட சுற்றம் உருகும்
  • உண்ட சோற்றிலே நஞ்சைக் கலந்தாற்போல்.
  • உண்ட சோற்றுக்கு இரண்டகம் பண்ணுகிறதா?
  • உண்டதுதானே ஏப்பம் வரும்?
  • உண்டதும் தின்றதும் லாபம்; பணியில் கிடந்தது லோபம்.
  • உண்ட பிள்ளை உரம் பெறும்.
  • உண்ட பேர் உரம் பேசுவார்.
  • உண்ட வயிற்றுக்கு உபசாரமா?
  • உண்ட வயிற்றுக்குச் சோறும் மொட்டைத் தலைக்கு எண்ணெயும் போல.
  • உண்ட வயிறு கேட்கும்; தின்ற பாக்குச் சிவக்கும்.
  • உண்டவன் உண்டு போக என் தலை பிண்டு போகிறது.
  • உண்டவன் உரம் செய்வான்.
  • உண்டவன் பாய் தேடுவான்; உண்ணாதவன் இலை தேடுவான்.
  • உண்ட வீட்டிலே உட்காராமல் போனால் கண்டவர்கள் எல்லாம் கடுகடு என்பார்கள்.
  • உண்ட வீட்டிலே கிண்டி தூக்குவது போல.
  • உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்யலாமா?
  • உண்ட வீட்டுக்கு இரண்டகம் நினைக்கிறவன் உண்டா?
  • உண்டார் மேனி கண்டால் தெரியும்.
  • உண்டால் உடம்பு சொல்லும், விளைந்தால் வைக்கோற்போர் சொல்லும்.
  • உண்டால் கொல்லும் விஷம்.
  • உண்டால் கொல்லுமோ? கண்டால் கொல்லுமோ?
  • உண்டால் தின்றால் உறவு; கொண்டால் கொடுத்தால் உறவு.
  • உண்டால் தின்றால் ஊரிலே காரியம் என்ன?
  • உண்டால் தீருமா பசி? கண்டால் தீருமா?
  • உண்டாலும் உறுதிப்பட உண்ண வேண்டு
  • உண்டான தெய்வங்கள் ஒதுங்கி நிற்கையில் சுற்றுப்பட்ட தெய்வம் ததியோதனத்துக்கு அழுததாம்.
  • உண்டான போது கோடானுகோடி
  • உண்டானால் உண்டு. உலகு அஸ்தமனமா?
  • உண்டிக்கு அழகு விருந்தோடு உண்டல்.
  • உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு.
  • உண்டு இருக்க மாட்டாமல் ஊர் வழியே போனானாம்; தின்று இருக்க மாட்டாமல் தேசாந்தரம் போனானாம்.
  • உண்டு உறியில் இரு என்றால் உருண்டு கீழே விழுந்தானாம்.
  • உண்டு என்ற பேருக்கு ஈசன் உண்டு; இல்லை என்ற பேருக்கு இல்லை.
  • உண்டு என்று பெண் கொடுத்தால் சாதிகுலம் கேட்டானாம்.
  • உண்டு கண்ட பூனை உறியைத் தாவும்.
  • உண்டு களித்தவனிடம் சோற்றுக்குப் போ; உடுத்துக் களித்தவனிடம் துணிக்குப் போ.
  • உண்டு கெட்டவனும் தின்று கெட்டவனும் இல்லை.
  • உண்டு கொழுத்தால் நண்டு வளையில் இருக்குமா?
  • உண்டு தின்று உயரமானால் ஊரிலே காரியம் என்ன?
  • உண்டு தின்று உள்ளே இரு என்றால் உயர எழும்பி ஏன் குதிக்கிறாய்?
  • உண்டு ருசி கண்டவன் ஊரை விட்டுப் போகான்; பெண்டு ருசி கண்டவன் பேர்த்து அடி வையான்.
  • உண்டை பட்டு உறங்குகிற குருவிபோல.
  • உண்ண இலை தேடி உறங்கப் பாய் தேடிச் சிவனே என்று இருந்தேன்
  • உண்ண உணவும் நிற்க நிழலும்.
  • உண்ணக் கை சலித்திருக்கிறான்.
  • உண்ணச் சோறும் உடுக்கத் துணியும் ஒண்டக் கூரையும் வேண்டும்.
  • உண்ணப் படை உண்டு; வெல்லப் படை இல்லை.
  • உண்ணப் பார்த்தாலும் உழைக்கப் பாராதே,
  • உண்ண வந்த பிடாரி ஊர்ப் பிடாரியைத் துரத்திற்றாம்.
  • உண்ண வருகிறாயோ சோம்பலே, உன் குறுணி அரை நாழிவேலைக்கு வருகிறாயோ சோம்பலே; நான் சற்றே நோயாளி.
  • உண்ண வா என்றால் குத்த வருகிறான்.
  • உண்ணவும் தின்னவும் என்னைக் கூப்பிடு; ஊர்க்கணக்குப் பார்க்க என் தம்பியை அழை.
  • உண்ணா உடம்பு உருகாது; தின்னாப் பாக்குச் சிவக்காது.
  • உண்ணாக்கை அறுத்துச் சுண்ணாம்புக் குறி இடுவேன்.
  • உண்ணாச் சொத்து மண்ணாய்ப் போகும், உடுக்காப் புடைவை புட்டிலாக்கும்.
  • உண்ணாத தின்னாத ஊர் அம்பலம்.
  • உண்ணா நஞ்சு ஒருகாலும் கொல்லாது.
  • உண்ணாமல் ஊர் எல்லாம் திரியலாம்; உடுக்காமல் ஒரு வீட்டுக்கும் போகலாகாது
  • உண்ணாமல் ஒன்பது வீடு போகலாம்; உடுக்காமல் ஒரு வீடும் போகலாகாது.
  • உண்ணாமல் கெட்டது உறவு; கேளாமல் கெட்டது கடன்.
  • உண்ணாமல் தின்னாமல் உறவின் முறையுாருக்கு ஈயாமல்.
  • உண்ணாமல் தின்னாமல் ஊர் அம்பலம் ஆனேனே!
  • உண்ணாமல் தின்னாமல் வயிறு உப்புசம் கொண்டேன்.
  • உண்ணி கடித்த நாய் உதறுவது போல.
  • உண்ணியைக் கண்டால் ஊரிள் பஞ்சம் தெரியும்.
  • உண்ணுகிற சோறு வெல்லம்.
  • உண்ணுகிற வயிற்றை ஒளிக்கிறதா?
  • உண்ணுபவன் உண்டு விட்டுப் போனால் உன் தலைப்புண் விட்டுப்போகிறது.
  • உண்ணும் கீரையிலே நண்ணும் புல்லுருவி.
  • உண்ணுவார் இல்லை; உறங்குவார் இல்லை. ஒரு கட்டு வெற்றிலை தின்பார் இல்லை, சாந்து சந்தனம் பூசுவார் இல்லை. தலைக்குத் தப்பளம் போடுவார் இல்லை, வா மருமகளே வா
  • உண்ணுவாளாம், தின்னுவாளாம் சீதா தேவி; உடன்கட்டை ஏறுவாளாம் பெருமா தேவி.
  • உண்ணேன், உண்ணேன் என்றால் உடலைப் பார்த்தால் தெரியும்.
  • உண்பது நாழி; உடுப்பது நான்கு முழம்; எண்பது கோடி நினைந்து எண்ணும் மனம்.
  • உண்பன, தின்பன உறவுதான்; செத்தால் முழுக்குத்தாள்.
  • உண்பது இருக்க ஒரு கருமம் செய்யேல்.
  • உண்பார் பாக்கியம், சம்பா விளையும்.
  • உண்பாரைப் பார்த்தாலும் உழுவாரைப் பார்த்தல் ஆகாது.
  • உண்பான் தின்பான் திவசப்பிராமணன்; குத்துக்கு நிற்பான் வீர முஷ்டி.
  • உண்பான் தின்பான் சேவைப் பெருமாள்; குத்துக்கு நிற்பான் வைராகி.
  • உண்பான் தின்பான் பைராகி; குத்துக்கு நிற்பான் வீர முஷ்டி.
  • உண்மை உயர்வு அளிக்கும்.
  • உண்மைக்கு உத்தரம் இல்லை.
  • உண்மை சொல்லிக் கெட்டாரும் இல்லை; பொய் சொல்லி வாழ்ந்தாரும் இல்லை.
  • உண்மை சொன்னால் உண்மை பலிக்கும்; நன்மை சொன்னால் நன்மை பலிக்கும்.
  • உண்மை நன்மொழி திண்மை உறுத்தும்.
  • உண்மைப் படு, உறுதிப்படு.
  • உண்மையைச் சொன்னவன் ஊருக்குப் பொல்லாதவன்.
  • உண்மையைச் சொன்னால் உடம்பு எரிச்சல்.
  • உணர்வு இல்லாக் கருவியும் உப்பு இல்லாச் சோறும் சரி.
  • உணவு விளைவிப்பது சட்டியில்; உறவு விளைவிப்பது பட்டியில்.
  • உத்தமச் சேரிக் குயவனுக்கு ஒன்றால் ஒன்று குறைவு இல்லை, உத்தம சேவகன் பெற்ற தாய்க்கு அதிகம்.
  • உத்தமம் ஆன பத்தினி ஊர்மேலே வருகிறாள்; வீட்டுக்கு ஒரு துடைப்பக்கட்டை, உஷார், உஷார்.
  • உத்தமனுக்கு எத்தாலும் கேடு இல்லை.
  • உத்தமனுக்கு ஓலை எதற்கு?
  • உத்தமனுக்கும் தப்பிலிக்கும் உடம்படிக்கை வேண்டாம்.
  • உத்தரத்தில் ஒரு பிள்ளை; உறவுக்கெல்லாம் ஒரு தொல்லை.உத்தரத்தில் ஒரு பிள்ளை; உறவுக்கெல்லாம் ஒரு தொல்லை.
  • உத்தரத்து அளவு கேட்டால் அரிவாள் பிடி அளவு வரும்.
  • உத்தரம் இல்லாமல் வீடு கட்டுகிற மாதிரி.
  • உத்தராயணம் என்று உறியைக் கட்டிக் கொண்டு சாகிறதா?
  • உத்தராயணம் என்று உறியைக் கட்டிக் கொண்டு சாகிறதா?
  • உத்தராயணம் என்று உறியைக் கட்டிக் கொண்டு சாகிறதா?
  • உத்தியோகத்துக்குத் தக்க ககம்.
  • உத்தியோகம் குதிரைக் கொம்பாய் இருக்கிறது.
  • உத்தியோகம் தடபுடல்; சேவிக்கிற இவர் இன்னார் இனியார் என்று இல்லை; சம்பளம் கணக்கு வழக்கு இல்லை; குண்டையை விற்று நாலு வராகன் அனுப்பச் சொல்லு.
  • உத்தியோகம் போன ஊரில் மத்தியானம் இருக்கதே.
  • உதட்டிலே புண், மாடு கறக்க முடியவில்லை.
  • உதட்டிலே புன்னகையும் உள்ளத்திலே எரிச்சலும்.
  • உதட்டிலே வாழைப்பழம் உள்ளே தள்ளுவார் உண்டோ?
  • உதட்டுக்குப் பால் மாறின தாசியும் மேட்டுக்குப் பால் மாறின கணக்கனும்.
  • உதட்டுக்கு மிஞ்சின பல்லும் திருட்டுக்கு மிஞ்சின கையும் ஆகா
  • உதட்டுத் துரும்பு ஊதப் போகாது.
  • உதட்டு வாழைப் பழத்தை உள்ளே தள்ள ஓர் ஆள் வேண்டும்.
  • உதடு ஒட்டாமல் பேசுகிறான்.
  • உதடு தேய்வதைவிட உள்ளங்கால் தேயலாம்.
  • உதடு தேன் சொரிய, உள்ளே நெஞ்சு எரிய.
  • உதடு வெல்லம்; உள்ளம் கள்ளம்.
  • உதயத்தில் வந்த மழையும் ஆஸ்தமிக்க வந்த மாப்பிள்ளையும் விடா.
  • உதர நிமித்தம் பகுக்குத வேஷம்.
  • உதவாத செட்டிக்குச் சீட்டு எழுதினது போல.
  • உதவாப் பழங்கலமே, ஓசை இல்லா வெண்கலமே.
  • உதவா முட்டி சுத்தரம், ஒதுகிறாளாம் மந்திரம்
  • உதவி செய்வாருக்கு இடையூறு ஏது?
  • உதறி முடிந்தால் ஒரு குடுமிக்குப் பூ இல்லையா?
  • உதறு காலி முண்டை உதறிப் போட்டாள்.
  • உதறு காலி வந்தாள், உள்ளதும் கெடுத்தாள்.
  • உதாரிக்குப் பொன் துரும்பு.
  • உதிக்கின்ற கதிரோன் முன்னே ஒளிக்குய் மின்மினியைப் போல்.
  • உதி பெருத்தாலும் உத்தரத்துக்கு உதவாது.
  • உதிரத்துக்கு அல்லவோ உருக்கம் இருக்கும்?
  • உதிரம் உறவு அறியும்.
  • உதைத்த கால் புழுக்கிறதற்கு முன்னே அடி வயிறு சீழ்க்கட்டுகிறது.
  • உதைத்த காலை முத்தம் இடுவது.
  • உதைத்து வளர்க்காத பிள்ளையும் முறுக்கி வளர்க்காத மீசையும் உபயோகப்படா.
  • உதைப்பானுக்கு வெளுப்பான் ஜாதி வண்ணான்.
  • உதைப்பானுக்கு வெளுப்பான் ஜாதி வண்ணான்; கொட்டி வெளுப்பான் கொங்கு வண்ணான்.
  • உதைபட்ட நாய் ஊரெல்லாம் சுற்றினாற்போல.
  • உப்பளத்து மண்ணும் உழமண்ணும் செம்மண்ணும் காவேரி மண்ணும் கலந்து வழங்குகிறது.
  • உப்பின் அருமை உப்பு இல்லாவிட்டால் தெரியும்.
  • உப்பு இட்ட பாண்டமும் உபாயம் மிகுந்த நெஞ்சமும் தட்டி உடையாமல் தாமே உடையும்.
  • உப்பு இட்டவரை உள்ளளவும் நினை.
  • உப்பு இட்டுக் கெட்டது மாங்காய், உப்பு இடாமற் கெட்டது தேங்காய்.
  • உப்பு இருக்கிறதா என்றால் பப்பு இருக்கிறது என்றார்.
  • உப்பு இருந்தால் பருப்பு இராது; பருப்பு இருந்தால் உப்புஇராது.
  • உப்பு இருந்த பாண்டமும் உளவு அறிந்த நெஞ்சமும் தப்பாமல் தட்டுண்டு உடையும்.
  • உப்பு இல்லாக் கீரை குப்பையில் இருந்தால் என்ன? உபயோகம் அற்ற அகமுடையான் பக்கத்தில் இருந்தால் என்ன?
  • உப்பு இல்லாப் பண்டம் குப்பையிலே.
  • உப்பு இல்லாமல் கலக்கஞ்சி குடிப்பான்.
  • உப்பு இல்லாவிட்டால் தெரியும் உப்பு அருமை; அப்பன் இல்லா விட்டால் தெரியும் அப்பன் அருமை.
  • உப்பு உந்தியா செட்டியாரே என்றால் பப்பு உந்தி என்கிறார்.
  • உப்பு உள்ள பாண்டம் உடையும்.
  • உப்பு எடுத்த கையாலே கர்ப்பூரமூம் எடுக்க வேண்டும்.
  • உப்புக் கட்டினால் உலகம் கட்டும்.
  • உப்புக் கண்டம் பறிகொடுத்த பாப்பாத்தி போல.
  • உப்புக்கு ஆகுமா, புளிக்கு ஆகுமா?
  • உப்புக்கும் உதவாதவன் ஊருக்கு உதவமாட்டான்.
  • உப்புக்கும் உதவாத விஷயம்.
  • உப்புச் சப்பு இல்லாத காரியம்.
  • உப்புச் சட்டியும் வறை ஓடும் தோற்றுவிட்டான்.
  • உப்புச் சமைந்தால் உப்பின் அருமை தெரியும்; அப்பன் சமைந்தால் அப்பன் அருமை தெரியும்.
  • உப்புத் தண்ணீரும் கப்பு மஞ்சளும் ஊறிப் போச்சுது.
  • உப்புத் தண்ணீருக்கு விலாமிச்சவேர் வேண்டுமா?
  • உப்புத் தின்றவன் தண்ணீர் குடிப்பான்.
  • உப்பு நளபாகமாய் இருக்கிறது.
  • உப்பு நீர் மேகம் உண்டால் உலகில் பிரவாகம்.
  • உப்புப் புளிக்கு ஆகாத சமாசாரம், உப்புப் பெறாத காரியத்துக்கு ஊரைக் கூட்டினானாம்.
  • உப்புப் பெறாதவன் பருப்புப் பெற்றான்; உறித்தயிரைப் போய் எட்டி எட்டிப் பார்த்தானாம்.
  • உப்புப் பொதிக்காரன் உருண்டு உருண்டு அழுதானாம், வெற்றிலைப் பொதிக்காரன் விழுந்து விழுந்து சிரித்தானாம்.
  • உப்புப் போட்டுச் சோறு தின்றால் சுரணை இருக்கும்.
  • உப்பும் இல்லை, சப்பும் இல்லை.
  • உப்பும் இல்லை, புளியும் இல்லை.
  • உப்பும் இல்லை, புளியும் இல்லை, உண்டைக் கட்டியே, உன்னை விட்டால் கதியும் இல்லை பட்டைச் சாதமே!
  • உப்பும் கர்ப்பூரமும் ஒன்றாய் வழங்குமா?
  • உப்பும் சோறும் உணர்த்தியாய் உண்ணவில்லையோ?
  • உப்பு மிஞ்சினால் உப்புச் சாறு; புளி மிஞ்சினால் புளிச் சாறு.
  • உப்பு மிஞ்சினால் தண்ணீர்; தண்ணீர் மிஞ்சினால் உப்பு.
  • உப்பு முதல் கர்ப்பூரம் வரையில்.
  • உப்பு வண்டிக்காரன் உருண்டு அழுதான்; வெற்றிலை வண்டிக்காரனும் விழுந்து அழுதான்
  • உப்பு வாணிகன் அறிவானோ கர்ப்பூர விலை?
  • உப்பு விற்கச் சொன்னாளா? ஊர்ப் பெரிய தனம் செய்யச் சொன்னாளா?
  • உப்பு வைத்த மண்பாண்டம் போல.
  • உப்பைக் கடித்துக் கொண்டு உரலை இடித்தானாம்.
  • உப்பைச் சிந்தினையோ, துப்பைச் சிந்தினையோ?
  • உப்பைத் தின்றவன் தண்ணீர் குடிப்பான்.
  • உப்பைத் தொட்டு உப்பைத் தின்னாதே.
  • உப்பைத் தொட்டுக் கொண்டு உரலை விழுங்குவான்
  • உப்போடு ஒன்பதும் பருப்போடு பத்தும் வேண்டும்.
  • உப்போடே முப்பத்திரண்டும் வேண்டும்.
  • உபகாரத்துக்கு அபகாரம் வருவது துரதிருஷ்டம்.
  • உபகாரம் செய்தவருக்கு அபகாரம் செய்யலாமா?
  • உபகாரம் செய்யாவிட்டாலும் அபகாரம் செய்யாதே.
  • உபகாரம் வீண் போகாது.
  • உபசரிப்பு இல்லாத உணவு கசப்பு ஆகும்.
  • உபசரியாத மனையில் உண்ணாது இருப்பதே கோடி தனம்.
  • உபசாரம் செய்தவருக்கு அபசாரம் பண்ணுகிறதா?
  • உபசார வார்த்தை காசு ஆகுமா?
  • உண்டால் ஒழியப் பசி தீருமா?
  • உபசார வார்த்தை வாய்க்குக் கேடு; தூற்றுப் பருக்கை வயிற்றுக்குக் கேடு.
  • உபநயனம் இல்லாமல் கல்யாணம் பண்ணினானாம்.
  • உபாத்தியாயர் நின்று கொண்டு பெய்தால் சிஷ்யன் ஓடிக்கொண்டே பெய்வான்.
  • உபாயத்தால் ஆகிறது பராக்கிரமத்தால் ஆகுமா?
  • உம் என்றாளாம் காமாட்சி, ஒட்டிக் கொண்டாளாம் மீனாட்சி,
  • உமக்கு என்ன, வயசுக்கு நரைத்ததோ, மயிருக்கு நரைத்ததோ?
  • உமி குத்திக் கை நோகலாமோ?
  • உமி குத்திக் கை வருந்துமாறு
  • உமி சலித்து நொய் பொறுக்கினாற் போல.
  • உமியும் கரியும் இருக்கின்றன; உடைமை செய்யப் பொன் இல்லை.
  • உமியைக் குத்திக் கை சலித்தது போல.
  • உயர்ந்த அடுப்பு அமர்ந்த அடுப்பு
  • உயர்ந்த காற்றைக் காற்று மோதும்.
  • உயர உயரப் பறந்தாலும் ஊர்க் குருவி பருந்து ஆகுமா?0
  • உயிர் அறியும் உறவு,
  • உயிர் இருக்க ஊனை வாங்குகிறது போல.
  • உயிர் இருக்கும் போது குரங்கு; இறந்த பிறகு அநுமார்.
  • உயிர் இருந்தால் உப்பு மாறித் தின்னலாம்.
  • உயிர் உதவிக்கு மிஞ்சின உதவி வேறு இல்லை.
  • உயிர் உள்ள மட்டும் தைரியம் விடலாமா?
  • உயிர் என்ன வெல்லமா?
  • உயிர் காப்பான் தோழன்.
  • உயிர் தப்பியது தம்பிரான் புண்ணியம்.
  • உயிர் போகும் போதும் தைரியம் விடலாகாது.
  • உயிருக்கு மிஞ்சின ஆக்கினையும் இல்லை; கோவணத்துக்கு மிஞ்சின தரித்திரமும் இல்லை.
  • உயிருக்கு வந்தது மயிரோடே போயிற்று,
  • உயிரும் உடலும் போல.
  • உயிரைக் கொடுத்த சாமிக்கு மயிரைக் கொடுக்க வேணும்.
  • உயிரை வைத்திருக்கிறதிலும் செத்தாற் குணம்.
  • உயிரைப் பகைத்தேனோ! ஒரு நொடியில் கெட்டேனோ?
  • உயிரோடு இருக்கும் போது ஒரு கரண்டி நெய்க்கு வழி இல்லை.
  • ஓமத்துக்கு ஒன்பது கரண்டி நெய் விட்டது போல.
  • உயிரோடு ஒரு முத்தம் கொடுக்கவில்லை; செத்த பிறகு கட்டிக் கட்டி முத்தமிட்டாளாம்.
  • உயிரோடு ஒரு முத்தம் தராதவள் செத்தால் உடன் கட்டை ஏறுவாளா?
  • உயிரோடு திரும்பிப் பாராதவள் செத்தால் முத்தம் கொடுப்பாளா?
  • உரத்த குடிக்கு அனர்த்தம் இல்லை.
  • உரத்தைத் தள்ளுமாம் உழவு.
  • உம் உதவுவது ஊரார் உதவார்.
  • உரம் ஏற்றி உழவு செய்.
  • உரம் செய்கிறது உறவுடையான் செய்யமாட்டான்.
  • உரல் பஞ்சம் அறியுமா?
  • உரல் போய் மத்தளத்தோடு முறையிட்டது போல.
  • உரலில் அகப்பட்டது உலக்கைக்குத் தப்புமா?
  • உரலிலே தலையை விட்டுக்கொண்டு உலக்கைக்குப் பயப்படலாமா?
  • உரலிலே தலை விட்டால் உலக்கைக்குத் தப்பலாமா?
  • உரலிலே தலை விட்டால் உலக்கைக்குத் தப்பலாமா?
  • உரலிலே துணி கட்டியிருந்தாலும் உரிந்து பார்க்கவேண்டும் என்கிறான்.
  • உரலுக்கு ஒரு பக்கம், இடி; மத்தளத்துக்கு இரு பக்கமும் இடி.
  • உரலுக்குப் பஞ்சம் உண்டா?
  • உரலுக்குள் தலையை விட்டு உலக்கைக்கு அஞ்சலாமா?
  • உரலும் கொடுத்துக் குரலும் போக வேண்டும்.
  • உரித்த பழம் என்ன விலை? உரிக்காத பழம் என்ன விலை என்றானாம் ஒரு சோம்பேறி.
  • உரித்த வாழைப் பழத்தை ஒன்பது வெட்டு வெட்டும்.
  • உரிய உரிய மழை பெய்து எரிய எரிய வெயில் காய்கிறது.
  • உரியிலே ஒக்குமாம் உருளைக் கிழங்கு; கண்டு பிடிக்குமாம் கருணைக் கிழங்கு.
  • உரியை இரட்டித்தால் உழக்கு.
  • உரு ஏறத் திரு ஏறும்.
  • உருக்கம் உருக்கமாய் ஊட்டி உள்ளே போச்சுது.
  • உருக்கம் உள்ள சிற்றாத்தை, ஒதுக்கில் வாடி கட்டி அழலாம்.
  • உருக்கின நெய் வார்த்தாலும் கண்ட நியாயத்தான் சொல்லுவேன்.
  • உருக்கின நெய் வார்த்தாலும் கண்ணாரக் கண்டதைத் சொல்லுவான்.
  • உருசி கண்ட பூனை உறியை உறியைத் தாவுமாம்; வரிசை கண்ட மாப்பிள்ளை வந்து வந்து நிற்பானாம்.
  • உருட்சிக்கு நீட்சி, புளிப்புக்கு அவள் அப்பன்.
  • உருட்டி விளையாடுகிற தஞ்சாவூர்ப் பொம்மை.
  • உருட்டுப் புரட்ட உள்ளதும் உள்ளுக்கு வாங்கும்.
  • உருட்டும் புரட்டும் ஒடுக்கும் சிறப்பை.
  • உருட்டும் புரட்டும் சிரட்டையும் கையும்.
  • உருட்டும் புரட்டும் மிரட்டும் சொல்லும்.
  • உருண்டு உருண்டு புரண்டாலும் உடம்பில் ஒட்டுவதுதான் ஒட்டும்.
  • உருண்டு புரண்டாலும் ஒட்டுகிற மண்தான் ஒட்டும்.
  • உருப்படத் திருப்படும்.
  • உருப்படாக் கோயிலில் உண்டைக் கட்டி வாங்கி விளக்கு இல்லாக் கோயிலில் விண்டு விண்டு தின்றானாம்.
  • உருவத்தினால் அல்ல; பேச்சினால் கிளி நன்கு மதிக்கப்படும்.
  • உருவத்தை அல்ல; குணத்தைப் பார்.
  • உருவிக் குளிப்பாட்டி உள்ளாடை கட்டாமல்.
  • உருவிய வாளை உறையில் இடாத வீரன்.
  • உருவின கத்தி உறையில் அடங்கும்.
  • உருவு திருவூட்டும்.
  • உருளுகிற கால் பாசி சேர்க்காது.
  • உரைத்த கட்டை வாசனை பெறும்.
  • உரையார் இழித்தக்க காணிற் கனா
  • உல்லாச நடை மெலுக்குக் கேடு; மினுக்கு எண்ணெய் தலைக்குக் கேடு.
  • உலக்கைக்குப் பூண் கட்டினது போல.
  • உலக்கைக் கொழுந்தும் குந்தாணி வேரும்
  • உலக்கை சிறுத்துக் கழுக்காணி ஆயிற்று.
  • உலக்கை தேய்ந்து உளிப்பிடி ஆனது போல.
  • உலக்கைப் பூசைக்கு அசையாதது திருப்பாட்டுக்கு அசையுமா?
  • உலக்கை பெருத்து உத்தரம் ஆயிற்று.
  • உலக்கையாலே காது குத்தி உரலாலே தக்கை போட்டது போல
  • உலகத்துக்கு ஞானி பேய்; ஞானிக்கு உலகம் பேய்
  • உலகம் அறிந்த தாசிக்கு வெட்கம் ஏது? சிக்கு ஏது?
  • உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே.
  • உலகம் முழுவதும் உடையான் அருள்
  • உலகமே ஒரு நாடக சாலை.
  • உலகிலே பெண் என்றால் பேயும் இரங்கும்.
  • உலகின்கண் இல்லததற்கு இல்லை பெயர்.
  • உலர்ந்த தலைக் கோலமும் ஓர்ப்படி பெற்ற பிள்ளையும் ஒட்டா.
  • உலுத்தன் விருந்திற்கு ஒப்பானது ஒன்றும் இல்லை.
  • உலுத்தனுக்கு இரட்டைச் செலவு.
  • உலையில் ஈ மொய்த்ததுபோல
  • உலை வாய் மெழுகு உருகுவது போல.
  • உலை வாயை மூடினாலும் மூடலாம்; ஊர் வாயை மூட முடியாது.
  • உலை வைத்த சந்தியிலே சாறு காய்ச்சுகிறது.
  • உலை வைத்த சந்தியிலே சாறு காய்ச்சுகிறது.
  • உவர் நிலத்தில் இட்ட விதையும் சமரிடத்தில் சென்ற சேனையும் இரண்டாம் பட்சம்.
  • உழக்கில் கிழக்கு மேற்கு.
  • உழக்கிலே கிழக்கு மேற்கு எது?
  • உழக்கிலே வழக்கு.
  • உழக்கு அரிசி ஆனாலும் ஓயாது மெல்லுவாள்.
  • உழக்கு உள்ளூருக்கு; பதக்குப் பரதேசிக்கு.
  • உழக்கு உற்றாருக்கு; பதக்குப் பரதேசிக்கு.
  • உழக்கு உற்றாருக்கும் பதக்குப் பரதேசிக்கும் ஆனால் உழுதவனுக்கு என்ன?
  • உழக்கு உறிஞ்சப் போய்ப் பதக்குப் பன்றி கொண்டு போச்சுதாம்.
  • உழக்கு எண்ணெய் வாங்கி உழக்கு எண்ணெய் விற்றாலும் மினுக்கு எண்ணெய் மிச்சம்.
  • உழக்கு நெல்லுக்கு உழைக்கப் போய்ப் பதக்கு நெல்லைப் பன்றி தின்றதாம்.
  • உழக்கு மிளகு கொடுப்பானேன்? ஒளிந்திருந்து இளநீர் குடிப்பானேன்?
  • உழக்கு மிளகு கொடுப்பானேன்? ஒளிந்திருந்து மிளகு சாறு குடிப்பானேன்?
  • உழக்கு விற்றாலும் உரலுக்குப் பஞ்சமா?
  • உழக் குளிர் அடித்தால் நாற்றுப் பிடுங்கப்படாதா?
  • உழவன் மேட்டை உழுதால் அரசன் நாட்டை ஆளலாம்.
  • உழவனுக்கு உழவுக் கம்புதான் மிச்சம்.
  • உழவால் பயிர் ஆகிறது எருவாலும் ஆகாது.
  • உழவில் பகை ஆனால் எருவிலும் தீராது.
  • உழவிலே இல்லாவிட்டால் மழையிலே.
  • உழவிலே பகை எருவிலும் தீராது.
  • உழவினும் மிகுந்த ஊதியம் இல்லை.
  • உழவுக்குப் பகை எருவில் தீருமோ?
  • உழவின் பகை எருவிலும் தீராது.
  • உழவின்றி ஊதியம் இல்லை, உடையவன் இருந்தக்கால்.
  • உழவு அற உழுதவன் விளைவு அற விளையும்
  • உழவு ஆள் மேற்கே பார்ப்பான்; கூத்தாடி கிழக்கே பார்ப்பான்.
  • உழவு உழுது காய்ந்தால் வித்து இரட்டி காணும்.
  • உழவு ஏற உழுதால் நெல் ஏற விளையும்.
  • உழவு ஒழிந்த மாடு பட்டிப் புறத்திலே.
  • உழவுக்கு ஏற்ற கொழு.
  • உழவுக்கு ஒரு சுற்றும் வராது; ஊணுக்குப் பம்பரம்.
  • உழவுக்குப் பிணைத்து விடுகிற மாடும் கூட்டுக்குப் பிணைத்து விடுகிற ஆளும் உதவா.
  • உழவுக்கும் அக்கினி ஹோத்திரத்துக்கும் வெகு தூரம்.
  • உழவுக்கு மிஞ்சிய ஊதியம் இல்லை.
  • உழவு காலத்தில் ஊரை விட்டே போய்விட்டால், அறுப்புக் காலத்தில் ஆள் தேட வேண்டியதே இல்லை.
  • உழவு குளிர அடித்தால் நாற்றுப் பிடுங்கப் படாதா?
  • உழவு நட்பு இல்லா நிலமும் மிளகு நட்பு இல்லாக் கறியும் வழ வழ.
  • உழவும் தரிசும் ஓரிடத்திலே; ஊமையும் செவிடனும் ஒரு மடத்திலே.
  • உழவு மாடு ஆனால் ஊருக்குள்ளே விலை போகாதா?
  • உழவு மாடு ஊர் வெளியே போனாலும் அங்கேயும் ஏரில் பூட்டி அடிப்பார்கள்.
  • உழுகிற எருமையும் உள்ளூர் மருமகனும் ஒன்று.
  • உழுகிற காலத்தில் ஊர் சுற்றிவிட்டு அறுக்கிற காலத்தில் அரிவான் எடுத்துக் கொண்டு போனானாம்.
  • உழுகிற குண்டை ஆனால் உள்ளூரில் விலை ஆகாதா?
  • உழுகிறது ஓர் ஏர்; முன் ஏரை மறி என்றானாம்.
  • உழுகிறதை விட்டு உழவன் சாமி ஆடினானாம்.
  • உழுகிற நாளில் ஊருக்குப் போய்விட்டு அறுக்கிற நாளில் அரிவாள் கொண்டு வந்தாற்போல்.
  • உழுகிற நாளில் ஊரை விட்டுப் போனால் அறுக்கிற நாளில் ஆள் தேட வேண்டாம்.
  • உழுகிற மாட்டுக்கும் ஒரு படி கொள்ளு; ஊர் சுற்றுகிற மாட்டுக்கும் ஒரு படி கொள்ளா?
  • உழுகிற மாட்டை எருது நக்கினது போல.
  • உழுகிற மாட்டைக் கொம்பிலே அடித்தாற் போல.
  • உழுகிற மாட்டை நுகத்தால் அடித்தாற் போல.

உழுகிற மாடு ஆனால் உள்ளூரில் விலை போகாதா?

  • உழுகிற மாடு ஆனால் உள்ளூரில் விலை போகாதா?
  • உழுகிற மாடு ஊருக்குப் போனால் ஏரும் கலப்பையும் எதிர்த்தாற் போல் வரும்.
  • உழுகிற மாடு பரதேசம் போனால் அங்கு ஒருவன் கட்டி உழுவான்; இங்கு ஒருவன் கட்டி உழுவான்.
  • உழுகிறவன் இளப்பமானால் எருது மச்சான் முறை கொண்டாடும்.
  • உழுகிறவன் கணக்குப் பார்த்தால் உழவுக் கோலும் மிஞ்சாது
  • உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கேனும் மிஞ்சாது.
  • உழுகிறவன்தான் வைக்கோல் போட வேண்டும்.
  • உழுகிறவனுக்குத்தான் தெரியும், உடம்பு வருத்தம்.
  • உழுத எருது ஆனாலும் ஒரு முடி நாற்றைத் தின்ன ஒட்டார்.
  • உழுத காலாலே உழப்பி விடு.
  • உழுத சேறு காய்ந்தால் உழக்கு நெல் காணாது.
  • உழுத மாடு ஊருக்குப் போனால் அங்கும் ஒருசால் அடித்துக் கொண்டானாம்.
  • உழுத மாடு பரதேசம் போச்சாம்; அங்கும் ஒரு சால் கட்டி உழுதானாம்.
  • உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்குக்கூட மிஞ்சாது.
  • உழுதவன் காட்டைப் பார்; மேய்த்தவன் மாட்டைப் பார்.
  • உழுதவன் கெட்டது இல்லை.
  • உழுது இல்லாது உலகில் ஒன்றும் செல்லாது.
  • உழுது உண்டு வாழ்வதற்கு ஒப்பு இல்லை ஒரு காலும்.
  • உழுது உப்பு விதைத்து விடுவேன்.
  • உழுது உலர்ந்தது பழுது ஆகாது.
  • உழுது உழுது காய்ந்தால் வித்து இரட்டி காணும்.
  • உழுது பிழைக்கிறவன் ஒரு கோடி; ஏய்த்துப் பிழைக்கிறவன் ஏழு கோடி.
  • உழுந்து அரைத்த அம்மி போல.
  • உழுபவன் ஊர்க்கணக்குப் பண்ணுவானோ? * உழுபவன் ஏழை ஆனால் எருதும் ஏழைமை முறை கொண்டாடும்.
  • உழுபவன் கணக்கு எடுத்தால் உழவுக் கோலும் மிஞ்சாது.
  • உழுவார் உலகத்துக்கு ஆணி.
  • உழுவார் கூலிக்கு அழுவார்.
  • உழுவாரைப் பார்த்தாலும் பார்க்கலாம்; உண்பாரைப் பார்க்க மனம் தாங்காது.
  • உழுவானுக்கு ஏற்ற கொழு; ஊராருக்கு ஏற்ற தொழு.
  • உழுவோர் உழைப்பால்தான் உலகோர் பிழைப்பார்.
  • உழைக்காத உடம்பு உரம் கொள்ளாது.
  • உழைக்கிற கழுதை எந்நாளைக்கும் உழைத்தே தீர வேண்டும்.
  • உழைத்த அளவுக்கு ஊதியம்.
  • உழைப்பவன் ஒரு கோடி; உண்பவன் ஒன்பது கோடி.
  • உழைப்பாளி சுகம் அடைந்தால் வரப்பு ஏறிப் பேளமாட்டான்.
  • உழைப்புக்கு ஊர்க்குருவி; இழைப்புக்கு வான் குருவி.
  • உழைப்புக்குத் தகுந்த ஊதியம்.
  • உள் ஆள் இல்லாமல் கோட்டை அழியாது
  • உள் ஆளும் கள்ளாளும் கூட்டமா?
  • உள் இருந்தாருக்குத் தெரியும் உள் வருத்தம்.
  • உள் இருத்து கள்வன் உளவறிந்து செய்வான்.
  • உள் எல்லாம் புண்ணும் உடம்பெல்லாம் புண்ணுமாய் இருக்கிறான்.
  • உள் சுவர் இருக்கப் புறச்சுவர் பூசுவார் போல.
  • உள் சுவர் இருக்கப் புறச்சுவர் மண் இட்டு, பிள்ளை பெற்றவள் இருக்கப் பீத்துணியை மோந்து பார்த்தாளாம்.
  • உள் சுவர் தீற்றிப் புறச்சுவர் தீற்று.
  • உள் நாக்கும் தொண்டையும் அதிர அடித்தது போல.
  • உள் வீட்டிலே கீரையை வைத்துக்கொண்டு அயல் வீட்டுக்குப் போவானேன்?
  • உள் வீட்டுக் கடனும் உள்ளங்கைச் சிரங்கும் கெட்டவை.
  • உள்ள அன்றுக்கு ஓணம்; இல்லாத அன்றைக்கு ஏகாதசி.
  • உள்ளக் கருத்து வள்ளலுக்குத் தெரியும்.
  • உள்ளங்கால் வெள்ளெலும்பு தேய உழைத்தான்.
  • உள்ளங் காலில் முள்ளுத் தைக்காமல் இருக்க வேண்டும்.
  • உள்ளங்கை நெல்லிக் கனி போல.
  • உள்ளங்கைப் பாற்சோற்றை விட்டுப் புறங்கையை நக்கினது போல.
  • உள்ளங் கைப் புண்ணுக்குக் கண்ணாடி ஏன்?
  • உள்ளங்கையில் அஞ்சு கொண்டை முடிக்கிறேன்.
  • உள்ளங்கையில் இட்டவர்களை உள்ளளவும் நினை.
  • உள்ளங்கையில் இட்டுப் புறங்கையை நக்குவதா?
  • உள்ளங்கையில் உப்பிட்டாரை உள்ளளவும் நினை.
  • உள்ளங்கையில் தேனை வைத்துப் புறங்கையை நக்கினாற் போல.
  • உள்ளங்கையில் போட்டுப் புறங்கையை நக்கலாமா?
  • உள்ளங்கையில் ரோமம் முளைத்ததாயின் அறிவிலான் அடங்குவான்.
  • உள்ளங்கையில் வைகுண்டம் காட்டுகிறேன்.
  • உள்ளத்தில் ஒன்றும் குறையாது, கள்ளம் இல்லா மனத்தார்க்கு.
  • உள்ளத்தில் கள்ளமும், உதட்டில் வெல்லமும்.
  • உள்ளத்தில் நஞ்சும், உதட்டில் வெல்லமும்.
  • உள்ளத்துக்கு ஒன்றும் இல்லை; குப்பத்துக்கு ஆள் தள்ளு என்றானாம்.
  • உள்ளதுக்குக் காலம் இல்லை.
  • உள்ளது குற்றம் ஒரு கோடி ஆனாலும் பிள்ளைக்கும் தாய்க்கும் பிணக்கு உண்டோ?
  • உள்ளது குறைவதும் நிறைவதும் ஊழ்வினை
  • உள்ளது சொல்ல ஊரும் அல்ல; நல்லது சொல்ல நாடும் அல்ல.
  • உள்ளது போகாது; இல்லது வராது.
  • உள்ளதும் போச்சு நொள்ளைக் கண்ணு!
  • உள்ளதைச் சொல்லி ஊரை விட்டு ஓடு.
  • உள்ள தெய்வங்களை எல்லாம் ஒருமிக்க வருந்தினாலும் பிள்ளை கொடுக்கிற தெய்வம் புருஷன்.
  • உள்ளதை எல்லாம் விற்று உள்ளான் மீனைத் தின்று பார்.
  • உள்ளதைக் கொண்டு இல்லதைப் பாராட்டலாம்.
  • உள்ளதைக் கொண்டுதான் ஊராள வேண்டும்.
  • உள்ளதைச் சொல்லு; உலகத்தை வெல்லு.
  • உள்ளதைச் சொன்னவன் ஊருக்குப் பகை.
  • உள்ளதைச் சொன்னவன் ஊருக்குப் பொல்லாதவன்.
  • உள்ளதைச் சொன்னால் உடம்பெரிச்சல்.
  • உள்ளதைச் சொன்னால் உடம்பெல்லாம் புண் ஆகும்.
  • உள்ளதைச் சொன்னால் உறவு அற்றுப் போகும்.
  • உள்ளதைச் சொன்னால் எல்லோருக்கும் பகை.
  • உள்ளதைச் சொன்னால் நொள்ளைக் கண்ணிக்கு நோப்பாளமாம்.
  • உள்ளதையும் கெடுத்தாள், உதறு காலி வந்து.
  • உள்ளதையும் கெடுத்தான் கொள்ளிக் கண்ணன்.
  • உள்ளதை விற்று நல்லதைக் கொள்ளு.
  • உள்ள பிள்ளை உரலை நக்கிக் கொண்டிருக்க மற்றொரு பிள்ளைக்குத் திருப்பதிக்கு நடக்கிறான்.
  • உள்ளம் அறியாத கள்ளம் இல்லை.
  • உள்ளம் எல்லாம் புண்ணும் உடம்பெல்லாம் கொப்புளமும்.
  • உள்ளம் களிக்கக் கள் உண்டு கலங்காது.
  • உள்ளம் தீ எரிய உதடு தேன் சொரிய.
  • உள்ளம் படர்ந்ததே கூறும் முகம்.
  • உள்ள மயிருக்கு எண்ணெய் இல்லை; சுற்றுக் குடுமிக்கு எண்ணெய் ஏது?
  • உள்ள மாற்றைக் காட்டும், உரை கல்லும் மெழுகுண்டையும்.
  • உள்ளவன் பிள்ளை உப்போடு உண்ணும்; இல்லாதவன் பிள்ளை சர்க்கரையோடு உண்ணும்.
  • உள்ளவனிடம் கள்ளன் போனாற் போல.
  • உள்ளனும் கள்ளனும் கூடினால் விடிகிற மட்டும் திருடலாம்.
  • உள்ளி இட உள்ளி இட உள்ளே போச்சுது.
  • உள்ளிக்கு நாற்றம் உடந்தை.
  • உள்ளிப் பூண்டுக்கு எத்தனை வாசனை கட்டினாலும் துர்க்கந்தத்தையே வீசும்.
  • உள்ளிய தெள்ளியர் ஆயினும் ஊழ்வினை பைய நுழைந்து விடும்.
  • உள்ளுக்குள்ளே கொட்டின தேளே, ஒரு மந்திரம் செய்கிறேன் கேளே.
  • உள்ளூர் ஆண்டி காத்தாண்டி; நீ பீத்தாண்டி.
  • உள்ளூர்க் குளம் தீர்த்தக் குளம் ஆகாது.
  • உள்ளூர்க் குறுணியும் சரி; அசலூர்ப் பதக்கும் சரி.
  • உள்ளூர்ச் சம்பந்தம் உள்ளங்கைச் சிரங்கு போல.
  • உள்ளூர்ச் சம்பந்தியும் உள்ளங்கைப் புண்ணும் ஒரே மாதிரி.
  • உள்ளூர்ப் பகையும் உலகத்துக்கு உறவும்.
  • உள்ளூர்ப் பிறந்தகமோ? உள்ளங்கைப் புண்ணோ?
  • உள்ளூர்ப் புலி, வெளியூர் எலி.
  • உள்ளூர்ப் பூனை, அசலூர் ஆனை.
  • உள்ளூர்ப் பெண்ணும் அசலூர் மண்ணும் ஆகா.
  • உள்ளூர் மருமகனும் உழுகிற கடாவும் ஒன்று.
  • உள்ளூர் மேளம்.
  • உள்ளூரான் தண்ணீர்க்கு அஞ்சான்; அயலூரான் பேய்க்கு அஞ்சான்.
  • உள்ளூரில் ஓணான் பிடிக்க முடியாதவன் அயலூரில் ஆனை பிடிக்கப் போகிறானாம்.
  • உள்ளூரில் ஓணான் பிடிக்காதவன் உடையார் பாளையம் சென்று உடும்பு பிடிப்பானா?
  • உள்ளூரில் பூனை பிடிக்காதவன் அசலூரில் ஆனை பிடிப்பானா?
  • உள்ளூரில் விலைப்படாத மாடா வெளியூரில் விலைப்படும்?
  • உள்ளூருக்கு ஆனை, அயலூருக்குப் பூனை.
  • உள்ளூறக் கொட்டின தேளே, ஒரு மந்திரம் சொல்கிறேன் கேளே.
  • உள்ளே இருக்கிற பூபம்மா, பிள்ளை வரம் கேளம்மா.
  • உள்ளே இருக்கும் சாமி உண்டைக்கட்டி, உண்டைக்கட்டி என்கிறது; வெளியிலே இருக்கும் சாமி தத்தியோன்னம். தத்தியோன்னம் என்கிறதாம்.
  • உன் தாலி அறுந்து தண்ணீர்ப் பானையில் விழ.
  • உள்ளே பகையும் உதட்டிலே உறவும் கள்ளம் இல்லா மனசுக்கு ஏன்?
  • உள்ளே பகையும் உதட்டிலே உறவுமா?
  • உள்ளே பார்த்தால் ஓக்காளம்; வெளியே பார்த்தால் மேற்பூச்சு.
  • உள்ளே போனால் பிணம்; மேலே வந்தால் பணம்.
  • உள்ளே வயிறு எரிய, உதடு பழம் சொரிய.
  • உளவன் இல்லாமல் ஊர் அழியுமா?
  • உளவு இல்லாமல் களவு இல்லை.
  • உளவு போல இருந்து குளவி போலக் கொட்டுகிறதா?
  • உளறிக் கொட்டிக் கிளறி மூடாதே.
  • உளி எத்தனை? மலை எத்தனை?
  • உளுவைக் குஞ்சுக்கு நீஞ்சக்கற்றுக் கொடுக்க வேண்டுமா?
  • உளுவைக் குட்டிக்கு ராய பாரமா?
  • உளை வழியும் அடைமழையும் பொதி எருதும் ஒருவனுமாய் அலைகிறான்.
  • உற்சாகம் செய்தால் மச்சைத் தாண்டுவான்.
  • உற்ற கணவனும் ஒரு நெல்லும் உண்டானால் சித்திரம் போலே குடிவாழ்க்கை செய்யலாம்.
  • உற்ற சிநேகிதன் உயிருக்கு அமிர்தம்.
  • உற்றது சொல்ல ஊரும் அல்ல; நல்லது சொல்ல நாடும் அல்ல.
  • உற்றது சொன்னால் அற்றது பொருந்தும்.
  • உற்ற பேர்களைக் கெடுக்கிறதா?
  • உற்றார் உதவுவரோ? அன்னியர் உதவுவரோ?
  • உற்றார்க்கு ஒரு பிள்ளை கொடான்; நமனுக்கு நாலு பிள்ளை கொடுப்பான்.
  • உற்றார் தின்றால் புற்றாய் விளையும்; ஊரார் தின்றால் போராய் விளையும்.
  • உற்றாருக்கு ஒரு மாசம்; பகைத்தாருக்குப் பத்து நாள்.
  • உற்றாருக்கு ஒன்று கொடான்; பகைவருக்கு நாலும் கொடுப்பான்.
  • உற்றுப் பார்க்கில் சுற்றம் இல்லை.
  • உற்றுப் பார்த்த பார்வையிலே ஒன்பது பேர் பட்டுப் போவார்.
  • உறக்கத்தில் காலைப் பிடிப்பது போல.
  • உறக்கம் சண்டாளம்
  • உறங்காப் புளி, ஊறாக் கிணறு, காயா வருளம், தோரா வழக்குத் திருக்கண்ணங்குடி.
  • உறங்கின நரிக்கு உணவு கிட்டாது.

உறவிலே நஞ்சு கலக்கிறதா?

  • உறவிலே போகிறதைவிட ஒரு கட்டு விறகிலே போகலாம்.
  • உறவு உண்ணாமல் கெட்டது; உடை உடுக்காமல் கெட்டது.
  • உறவு உறவுதான்; மடியிலே கைவைக்காதே.
  • உறவுக்கு ஒன்பது படி; ஊருக்குப் பத்துப் படி.
  • உறவுக்கு ஒன்பது படி; பணத்துக்குப் பத்துப் படி.
  • உறவுக்கும் பகைக்கும் பொருளே காரணம்.
  • உறவுதான்; பயிரிலே கை வாயாதே.
  • உறவுதானே உணர்ந்து கொள்ளும்.
  • உறவு போகாமல் கெட்டது; கடன் கேளாமல் கெட்டது.
  • உறவுபோல் இருந்து குளவிபோல் கொட்டுகிறதா?
  • உறவும் பகையும் ஒரு நிலை இல்லை.
  • உறவும் பாசமும் உதட்டோடே.
  • உறவு முறையான் மூத்திரத்தை உமிழவும் முடியாது; விழுங்கவும் முடியாது.
  • உறவு முறையான் வீட்டில் உண்ட வரைக்கும் மிச்சம்.
  • உன் தாலி அறுக்கச்சே ஒரு கட்டுத் தாலி ஒருமிக்க அறுக்க வைக்கிறேன்.
  • உறவைப் பகைத்தாலும் ஊரைப் பகைக்காதே.
  • உறவைப்போல் இருந்து குளவியைப்போல் கொட்டுவர்.
  • உறள் பால தீண்டா விடுவது அரிது.
  • உறி அற மூளி நாய்க்கு வேட்டை.
  • உறிப் பணம் போய்த் தெருச் சண்டை இழுக்கிறது.
  • உறியிலே கட்டித் தூக்கினாலும் அழுகற் பூசணிக்காய் அழுகலே
  • உறியிலே தயிர் இருக்க ஊர் எங்கும் அலைவானேன்?
  • உறியிலே தயிர் இருந்தால் உறங்குமோ பூனைக்குட்டி?
  • உறியிலே வெண்ணெய் இருக்க நெய்க்கு அழுவானேன்.
  • உறுதி எதிலும் பெரிது.
  • உறுதியான் காரியம் ஒரு போதும் கெடாது.
  • உறு தீங்குக்கு உதவாதவன் உற்றவனா?
  • உறை மோருக்கு இடம் இல்லாத வீட்டில் விலை மோருக்குப் போனது போல.
  • உன் அப்பன்மேல் ஆணை; என்மேலே ஆசையாய் இருக்க வேண்டும்.
  • உன் இழவு எடுக்க.
  • உன் உத்தமித் தங்கை ஊர் மேயப் போனதால் என் பத்தினிப் பானை படபட என்கிறது.
  • உன் உபசாரம் என் பிராணனுக்கு வந்தது.
  • உன் உயிரினும் என் உயிர் கருப்பட்டியா?
  • உன் எண்ணத்தில் இடி விழ.
  • உன் எண்ணத்தில் எமன் புகுத.
  • உன் காரியம் முப்பத்திரண்டிலே .
  • உன் காலை நீயே கும்பிட்டுக் கொள்ளாதே.
  • உன் குதிரை குருடு; ஆனாலும் கொள்ளுத் தின்பது கொள்ளை.
  • உன் கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம்.
  • உன் கொண்டை குலைய.
  • உன் சமர்த்திலே குண்டு பாயாது.
  • உன் சொல்லிலே உப்பும் இல்லை; புளியும் இல்லை.
  • உன் தலையில் எழுதி மயிரால் மறைத்து விட்டான் ஆண்டவன்.
  • தொடையைப் பாம்பு பிடுங்க.
  • உன் நெஞ்சில் தட்டிப் பார்.
  • உன் பாடு கொள்ளைதானே
  • உன் பாடு கொள்ளைதானே?
  • உன் பாடு யோகம்.
  • உன் பிள்ளையைத் தின்று தண்ணீர் குடிக்க.
  • உன் பெண்சாதி தாலி பிணத்தின்மேல் விழ.
  • உன் பொங்கு மங்க.
  • உன்மத்தம் பிடித்தது போல.
  • உன் மதம் மண்ணாய்ப் போக.
  • உன் மஹலூத்தைக் கேட்டுக் காது புளிச்சாறு மாதிரி புளித்துப் போயிற்று.
  • உன் முகத்தது தஞ்சாவூர் மஞ்சளா?
  • உன் முறுக்குத் திறுக்கு எல்லாம் என் உடுப்புக்குன்ளே.
  • உன் வண்டவாளம் எல்லாம் எனக்குத் தெரியும்.
  • உன் வாயில் நாகராஜா பிரசாதத்தைத்தான் போடவேணும்.
  • உன் வாயிலே சீதேவி.
  • உன் வாயிலே மண் விழ.
  • உன் வீடு இருக்கிற அழகுக்கா விழித்துக் கொண்டிருக்கிறாய்?
  • உன்ன ஓராயிரம்; பன்னப் பதினாயிரம்
  • உன்னாலே நான் கெட்டேன்; என்னாலே நீ கெட்டாய்.
  • உன்னுடைய கர்வத்தால் ஓதுகிறாய் சூதும் வாதும்.
  • உன்னை அடித்துப் போட்டால் பத்துக் காணிக்கு எரு ஆகும்.
  • உன்னை அள்ளத் துள்ளிக்கொண்டு போக.
  • உன்னை ஒண்டிப் பாடை கட்ட.
  • உன்னைக் கடலிலே கை கழுவினேன்.
  • உன்னைக் கேடு அடிக்க.
  • உன்னைக் கொடுத்து என்னை மறந்தேன்.
  • உன்னைக் கொடுப்பேனோ ஒரு காசு; உன்னோடே போச்சுது புரட்டாசி.
  • உன்னைக் கொடுப்பேனோ சென்னைக் கிளி? நீ சுமை சுமந்தல்லவோ கூனிப்போனாய்?
  • உன்னை நீ அறிவாயாகில் உனக்கொரு கேடும் இல்லை
  • உன்னை நீ அறிவாயாகில் உனக்கொரு கேடும் இல்லை.
  • உன்னைப் பாடையிலே வைத்துப் பயணம் இட ,உன்னைப் பிடி, என்னைப் பிடி, உலகாத்தாள் தலையைப் பிடி, உன்னைப் பிடி, என்னைப் பிடி என்று ஆய் விட்டது.
  • உன்னைப் பிழிந்தெடுத்துப் போடுவேன்.
  • உன்னையும் என்னையும் ஆட்டுகிறது மன்னி கழுத்துச் சிறு தாலி.
  • உன்னை வஞ்சித்தவனை ஒருபோதும் நம்பாதே
  • உன்னை வாரிக் கொண்டு போக.
  • உன்னை வெட்டிப் பலி போட.
  • உன்னோடே பிறந்ததில் மண்ணோடே பிறக்கலாம்.
  • உனக்கு ஆச்சு, எனக்கு ஆச்சு; பார்க்கிறேன் ஒரு கை.
  • உனக்கு இருக்கிற கஞ்சியை எனக்கு வார்; பசியாமல் இருக்க வரந் தருகிறேன் என்ற கதை.
  • உனக்கு உட்பட்டும் பின்பாட்டுப் பாடுகிற மனிதர்கள் போல.
  • உனக்கு என்ன, கொம்பு முளைத்திருக்கிறதோ?
  • உனக்கு ஒட்டுத் திண்ணைபோல் இருக்கிறான்.
  • உனக்குக் கொடுப்பேனோ ஒரு காசு; நேற்றோடு போச்சு புரட்டாசு.
  • உனக்கு நான் அபயம்; எனக்கு நீ அபயம்.
  • உனக்குப் போடும் தண்டத்தை நாய்க்குப் போட்டாலும் வாலையாவது ஆட்டும்.
  • உனக்கும் பெப்பே; உங்கள் அப்பனுக்கும் பெப்பே.
  • உனக்கு மழை பெய்யும், எனக்கு நீர் தா என்றானாம்.
  • உனக்கு முதுகு வளைகிறதா?

[தொகு]

  • ஊ என்றாளாம் காமாட்சி; ஒட்டிக் கொண்டளாம் மீனாட்சி.
  • ஊக்கமது கைவிடேல்.
  • ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு.
  • ஊசல் ஆடித் தன் நிலையில் நிற்கும்.
  • ஊசி ஒரு முழத் துணியையாவது கொடுக்கும்; உற்றார் என்ன கொடுப்பார்.
  • ஊசி குத்திக் கொண்டவன் அழாமல் இருக்கப் பார்த்தவன் அழுவானேன்?
  • ஊசி கொண்டு கடலாழம் பார்ப்பது போல,
  • ஊசி கொள்ளப் போய்த் துலாக் கணக்குப் பார்க்கிறதா?
  • ஊசி கோக்கிறதற்கு ஊரில் உழவாரம் ஏன்?
  • ஊசி நூலால் இறுகத் தைத்தாலும் தேங்காய்க்கு மஞ்சள் இல்லை என்றாளாம்.
  • ஊசி பொன்னானால் என்ன விலை பெறும்.
  • ஊசி போகிறது கணக்குப் பார்ப்பான்; பூசணிக்காய் போகிறது தெரியாது.
  • ஊசி போல மிடறும் தாழி போல வயிறும்.
  • ஊசி மலராமல் சரடு ஏறுமா?
  • ஊசி மலிவு என்று சீமைக்குப் போகலாமா?
  • ஊசி முனையிலே நிற்கிறான்.
  • ஊசி முனையில் தவம் செய்தாலும் உள்ளதுதான் கிடைக்கும்.
  • ஊசி மூஞ்சியை ஊதை என்ன செய்யும்.
  • ஊசிக் கணக்குப் பார்க்கிறான்.
  • ஊசிக் கண்ணிலே ஆகாயம் பார்த்தது போல.
  • ஊசிக் குத்தின்மேல் உரல் விழுந்த கதை.
  • ஊசிக்குக் கள்ளன் உடனே வருவான்.
  • ஊசித் தொண்டையும் தாழி வயிறும்.
  • ஊசியின் காதில் ஒட்டகம் நுழையுமா?
  • ஊசியும் அல்லவோ ஒரு சரட்டைக் கோத்துக் கொண்டிருக்கிறது.
  • ஊசியும் கருமானும் உருண்டு ஓடிப் போனான்.
  • ஊசியும் சரடும் போல.
  • ஊசியை ஊசிக் காந்தம் இழுக்கும்; உத்தமனைச் சிநேகம் இழுக்கும்.
  • ஊசியைக் காந்தம் இழுக்கும் உத்தமனைச் சிநேகம் இழுக்கும்.
  • ஊடைக்குப் பாவு இருந்தால் அல்லவோ ஓடி ஓடி நெய்வான்?
  • ஊணன் கருமம் இழந்தான்; உலுத்தன் பெயர் இழந்தான்.
  • ஊணினால் உறவு; பூணினால் அழகு.
  • ஊணுக்கு முத்துவான் வேலைக்குப் பிந்துவான்.
  • ஊணுக்கு முந்து, படைக்குப் பிந்து.
  • ஊணுக்கும் உடைக்கும் என்னைக் கூப்பிடு; ஊர்க் கணக்குக்குத் தம்பியைக் கூப்பிடு.
  • ஊணும் இல்லை; உறக்கமும் இல்லை.
  • ஊணும் உறக்கமும் ஒத்தார்க்கு ஒத்த படி.
  • ஊண் அருந்தக் கருமம் இழப்பர்.
  • ஊண் அற உயிர் அறும்.
  • ஊண் அற்ற போதே உடல் அற்றுப் போம்.
  • ஊண் அற்ற போதே உளம் அற்றது போல.
  • ஊண் அற்றபோது உடலற்றது.
  • ஊண் ஒடுங்க வீண் ஒடுங்கும்.
  • ஊண் பாக்கு ஒழிய வீண் பாக்கு ஆகாது.
  • ஊத அறிந்தவன் வாதி, உப்பு அறிந்தவன் யோகி.
  • ஊதி ஊதி உள்ளதெல்லாம் பாழ்.
  • ஊதின சங்கு ஊதினால் விடிகிற போது விடியட்டும்.
  • ஊதினால் போம்; உறிஞ்சினால் வரும்.
  • ஊத்தை திரண்டு கழுக்காணி ஆச்சுது.
  • ஊத்தை போகக் குளித்தவனும் இல்லை; பசி போகத் தின்றவனும் இல்லை.
  • ஊத்தை போனாலும் உள்வினை போகாது.
  • ஊத்தை வாயன் தேட நாற்ற வாயன் தின்ன.
  • ஊத்தை வாய்க்கும் உமிழ் நீருக்கும் கேடு.
  • ஊத்தைப் பல்லுக்கு விளாங்காய் சேர்ந்தது போல.
  • ஊமை ஊரைக் கெடுக்கும், பெருச்சாளி வீட்டைக் கெடுக்கும்.
  • ஊமை ஊரைக் கெடுப்பான்; ஆமை ஆற்றைக் கெடுக்கும்.
  • ஊமை ஊரைக்கெடுக்கும்; வாயாடி பேரைக் கெடுக்கும்.
  • ஊமை கண்ட கனா. (+ ஆருக்குத் தெரியும்.)
  • ஊமை கண்ட கனாப்போலச் சீமைப் பட்டணம் ஆகுமா?
  • ஊமை பிரசங்கம் பண்ணச் செவிடன் கேட்டது போல.
  • ஊமை போல இருந்து எருமை போலச் சாணி போட்டதாம்.
  • ஊமைக்கு உளறு வாயன் உற்பாத பிண்டம்.
  • ஊமைக்கு உளறு வாயன் சண்டப் பிரசண்டன்.
  • ஊமைக்கு வாய்த்தது ஒன்பதும் பிடாரி.
  • ஊமைக்குத் தெத்து வாயன் உயர்ந்த வாசாலகன்.
  • ஊமையர் சபையில் உளறு வாயன் மகாவித்துவான்.
  • ஊமையன் கனவு கண்டது போலச் சிரிக்கிறான்.
  • ஊமையன் பாட, சப்பாணி ஆட, செவிடன் கேட்க, குருடன் பார்க்க.
  • ஊமையன் பேச்சுப் பழகின பேருக்குத் தெரியும்.
  • ஊமையாய் இருந்தால் செவிடும் உண்டு
  • ஊமையாய் இருந்தால் செவிடும் உண்டு.
  • ஊமையின் பிரசங்கத்தைச் செவிடன் கேட்டானாம்.4640
  • ஊமையும் அல்ல, செவிடனும் அல்ல.
  • ஊமையும் ஊமையும் மூக்கைச் சொறிந்தாற் போல்.
  • ஊமையை விட உளறு வாயன் மேல்.
  • ஊராருக்கெல்லாம் ஒரு வழி; இவனுக்கு ஒரு வழி.
  • ஊராருக்கெல்லாம் ஒரு வழி; இவனுக்கு ஒரு வழி.
  • ஊராருக்கெல்லாம் ஒரு வழி; ஓச்சனுக்கு ஒரு வழி.
  • ஊராருக்கெல்லாம் ஒரு வழி; ஓச்சனுக்கு ஒரு வழி.
  • ஊராரே வாருங்கள்; முதுகிலே குந்துங்கள்.
  • ஊராரே வாருங்கள்; முதுகிலே குந்துங்கள்.
  • ஊராரைப் பகைத்து உயிரோடு இருந்தவர் இல்லை.
  • ஊராரைப் பகைத்து உயிரோடு இருந்தவர் இல்லை.
  • ஊரார் உடைமைக்கு உலை வைக்கிறான்.
  • ஊரார் உடைமைக்கு உலை வைக்கிறான்.
  • ஊரார் உடைமைக்கு ஓயாண்டி போல் திரிவான்.
  • ஊரார் உடைமைக்கு ஓயாண்டி போல் திரிவான்.
  • ஊரார் உடைமைக்குப் பேயாய்ப் பறக்கிறான்.
  • ஊரார் உடைமைக்குப் பேயாய்ப் பறக்கிறான்.
  • ஊரார் உடைமைக்குப் பேராப் பேராசை கொள்ளாதே.
  • ஊரார் உடைமைக்குப் பேராப் பேராசை கொள்ளாதே.
  • ஊரார் எருமை பால் கறக்கிறது; நீயும் ஊட்டுகிறாய்; நானும் உண்ணுகிறேன்.4720
  • ஊரார் எருமை பால் கறக்கிறது; நீயும் ஊட்டுகிறாய்; நானும் உண்ணுகிறேன்.
  • ஊரார் கணக்கு உடையன் பிடரியிலே.
  • ஊரார் கணக்கு உடையன் பிடரியிலே.
  • ஊரார் சிரித்தால் என்ன? நாட்டார் நகைத்தால் என்ன? நான் நடக்கிற நடை இவ்வளவுதான்.
  • ஊரார் சிரித்தால் என்ன? நாட்டார் நகைத்தால் என்ன? நான் நடக்கிற நடை இவ்வளவுதான்.
  • ஊரார் சொத்துக்குப் பேயாய்ப் பறக்கிறான்.
  • ஊரார் சொத்துக்குப் பேயாய்ப் பறக்கிறான்.
  • ஊரார் சொத்துத் தூமகேது.
  • ஊரார் நாய்க்குச் சோறு போட்டால் அது உடையவன் வீட்டிலே போய்த்தான் குரைக்கும்.
  • ஊரார் நாய்க்குச் சோறு போட்டால் அது உடையவன் வீட்டிலே போய்த்தான் குரைக்கும்.
  • ஊரார் பண்டம் உமி போல்; தன் பண்டம் தங்கம் போல்.
  • ஊரார் பண்டம் உமி போல்; தன் பண்டம் தங்கம் போல்.
  • ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்.
  • ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்.
  • ஊரார் புடைவையில் தூரம் ஆவது.
  • ஊரார் புடைவையில் தூரம் ஆவது.
  • ஊரார் வீட்டு நெய்யே; என் பெண்டாட்டி கையே.
  • ஊரார் வீட்டு நெய்யே; என் பெண்டாட்டி கையே.
  • ஊரார் வீட்டுக் கல்யாணமே; ஏன் அவிழ்ந்தாய் கோவணமே!
  • ஊரார் வீட்டுக் கல்யாணமே; ஏன் அவிழ்ந்தாய் கோவணமே!
  • ஊரார் வீட்டுச் சோற்றைப் பார்; ஓசு பாடி வயிற்றைப் பார்.
  • ஊரான் ஆகில் உழுது விட்டுப் போகப் பண்ணைக்காரன் தண்ட வரி செலுத்த வேண்டியிருக்கிறது.
  • ஊரான் ஆகில் தாசனுக்குப் பேள இடம் இல்லையா?
  • ஊரான் ஆகில் தாசன் பார்க்கிறதற்குச் சந்தேகமா?
  • ஊரான் சொத்தை உப்பு இல்லாமல் தின்பான்.
  • ஊரான் மகன் நீரோடே போன கதை.
  • ஊரான் வீட்டுச் சோற்றைப் பார்; சோனிப் பையன் வயிற்றைப் பார்.
  • ஊரிலே அழகியைப் பிடிக்கப் போகிறானென்று ஆந்தையும் குரங்குமாய் ஓடிப் போச்சாம்.
  • ஊரிலே எளியாரை வண்ணான் அறிவான்; சாதிப் பொன் பூண்பாரைத் தட்டான் அறிவான்.
  • ஊரிலே கல்யாணம்; மாரிலே சந்தனம்.
  • ஊரிலேயும் போவான்; சொன்னால் அழுவான்.
  • ஊரில் இருக்கும் சனியனை வீட்டிலே அழைத்தாற் போல.
  • ஊரில் இளக்காரம் வண்ணானுக்குத் தெரியும்.
  • ஊரில் ஒருத்தனே தோழன்; ஆரும் அற்றதே தாரம்.4745
  • ஊரில் நடக்கும் விஷயம் எல்லாம் ஊசல் குமரிக்குத் தெரியும்.
  • ஊருகிற அட்டைக்குக் கால் எத்தனை என்று அறிவான்.
  • ஊருக்கு அரசன் ஆனாலும் தாய்க்குப் பிள்ளைதான்.
  • ஊருக்கு அரசன் காவல்; வீட்டுக்கு நாய் காவல்.
  • ஊருக்கு ஆகாத பிள்ளை தாய்க்கு ஆவானா?
  • ஊருக்கு இட்டு ஊதாரி ஆனான்.
  • ஊருக்கு இரண்டு பைத்தியக்காரன்.
  • ஊருக்கு இரும்பு அடிக்கிறான்; வீட்டுக்குத் தவிடு இடிக்க முடியவில்லை.
  • ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி; அதற்கும் இளைத்தவன் பள்ளிக்கூடத்து வாத்தியார்.
  • ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி; அதற்கும் இளைத்தவன் மச்சினன் பெண்டாட்டி.
  • ஊருக்கு உழைக்கிற கிராமணி.
  • ஊருக்கு எல்லாம் ஒரு வழி; உச்சிப் பிள்ளையாருக்கு ஒரு வழி.
  • ஊருக்கு எல்லாம் ஒரு வழி; உனக்கு ஒரு வழியா?
  • ஊருக்கு எல்லாம் சாஸ்திரம் சொல்லுகிற பல்லி, கூழ்ப் பானையில் விழுந்தது போல.
  • ஊருக்கு ஏற்ற மாடு வாங்கினவனும் இல்லை; தாய்க்கு ஏற்ற பெண் கட்டினவனும் இல்லை.
  • ஊருக்கு ஏற்றுக் கெட்டான்; உள்ளதைச் சொல்லிக் கெட்டான்.
  • ஊருக்கு ஒடுங்கான், யாருக்கும் அடங்கான்.
  • ஊருக்கு ஒரு தேவடியாள் ஆருக்கென்று ஆடுவாள்?
  • ஊருக்கு ஒரு வழி; ஒன்றரைக் கண்ணனுக்கு ஒரு வழி.
  • ஊருக்கு ஓமல்; வீட்டுக்கு வயிற்றெரிச்சல்.
  • ஊருக்கு நாட்டான் பெண்டாட்டி என்றால் ஓ என்னுவாளாம்; ஓர் ஆளுக்குச் சோறு என்றால் ஹூம் என்னுவாளாம்.
  • ஊருக்கு முன்னால் விளக்கு ஏற்றினால் ஒரு பிடி உயரும்.
  • ஊருக்கு விளைந்தால் ஓட்டுக்குப் பிச்சை.
  • ஊருக்கு வேலை செய்வதே மணியமாய் இருக்கிறான்.
  • ஊருக்குக் கடைசி உலகம்பட்டி.
  • ஊருக்குப் பால் வார்த்து உண்கிறாயா! உடம்புக்குப் பால் வார்த்து உண்கிறாயா?
  • ஊருக்குப் பேரும் உறவின் முறைக்குப் பொல்லாப்பும்.
  • ஊருக்கும் பேருக்கும் வடுகு இல்லை.
  • ஊருக்குள் நடக்கிற விஷயம் யாருக்குத் தெரியும்? உள்ளே இருக்கிற குமரிக்குத் தெரியும்.
  • ஊருக்கே மகாராணியாக இருந்தாலும் அவள் புருஷனுக்கு அடங்கத்தான் வேண்டும்.
  • ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்.
  • ஊரூராய்ப் போகிறவனுக்கு வாழ்க்கைப்பட்டு ஓட்டமே ஒழிய நடை இல்லை.
  • ஊரே தாய்; வேலியே பயிர்.
  • ஊரை அடித்து உலையில் போடுகிறான்.
  • ஊரை ஆண்டாயோ? ஊரான் பெண்ணை ஆண்டாயோ?
  • ஊரை ஆள்கிற ராசாவுக்கு உட்கார இடம் இல்லையாம்!
  • ஊரை உழக்கால் அளக்கிறான்; நாட்டை நாழியால் அளக்கிறான்.
  • ஊரை வளைத்தாலும் உற்ற துணை இல்லை; நாட்டை வளைத்தானும் நல்ல துணை இல்லை.
  • ஊரை விட்டுப் போகும்போது தாரை விட்டு அழுதாளாம்.
  • ஊரை விழுங்குகிற மாமியாருக்கு அவளையே விழுங்குகிற மருமகள் வந்தாளாம்.
  • ஊரை விழுங்கும் மாமனாருக்கு அவரையே விழுங்கும் மாப்பிள்ளை.
  • ஊரைக் கண்டவுடனே உடுக்கையைத் தோளில் போட்டுக் கொண்டானாம்.
  • ஊரைக் காட்ட ஒரு நாய் போதும்.
  • ஊரைக் கெடுத்தான் ஒற்றை மாட்டுக்காரன்.
  • ஊரைக் கெடுத்தான் ஒற்றைக் கடைக்காரன்.
  • ஊரைக் கொளுத்துகிற ராஜாவுக்கு ஊதிக் கொடுக்கிறவன் மந்திரி.
  • ஊரைச் சுற்றி வந்த யானை ஒற்றடம் வேணும் என்றாற்போல்.
  • ஊரைச் சொன்னாலும் பேரைச் சொல்லாதே.4800
  • ஊரைப் பகைத்தேனோ? ஒரு நொடியில் கெட்டேனோ?
  • ஊரைப் பார்க்கச் சொன்னால் பறைச்சேரியைப் பார்க்கிறான்.
  • ஊரைப் பார்த்து ஓம்பிப் பிழை.
  • ஊரைப் பிடித்த சனி பிள்ளையாரையும் பிடித்தது.
  • ஊரைப் பிடித்த சனியனுக்கு நாயைப் பிடித்துக் சூலம் போட்டது போல்.4805
  • ஊரோடு ஒக்க ஓடு; ஒருவன் ஓடினால் கேட்டு ஓடு.4810
  • ஊரோடு ஒக்க நட; நாட்டோடு நடுவே ஓடு.
  • ஊரோடு ஒட்டி வாழ்.
  • ஊரோடே ஒக்கோடே.
  • ஊர் அருகே ஒரு வயலும் உத்தரத்தில் ஒரு புத்திரனும்.
  • ஊர் அறிந்த பார்ப்பான்.
  • ஊர் அறிந்த பிராமணனுக்குப் பூணூல் எதற்கு?
  • ஊர் ஆளுகிற ராஜாவுக்குப் பேள இடம் கிடைக்கவில்லையாம்.
  • ஊர் ஆளுகிறவனுக்குப் பேளப் புறக்கடை இல்லையா?
  • ஊர் ஆளுகிறவன் பெண்டாட்டிக்குப் பேள இடம் இல்லையாம்.
  • ஊர் ஆளுகிறவன் பெண்டு பிடித்தால் ஆருடன் சொல்லி முறையிடுகிறது?
  • ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு எளிது.
  • ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குத் தொக்கு.
  • ஊர் இருக்கிறது பிச்சை போட; ஓடு இருக்கிறது வாங்கிக் கொள்ள.
  • ஊர் இருக்கிறது; ஓடு இருக்கிறது.
  • ஊர் இருக்கிறது; வாய் இருக்கிறது.
  • ஊர் இளக்காரம் வண்ணானுக்குத் தெரியும்; வீட்டு இளக்காரம் மாப்பிள்ளைக்குத் தெரியும்,
  • ஊர் உண்டாகி அல்லவோ, கிழக்கு மேற்கு உண்டாக வேண்டும்?
  • ஊர் உண்டு பிச்சைக்கு, குளம் உண்டு தண்ணீருக்கு.
  • ஊர் உண்டு பிச்சைக்கு; குளம் உண்டு தண்ணீருக்கு.
  • ஊர் ஊராய்ப் போவானுக்கு வாழ்க்கைப்பட்டு ஓட்டமே ஒழிய நடை இல்லை.
  • ஊர் எங்கும் சம்பை; என் பேரோ வம்பை.
  • ஊர் எங்கும் சுற்றி உனக்கு ஏதடா புத்தி?
  • ஊர் எங்கும் பேறு; வீடு பட்டினி.
  • ஊர் எச்சம்; வீடு பட்டினி.
  • ஊர் எல்லாம் உறவு; ஒரு வாய்ச் சோறு இல்லை.
  • ஊர் எல்லாம் உற்றார்; அந்தி பட்டால் பொதுச் சந்தியிலே.
  • ஊர் எல்லாம் கடன்; உடம்பெல்லாம் பொத்தல்.
  • ஊர் எல்லாம் கல்யாணம்; மார் எல்லாம் சந்தனம்.
  • ஊர் எல்லாம் சதமாகுமோ? ஒரு மரம் தோப்பாகுமோ?
  • ஊர் எல்லாம் சுற்றி எனக்கென்ன புத்தி?
  • ஊர் எனப்படுவது உறையூர்.
  • ஊர் என்று இருந்தால் பறைச் சேரியும் இருக்கும்
  • ஊர் ஒக்க ஓட வேண்டும்.
  • ஊர் ஓசை அடங்க நெய் காய்ச்சினாளாம்.
  • ஊர் ஓசை அடங்கும் வரை வெண்ணெய் காய்ச்சினாளாம்,
  • ஊர் ஓச்சன் பட்டினி.
  • ஊர் ஓட உடன் ஓட.
  • ஊர் ஓட ஒக்க ஓடு; நாடு ஓட நடு ஓடு.
  • ஊர் ஓடினால் ஒத்தோடு; ஒருவன் ஓடினால் கேட்டு ஓடு.
  • ஊர் ஓமல் ஆனது அல்லால் ஒன்றும் அறியேன்.
  • ஊர் ஓரத்தில் கொல்லை; உழுதவனுக்குப் பயிர் இல்லை.
  • ஊர் ஓரத்து உழவுக்காரனும் உண்டவுடன் பேளாதவனும் உருப்படமாட்டான்.
  • ஊர் கூடிச் செக்குத் தள்ள, வாணியன் எண்ணெய் கொண்டு போக.
  • ஊர் கூடிச் செக்குத் தள்ளலாமா?
  • ஊர் கூடித்தானே தேர் இழுக்க வேண்டும்?
  • ஊர் கோப்பழிந்தால் ஓடிப் பிழை.
  • ஊர் திரிந்த தேவடியாளுக்குப் பூணுால் அபூர்வமா?
  • ஊர் நடு நின்ற ஊர் மரம் போல.
  • ஊர் நத்தத்தில் நாய் ஊளையிட்டாற் போல.
  • ஊர் நல்லதோ? வாய் நல்லதோ?
  • ஊர் நஷ்டம் ஊரிலே; தேர் நஷ்டம் தெருவிலே.
  • ஊர் பேர் அறியாதவன் ஊர்வலம் வருகிற மாதிரி.
  • ஊர் மெச்சப் பால் குடிக்கலாமா?
  • ஊர் மேலே போனவளுக்குத் தோள்மேலே கொண்டையாம்; அதைப் போய்க் கேட்கப் போனால் லடாபுடா சண்டையாம்.
  • ஊர் வாயை அடக்கினாலும் உளறு வாயை அடக்க முடியாது.
  • ஊர் வாயை மூட உலை மூடி இல்லை.
  • ஊர் வாயை மூட உலைமுடி இல்லை.
  • ஊர் வாயை மூடலாமா? உலை வாயை மூடலாமா?
  • ஊர் வாயைப் படல் இட்டு மூடலாமா?
  • ஊர் வாரியில் ஒரு கொல்லையும் உத்தராட நட்சத்திரத்தில் ஒரு பிள்ளையும்.
  • ஊர் வாழ்த்தால் ஓட்டுப் பிச்சைக்கு வழி இருக்கும்.
  • ஊர் வாழ்த்தால் ஓட்டுப் பிச்சைக்கு வழி இருக்கும்.
  • ஊர் வாழ்ந்தால் ஒக்க வாழலாம்.
  • ஊர் வாழ்ந்தால் ஒக்க வாழலாம்.
  • ஊர் விஷயங்களில் ஊமை செவிடாய் இரு.
  • ஊர் விஷயங்களில் ஊமை செவிடாய் இரு.
  • ஊர்கிறதென்றால் பறக்கிறது என்று சொல்லும் ஜனம்.
  • ஊர்க் கழுதை இருக்கக் கூத்தாடிக் கழுதைக்குச் சனி பிடித்தது.
  • ஊர்க் காக்காய் கரையிலே; வந்தட்டிக் காக்காய் வரப்பிலே.
  • ஊர்க் கோழியும் நாட்டுக் கோழியும் கூடினால் உரலில் உள்ள புழுங்கல் அரிசிக்குச் சேதம்.
  • ஊர்க்கடனும் உள்ளங்கைச் சிரங்கும் போல.
  • ஊர்க்குருவிமேலே ராம பாணம் தொடுக்கிறதா?
  • ஊர்க்கோடியில். ஒரு வீடு கட்டி ஓர்ப்படி தம்பிக்குப் பெண் கொடுத்தாற்போல்.
  • ஊர்ச் சக்கிலி எல்லாம் சேர்ந்து தோலைக் கெடுத்தனராம்.
  • ஊர்ச் சண்டை கண்ணுக்கு அழகு.
  • ஊர்ப் பசங்களெல்லாம் கால் பாடம்; பிச்சைக்கு வந்த பெண் அகமுடையாள்.
  • ஊர்ப் பிள்ளையை முத்தமிட்டால் உதட்டுக்குக் கேடு.
  • ஊர்ப் பொருளை உப்பு இல்லாமல் கூடச் சாப்பிடுவான்.
  • ஊர்வலத்தைக் காண வந்தவன் அடித்துக் கொள்வது போல.
  • ஊழி பெயரினும் ஊக்கமது கைவிடல்.
  • ஊழி பெயரினும் கலங்கார் உறவோர்.
  • ஊழி பேரினும் ஊக்கமது கைவிடேல்.
  • ஊழிக் காய்ச்சல் அதிகமானால் சூனியக்காரன் கொள்ளை.
  • ஊழும் உற்சாகமும் ஒத்துக்கொள்ள வேண்டும்.
  • ஊழ்வினை ஓநாய் மாதிரி இருக்கும்.
  • ஊறச்சே துடைக்க வேண்டும்.
  • ஊறல் எடுத்தவன் சொறிந்து கொள்வான்.
  • ஊறாக் கிணறு, உறங்காப் புளி, தீரா வழக்கு, திருக்கண்ணங் குடி.
  • ஊறுகாயைக் கடித்துக் கொண்டு ஒரு பானைச் சோற்றை என்னது என்பான்.
  • ஊறுகாயைக் கடித்துக் கொண்டு ஒரு பானைச் சோற்றைத் திணிப்பது போல.
  • ஊற்றுத் தண்ணீரில் நாய்க்குப் பால் வார்த்தது போல.
  • ஊற்றுப் பாய்ச்சல் ஆற்றுப் பாய்ச்சல் பத்துக் குழியும், ஏரிப் பாய்ச்சல் நூறு குழியும் ஒன்று.
  • ஊற்றை நம்பினாலும் ஆற்றை நம்பாதே.
  • ஊற்றை மலத்தைக் கண்ட பன்றி உதட்டுக்குள்ளே சிரித்துக் கொண்டதாம்.
  • ஊற்றைப் பல்லுக்கு விளாங்காய் சேர்ந்தாற் போல்.
  • ஊற்றைப் பெண் பிள்ளை கழுவக் கழுவத் தேயும்.
  • ஊனம் இல்லா உடம்புக்கு நாணம் ஏன்?
  • ஊனம் இல்லான் மானம் இல்லான்.
  • ஊனுக்கு ஊன் உற்ற துணை.
  • ஊன்ற வைத்த கொம்பு உச்சி மோட்டை உச்சி மோட்டைப் பிளக்கிறது.
  • ஊன்றக் கொடுத்த தடி உச்சியை உடைக்கிறது.
  • ஊன்றக் கொடுத்த தடி மண்டையைப் பிளந்தது போல.

[தொகு]

  • எக்கியத்தில் மூத்திரம் பெய்தது போல
  • எக்குப் புடைவை சோர்ந்தால் கைக்கு உண்டோ உபகாரம்?
  • எக்கேடு கெட்டுப் போ; எருக்கு முளைத்துப் போ
  • எகனை முகனை பார்க்கிறான்
  • எங்கள் அகத்துக்காரரும் கச்சேரிக்குப் போகிறார்
  • எங்கள் அகத்துக்கு வந்தால் என்ன கொண்டு வருகிறாய்? உங்கள் அகத்துக்கு வந்தால் என்ன தருகிறாய்?
  • எங்கள் அகத்துப் பெண் பொல்லாதது; உங்கள் அகத்துப் பிள்ளையை அடக்குங்கள்
  • எங்கள் அப்பன் பிறந்தது வெள்ளி மலை; ஆய் பிறந்தது பொன் மலை
  • எங்கள் அப்பன் குதிருக்குள் இல்லை
  • எங்கள் வீட்டில் விருந்து வைக்கிறேன் வாருங்கள்; இலை வாங்க மறந்துவிட்டேன் போங்கள்
  • எங்கள் வீட்டு அகமுடையானுக்கும் அரண்மனையில் சேவகம்
  • எங்கள் வீட்டுக்கு வந்தால் என்ன கொண்டு வருகிறாய், உங்கள் வீட்டுக்கு வந்தால் என்ன தருவாய்?
  • எங்களால் ஒன்றும் இல்லை; எல்லாம் உங்கள் தர்மம்
  • எங்கு இருந்தாலும் ஆனை பெருமாளதுதானே?
  • எங்கும் சுற்றி ரங்கநாதா என்றான்
  • எங்கு ஏறிப் பாய்ந்தாலும் கொங்கு ஏறிப் பாயேன்
  • எங்கும் சிதம்பரம் பொங்கி வழிகிறது
  • எங்கும் சிரித்து எள்ளுக் கொல்லை காக்கிறவன்
  • எங்கும் சுற்றி ரங்கனைச் சேவி
  • எங்கும் செத்தும் நாக்குச் சாகவில்லை
  • எங்கும் பருத்தி எழுபது பலம்
  • எங்கும் பொன்னம்பலந்தான்
  • எங்கும் மடமாய் இருக்கிறது; இருக்கத்தான் இடம் இல்லை
  • எங்கே அடித்தாலும், நாய்க்குக் காலிலே முடம்
  • எங்கே அடித்தாலும் நாய் காலைத் தூக்கும்
  • எங்கே சுற்றியும் ரங்கனைத்தான் சேவிக்க வேணும்
  • எங்கே திருடினாலும் கன்னக்கோல் வைக்க இடம் ஒன்று வேண்டும்
  • எங்கே புகை உண்டோ, அங்கே நெருப்பு உண்டு
  • எங்கே புகையுண்டோ அங்கே நெருப்பு உண்டு
  • எங்கேயோ இடித்தது வானம் என்று இருந்தேன்; தப்பாது என் தலையிலேயே இடித்தது
  • எங்கேயோ எண்ணெய் மழை பெய்ததென்று இருந்தாளாம்
  • எங்கே வந்தது இரை நாய்? பங்குக்கு வந்தது மர நாய்
  • எங்கே வெட்டினாலும் எப்படிச் சாயும் என்று பார்க்க வேணும்
  • எச்சரசம் ஆனாலும் கைச்சரசம் ஆகாது
  • எச்சில் அறியாள், துப்பல் அறியாள்; என் பெண் பதின்கலக் காரியம் செய்வாள்
  • எச்சில் இரந்து அடிக்கும்; பற்றுப் பறக்க அடிக்கும்
  • எச்சில் இரக்கும்; தூமை துடைக்கும்
  • எச்சில் இலை எடுக்க வந்ததா நாய்? எண்ணிப் பார்க்க வந்ததா நாய்?
  • எச்சில் இலைக்கு அலையும் நாய் போல
  • எச்சில் இலைக்கு இச்சகம் பேசுகிறது
  • எச்சில் இலைக்கு இதம் பாடுகிறது
  • எச்சில் இலைக்கு எதிர் இலை போடலாமா?
  • எச்சில் இலைக்கு ஏஜெண்டு; குப்பைத் தொட்டிக்குக் குமாஸ்தா
  • எச்சில் இலைக்கு நாய் அடித்துக்கொண்டு நிற்கிறது போல
  • எச்சில் இலைக்குப் போட்டி போடும் நாய் மாதிரி
  • எச்சில் இலைக்கு மண்ணாங்கட்டி ஆதரவு; மண்ணாங்கட்டிக்கு எச்சில் இலை ஆதரவு
  • எச்சில் இலை கண்ட நாய் போல
  • எச்சில் இலை நாய்க்கும் பிறந்த நாள் கொண்டாட்டமா?
  • எச்சில் இலை நாயானாலும் எசமான் விசுவாசம் உண்டு
  • எச்சில் இலையை எடுக்கச் சொன்னார்களா? எத்தனை பேர் என்று எண்ணச் சொன்னார்களா?
  • எச்சில் கையால் காக்கை ஓட்டாதவன் என்ன சாமி? என்ன பூஜை?
  • எச்சில் கையால் காக்கை ஓட்டமாட்டான்
  • எச்சில் கையால் காக்கை ஓட்டாதவன் பிச்சை இடுவானா?
  • எச்சில் தின்றாலும் வயிறு நிரம்பத் தின்னவேண்டும்; ஏச்சுக் கேட்டாலும் பொழுது விடியும்மட்டும் கேட்க வேண்டும்
  • எச்சில் நாய்க்குக் கண்டது எல்லாம் ஆசை
  • எச்சிலை எடுக்கச் சொன்னாளா? இலையை எண்ணச் சொன்னாளா?
  • எச்சிலைக் கழுவி உன் சுத்தத்திலே வார்
  • எச்சிலைக் குடித்துத் தாகம் தீருமா?
  • எச்சிலைத் தின்றாலும் எஜமானன் விசுவாசம் காட்டும் நாய்; பாலைக் குடித்தாலும் பகையை நினைக்கும் பூனை
  • எச்சிலைத் தின்று ஏப்பம் விட்டாற் போல
  • எச்சிலைத் தின்று பசி தீருமா?
  • எச்சிற் கையால் காக்கை ஓட்டாதவன் பிச்சை கொடுப்பானா?
  • எசமான் கோபத்தை எருமைக் கடாவின்மேல் காண்பித்தானாம்
  • எசமான் வீடு நொடித்து விட்டதென்று நாய் பட்டினியாக இருந்ததாம்
  • எசமான் வெளிலே போனால் பசங்கள் எல்லாம் கும்மாளம் போடுவார்கள்
  • எட்கிடை நெற்கிடை விட்டு எழுது
  • எட்டாக் கனியைப் பார்த்து இச்சித்து என்ன பயன்?
  • எட்டாத தேனுக்கு ஏறாத நொண்டி கொட்டாவி விட்ட கதை போல
  • எட்டாத பழம் புளிக்கும்
  • எட்டாத மரத்து இளநீர் போல ஒட்டாத பேரோடே உறவாக நிற்காதே
  • எட்டாப் பழத்திற்குக் கொட்டாவி விட்டாற் போல
  • எட்டாப் பூத் தேவருக்கு எட்டும் பூத் தங்களுக்கு
  • எட்டாம் நாள் வெட்டும் குதிரை; ஒன்பதாம் நாள் ஓடும் குதிரை
  • எட்டாம் பேறு பெண் பிறந்தால் எட்டிப் பார்த்த வீடு குட்டிச்சுவர்
  • எட்டாவது ஆண் பிறந்தால் வெட்டி அரசாளும்
  • எட்டாளம் போனாலும் கிட்டாதது எட்டாது
  • எட்டி எட்டிப் பார்த்துக் குட்டிச் சுவரில் முட்டிக் கொள்ளலாம்
  • எட்டி எட்டிப் பார்ப்பாரும், ஏணி வைத்துப் பார்ப்பாரும், குட்டிச்சுவர் போலக் குனிந்து நின்று பார்ப்பாரும்
  • எட்டிக் கனியின்மேல் அழகாய் இருந்தும் உள்ளே இருக்கும் வித்தைப் போல்
  • எட்டிக் குட்டி இறக்கிக் காலைப் பிடித்துக் கொள்கிறது
  • எட்டிக் குடுமியைப் பிடித்து இறங்கிக் காலைப் பிடிக்கிறவன்
  • எட்டிக்குப் பால் வளர்த்தாலும் தித்திப்பு உண்டாகாது
  • எட்டிக் கோட்டை கட்டினால் கிட்டி மழை உண்டு
  • எட்டிப் பழத்தை இச்சிக்கிறது போல்
  • எட்டிப் பார்த்தால் எட்டு இழை நட்டம்
  • எட்டிப் பார்த்தாற்போலக் கொட்டிக் கொண்டு போகிறான்
  • எட்டிப் பிடித்தால் ஒரு கத்திப் பிடிக்கு ஆகாதா?
  • எட்டி பழுத்தென்ன, ஈயார் வாழ்த்தென்ன?
  • எட்டி பழுத்தால் என்ன? ஈயாதார் வாழ்ந்தால் என்ன?
  • எட்டி மரம் ஆனாலும் பச்சென்று இருக்க வேண்டும்
  • எட்டி மரம் ஆனாலும் வைத்த மரத்தை வெட்டாதே
  • எட்டி மரம் ஆனாலும் வைத்தவர்க்குப் பாசம்
  • எட்டி முளையிலும் இரட்டி அதிகம் உண்டாகுமா?
  • எட்டியிலே கட்டு மாம்பழம் உண்டாகுமா?
  • எட்டியுடன் சேர்ந்த இலவும் தீப்படும்
  • எட்டின மட்டும் வெட்டும் கத்தி; எட்டாத மட்டும் வெட்டும் பணம்
  • எட்டினவன் ஆனாலும் முட்டப் பகை ஆகாது
  • எட்டினால் குடுமியைப் பிடித்து எட்டாவிட்டால் காலைப் பிடிப்பது
  • எட்டு அடி வாழை, கமுகு; ஈரடி கரும்பு, கத்தரி; இருபதடி பிள்ளை
  • எட்டு அடி வாழையும் பத்தடி பிள்ளையும்
  • எட்டு ஆள் வேலையை ஒரு முட்டாள் செய்வான்
  • எட்டு இருக்கிறது, எழுந்திரடி அத்தையாரே
  • எட்டு எருமைக்காரி போனாளாம், ஓர் எருமைக்காரியிடம்
  • எட்டு எள்ளுக்குச் சொட்டு எண்ணெய் எடுப்பான்
  • எட்டு என்றால் இரண்டு அறியேன்
  • எட்டுக் கிழவருக்கு ஒரு மொட்டைக் கிழவி
  • எட்டுக் குட்டுக் குட்டி இறங்கிக் காலைப் பிடிக்கிறது
  • எட்டுக் கோவில் பூசை பண்ணியும் எச்சன் வீடு பட்டினி
  • எட்டுச் சந்தைக்கு ஒரு சந்தை பொட்டைச் சந்தை
  • எட்டுச் சிந்தாத்திரை ஒரு தட்டுதலுக்கு ஒக்கும்
  • எட்டுச் செவ்வாய் எண்ணித் தலை முழுகில் தப்பாமல் தலைவலி போம்
  • எட்டு நாயும் பெட்டைக் குட்டியும் போல்
  • எட்டுப் படி அரிசியும் ஒரு கவளம்; ஏழூர்ச் சண்டை ஒரு சிம்மாளம்
  • எட்டுப் பிள்ளைக்கு ஒரு செட்டுப் பிள்ளை போதும்
  • எட்டும் இரண்டும் அறியாதவன்
  • எட்டும் இரண்டும் அறியாத பேதை
  • எட்டு மாட்டுக்கு ஒரு சாட்டை
  • எட்டு முழமும் ஒரு சுற்று; எண்பது முழமும் ஒரு சுற்று
  • எட்டு வருஷத்து எருமைக் கடா ஏரிக்குப் போக வழி தேடுகிறது
  • எட்டு வட்டம் கட்டிக் கொண்டு எதிர்ப்புறம் போனாளாம்; அவள் பத்து வட்டம் கட்டிக் கொண்டு பரக்கப் பரக்க வந்தாளாம்
  • எட்டு வீடு தட்டியும் ஓச்சன் குடி பட்டினி
  • எட்டே கால் லக்ஷணமே, எமனேறும் வாகனமே
  • எடக்கு நாட்டுக்குப் போனானாம் தேங்காய் வாங்க
  • எடுக்கப் பிடிக்க ஆள் இருந்தால் வரப்பு ஏறிப் பேள்கிறதற்கும் கஷ்டம்
  • எடுக்கப் போன சீமாட்டி இடுப்பு ஒடிந்து விழுந்தாளாம்
  • எடுக்கிறது எருத்து மட்டுச் சுமை; படுக்கிறது பஞ்சணை மெத்தை
  • எடுக்கிறது சந்தைக் கோபாலம்; ஏறுகிறது தந்தப் பல்லக்கா?
  • எடுக்கிறது பிச்சை ஏறுகிறது பல்லாக்கு
  • எடுக்கிறது வறட்டிச் சுமை; நடக்கிறது தங்கச் சிமிழ்ப் பாதரட்சை
  • எடுக்கு முன்னே கழுதை இடுப்பு ஒடிந்து விழுந்ததாம்
  • எடுத்த அடி மடங்குமா?
  • எடுத்த கால் வைப்பதற்குள் வைத்த கால் செல் அரிக்கிறது
  • எடுத்த கை சிவக்கும்
  • எடுத்த சுமை சுமத்தல்லவோ இறக்க வேண்டும்?
  • எடுத்தாலும் பங்காருப் பெட்டியை எடுக்க வேண்டும்; இருந்தாலும் சிங்காரக் கழுவில் இருக்க வேண்டும்
  • எடுத்தாலும் பெயர் சரியாய் எடுக்க வேணும்
  • எடுத்தாற் போல் தப்பட்டைக்காரன் பட்டான்
  • எடுத்து ஆளாத பொருள் உதவாது
  • எடுத்து எடுத்து உழுதாலும் எருதாகுமா கடா
  • எடுத்து எறிந்து பேசுகிறான்
  • எடுத்துக் கவிழ்த்துப் பேசுகிறான்
  • எடுத்துச் சொல்; முடித்துச் சொல்
  • எடுத்துப் பிடித்தால் வெட்டுவேன் என்ற கதை
  • எடுத்துப் போட்டு அடிக்கிறது; முறத்தைப் போட்டுக் கவிழ்க்கிறது
  • எடுத்து மூடிவிட்டு எதிரே வந்து நிற்பான்
  • எடுத்து விட்ட எருது போல
  • எடுத்து விட்ட நாய் எத்தனை நாளைக்குக் குரைக்கும்?
  • எடுத்து விட்ட மாடு எத்தனை தூரம் ஓடும்?
  • எடுத்து வைத்தாலும் கொடுத்து வைக்க வேணும்
  • எடுப்பது பிச்சை; ஏறுவது பல்லக்கு
  • எடுப்பார் கைப் பாவை போல
  • எடுப்பார் கைப் பிள்ளை
  • எடுப்பார் மழுவை; தடுப்பார் புலியை; கொடுப்பார் அருமை
  • எடுப்பாரும் பிடிப்பாரும் இருந்தால் பிள்ளை களைத்தாற் போல இருக்கும்
  • எடுப்பாரும் பிடிப்பாரும் உண்டானால் இளைப்பும் தவிப்பும் உண்டு
  • எடுப்பாரைக் கண்டால் குடமும் கூத்தாடும்
  • எடுப்புண்ட கலப்பை இருந்து உழுமா?
  • எண் அற்றவர் கண் அற்றவர்; எழுத்தற்றவர் கழுத்தற்றவர்
  • எண் அறக் கற்று எழுத்து அற வாசித்தாலும் பெண்புத்தி பின் புத்திதான்
  • எண் இல்லாதவர் கண் இல்லாதவர்
  • எண் காதம் போனாலும் தன் பாவம் தன்னோடே
  • எண்சாண் இருக்க இடி விழுந்ததாம் வயிற்றிலே
  • எண்சாண் உடம்பிலே எள்ளத்தனை இரத்தம் இல்லை
  • எண்சாண் உடம்பிற்குச் சிரசே பிரதானம்
  • எண்சாண் உடம்பு இருக்கக் கோவணத்திலே விழுந்ததாம் இடி
  • எண்சாண் உடம்பும் ஒரு சாண் ஆனேன்
  • எண்ணத்தில் மண் விழுந்தது
  • எண்ணத் தொலையாது; ஏட்டில் அடங்காது
  • எண்ணப்பட்ட குதிரை எல்லாம் மண்ணைப் போட்டுக் கொள்ள, தட்டுவாணிக் குதிரை வந்து கொள்ளுக்கு அழுகிறதாம்
  • எண்ணப்பட்ட குதிரை எல்லாம் மண்ணை மண்ணைத் தின்னு கையில் குருட்டுக் கழுதை கோதுமை ரொட்டிக்கு அழுகிற தாம்
  • எண்ணம் அற்ற ராஜா பன்றிவேட்டை ஆடினாற்போல்
  • எண்ணம் இட்டவன் தூங்கான்; ஏடு எடுத்தவனும் தூங்கான்
  • எண்ணம் எல்லாம் பொய்; எமன் ஓலை மெய்
  • எண்ணம் எல்லாம் பொய்; எழுதிய எழுத்து மெய்
  • எண்ணம் எல்லாம் பொய்; ஏளிதம் மெய்
  • எண்ணம் எல்லாம் பொய்; மெளனமே மெய்
  • எண்ணாச் சொத்து மண்ணாய்ப் போகும்
  • எண்ணிச் சுட்டது தேசை
  • எண்ணிச் செய்கிறவன் செட்டி; எண்ணாமல் செய்கிறவன் மட்டி
  • எண்ணிச் சுட்ட பணியாரம், பேணித் தின்னு மருமகனே மருமகனே
  • எண்ணிச் செட்டுப் பண்ணு; எண்ணாமல் சாகுபடி பண்ணு
  • எண்ணிச் செய்கிறவன் செட்டி, எண்ணாமல் செய்கிறவன் மட்டி
  • எண்ணிச் செய்வது செட்டு; எண்ணாமல் செய்வது வேளாண்மை
  • எண்ணித் துணிக கருமம், துணிந்தபின் எண்ணுவது இழுக்கு
  • எண்ணிப் பார் குடித்தனத்தை; எண்ணாதே பார் வேளாண்மையை
  • எண்ண முடியாது; ஏட்டில் அடங்காது
  • எண்ணிய எண்ணம் எல்லாம் பொய்; எழுதிய எழுத்து மெய்
  • எண்ணிய எண்ணம் என்னடி? அண்ணா என்று அழைத்த முறை என்னடி?
  • எண்ணிய ஒரு குடிக்கு ஒரு மின்னிய குடி
  • எண்ணினேன் ஒரு கோடி, இழப்பது அறியாமல்
  • எண்ணும் எழுத்தும் கண்ணும் கருத்தும்
  • எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்
  • எண்ணெய் இல்லாத பந்தம், எரியுதடி தங்கம்
  • எண்ணெய்க்குச் சேதமே ஒழியப் பிள்ளை பிழைக்கிறதில்லை
  • எண்ணெய்க் குடத்தில் குளிப்பாட்டின ஆனைக்குட்டி போல
  • எண்ணெய்க் குடத்திலே பிடுங்கி எடுத்தாற் போல
  • எண்ணெய்க் குடத்தைச் சுற்றும் எறும்பு போல
  • எண்ணெய்க் குடம் உடைந்தவளும் அழுகிறாள்; தண்ணீர்க்குடம் உடைந்தவளும் அழுகிறாள்?
  • எண்ணெய்க் குடம் உடைந்தாலும் ஐயோ! தண்ணீர்க்குடம் உடைந்தாலும் ஐயோ!
  • எண்ணெய்க் குடம் போட்டவனும் அப்பாடா. அம்மாடி; தண்ணீர்க் குடம் போட்டவனும் அப்பாடி, அம்மாடி
  • எண்ணெய்க் குடமும் வெறும் குடமும் முட்டினால் எதற்குச் சேதம்?
  • எண்ணெய் கண்ட இடத்தில் தடவிக் கொண்டு சீப்புக் கண்ட இடத்தில் தலை வாரிக் கொள்கிறது
  • எண்ணெய் காணாத மயிரும் தண்ணீர் காணாத பயிரும்
  • எண்ணெய் குடித்த நாய் திண்ணையில் கிடக்க, எதிரே வந்த நாய் உதைபட்டது மாதிரி
  • எண்ணெய்ச் சேதமே ஒழியப் பிள்ளை பிழைக்கவில்லை
  • எண்ணெய் தடவிக் கொண்டு மண்ணில் புரண்டாலும் ஒட்டுவது தானே ஒட்டும்?
  • எண்ணெய்ப் பிள்ளையோ? வண்ணப் பிள்ளையோ?
  • எண்ணெய் போக முழுகினாலும் எழுத்துப் போகத் தேய்ப்பார் உண்டோ?
  • எண்ணெய் முந்துமோ? திரி முந்துமா?
  • எண்ணெயில் இட்ட அப்பம் போலக் குதிக்கிறான்
  • எண்ணெயில் விழுந்த ஈயைப் போல
  • எண்ணெயைத் தேய்க்கலாம்; எழுத்தைத் தேய்க்க முடியாது
  • எண்பது அடிக் கம்பத்தில் ஏறி ஆடினாலும் இறங்கி வந்துதான் சம்மானம் வாங்க வேண்டும்!
  • எண்பது வயசுக்கு மண் பவளம் கட்டிக் கொண்டாளாம்
  • எண்பது வேண்டாம்; ஐம்பதும் முப்பதும் கொடு
  • எண் மிகுத்தவனே திண் மிகுத்தவன்
  • எத்தனை ஏழையானாலும் எலுமிச்சங்காய் அத்தனை பொன் இல்லாமற் போகாது
  • எத்தனை சிரமம் இருந்தாலும் திண்டிக்குச் சிரமம் இல்லை *எத்தனை தரம் சொன்னாலும் பறங்கி வெற்றிலை தின்னான்
  • எத்தனை தரம் துலக்கினாலும் பித்தளை நாற்றம் போகுமா?
  • எத்தனை தேய்த்தாலும் பித்தளைக்குத் தன் நாற்றம் இயற்கை
  • எத்தனை பாட்டுப் பாடினாலும் எனக்கு நீ அருகதையோ?
  • எத்தனை பிரியமோ அத்தனை சவுக்கை
  • எத்தனை புடம் போட்டாலும் இரும்பு பசும்பொன் ஆகுமா?
  • எத்தனை பேர் துடுப்புப் போட்டாலும் தோணி போவது சுக்கான் பிடிப்பவன் கையில் இருக்கிறது
  • எத்தனைமுறை சொன்னாலும் பறங்கி வெற்றிலை போடமாட்டான்
  • எத்தனை வந்தாலும் மிச்சம் இல்லை
  • எத்தனை வித்தை கற்றாலும் செத்தவனைப் பிழைப்பிக்க அறியான்
  • எத்தால் உரைத்தாலும் தட்டான் பவுனாக வளர்ந்ததாம் உண்டை
  • எத்தால் கெட்டான் என்றால் நோரால் கெட்டான்
  • எத்தால் வாழலாம்? ஒத்தால் வாழலாம்
  • எத்திக் கழுத்தை அறுக்கிறதா
  • எத்திலே பிள்ளை பெற்று இலவசத்திலே தாலாட்டுவது
  • எத்துவாரை எத்தி நான் எலி பிடிச்சுக்கிட்டு வாரேன்; கேட்பாரை கேட்டு நாழி கேப்பை வாங்கித் திரி
  • எத்தூருக்குப் போனாலும் புத்தூருக்குப் போகாதே
  • எத்தேச காலமும் வற்றாப் பெருஞ் சமுத்திரம்
  • எத்தைக் கண்டு ஏய்த்தான்? துப்பைக் கண்டு ஏய்த்தான்
  • எத்தைச் சொன்னானோ பரிகாரி, அத்தைக் கேட்பான் நோயாளி
  • எத்தைத் தின்றால் பித்தம் தீரும்?
  • எதற்கும் உருகாதவன் இச்சைக்கு உருகுவான்
  • எதற்கு ஜோடிக்க வேணும், இடித்துக் கிழிக்க வேணும்
  • எதற்கு தலம் பேசினால் அகப்பைச் சூன்யம் வைப்பேன்
  • எதார்த்த வாதி வெகுஜன விரோதி
  • எதிர்த்தவர் மார்புக்கு ஆணியாய் இரு
  • எதிர்த்தவன் ஏழை என்றால் கோபம் சண்டாளம்
  • எதிர்த்த வீடு ஏகாலி வீடு; அடுத்த வீடு அம்பட்டன் வீடு
  • எதிர்த்தும்மல் எடுத்துக் கொடுக்கும்
  • எதிர் நீச்சம் போடுகிறான்
  • எதிர்ப்பாரைச் செயிப்பார் உண்டு
  • எதிர் வீட்டுக் கல்யாணமே, ஏன் அழுதாம் கோவணமே?
  • எதிர் வீடு ஏகாலி வீடு; பக்கத்து வீடு பணி செய்வோன் வீடு; அடுத்த வீடு அம்பட்டன் வீடு
  • எதிரி இளப்பமானால் கோபம் சண்டப் பிரசண்டம்
  • எதிரிக்கு அஞ்சிப் படைக்குப் போகாதவன் நல்ல சேவகன் என்று கூறிக் கொண்டானாம்
  • எதிரிக்கு இளக்காரமாய்ச் சொல்லுகிறதா?
  • எதிரிக்குச் சகுனத் தடை என்று மூக்கை அறுத்துக் கொள்கிறதா?
  • எதிரி சுண்டெலி ஆனாலும் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும்
  • எதிரி போட்டு மா இடித்தால் குளுமை நெல்லுக்குச் சேதாரம்
  • எதிரும் புதிரும் உட்கார்ந்து கொள்ளுதல்
  • எது எப்படிப் போனாலும் தன் காரியம் தனக்கு
  • எதை அடக்காவிட்டாலும் நாக்கை அடக்க வேண்டும்
  • எதை வாரிக் கட்டிக் கொண்டு போகிறது?
  • எந்த ஆண்டாருக்கு எந்த மடம் சதம்?
  • எந்த ஆயுதமும் தீட்டத் தீட்டச் சுடர்
  • எந்த இலை உதிர்ந்தாலும் ஈச்சம் இலை உதிராது
  • எந்தத் தலைமுறையிலோ ஒரு நாத்தனாராம்; அவள் கந்தல் முறத்தை எடுத்துச் சாத்தினாளாம்
  • எந்தத் துரை வந்தாலும் தோட்டிக்குப் புல்லுச் சுமை போகாது
  • எந்த நாய் எந்தச் செருப்பைக் கடித்தால் என்ன?
  • எந்த நிலத்து வித்திடினும் காஞ்சிரங்காய் தெங்கு ஆகாது
  • எந்தப் புராணத்தில் இல்லாவிட்டாலும் கந்த புராணத்தில் இருக்கும்
  • எந்தப் புற்றிலே எந்தப் பாம்பு இருக்குமோ?
  • எந்தப் பொருளும் கந்த புராணத்திலே
  • எந்த மடத்துக்கு எந்த ஆண்டி சதம்?
  • எந்த வேஷம் வந்தாலும் தீவட்டிக்காரனுக்குக் கேடு
  • எந்நேரமும் அவள் பேரில் கண்ணாய் இருக்கிறான்
  • எப்படியாவது என் கோயில் வாழ
  • எப்பயிர் செய்யினும் நெற்பயிர் செய்
  • எப்பிறை கோணினாலும் தைப்பிறை கோணலாகாது
  • எப்போது பார்த்தாலும் என்ன சண்டை, நாயும் பூனையும் மாதிரி?
  • எம்மதமும் சம்மதம்
  • எமன் ஏறுகிற கிடாவாக இருந்தாலும் உழுது விடுவான்
  • எமன் ஒருவனைக் கொல்லும்; ஏற்றம் மூவரைக் கொல்லும்
  • எமன் கடாவை ஏரில் பூட்டினது போல
  • எமன் கையில் அகப்பட்ட உயிர் போல
  • எமன் நினைக்கவும் பிள்ளை பிழைக்குமா?
  • எமன் பிடித்தால் எவன் பிழைப்பான்?
  • எமன் பிள்ளையைப் பேய் பிடிக்குமா?
  • எமன் வாயிலிருந்து மீண்டது போல
  • எமனுக்கு வழி காட்டுவான்
  • எமனைப் பலகாரம் பண்ணிச் சுப்பிரமணியனைத் துவையல் அரைத்தாற் போல
  • எமனையும் நமனையும் பலகாரம் செய்வான்
  • எய்த்து இளைத்த நாய் போல ஓடி வருகிறான்
  • எய்தவன் இருக்க அம்பை நோகலாமா?
  • எய்தவன் எய்தால் அம்பு என்ன செய்யும்?
  • எரிகிற கொள்ளியில் எண்ணெய் வார்க்காதே
  • எரிகிற கொள்ளியில் எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி?
  • எரிகிற கொள்ளியை ஏறத் தள்ளியது போல
  • எரிகிறதைப் பிடுங்கினால் கொதிக்கிறது அடங்கும்
  • எரிகிற நெருப்பில் எண்ணெய் வார்த்தாற் போல்
  • எரிகிற நெருப்பில் தண்ணீரைக் கொட்டலாமா?
  • எரிகிற நெருப்பில் எண்ணெய் விட்டு அடக்கலாமா?
  • எரிகிற நெருப்புக்குப் பயந்து எண்ணெய்க் கொப்பரையில் விழுந்த மாதிரி
  • எரிகிற நெருப்பை ஊதிக் கெடுத்தது போல
  • எரிகிற புண்ணில் எண்ணெய் விட்டது போல
  • எரிகிற புண்ணில் புளி இட்டது போல
  • எரிகிற மூக்கில் திரியைக் கொளுத்தினாற் போல
  • எரிகிற விளக்கில் எண்ணெய் விட்ட மாதிரி
  • எரிகிற விளக்கு ஆனாலும் தூண்டுகோல் ஒன்று வேண்டும்
  • எரிகிற வீட்டில் எண்ணெயை ஊற்றினாற் போல்
  • எரிகிற வீட்டில் சுருட்டுக்கு நெருப்புக் கேட்டான்
  • எரிகிற வீட்டில் பிடுங்கினது லாபம்
  • எரிகிற வீட்டை அணைக்கக் கிணறு வெட்ட நாள் பார்த்தது போல
  • எரிச்சல் வந்தல்லவோ அடிக்கும்? எழுப்பி விட்டா அடிக்கும்?
  • எரிந்த பசியில் இழந்த மணியைத் தேடிப் போனாற் போல
  • எரிநெருப்பை எண்ணெய் விட்டு அணைக்கலாமா?
  • எரிப்புக்கு ஆற்றாமல் ஏர் உழப் போகிறேன்; கஞ்சியுடனே சாறு கொண்டு வா என்ற கதை
  • எரிப்புக்காரன் பின்னோடு போனாலும் போகலாம்; செருப்புக்காரன் பின்னோடு போகக் கூடாது
  • எரியும் உடம்பில் எண்ணெய் வார்த்தாற்போல்
  • எரியும் கொள்ளியை ஏறத் தள்ளாதே
  • எரு இல்லாப் பயிர் மாடு இல்லாக் கன்று போல
  • எரு இல்லா வயல் கன்று இல்லா மாட்டுக்குச் சமம்
  • எரு இல்லையேல் மறு பயிரும் இல்லை
  • எரு உள்ள காட்டில் மடையனும் பயிர் செய்வான்
  • எருக்கம் புதரில் மறைந்து ஆனையை வெகுள்விப்பான் போல
  • எருக்கிலைக்கு மருக்கொழுந்து வாசனையா?
  • எருக்குழியின்றி ஏர் பிடியாதே
  • எருக்கைச் சொடுக்க வேணும்; ஈச்சைக் கிழிக்க வேணும்
  • எருக்கை வெட்டி அடித்து ஏரைக் கட்டி உழு
  • எருச் செய்கிறது இனத்தான் செய்ய மாட்டான்
  • எருதாலம்மாவுக்குக் கல்யாணம்; எரு முட்டைப் பணியாரம்
  • எருதில் ஏழை உண்டா?
  • எருதின் நோய் காக்கை அறியுமா?
  • எருதின் புண்ணுக்குச் சாம்பல் மருந்து
  • எருது இளைத்தால் எல்லாம் இளைக்கும்
  • எருது இளைத்தால் காக்கை மச்சான் முறை வைத்துக் கூப்பிடும்
  • எருது ஈன்றது என்றால் தோட்டத்திலே கட்டு என்பது போல
  • எருது ஈன்றது என்னுமுன் என்ன கன்று என்றது போல
  • எருது உழவுக்குக் காய்கிறது; உண்ணி எதற்குக் காய்கிறது?
  • எருது உழுகிறதாம்; உண்ணி விடாய்க்கிறதாம்
  • எருது ஏழை ஆனால் பசு பத்தினித்துவம் கொண்டாடும்
  • எருது ஏறாதவரையும் பசு பத்தினி கொண்டாடும்
  • எருதுக்குச் சூடு போட்டது போல
  • எருதுக்கு நோய் வந்தால் கொட்டகையைச் சுடுகிறதா?
  • எருதுக்கும் தன் புண் அழற்சி; காக்கைக்கும் தன் பசி அழற்சி
  • எருது கூடா விட்டால் பசு பத்தினி விரதம் கொண்டாடும்
  • எருது கெட்டார்க்கும் எட்டுக் கடுக்காய்; இளம் பிள்ளைத் தாய்ச்சிக்கும் எட்டுக் கடுக்காய்
  • எருது கெடுத்தார்க்கும் ஏழே கடுக்காய்; ஈனாப் பெண்டிர்க்கும், ஏழே கடுக்காய், படை எடுத்த மன்னர்க்கும் ஏழே கடுக்காய்
  • எருது கொழுத்தால் தொழுவத்தில் இராது; பறையன் கொழுத்தால் பாயில் இருக்க மாட்டான்
  • எருது கோபம் கொண்டு பரதேசம் போனது போல
  • எருது சுமந்தது; கோணி கொண்டது
  • எருது தன் கொம்பால் பிடிபடுகிறது; மனிதன் தன் நாவால் பிடிபடுகிறான்
  • எருது தன் நோயை நினைக்கும்; காக்கை தன் பசியை நினைக்கும்
  • எருது நினைத்த இடத்தில் தோழம் கட்டுகிறதா?
  • எருது நினைத்த இடத்தில் புன்செய்க்கு உழுகிறதா?
  • எருது நினைத்தால் கொட்டகை கட்டுகிறதா?
  • எருது நோய் உண்ணிக்கு என்ன தெரியும்?
  • எருது நோய் காக்கைக்குத் தெரியுமா?
  • எருது நோயை நினைக்கும்; காக்கை பசியை நினைக்கும்
  • எருது பொதி சுமந்தாற் போல
  • எருதும் எருதும் போராட நடுப்புல்லுத் தேய்ந்தாற் போல
  • எருதும் வண்டியும் ஒத்தால் மேடு எது? பள்ளம் ஏது?
  • எருது மறைவில் புல்லுத் தின்கிறாயா?
  • எருப் போட்டவன் காடு விளையுமா? ஏர் உறிஞ்சாக் காடு விளையுமா? என்றாற் போல
  • எருப்போட்டு ஏர் இடு
  • எருமணம் இல்லாத பயிரும் நறுமணம் இல்லாத மலரும் வீணே
  • எருமுட்டைப் போரைப் பேய் அடிக்குமா?
  • எருமை இருந்தால் அல்லவோ பால் கறக்க வேணும்?
  • எருமைக்கடா சந்தைக்குப் போச்சாம்; அங்கேயும் கட்டி உழுதானாம்
  • எருமைக் கடா என்றாலும் குழந்தைக்கு ஒரு பீர் பால் கொடு என்கிறாய்
  • எருமைக் கன்று அருமைக் கன்று
  • எருமைக் கிழமும் மாப்பிள்ளைக் கிழமும் இல்லை
  • எருமைக்குச் சூடு போட்டது போல
  • எருமைக்கு வெள்ளாடு ஏத்தக் கறக்குமா?
  • எருமைக் கொம்பு காய்வதற்கு முன் எட்டுத்தரம் மழை பெய்யும்
  • எருமைக் கொம்பு நனைகிறதற்குள்ளே எழுபது தரம் மழை வருகிறது
  • எருமைக் கோமயம் எக்கியத்துக்கு ஆகுமா?
  • எருமைச் சாணி ஓமத்திற்கு ஆகுமா?
  • எருமைப் பிட்டத்திலே விளக்கு வைத்தாற் போல
  • எருமை போய் ஏரியிலே விழுந்தால் தவளைத் தானே குதித்தோடும்
  • எருமை மாட்டின்மேல் எத்தனை சூடு இருந்தாலும் தெரியாது; பசு மாட்டின்மேல் ஒரு சூடு இருந்தாலும் தெரியும்
  • எருமை மாட்டின்மேல் மழை பெய்தது போல
  • எருமை மாட்டுப் பிட்டத்தில் விளக்கு வைத்துப் படித்தான்
  • எருமை மாட்டைத் தண்ணீரில் போட்டுக் கொண்டு விலை பேசுகிறது
  • எருமை மாடு கன்றுக்குட்டி போட்டாற் போல
  • எருமை மாடு மூத்திரம் பெய்தாற் போல
  • எருமை முட்டைப் புராணம் வாசிக்கிறான்
  • எருமை மூத்திரம் லேகியத்திற்கு ஆகுமா?
  • எருமையிலும் வெள்ளாடு ஏறக் கறக்குமா?
  • எருமை வாங்குமுன் ஏன் விலை கூறுகிறாய்?
  • எருமை வாங்கும்முன் நெய் விலை பேசுகிறதா? பிள்ளை பெறுமுன் பெயர் வைக்கிறதா?
  • எருமை வாங்கும் முன்னே நெய் விலை கூறுகிறதா?
  • எருவுக்குப் போனவன் இளையாளைக் கைப்பிடித்தாற் போல
  • எருவுக்குப் போனவன் எலுமிச்சம் பழம் எடுத்தது போல
  • எருவும் தண்ணீரும் உண்டானால் எந்த நிலமும் விளையும்
  • எல்லப்ப செட்டி லக்க ஏக லக்க
  • எல்லா ஓட்டும் குல்லாவிலே
  • எல்லாத் தாட்டோட்டும் என் குல்லாய்க்குள்ளே
  • எல்லாம் அதிசயந்தான்; ஆக்குகிறது பூஜ்யந்தான்
  • எல்லாம் அறிந்தவனும் இல்லை; ஒன்றும் அறியாதவனும் இல்லை
  • எல்லாம் அறிந்தும் கழுநீர்ப் பானையில் கை இடுகிறதா?
  • எல்லாம் அறியாதவனும் இல்லை; யாதும் அறிந்தவனும் இல்லை
  • எல்லாம் இருக்கிறது பெட்டியிலே, இலைக்கறி கடையச் சட்டி இல்லை
  • எல்லாம் ஈசல் செயல்
  • எல்லாம் ஏறி இளைத்த குதிரையின்மேல் தம்பி பொற்பட்டம் கட்டிப் புறப்பட்டான்
  • எல்லாம் களத்தின்மேல் விளைவு
  • எல்லாம் கிடக்க எருதுக்குச் சீமந்தமாம்
  • எல்லாம் கிடக்க எருமை மாட்டுக்கு என்ன?
  • எல்லாம் சரி என்று எண்ணலாமா?
  • எல்லாம் செய்து விட்டுக் கழுநீர்ப் பானையில் கையை விட்டான்
  • எல்லாம் சொல்லும் பல்லி கழுநீர்ப் பானையில் விழுந்ததாம் துள்ளி
  • எல்லாம் தபோபலத்தால் கைகூடும்
  • எல்லாம் தெரிந்த நாரி, நிமிண்டி ஏற்றடி விளக்கை
  • எல்லாம் தெரிந்தவர்களுக்குக் கொஞ்சம் தெரியாது
  • எல்லாம் தெரியும்; ஒன்றும் தெரியாது
  • எல்லாம் மாயை என்கிறதைக் கண்டேன்
  • எல்லா மீனுக்கும் பெரிய மீன் நான்தான்
  • எல்லார் தலையிலும் எட்டு எழுத்து; பாவி தலையில் பத்து எழுத்து
  • எல்லார் வீட்டுத் தோசையிலும் ஓட்டை
  • எல்லாருக்கும் உண்டு இலையும் பழுப்பும்
  • எல்லாருக்கும் ஒவ்வொன்று எளிது
  • எல்லாருக்கும் சளி துரும்பு போல; எனக்குச் சளி மலை போல
  • எல்லாருக்கும் சொல்லும் பல்லி தான் போய்க் காடிப் பானையில் விழுமாம்
  • எல்லாருக்கும் புத்தி இருந்தால் புத்தி இல்லாதவன் ஆர்?
  • எல்லாருக்கும் ஆளின் கீழே நுழைந்தால், இவன் ஆளின் நிழலின் கீழே நுழைவான்
  • எல்லாரும் ஆளை மேய்ந்தால், இவன் அவன் நிழலை மேய்ப்பான்
  • எல்லாரும் உலர்த்தினார்கள் என்று எலியும் தன் வாலை உலர்த்தியதாம்
  • எல்லாரும் உழுதார்களென்று ஈழவனும் உழுதானாம்
  • எல்லாரும் எல்லாரும் என் தலையில் குட்டுகிறார்; என்னைப் பெற்ற தாயாரும் என் தலையில் குட்டுகிறாள்
  • எல்லாரும் என் மண்டையில் பொங்கித் தின்கிறார்கள்
  • எல்லாரும் சட்டியைப் போட்டு உடைத்தால் இவன் சிரட்டையைப் போட்டு உடைக்கிறான்
  • எல்லாரும் ஏறி இளைத்த குதிரையின் மேல் சாஸ்திரியார் ஏறிச்சரிந்து விழுந்தார்
  • எல்லாரும் கப்பல் ஏறி ஆயிற்று; இனி அம்மானார் பொற்பட்டம் கட்டப் போகிறார்
  • எல்லாரும் கூடி எனக்குக் குல்லாப் போட்டார்கள்
  • எல்லாரும் கூடிக் குல்லாவைத் தந்தார்கள்
  • எல்லாரும் தடுக்கின் கீழே நுழைந்தால் அவன் கோலத்தின் கீழ் நுழைகிறான்
  • எல்லாரும் தேங்காய் உடைத்தால் நான் சிரட்டையாவது உடைக்கலாம்
  • எல்லாரும் நல்லவர்கள், சேர்ந்தால் பெரியவர்கள்
  • எல்லாரும் நல்லாரா? கல் எல்லாம் மாணிக்கமா?
  • எல்லாரும் நெல்லை உலர்த்தினால் எலி வாலை உலர்த்திற்றாம்
  • எல்லாரும் ரெட்டியார் ஆனால் பின்னே ஓடுகிறது ஆர்?
  • எல்லாரும் பல்லக்கு ஏறினால் சுமப்பவர் யார்?
  • எல்லாரும் பாக்கு; இவன் ஒரு தோப்பு
  • எல்லாரையும் காக்க ஓர் ஈசன் இருக்கிறான்
  • எல்லாரையும் சொல்லி ராஜா குசு விட்டானாம்
  • எல்லாவற்றுக்கும் உண்டு இலையும் பழுப்பும்
  • எல்லாவற்றுக்கும் ஒரு சொட்டு உண்டு
  • எல்லாவற்றுக்கும் ஓர் அழுகை அழுங்கள்
  • எல்லாவற்றையும் செய்து கழுநீர்ப் பானையில் கைவிட்டது போல
  • எல்லா வீட்டிற்கும் இரும்பு அடுப்பே ஒழியப் பொன் அடுப்பு இல்லை
  • எல்லா வேலையும் செய்வான்; செத்தால் பிழைக்கமாட்டான்
  • எல்லி செட்டி லக்க ஏக லக்க
  • எல்லை கடந்தால் தொல்லை
  • எல்லை சுற்றின பிடாரி மாதிரி
  • எல்லை பாழ்பட்டாலும் கொல்லைக் கடமை விடார்
  • எல்லோருக்கும் ஒவ்வொன்று எளிது
  • எல்லோரும் பல்லக்கு ஏறினால் பல்லக்கைத் துக்குகிறவர் யார்?
  • எலக்ட்ரியை நம்பி இலை போடாதே
  • எலி அம்மணத்தோடே போகிறது என்கிறான்
  • எலி அழுதால் பூனை விடுமா?
  • எலி அழுது புலம்பினாலும் பூனை விட்டுவிடுமா?
  • எலி அறுக்கும்; தூக்க மாட்டாது
  • எலி இருக்கிற இடத்தில் பாம்பு இருக்கும்
  • எலி எட்டப் பாம்பு குடிகொள்ள
  • எலிக்கு அஞ்சிச் சந்நியாசம் போனது போல
  • எலிக்கு அஞ்சுவான்; புலிக்கு அஞ்சானாம்
  • எலிக்கு அநுகூலம் பாம்பு பிடாரனுக்கு அஞ்சுதல்; எளியார்க்கு அநுகூலம் வலியார் அரசனுக்கு அஞ்சுதல்
  • எலிக்கு இரணம்; பூனைக்குக் கொண்டாட்டம்
  • எலிக்குத் திண்டாட்டம்; பூனைக்குக் கொண்டாட்டம்
  • எலிக்குப் பயந்து வீட்டைச் சுட்டது போல
  • எலிக்குப் பிராணாவஸ்தை பூனைக்குக் கொண்டாட்டம்
  • எலிக்குப் பூனை பயப்படுமா?
  • எலிக்கு மணியம், சுவரை அறுக்கிறது
  • எலிக்கு வலி, பூனைக்குக் கொண்டாட்டம்
  • எலி கடித்தால் சிறுபாலை அடி
  • எலி தலையிலே கோடரி விழுந்தது போல
  • எலி தலையிலே கோபுரம் இடிந்து விழுந்தது போல
  • எலிப் பகை தொலைக்க, இருந்த வீட்டில் தீயிடல் போல
  • எலிப் பாழாக இருந்தாலும் தனிப் பாழாக இருக்க வேண்டும்
  • எலிப் புழுக்கை இறப்பில் இருந்தென்ன? வரப்பில் இருந்தென்ன?
  • எலி பூனைக்குச் சலாம் போடுவது போல
  • எலி பூனைய வெல்லுமா?
  • எலி பெருத்தால் பெருச்சாளி ஆகுமா?
  • எலியாரைப் பூனையார் வாட்டினால் பூனையாரை நாயார் வாட்டுவார்
  • எலியின் சிறங்கை சில தானியத்தால் நிரம்பும்
  • எலியும் பூனையும் இணைந்து விளையாடினது போல
  • எலியும் பூனையும் போல
  • எலியைக் கண்டு பூனை ஏக்கம் அடையுமா?
  • எலியைக் கண்டு பூனை ஏங்கி ஏங்கிக் கிடக்குமோ?
  • எலியைத் தவற விட்ட பூனை போல
  • எலியோ, பூனையோ சர சர என்கிறது; என்னடி சிறுக்கி பயமுறுத்துகிறாய்?
  • எலி வளை ஆனாலும் தனி வளை வேண்டும்
  • எலி வளையில் பாம்பு குடிபுகுந்தாற் போல
  • எலி வீட்டைச் சுற்றுகிறது; விருந்தாளி பெண்டுகளைச் சுற்றுகிறான்
  • எலி வீடு கட்டப் பாம்பு குடி கொள்ளும்
  • எலி வெட்டிச் சோதிக்கிறாற் போல்
  • எலி வேட்டை ஆடத் தவில் வேணுமா?
  • எலும்பு இல்லா நாக்கு எல்லாம் பேசும்
  • எலும்பு கடிக்கிற நாய் இரும்பைக் கடிக்குமா?
  • எலும்பு கடிக்கிற நாய்க்குப் பருப்பும் சோறும் ஏன்?
  • எலும்பு ருசியை நாய்தான் அறியும்?
  • எலும்பைக் கடிப்பானேன்? சொந்தப் பல்லும் போவானேன்?
  • எலும்பைத் தின்று சதையைக் கொடுத்து வளர்த்தான்
  • எலும்பே இல்லாத நாக்கு எலும்பு உள்ள மனிதனை எழவிடாமல் பண்ணிவிடுகிறது
  • எலுமிச்சங் காய்க்குப் புளிப்பு ஏற்றுகிறது போல
  • எலுமிச்சஞ் செடிக்கு எருப் போட்டாற் போல
  • எலுமிச்சம் பழம் என்றால் தெரியாதா? இஞ்சி போலக் கசக்கும் என்றானாம்
  • எவ்வளவு தின்றாலும் நாய் வயிறு ஒட்டித்தான் இருக்கும்
  • எவ்வளவு புரண்டாலும் ஒட்டுவது தான் ஒட்டும்
  • எவர் வைத்த தீயோ, வீடு வெந்து போயிற்று
  • எவன் ஆகிலும் தான் சாக மருந்து உண்பானா?
  • எவன் பெண்டாட்டி எவனோடு போனாலும் லெப்பைக்கு மூன்று பணம்
  • எவனோ செத்தான்; அவள் ஏன் அழுதாள்?
  • எவனோ சொல்வானாம் கதை; அதைப் போல இருக்கிறதே!
  • எவனோ வைத்தான் தோப்பு; அதை இழுத்தடித்ததாம் காற்று
  • எழுத்தறச் சொன்னாலும் பெண் புத்தி பின் புத்தி
  • எழுத்து அறச் சொன்னாலும் பெண் புத்தி பின்புத்தி
  • எழுத்து அறிந்த மன்னன் கிழித்தெறிந்தான் ஓலை
  • எழுத்து அறிந்த வண்ணான் குறித்து எறிந்தான் ஓலை
  • எழுத்து அறியாதவன் ஏட்டைச் சுமந்தது போல
  • எழுத்து இல்லாதவன் கழுத்து இல்லாதவன்
  • எழுத்து எண்ணிப் படித்தவன்
  • எழுத்துக்குப் பால் மாறின கணக்கனும் உடுக்கைக்குப் பால் மாறிய தாசியும் கெடுவர்
  • எழுதத் தெரியாதவன் ஏட்டைக் கெடுத்தான்
  • எழுத வழங்காத வாழ்க்கை கழுதை புரண்ட களம்
  • எழுத வாசிக்கத் தெரியாமற் போனாலும் எடுத்துக் கவிழ்க்கத் தெரியும்
  • எழுதாக் கடனுக்கு அழுதால் தீருமா?
  • எழுதாத ஓலையும் பீற்றல் முறமும் வந்தது போல்
  • எழுதி அறான் கணக்குக் கழுதை புரண்ட களம்
  • எழுதிய விதி அழுதால் திருமா?
  • எழுதி வழங்கான் வாழ்க்கை கழுதை புரண்ட களம்
  • எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான், படித்தவன் பாட்டைக் கொடுத்தான்
  • எழுதுகிற எழுத்தாணி இரட்டைக் கூர்பட்டாற் போல
  • எழுதுகிற எழுத்தாணி குத்துகிறது போல
  • எழுதுகிறது பெரிது அல்ல; இனம் அறிந்து சேர்க்கிறது பெரிது
  • எழுதுவது அருமை; எழுதினதைப் பழுதற வாசிப்பது அதிலும் அருமை
  • எழுந்ததும் தொழு; தொழுததும் படு
  • எழுந்தருளும் கோவிலுக்கு விளக்குப் பிடிக்க
  • எழுந்திருக்கச் சொன்னவர்கள் என் பாவம் கொண்டவர்கள்
  • எழுந்திருக்கப் பால் மாறி இல்லை என்றாளாம் பிச்சை
  • எழுந்திருப்பான்; கால் இல்லை
  • எழுப்பவோ, துஞ்சு புலியைத் துயில்
  • எழுபது சொன்னாலும் பறை ஏவினால்தான் செய்யும்
  • எழுபது பேரைக் கொன்ற படுநீலி
  • எள் அத்தனையை மலை அத்தனை ஆக்குகிறது
  • எள் உருண்டை போல
  • எள் என்கிறதற்கு முன்னே எண்ணெய் கொண்டு வருவான்
  • எள் என்பதற்கு முன்னே எண்ணெய் எங்கே என்கிறான்
  • எள் ஏன் காயுது? எள் எண்ணெய்க்கு; எலிப் புழுக்கை ஏன் காயுது? கூடக் கிடந்த குற்றத்துக்கு
  • எள் போட்டால் எள் விழாது
  • எள் விதைத்த காட்டில் கொள் முளையாது
  • எள் விதைத்தால் துவரை விளையுமா?
  • எள் விழுந்தால் எடுக்க மகா சேனை; இடறி விழுந்தால் எடுக்க மனிதர் இல்லையே!
  • எள் விழுந்தால் கீழே விழாது
  • எள்ளிலும் சின்ன இலை என்ன இலை? விடத்தாரி இலை
  • எள்ளுக்காய் பிளந்த விவகாரம்
  • எள்ளுக்காய் பிளந்தாற் போலப் பேச வேண்டும்
  • எள்ளுக்காய் முள்ளுத் தெறிப்பது போல
  • எள்ளுக்கு ஏழு உழவு உழுகிற வேளை, வேளாளா, கொள்ளுக்கு ஓர் உழவு உழுது பயிர் செய்
  • எள்ளுக்கு ஏழு உழவு, கொள்ளுக்கு ஓர் உழவு
  • எள்ளுக்குத் தக்க எண்ணெய், எண்ணெய்க்குத் தகுந்த பிண்ணாக்கு
  • எள்ளுக்குப் புள்ளு வரும்; எச்சிற்கு எறும்பு வரும்
  • எள்ளுக்குள் எண்ணெய் போல
  • எள்ளுக்குள் எண்ணெய் எங்கும் நிறைந்திருக்கும்
  • எள்ளுக் குறுணி; எலி முக்குறுணி
  • எள்ளுடன் ஏதோ காய்கிறது என்பார்கள்
  • எள்ளுத்தான் எண்ணெய்க்குக் காய்கிறது; எலிப் புழுக்கை எதற்குக் காய்கிறது? கூடக் கிடந்த பாவம்
  • எள்ளுத் தின்றால் எள்ளளவு பசி தீரும்
  • எள்ளுப் பயிரானாலும் நெல்லுப் பயிர் செய்
  • எள்ளுப் பயிருக்கு எழுபது நாள்
  • எள்ளுப் போட்டால் எள் எடுக்கப் போகாது
  • எள்ளும் அரிசியும் கலந்தாற் போல
  • எள்ளும் கரும்பும் இறுக்கினாற் பலன் தரும்
  • எள்ளும் கரும்பும் எடுக்கும் பயிராம்
  • எள்ளும் கொள்ளும் எழுபது நாள்
  • எள்ளும் தண்ணீரும் இறைக்க வேண்டியதுதான்
  • எள்ளும் தண்ணீரும் கரத்தில் ஏந்திச் செல்கிறான்
  • எள்ளும் தண்ணீரும் விட்டுத் தத்தம் பண்ணினேன்
  • எள்ளும் தினையும் எழுபது நாளில் பலன் தரும்
  • எள்ளும் பச்சரிசியும் கலந்தாற் போல்
  • எள்ளும் பச்சரியும்போல் இருக்க வேண்டும்
  • எள்ளு விதைக்க எறங்காடு; கொள்ளு விதைக்கக் கல்லங்காடு
  • எள்ளுள் எண்ணெய் போல்
  • எள்ளைத் தின்றான், எனக்கு உழைக்கிறான்
  • எள்ளை நீக்கிக் கொண்டு வரப்போன பேய் எண்ணெய் கொண்டு வர இசைந்தது போல
  • எள்ளைப் பிய்த்து எழுபது பேருக்குக் கொடுப்பது போல
  • எளியவன் பிள்ளை ஆனாலும் செய்ய வேண்டிய சடங்கு செய்ய வேண்டும்
  • எளியவன் பெண்டாட்டி எல்லாருக்கும் மைத்துணி
  • எளியவனாய்ப் பிறந்தாலும் இளையவனாய்ப் பிறக்கக் கூடாது
  • எளியவனுக்குப் பெண்டாட்டியாய் இருக்கிறதைவிட வலியவனுக்கு அடிமையாகிறது நலம்
  • எளியவனைக் கண்டு புளியங்காய் பறிக்கிறான்
  • எளியவனைக் கண்டு வாயால் ஏய்க்கிறான்
  • எளியாரை எதிரிட்டுக் கொண்டால் பிரான ஹாளி
  • எளியாரை வலியார் அடித்தால் வலியாரை தெய்வம் அடிக்கும்
  • எளியாரை வலியார் அடித்தால் வலியாரை வாசற்படி அடிக்கும்
  • எளியாரை வலியார் வாட்டினால் வலியாரைத் தெய்வம் வாட்டும்
  • எற்று சால் எண்ணாயிரம் பொன்
  • எறிகிறது முயலுக்கு; படுகிறது பற்றைக்கு
  • எறிச்ச கறி பழையமுது எந்நாளும் கிடைக்குமா?
  • எறிந்த கல் விழுகிற மட்டும்
  • எறிந்த கல்லைக் கவுளிற் கொண்ட களிறு போல
  • எறிவார் கையிலே கல்லைக் கொடுக்கிறதா?
  • எறிவானேன்? சொறிவானேன்?
  • எறும்பின் கண் அதன் அளவுக்குப் பெரிது; ஆனையின் கண் அதன் அளவுக்குச் சிறிது
  • எறும்பு ஆனை ஆகுமா? துரும்பு தூண் ஆகுமா?
  • எறும்பு இட்டலியைத் தூக்கியது போல
  • எறும்பு ஊர்வது போல
  • எறும்பு ஊர இடம் கொடுத்தால் எருதும் பொதியும் உள்ளே செலுத்துவான்
  • எறும்பு ஊர கல்லும் தேயும்
  • எறும்பு ஊரில் பெரும்புயல் வரும்
  • எறும்பு எடுத்துப் போவதற்குத் தடி எடுத்து நிற்கிறதா?
  • எறும்பு எண்ணாயிரம், அப்பாற் கழுதையும் கை கடந்தது என்றபடி
  • எறும்பு எண்ணாயிரம் கோடிக்கும் தெரியும்
  • எறும்புக் கடிக்கு மருந்தா?
  • எறும்புக்குக் கொட்டாங்கச்சித் தண்ணீர் சமுத்திரம்
  • எறும்புக்குத் தெரியாத கரும்பா?
  • எறும்புக்குத் தன் மூத்திரமே வெள்ளம்
  • எறும்பு கட்டிய புற்றில் பாம்பு குடிபுகுந்தாற் போல்
  • எறும்பு கடிக்கப் பொறுக்காதா?
  • எறும்பு சேர்ப்பது போல எல்லோரும் சேர்க்க வேண்டும்
  • எறும்பு தின்றால் எண்ணாயிரம் காலம்
  • எறும்பு தின்றால் நூறு வயசு
  • எறும்பு நுழைந்த ஆனைக் காது போல
  • எறும்பு நுழைய இடம் கொடுத்தால் எருதும் பொதியும் உள்ளே செலுத்துவான்
  • எறும்புப் புற்றில் பாம்பு குடி கொள்வது போல
  • எறும்பும் தன் கையால் எண் சாண்
  • எறும்பு முட்டை கொண்டு திட்டை ஏறின் மழை பெய்யும்
  • எறும்பு முதல் ஆனை வரையில்
  • என் காரியம் எல்லாம் நந்தன் படை வீடாய்ப் போயிற்று
  • என் கிண்டி லட்சம் பொன்
  • என் குடி கெட்டதும் உன் குடி கெட்டதும் பொழுது விடிந்தால் தெரியும்
  • என் குடுமி அவன் கையில் அகப்பட்டுக் கொண்டது
  • என் கை பூப்பறிக்கப் போகுமா?
  • என் கையிலே எலும்பு இல்லையா?
  • என் கை வெல்லம் தின்கிறதா?
  • என் சீட்டுக் கிழிந்து போனால் அல்லவோ சாவு வரும்?
  • என் தலைக்கு எண்ணெய் ஊற்று; எருமை மாட்டுக்கும் புல் போடு
  • என் தோலைச் செருப்பாய்த் தைத்துப் போடுவேன்
  • என் பிழைப்புச் சிரிப்பாய்ச்சிரிக்கிறது தெருவிலே
  • என் புத்தியைச் செருப்பால் அடிக்க வேணும்
  • என் புருஷனுக்கும் அரண்மனையில் வேலை
  • என் பெண் பொல்லாது; உன் பிள்ளையை அடக்கிக் கொள்
  • என் பேரில் தப்பு இருந்தால் என்னை மொட்டை அடித்துக் கழுதையின்மேல் ஏற்றிக் கொள்
  • என்பைத் தின்று சதையைக் கொடுத்து வளர்ந்தார்
  • என் மகள் வாரத்தோட வாரம் முழுகுவாள்? என் மருமகள் தீவிளிக்குத் தீவிளி முழுகுவாள்
  • என் மருமகனுக்கு வேப்பெண்ணெயாம் தூக்கெண்ணெய்; விளக்கெண்ணெயாம் தலைக்கு எண்ணெய்
  • என் முகத்தில் கரி தடவாதே
  • என் முகத்தில் கரி பூசினாயே!
  • என் முகத்திலே பவிஷு இல்லை; கையிலே பணம் இல்லை
  • என் முகுதுத் தோல் உனக்குச் செருப்பாய் இருக்கிறது
  • என் முதுகை நீ சொறிந்தால் உன் முதுகை நான் சொறிவேன்
  • என் வயிற்றிலே பாலை வார்த்தாய்
  • என் வீட்டுக்குப் பூவாயி வரப் பொன்னும் துரும்பாச்சு
  • என் வீட்டுக்கு வந்தால் என்ன கொண்டு வருகிறாய்? உன் வீட்டுக்கு வந்தால் என்ன கொடுக்கிறாய்?
  • என் வீடும் பாழ்; எதிர்த்த வீடும் பாழ்
  • என்று நின்றும் பொன்றுவர் ஒரு நாள்
  • என்றும் இடி குலைச்சல் எப்பொழுதும் நீங்குவது இல்லை
  • என்றும் காய்க்கும் எலுமிச்சை
  • என்றும் பயப்படுவதிலும் எதிரே போதல் உத்தமம்
  • என்றைக்கு இருந்தாலும் கிணற்றங்கரைப் பிள்ளையார் கிணற்றிலேதான்
  • என்றைக்கு இருந்தாலும் கொங்கல் காற்றோடே, குமுமம் ஆற்றோடே
  • என்றைக்கு இருந்தாலும் திருடன் பெண்டாட்டி தாலி அறுக்கத்தான் வேண்டும்
  • என்றைக்கு இருந்தாலும் திருமழபாடி ஆற்றோடே
  • என்றைக்கும் போடாத லட்சுமி இன்றும் போடவில்லை; தினம் போடுகிற தேவடியாளுக்கு இன்றைக்கு என்ன கேடு வந்தது?
  • என்ன, சின்னமலைக் கவுண்டன் அதிகாரம் போல் இருக்கிறதே!
  • என்ன சொன்னாலும் என் புத்தி போகாது
  • என்னடா அப்பா என்றானாம்; எலி அம்மணமாய் ஓடுகிறது என்றானாம்
  • என்னடா ஒன்று ஒன்றாகக் குருவி போலப் கொரிக்கிறாய்?
  • என்னடா. குச்சுக் கட்டிப் பேசுகிறாய்
  • என்னடா கெட்டுப் போனாய் என்றால், இன்னமும் கெட்டுப் போகிறேன், பந்தயம் போடு என்கிறான்
  • என்னடா சவுக்கம் கட்டிப் பேசுகிறாய்?
  • என்னடா தாதா, புரட்டாசி மாசம் முப்பதும் ஒரு கந்தாயம்
  • என்னடா பிரம்ம வித்தையோ?
  • என்னடி அம்மா தெற்கத்தியாள், எந்நேரம் பார்த்தாலும் தொள்ளைக் காது
  • என்னடி பெண்ணே கும்மாளம் என்றால் சின்ன மச்சானுக்குக் கல்யாணம்
  • என்ன தின்றாலும் அதற்கு மேல் நாலு பேரீச்சம் பழம் தின்றால் எல்லாம் அடிபடும்
  • என்னது இல்லை இரவல், மாமியாரது மரவை
  • என்ன பிள்ளை? அணிற் பிள்ளை, தென்னம் பிள்ளை
  • என்ன பெருமையடி ஏகாலி என்றால் அமுக்குப் பெருமையடி குருநாதா!
  • என்னமாய்ச் சொல்லி இதமாய் உரைத்தாலும் கழுதைக்கு உபதேசம் காதில் ஏறாது
  • என்ன மாயம் இடைச்சி மாயம்? மோரோடுதண்ணீர் கலந்த மாயம்
  • என்ன விலை ஆனாலும் நாய் நாய்தானே?
  • என்னவோ சொன்னாளாம் பொம்மனாட்டி; அதைக் கேட்டானாம் கம்மனாட்டி
  • என்ன ஜன்மம் வேண்டியிருக்கிறது? நாய் ஜன்மம்
  • என்னால் ஆகாதது என் குசுவாலா ஆகும்?
  • என்னால் ஆன உப்புத் திருமஞ்சனம்
  • என்னிலும் கதி கெட்டவன் என்னை வந்து மாலையிட்டான்
  • என்னிலும் மேல் இல்லை; என் நெல்லிலும் சாவி இல்லை
  • என்னுடைய வீட்டுக்குப் பூவாயி வரப் பொன்னும் துரும்பாச்சு
  • என்னை ஆட்டுகிறது, உன்னை ஆட்டுகிறது, மன்னி கழுத்துத் தாலி
  • என்னை இடுக்கடி, பாயைச் சுருட்டடி
  • என்னை ஏண்டா அடிக்கிறாய்? பிள்ளையாண்டிருக்கிறேன்
  • என்னைக் கண்டால் சணலுக்குள்ளே ஒளிக்கிறாய்? என் பெண் சாதியைக் கண்டால் சட்டிக்குள்ளே ஒளிக்கிறாய்
  • என்னைக் கலந்தவர்கள் என்றாலும் கைநிறையப் பொன் கொடுத்தால் புணர்ந்து விடுவேன்
  • என்னைக் கெடுத்தது நரை, என் மகளைக் கொடுத்து முலை
  • என்னை நம்பாதே, தாலி வாங்காதே
  • என்னைப் பவிஷு ஆற்றுகிறான்
  • என்னைப் பார் என் மேனி அழகைப் பார்
  • என்னைப் போலக் குரலும் என் அக்காளைப் போல ஒயிலும் இல்லை என்கிறதாம் கழுதை
  • என்னையும் பார்த்து இரவல் கேட்கிறதா?
  • என்னை விடைந்தால் உன்னை விடைவேன்; அம்மலாமா
  • எனக்கா கல்யாணம் என்றானாம்
  • எனக்கு அஷ்டமத்துச் சனி
  • எனக்கு ஊணும் இல்லை; உறக்கமும் இல்லை
  • எனக்கு என்று ஒரு பெண்டாட்டி இருந்தால் சடக்கென்று ஓர் அடி அடிக்கலாம்
  • எனக்குக் கட்டின லிங்கத்தைக் குழிப்பாக்கு விளையாடுவேன்
  • எனக்குக் கொடுக்கிறதைக் கொடுத்தால் போகிறேன்
  • எனக்குப் பழையது போடு; உனக்குப் பசியா வரம் தருகிறேன்
  • எனக்குப் பாக்குப் பிடிக்கப் பார்க்கிறான்
  • எனக்கு வேண்டாம் பூசணிக்காய்
  • எனது நாட்கள் எல்லாம் ஊமை கண்ட கனாப்போல் ஆயின

[தொகு]

  • ஏஊரையா என்றால் கேழ்வரகு எட்டுப் படி என்றானாம்.
  • ஏகமும் செத்தவனே ஏறடா பாடையிலே.
  • ஏகாத்தே என்றால் பூகாத்தே என்றாள்.
  • ஏகாதசி என்றைக்கு என்றால் அகமுடையாள் புடைவையைப் பார்த்துச் சொல்கிறேன் என்றாளாம்.
  • ஏகாதசித் திருடியை ஏற்றடா ரதத்தின்மேல்.
  • ஏகாதசிக்கு மா இடித்தாற் போல.
  • ஏகாதசி தோசை; இளையாள்மேல் ஆசை.
  • ஏகாதசி பாஞ்சோத்; துவாதசி அச்சா ஹை.
  • ஏகாதசி மரணம் என்று நாக்கைப் பிடுங்கிக் கொண்டானாம்.
  • ஏகாதசி மரணம், துவாதசி தகனம்.
  • ஏகாதசி மரணம் முக்தி என்று நாக்கைப் பிடுங்கிக் கொண்டு சாகிறதா?
  • ஏகாதசியார் வீட்டுக்குச் சிவராத்திரியார் வந்து போன கதை.
  • ஏகாதசி விரதம் என்று நாக்கைப் பிடுங்கிக் கொள்வார்களா?
  • ஏகாசி வீட்டில் சிவராத்திரி நுழைந்தாற் போல.
  • ஏகாலி வாகனம் பொதி சுமந்தாற் போல.
  • ஏகாக்ஷி லோக நாசினி.
  • ஏகோதிஷ்டக் காரனுக்குச் சபிண்டிக்காரன் சாட்சி.
  • ஏச்சிலும் பேச்சிலும் வல்லவனே.
  • ஏச்சுக்கு ஒன்றும் இல்லை என்றால் எருமைக்காரனுக்கு முட்டியில் சிரங்கு.
  • ஏட்டில் அடங்காது, எண்ணத் தொலையாது.
  • ஏட்டில் சர்க்கரை என்று எழுதி நக்கினால் இனிக்குமா?
  • ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவுமா?
  • ஏட்டுச் சுரைக்காயோ, வீட்டுச் சுரைக்காயோ?
  • ஏட்டிக்குப் போட்டி, எகனைக்கு மொகனை.
  • ஏடா கூடக்காரனுக்கு இடம் எங்கே என்றால் இருக்கிறவன் தலைமேலே என்பான்.
  • ஏடாகூடம் எப்படி என்றால் போகின்றவன் தலையில் பொத்தென்று அடித்தான்.
  • ஏடாகூடம் பேசினால் அகப்பைச் சூனியம் வைப்பேன்.
  • ஏடு அறியாதவன் பீடு பெறாதவன்.
  • ஏடு கிடக்கத் தோடு முடைந்தாளாம்.
  • ஏடைக்கும் கோடைக்கும் இருந்தால் இழி கண்ணி.
  • ஏண்டா கருடா சுகமா என்றால், இருக்கிற இடத்தில் இருந்தால் சுகந்தான் என்றான்.
  • ஏண்டா தம்பி குருநாதா, இதற்குள் வந்து புகுந்து கொண்டாய்?
  • ஏண்டா தென்ன மரத்தில் ஏறுகிறாய் என்றால் கன்றுக்குட்டிக்குப் புல்பிடுங்க என்றான்; தென்ன மரத்தில் ஏதடா புல் என்றால் அதுதானே கீழே இறங்கி வருகிறேன் என்றான்.
  • ஏண்டா பட்டப்பகலில் திருடினாய் என்றால் என் அவசரம் உனக்குத் தெரியுமா என்கிறான்.
  • ஏண்டா புளிய மரத்தில் ஏறினாய் என்றால் புளிய மரத்தில் புல் பறிக்க என்கிறான்.
  • ஏண்டி கிழவி மஞ்சள் குளிக்கிறாய்? பழைய நினைப்படா பேரா.
  • ஏணிக் கழிக்குக் கோணற் கழி வெட்டலாமா?
  • ஏணிக்குக் கோணி.
  • ஏணிக்குக் கோணியும் ஏட்டிக்குப் போட்டியும்.
  • ஏணிக் கொம்புக்குக் கோணற் கொம்பு போடலாமா?
  • ஏணியைத் தள்ளிவிட்டுப் பரண்மேல் ஏறலாமா?
  • ஏணி வைத்தாலும் எட்டாது
  • ஏணைக் கழிக்குக் கோணற் கழி வெட்டுகிறதா?
  • ஏதன் போர்க்கு ஆதனாய் அகப்பட்டாற்போல்.
  • எது என்று கேட்பாரும் இல்லை; எடுத்துப் பிடிப்பாரும் இல்லை.
  • ஏதுக்கு வீணும் சாணும்.
  • ஏதும் அற்றவனுக்கு எரிமுட்டைப் பாளையம் திருவிழா; போக்கற்றவனுக்குப் பொன்னேரித் திருவிழா.
  • ஏதும் அற்றவனுக்கு ஏன் இரண்டு பெண்டாட்டி?
  • ஏதும் இல்லை, எக்காந்தமும் இல்லை; பூநாகம்.
  • ஏதும் இல்லை, எக்காந்தமும் இல்லை; பூநாகம்.
  • ஏதென்று கேட்பாருமில்லை எடுத்துப் பிடிப்பாருமில்லை.
  • ஏப்பம் பரிபூரணம்; சாப்பாடு பூஜ்யம்.
  • ஏமாந்த சோணகிரி.
  • ஏமாந்தால் நாமம் போடுவான்; இணைப்பு ஒட்டவில்லை.
  • ஏய்த்தால் மதனியை ஏய்ப்பேன்; இல்லாவிட்டால் பரதேசம் போவேன்.
  • ஏர் அற்றவன் இரப்பாளி.
  • ஏர் அற்றுப் போனால் சீர் அற்றுப் போகும்.
  • ஏர் உழுகிறது; கன்னி கரைகிறது.
  • ஏர் பிடித்தவன் என்ன செய்வான்? பானை பிடித்தவள் பாக்கியம்.
  • ஏர் உழுகிற பிள்ளை இளைத்துப் போனால் போகிறது; பரியம் போட்ட பெண்ணைப் பார்த்து வளர்.
  • ஏர் உழுகிறவன் இளப்பமானால் எருது மைத்துனன் முறை கொண்டாடும்.
  • ஏர் உழுகிறவனுக்கு ஏகாதசி விரதமா?
  • ஏர் ஓட்டுவதிலும் எரு விடுதல் நன்று.
  • ஏர் நடந்தால் பேர் நடக்கும்.
  • ஏர் பிடிக்கிறவனுக்கு இடது கையில் மச்சம்; வாழப் புகுந்தவளுக்கு வலது கையில் மச்சம்.
  • ஏர் பிடித்தவன் என்ன செய்வான்? பானை பிடித்தவள் பாக்கியம்.
  • ஏர் பிடித்தவன் முன்னேறினால் செங்கோல் பிடித்தவன் செழிப்பான்.
  • ஏர் பூட்டுவதற்குள் பிராணன் போய்விடும்.
  • ஏரி நிறைந்தால் கரை கசியும்.
  • ஏரி உடைகிறதற்கு முன்னே அணை போட வேண்டும்.
  • ஏரி உடைத்தவள் கம்பளியைப் பிடித்துக் கொண்டால் சரியா?
  • ஏரி எத்தனை ஆள் கண்டிருக்கும்? ஆள் எத்தனை ஏரி கண்டிருப்பான்.
  • ஏரிக்கு ஏற்ற எச்சக்கலை; குலத்துக்கு ஏற்ற குசவன் குட்டை.
  • ஏரிக்குப் பயந்து கால் கழுவாமல் ஓடினானாம்.
  • ஏரிக்கும் மடுவுக்கும் ஏற்ற வித்தியாசம்.
  • ஏரி நிமிர்ந்தால் இடையனையும் பாராது.
  • ஏரி நிரம்பினால் இடைக்கரை பொசியும்.
  • ஏரி நிறைந்தால் கரை கசியும்.
  • ஏரி நீரைக் கட்டுவது அரிது; உடைப்பது எளிது.
  • ஏரி பெருகில் எங்கும் பெருக்கு.
  • ஏரி மடை என்றால் நோரி மழை.
  • ஏரி மிதந்தால் குடை அணை மிறியாது.
  • ஏரி மேலே கோபித்துக் கொண்டு கால் கழுவாமல் போனாள்.
  • ஏரியோடு பகை செய்து ஸ்நானம் செய்யாதிருப்பதா?
  • ஏரியோ தண்ணீர், சூரிய தேவா.
  • ஏருழுகிறவன் இளப்பமானால் எருது மச்சான் முறை கொண்டாடும்.
  • ஏரை அடித்தேனோ, கூழை அடித்தேனோ?
  • ஏரை இழந்தார் பேரை இழந்தார்.
  • ஏலவே தொலைந்தது எங்களை தொட்ட கர்மம்.
  • ஏலாத நாய்க்கு வால் டேங்குவது போல.
  • ஏலேல சிங்கன் பொருள் ஏழு கடல் போனாலும் திரும்பும்.
  • ஏலேலம்! ஏலேலம்! எருமைச் சாணி காய்கிறது.
  • ஏவற்பேய் கூரையைப் பிடுங்கும்.
  • ஏவுகிறவனுக்கு வாய்ச்சொல், செய்கிறவனுக்குத் தலைச்சுமை.
  • ஏழரை நாட்டுச் சனியனை இரவல் வாங்கின கதை.
  • ஏழு அறை கட்டி அதிலே வைத்தாலும் ஓர் அறையில் சோரம் போவாள்.
  • ஏழாம் பொருத்தம்.
  • ஏழு உழவு உழுதால் எருப் போட வேண்டாம்.
  • ஏழு உழவுக்கு ஓர் எடுப்புழவு சரி என்பது போல்.
  • ஏழு ஊர் சுற்றிப் பாழூர் மணத்தட்டை.
  • ஏழு ஊர் லங்கடா, எருமைக்கடா காவு, வீட்டுக்கு ஒரு துடைப்பக் கட்டை, உஷார், உஷார்.
  • ஏழு ஊருக்கு ஒரு கொல்லன்.
  • ஏழு ஊருக்கு ஒரு தட்டான்.
  • ஏழு மடிப்பு உழுத புலமும் ஏழு உலர்த்து உலர்த்தின விதையும் எழுபதுநாள் காய்ச்சல் தாளும்.
  • ஏழு வருஷம் மஞ்சள் பயிர் இட்டால் என் நிறம் ஆக்கிடுவேன் என்று அது சொல்லும்.
  • ஏழேழு ஜன்மத்துக்கும் போதும்.
  • ஏழை அழுத கண்ணீர் கூரிய வாள் ஒக்கும்.
  • ஏழைபேச்சு அம்பலம் ஏறாது.
  • ஏழை அடித்தானோ? கூழை அடித்தானோ?
  • ஏழை என்கிற பிராமணனையும் சாது என்கிற பசுவையும் நம்பாதே.
  • ஏழை என்றால் எவர்க்கும் எளிது.
  • ஏழை என்றால் மோழையும் பாயும்.
  • ஏழைக்கு இரங்கி வேளைக்கு உதவு.
  • ஏழைக்கு ஏற்ற எள்ளுருண்டை; பணக்காரனுக்கு ஏற்ற பருப்புருண்டை.
  • ஏழைக் குடித்தனம், ராஜவைத்தியம்.
  • ஏழைக்கும் மோழைக்கும் காடுகாள் அம்மை.
  • ஏழை பாக்குத் தின்ன எட்டு வீடு அறிய வேண்டுமா?
  • ஏழைக்கு வாழை.
  • ஏழைக் குறும்பு.
  • ஏழை கர்வம் சும்மா இருக்கவிடாது.
  • ஏழைகளின் செல்வம் பிள்ளைகளே.
  • ஏழை கூழுக்கு உப்பில்லை என்று ஏங்குகிறான்; பணக்காரன் பாலுக்குக் சக்கரை இல்லை என்று ஏங்குகிறான்.
  • ஏழை சொல் அம்பலம் ஏறாது.
  • ஏழை தலையில் கங்கை குதித்தாற் போல்.
  • ஏழைப் பிள்ளைக்கு எவர்களும் துணை.
  • ஏழைப் பிள்ளைக்குத் தெய்வமே துணை.
  • ஏழை பேச்சு அம்பலம் பாயுமா?
  • ஏழையைக் கண்டால் மோழையும் பாயும்.
  • ஏழை வீட்டில் ஆனையைக் கட்டுவது போல.
  • ஏழை வைத்தான் வாழை; மகளை வைத்தான் காவல்.
  • ஏளிதம் பேசி இவ்வேடம் ஆனேன்.
  • ஏற்கனவே கோணல் வாய்; அதிலும் கொட்டாவி விட்டால் எப்படி?
  • ஏற்கனவே துர்ப்பலம்; அதிலும் கர்ப்பிணி.
  • ஏற்கனவே மாமியார் அலங்கோலம்; அதிலே கொஞ்சம் பேய்க் கோலம்.
  • ஏற்கனவே மாமியார் பேய்க் கோலம்; அதிலும் இப்போது கிழக்கோலம்.
  • ஏற்கனவே மாமியார் பேய்க் கோலம்; அதிலும் கொஞ்சம் அக்கிலி, பிக்கிலி.
  • ஏற்கனவே மாமியார் பேய்க் கோலம்; அதிலும் கொஞ்சம் மாக்கோலம்.
  • ஏற்கை வாசனை, சேர்க்கை வாசனை.
  • ஏற்பது இகழ்ச்சி.
  • ஏற்றக் கோலுக்குப் பிடித்தால் அரிவாள் பிடிக்கு வரும்.
  • ஏறச் சொன்னால் எருது கோபம், இறங்கச் சொன்னால் நொண்டிக்குக் கோபம்.
  • ஏற்றக் கோலுக்கும் அரிவாள் பிடிக்கும் உள்ள தாரதம்யம்.
  • ஏற்றத்துக்கு மேல் காத்து நிற்பதை விட இரண்டு சால் தண்ணீருக்குக் கஞ்சி குடிக்கலாம்.
  • ஏற்றப் பறி நிரம்பினால் சோற்றுப் பானை தானே நிரம்பும்.
  • ஏற்றப் பாட்டுக்கு எதிர்ப் பாட்டு இல்லை; பூசாரி பாட்டுக்குப் பின்பாட்டு இல்லை.
  • ஏற்றம் உண்டானால் இறக்கமும் உண்டு.
  • ஏற ஆசைப்பட்டால் சாணாரப் பிறவி வேண்டும்.
  • ஏற ஒன்று இறங்க ஒன்று, எனக்கு ஒன்று, உனக்கு ஒன்று, இன்னொன்று இருக்குது தந்தால் தா, தராவிட்டால் போ.
  • ஏறச் சொன்னால் எருதுக்குக் கோபம்; இறங்கச் சொன்னால் முடவனுக்குக் கோபம்.
  • ஏறச் சொன்னால் குதிரைக்குக் கோபம்; இறங்கச் சொன்னால் ராவுத்தருக்குக் கோபம்.
  • ஏறப் படாத மரத்திலே எண்ணப் படாத மாங்காயாம்.
  • ஏறப் பார்க்கும் நாய்; இறங்கப் பார்க்கும் பூனை.
  • ஏற முடியாத மரத்திலே எண்ணாயிரம் மாங்காய்.
  • ஏற விட்டு ஏணியை வாங்குகிறதா!
  • ஏறாத வார்த்தை வசமாகுமா?
  • ஏறா மடைக்கு நீர் பாய்ச்சுவது போல.
  • ஏறா மேடும் பாயாத் தண்ணீரும்.
  • ஏறி அடுத்து வில் போட்டால் மாறி அடித்து மழை பெய்யும்.
  • ஏறி இருந்த கொம்பை வெட்டுபவனைப்போல.
  • ஏறி இறங்கும் திருமேனி, எங்கும் கண்ட திருமேனி, தட்டிக் கொட்டும் திருமேனி, வெள்ளை வெளுக்கும் திருமேனி.
  • ஏறிய கொக்கு என்று இருந்தாயோ கொங்கணவா?
  • ஏறின வரையும் திருப்பணி; கீழே கிடப்பதுகல்.
  • ஏறினால் எருதுக்குக் கோபம்; இறங்கினால் நொண்டிக்குக் கோபம்.
  • ஏறினால் குற்றம்; இறங்கினால் அபராதம்.
  • ஏறுகிற குதிரைக்கு எருதே மேல்.
  • ஏறுகிற குதிரையிலும் உழவு மாடு அதிக உத்தமம்.
  • ஏறுகிறவன் இடுப்பை எத்தனை தூரம் தாங்கலாம்?
  • ஏறு நெற்றி ஆறுதலை எதிர்க்க வந்தால் ஆகாது.
  • ஏறும் தேமல், இறங்கும் தேமல்.
  • ஏறும் தேமல், இறங்கும் படர் தாமரை, கூடும் புருவம் குடியைக் கெடுக்கும்.
  • ஏறும் மடைக்கு நீரைப் பாய்ச்சுவது போல.
  • ஏறு மாறாய்ப் பேசுகிறதா?
  • ஏன் அடா இடறி விழுந்தாய் என்றால் இதுவும் ஒரு கெருடி வித்தை என்றானாம்.
  • ஏன் அடா கருடா சுகமா? இருக்கிற இடத்தில் இருந்தால் சுகம் என்கிறது.
  • ஏன் அடா கிழவா, இளைத்தாய் குதிர் போல?
  • ஏன் அடா தம்பி இளைத்தாய் என்றால், இதிலும் துரும்பானாலும் உனக்கு என்ன என்ற கதை.
  • ஏன் அடா தம்பி, ரகுநாதா, இதற்குள் வந்து புகுந்து கொண்டாய்?
  • ஏன் அடா தென்ன மரத்தில் ஏறினாய் என்றால், கன்றுக்குட்டிக்குப் புல் பிடுங்க, என்கிறான்; தென்ன மரத்தில புல் ஏதடா என்றால், அதுதானே கீழே இறங்குகிறேன் என்கிறான்.
  • ஏன் அடா பட்டப் பகலில் திருடுகிறாய் என்றால் என் அவசரம் உனக்குத் தெரியுமா என்கிறான்.
  • ஏன் அடா புளிய மரத்தில் ஏறினாய் என்றால் பூனைக் குட்டிக்குப் புல்பறிக்க என்கிறான்.
  • ஏன் அடா பையா, இடறி விழுந்தாய் என்றால் இதுதான் ஒரு கெருடி வித்தை என்றானாம்.
  • ஏன் அடா முடிச்சை அவிழ்க்கிறாய்? என் பசி உனக்குத் தெரியுமா?
  • ஏன் அடா விழுந்தாய் என்றால், கரணம் போட்டேன் என்றானாம்.
  • ஏன் அடி அக்கா இலையாய்ப் பறக்கிறாய்? எங்கள் வீட்டுக்கு வா, காற்றாய்ப் பறக்கலாம்.
  • ஏன் அடி சிறுக்கி, புல்லு ஆச்சா? ஒரு நொடிக்குமுன் கட்டு ஆச்சே.
  • ஏன் அடி பாட்டி, மஞ்சள் குளித்தாய் பழைய நினைப்படா பேராண்டி.
  • ஏன் அடி பெண்ணே, இளைத்தாய் குதிர் போலே?
  • ஏன் அடி பெண்ணே, குந்தியிருக்கிறாய்? சோறு பற்றாமல்.
  • ஏன் அயலானைக் கண்டாளாம்; ஏணிப் பந்தம் பிடித்தாளாம்.
  • ஏன் உதட்டாண்டே என்றால் ஏன் பல்லாண்டே என்ற கதை.
  • ஏன் என்பாரும் இல்லை; எடுத்து விழிப்பாரும் இல்லை.
  • ஏன் காணும் தாதரே, ஆண்டி புகுந்தீர்? இரவும் ஒரு மண்டலம் பார்த்து விடுவோம்.
  • ஏன் கொழுக்கட்டை சவுக்கிட்டாய்? ஒருகாசு வெல்லம் இல்லாமல் சவுக்கிட்டேன்
  • ஏன் கொழுக்கட்டை நட்டுக் கொண்டாய்? வெல்லம் இல்லாமல் பிட்டுக் கொண்டேன்.
  • ஏன் பறையா என்கிறதைவிட வள்ளுவப் பறையா என்கிறது மேல்.
  • ஏன வாயனைக் கண்டானாம்; ஏணிப் பந்தம் பிடித்தானாம்.
  • ஏனானாம் கோத்திரத்துக்குத் தானானாம் தர்ப்பயாமி.
  • ஏனோ தானோ எவனோ செத்தான்.
  • ஏனோ தானோ என்றிருத்தல்.

[தொகு]

  • ஐங்காயம் இட்டு அரைத்துக் கரைத்தாலும் தன் நாற்றம் போகா தாம் பேய்ச்சுரைக்காய்க்கு.
  • ஐயமான காரியத்தைச் செய்தல் ஆகாது
  • ஐயர் வருகிற அமாவாசை நிற்குமா?
  • ஐங்கலக் கப்பியில் நழுவின கப்பி.
  • ஐங்காதம் போவதற்கு அறிமுகம் தேவை.
  • ஐங்காதம் போனாலும் அகப்பை அரைக் காசு.
  • ஐங்காதம் போனாலும் தன் நிழல் தன்னுடன்தானே வரும்?
  • ஐங்காதம் போனாலும் தன் பாவம் தன்னோடே.
  • ஐங்காதம் போனாலும் தன் பாவம் தொலையாது.
  • ஐங்காயம் இட்டு அரைத்துக் கரைத்தாலும் தன் நாற்றம் போகாதாம் பேய்ச் சுரைக்காய்க்கு.
  • ஐங்காயம் இட்டு அவரைப் பருப்பு இட்டாலும் தன் நாற்றம் போகாது பேய்ச் சுரைக்காய்.
  • ஐதது நெல்லு; அடர்ந்தது சுற்றம்.
  • ஐதர் அலி என்றால் அழுத பிள்ளையும் வாய் மூடும்;
  • ஐதர் காலம்.
  • ஐந்து சிட்டுக்கு இரண்டு காசு விலை.
  • ஐந்தும் மூன்றும் எட்டு; அத்தை மகளைக் கட்டு.
  • ஐந்து வயதில் ஆதியை ஓது
  • ஐந்தும் மூன்றும் எட்டு; அத்தை மகளைக் கட்டு.
  • ஐந்து வயதில் ஆதியை ஓது.
  • ஐந்து வருஷம் கொஞ்சி வளர்; பத்து வருஷம் அடித்து வளர்; பதினாறு வருஷம் தலைக்கு மேல் பழகி வளர்.
  • ஐந்து விரலும் ஐந்து கன்னக்கோல்.
  • ஐந்து விரலும் ஒன்று போல இருக்குமா?
  • ஐந்துக்கு மேலே அரசனும் ஆண்டி.
    [ஐந்து பெண்களுக்கு மேல் பிறந்து விட்டால், பெற்றோரின் செல்வம் காலியாகும்.]
  • ஐந்தூரான் புஞ்சை போல.
  • ஐப்பசி அடை மழை; கார்த்திகை கடு மழை.
  • ஐப்பசி அழுகல் தூற்றல்.
  • ஐப்பசி அறக் காய்ந்தால் அண்ணன் இட்ட பயிரும் சரி; தம்பி இட்ட பயிரும் சரி.
  • ஐப்பசி அறக் காய்ந்தால் ஆடு ஒரு மாடு; மாடு ஒரு மலை.
  • ஐப்பசிக்கும் கார்த்திகைக்கும் மழை இல்லா விட்டால் அண்ணனுக்கும் சரி, தம்பிக்கும் சரி.
  • ஐப்பசி தலை வெள்ளமும் கார்த்திகை கடை வெள்ளமும் கெடுதி.
  • ஐப்பசி நட்ட கரும்பு ஆனை வால் ஒத்ததாம்.
  • ஐப்பசி நெல் விதைத்தால் அவலுக்கும் நெல் ஆகாது.
  • ஐப்பசிப் பிறை கண்ட வேளாளா, கைப்பிடி நாற்றைக் கண்டு கரையேறு.
  • ஐம்பசிப் பணி அத்தனையும் மழை
  • ஐப்பசி மருதாணி அரக்காகப் பற்றும்.
  • ஐப்பசி மாதத்தில் சம்பா நட்டால் ஆனைக் கொம்பு முளைக்கும்.
  • ஐப்பசி மாதத்து எருமைக் கடாவும் மார்கழி மாதத்து நம்பியானும் சரி.
  • ஐப்பசி மாதத்து நடவும் அறுபது பிராயத்திற் பிள்ளையும்.
  • ஐப்பசி மாதத்து நாற்றை அருகில் சாத்து.
  • ஐப்பசி மாதத்து வெயிலில் அன்று உரித்த தோல் அன்றே காயும்.
  • ஐப்பசி மாதம் அடை மழை.
  • ஐப்பசி மாதம் பசு கறக்குமுன் பன்னிரண்டு பாட்டம் மழை.
  • ஐப்பசி மேல்காற்று அப்போதே மழை.
  • ஐப்பசி விதைப்பாட்டிற்கு ஐயப்பாடு இல்லை.
  • ஐப்பசி வெள்ளாமை அரை வெள்ளாமை
  • ஐ பை சுரைக்காய பக்கா நெய், வெள்ளைக்காரன் கப்பலிலே தீயைக் கொளுத்தி வை.
  • ஐம்பதாம் பிராயத்திலே கருக்கோலை கட்டிச் சாகிற காலத்தில் பிச்சோலை கட்டினாளாம்.
  • ஐம்பதிலே அறிவு; அறுபதிலே அடக்கம்; அதற்கு மேல் ஒன்றும் இல்லை.
  • ஐம்பதுக்கு மேலே மண் பவழம் கட்டுகிறதா?
  • ஐம்பது வந்தாலும் அவசரம் கூடாது.
  • ஐம்பது வயசிலே ஆண்பிள்ளைக்கு மறு மகிழ்ச்சி.
  • ஐம்பது வயசு ஆனவனுக்கு அஞ்சு வயசுப் பெண்ணா?
  • ஐம்பது வயசு ஆனவனுக்கு அரிவை ஏன்?
  • ஐயங்கார் அம்மானையில் சறுக்கினார்.
  • ஐயங்காரும் தத்துக் கொடுப்பார்.
  • ஐயங்காரைக் கெடுத்தவள் ஐயங்காரிச்சி, தாதச்சியைக் கெடுத்தவன் தாதன்.
  • ஐயப்பட்டால் பைய நட.
  • ஐயப்பன் குதிரையை வையாளி விட்டாற் போல.
  • ஐயப்பா கையை விடு.
  • ஐயம் ஆன காரியத்தைச் செய்தல் ஆகாது.
  • ஐயம் உண்டானால் பயம் உண்டு.
  • ஐயம் ஏற்றும் அறிவே ஓது.
  • ஐயம் தீர்ந்தும் நெஞ்சு ஆறவில்லை.
  • ஐயம்பேட்டைத் துலுக்கன் போல்.
  • ஐயர் இடம் கொடுத்தாலும் அடியார்கள் இடம் கொடார்கள்.
  • ஐயர் உண்டு தீர்ப்பார்; கர்ணன் கொடுத்து அழிப்பான்.
  • ஐயர் உருள; அம்மை திரள.
  • ஐயர் என்பவர் துய்யர் ஆவர்.
  • ஐயர் கொண்டு வருகிற பிச்சைக்கு அறுபத்தாறு பை.
  • ஐயர் தின்னும் பருப்பு ஐந்து குடி கெடுக்கும்.
  • ஐயர் பாதி, அரண்மனை பாதி.
  • ஐயர் வரும்வரை அமாவாசை காத்திருக்குமோ?
  • ஐயருக்கு அரை வார்த்தை சொல்; ஆண்டிக்கு அதுவும் சொல்லாதே.
  • ஐயன் அமைப்பை ஆராலும் தள்ளக் கூடாது.
  • ஐயன் அளந்த படி.
  • ஐயன் பாழியில் ஆனை போர்க்கு உதவுமோ?
  • ஐயனார் கோயில் ஆனையைப் போல.
  • ஐயனார் கோயில் செங்கல் அத்தனையும் பிடாரி.
  • ஐயனார் கோயில் மண்ணை மிதித்தவர் அத்தனை பேரும் பத்திர காளி.
  • ஐயனார் கோயிலிலே ஆனை பிடிக்க வேண்டும்.
  • ஐயனார் படையில் குயவனார் பட்டது போல.
  • ஐயனாரே வாரும்; கடாவைக் கொள்ளும்.
  • ஐயா, ஐயா, அம்மா குறைக் கேழ்வரகும் அரைக்க வரச் சொன்னாள்.
  • ஐயா கதிர் போல; அம்மா குதிர் போல.
  • ஐயாசாமிக்கு கல்யாணம்; அவரவர் வீட்டிலே சாப்பாடு.
  • ஐயா சொல்படி காலைக் கிளப்படி.
  • ஐயாட்டுக் கிடைக்குச் சமம் தை உழவு.
  • ஐயாத்துரைக்குக் கல்யாணம்; அவரவர் வீட்டிலே சாப்பாடு; கொட்டு மேளம் கோயிலிலே; வெற்றிலை பாக்குக் கடையிலே; சுண்ணாம்பு சூளையிலே.
  • ஐயா தாசி கவனம் பண்ண, அஞ்சாளின் சுமையாச்சு.
  • ஐயா நாளிலே அம்மா மூடு பல்லக்கு ஏறினாள்.
  • ஐயா நூற்பது அம்பியின் அரைஞாண் கயிற்றுக்கும் ஆகாது.
  • ஐயா பாட்டுக்கு அஞ்சடியும் ஆறடியும் தாண்டும்.
  • ஐயாவுக்கு வித்தை இல்லை; அம்மாளுக்குக் கர்வம் இல்லை.
  • ஐயா வீட்டுக் கூழுக்கு அப்பணையங்கார்த் தாதாவா?
  • ஐயாவைத் தவிர ஆனைதாண்டவ புரத்தார் அத்தனை பேரும் அயோக்கியர்கள்.
  • ஐயா வையர் கூழுக்கு அப்பையங்கார் தாதாவா?
  • ஐயைந்தில் பிறத்த பிள்ளையும் தை ஐந்தில் நட்ட நடவும்.
  • ஐயோ என்றால் ஆறு மாசத்துப் பாவம் சுற்றும்.
  • ஐயோ பாவ மென்றால் கையோடே.
  • ஐவருக்கும் தேவி, அழியாத பத்தினி

[தொகு]

  • ஒக்கலிலே பிள்ளையை வைத்து ஊரெல்லாம் தேடினாளாம்(தேடினாற் போல)
  • ஒச்சியம் இல்லாத ஊரிலே பெண் வாங்கின கதை.
  • ஒட்ட உலர்ந்த ஊமத்தங்காய் போல.
  • ஒட்டக் கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்(கொட்டைத் தாழ்ப்பாள்)
  • ஒட்டகத்தின் முதுகுக்குக் கோணல் ஒன்றா இரண்டா?
  • ஒட்டத்கூத்தன் பாட்டுக்கு இரட்டை தாழ்ப்பாள்.
  • ஒட்டகத்துக்கு உடம்பெல்லாம் கோணல்.
  • ஒட்டகத்துக்குக் கல்யாணம், கழுதை கச்சேரி
  • ஒட்டகத்துக்குத் தொட்ட இடம் எல்லாம் கோணல்,
  • ஒட்டகமே, ஒட்டகமே, உனக்கு எவ்விடத்தில் செவ்வை.
  • ஒட்டத்து அப்பம் தின்பாரைப் போலே.
  • ஒட்டப் பார்த்து மட்ட நறுக்கு.
  • ஒட்டன் கண்டானா லட்டுருண்டை? போயன் கண்டானா பொரியுருண்டை?
  • ஒட்டன் குச்சி வைத்துப் பெருக்குகிற விளக்குமாறும் அல்ல; வீட்டைப் பெருக்குகிற விளக்குமாறும் அல்ல.
  • ஒட்டன் சுவருக்குச் சுண்ணாம்பு அடித்தாற் போல
  • ஒட்டன் வீட்டு நாய் கட்டில் ஏறித் தூங்கிற்றாம்
  • ஒட்டன் வீட்டு நாய் கூழுக்குக் காத்த மாதிரி.
  • ஒட்டன் வீட்டு நாய் திட்டையில் இருந்தாற் போல
  • ஒட்டனுக்குத் தெரியுமா லட்டுருண்டை?
  • ஒட்டாது பாவம்; கிட்டாது சேவை.
  • ஒட்டி உலர்ந்து ஊமத்தங்காயாய்ப் போய்விட்டான்(உலர்ந்த)
  • ஒட்டிய உடம்பும் ஒடுக்கிட்ட வாழ்நாளும்.
  • ஒட்டிய சீதேவி நெட்டியோடே போம்(சீதாதேவி.
  • ஒட்டின பேரைத் தொட்டிலும் கொள்ளும்; ஒட்டாத பேரைக் கட்டிலும் கொள்ளாது(ஒட்டினால் கொள்ளும். ஒட்டினாரை.)
  • ஒட்டினாலும் உழக்குப் பீச்சுகிறதா?(உழக்குப் பீர் செல்கிறதா?)
  • ஒட்டுக் கதை கேட்பவர் செவிட்டுப் பாம்பாய்ப் பிறப்பார்(யாழ்ப்பாண வழக்கு.)
  • ஒட்டுத் திண்ணை நித்திரைக்குக் கேடு.
  • ஒட்டுத் திண்ணையில் பட்டுப் பாய் போட்டவன்.
  • ஒட்டு மூத்திரத்துக்கு ரக்ஷாபந்தனம் செய்தாளாம்; பட்டறைப் பீயைப் பாயோடு பிடித்தாளாம்.
  • ஒட்டைக்குக் கரும்பு மெத்தக் கசப்பு.
  • ஒட்டைக்குச் சுளுவு பட்டாற் போல(அளவு மீட்டர் போல்.)
  • ஒட்டைக்குப் பளுவு ஏற்றுகிறது போல.
  • ஒடக்கான் முட்டு வைக்காத காடு
  • ஒடம்பில எண்ணெ தடவி பொரண்டாலும் ஒட்ற மண்ணுதான் ஒட்டும்
  • ஒடிந்த கோல் ஆனாலும் ஊன்று கோல் ஆகும்.(வேண்டும்.)
  • ஒடுக்கம் சிதம்பரம்.
  • ஒடுக்கி ஒடுக்கிச் சொன்னாலும் அடங்குமா?
  • ஒண்ட வந்த எலி உரம் பெற்றது; அண்டியிருந்த பூனை ஆலாய்ப் பறக்கிறது.
  • ஒண்ட வந்த பிடாரி ஊர்ப் பிடாரியைத் துரத்தியதாம்
  • ஒண்டாதே, ஒண்டாதே, ஓரிக்கால் மண்டபமே; அண்டாதே, அண்டாதே ஆயிரங்கால் மண்டபமே என்றாற் போல.
  • ஒண்டிக்காரன் பிழைப்பும் வண்டிக்காரன் பிழைப்பும் ஒன்று.
  • ஒண்ணாங் குறையாம் வண்ணான் கழுதைக்கு.
  • ஒண்ணாந் தேதி சீக்கிருப்பவனும் ஒற்றைக் கடையில் சாமான் வாங்குபவனும் உருப்பட மாட்டான்(இலங்கை வழக்கு.)
  • ஒண்ணுக்குள்ளே ஒண்ணு, எள்ளுக்குள்ளே எண்ணெய்:
  • ஒண்ணுக்குள்ளே ஒண்ணு, கண்ணுக்குள்ளே மண்ணாகியது.
  • ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணு.
  • ஒண்ணைப் பெற்றாலும் கண்ணைப் பெறு
  • ஒண்ணோ, கண்ணோ?
  • ஒத்த இடத்தில் நித்திரை கொள்.
  • ஒத்த கணவனும் ஒரு நெல்லும் உண்டானால் சித்திரம் போலக் குடிவாழ்க்கை செய்யலாம்.
  • ஒத்தான் ஓரகத்தாள் ஒரு முற்றம்; நாத்தனார் நடு முற்றம்.
  • ஒத்தி வெள்ளம் வருமுன்னே அணை வோலிக்கொமின வேண்டும்.
  • ஒத்துக்கு ஏற்ற மத்தளம். ஒத்தைக்கு ஒரு பிள்ளை என்றால் புத்தி கூடக் கட்டையாகப் போகுமா?(ஒத்திக்கு.)
  • ஒதி பெருத்தால் உரல் ஆகுமா?
  • ஒதி பெருத்தாலும் உத்தரத்துக்கு ஆகாது.
  • ஒதி பெருத்து என்ன? உபகாரம் இல்லாதவன் வாழ்ந்து. என்ன?(உதவாதவன்.)
  • ஒதி பெருத்துத் தூண் ஆமா? ஒட்டாங் கிளிஞ்சல் காசாமோ?
  • ஓதிய மரம் தூணாமோ, ஒட்டாங் கிளிஞ்சல் காசாமோ?
  • ஒதிய மரமும் ஒரு சமயத்துக்கு உதவும்.
  • ஒப்புக்குச் சப்பாணி. ஊருக்கு மாங்கொட்டை.
  • ஒப்புக்கு மாங்கொட்டை, ஊருக்குச் சப்பாணி.
  • ஒய்யாரக் கொண்டையாம், தாழம் பூவாம், உள்ளே இருக்குமாம் ஈரும் பேனும்.
  • ஒயிலாய்ப் பேசுகிறாள்; ஆனால் கனம் அறிந்த கப்பறையும் அல்ல; கண்டறிந்த நாயும் அல்ல.
  • ஒரு அச்சிலே உருக்கி வார்த்தாற் போல.
  • ஒரு அடி அடித்தாலும் பட்டுக் கொள்ளலாம்; ஒரு சொல் மட்டும் கேட்க முடியாது.
  • ஒரு அப்பம் தின்னாலும் நெய்யப்பம் தின்ன வேணும்.
  • ஒரு இழவு என்றாள் உள்ளபடி ஆகும்.(ஆகும்.)
  • ஒரு உறையிலே இரண்டு கத்தியா?
  • ஒரு ஊர் நட்பு, ஒரு ஊருக்குப் பழிப்பு.
  • ஒரு ஊரில் இரண்டு பைத்தியக்காரர்களா?
  • ஒரு ஊருக்கு ஒரு வழியா?
  • ஒரு ஊருக்கு வழி கேட்க ஒன்பது ஊருக்கு வழி காட்டுகிறான்.
  • ஒரு கட்டு வைக்கோலைத் தண்ணீரில் போட்டு ஒன்பது ஆள் கட்டி இழுத்தாற் போல.(எட்டு ஆள்.)
  • ஒரு கண்ணிலே புகுந்து மறு கண்ணிலே புறப்படுகிறான்.(வருகிறவன்.)
  • ஒரு கண்ணுக்கு வெண்ணெய்; ஒரு கண்ணுக்குச் சுண்ணாம்பு.
  • ஒரு கண் முடி ஒரு கண் விழிக்கிறவன்.
  • ஒரு கம்பத்தில் இரண்டு ஆனையைக் கட்டினாற் போல்
  • ஒரு கரண்டி எண்ணெய் கொண்டு பலகாரம் சுட்டுப் பந்தி விசாரித்து வந்த பெண்டுகள் வாரி முடித்துப் பெண்டுகளால் பிடிமானம் இல்லாமல் புறக்கடை வழியாய்ப் போய் விட்டது.
  • ஒரு கல்லில் இரண்டு மாங்காய்.
  • ஒரு கல விதையடி உவட்டை மாற்றிட, ஆறு பல வேப்பம்
  • ஒரு கவளம் சோற்றுக்கு நாய் பல்லை இளிப்பது போல,
  • ஒரு கழிச்சலில் உட்கார்ந்து மறு கழிச்சலில் மல்லாந்து போக,
  • ஒரு காசு அகப்படுகிறது குதிரைக் கொம்பு.
  • ஒரு காசு என்ற இடத்தில் அழுகிறான்.
  • ஒரு காசுக்கு மூக்கு அரிந்தால் ஒன்பது காசு கொடுத்தால் ஒட்டுமா?
  • ஒரு காசுக்கு மோர் வாங்கி ஊரெல்லாம் தானம் பண்ணினாளாம்.
  • ஒரு காசு கொடாதவன் ஒரு வராகன் கொடுப்பானா?
  • ஒரு காசு பேணின் இரு காசு தேறும்
  • ஒரு காதில் வாங்கி ஒரு காதில் விடுவது.
  • ஒரு கால் செய்தவன் இரு கால் செய்வான்.
  • ஒரு கால் பார்த்தால் புஞ்சை; இரு கால் பார்த்தால் நஞ்சை
  • ஒரு காலிலே நிற்கிறான்.
  • ஒரு காலை செய்த தச்சன் மறு காலும் செய்வான்.
  • ஒரு குட்டியும் பெட்டையும் போல.
  • ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி பிரை
  • ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி விஷம் போதும்.
  • ஒரு குண்டிலே கோட்டை பிடிக்கலாமா? (முடியுமா?)
  • ஒரு குருவி இரை எடுக்க ஒன்பது குருவி வாய் திறக்க, :(திறக்குமாம்.)
  • ஒரு குலைத் தேங்காய்.
  • ஒரு குளப்படி நீரைக் கண்டு திரைகடல் ஏங்குமா?
  • ஒரு கூடை முடைந்தவன் ஒன்பது கூடை முடைவான்.
  • ஒரு கூடைக் கல்லும் தெய்வமானால் கும்பிடுகிறது எந்தக் கல்லை?
  • ஒரு கூடைச் செங்கல்லும் பிடாரி.
  • ஒரு கூடைச் செங்கலில் அத்தனையும் வேகாத செங்கல்,
  • ஒரு கூன் சர்க்கரையா ஒத்து வாழ்.
  • ஒரு கை சத்தம் எழுப்புமா?
  • ஒரு கை தட்டினால் ஓசை எழும்புமா?
  • ஒரு கை (அல்லது வெறுங்கை) முழம் போடுமா?
  • ஒரு கோபம் வந்து கிணற்றில் விழுந்தால் ஆயிரம் சந்தோஷம் வந்தாலும் எழும்பலாமா?
  • ஒரு கோமுட்டியைக் கழுவில் போட்டதற்கு ஒன்பது கல எள் ஆச்சுதே; ஊர்க் கோமுட்டிகளை எல்லாம் கழுவில் போடு, என்றானாம்.
  • ஒரு சந்திப் பானையை நாய் அறியுமா?
  • ஒரு சாதிக்கு ஏச்சு: ஒரு சாதிக்குப் பேச்சு.
  • ஒரு சாண் காட்டிலே ஒருமுழத்தடி வெட்டலாமா?
  • ஒரு சுருட்டைப் பத்து நாள் பிடிப்பான்.
  • ஒரு சுற்றுச் சுற்றி வயிற்றைத் தடவிப் பார்த்துக் கொண்டது போல,
  • ஒரு செடியிலே விளைந்தாற் போல்.
  • ஒரு செவியில் வார்த்தாற் போல.
  • ஒரு நன்றி செய்தவரை உள்ள அளவும் நினை
  • ஒரு நாள் கூத்துக்கு மீசையைச் சிரைக்கவா?
  • ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்.
  • ஒரு பொய்யை மறைக்க ஒன்பது சொல்லுதல்
  • ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய் சொல்லுதல்.
  • ஒருத்தர் போன வழி ஒருத்தர் போகிறது இல்லை.
  • ஒருத்தன் ஜோலிக்குப் போகவும் மாட்டேன்: என் காலை மிதித்தால், விடவும் மாட்டேன்.
  • ஒருத்திக்கு ஒருமகன்.
  • ஒரு தட்டில் ஒர் ஆனை மறுதட்டில் ஆயிரம் பூனை.
  • ஒரு தம்படி மிச்சப்படுத்தியது ஒரு தம்படி சம்பாதித்தது ஆகுமா?
  • ஒரு தரம் விழுந்தால் தெரியாதா?
  • ஒரு தலைக்கு இரண்டு ஆக்கினையா?
  • ஒரு தலை வழக்கு நூலிலும் செவ்வை.
  • ஒரு தாய் அற்ற பிள்ளைக்கு ஊர் எல்லாம் தாய்.
  • ஒரு தாய்க்கு ஒரு பிள்ளை
  • ஒரு துட்டு ஒரு ரூபாயாய் இருக்கிறது.
  • ஒரு துரும்பு பழுதை ஆகுமா?.
  • ஒரு துஷ்டனுக்கும், ஒரு துஷ்டனுக்கும் ஒரே வழி;
  • ஒரு துஷ்டனுக்கும். ஒரு நல்லவனுக்கும் இரண்டு வழி;இரண்டு நல்லவர்களுக்கு மூன்று வழி.
  • ஒரு தையல் ஒன்பது தையலைத் தவிர்க்கும்.
  • ஒரு தொழிலும் இல்லாதவர் நாடகக்காரர் ஆனார்.
  • ஒரு தொழுமாடு முட்டிக் கொள்ளவும் செய்யும், நக்கிக் கொள்ளவும் செய்யும்.
  • ஒரு நன்றி செய்தாரை உள்ளளவும் நினை.
  • ஒரு நாக்கா, இரண்டு நாக்கா?
  • ஒரு நாய் ஊளையிட ஊர் எல்லாம் நாய் ஊளை.
  • ஒரு நாய்க்குத் தலை வலித்தால் ஒன்பது நாய்க்குத் தலை வலிக்கும்.
  • ஒரு நாய் குரைத்தால் எல்லா நாயும் குரைக்கும்
  • ஒரு நாய்க்கு வலித்தால் எல்லா #நாய்க்கும் வலிக்கும்.
  • ஒரு நாய் குரைத்தால் பத்து நாய் பதில் கொடுக்கும்.
  • ஒரு நாய் வீட்டில் இருந்தால் பத்துப் பேர் காவல் காத்தது போல் ஆகும்.
  • ஒரு நாள் ஆகிலும் திருநாள்.
  • ஒரு நாள் ஒரு யுகமாக இருக்கிறது.
  • ஒரு நாள் கூத்துக்கு மீசையைக் சிரைத்தானாம்(தலையைச் சிரைத்தானாம்.)
  • ஒரு நள் பஞ்சத்தை உற்றாரிடம் காட்டினாளாம்.
  • ஒரு நாளும் இல்லாத திருநாள்
  • ஒரு நாளும் இல்லாமல் திருநாளுக்குப் போனால் திருநாள் எல்லாம் வெறு நாள் ஆச்சு.
  • ஒரு நாளும் சிரிக்காதவன் திருநாளிலே சிரித்தான்; திருநாளும் வெறு நாள் ஆச்சு.
  • ஒரு நாளும் நான் அறியேன். உள்ளே விளக்கெரிந்து.
  • ஒரு நாளைக்கு இறக்கிறது கோடி, பிறக்கிறது கோடி.
  • ஒரு பக்கம் பெய்தால் ஒரு பக்கம் காயும்.
  • ஒரு பசியும் இல்லை என்பாள் ஒட்டகத்தையும் விழுங்கி விடுவாள்
  • ஒரு பணம் இரண்டு பாளை; ஒன்று கள்; ஒன்று நுங்கு.
  • ஒரு பணம் கொடுத்து அழச் சொல்லி ஒன்பது பணம் கொடுத்து ஓயச்சொன்னது போல.
  • ஒரு பணம் கொடுப்பானாம்; ஓயாமல் அழைப்பானாம்.
  • ஒரு பானைச் சோற்றுக்கு ஒருசோறு பதம்.
  • ஒரு பிள்ளை என்று ஊட்டி வளர்த்தாளாம்; அது சொரிமாந்த குணம் பிடித்துச் செத்ததாம்.
  • ஒரு பிள்ளை பிள்ளை ஆகுமா? ஒரு மரம் தோப்பு ஆகுமா?
  • ஒரு பிள்ளை பெற்றவளுக்கு உள்ளங்கையில் சோறு; நாலு பிள்ளை பெற்றவளுக்கு நடுச் சந்தியிலே சோறு.
  • ஒரு பிள்ளை பெற்றவருக்கு உறியிலே சோறு; நாலு பிள்ளை பெற்றவளுக்கு நடுத்தெருவிலே சோறு.
  • ஒரு பிள்ளை பேளவும் ஒரு பிள்ளை நக்கவும்.
  • ஒரு புடலங்காயை நறுக்கிப் பாதி கறிக்கும் பாதி விதைக்கும் வைத்துக் கொள்ள முடியுமா?
  • ஒரு புத்திரன் ஆனாலும் குருபுத்திரன் ஆவானா?
  • ஒரு பூனை மயிர் ஒடிந்தால் ஒன்பது பிராமணனைக் கொன்ற பாவம்.
  • ஒரு பெட்டை நாய்க்கு ஒன்பது ஆண் நாயா?
  • ஒரு பெண் என்று ஊட்டி வளர்த்தாள்; அது ஊர்மேலே போச்சுது.
  • ஒரு பெண்ணுக்கு அவளது வாழ்நாளில் அவளின் கழுத்தில் ஒரேயொரு முறை தான் தாலி ஏற வேண்டும். அதுவும் ஒருவரின் கைகளால் தான்.
  • ஒரு பொய்க்கு ஒன்பது பொய்.
  • ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய் சொல்ல வேண்டும்.
  • ஒரு பொருள் ஆகிலும் எழுதி அறி.
  • ஒரு பொழுது சட்டி; அதன்மேல் கவிச்சுச் சட்டி.
  • ஒரு மயிர் போனாலும் கவரிமான் வாழாது.
  • ஒரு மரத்துக் கொம்பு ஒரு மரத்தில் ஒட்டாது.
  • ஒரு மரத்துப் பட்டை ஒரு மரத்திலே ஒட்டுமா?
  • ஒரு மரத்துப் பழம் ஒரு மரத்தில் ஒட்டுமா?
  • ஒரு மரத்துப் பழமா ஒருமிக்க?
  • ஒரு மரத்தை அதன் கனியால் அறியலாம்.
  • ஒரு மரம் இரண்டு பாளை, ஒன்று நுங்கு; ஒன்று கள்; அறிவுடன் பார்க்கும் போது அதுவும் கள்ளே; இதுவும் கள்ளே.
  • ஒரு மரம் தோப்பு ஆகுமா?
  • ஒரு மனப்படு: ஓதுவார்க்கு உதவு.
  • ஒரு மிளகுக்கு ஆற்றைக் கட்டி இறைத்த செட்டி.
  • ஒரு மிளகும் நாலு உப்பும் போதும்.
  • ஒரு மிளகைப் போட்டு விட்டுப் பொதி மிளகு என்னது என்றாற்போல.
  • ஒரு முத்தும் கண்டறியாதவனைச் சொரிமுத்துப் பிள்ளை என்றானாம்.
  • ஒரு முருங்கையும் ஓர் எருமையும் உண்டானால் வருகிற விருந்துக்கு மனம் களிக்கச் செய்வேன்.
  • ஒரு முழுக்காய் முழுகிவிட வேண்டும்.
  • ஒரு முழுக்கிலே மண் எடுக்க முடியுமா?
  • ஒரு முறை செய்தவன் ஒன்பது முறை செய்வான்.
  • ஒருமைப்பாடு இல்லாத குடி ஒருமிக்கக் கெடும்
  • ஒரு மொழி அறிந்தவன் ஊமை; பல மொழி அறிந்தவன் பண்டிதன்.
  • ஒரு ரோமம் போனாலும் கவரிமான் வாழாது.
  • ஒருவர் அறிந்தால் இரகசியம், இருவர் அறிந்தால் அம்பலம்.
  • ஒருவர் கூறை எழுவர் உடுக்க.
  • ஒருவர் துணியை இருவர் உடுத்தினால் இருவரும் அம்மணமாம்
  • ஒருவர் படுக்கலாம்; இருவர் இருக்கலாம்; மூவர் நிற்கலாம்.
  • ஒருவர் பொறை, இருவர் நட்பு.
  • ஒருவருக்கு இடுக்கண் வந்தால் அடுக்கடுக்காய் வரும்.
  • ஒருவருக்கு நிறைவும் குறைவும் ஊழ்வினைப் பயன்.
  • ஒருவரும் அறியாத உச்சித ராமன்,
  • ஒருவன் அறிந்த ரகசியம் உலகத்தில் பரவும்.
  • ஒருவன் குழியிலே விழுந்தால் எல்லாரும் கூடி அவன் தலையில் கல்லைப் போடுகிறதா?
  • ஒருவன் செய்த தீமை அவன் காலைச் சுற்றி வேரை அறுக்கும்
  • ஒருவன் தலையில் மாணிக்கம் இருக்கிறதென்று வெட்டலாமா?
  • ஒருவன் துணையாக மாட்டான்; ஒரு மரம் தோப்பாக மாட்டாது.
  • ஒருவனாய்ப் பிறந்தால் தனிமை, இருவராய்ப் பிறந்தால் பகைமை.
  • ஒருவனாய்ப் பிறப்பது ஒரு பிறப்பாமா? ஒன்றி மரம் தோப்பாமா?
  • ஒருவனுக்கு இருவர் துணை
  • ஒருவனுக்குத் தாரம்; மற்றவனுக்குத் தாய்.
  • ஒருவனேனும் உயிருடன் உளனோ?
  • ஒருவனை அறிய இருவர் வேண்டும்.
  • ஒருவனைக் கொன்றவன் உடனே சாவான்; பல பேரைக் கொன்றவன் பட்டம் ஆள்வான்.
  • ஒரு வார்த்தை வெல்லும்; ஒரு வார்த்தை கொல்லும்
  • ஒரு விரல் நொடி இடாது.
  • ஒரு விரல் முடி இடாது.
  • ஒருவிலே இருந்தாலும் இருக்கலாம்; ஒழுக்கிலே இருக்க முடியாது.
  • ஒரு விளக்கைக் கொண்டு ஓராயிரம் விளக்கை ஏற்றலாம்,
  • ஒரு வீடு அடங்கலும் பிடாரி.
  • ஒரு வேலைக்கு இரு வேலை.
  • ஒரு வேலைக்கு இரு வேலை, ஓதி வைத்தார் வாத்தியார்.
  • ஒரு வேளை உண்போன் யோகி; இருவேளை உண்போன் போகி; மூவேளை உண்போன் ரோகி.
  • ஒரே காலில் நிற்கிறான்.
  • ஒரே துறையில் குளித்த உறவு
  • ஒல்லி நாய்க்கு ஒட்டியாணம் வேண்டுமாம்.
  • ஒலி இருந்த சட்டி, இன்ன சட்டி என்று தெரியாது.
  • ஒவ்வாக் கட்டிலும் தனிமை அழகு.
  • ஒவ்வாப் பேச்சு வசையோடு ஒக்கும்.
  • ஒவ்வொரு நாய்க்கும் அதன் நாள் உண்டு.
  • ஒவ்வொருவனும் தன் தன் பாட்டைத் தானே அனுபவிக்கவேண்டும்.
  • ஒவ்வொன்றாய் நூறா?.ஒரேயடியாய் நூறா?
  • ஒழிந்த இடம் பார்க்கிறதா?
  • ஒழிந்த இடமும் தாவாரமும் தேடுகிறதா?
  • ஒழுக்கத்தைக் காட்டிலும் உயர்வில்லை.
  • ஒழுக்கம் உயர் குலத்தில் நன்று,
  • ஒழுக்கிலே முக்காடா?
  • ஒழுக்குக்கு வைத்த சட்டி போல.
  • ஒழுக்குக்கு வீட்டிலே வெள்ளம் வந்தது போல.
  • ஒழுகாத வீடு உள்ளங்கையத்தனை போதும்.
  • ஒழுகுகிற வீட்டில் ஒன்றுக்கு இருந்தால் வெள்ளத்தோடு வெள்ளம்.
  • ஒழுங்கா புடுச்சி ஒண்ணுக்கு அடிக்கத் தெரியாத பய
  • ஒழுங்கு ஒரு பணம்; சளுக்கு முக்காற் பணம்.
  • ஒழுங்கு கணக்கப்பிள்ளை; இடுப்பு இறக்கவில்லை.
  • ஒள்ளியர் தெள்ளியராயினும் ஊழ்வினை பைய நுழைந்து விடும்.
  • ஒளி இல்லா விட்டால் இருளையும் இருள் இல்லா விட்டால் ஒளியையும் காணலாம்.
  • ஒளிக்கத் தெரியாமல் விதானையார் வீட்டில் ஒளித்துக்கொண்டானாம்
  • ஒளிக்கப் போயும் இடம் இடைஞ்சலா?
  • ஒளிக்கப் போயும் தலையாரி வீட்டில் ஒளிந்தது போல்.
  • ஒளிக்கும் சேவகனுக்கு முகத்தில் ஏன் மீசை?
  • ஒளிகிற சேவகனுக்கு மீசை எதற்கு?
  • ஒற்றியும் சீதனமும் பற்றி ஆள வேண்டும்.
  • ஒற்றுமை இல்லாத குடி ஒருமிக்கக் கெடும்.
  • ஒற்றுமையே வலிமை.
  • ஒற்றை ஆளுக்கு விளையாட்டு இல்லை.
  • ஒற்றைக் காலில் நிற்கிறான்.
  • ஒற்றுமையே வலிமை.
  • ஒற்றை ஆளுக்கு விளையாட்டு இல்லை.
  • ஒற்றைக் காலில் நிற்கிறான்.
  • ஒன்றரைக் கண்ணன் ஓரைக் கண்ணனைப் பழித்தானாம்.
  • ஒன்றாம் குறைவு வண்ணான் கழுதைக்கு.
  • ஒன்றால் ஒன்று குறைவு இல்லை; முன்னாலே கட்டத் துணி இல்லை.
  • ஒன்றான தெய்வம் உறங்கிக் கிடக்கும் போது பிச்சைக்கு வந்த தெய்வம் ததியோதனத்துக்கு அழுகிறதாம்.
  • ஒன்றான தெய்வம் ஒதுங்கிக் கிடக்கச்சே, மூலை வீட்டுத் தெய்வம் குங்கிலியம் கேட்குமாம்.
  • ஒன்றான தெய்வம் ஒதுங்கிக் கிடக்க ஹனுமந்தராயனுக்குத் தெப்பத் திருநாளாம்.
  • ஒன்றான தெய்வம் ஒதுங்கி நிற்கிறதாம்; சுற்றுப்பட்ட தெய்வம் ததியோதனத்துக்கு அழுகிறதாம்.
  • ஒன்றான பிரபு உறங்கிக் கிடக்கையில் பிச்சைக்கு வந்தவன் ததியோதனத்துக்கு அழுகிறானாம்.
  • ஒன்று இருந்தால் இன்னொன்று இல்லை.
  • ஒன்று ஒன்றாய் நூறோ? ஒருமிக்க நூறோ?
  • ஒன்றுக்கு இரண்டாம் வாணிபம் இல்லை.
  • ஒன்றுக்கு இரண்டு: உபத்திரவத்துக்கு மூன்று
  • ஒன்றுக்குப் பத்து; உரைக்குப் பதினாறு.
  • ஒன்றுக்கும் அற்ற தங்காளுக்குக் களாக்காய்ப் புல்லாக்கு.
  • ஒன்றுக்கும் ஆகாத ஊர்ப்பறை.
  • ஒன்றுக்கும் ஆகாதவன் உபாத்தியாயன் ஆகட்டும்.
  • ஒன்றுக்கு வாங்கி எட்டுக்கு விற்றால் லாபம்.
  • ஒன்று கட்டி விதை; ஒன்று வெட்டி விதை.
  • ஒன்று குறைந்தது கார்த்திகை: ஒக்கப் பிறந்தது மார்கழி
  • ஒன்று செய்தாலும் உருப்படியாகச் செய்ய வேண்டும்.
  • ஒன்று தெரிந்தவனுக்கு எல்லாம் தெரியாது.
  • ஒன்று நினைக்க ஒன்று ஆயிற்று.
  • ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு.
  • ஒன்றும் அற்ற தங்காளுக்கு ஒன்பது நாள் சடங்கா?
  • ஒன்றும் அற்ற நாரிக்கு ஒன்பது நாள் சடங்கு; அதுவும் அற்ற நாரிக்கு ஐந்து நாள் சடங்கு
  • ஒன்றும் அறியாத கன்னி, அவளைப் பிடித்தது சனி.
  • ஒன்றும் அறியாளாம் கன்னி, ஓடிப் பிடித்ததாம் ஆறு மாத ஜன்னி(அவளைப் பிடித்ததாம்.)
  • ஒன்றும் இல்லாத தங்கைக்கு ஒன்பது நாள் சடங்காம்.
  • ஒன்றும் இல்லாததற்கு ஒரு பெண்ணையாவது பெற்றாளாம்.
  • ஒன்றும் இல்லாத தாசனுக்கு ஒன்றரைத் தோசை.
  • ஒன்றும் இல்லாவிட்டால் அத்தை மகள் இருக்கிறாள்.
  • ஒன்றும் இல்லை என்று ஊதினான்; அதுதானும் இல்லை என்று கொட்டினான்.
  • ஒன்றும் தெரியாத சின்னக் கண்ணு, பானை தின்னுவாள் பன்றிக் கறி.
  • ஒன்றும் தெரியாத பாப்பா, போட்டுக் கொண்டாளாம் தாழ்ப்பாள்.
  • ஒன்றும் தெரியாதவனுக்கு எதிலும் சந்தேகம் இல்லை.
  • ஒன்றே ஆயினும் நன்றாய் அறி.
  • ஒன்றே குதிரை; ஒருவனே ராவுத்தன்.
  • ஒன்றே குலமும்; ஒருவனே தேவனும்.
  • ஒன்றே செய்க, இன்றே செய்க, இன்னே செய்க.
  • ஒன்றே செயினும் நன்றே செய்.
  • ஒன்றே பிறப்பு, ஒன்றே சிறப்பு.
  • ஒன்றே ராசா, ஒன்றே குதிரை.
  • ஒன்றைத் தொடினும் நன்றைத் தொடு.
  • ஒன்றைப் பத்தாக்கு
  • ஒன்றைப் பத்தாகவும், பத்தை ஒன்றாகவும் சாதிக்கிறான்.
  • ஒன்றைப் பிடித்தால் உடனே சாதிக்க வேண்டும்.
  • ஒன்றைப் பெற்றால் நன்றே பெற வேண்டும்.
  • ஒன்றைப் பெற்றாலும் கடுகப் பெறு.
  • ஒன்றைப் பெற்றாலும் கன்றைப் பெறு.
  • ஒக்கச் சிரித்தார்க்கு வெட்கம் இல்லை. (சிரித்தால்.)
  • ஒக்கப் பிறந்த தங்கை ஓலமிட்டு அழுதாளாம்; ஒப்பாரி தங்கைக்குச் சிற்றாடையாம்.

[தொகு]

  • ஓ கெடுவானுக்கு வாழ்க்கைப்பட்டு ஒட்டமே ஒழிய நடை இல்லை(ஒ கெடுப்பானுக்கு, ஓ கொடுப்பானுக்கு.)
  • ஓங்கி அறைந்தால் ஏங்கி அழச் சீவன் இல்லை.
  • ஓங்கில் அறியும் உயர்கடலின் ஆழம்; பாங்கி அறிவாள் தன் பர்த்தாவின் வலிமை.
  • ஓங்கின கை நிற்காது.
  • ஓங்கின கோடரி நிற்காது.
  • ஓங்கு ஒன்று: அடி இரண்டு.
  • ஓசிக்கு அகப்பட்டால் எனக்கு ஒன்று; எங்கள் அண்ணனுக்கு ஒன்று
  • ஓசை காட்டிப் பூசை செய்.
  • ஓசை பெறும் வெண்கலம்; ஓசை பெறாது மண்கலம்.
  • ஓட்டத்துக்குப் பாக்குப் பிடிக்கிறான்.
  • ஓட்டம் உள்ளவரை ஆட்டமும் அதிகம்.
  • ஒட்டமும் ஆட்டமும் உடம்புக்கு நல்லது.
  • ஓட்டி ஓட்டி மிளகு அரைக்கப் பாட்டி வந்தாளாம்; பையனுக்குச் சோறு போடக் குட்டி வந்தாளாம்.
  • ஓட்டின சீமாள் ஓட்டினான்; பழமுள்ள காட்டில் ஓட்டினான்.
  • ஓட்டுகிறவன் சரியாய் இருந்தால் எருது மச்சான் முறை கொண்டாடாது
  • ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமி.
  • ஓட்டைக் குடத்திலும் சர்க்கரை நிற்கும்; கருப்பட்டியிலும் கல் இருக்கும்.
  • ஓட்டைக் குடத்திலேதான் சர்க்கரை இருக்கும்.
  • ஓட்டைக் கோயிலுக்குச் சர்க்கரை கசக்குமா?
  • ஓட்டைச் சங்கு ஊது பரியாது(சங்கால் ஊத முடியாது.)
  • ஓட்டைச் சட்டி ஆனாலும் கொழுக்கட்டை வெந்தால் சரி(வேக உதவும்.)
  • ஓட்டைத் தோண்டியும் அறுந்து போன தாம்புக் கயிறும் சரி(தோண்டிக்கு.)
  • ஓட்டை நாழிக்குப் பூண் கட்டுவது போல(கட்டி ஆவதென்ன?)
  • ஓட்டைப் பானைச் சர்க்கரை கசக்குமா?
  • ஓட்டைப் பானையில் உலையிட்டாற் போல்.
  • ஓட்டைப் பானையில் கொழுக்கட்டை வேகுமா?
  • ஓட்டைப் பானையில் சர்க்கரை இருக்கும்.
  • ஓட்டைப் பானையில் நண்டை விட்டாற் போல.
  • ஓட்டைப் பானையில் விட்ட தண்ணீர் போல,
  • ஓட்டை மணி ஆனாலும் ஓசை நீங்குமா?
  • ஓட்டை மதகிலே தண்ணீர் போனால் தோட்டிக்கு என்ன வாட்டம்?
  • ஓட்டை வீட்டிலே மூத்திரம் பெய்தால் ஒழுக்கோடு ஒழுக்கு.
  • ஓடக்காரனிடம் கோபித்துக் கொண்டு ஆற்றோடு போன மாதிரி.
  • ஓடம் கட்டின தூலம்.
  • ஓடம் கடந்தால் ஓடக்காரனுக்கு ஒரு சொட்டு.
  • ஓடம் கவிழ்த்த பிரமசாரியைப் போல.
  • ஓடம் வண்டியிலே; வண்டி ஓடத்திலே(வண்டி மேலே, ஓடத்து மேலே.)
  • ஓடம் விட்ட ஆற்றிலும் அடி சுடும்(ஆறும்.)
  • ஓடம் விட்ட ஆறே அடி சுடும் என்பது அறியாயா?
  • ஓடம் விட்ட இடம் அடி சுடும்; அடி சுட்ட இடத்தில் ஓடப்படும்.
  • ஓடம் விட்டு இறங்கினால் ஓடக்காரனுக்கு ஒரு சொட்டு,
  • ஓட மாட்டாதவன் திரும்பிப் பார்த்தானாம்.
  • ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறியே ஆக வேண்டும்.
  • ஓடவும் மாட்டேன்; பிடிக்கவும் மாட்டேன்.
  • ஓடவும் முடியவில்லை; ஒதுங்கவும் முடியவில்லை.
  • ஓடி ஆடி உள்ளங்காலும் வெளுத்தது.
  • ஓடி உழக்கு அரிசி சாப்பிடுவதைவிட உட்கார்ந்து ஆழாக்கு அரிசி சாப்பிடலாம்.
  • ஓடி ஒரு கோடி தேடுவதிலும் இருந்து ஒரு காசு தேடுவது நலம்.
  • ஓடி ஒன்பது பணம் சம்பாதிப்பதிலும் உட்கார்ந்து ஒரு பணம் சம்பாதிப்பது மேல்.
  • ஓடி ஓடி உடையவன் வீட்டில் ஒளிந்தாற் போல்.
  • ஓடி ஓடி உள்ளங்கால் வெளுத்தது.
  • ஓடி ஓடி நூறு குழி உழுவதைவிட அமர்ந்து அமர்ந்து ஆறு குழி உழுவதே நன்று
  • ஓடி ஓடிப் பறந்தாலும் ஓடக்காரன் தாமசம்.
  • ஓடி ஓடி வேலை செய்தாலும் நாய் உட்காரப் போவதில்லை.
  • ஓடிப் போகிறவன் பாடிப் போகிறான்.
  • ஓடிப் போன ஊரில் ஆதரித்தவன் கவுண்டன்.
  • ஓடிப் போன புருஷன் வந்து கூடிக் கொண்டானாம்; உடைமைமேல் உடைமை போட்டு மினுக்கிக் கொண்டாளாம்.
  • ஓடிப் போன முயல் எல்லாம் ஒரே முயல்.
  • ஓடிப் போன முயல் பெரிய முயல்.
  • ஓடிப் போனவனுக்கு ஒன்பதாம் இடத்தில் ராஜா; அகப்பட்டவனுக்கு அஷ்டமத்தில் சனி.
  • ஓடிப் போனால் உமிக்காந்தல்; உள்ளே வந்தால் செந்தணல்.
  • ஓடி மேய்ந்த சிறுக்கிக்கு ஒன்றியிருக்க மனம் வருமா?
  • ஓடியம் ஆகிலும் ஊடுருவக் கேள்.
  • ஓடிய முயல் பெரிய முயல் அல்லவோ?
  • ஓடியும் கிழவிக்குப் பிறகேயா?
  • ஓடி வந்து உமிக்காந்தலை மிதித்தாளாம்; திரும்பி வந்து தீக்காந்தலை மிதித்தாளாம்.
  • ஓடி வரும் பூனை; ஆடி வரும் ஆனை.
  • ஓடி வரும் போது தேடி வருமாம் பொருள்.
  • ஓடின மாட்டைத் தேடுவாரும் இல்லை; மேய்த்த கூலி கொடுப்பாரும் இல்லை.
  • ஓடினால் மூச்சு, நின்றால் போச்சு.
  • ஓடு இருக்கிறது, நான் இருக்கிறேன்.
  • ஓடுக ஊர் ஓடுமாறு.
  • ஓடுகள் விதையைக் கேடறக் காக்கும்.
  • ஓடுகாலிக்கு வீடு மரம்.
  • ஓடுகாலி வீடு மறந்தாள்.
  • ஓடுகிற ஆறு ஓடிக் கொண்டே இருக்குமா?
  • ஓடுகிற கழுதையை வாலைப் பிடித்தால் உடனே கொடுக்கும் உதை.
  • ஓடுகிற தண்ணீரை ஓங்கி அடித்தாலும் அது கூடுகிற பக்கம்தான் கூடும்.
  • ஓடுகிறது பஞ்சையாய் இருந்தாலும் சிமிட்டுவது இரண்டு முழம்.
  • ஓடுகிற நாய்க்கு ஒரு முழம் விட்டுக் கல் எறி.
  • ஓடுகிற நாயைக் கண்டால் துரத்துகிற நாய்க்கு எளிது.
  • ஓடுகிற நீரில் எழுதிய எழுத்தைப் போல.
  • ஓடுகிற பாம்புக்குக் கால் எண்ணுகிறவன் சாமர்த்தியசாலி
  • ஓடுகிற பாம்பைக் கையால் பிடிக்கிற பருவம்.
  • ஓடுகிற பாம்பைக் கையினால் பிடித்து உண்ணுகிற வாயில் மண்ணைப் போட்டுக் கொள்கிற காலம்.
  • ஓடுகிற பாம்பை மிதிக்கிற பருவம்.
  • ஓடுகிற மாட்டைக் கண்டால் துரத்துகிற மாட்டுக்கு எளிது.
  • ஓடுகிற மாடு விழுந்து விடும்.
  • ஓடுகிற முயலுக்கு ஒரு முழம் தள்ளி எறிய வேண்டும்.
  • ஓடுகிறவனைக் கண்டால் துரத்துகிறவனுக்கு எளிது.
  • ஓடுகிறவனை விரட்டுகிறது எளிது.
  • ஓடுகிற வெள்ளம் அணையில் நிற்குமா?
  • ஓடுபவனும் அம்மணம்; துரத்துகிறவனும் அம்மணம்.
  • ஓடும் இருக்கிறது: நாடும் இருக்கிறது.
  • ஓடும் நாயைக் கண்டால் குரைக்கும் நாய்க்கு இளக்காரம்
  • ஓணான் கடித்தால் ஒரு நாழிகையில் சாவு: அரணை கடித்தால் அரை நாழிகையில் சாவு.
  • ஓணான் தலை அசைத்தால் ஒன்பது கலம் நெல் மசியும்
  • ஓணான் விழுங்கிய கதை போல.
  • ஓணான் வேலிக்கு இழுக்கிறது; தவளை தண்ணீருக்கு இழுக்கிறது.
  • ஓணானுக்கு வேலி சாட்சி; வேலிக்கு ஓணான் சாட்சி.
  • ஓணானை அடித்தால் உழக்குப் புண்ணியம்.
  • ஓதப் பணம் இல்லை; உட்காரப் பாய் இல்லை; உனக்கு என்ன வாய்?
  • ஓதாதார்க்கு இல்லை உணர்வொடு ஒழுக்கம்.
  • ஓதின மஞ்சள் உறியிலே இருக்கும் போது வேதனை என்ன செய்யும்?
  • ஓதும் வேதம் பேதம் அகற்றும்.
  • ஓதுவார் எல்லாம் உழுவார் தலைக்கடையில்.
  • ஓதுவார்க்கு உதவு.
  • ஓதுவானுக்கு ஊரும் உழுவானுக்கு நிலமும் இல்லையா?
  • ஓந்தி வேலிக்கு இழுக்கிறது; தவளை தண்ணீருக்கு இழுக்கிறது.
  • ஓநாய்க்கு அதிகாரம் வந்தால் கிடைக்கு இரண்டு ஆடு கேட்கும்.
  • ஓம் என்ற தோஷம் வயிற்றில் அடைத்தது.
  • ஓம பிண்டத்தை நாய் இச்சித்தாற் போல்.
  • ஓமல் இட்ட பண்டம் உள்ளே வந்து சேரவில்லை.
  • ஓமலுக்குப் பிள்ளை அன்றி உறுதிக்குப் பிள்ளை இல்லை.
  • ஓய்ச்சலும் இல்லை; ஒழிவும் இல்லை.
  • ஓய்ந்ததடி பனங்காடு; உட்கார்ந்தாளடி சாணாத்தி.
  • ஓய்ந்ததாம் பானை; உட்கார்ந்தாளாம் சாணாத்தி.
  • ஓய்ந்த முழுக்கு ஒரே முழுக்கு.
  • ஓய்ந்த வேளையில் அவிசாரி ஆடினால் உப்புப் புளிக்கு ஆகும்.
  • ஓய்வு இலா நேசமே, ஓலமே சரணம்.
  • ஓயாக் கவலை தீரா வியாதி.
  • ஓயாது சிரிப்பவள் உன்னையே கெடுப்பாள்
  • ஓயாமல் அழு, நோவாமல் அடிக்கிறேன் என்ற கதை.
  • ஓயா மழையும் ஒழியாக் காற்றும்.
  • ஓர் ஆடு நீர் விட்டால் எல்லா ஆடும் நீர் விடும்.
  • ஓர் ஆடு மேய்த்தவனே என்றாலும் அதுவும் கெட்டவனே என்றானாம்.
  • ஓர் ஆண்டி பசித்திருக்க உலகமெல்லாம் கிறுகிறு என்று சுழலுகிறது.
  • ஓர் ஆறு தாண்டமாட்டாதவன் ஒன்பது ஆறு தாண்டுவானா?
  • ஓர் உறையில் இரண்டு கத்தியா?
  • ஓர் ஊர் நடப்பு: ஓரூர் பழிப்பு.
  • ஓர் ஊர்ப் பேச்சு ஓரூருக்கு ஏச்சு.
  • ஓர் ஊருக்கு ஒரு பேர் இட்டுக் கொள்ளலாமா?
  • ஓர் ஊருக்கு ஒரு வழியா?
  • ஓர் எருமை, ஒரு முருங்கமரம், கால் காணி இருந்தால் பஞ்சம் போகும்.
  • ஓர் ஏர்க்காரன் உழுது கெட்டான்; நாலு ஏர்க்காரன் நிறுத்திக் கெட்டான், பத்து ஏர்க்காரன் பார்த்துக் கெட்டான்.
  • ஓர் ஏரை விரைவில் மறி.
  • ஓர்ப்படியாள் பிள்ளை பெற்றாள் என்று ஒக்கப் பிள்ளை பெறலாமா?
  • ஓரக் கண்ணனைப் பழிக்கிறான் ஒன்றரைக் கண்ணன்.
  • ஓரக் கண்ணும் காகக் கண்ணும் ஆகா.
  • ஓரண்டைக் காடும் காடு அல்ல; ஓரேர் உழவு உழவும் அல்ல.
  • ஓரம் சொன்னவன் ஆருக்கும் ஆகான்.
  • ஓரம் வெளுத்து ஒரு பக்கம் செல் அரிக்க.
  • ஓராம் கண்ணியா, ஒருத்தன் ஆள?
  • ஓலை டப்பாசு உதறிக் கடாசு.
  • ஓலைப் பாயில் நாய் மோண்டாற்போல.
  • ஓலைப் பாயில் பேண்ட நாயைப்போல ஏன் சள சள என்கிறாய்?

ஒள[தொகு]

  • ஒளவை சொல்லுக்கு அச்சம் இல்லை.

[தொகு]

  • கக்கரிக்குப் பந்தல், கத்தரிக்குக் கொத்து
  • கக்கித் தின்னும் குக்கல்
  • கக்கின பிள்ளை தக்கும்
  • கங்கணம் கட்டிக் கொள்ளுதல்
  • கங்கா ஸ்நானம், துங்கா பானம்
  • கங்கை ஆடப் போன கடாவைக் கட்டி உழுதானாம்.
  • கங்கை ஆடப் போனவன் கடாவைக் கட்டி அழுதானாம்
  • கங்கை ஆடி மங்கை பார்
  • கங்கைக் கரையில் காராம் பசுவைக் கொன்ற பாவத்தில் போவேனாக
  • கங்கைக்கு நிகரான நதியும் இல்லை; காசிக்கு நிகரான பதியும் இல்லை
  • கங்கைக்குப் போன கடாவைப் போல
  • கங்கைக்குப் போனாலும் கர்மம் தொலையாது
  • கங்கையில் ஆடினாலும் கணமும் விடாமல் செய்த பாவம் தீராது
  • கங்கையில் ஆடினாலும் கர்மம் தொலையாது
  • கங்கையில் ஆடினாலும் பாவம் தீராது
  • கங்கையில் நீராடுபவன் குட்டையில் முழுக வேணுமோ?
  • கங்கையில் படர்ந்தாலும் பேய்ச் சுரைக்காய் நல்ல சுரைக்காய் ஆகாது
  • கங்கையில் பிறந்த நத்தை சாளக்கிராமம் ஆகாது
  • கங்கையில் முழுகினாலும் கடன்காரன் விடான்
  • கங்கையில் முழுகினாலும் பாவம் போகாது
  • கங்கையில் முளைத்தாலும் பேய்ச் சுரைக்காய் நல்ல சுரைக்காய் ஆகாது
  • கங்கையில் மூழ்கினாலும் கறுப்புக் காக்கை வெள்ளை ஆகுமா?
  • கங்கையில் மூழ்கினாலும் காக்கை அன்னம் ஆகுமா?
  • கச்ச நிலமானாலும் கை சேர்க்கை
  • கச்சல் கருவாடு மோட்சத்துக்குப் போனாலும் பிச்சைக்காரன் மோட்சத்துக்குப் போக மாட்டான்
  • கச்சான் பெண்களுக்கு மச்சான்
  • கச்சினம் குளப்பாடு கண்டவர்க்கெல்லாம் சாப்பாடு
  • கச்சேரிக்கு முன்னே போகாதே; கழுதைக்குப் பின்னே போகாதே
  • கசக்கி மோந்து பார்க்கலாமா?
  • கசடறக் கல்லார்க்கு இசை உறல் இல்லை
  • கசடருக்கு இல்லை கற்றோர் உறவு
  • கசடருக்கு யோகம் வந்தால் கண்ணும் மண்ணும் தெரியாது; காதும் கேளாது
  • கசடான கல்வியிலும் கல்வியீனம் நலம்
  • கசடு அறக் கல்லார்க்கு இசை உறல் இல்லை
  • கசந்தாலும் பாகற்காய்; காறினாலும் கருணைக் கிழங்கு
  • கசந்து வந்தவன் கண்ணைத் துடை
  • கசாப்புக் கடைக்காரன் தர்ம சாஸ்திரம் பேசுவது போல
  • கசாப்புக் கடைக்காரனைக் கண்ட நாய் போல
  • கசாப்புக் கடையில் ஈ மொய்த்தது போல
  • கசாப்புக் கடையை நாய் காத்த மாதிரி
  • கஞ்சனுக்குக் காசு பெரிது கம்மாளனுக்கு மானம் பெரிது
  • கஞ்சனுக்குக் கொள்ளை பஞ்சம் இல்லை
  • கஞ்சி ஊற்ற ஆள் இல்லை என்றாலும் கச்சை கட்ட ஆள் உண்டு
  • கஞ்சிக் கவலை, கடன்காரர் தொல்லை சொல்லத் தொலையுமோ?
  • கஞ்சிக்குக் காணம் கொண்டாட்டம்
  • கஞ்சிக்குப் பயறு போட்டாற் போல
  • கஞ்சிக்கு லாட்டரி, கைக்குப் பாட்டரியா?
  • கஞ்சி கண்ட இடம் கைலாசம்; சோறு கண்ட இடம் சொர்க்கம்
  • கஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி, காசி விசாலாட்சி
  • கஞ்சி குடித்தாலும் கடன் இல்லாமல் குடிக்க வேணும்
  • கஞ்சித் தண்ணீருக்குக் காற்றாய்ப் பறக்கிறான்
  • கஞ்சியைக் காலில் கொட்டிக் கொள்ளும் அவசரம்
  • கஞ்சி வரதப்பா என்றால் எங்கே வரதப்பா என்றானாம்
  • கஞ்சி வார்க்க ஆள் இல்லாமல் போனாலும் கச்சை கட்ட ஆள் இருக்கிறது
  • கட்கத்தில் நிமிண்டுகிற கை நமன் கை
  • கட்கத்தில் வைப்பார்; கருத்தில் வையார்
  • கட்டக் கருகுமணி இல்லாமற் போனாலும் பேர் என்னவோ பொன்னம்மாள்
  • கட்டச் சங்கிலி வாங்கியாகிவிட்டது; ஆனைதான் பாக்கி
  • கட்டத் துணி இல்லை; கூத்தியார் இரண்டு பேர்
  • கட்டத் துணியும் இல்லை; நக்கத் தவிடும் இல்லை
  • கட்டப்பாரை பறக்கச்சே எச்சிற்கலை எனக்கு என்னகதி என்கிறதாம்
  • கட்டப்பாறையை விழுங்கிவிட்டுச் சுக்குக் கஷாயம் குடிப்பதா?
  • கட்டப்பாலை முற்றப் பழுக்குமோ?
  • கட்டாணித் தனமாய்க் கல்யாணம் செய்தான்
  • கட்டாந்தரை அட்டை போல
  • கட்டாந்தரை அட்டை போலக் கட்டிக்கொண்டு புரளுகிறதா?
  • கட்டாந்தரையில் தேள் கொட்டக் குட்டிச்சுவரில் நெறி கட்டினதாம்
  • கட்டாந்தரையில் முக்குளிக்கிறது
  • கட்டி அடித்தால் என்ன? விட்டு அடித்தால் என்ன?
  • கட்டி அழுகிற போது கையும் துழாவுகிறதே!
  • கட்டி அழுகையிலே. என்மகளே, உனக்குப் பெட்டியிலே கை என்ன?
  • கட்டி இடமானால் வெட்டி அரசாளலாம்
  • கட்டிக் கறக்கிற மாட்டைக் கட்டிக் கறக்க வேண்டும்; கொட்டிக்கறக்கிற மாட்டைக் கொட்டிக் கறக்க வேண்டும்
  • கட்டிக் கிடந்தால்தான் உள் காய்ச்சல் தெரியும்
  • கட்டிக் கொடுத்த சோறும் கற்றுக் கொடுத்த வார்த்தையும் எவ்வளவு நாளைக்கு?
  • கட்டிடம் கட்டச் சங்கீதம் பாடு
  • கட்டிடம் கட்டியவன் முட்டாள்; வாழுகிறவன் சமர்த்தன்
  • கட்டித் தங்கம் ஆனால் கலீர் என்று ஒலிக்குமா?
  • கட்டிப்படுத்தால் அல்லவோ உட்காய்ச்சல் தெரியும்?
  • கட்டிப் பீ எல்லாம் கூழ்ப் பீயாய்க் கரைந்தது
  • கட்டிப் பீ எல்லாம் தண்ணீர்ப்பீ ஆச்சுது
  • கட்டிமகள் பேச்சு, கல்லுக்குக்கல் அண்டை கொடுத்தது போல்
  • கட்டிய கட்டிலிருந்து கின்னரி வாசிக்கிறது போல
  • கட்டில் உள்ள இடத்தில் பிள்ளை பெற்று சுக்குக் கண்ட இடத்தில் காயம் தின்பாள்
  • கட்டிலின்மேல் ஏறியும் முறைபார்க்கிறது உண்டா?
  • கட்டிலைத் திருப்பிப் போட்டால் தலைவலி போகுமா?
  • கட்டி வழி விட்டால் வெட்டி அரசாளலாம்
  • கட்டி விதை, வெட்டி விதை. கட்டி வைத்த பணத்தைத் தட்டிப் பறித்தாற் போல
  • கட்டி வைத்த பூனையை அவிழ்த்துவிட்டு, வாபூஸ் வாபூஸ் என்றால் வருமா?
  • கட்டிவைத்த முதல் அழியக் கச்சவடம் பண்ணாதே
  • கட்டின கோவணத்தைக் காற்றில் விட்டவன்
  • கட்டின பசுப் போல்
  • கட்டின பொண்டாட்டி இருக்கக் காத்தாயியைக் கண் அடித்தானாம்
  • கட்டின பொண்டாட்டி பட்டி மாடு மாதிரி
  • கட்டின பொண்டாட்டியையும் உடுத்தின துணியையும் நம்பாதவன்
  • கட்டின மாட்டை அவிழ்ப்பாரும் இல்லை; மேய்த்த கூலியைக் கொடுப்பாரும் இல்லை
  • கட்டினவனுக்கு ஒரு வீடு; கட்டாதவனுக்கு ஆயிரம் வீடு
  • கட்டினவனுக்கு ஒரு வீடு; கட்டாதவனுக்கு ஊரெல்லாம் வீடு
  • கட்டின விதை வெட்டின விதை.
  • கட்டின வீட்டுக்கு எட்டு வக்கணை.
  • கட்டின வீட்டுக்குக் கருத்துக் கருத்துச் சொல்லுவார்.
  • கட்டின வீட்டுக்குப் பணிக்கை சொல்லாதவர் இல்லை.
  • கட்டின வீட்டுக்குப் பழுது சொல்வது எளிது.
  • கட்டினது கட்டாயத்தாலி ஆனாலும் கல்யாணம் கல்யாணம்தான்.
  • கட்டினான் தாலி; காட்டினான் கோலம்.
  • கட்டு அறிந்த நாயும் அல்ல; கனம் அறிந்த கப்பரையும் அல்ல.
  • கட்டுக் கட்டு விளக்குமாறு கப்பலிலே வருகிறது என்றால் ஒரு காசு விளக்குமாறு இரண்டு காசு.
  • கட்டுக் கலம் காணும்; கதிர் உழக்கு நெல் காணும்.
  • கட்டுக் காடை இடமானால் குட்டிச் சுவரும் பொன் ஆகும்.
  • கட்டுக்கு அடங்காக் காளை போல.
  • கட்டுக்கு அடங்காப் பிடாரியைப் போல,
  • கட்டுக்குக் கட்டு மாற்றிக் கட்ட வேண்டும்.
  • கட்டுக் குலைந்தால் கனம் குலையும்.
  • கட்டுச் சோற்று மூட்டையில் எலியை வைத்துக் கட்டினது போல.
  • கட்டுச் சோற்று மூட்டையில் பெருச்சாளியை வைத்துக் கட்டின மாதிரி.
  • கட்டுச் சோற்று மூட்டையையும் கைக்குழந்தையையும் எடுக்கல் ஆகாது.
  • கட்டுச் சோறு எத்தனை நாளைக்கு?
  • கட்டுத் தறியை விட்டு மேய்ச்சற் காட்டில் பிடிப்பது.
  • கட்டுத் துறை சரியாக இருந்தால் கன்றுக்குட்டி துள்ளி விளையாடும்.
  • கட்டுப் பட்டாலும் கவரிமான் மயிரால் கட்டுப்பட வேண்டும்; குட்டுப்பட்டாலும் மோதிரக் கையால் குட்டுப்பட வேண்டும்.
  • கட்டுப் படாத பெண் சொட்டுக் கொண்டு போயிற்று.
  • கட்டுப் பானை ஊற்று எட்டு நாளைக்கே.
  • கட்டு மரத்தைச் சென்னாக்குனி அரிக்கிறது போல.
  • கட்டுருட்டிக் காளை போல.
  • கட்டெறும்பு இட்டலியைத் தூக்கினது போல.
  • கட்டை இருக்கிற மட்டும் கஷ்டம் உண்டு.
  • கட்டைக் கலப்பையும் மொட்டைக் காளையும் காணிக்கு உதவாது.
  • கட்டைக்குப் போகும் போது காலாழி பீலாழியா?
  • கட்டைக் கோணல் அடுப்பில் நிமிர்ந்தது.
  • கட்டை கிடக்கிற கிடையைப் பார்;கழுதை குதிக்கிற குதியைப் பார்.
  • கட்டை போனால் அடுப்போடு.
  • கட்டை போனால் வெட்டை.
  • கட்டையிலே வைக்க.
  • கட்டையைச் சுட்டால் கரி ஆகுமா? மயிரைச் சுட்டால் கரி ஆகுமா?
  • கட்டை விளக்கு மாற்றுக்குப் பட்டுக் குஞ்சலம் கட்டினாற் போல.
  • கட்டோடே போனால் கனத்தோடே வரலாம்
  • கடகச் சந்திர மழை கல்லையும் துளைக்கும்.
  • கடந்த நாள் கருதினால் வருமா?
  • கடந்தவர்க்குச் சாதி இல்லை.
  • கடந்து போன காலம் கதறினாலும் வராது.
  • கடந்து போனது கரணம் போட்டாலும் வராது.
  • கடப்பாரையை விழுங்கிவிட்டுச் சுக்குக் கஷாயம் குடிக்கலாமா?
  • கடல் உப்பும் மலை நாரத்தங்காயும் போலே.
  • கடல் உப்பையும் மலை நெல்லையும் கலந்தாற் போல.
  • கடல் கொதித்தால் விளாவ நீர் எங்கே?
  • கடல் தண்ணீர் வற்றினாலும் பள்ளிச்சி தாலி வற்றாது.
  • கடல் தாண்ட மனம் உண்டு; கால்வாய் தாண்டக் கால் இல்லை.
  • கடல் திடல் ஆகும்; திடல் கடல் ஆகும்.
  • கடல் நீர் நிறைந்து ஆவதென்ன? காஞ்சிரை பழுத்து ஆவதென்ன?
  • கடல் பாதி, கடம்பாக்குளம் பாதி.
  • கடல் பெருகினால் கரை ஏது?
  • கடல் பெருகினால் கரையும் பெருகுமா?
  • கடல் போயும் ஒன்று இரண்டாம் வாணிகம் இல்.
  • கடல் மடை திறந்தது போல.
  • கடல் மணலை எண்ணக் கூடுமா?
  • கடல் மீனுக்கு நீச்சம் பழக்க வேணுமா?
  • கடல் மீனுக்கு நுளையன் இட்டதே பேர்.
  • கடல் முழுவதும் கவிழ்ந்து குடிக்கலாமா?
  • கடல் வற்றினால் கருவாடு தின்னலாம் என்று உடல் வற்றிச் செத்ததாம் கொக்கு.
  • கடலில் அகப்பட்ட மரத்துண்டு போல.
  • கடலில் அலையும் துரும்பு போல.
  • கடலில் இருக்கும் கள்ளியைக் கொள்.
  • கடலில் ஏற்றம் போட்ட கதை.
  • கடலில் கரைத்த புளி போல.
  • கடலில் கரைத்த பெருங்காயம் போல.
  • கடலில் கிடக்கும் துரும்புகளை அலைகளோடு தூக்கித் தரையில் தள்ளுகிறது போல.
  • கடலில் கையைக் கழுவி விடுகிறதா?
  • கடலில் துரும்பு கிடந்தாலும் கிடக்கும்; மனசிலே ஒரு சொல் கிடவாது.
  • கடலில் பிறக்கும் உப்புக்கும் மலையில் விளையும் நாரத்தங்காய்க்கும் தொந்தம்.
  • கடலில் பெருங்காயம் கரைத்தது போல.
  • கடலில் போட்டு விட்டுச் சாக்கடையில் தேடுகிறதா?
  • கடலில் மூழ்கிப் போனாலும் கடனில் மூழ்கிப் போகாதே
  • கடலிலும் பாதி கடம்பாக்குளம்.
  • கடலின் ஆழத்தை அளந்தாலும் மனசின் ஆழத்தை அளக்க முடியாது.
  • கடலினுள் நா வற்றினது போல.
  • கடலுக்குக் கரை போடுவார் உண்டா?
  • கடலை அடைக்கக் கரை போடலாமா?
  • கடலைக்காய்ப் பானையிலே கையை விட்டாற்போல.
  • கடலைத் தாண்ட ஆசை உண்டு; கால்வாயைத் தாண்டக் கால் இல்லை.
  • கடலைத் தாண்டினவனுக்கு வாய்க்கால் தாண்டுகிறது அரிதா?
  • கடலைத் தூர்த்தாலும் காரியம் முடியாது.
  • கடலைத் தூர்த்தும் காரியத்தை முடிக்க வேண்டும்.
  • கடலை விதைத்தால் கடுத்த உரம்.
  • கடலை விதைப்பது கரிசல் நிலத்தில்
  • கடவுள் இருக்கிறார்.
  • கடவுள் சித்தத்துக்கு அளவேது?
  • கடவுளுக்குத்தான் வெளிச்சம்.
  • கடவுளை நம்பினோர் கைவிடப் படார்.
  • கடற்கரைத் தாழங்காய் கீழே தொங்கி என்ன? மேலே தொங்கி என்ன?
  • கடற்கரையில் தாழங்காய் அக்கரையில் கிடந்தால் என்ன? இக்கரையில் கிடந்தால் என்ன?
  • கடன் ஆச்சு; உடன் ஆச்சு; வீட்டு மேலே சீட்டு ஆச்சு; அடித்து விடடா தேவடியாள் தெருவிலே பல்லக்கை.
  • கடன் இல்லாத கஞ்சி கால் வயிறு போதும்.
  • கடன் இல்லாத சோறு கால் வயிறு போதும்.
  • கடன் இல்லாவிட்டால் காற்றுப் போல.
  • கடன் இழவுக்கு அழுகிறாய்.
  • கடன்காரனுக்குக் கடனும் உடன்பிறந்தானுக்குப் பங்கும் கொடுக்க வேண்டும்.
  • கடன்காரனுக்குக் கடனும் பழிகாரனுக்குப் பழியும் கொடுத்துத் தீர வேணும்
  • கடன்காரனுக்கு மயிரும் எமனுக்கு உயிரும்.
  • கடன்காரனை வைத்த கழு உண்டா?
  • கடன், காலச் சனியன்.
  • கடன் கேட்காமல் கெட்டது; வழி நடக்காமல் கெட்டது,
  • கடன் கொடுத்துப் பொல்லாப்பு அடைவதைவிடக் கடன் கொடுக்காமல் பொல்லாப்பு அடையலாம்.
  • கடன் கொண்டார் நெஞ்சம் போலக் கலங்கினான் இலங்கை வேந்தன்.(தனிப்பாடல்.)
  • கடன் கொண்டும் செய்வன செய்.
  • கடன் கொண்டும் செய்வார் கடன்.
  • கடன் சிறிது ஆனாலும் கடமை பெரிது.
  • கடன் நெஞ்சைக் கலக்கும்.
  • கடன் பட்ட சோறு கால் வயிறு நிரம்பாது.
  • கடன் பட்டவன் சோறு காற் சோறு.
  • கடன் பட்டார் நெஞ்சம் போல.
  • கடன் பட்டாயோ, கடை கெட்டாயோ?
  • கடன் பட்டு உடன் பட்டு அம்மை கும்பிட, நீயார் கூத்தி கும்பிட
  • கடன் பட்டு உடன் பட்டு உடம்பைத் தேற்று மகனே கடன்காரன் வந்தால் தடியைத் தூக்கு மகனே!
  • கடன் பட்டும் பட்டினியா?
  • கடன் படுகிறவன் எப்போதும் சஞ்சலப் படுகிறவனே.
  • கடன் வாங்கி உடன் வாங்கிச் சாமி கும்பிட, நீயாரடா கூத்திமகன் விழுந்து கும்பிட?
  • கடன் வாங்கிக் கடன் கொடாதவனும் கெட்டான்; வட்டியிலே சாப்பிடாதவனும் கெட்டான்.*
  • கடன் வாங்கிக் கடன் கொடுத்தவனும் கெட்டான்; மரம் ஏறிக் கை விட்டவனும் கெட்டான்.
  • கடன் வாங்கிச் செலவு செய்தவனும் மரம் ஏறிக் கைவிட்டவனும் சரி.
  • கடன் வாங்கித் தின்றவன் கடைத்தேற மாட்டான்.
  • கடன் வாங்கிப் பயிர் இட்டவனும் மரம் ஏறிக் கைவிட்டவனும் ஒன்று.
  • கடன் வாங்கியும் கல்யாணம் செய்
  • கடன் வாங்கியும் பட்டினி; கல்யாணம் ஆகியும் பிரமசாரி.
  • கடன் வாங்கினவன் மடியில் கல நெருப்பு.
  • கடன் வாங்குகிறபோது இனிப்பு; கடன் கொடுக்கிறதென்றால் கசப்பு.
  • கடன் வாங்குகிறவன் கடைத்தேற மாட்டான்.
  • கடனாகக் கிடைக்கிறதானாலும் ஆனையை வாங்கிக் கட்டிக் கொள்வதா?
  • கடனா உடனா வாங்கிக் காரியத்தை முடி.
  • கடனோடு கடன் ஆகிறது; அண்டை வீட்டில் மேல் சீட்டு ஆகிறது; பிள்ளைக்குக் கல்யாணம் பண்ணு.
  • கடனோடு கடன் கந்தப் பொடி காற்பணம்.
  • கடனோடே கடன்; உடனோடே உடன்.
  • கடன் ஆனாலும் உழக்குப் பால் கறக்காதா என்கிறான்
  • கடா இடுக்கில் புல் தின்கிறது போல.
  • கடா கடா என்றால் கால் ஆழாக்குப் பீச்சு என்கிறாயே!
  • கடா கடா என்றால் உழக்குப் பால் என்று கேட்கிறாயே!
  • கடா கடா என்றால் கன்றுக்கு உழக்குப் பாலா என்கிறான்.
  • கடா கடா என்றால் மருந்துக்கு ஒரு பீர் என்கிறான்.
  • கடா மேய்க்கிறவன் அறிவானோ, கொழுப் போன இடம்?
  • கடாரங் கொண்டான் கிணற்றில் கல்லைப் போட்டது போல.
  • கடாவின் சந்தில் புல்லைத் தின்னுகிறது போல
  • கடாவும் கடாவும் சண்டை போடுகிறபோது உண்ணி நசுங்கினாற்போல
  • கடிக்க ஓர் எலும்பும் இல்லை
  • கடிக்க மாட்டாத பாக்கு உத்தம தானம்
  • கடிக்க வந்த நாய்க்குத் தேங்காய்க் கீற்றுப் போட்டாற் போல
  • கடிக்கிற நாகம் கலந்து உறவாகுமா?
  • கடிக்கிற நாய்க்குக் கழுத்திற் குறுங்கயிறு
  • கடிக்கிற பாம்பை நல்ல பாம்பு என்ற கதை
  • கடிகோலிலே கட்டின நாய்
  • கடித்த நாய்க்குக் காடியைக் கொடு
  • கடித்த நாயைக் கொன்றாலும் பயன் உண்டாகாது
  • கடித்த நாயை வெறி நாய் என்பது போல
  • கடித்த நாயைப் பைத்தியம் கொண்டது என்பார்கள்
  • கடித்த பாக்குக் கொடாத சிற்றன்னை கடற்கரை மட்டும் வழியனுப்பினாளாம்
  • கடித்த பாக்கும் கொடாத சிற்றப்பன் கடைத்தெரு வரையில் வழி விட்டானாம்
  • கடித்த பாம்புக்குப் பால் வார்த்தால் அது விஷத்தைத்தான் தரும்
  • கடித்த பாம்புக்குப் பால் வார்த்தால் கடித்தே தீரும்
  • கடித்த மூட்டை, கடியாத மூட்டை, எல்லா மூட்டையும் சரிதான்
  • கடித்த மூட்டையும் சரி, கடியாத மூட்டையும் சரி
  • கடித்த வாய் துடைத்தாற் போல
  • கடித்தால் நாய்; மிதிபட்டால் வாய் இல்லா ஜந்து
  • கடித்தாலும் கடிக்கட்டும்; நீ சொல்லாதிரு
  • கடித்த பாக்குக் கொடுக்காத சிற்றப்பன் கடைத்தெரு வரையில் வழித்துக் கொண்டு வழிவிடுவான்
  • கடிதான சொல் அடியிலும் வலிது
  • கடிதான பிள்ளை பெற்றோருக்கு உதவுமா?
  • கடிந்த சொல்லினும் கனிந்த சொல்லே நன்மை
  • கடி நாய் எலும்புக்குப் பறந்தாற் போல
  • கடிப்பதற்கு ஓர் எலும்பும் இல்லை; காதில் மினுக்க ஓலையும் இல்லை
  • கடிய மாட்டுக்குக் கம்பு உடையும், கொடிய மாட்டுக்குக் கொம்பு உடையும்
  • கடியாத மூட்டை என்று விட்டு விடுவார்களா?
  • கடியும் சுருக்குத்தான்; அடியும் சுருக்குத்தான்
  • கடிவாளம் இல்லாத குதிரை போல
  • கடுக்கன் இட்ட நேற்றுக்குள் காது அறுந்த சுருக்கு
  • கடுக்கன் ஜோடியும் காளைமாட்டு ஜோடியும் அமைவது கடினம்
  • கடுக்காய்க்கு அகணி நஞ்சு: சுக்கிற்குப் புறணி நஞ்சு
  • கடுகத்தனை நெருப்பானாலும் போரைக் கொளுத்திவிடும்
  • கடுகிலும் கால் திட்டம் கரண்டி; அதிலும் கால் முட்டை எண்ணெய் கடன் வாங்கி என் தலை சீவிக் கட்டி, மகள் தலை வாரிக் கட்டி, மருமகன் தலை கோதிக் கட்டி, குறை எண்ணெய் வைத்த இடத்தில் அயல் வீட்டுக்காரி வந்து இடறி விட்டாள் ; அது ஏரி பெருகினாற் போலப் போயிற்று
  • கடுகிற்று, முடுகிற்று, வடுகச்சி கல்யாணம்
  • கடுகு அத்தனை நெருப்பு ஆனாலும் போரைக் கொளுத்தி விடும்
  • கடுகு அளவும் களவுதான்; கர்ப்பூரக் களவும் களவுதான்
  • கடுகு சிந்தினால் கலகம் வரும்
  • கடுகு சிறுத்தாலும் காரம் போகுமா?
  • கடுகு செத்தாலும் கறுப்புப் போகாது
  • கடுகு செத்தும் காரம் போகாது
  • கடுகு போகிற இடத்தில் தடி எடுத்துக் கொண்டு திரிவான்; பூசணிக்காய் போவது தெரியாது
  • கடுகு போன இடம் ஆராய்வார், பூசுணைக்காய் போன இடம் தெரியாது
  • கடுகு மலை ஆச்சு; மலை கடுகு ஆச்சு
  • கடுகைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டினது போல
  • கடுங்காற்று மழை கூட்டும் கடுஞ் சிநேகம் பகை கூட்டும்
  • கடுஞ் சிநேகிதம் கண்ணுக்குப் பொல்லாதது
  • கடுஞ் சொல் தயவைக் கெடுக்கும்
  • கடு நட்பும் பகை விளைப்பு
  • கடும் காற்று மழை காட்டும்; கடு நட்புப் பகை காட்டும்
  • கடும் கோபம் கண்ணைக் கெடுக்கும். கடும் சிநேகம் கண்ணைக் கெடுக்கும்
  • கடும் செட்டுக் கண்ணைக் கெடுக்கும்
  • கடும் செட்டுக் காரியக் கேடாம்
  • கடும் செட்டுத் தயவைக் கெடுக்கும்
  • கடும் சொல் கேட்டால் காதுக்குக் கொப்புளம்
  • கடும் பசி கல்மதில் உடைத்தும் களவு செய்யச் சொல்லும்
  • கடும் போரில் கைவிடலாமா?
  • கடு முடுக்கடா சேவகா, கம்பரிசியடா சம்பளம்
  • கடுவெளியைக் கானல் ஜலமாய்க் கண்டது போல
  • கடை அரிசி கஞ்சிக்கு உதவுமா?
  • கடை ஓடித் தாவும் நிலத்துக்குக் கரையடி மேட்டு நிலம் எளிது
  • கடைக்குக் கடை ஆதாயம்
  • கடைக்குக் கடை ஆள் இருப்பார்கள்
  • கடைக்குக் கடை ஆள் தாவியென
  • கடைக்குட்டி கட்டி மாம்பழம்
  • கடைக்குப் போகக் கண்ணிக்குப் போக
  • கடை காத்தவனும் காடு காத்தவனும் பலன் அடைவார்
  • கடை கெட்ட நாய் கல்யாணத்துக்குப் போனதாம்; எச்சில் இலை கிடைக்காமல் எட்டி எட்டிப் பார்த்ததாம்
  • கடை கெட்ட மூளிக்குக் கோபம் கொண்டாட்டம்
  • கடை கெட்ட மூளி சூல் ஆனாலும் காற்பணத்துக் காசு செல்லும்
  • கடை கெட்ட வாழ்வு, தலை கட்ட நேரம் இல்லை
  • கடைச் சோற்றுக்கு மோரும் கால் மாட்டுக்கு அணையும்
  • கடைசிச் சோற்றுக்கு மோரும் கால் மாட்டிற்குப் பாயும் வேண்டும்
  • கடைசிப் பிடி கட்டி மாம்பழம்
  • கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைத்தானாம்
  • கடைத் தேங்காயை எடுத்து விநாயக பூஜை செய்த கதை
  • கடைந்த மோரிலே குடைந்து வெண்ணெய் எடுப்பாள்
  • கடைப் பிறப்பு கழுதைப் பிறப்பு
  • கடையச்சே வாராத வெண்ணெய் குடையச்சே வரப் போகிறதா?
  • கடையில் அரிசி கஞ்சிக்கு உதவுமா? அண்டை வீட்டுக்காரி புருஷன் ஆபத்துக்கு உதவுவானா?
  • கடையில் அரிசி கஞ்சிக்கு உதவுமா? அவிசாரி புருஷன் ஆபத்துக்கு உதவுவானா?
  • கடையில் இருக்கும் கன்னியைக் கொள்
  • கடையில் வந்ததும் அரிசியோ? நடையில் வெந்ததும் சாதமோ?
  • கடையிலே கட்டித் தூக்கினாலும் அழுகற் பூசணிக்காய் அழுகலே
  • கடையிலே கொண்டு மனையிலே வைக்கிறான்
  • கடையிலே தேளைக் கண்டு கை அசக்கினால் நிற்குமா?
  • கடையும் போது வராத வெண்ணெய் குடையும் போது திரண்டு விடுமா?
  • கடைவாயில் ஆனை ஒதுக்கினாற் போல
  • கடைவாயில் ஓட்டின பீயைப் போல
  • கண் அளக்காததைக் கை அளந்து விடுமா?
  • கண் அறிந்தும் அயல் மனையில் இருக்கிறதா?
  • கண் இமை, கை நொடி அளவே மாத்திரை
  • கண் இமை போலக் காக்கிறான் கடவுள்
  • கண் இமை போலே கரிசனமாய்க் காக்கிறது
  • கண் இமையா முன்னே பறந்து போனான்
  • கண் இரண்டும் இல்லாதவன் வீட்டுக்கு வைத்த விளக்கு
  • கண் இருக்கிற போதே காக்கை பிடுங்குகிறது போல
  • கண் இருந்தும் கண்டமங்கலத்தில் பெண் கொடுப்பார்களா?
  • கண் இருந்தும் கிணற்றில் விழுந்ததுபோல
  • கண் இருந்தும் குழியில் விழலாமா?
  • கண் இல்லாக் குருடனுக்கு மூக்குக் கண்ணாடி ஏன்?
  • கண் உள்ள போதே காட்சி; கரும்புள்ள போதே ஆலை
  • கண் ஊனன் கைப் பொருள் இழப்பான்
  • கண் ஒளி பெரிதா? கதிர் ஒளி பெரிதா?
  • கண் கட்டி மந்திரமா காட்ட வந்தாய்?
  • கண் கட்டி வித்தை காட்ட வந்தாயோ?
  • கண் கட்டின புழுவைப் போல
  • கண் கண்ட தெய்வம்
  • கண் கண்டது கை செய்யும்
  • கண் கண்டு வழி நட
  • கண் காணாமல் கடும் பழி சொல்கிறதா?
  • கண்குத்திப் பாம்பு போல் இருந்தாலும் கண்ணில் மண்ணைப்போடுகிறான்
  • கண் குருட்டுக்கு மருந்து இட்டால் தெரியுமா?
  • கண் குருடு ஆனாலும் நித்திரையில் குறையுமா?
  • கண் குருடு ஆனாலும் நித்திரையிலே குறைவில்லை
  • கண் குற்றம் கண்ணுக்குத் தெரியுமா?
  • கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரமா?
  • கண் கெடுத்த தெய்வம் கோலைக் கொடுத்தது
  • கண் கொண்டு அல்லவோ வழி நடக்க வேண்டும்?
  • கண் பழுதுற்ற ஒரு பயணிக்கு குத்துக்கோல் ஒன்று கிடைத்த மாதிரி
  • கண்ட இடத்தில் கத்தரி போடுவான்
  • கண்ட இடத்தில் திருடன் கண் போகிறது
  • கண்ட இடம் கைலாசம்
  • கண்ட கண்ட கோயிலெல்லாம் கையெடுத்துக் கும்பிட்டேன் காணாத கோயிலுக்குச் காணிக்கை நேர்ந்து வைத்தேன்
  • கண்ட தண்ணீருக்கு நிறை வேளாண்மை, கண்டது எல்லாம் ஓடித் தின்னும் ஆடு; நின்று நின்று மேய்ந்து போகும் மாடு
  • கண்டதில் பாதி சவுசிகம்; சீமையில் பாதி ஶ்ரீவத்ஸம்; பாதியில் பாதி பாரத்துவாஜம்
  • கண்டது கற்கப் பண்டிதன் ஆவான்
  • கண்டது கை அளவு காணாதது உலகளவு
  • கண்டது சொன்னால் கொண்டிடும் பகை
  • கண்டது பாம்பு கடித்தது கருக்குமட்டை
  • கண்டது பாம்பு. கடித்தது சோளத்தட்டை
  • கண்டது பாம்பு கடித்தது மாங்கொட்டை
  • கண்டதும் மருதாணியைக் காலில் இட்டுக் கொண்டால் கொண்டவனுக்கு முன்னால் குதித்தோடிப் போகலாம்
  • கண்டதே காட்சி, கொண்டதே கோலம்
  • கண்டதைக் காலை வாரி அடிக்கிறதா?
  • கண்டதைக் கேட்டதைச் சொல்லாதே: காட்டு மரத்திலே நில்லாதே
  • கண்டதைக் கேளா விட்டால் கொண்டவன் அடிப்பான்
  • கண்டதைக் கொண்டு கரை ஏற வேண்டும்
  • கண்ட பாவனையா கொண்டை முடிக்கிறது?
  • கண்டம் இல்லாத எருமை தண்டம்
  • கண்டம் ஒருத்தன் கழுத்து ஒருத்தன், துண்டம் ஒருத்தன்; துடை ஒருத்தன்
  • கண்ட மங்கலத்து அஞ்சு பெண்களும் ஒருத்தர் போன வழி ஒருத்தர் போகார்
  • கண்ட மாப்பிள்ளையை நம்பிக் கொண்ட மாப்பிள்ளையைக் கைவிட்டாற் போல
  • கண்டர மாணிக்கத்துக் கட்டுத் தறியும் வேதம் சொல்லும்
  • கண்டவர் விண்டிலர்; விண்டவர் கண்டிலர்
  • கண்டவன் எடுக்கானா?
  • கண்டவன் எடுத்தால் கொடுப்பானா?
  • கண்டவன் கொள்ளையும் கணியாகுளப் போரும்
  • கண்டவன் விலை சொன்னால் கொண்டவன் கோடி உடான்
  • கண்டார் கண்டபடி பேசுகிறது
  • கண்டாரைக் கேட்டாரைச் சொல்லாதே. கண்டால் அல்லவோ பேசுவார் தொண்டைமான்?
  • கண்டால் ஆயம்; காணா விட்டால் மாயம்
  • கண்டால் ஒரு பேச்சு; காணா விட்டால் ஒரு பேச்சு
  • கண்டால் ஒன்று; கானா விட்டால் ஒன்று
  • கண்டால் கரிச்சிருக்கும்; காணா விட்டால் இனித்திருக்கும்
  • கண்டால் காமாட்சி நாயக்கர்; காணா விட்டால் காமாட்டி நாயக்கன்
  • கண்டால் காயம்; காணாவிடில் மாயம்
  • கண்டால் சரக்கறியேன்; காணாமல் குருக்கறியேன்
  • கண்டால் கீச்சுக் கீச்சு; காணா விட்டால் பேச்சுப் பேச்சு
  • கண்டால் தண்டம்; வந்தால் பிண்டம்
  • கண்டால் துணை; காணா விட்டால் மலை
  • கண்டால் தெரியாதா, கம்பளி ஆட்டு மயிரை?
  • கண்டால் முறை சொல்கிறது; காணா விட்டால் பெயர் சொல்கிறது
  • கண்டால் ரங்கசாமி, காணா விட்டால் வடுகப்பயல்
  • கண்டால் வத்தி; காணா விட்டால் கொள்ளி
  • கண்டி ஆயிரம், கப்பல் ஆயிரம், சிறு கம்பை ஆயிரம்
  • கண்டிப்பு இருந்தால் காரியம்
  • கண்டியிலே ஆனைகுட்டி போட்டால் உனக்காச்சா? எனக்காச்சா?
  • கண்டிருந்தும் மலத்தைக் கவிழ்ந்திருந்து தின்பார்களா?
  • கண்டு அறிந்த நாயும் அல்ல; கனம் அறிந்த பேயும் அல்ல
  • கண்டு அறிய வேண்டும் கரும்பின் சுகம்; உண்டு அறிய வேண்டும்
  • கண்டு அறியாதவன் பெண்டு படைத்தால் காடு மேடு எல்லாம் இழுத்துத் திரிவானாம்
  • கண்டு எடுத்தவன் கொடுப்பானா?
  • கண்டு எடுத்தானாம், ஒரு சுண்டு முத்தை
  • கண்டு கழித்ததைக் கொண்டு குலாவினான்
  • கண்டு செத்த பிணமானால் சுடுகாட்டுக்கு வழி தெரியும்
  • கண்டு நூல் சிடுக்கெடுத்தாச்சு: வண்டி நூல் இருக்கிறது
  • கண்டு பேசக் காரியம் இருக்கிறது; முகத்தில் விழிக்க வெட்கமாய் இருக்கிறது
  • கண்டும் காணவில்லை, கேட்டும் கேட்கவில்லை என்று இருக்க வேண்டும்
  • கண்டும் காணாதது போல் விட்டுவிட வேண்டும்
  • கண்டும் காணாமலும் கேட்டும் கேட்காமலும் இருக்க வேண்டும்
  • கண்டும் காணவில்லை, கேட்டும் கேட்கவில்லை என்று இருக்க வேண்டும்
  • கண்டும் காணாததுபோல் விட்டுவிட வேண்டும்
  • கண்டு முட்டு; கேட்டு முட்டு
  • கண்டேன் சீதையை என்றாற் போல
  • கண்ணாடி, பித்தன், கருங்குரங்கு, காட்டானை, மண்ணாளும் வேந்தனோடு ஐந்தும் பித்து
  • கண்ணாடியில் கண்ட பணம் கடன் தீர்க்க உதவுமா?
  • கண்ணாரக் கண்டதற்கு ஏன் அகப்பைக் குறி?
  • கண்ணாரக் காணாதது மூன்றில் ஒரு பங்கு
  • கண்ணால் கண்டது பொய்; அகப்பைக்குறி மெய்
  • கண்ணாலே கண்டது பொய்; கருதி விசாரித்தது மெய்
  • கண்ணாலே கண்டது பொய்; காதாலே கேட்டது மெய்
  • கண்ணாலே கண்டதும் பொய்; காதாலே கேட்டதும் பொய்; ஆராய்ந்து பார்ப்பது மெய்
  • கண்ணாலே கண்டதை எள்ளுக்காய் பிளந்ததுபோல் சொல்ல வேண்டும்
  • கண்ணாலே கண்டதைக் கையாலே செய்வான்
  • கண்ணாலே கண்டாலும் மண்ணாலே மறைக்க வேண்டும்
  • கண்ணாலே சீவன் கடகடவென்று போனாலும் வண்ணானுக்கு மழை நஞ்சு
  • கண்ணாலேயும் கண்டதில்லை. காதாலேயும் கேட்டதில்லை
  • கண்ணான பேர்களை மண் ஆக்குகிறான்
  • கண்ணான பேரை எல்லாம் புண் ஆக்கிக் கொண்டு, கரும்பான பேரை எல்லாம் வேம்பாக்கிக் கொண்டான்
  • கண்ணான மனசைப் புண் ஆக்குகிறான்
  • கண்ணிலே குத்தின விரலைக் கண்டிப்பார் உண்டோ?
  • கண்ணிற் பட்டால் கரிக்குமா, புருவத்திற் பட்டால் கரிக்குமா?
  • கண்ணிற் புண் வந்தால் கண்ணாடி பார்த்தல் ஆகாது
  • கண்ணுக்கு ஆனால் புண்ணுக்கு ஆகாது
  • கண்ணுக்கு இமை காதமா?
  • கண்ணுக்கு இமை; பெண்ணுக்கு நாணம்
  • கண்ணுக்கு என்ன கரிப்பு?
  • கண்ணுக்குக் கண் அருகே காணலாம்
  • கண்ணுக்குக் கண்ணாய் இருந்தும் கடைப் பெண்ணுக்கு வழி பார்க்கிறதா?
  • கண்ணுக்குக் கலம் தண்ணீர் விடுகிறது
  • கண்ணுக்குப் புண்ணும் அல்ல; காண்பார்க்கு நோவும் அல்ல
  • கண்ணுக்கு மூக்குக் காத தூரம் இல்லை
  • கண்ணுக்கும் மூக்குக்கும் காலம் இப்படி வந்ததே!
  • கண்ணுக்கும் மூக்குக்கும் நேராகப் பார்
  • கண்ணுக்குள் சம்மணம் கொட்டுவான்; கம்பத்தில் ஐந்தானை கட்டுவான்
  • கண்ணும் கருத்தும் உள்ள போது இல்லாமல், கண் பஞ்சு அடைந்த பின் என்ன கிடைக்கும்?
  • கண்ணும் கலத் தண்ணீர் விடும்
  • கண்ணும் கருத்தும் உள்ள போதே காணோம்; அவை போனபின் என்ன கிடைக்கும்?
  • கண்ணும் நமது; விரலும் நமது: கண்ணைக் குத்துவதா?
  • கண்ணும் புண்ணும் உண்ணத் தீரும்
  • கண்ணும் மூக்கும் வைத்தான்; காரமும் கொஞ்சம் சேர்த்தான்
  • கண்ணே. கண்ணே என்றால் உச்சி குளிருமா?
  • கண்ணே, காதே, நமஸ்காரம்; கண்டதைக் கேட்டதைச் சொல்லாதே
  • கண்ணை அலம்பி விட்டுப் பார்க்க வேண்டும்
  • கண்ணை இமை காப்பது போல
  • கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போல
  • கண்ணைக் கண்ணைக் காட்டுது, அண்ணி கழுத்துக் கருகுமணி
  • கண்ணைக் காட்டினால் வராதவள் கையைப் பிடித்து இழுத்தால் வருவாளா?
  • கண்ணைக் குத்திய விரலைக் களைந்து எறிவார் உண்டோ?
  • கண்ணைக் கெடுத்த தெய்வம் கோலைக் கொடுத்தது
  • கண்ணைக் கெடுத்த தெய்வம் மதியைக் கொடுத்தது
  • கண்ணைக் கொசு மொய்க்கக் கடை வாயை ஈ மொய்க்கப் புண்ணைப் புழு அரிக்கப் பெண்ணைப் போக விட்டாள் புங்காத்தை
  • கண்ணைக் கொண்டு நடந்தது போல உன்னைக் கண்டு நடந்தேன்
  • கண்ணைத் தின்ற குருடனும் நியாயத்தை ஒத்துக் கொள்ள வேணும்
  • கண்ணைப் பிடுங்கி முன்னே எறிந்தாலும் கண்கட்டு வித்தை என்பார்கள்
  • கண்ணைப் பிதுக்கிக் காட்டியும் வித்தையா?
  • கண்ணை மூடிக் குட்டுகிறதா?
  • கண்ணை மூடிக் கொண்டு காட்டில் நடப்பது போல
  • கண்ணை விறைச்சுக் கொண்டு எங்கே போனாய்? கவுண்டன் செத்தான்; இழவுக்குப் போனேன்
  • கண்ணோடே பிறந்த காவேரி ஆனாலும் உதட்டைச் சுட்டு உறவாடுவேன்
  • கண்ணோடே பிறந்த காவேரி ஆனாலும் நம் எண்ணம் சரி ஆகுமா?
  • கண்ணோ, புண்ணோ?
  • கண்ணோ புண்ணோ என்று கலங்கி மனம் திடுக்கிடுகிறது
  • கண் தெரிந்து நடப்பவர்கள் பள்ளத்தில் விழ மாட்டார்கள்
  • கண் தெரிந்து வழி நடக்கும்படி நினை
  • கண் தெரியாமல் வழி நடக்கிறது போல
  • கண் படைத்தும் குழியில் விழலாமா?
  • கண் பறிகொடுத்துக் கலங்கினாற் போல
  • கண் பார்த்தால் கை செய்யும்
  • கண் பார்த்துக் கையால் எழுதாதவன் கசடனாவான்
  • கண் புண்ணிலே கோல் இட்டது போல
  • கண் பெருவிரலைப் பார்க்கும் போதே கடைக்கண் உலகமெல்லாம் சுற்றும்
  • கண் மூடர் கைப் பொருளை அழிப்பர்
  • கண் மூடித் துரைத்தனம் ஆச்சே?
  • கண் மூடிப் பழக்கம் மண் மூடிப் போகும்
  • கணக்கதிகாரத்தைப் பிளக்கும் கோடாலி
  • கணக்கப் பிள்ளை எல்லாம் எழுத்துப் பிள்ளையா?
  • கணக்கப் பிள்ளை கொடுக்கைத் தூக்கி, கண்டவளெல்லாம் செருப்பைத் தூக்கி
  • கணக்கப் பிள்ளை பொண்டாட்டி கடுக்கன் போட்டுக் கொண்டாள் என்று காரியக்காரன் பொண்டாட்டி காதை அறுத்துக் கொண்டாளாம்
  • கணக்கப் பிள்ளை பொண்டாட்டி குணுக்கைப் போட்டு ஆடினாளாம்
  • கணக்கன் கண் வைத்தால் கால் காணி பொட்டை
  • கணக்கன் கணக்கு அறிவான்; தன் கணக்கைத் தான் அறியான்
  • கணக்கன் கணக்கைத் தின்னா விட்டாலும் கணக்கனைக் கணக்குத் தின்று விடும்
  • கணக்கன் கெட்டால் பள்ளிக்கூடம்
  • கணக்கன் கணக்கைத் தூக்கி; கண்டவனெல்லாம் செருப்பைத்தூக்கி
  • கணக்கன் மனைவி கடுக்கன் அணிந்தாளென்று காரியக்காரன் மனைவி காதை அறுத்துக் கொண்டாளாம்
  • கணக்கன் வீட்டுக் கல்யாணம் விளக்கெண்ணெய்க்குக் கேடு
  • கணக்கனுக்குக் கைக் கூலி கட்டிக் குடியிருக்கக் கடன் என்றாராம்
  • கணக்கனுக்குப் பட்டினி உடன் பிறப்பு
  • கணக்கனுக்கு மோட்சம் இல்லை; ஒட்டனுக்கு நரகம் இல்லை
  • கணக்கனைக் கண்ட இடத்தில் கண்ணைக் குத்து
  • கணக்கனைப் பகைத்தாயோ? காணியை இழந்தாயோ?
  • கணக்கனோ, குணக்கனோ?
  • கணக்கிலே கயிறு கோத்திருக்கிறது
  • கணக்கு அதிகாரத்தைப் பிளக்கும் கோடாலி
  • கணக்கு அரைக்கால், முக்காலே அரைக்கால், கணக்கன் பொண்டாட்டி தாலி அறுத்தாள்
  • கணக்கு அறிந்த பிள்ளை வீட்டில் இருந்தால் வழக்கு அறாது
  • கணக்கு அறிவான், காலம் அறிவான்
  • கணக்குக் குஞ்சையும் காக்கைக் குஞ்சையும் கண்ட இடத்திலே கண்ணைக் குத்து
  • கணக்கிலே கயிறா கோத்திருக்கிறது?
  • கணக்கைப் பார்த்தால் பிணக்கு வரும்
  • கணபதி பூஜை கைமேலே பலன்
  • கணவன் இல்லாத கற்புடைய பெண்ணின் கட்டழகு பயன்படாதது போல
  • கணவன் கட்டிய தாலியை கட்டையில் போகும் வரை கழற்றாதே
  • கணவனுக்கு கீழ்ப்படிவதே மனைவிக்கு அழகு
  • கணவனுக்கு மிஞ்சித் தெய்வம் இல்லை
  • கணவனுக்கு மிஞ்சின கடவுள் இல்லை; கடலுக்கு மிஞ்சின ஆழம் இல்லை
  • கணவனே கண்கண்ட தெய்வம்
  • கணவனைப் பிரிந்து அயல் வீட்டில் இருக்கிறதா?
  • கணவனை வைத்துக் கொண்டு அல்லவோ கள்ள மாப்பிள்ளையைக் கொள்ள வேண்டும்?
  • கணிகாலங்காரம் போல
  • கணிசத்துக்கு இவள்; காரியத்துக்கு அவள்
  • கணுக் கணுவாகக் கரும்பானாலும் ஆனைக்கு என்னவோ கடைவாய்க்குத்தான்
  • கணுக்கால் பெருத்தால் கணவனைத் தின்பாள்
  • கணை முற்றினால் கட்டையிலே
  • கணையாழி கண்டான் ஆறு கொண்டது பாதி; தூறு கொண்டது பாதி
  • கத்தரிக்காய் என்று சொன்னால் பத்தியம் முறிந்து போகுமா?
  • கத்தரிக்காய்க்குக் காம்பு ருசி; வெள்ளரிக்காய்க்கு விதை ருசி
  • கத்தரிக்காய்க்குக் கால் முளைத்தால் கடைத்தெருவுக்கு வந்தால் தெரிகிறது
  • கத்தரிக்காய்க்குக் கையும் காலும் முளைத்தாற் போல்
  • கத்தரிக்காய் சொத்தை என்றால் அரிவாள் மணை குற்றம் என்கிறாள்
  • கத்தரிக்காய் நறுக்குகிற கையும் காலும் பார்த்தால் பூசணிக்காய் வழி போகாதே, போகாதே என்கிறதாம்
  • கத்தரிக்காய் வாங்கப் பூசணிக்காய் கொசுரா?
  • கத்தரிக்காய் விதை சுரைக்காயாய் முளைக்காது
  • கத்தரிக்காய்க்குக் காலும் தலையும் முளைத்தது போல்
  • கத்தரிக்காய் விற்ற பெட்டி காசுப் பெட்டி; வெள்ளரிக்காய் விற்ற பெட்டி வெறும் பெட்டி
  • கத்தரிக்காயை நறுக்கிக் காலும் கையும் வெட்டிக் கொண்ட பெண்ணே, நீ பூசணிக்காய்ப் பக்கம் போகாதே
  • கத்தரிக் கொல்லையிலே கூத்து வேடிக்கை பார்த்தது போல
  • கத்தரித் தோட்டக்காரனுக்குக் கண் தெரியாது; வெள்ளரித் தோட்டக்காரனுக்குக் காது கேளாது
  • கத்தரித் தோட்டத்துக் களை பிடுங்கினாற் போலும் இருக்க வேண்டும்; கன்றுக் குட்டிக்குப் புல் பிடுங்கினாற் போலும் இருக்க வேண்டும்
  • கத்தி இருக்கும் இடத்துக்கு மரை காவுகிறதா?
  • கத்தி எட்டின மட்டும் வெட்டும்; பணம் எட்டாத மட்டும் வெட்டும்
  • கத்தி கட்டி பெண்சாதி எப்போதும் கைம்பெண்டாட்டி
  • கத்திப் பிடிக்குப் பிடித்தால் அரிவாள் பிடிக்கு ஆகட்டும்
  • கத்தியும் கடாவும் போல
  • கத்தியும் வெண்ணெயும் காய்ச்சித் துவைத்துக் கடை
  • கத்தியைப் பார்க்கிலும் கனகோபம் கொலை செய்யும்
  • கத்து, கத்து என்றால் கழுதையும் கத்தாது; சொல் சொல் என்றால் புலவனும் சொல்லான்
  • கத்துகிற மட்டும் கத்திவிட்டுப் போகச்சே கதவைச் சாத்திக்கொண்டு போ
  • கதலீனாம் முதலீனாம் பலகாலே வக்ர கதி
  • கதவின் கீழே நின்று கொண்டு காலைக் காலைக் காட்டினாளாம்
  • கதவைச் சாத்தினால் நிலை புறம்பு
  • கதி இருவர் கன்னித் தமிழுக்கு
  • கதி கெட்ட மாப்பிள்ளைக்கு எரு முட்டை பணியாரம்
  • கதிர் களைந்தும் களை எடு
  • கதிர் நூல் குறைந்தாலும் கள்ளச்சி கழுத்து நூல் குறையாது
  • கதிர் போல இளைத்துக் குதிர் போல் பெருப்பது
  • கதிர் முகத்தில் என்ன ராசி முழக்கம் வேணும்?
  • கதிரவன் சிலரை காயேன் என்குமோ?
  • கதிரிலே ஒடிக்காதே என்றால் கணுவிலே ஒடித்துப் போடுகிறாயே!
  • கதிருக்கு முந்நூறு நெல் இருந்தால் முழு வெள்ளாண்மை
  • கதிரைக் களைந்தும் களையைப் பிடுங்கு
  • கதிரைப் பார்க்கிறதா? குதிரைப் பார்க்கிறதா?
  • கதை அளக்கிறான்
  • கதைக்குக் கண் இல்லை; காமத்திற்கு முறை இல்லை
  • கதைக்குக் கால் இல்லை; கண்ட புருஷனுக்கு முறை இல்லை
  • கதைக்குக் கால் இல்லை; கொழுக்கட்டைக்குத் தலை இல்லை; கூத்தாடிக்கு முறை இல்லை
  • கதைக்குக் கால் இல்லை, பேய்க்குப் பாதம் இல்லை
  • கதைக்குக் காலும் இல்லை; கத்தரிக்காய்க்கு வாலும் இல்லை
  • கதைக்குக் காலும் இல்லை; தலையும் இல்லை
  • கதை கதையாம் காரணமாம்; காரணத்தில் ஒரு தோரணமாம்
  • கதை கேட்ட நாயைச் செருப்பால் அடி
  • கதை பண்ணுகிறான்
  • கதை முடிந்தது; கத்தரிக்காய் காய்த்தது
  • கதையை நிறுத்திக் காரியத்தைப் பேசு
  • கதையோ பிராமணா, கந்தையோ பொத்துகிறாய்? அல்லடி பேய் முண்டை, சீலைப்பேன் குத்துகிறேன்
  • கந்தப்பூர் சிற்றப்பா நமஸ்காரம்; பாதி பொச்சை மூடிக்கொண்டு பாக்கியசாலியாய் இரு
  • கந்தப் பொடிக் கடைக்காரனுக்குக் கடுகு வாசனை தெரியுமா?
  • கந்த புராணத்தில் இல்லாதது எந்தப் புராணத்திலும் இல்லை
  • கந்த புராணம், நம் சொந்தப் புராணம்
  • கந்தர் அந்தாதியைப் பாராதே; கழுக்குன்ற மாலையை நினையாதே
  • கந்தலில் கால் இட்டது போல
  • கந்தன் களவுக் கல்யாணத்துக்குக் கணபதி சாட்சி
  • கந்தனுக்குப் புத்தி கவட்டிலே
  • கந்தை ஆனாலும் கசக்கிக் கட்டு; கூழ் ஆனாலும் குளித்துக் குடி
  • கந்தை உடுத்துக் கடைவீதி போனாலும் கண்ணாடி கண்ணாடியே
  • கந்தைக்கு ஏற்ற பொந்தை; கழுவுக்கு ஏற்ற கோமுட்டி
  • கந்தைக்குச் சரடு ஏறுகிறது எல்லாம் பலம்
  • கந்தைத் துணி கண்டால் களிப்பாள்; எண்ணெய்த் தலை கண்டால் எரிவாள்
  • கந்தைத் துணியும் கரி வேஷமும் ஆனான்
  • கந்தையை அவிழ்த்தால் குட்டி வெளிச்சம் தெரியும்
  • கந்தையை அவிழ்த்தால் சிந்தை கலங்கும்
  • கந்தையைக் கட்டி வெளியே வந்தால் கண்ணாட்டி; வெள்ளையைக் கட்டி வெளியே வந்தால் வெள்ளாட்டி
  • கப்பரையிலே கல் விழுகிறது
  • கப்பல் அடிப்பாரத்துக்குக் கடற்கரை மண்ணுக்குத் தாவு கெட்டாற் போல
  • கப்பல் உடைந்தாலும் கன்னத்தில் கை வைக்காதே
  • கப்பல் ஏற்றிக் கடலில் கவிழ்த்தது போல
  • கப்பல் ஏறிப் பட்ட கடன் கொட்டை நூற்றா விடியும்
  • கப்பல் ஏறிப் பட்ட கடன் கொட்டை நூற்றுப் போகுமா?
  • கப்பல் ஏறிய காகம் போலக் கலங்குகிறது
  • கப்பல் ஏறிவிட்ட காகம் கலங்குமா?
  • கப்பல் ஒட்டிய வாழ்வு காற்று அடித்தால் போச்சு
  • கப்பல் போம்; துறை கிடக்கும்
  • கப்பலில் ஏற்றிக் கடலில் கவிழ்த்தது போல
  • கப்பலில் ஏறிய காகம் போல
  • கப்பலில் பாதிப் பாக்கு
  • கப்பலில் பாதிப் பாக்கைப் போட்டுவிட்டுத் தேடுவது போல
  • கப்பலில் பெண் வருகிறது என்றானாம்; அப்படியானால் எனக்கு ஒன்று என்றானாம்
  • கப்பலை விற்றுக் கப்பல் விற்றான். கொட்டை வாங்கித் தின்றானாம்
  • கப்பலே கவிழ்ந்தாலும் கன்னக்கோலில் கை வைக்காதே
  • கப்பற்காரன் பொண்டாட்டி தொப்பைக்காரி, கப்பல் உடைந்தால் பிச்சைக்காரி
  • கப்பற்காரன் வாழ்வு காற்றடித்தால் போச்சு
  • கப்பி என்றால் வாயைத் திறக்கிறது குதிரை; கடிவாளம் என்றால் வாயை மூடிக் கொள்கிறது
  • கபடச் சொல்லிலும் கடிய சொல்லே மேல்
  • கபடாவும் இல்லை; வெட்டுக் கத்தியும் இல்லை
  • கபடு இருந்த நெஞ்சும் களை இருந்த பயிரும் உருப்படா
  • கபடு சூது கடுகாகிலும் தெரியாது
  • கபாலக் குத்துக் கண்ணைச் சுழிக்கும்
  • கம்பங் கொல்லையில் மாடு புகுந்தது போல
  • கம்ப சூத்திரமோ? கம்ப சித்திரமோ?
  • கம்பத்தில் ஏறி ஆடினாலும் கீழ் வந்துதான் தியாகம் வாங்க வேணும்
  • கம்பத்தில் கொடுத்த பெண்ணும் வாணியனுக்குக் கொடுத்த பாரும், விளங்கா
  • கம்பப் பிச்சையோ? கடைப் பிச்சையோ?
  • கம்பமே காவேரி, ரங்கனே தெய்வம்
  • கம்பர் போன வழி
  • கம்பர் போன வழி கண்டு கழித்தது
  • கம்பராமாயணம் போல்
  • கம்பளி மூட்டை என்று கரடி மூட்டையை அவிழ்த்தானா
  • கம்பளி மேல் பிசின்
  • கம்பளியிலே ஒட்டின கூழைப் போல
  • கம்பளியிலே ஒட்டின பீ மாதிரி
  • கம்பளியிலே சோற்றைப் போட்டு மயிர் மயிர் என்கிறதா?
  • கம்பளி வேஷம்
  • கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவிபாடும்
  • கம்பன் வீட்டு வெள்ளாட்டியும் கவி பாடுவாள்
  • கம்பனோ, பம்பனோ?
  • கம்பி நீட்டினான்
  • கம்புக்குக் களை பிடுங்கினாற் போலவும் தம்பிக்குப் பெண் பார்த்தாற் போலவும் ஆகும்
  • கம்புக்குக் கால் உழவு
  • கம்பு கொண்டு வந்து நாயை அடிப்பதா? கம்பு கிடக்கும் இடத்துக்கு நாயைத் தூக்கிக்கொண்டு போவதா?
  • கம்பு மாவு கும்பினால் களிக்கு ஆகுமா?
  • கம்மரீகமோ, ராஜரீகமோ?
  • கம்மாளப் பிணம் விறைத்தாற் போல
  • கம்மாளன் இருந்த இடமும் கழுதை இருந்த இடமும் சரி
  • கம்மாளன் எடுக்காத சிக்கலை வாணியன் எடுப்பான்
  • கம்மாளன் குடித்தனம் பண்ணாதே
  • கம்மாளன் துணி வாங்கினால் கால்மயிர் தெரிய வாங்குவான் அதைச் சலவைக்கும் போடும் போது அடுப்பிலே போட்டாலும் வேகாது
  • கம்மாளன் நாய் பட்டி ஒலிக்கு அஞ்சுமா?
  • கம்மாளன் பசுவைக் காது அறுத்துக் கொண்டாலும் உள்ளே செவ்வரக்குப் பாய்ச்சியிருப்பான்
  • கம்மாளன் பசுவை காதறுத்துக் கொள்
  • கம்மாளன் பசுவைக் காது அறுத்து வாங்கு
  • கம்மாளன் பசுவைக் காது அறுத்துக் கொள்ள வேண்டும்
  • கம்மாளன் பணம் கரியும் பொறியுமாய்ப் போய் விட்டது
  • கம்மாளன் பல்லக்கு ஏறினால் கண்டவர்க்கு எல்லாம் இறங்க வேண்டும்
  • கம்மாளன் பிணத்தைக் காது அறுத்தாலும் ரத்தம் வராது
  • கம்மாளன் வீட்டிற் பிள்ளை பிறந்தால் தேவடியாள் வீட்டில் சர்க்கரை வழங்குவாள்
  • கம்மாளன் வீட்டு நாய் சம்மட்டிக்கு அஞ்சுமா?
  • கம்மாளன் வீட்டுப் பசுவை காதறுத்துப் பார்த்தாலும் அங்கும் செவ்வரக்குப் பாய்ந்திருக்கும்
  • கமரில் ஊற்றிய பால்
  • கமரில் கவிழ்த்த பால், அமரர்க்கு அளித்த அன்னம்
  • கயா கயா
  • கயிற்றுப் பிள்ளை, கைப்பிள்ளை
  • கயிற்றைப் பாம்பு என்று எண்ணிக் கலங்குகிறது போல
  • கயிறு அறுந்த பட்டம் போல
  • கயிறு இல்லாப் பம்பரம் போல
  • கயிறு திரிக்கிறான்
  • கர்ணன் கொடை பாதி, காவேரி பாதி
  • கர்ணனுக்குப் பட்டினி உடன் பிறப்பு
  • கர்த்தனைக் குருடன் கண்தான் வேண்டுவான்
  • கர்த்தா, போக்தா, ஜனார்த்தனா
  • கர்த்தாவின் செயல் உள்ளபடி
  • கர்த்தாவைக் குருடன் வேண்டுவது கண் பெறத்தானே?
  • கர்ப்பத்துக்குச் சுகம் உண்டானால் சிசுவுக்குச் சுகம்
  • கர்ப்பிணியின் பேரில் துர்ப்பலம்
  • கர்ப்பூர மலையில் ஆக்நேயாஸ்திரம் பிரயோகித்தது போல
  • கர்மத்தினாலே வந்தது தர்மத்தினாலே போக வேண்டும்
  • கர்மம் முந்தியா? ஜன்மம் முந்தியா?
  • கர்விக்கு மானம் இல்லை; கோபிக்குப் பாபம் இல்லை
  • கரகத்துத் தண்ணீர் காத வழி
  • கரகத்து நீர் காதம் காக்கும்
  • கரட்டுக் காட்டுக்கு முரட்டு மண் வெட்டி
  • கரடிக்கு உடம்பெல்லாம் மயிர்
  • கரடிக்குப் பயந்து ஆனையிடம் தஞ்சம் புகுந்தாற் போல
  • கரடிக்குப் பிடித்த இடம் எல்லாம் மயிர்
  • கரடி கையில் அகப்பட்டவனுக்கு கம்பளிக்காரனைக் கண்டாலும் பயம்
  • கரடி துரத்தினாலும் கைக்கோளத் தெருவில் போக இடம் இராது
  • கரடி பிறையைக் கண்டது போல
  • கரடியைக் கைவிட்டாலும் கரடி கையை விடவில்லை
  • கரண்டி ஆபீஸ்காரனுக்குக் காதிலே கடுக்கன் என்ன?
  • கரண்டி பிடித்த கையும் கன்னக்கோல் பிடித்த கையும் சும்மா இருக்குமா?
  • கரணம் தப்பினால் மரணம்
  • கரதலாமலகம் போல் காண்கிறது
  • கரம் கொண்டவன் அறம் வழுவலாகாது
  • கரம் பற்றிய கன்னியைக் கதற அடிக்கக் கூடாது
  • கரம் மாறிக் கட்டினால் கனம் குறையாது
  • கரிக்காலி முகத்தில் விழித்தால் கஞ்சியும் கிடையாது
  • கரிக்குருவியார் கண்ணுக்குக் காக்கையார் பொன்னொத்துத் தோன்றும்
  • கரிச்சுக் கொட்டினால் எரிச்சல் வராதா?
  • கரிசனப்பட்ட மாமியார் மருமகளைப் பார்த்து ஏக்கம் உற்றாளாம்
  • கரிசனம் உள்ள கட்டியம்மா, கதவைத் திற பீப்பெய்ய
  • கரிசனம் உற்ற சிற்றாத்தே, நீ கம்பங்கொல்லையில் வாடி கட்டி அழ
  • கரிசனம் எல்லாம் கண்ணுக்குள்ளே; வஞ்சனை எல்லாம் நெஞ்சுக்குள்ளே
  • கரியாய் உமியாய்க் கட்டை விளக்குமாறாய்
  • கரியை வழித்து முகத்தில் தடவினாள்
  • கரிவிற்ற பணம் கறுப்பாய் இருக்குமா?
  • கரு இல்லாத முட்டையும் குரு இல்லாத வித்தையும்
  • கருக்கலில் எழுந்தாலும் நறுக்கென்று சமைக்க மாட்டாள்
  • கருக்கலில் கயிற்றைப் பாம்பு என்ற கதை
  • கருக்கி உருக்கி நெய் வார்த்தாலும் கண்ட நியாயந்தான் சொல்லுவான்
  • கருங்கண்ணி பட்டாலும் கரையான் கண்ணாலும் திரும்பிப்பாரான்
  • கருங்கல்லில் ஈரம் ஏறாத் தன்மை போல
  • கருங்கல்லில் எழுதிய எழுத்தைப் போல
  • கருங்கல்லிலே நார் உரிப்பான்
  • கருங்காலி உலக்கைக்கு வெள்ளிப் பூண் கட்டினது போல
  • கங்காலிக் கட்டைக்கு வாய் நாணாத கோடாலி இளவாழைத்தண்டுக்கு வாய் நாணும்
  • கருங்குரங்கு போல மலங்க விழிக்காதே
  • கருங்கொல்லன் உலைக்களத்தில் நாய்க்கு என்ன வேலை?
  • கருடன் இடம் போனால் எவன் கையில் பொருளும் தன் கையில் சேரும்
  • கருடன் காலில் கெச்சை கட்டினது போல
  • கருடன் பறக்க ஒரு கொசு பறந்தாற் போல
  • கருடனுக்கு முன் ஈ ஆகுமா?
  • கருடன் முன்னே கொசு பறந்த கதை
  • கருடனுடன் ஊர்க்குருவி பறந்தது போல
  • கருடனைக் கண்ட பாம்பு போல
  • கருடி கற்றவன் இடறி விழுந்தால் அதுவும் ஒரு வித்தை
  • கருப்பங்கட்டி ஆதாயத்தை எறும்பு இழுத்துக் கொண்டு போச்சுதாம்
  • கருப்பங்கட்டியிலும் கல் இருக்கும்
  • கருப்பங் கொல்லையிலே நெருப்புப் பொறி விழுந்தாற்போல்
  • கருப்பட்டி என்றவுடனே சளப்பட்டி என்று நக்கக் கூடாது
  • கருப்பட்டியிலும் கல் இருக்கும்
  • கருப்பட்டியைக் கொடுத்துக் கட்டிக்கொண்டு அழுதாலும் கசக்குது என்று சொல்கிறான்
  • கருப்பட்டி லாபம் என்று புழுத்துப் போன கதை
  • கருப்பிலே பிள்ளை விற்றாற்ப் போல
  • கருப்புக் கட்டி ஆதாயத்தை எறும்பு இழுத்துக் கொண்டு போயிற்றாம்
  • கருப்புக் கட்டிக்கு எறும்பு தானே வரும்
  • கருப்புக் கட்டியிலும் கல் கிடக்கும்
  • கருப்புக்கு இருந்து பிழை; கலகத்துக்கு ஒடிப் பிழை
  • கருப்பூர் மத்யஸ்தம் போல
  • கருப்பூர் வழக்குப் போல
  • கரும்பில் எறும்பு இருந்தால் ஆனைக்கு என்ன?
  • கரும்பிலும் தேன் இருக்கும்
  • கரும்பிலும் தேன் இருக்கும், கள்ளியிலும் பால் இருக்கும்
  • கரும்பு ஆலையில் பட்ட எறும்பு போல
  • கரும்பு இருக்க இரும்பு கடித்து எய்ந்தாற்போல்
  • கரும்பு உள்ள போதே ஆலை ஆட்டிக்கொள்
  • கரும்புக் கட்டாலே கழுதையை அடித்தால் கழுதைக்குத் தெரியுமா கரும்பு ருசி?
  • கரும்புக்கு உழுத புழுதி காயச்சின பாலுக்குச் சர்க்கரை ஆகுமா?
  • கரும்புக்குக் கணு இருந்தாலும் கசக்குமா?
  • கரும்புக்குப் பழமும் கற்றவருக்குப் பணமும் பொன்னுக்கு மணமும் இல்லை
  • கரும்புக் கொல்லையைக் காக்க ஆனையை விட்டது போல
  • கரும்பு கட்டோடு இருந்தால் எறும்பு தன்னோடு வரும்
  • கரும்பு கசத்தல் வாய்க் குற்றம்
  • கரும்பு கசந்தால் வாய்க்குப் பொல்லாப்பு
  • கரும்பு கசந்தது காலத்தோடே. வேம்பு தித்தித்தது வேளையோடே
  • கரும்பும் எள்ளும் கசக்கினால்தான் பலன்
  • கரும்பு முறித்துக் கழுதையை அடித்த கதை
  • கரும்பும் வேம்பு ஆகும் காதல் போதையிலே
  • கரும்பும் வேம்பு ஆச்சே
  • கரும்பு ருசி என்று வேரோடு பிடுங்கலாமா?
  • கரும்பு லாபம் எறும்பு கொண்டு போகும்
  • கரும்பு வைப்பது காணி நிலத்தில்
  • கரும்பைக் கழுதை முன் போட்டால் அதற்குத் தெரியுமோ கரும்பு ருசி?
  • கரும்பைக் கையில் பிடித்தவன் எல்லாம் மன்மதன் ஆகிவிடுவானா?
  • கரும்பை நறுக்கிப் பிழிந்தாற் போல
  • கரும்பை முறித்தாற் போல
  • கரும்பை முறித்துக் கழுதையை அடித்த கதை
  • கரும்பை விரும்ப அது வேம்பு ஆயிற்று
  • கரும்பை விரும்ப விரும்ப வேம்பு
  • கரும்பை வேம்பு ஆக்கினாற் போல
  • கரும ஒழுங்கு பெருமைக்கு அளவு
  • கருமத்தை முடிக்கிறவன் அருமை பாரான்
  • கருமத்தை முடிக்கிறவன் கட்டத்தைப் பாரான்
  • கருமத்தை முடிக்கிறவன் கடலை ஆராய்வான்
  • கருமம் தொலையாது
  • கருமான் இருந்த இடமும் கழுதை புரண்ட களமும் சரி
  • கருமான் உலைக்களத்தில் நாய்க்கு என்ன வேலை?
  • கருமான் வீட்டு நாய் சம்மட்டித் தொனிக்கு அஞ்சுமா? கருவளையும் கையுமாய்
  • கருவேல மரத்திற்கு நிழல் இல்லை; கன்னானுக்கு முறை இல்லை
  • கருவை உரு அறியான், கண்டாரைப் பேரறியான்
  • கரைக்கும் கரைக்கும் சங்கிலி, நடுவிலே இருக்கிறவன் நாய் விட்டை
  • கரை காணாத தோனிபோலத் தவிக்கிறது
  • கரைப் பக்கம் பாதை இருக்கக் கப்பல் ஏறினவனும், சொல்லாததை மனையாளுக்குச் சொன்னவனும் பட்ட பாடுபோல
  • கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்
  • கல் அடிச் சித்தன் போனவழி காடு வீடெல்லாம் தவிடு பொடி
  • கல் அடி பட்டாலும் கண் அடி படக் கூடாது
  • கல் ஆனாலும் கணவன்; புல் ஆனாலும் புருஷன்
  • கல் ஆனாலும் தடி ஆனாலும் பல் போகிறது ஒன்று
  • கல் உள்ளதே கிணறு: கரை உள்ளதே தோட்டம்
  • கல் எடுத்தால் நாய் ஓடும்; கம்பு எடுத்தால் பேய் ஓடும்
  • கல் எல்லாம் மாணிக்கக் கல் ஆமோ?
  • கல் எறிக்குத் தப்பினாலும் கண் எறிக்குத் தப்பிக்க முடியாது
  • கல் என்றாலும் கணவன்; புல் என்றாலும் புருஷன்
  • கல் ஒன்று, கணக்கு ஒன்று. குதிரை ஒன்று, கூத்தியாள் ஒன்று
  • கல் கிணற்றுக்கு ஏற்ற இரும்புத் தோண்டி
  • கல் கிள்ளிக் கை உய்ந்தார் இல்
  • கல் பிறவாத காடே உழு
  • கல்மேல் எழுத்துக் கலைமான்
  • கல்மேல் எழுத்துப் போல
  • கல்மேல் நெல் விளையும் கல்யாணம் முடி
  • கல்யாணச் சந்தடியில் தாலி கட்ட மறந்த கதை போல
  • கல்யாணத்தில் பஞ்சம் இல்லை
  • கல்யாணத்திலும் பஞ்சம் இல்லை; களத்திலும் பஞ்சம் இல்லை
  • கல்யாணத்துக்கு உதவாத பூசணிக்காய் பந்தலிலே கட்டி ஆடுகிறது
  • கல்யாணத்துக்கு வந்த பெண்டுகளிடத்தில் போனால் போவேன்; இல்லாவிட்டால் கல்லிலே வைத்து நறுக்குவேன்
  • கல்யாணத்தை நிறுத்தச் சீப்பை ஒளித்து வைத்தது போல
  • கல்யாணப் பஞ்சமும் களப்பஞ்சமும் இல்லை
  • கல்யாணப் பந்தலிலே கட்டின ஆடு போல
  • கல்யாணப் பந்தலிலே தாலி கட்ட மறந்தது போல்
  • கல்யாணம் ஆகாதவனுக்கு ஒரு கவலை: கல்யாணம் ஆனவனுக்கு ஆயிரம் கவலை
  • கல்யாணம் எங்கே? காசுப் பையிலே
  • கல்யாணம் என்றால் கிள்ளுக் கீரையா?
  • கல்யாணம் கழிந்தால் கைச்சிமிழ் கிட்டாது
  • கல்யாணம், கார்த்திகை, சீர், செனத்தி
  • கல்யாணம் செய்கிறதும் கதவைச் சாத்துகிறதும்
  • கல்யாணம் செய்தும் சந்நியாசியா?
  • கல்யாணம் பண்ணவில்லையென்று களிப்பு: ஊர்வலம் வரவில்லையென்று உளப்பு
  • கல்யாணம் பண்ணாமல் பைத்தியம் தீராது: பைத்தியம் தீராமல் கல்யாணம் ஆகாது
  • கல்யாணம் பண்ணிக்கொள் என்றால், நீயே பெண்டாட்டியாய் இரு என்றது போல
  • கல்யாணம் பண்ணியும் சந்நியாசி, கடன் வாங்கியும் பட்டினி
  • கல்யாணம் பண்ணின வீட்டில் ஆறு மாசம் கருப்பு
  • கல்யாணம் பண்ணும் வரையில் பிள்ளை; கண்ணை மூடும் வரையில் பெண்
  • கல்யாணம் போவதும் கட்டி அழுவதும் வட்டியில்லாக் கடன்
  • கல்யாணம் முடிந்த பிறகு பந்தலில் வேலை என்ன?
  • கல்யாணம் என்றால் ஆணுக்கு கால்கட்டு; பெண்ணுக்கு நூல்கட்டு.
  • கல்யாணமும் வேண்டாம்; கல்லெடுப்பும் வேண்டாம்
  • கல்யாண மேடையில் மணப்பெண் அமர கழுத்தில் தாலி ஏறியது போல
  • கல்யான வீட்டில் ஆறு மாதம் கருப்பு
  • கல்யாண வீட்டில் கட்டி அழுகிறவள் இழவு வீட்டில் விட்டுக் கொடுப்பாளா?
  • கல்யாண வீட்டிலே கட்டி அழலாமா?
  • கல்யாண வீட்டிலே பந்தற்காலைக் கட்டி அழுகிறவன் செத்த வீட்டில் சும்மா இருப்பாளா?
  • கல்யாண வீட்டிலே பிள்ளை வளர்த்தாற்போல்
  • கல்யாண வீட்டிற்குப் போய் அறியான்; மேளச்சத்தம் கேட்டு அறியான்
  • கல்யாண வீட்டுக் கறி அகப்பை, சாவு வீட்டுச் சோற்று அகப்பை
  • கல்யாணி என்கிற பெண்ணுக்குக் கல்யாணமும் வேண்டுமோ?
  • கல்லடி சித்தன் போன வழி காடு மேடு எல்லாம் தவிடுபொடி
  • கல்லன் கரியும் கொல்லன் குசுவுமாய்ப் போச்சு
  • கல்லா ஒருவன் குல நலம் பேசுதல் நெல்லுடன் பிறந்த பதராகும்மே
  • கல்லாடம் படித்தவனோடு சொல்லாடாதே
  • கல்லாதவரே கண் இல்லாதார்
  • கல்லாதார் செல்வத்திலும் கற்றார் வறுமை நலம்
  • கல்லாமல் குல வித்தை பாதி வரும்
  • கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன்
  • கல்லார் உறவிலும் கற்றார் பகை நலம்
  • கல்லார் உறவு அகல்; காமக் கடல் கட
  • கல்லாலே கட்டிச் சாந்தாலே பூசியிருக்கிறதா?
  • கல்லில் நார் உறிப்பவன்
  • கல்லில் நெல் முளைத்தாற்போல
  • கல்லிலும் வன்மை கண்மூடர் நெஞ்சு
  • கல்லிலே நார் உரிக்கிறது போல
  • கல்லிலே வெட்டி நாட்டினது போல
  • கல்லின்மேல் இட்ட அம்புகளைப் போல
  • கல்லின்மேல் இட்ட கலம்
  • கல்லினுள் தேரையையும் முட்டைக்குள் குஞ்சையும் ஊட்டி வளர்ப்பது யார்?
  • கல்லுக் கிணற்றுக்கு ஏற்ற இருப்புத் தோண்டி
  • கல்லுக்கும் முள்ளுக்கும் அசையாது வெள்ளிக்கிழமைப் பிள்ளையார்
  • கல்லுக்குள் இருக்கிற தேரையையும் முட்டைக்குள் இருக்கிற குஞ்சையும் ஊட்டி வளர்க்கிறவர் யார்?
  • கல்லுக்குள் தேரையைக் காப்பாற்றவில்லையா?
  • கல்லுப் பிள்ளையாரைக் கடித்தால் பல்லுப் போம்
  • கல்லும் கரியும் கொல்லன் குசுவுமாய்ப் போச்சு
  • கல்லும் கரைய மண்ணும் உருக அழுதாள்
  • கல்லும் கரையுமே, கற்றூணும் இற்றுப் போமே!
  • கல்லும் காவேரியும் உள்ள மட்டும் வாழ்க!
  • கல்லும் தேங்காயும் சந்தித்தது போலப் பேசுகிறான்
  • கல்லுளிச் சித்தன் போன வழி காடு மேடெல்லாம் தவிடுபொடி
  • கல்லுளி மங்கா, கதவைத் திற
  • கல்லே தலையணை, கானலே பஞ்சு மெத்தை
  • கல்லை ஆகிலும் கரைக்கலாம்; கல்மனத்தைக் கரைக்கலாகாது
  • கல்லை இடறினாலும் கணக்கனை இடறாதே
  • கல்லை எதிர்த்தாலும் கணக்கனை எதிர்க்காதே
  • கல்லைக் கட்டிக் கொண்டு கசத்தில் இறங்குவது போல
  • கல்லைக் கட்டி முத்தம் கொடுத்தாற்போல
  • கல்லைக் கண்டால் நாயைக் காணோம்; நாயைக் கண்டால் கல்லைக் காணோம்
  • கல்லைக் கிள்ளிக் கை இழந்தது போலாம்
  • கல்லைக் கிள்ளினால் கை நோகும்
  • கல்லைக் குத்துவானேன்? கைநோகுதென்று அழுவானேன்?
  • கல்லைப் பிளக்கக் காணத்தை விதை
  • கல்லைப்போல் அகமுடையான் இருக்கக் கஞ்சிக்கு அழுவானேன்?
  • கல்லைப் போலக் கணவன் இருக்க நெற்சோற்றுக்கு அழுவானேன்?
  • கல்லைப் போலப் பெண்டாட்டி இருக்கக் கடப்பை அரிசிச் சோற்றுக்கு நிற்பானேன்?
  • கல்லோடு இடறினாலும் கணக்கனோடு இடறாதே
  • கல் வருகிற விசையைக் கண்டால் பல்லைச் சிக்கென மூட வேண்டும்
  • கல்வி அழகே அழகு
  • கல்வி இல்லாச் செல்வம் கற்பில்லா அழகு
  • கல்வி உள்ள வாலிபன் கன கிழவனே
  • கல்வி என்ற பயிருக்குக் கண்ணீர் என்ற மழை வேண்டும்
  • கல்வி ஒன்றே அழியாச் செல்வம்
  • கல்விக்காரப் பெண்ணாள் களைவெட்டப் போனாள்;களைக்கொட்டு இல்லையென்று மெனக்கெட்டுப் போச்சு
  • கல்விக்கு அழகு கசடு அற மொழிதல்
  • கல்வி கரை இல; கற்பவர் நாட் சில
  • கல்வி கற்கிறதைவிடக் கருத்தை ஆராய்கிறது நன்மை
  • கல்வி கற்றும் கழுநீர்ப் பானையில் கை இடுகிறது
  • கல் விதைத்து நெல் அறுத்தவர் யார்?
  • கல்வியிற் பெரியவன் கம்பன்
  • கல்வியும் குலமும் வெல்வது வினவின்
  • கல் விழுந்தாலும் விழும்; காய் விழுந்தாலும் விழும். கல் வீட்டில் இருக்கும் கடனும் தெரியாதாம்; கறுப்புப் புடைவையில் இருக்கும் அழுக்கும் தெரியாதாம்
  • கல்வீட்டுக்காரி போனால் கமுக்கம்; கூரை வீட்டுக்காரி போனால் கூச்சம்
  • கல உமி நின்றால் ஓர் அரிசி தட்டாதா?
  • கல உமி தின்றால் ஓர் அவல் கிடைக்காதா?
  • கலக்கத்தில் கலக்கம் கடன் கொண்டார் நெஞ்சக் கலக்கம்
  • கலக்கந்தை கட்டிக் காணப் போனால் இருகலக் கந்தை கட்டி எதிரே வந்தாள்
  • கலக்கம் இல்லா நெஞ்சுக்கு இனக்காப்பு என்ன?
  • கலக்கம்பு தின்றாலும் காடை காட்டிலே
  • கலக்கம்பு போட்டு வளர்த்தாலும் காடை காட்டிலே
  • கலக்க விதைத்தால் களஞ்சியம் நிறையும்; அடர விதைத்தால் போர் உயரும்
  • கலக்கிய தண்ணீரில் கெளிற்று மீன் வாய் திறந்து தவிப்பது போல
  • கலக்கினும் தண் கடல் சேறு ஆகாது
  • கலத்தில் இட்டாயோ, வயிற்றில் இட்டாயோ?
  • கலத்தில் சாதம் போட்டதும் காசிக்குப் போனவனும் வருவான்
  • கலகத்திலே புளுகாதவன் நரகத்திலே போவானாம்
  • கலகத்திலே புளுகாதவர் இல்லை
  • கலகத்திலே போயும் கால்மாடு தலைமாடா?
  • கலகம் கலந்தால் உலகம் கலங்கும்
  • கலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும்
  • கலகமே மெய்யானால் புளுகாதவன் பாவம்
  • கலத்தில் இட்டுக் கையைப் பிடிக்காதே
  • கலத்தில் சோற்றை இட்டுக் கையைப் பிடித்தாற்போல
  • கலத்துக்குத் தெரியுமா, கர்ப்பூர வாசனை?
  • கலந்த விதைப்புச் சிறந்த பலனைத் தரும்
  • கலப் பணத்தைக் காட்டிலும் ஒரு கிழப் பிணம் நல்லது
  • கலப் பயறு விதைத்து உழக்குப் பயிர் விளைந்தாலும் புதுப் பயறு புதுப் பயறுதான்
  • கலப் பால் கறக்கலாம்; துளிப் பால் முலைக்கு ஏற்றலாமா?
  • கலப் பால் கறந்தாலும் கன்று முதலாகுமா?
  • கலப் பால் குடித்த பூனை ஆழாக்குப் பால் குடியாதா?
  • கலப் பால் குடித்த பூனை ஓர் உழக்காகிலும் கறக்கத் தருமா?
  • கலப் பால் கூடி ஒரு கன்று ஆகுமா?
  • கலப் பாலில் ஒரு துளி விஷம் கலந்தாற் போல
  • கலப் பாலுக்குத் துளி பிரை
  • கலப் பாலை ஒருமிக்கக் குடித்த பூனையை உழக்காகிலும் கறக்கச் சொன்னால் கறக்குமா?
  • கலப் பாலைக் காலால் உதைத்துவிட்டு விலை மோருக்கு வெளியே அலைகிறதா?
  • கலப்பு ஆனாலும் பூசப் பூசப் பொன் நிறம்
  • கலப்புல் தின்றாலும் காடை காட்டுக்குள்ளே
  • கலப்புழுவை நீக்கின கர்ணன்
  • கலம் கந்தை கொண்டு காண வந்தாள்; இருகலக் கந்தை கொண்டு எதிரே வந்தாள்
  • கலம் கலந்தால் குலம் கலக்கும்
  • கலம் கிடக்கிறது கழுவாமல்
  • கல நெல் கிடக்கிறது குத்தாமல்
  • கலம் குத்தினாலும் பதர் அரிசி ஆகாது
  • கலம் குத்துகிறவள் காமாட்டி, கப்பி குத்துகிறவள் சீமாட்டி
  • கலம் பதரைக் கத்தினாலும் அரிசி ஆகாது
  • கலம் பாலுக்குத் துளிப் பிரை
  • கலம் போனதும் அல்லாமல் கண்ணுக்கும் மூக்குக்கும் வந்ததுபோல
  • கலம் மா இடித்தவள் பாவி, கப்பி இடித்தவள் புண்ணியவதியா?
  • கலவன் கீரை பறிப்பது போலப் பேசுகிறாள்
  • கலிக்குப் புதுமையான காரியம் இருக்கிறது
  • கலிக்கும் கிலிக்கும் கந்தனை எண்ணு
  • கலி காம தேனு
  • கலி காலத்திலே கண்ணுக்கு முன் காட்டும்
  • கலியன் பாற்சோறு கண்டது போல
  • கலெக்டரோடு வழக்குக்குப் போனாலும் கணக்கனோடு வம்புக்குப் போகக் கூடாது
  • கலை பல கற்றாலும் மலைப்பது போல இருக்கும்
  • கலையும் மப்பைக் கண்டு கட்டி இருந்த விதையை வட்டிக்கு விட்டானாம்
  • கலையும் மப்பைக் கண்டு கரைத்த மாவை வட்டிக்கு விட்டதுபோல
  • கவ்வை சொல்லின் எவ்வர்க்கும் பகை
  • கவடு இருந்த நெஞ்சும் களை இருந்த பயிரும் கடைத்தேறா
  • கவண் எறி நிலை நில்லாது; கண்டவன் தலையை உடைக்கும்
  • கவண் எறி நெறியில் நில்லாதே; கண்டவன் தலையை உடைக்கும்?
  • கவரைச் செட்டி மேலே கழுதை புரண்டு ஏறினாற் போல
  • கவலை இல்லாக் கஞ்சி கால் வயிற்றுக்குப் போதும்
  • கவலை உடையாருக்குக் கண் உறக்கம் வராது
  • கவி அறியாவிடில் ரவியும் அறியான். கவி கண் காட்டும்
  • கவி கொண்டாருக்குக் கீர்த்தி; அதைச் செவி கொள்ளாருக்கு அபகீர்த்தி
  • கவி கொண்டாருக்கும் கீர்த்தி: கலைப்பாருக்கும் கீர்த்தியா?
  • கவிதை எழுதின கை கணக்கு எழுதுகிறது
  • கவிழ்ந்த பால் கலம் ஏறாது
  • கவிந்திரானாம் கஜேந்திராணாம் ராஜாவே நிர்பயோகி
  • கவுண்டன் கல்யாணம் ஒன்று இரண்டாய் முடிந்து போச்சு
  • கவுண்டன் வீட்டு எச்சில் இலைக்கு கம்பன் வீட்டு நாய்கள் எல்லாம் அடித்துக் கொள்கின்றன
  • கவைக்கு உதவாத காரியம்
  • கவைக்குக் கழுதையையும் காலைப் பிடி
  • கவைக்குத் தகாத காரியம் சீமைக்குத் தகுமா?
  • கவையை ஓங்கினால் அடி இரண்டு
  • கவையைப் பற்றிக் கழுதையின் காலைப் பிடி
  • கழனிக்கு அண்டை வெட்டிப் பார்: கண்ணுக்கு மை இட்டுப் பார்
  • கழனியில் விழுந்த கழுதைக்கு அதுவே கைலாசம்
  • கழி இருந்தால் கழுதையை மேய்த்துக் கொள்ளலாம்
  • கழிச்சலும் விக்கலும் சேர்ந்தால் நம்பப் படாது
  • கழித்த பாக்குக் கொடுக்காத பெரியாத்தாள் கடற்கரை வரை வந்து வழி விட்டாளாம்
  • கழு ஒன்று, களவு ஆயிரம்
  • கழுக்கு மொழுக்கு என்று இருக்கிறான்
  • கழுக்கு மொழுக்கு என்று கட்டுருக் காளை போல
  • கழுகாய்ப் பிடுங்குகிறான்
  • கழுகுக்கு மூக்கிலே வேர்த்தாற் போல
  • கழுத்தில் இருக்கிறது ருத்திராட்சம், கையிலே இருக்கிறது கொடிய நகம்
  • கழுத்தில் இருக்கிறது ருத்திராட்சம்; மடியில் இருப்பது கன்னக் கோல்
  • கழுத்தில் தாலி ஏறிவிட்ட பின் குடித்தனம் நடத்துவதே பெண் மரபு
  • கழுத்தில் மூன்று முடிச்சுப் போட்டவனுக்கு முந்தி விரிப்பதே கற்பு
  • கழுத்திலே கரிமணி இல்லை; பெயர் முத்துமாலை
  • கழுத்திலே குத்துகிறது கண் கெட்டவனுக்குத் தெரியாதா?
  • கழுத்திலே தாலி ஏறினால் நாய்மாதிரி வீட்டில் கிடக்க வேண்டியது தானே?
  • கழுத்திலே தாலி கட்டிவிட்டால் மட்டும் போதுமா? சேர்ந்து குடும்பம் நடத்த வேண்டாமா?
  • கழுத்திலே தாலி. வயிற்றிலே பிள்ளை.
  • கழுத்துக்குக் கருகு மணி இல்லை; பெயர் முத்தாபரணம்
  • கழுத்திலே தாலி வடம்; மனத்திலே கரவடம்
  • கழுத்து அறுக்கக் கத்தி கையில் கொடுத்தது போல
  • கழுத்துக்குக் கீழே போனால் கஷ்டம்
  • கழுத்துக்குமேல் கத்தி வந்திருக்கச்சே செய்ய வேண்டியது என்ன?
  • கழுத்துக்குமேல் சாண் போனால் என்ன? முழம் போனால் என்ன?
  • கழுத்து மாப்பிள்ளைக்குப் பயப்படாவிட்டாலும் வயிற்றுப் பிள்ளைக்குப் பயப்பட வேண்டும்
  • கழுத்து வெளுத்தாலும் காக்கை கருடன் ஆகுமா?
  • கழுத்தைக் கொடுத்தாச்சு: கைவிலங்கு போட்டாச்சு; பத்து நாள் சிறையில் பதுங்கிக் கிடக்க வேணும்
  • கழுத்தைக் கொடுத்தாலும் எழுத்தைக் கொடாதே
  • கழுத்தை நீட்டாமல் தாலி ஏறுமா?
  • கழுத்தை நீட்டியவளுக்கு இன்னமும் தலை நிமிரவில்லை.
  • கழுதை அறியுமா, கந்தப்பொடி வாசனை?
  • கழுதை உழவுக்கு வராது
  • கழுதை உழுகிறவன் குடியானவனா?
  • கழுதை உழுது கம்பு விளையுமா? கண்டியான் உழுது நெல் விளையுமா?
  • கழுதை உழுது குறவன் குடி ஆனானா?
  • கழுதை உழுது வண்ணான் குடி ஆனானா?
  • கழுதைக் காமம் கத்தினால் தீரும்; நாய்க் காமம் அலைந்தால் தீரும்
  • கழுதைக்கு உபதேசம் காதில் ஏறுமா?
  • கழுதைக்கு உபதேசம் காதிலே ஓதினாலும் காள் காள் என்ற புத்தியை விடாது
  • கழுதைக்கு உபதேசம் காதிலே சொன்னாலும் அவயக் குரலன்றி அங்கொன்றும் இல்லை
  • கழுதைக்கு உபதேசம் காதிலே சொன்னாலும் அவயக் குரலே ஒழியச் சவைக்குரல் இல்லையாம்
  • கழுதைக்கு உபதேசம் பண்ணினால் அபத்தக் குரலைத் தவிர நல்ல குரல் இல்லை
  • கழுதைக்கு என் கடிவாளம்?
  • கழுதைக்குக் காது அறுந்து, நாய்க்கு வால் அறுத்தது போல
  • கழுதைக்குச் சேணம் கட்டினால் குதிரை ஆகுமா?
  • கழுதைக்குத் தெரியுமா கரும்பு ருசி?
  • கழுதைக்குப் பரதேசம் குட் டிச் சுவர்
  • கழுதைக்குப் பின்னால் போகாதே; எஜமானுக்கு முன்னால் போகாதே
  • கழுதைக்கு வரி கட்டினால் குதிரை ஆகுமா?
  • கழுதைக்கு வாழ்க்கைப்பட்டு உதைக்கு அஞ்சலாமா?
  • கழுதை கத்து என்றால் கத்தாதாம்; தானாகக் கத்துமாம்
  • கழுதை கெட்டால் குட்டிச் சுவர்; நாய் கெட்டால் குப்பைத் தொட்டி
  • கழுதை தப்பினால் குட்டிச் சுவர்
  • கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனது போல
  • கழுதை நினைத்ததாம் கந்தலும் கதக்கலும்
  • கழுதை தினைத்ததாம் கெண்டை போட்ட முண்டாசு
  • கழுதைப் பாரம் வண்ணானுக்கு என்ன தெரியும்
  • கழுதைப் பால் குடித்தவன் போல் இருக்கிறான்
  • கழுதைப் புட்டை ஆனாலும் கைநிறைய வேண்டும்
  • கழுதைப் புண்ணுக்குத் தெருப்புழுதி மருந்து
  • கழுதைப் பொதியில் உறை மோசமா?
  • கழுதைப் பொதியில் ஐங்கலம் மாறாட்டமா?
  • கழுதை புரண்ட களம் போல
  • கழுதை புரண்டால் காடு கொள்ளாது
  • கழுதை புவியில் இருந்தால் என்ன? பாதாளத்தில் இருந்தால் என்ன?
  • கழுதை மயிர் பிடுங்கித் தேசம் கட்டி ஆள்கிறதா?
  • கழுதை மூத்திரத்தை நம்பிக் கட்டுச் சோற்றை அவிழ்க்கிறதா?
  • கழுதைமேல் ஏறி என்ன? இறங்கி என்ன?
  • கழுதைமேல் ஏறியும் பெருமை இல்லை: இறங்கியும் சிறுமை இல்லை
  • கழுதையாகப் போய்க் கட்டெறும்பாய்த் திரும்பி வந்தது
  • கழுதையாய்ப் பிறந்தாலும் காஞ்சீபுரத்திலே பிறக்க வேணும்
  • கழுதையின் எறியைக் கழுதைதான் தாங்க வேணும்
  • கழுதையின் காதிலே கட்டெறும்பை விட்டாற் போல
  • கழுதையும் குதிரையும் சரி ஆகுமா?
  • கழுதையும் நாயும் சேர்ந்து கத்தினாற்போல
  • கழுதையும் பணமும் சேர்ந்து வந்தால் பணத்தை வாங்கிக் கொண்டு கழுதையைத் துரத்தி விடு
  • கழுதையைக் கட்டி ஓமம் வளர்த்தது போல
  • கழுதையைக் கொண்டு உழுது குறவன் உழவன் ஆனான்
  • கழுதையையும் குதிரையையும் பிணைத்தாற் போல
  • கழுதை லத்தி கை நிறைய
  • கழுதை வளையற்காரன் கிட்டப் போயும் கெட்டது; வண்ணான் கிட்டப் போயும் கெட்டது
  • கழுதை வாலைப் பிடித்துக் கரை ஏறுகிறதா?
  • கழுதை விட்டை ஆனாலும் கைநிறைய வேண்டும்
  • கழுதை விட்டை கை நிரம்பினால் போதும் என்ற கதை
  • கழுதை விட்டையிலே மேல் விட்டை வேறே; அடி விட்டை வேறேயா?
  • கழுதை விட்டையைக் கைநிறையப் பொறுக்கினது போல
  • கழுநீர்த் தொட்டி நாய் போல
  • கழுநீர்ப் பானையில் விழுந்த பல்லியைப் போல
  • கழுநீருக்கு அண்டை வீட்டைப் பார்; கண்ணுக்கு மையிட்டுப் பார்
  • கழுவிக் கழுவி ஊற்றினாலும் கவிச்சு நாற்றம் போகாது
  • கழுவிக் கழுவிப் பின்னும் சேற்றை மிதிக்கிறதா?
  • கழுவிக் குளித்தாலும் காக்கை நிறம் மாறாது; உருவிக் குளித்தாலும் ஊத்தை நாற்றம் போகாது
  • கழுவிய காலைச் சேற்றில் வைக்கிறதா?
  • கழுவில் இருந்து கை காட்டுவான்
  • கழுவிலே நெய் உருக்குகிற கள்ளி முண்டை
  • கழுவுக்கு ஏற்ற கோமுட்டி
  • கழுவுகிற மீனிலும் நழுவுகிற மீன்
  • கழைக் கூத்து ஆடினாலும் காசுக்குக் கீழேதான் வரவேணும்
  • கழைமேல் ஏறி ஆடினாலும் கீழே வந்துதான் பிச்சை கேட்க வேணும்
  • கள் உண்ட குரங்கு போல
  • கள் உண்ட நாய் போல
  • கள் கலப்பணத்திலும் கர்ப்பூரம் கால் பணத்திலும்
  • கள் குடித்தவன் பேச்சு, பொழுது விடிந்தால் போச்சு
  • கள் குடித்தவனுக்குக் கள் ஏப்பம்
  • கள் விற்ற காற்காசிலும் அமிர்தம் விற்ற அரைக் காசு நேர்த்தி
  • கள் விற்றுக் கலப்பணம் சம்பாதிப்பதைவிடக் கற்பூரம் விற்றுக் காற்பணம் சம்பாதிப்பது மேல்
  • கள்ளத்தனம் எல்லாம் சொல்லத்தானே போகிறேன்?
  • கள்ள நெஞ்சம் துள்ளிக் குதிக்கும்
  • கள்ள நெஞ்சு காடு கொள்ளாது
  • கள்ளப் பிள்ளையிலும் செல்லப் பிள்ளை உண்டா?
  • கள்ளப் பிள்ளையும் செல்லப் பிள்ளையும் ஒன்றா?
  • கள்ளப் புருஷனை நம்பிக் கணவனைக் கைவிடலாமா?
  • கள்ளம் பெரிதா? காப்புப் பெரிதா?
  • கள்ளம் போனால் உள்ளது காணும்
  • கள்ள மனம் துள்ளும்
  • கள்ள மாடு சந்தை ஏறாது
  • கள்ள மாடு துள்ளும்
  • கள்ள மாப்பிள்ளைக்குக் கண்ணீர் முந்தும்
  • கள்ள வாசலைக் காப்பானைப் போல
  • கள்ள விசுவாசம், கழுத்தெல்லாம் செபமாலை
  • கள்ளன் அக்கம் காடு கொள்ளாது
  • கள்ளன் ஆனால் கட்டு; வெள்ளன் ஆனால் வெட்டு
  • கள்ளன் உறவு உறவு அல்ல; காசா விறகு விறகு அல்ல
  • கள்ளன் கொண்ட மாடு எத்துறை போய் என்ன?
  • கள்ளன் செய்த சகாயம் காதை அறுக்காமல் கடுக்கனைக் கொண்டான்
  • கள்ளன் பிள்ளைக்குக் கள்ளப் புத்தி
  • கள்ளன் பின் போனாலும் குள்ளன் பின் போகக் கூடாது
  • கள்ளன் புத்தி கன்னக் கோலிலே
  • கள்ளன் பெண்சாதி கைம்பெண்டாட்டி
  • கள்ளன் பெரியவனா? காப்பான் பெரியவனா?
  • கள்ளன் போன மூன்றாம் நாள் கதவை இழுத்துச் சாத்தினானாம்
  • கள்ளன் மறவன் கலந்த அகம்படியான், மெல்ல மெல்ல வந்த வெள்ளாளன்
  • கள்ளன் மனையாளைக் களவுப் பொருளைக் குறி கேட்கலாமா?
  • கள்ளன் மனைவி கைம்பெண் என்றும்
  • கள்ளனுக்கு ஊர் எல்லாம் பகை
  • கள்ளனுக்குக் களவிலே சாவு
  • கள்ளனுக்குக் காண்பித்தவன் பகை
  • கள்ளனுக்குக் கூ என்றவன் பேரிலே பழி
  • கள்ளனுக்குத் தெரியும் களவு முறை
  • கள்ளனுக்குத் தோன்றும் திருட்டுப் புத்தி
  • கள்ளனுக்குப் பாதி, கறிக்குப் பாதி
  • கள்ளனுக்கும் பாதி, வெள்ளனுக்கும் பாதி
  • கள்ளனுக்குள் குள்ளன் பாய்ந்தது போல
  • கள்ளனும் ஆகி விளக்கும் பிடிக்கிறான்
  • கள்ளனும் உண்டு, பயமும் இல்லை என்கிறது போல
  • கள்ளனும் தோட்டக்காரனும் ஒன்று கூடினால் விடியு மட்டும் திருடலாம்
  • கள்ளனும் வெள்ளனும் ஒன்று
  • கள்ளனை ஆரும் நள்ளார் என்றும்
  • கள்ளனை உள்ளே விட்டுக் கதவைச் சார்த்தினாற் போல
  • கள்ளனைக் காட்டிக் கொடுத்தவன் பகை
  • கள்ளனைக் காவல் வைத்தது போல
  • கள்ளனைக் குள்ளன் கிள்ளியது போல
  • கள்ளனைக் குள்ளன் பிடித்தான்
  • கள்ளனைக் கொண்டுதான் கள்ளனைப் பிடிக்க வேணும்
  • கள்ளனைத் தேடிய கள்ளப் பசுப் போல
  • கள்ளனை நம்பினாலும் நம்பலாம்; குள்ளனை நம்பக்கூடாது
  • கள்ளனையும் தண்ணீரையும் கட்டி விட வேணும்
  • கள்ளனையும் புகையிலையையும் கட்டித் தீர்
  • கள்ளனையும் வெள்ளனையும் கட்டி விடு
  • கள்ளா வா, புலியைக் குத்து
  • கள்ளி என்னடி கல் இழைப்பது? காதில் இருப்பது பித்தளை
  • கள்ளிக்கு ஏன் முள் வேலி? கழுதைக்கு ஏன் கடிவாளம்?
  • கள்ளிக்குக் கண்ணீர் முந்தும்; கொள்ளிக்கு வாய் முந்தும்
  • கள்ளிக்குக் கண்ணீர் முந்தும்; அவள் கணவனுக்குக் கை முந்தும்
  • கள்ளிக்குக் கல நீர் கண்ணிலே
  • கள்ளிக்குத் தண்ணீர் கண்ணீர்; நீலிக்குத் தண்ணிர் நிமையிலே
  • கள்ளிக்கு நாடு எல்லாம் காடு
  • கள்ளிக்கும் கற்றாழைக்கும் களை வெட்டுவதா?
  • கள்ளிக்கு முள்வேலி இடுவானேன்?
  • கள்ளிக்கு வேலி ஏன்? சுள்ளிக்குக் கோடாலி ஏன்?
  • கள்ளிக் கொம்புக்கு வெள்ளிப்பூண் கட்டினது போல
  • கள்ளிகள் எல்லாம் வெள்ளிகள் ஆவார்; காசு பணத்தாலே; வெள்ளிகள் எல்லாம் கள்ளிகள் ஆவார், விதியின் வசத்தாலே
  • கள்ளிச் செடிக்கு மகாவிருட்சம் என்று பெயர் வைத்தது போல
  • கள்ளி நீண்டு வளர்ந்தால் காய் உண்டோ? கனி உண்டோ?
  • கள்ளிப் பூவைக் கட்டிச் சூட்டினது போல
  • கள்ளி பெருத்து என்ன? காய் ஏது? பழம் ஏது?
  • கள்ளியிலும் சோறு: கற்றாழையிலும் சோறு
  • கள்ளி வயிற்றில் அகில் பிறக்கும்
  • கள்ளி வேலியே வேலி; கரிசல் நிலமே நிலம்
  • கள்ளுக் குடித்தவன் கொள்ளுப் பொறுக்கான்
  • கள்ளுக் குடியனுக்கு வாய் என்றும் பிட்டம் என்றும் தெரியாது
  • கள்ளுக் கொள்ளா வயிறும் இல்லை; முள்ளுக் கொள்ளா வேலியும் இல்லை
  • கள்ளும் சூதும் இருக்கும் இடத்தில் விலை மகளும் கள்ளனும் கண்டிப்பாய் இருப்பார்கள்
  • கள்ளை ஊற்றி உள்ளதைக் கேள்
  • கள்ளைக் காலால் உதைத்தது தவறா?
  • கள்ளைக் குடித்தவன் உள்ளதைக் கக்குவான்
  • கள்ளைக் குடித்தவனுக்குக் கள் ஏப்பம்: பாலைக் குடித்தவனுக்குப் பால் ஏப்பம்
  • கள்ளைக் குடித்தால் உள்ளதைச் சொல்வான்
  • கள்ளைக் கொடுத்துக் காரியத்தை அறி
  • கள்ளை விட்டுக் காட்டுத் தேனைக் குடித்தது போல
  • களக்காடு
  • களக்காடு மடக்ராமம், அன்ன வஸ்த்ரம் ஜலம் நாஸ்தி; நித்யம் கலக மேவச
  • களஞ்சியத்தில் பெருச்சாளி சாப்பிடுவது போல
  • களம் காக்கிறவனை மிரட்டுவானாம், போர் பிடுங்குகிறவன்
  • களர் உழுது கடலை விதை
  • களர் கெடப் பிரண்டை இடு
  • களர் நிலத்தில் கரும்பு வை
  • களர் நிலத்திலே சம்பா விளையுமோ?
  • களர் முறிக்க வேப்பந் தழை
  • களரை ஒழிக்கக் காணம் விதை
  • களரை நம்பிக் கெட்டவனும் இல்லை; மணலை நம்பி வாழ்ந்தவனும் இல்லை
  • களவாண்டு பிழைப்பதிலும் கச்சட்டம் கழுவிப் பிழைக்கலாம்
  • களவு ஆயிரம் ஆனாலும் கழு ஒன்று
  • களவுக்கு ஒருவர்; கல்விக்கு இருவர். களவு கற்றாலும் தன்னைக் காக்க வேண்டும்
  • களவு கொண்டு ஆபரணம் பூண்டாற் போல
  • களவும் கற்று மற
  • களி கிளறிக் கல்யாணம் செய்தாலும் காளியண்ணப் புலவனுக்குப் பத்துப் பணம்
  • களியப் பேட்டை களக்ராமம்
  • களிறு பிளறினால் கரும்பைக் கொடு
  • களிறு வாயில் அகப்பட்ட கரும்பு மீளுமா?
  • களை எடாப் பயிர் கால் பயிர்
  • களை எடாப் பயிரும் கவடுள்ள நெஞ்சும் கடைத்தேறா
  • களை எடுக்காதவன் கபோதி
  • களை எடுத்தவன் கைமூடி உள்ளான்
  • களை கிளைத்தால் போச்சு: பயிர் கிளைத்தால் ஆச்சு
  • களைத்தவன் கம்பைத் தின்ன வேண்டும். களைந்த பழம் தானே விழும்
  • களை பிடுங்காப் பயிர் கால் பயிர்
  • களை மூடிக்கொண்டது போல
  • களையக் கூடாததைக் கண்டால் அடிபெயர்ந்து அப்புறம் போ
  • களையக் கூடாததைக் கண்டியாமல் சகித்துக் கொள்
  • களையை முளையிலே கிள்ளு
  • கற்க கசடு அறக் கற்க
  • கற்க கசடு அற; கற்றபின் அதுவே இனிப்பு
  • கற்கண்டால் செய்த எட்டிக் கனியும் கசக்குமா?
  • கற்கையில் கல்வி கசப்பு: கற்றபின் அதுவே இனிப்பு
  • கற்பகத் தருவைச் சார்ந்த காகமும் அமுதம் உண்ணும்
  • கற்பகத்தைச் சார்ந்தும் காஞ்சிரங்காய் கேட்கலாமா?
  • கற்பக விரும் சத்தண்டை போயும் காஞ்சிரங்காய் வாங்கினாற் போல்
  • கற்பனை கல்லைப் பிளக்கும்
  • கற்பாறையில் அடிக்கும் முளைக் கச்சானது அப்பாறையில் இறங்காதது போல
  • கற்பித்தவன் கண்ணைக் கொடுத்தவன்
  • கற்பித்தவன் காப்பாற்றுவான்
  • கற்பித்தவனுக்குக் காக்கக் கடன்
  • கற்பித்தவனுக்குக் காக்க வல்லமை இல்லையா?
  • கற்பு இல்லா அழகு வாசனை இல்லாப் பூ
  • கற்பு எனப்படுவது சொல் தவறாமை
  • கற்ற இடத்திலா வித்தையைக் காட்டுகிறது?
  • கற்றது எல்லாம் வித்தை அல்ல; பெற்றது எல்லாம் பிள்ளை அல்ல. நட்டது எல்லாம் பயிர் அல்ல
  • கற்றது கடுகளவு: கல்லாதது கடல் அளவு
  • கற்றது கை மண் அளவு: கல்லாதது உலகளவு
  • கற்றது சொல்வான்; மற்று என்ன செய்வான்?
  • கற்றதைக் காய்ச்சியா குடிக்கப் போகிறாய்?
  • கற்றலிற் கேட்டலே நன்று
  • கற்றவர் கோபம் நீர்ப்பிளவு போல் மாறும்
  • கற்றவன் உண்பான்; பெற்றவளும் உண்பாள்
  • கற்றவனிடத்திலா வித்தையைக் காட்டுவது?
  • கற்றவனுக்கு எந்த வித்தையும் கால் நாழிகையில் வரும்
  • கற்றவனுக்கு மயிர் அத்தனை: கல்லாதவனுக்கு மலை அத்தனை
  • கற்றவனும் உண்பான்; பெற்றவனும் உண்பான்
  • கற்ற வித்தையைக் காய்ச்சிக் குடிக்கிறவன் போல
  • கற்ற வித்தையைப் பெற்ற தாயிடம் காட்டுவதா?
  • கற்றறி மூடன்
  • கற்றறிவு இல்லாத மாந்தர் கதிகெட்ட மடையர் ஆவார்
  • கற்றாழை காய்ச்சியா குடிக்கப் பார்க்கிறாய்?
  • கற்றாழைச் சோறும் வெண்டைக்காய்க் குழம்பும் விளக்கெண்ணெய்த் தாளிதமும் சேர்ந்தாற் போல
  • கற்றாழை சிறுத்தாலும் ஆனை அடி வைக்காது
  • கற்றாழை நாற்றமும் பித்தளை வீச்சும் போகா
  • கற்றது அறிந்தார் கண்டது அடக்கம்
  • கற்றுக் கற்றுச் சொல்லியும் காரியத்தின்மேல் கண்
  • கற்றுக் கற்றுப் பேசாதே
  • கற்றுக் கொடுத்த சொல்லும் கட்டிக் கொடுத்த சோறும் எத்தனை நாள் நிற்கும்?
  • கற்றும் கற்றறி மோழை; கண் இருந்தும் குருடு
  • கற்றோர் அருமை கற்றோர் அறிவர்
  • கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு
  • கறக்க ஊறும் ஆவின் பால். கற்க ஊறும் மெய்ஞ்ஞானம்
  • கறக்கிறது நாழிப் பால்; உதைக்கிறது பல்லுப் போக
  • கறக்கிற பசுவையும் கைக் குழந்தையையும் கண்ணாரப் பார்க்க வேண்டும்
  • கறக்கிற மாட்டைக் கள்ளன் கொண்டு போனால் வறட்டு மாடு மகாலட்சுமி ஆகும்
  • கறந்த பால் கறந்த படியே பேசு
  • கறந்த பால்போல் பேசுகிறான்
  • கறந்த பால் முலைக்கு ஏறுமா?
  • கறந்த பாலும் எச்சில்; பிறந்த பிள்ளையும் எச்சில்
  • கறந்த பாலைக் காக்கையும் தொடாது
  • கறந்த பாலைக் காய்ச்சாமல் குடித்தால் காச வியாதி தானே வரும்
  • கறந்த மேனியாய்ப் பேசுகிறது
  • கறவை உள்ளான் விருந்துக்கு அஞ்சான்
  • கறவை மாடு கண்ணுக்குச் சமானம்
  • கறிக்கு அலைந்தவன் பீர்க்குப் போடு
  • கறிக்கு இல்லாத வாழைக்காய் கட்டித் தொங்குகிறதாம்
  • கறிக்கு இல்லாத வாழைக்காய் பந்தலிலே கட்டித் தொங்கிற்றாம்
  • கறிக்கு உழக்கு நெய் வார்த்தாலும் கண்ணாரக் கண்டதைச் சொல்
  • கறிக்குக் கலநெய் வார்த்தாலும் கணக்கோடே வார்க்க வேண்டும்
  • கறிக்குக் கறி நெய் விட்டாலும் கணக்குக் கணக்காய் இருக்க வேணும்
  • கறி மீனுக்காகக் குளத்தை வெட்டி விடுவதா?
  • கறியிலே உயர்த்தி கத்தரிக்காய்; உறவிலே உயர்த்தி சின்னாயி
  • கறியிலே கத்தரிக்காய்; உறவிலே சிற்றம்மை
  • கறி வேப்பிலை கண்போல்
  • கறுத்தது எல்லாம் தண்ணீர்: வெளுத்தது எல்லாம் பால்
  • கறுத்த பார்ப்பானையும் வெளுத்த பறையனையும் நம்பாதே
  • கறுத்த மூஞ்சியும் வெளுத்த சோறும்
  • கறுப்பாய் இருந்தாலும் சந்திரன் சந்திரன்தான்
  • கறுப்பிலும் குறிப்பு அழகு
  • கறுப்புக்கு நகை பூட்டிக் கண்ணாலே பார்
  • கறுப்புக்கு நகை போட்டுக் காதவழி நின்று பார்; சிவப்புக்கு நகை போட்டுச் செருப்பால் அடி
  • கறுப்பு நாய் வெள்ளை நாய் ஆகுமா?
  • கறுப்புப் பார்ப்பானையும் சிவப்புப் பறையனையும் நம்பக் கூடாது
  • கறுப்பும் வெள்ளையும் கண்ணுக்குத் தெரியாவா?
  • கறுப்பு மாடு கால் மாடு
  • கறுப்பு வெளுப்பு ஆகாது; கசப்பு இனிப்பு ஆகாது
  • கறுப்பே ஓர் அழகு; காந்தலே ஒரு ருசி
  • கறுப்பைக் கண்டு சிரிக்காதே
  • கறுமுறு காந்தப்படலம் வாசிக்கிறார் கவிராயர்
  • கறையான் புற்றில் அரவம் குடிகொண்டது போல
  • கறையான் புற்று எடுக்கப் பாம்பு குடி புகுகிறது போல
  • கறையான் புற்றுப் பாம்புக்கு உதவாது
  • கறையானும் வாய் ஈரம் கொண்டு பிழைப்பது போல
  • கன்மத்தினால் சாதியன்றிச் சன்மத்தினால் இல்லை
  • கன்மத்தினால் வந்தது தன்மத்தினால் போக வேண்டும்
  • கன்யாகுமரி முதல் கருக்கரை வரை
  • கன்றின் கீழேயும் கடன்காரன் கீழேயும் நிற்காதே
  • கன்றும் ஆடும் களத்தில் படுத்தால் வைக்கோலும் இல்லை; செத்தையும் இல்லை
  • கன்று இருக்கக் காசு அத்தனை பால் கறவாப் பசு, கன்று செத்த பிறகு கலப்பால் கறக்குமா?
  • கன்று இருக்கச்சே கரண்டிப் பால் இல்லை; கன்று செத்த பிறகா கலப் பால் கறக்கும்?
  • கன்று இருக்கையில் கறவாத பசு கன்று செத்த பிறகு கறக்குமா?
  • கன்று உள்ளபோதே காணோம்; செத்த பிறகா கொட்டப் போகிறது?
  • கன்றுக் குட்டி களம் படுக்குமா?
  • கன்றுக்குட்டி கிட்டவும் கடன்காரன் கிட்டவும் இருக்கக் கூடாது
  • கன்றுக் குட்டி பயம் அறியாது
  • கன்றுக்குட்டி மன்றைத் தின்று மன்று மன்றாய்ப் பேன்றது
  • கன்றுக் குட்டியை அவிழ்க்கச் சொன்னார்களா? கட்டுத் தறியைப் பிடுங்கச் சொன்னார்களா?
  • கன்றுக்குப் புல் பிடுங்கியது போலவும் தென்னைக்குக் களை எடுத்தது போலவும்
  • கன்றுகளாய்க் கூடிக் களம் பறிக்கப் போனால் வைக்கோல் ஆகுமா?
  • கன்று கூடிக் களம் அடித்தால் வைக்கோலும் ஆகாது; கற்றையும் ஆகாது
  • கன்று கெட்டால் காணலாம் தாய் அருகே
  • கன்று செத்தது கமலம்; மாடு செத்தது நிமிளம்
  • கன்று செத்துக் கைமேலே கறக்கலாமா?
  • கன்றும் தாயும் காடு ஏறி மேய்ந்தால் கன்று ஒரு பக்கம், தாய் ஒரு பக்கம்
  • கன்று தின்னப் போரும் பசங்கள் தின்னப் பந்தியும்
  • கன்றும் பசுவும் காடு ஏறி மேய்ந்தால் கன்று கன்று வழியே; பசு பசு வழியே
  • கன்றை இழந்த பசுவைப் போல. கன்றைக் கண்டு ஓடிவரும் பசுவைப் போல
  • கன்றைத் தேடிப் பசு தவிக்கிறது போல
  • கன்றைப் பார்த்துப் பசுவைக் கொள்
  • கன்றைப் பிரிந்த பசுவைப் போல
  • கன்றை விட்டுக் கட்டுத்தறியைப் பிடித்தது போல
  • கன்றை விட்டுக் கல்யாணம் போவதா?
  • கன்றை விட்டு மாட்டை முட்ட விடுகிறது
  • கன்னக் கோலை மறைத்துக் கொண்டு கைச் செபமணியைச் செபிக்கிறது போ
  • கன்னத்தில் அடித்தாலும் கதறி அழச் சீவன் இல்லை
  • கன்னவாசல் கரிப் பானை போல்
  • கன்னா பின்னா என்று பிதற்றுகிறான்
  • கன்னான் கொண்டது. கடை கொண்டது
  • கன்னான் நடமாடக் குயவன் குடிபோவான்
  • கன்னானுக்கும் குயவனுக்கும் ஜன்மப் பகை
  • கன்னானுக்கு முன்னே கழுதை பரதேசம் போனாற் போல
  • கன்னி அறிவாளோ காம ரசம்?
  • கன்னி இருக்கும் பொழுது காளை மணை ஏறக் கூடாது
  • கன்னிக் காற்றுக் கடலும் வற்றும்
  • கன்னிச் செவ்வாய் கடலும் வற்றும்
  • கன்னிச் சேற்றைக் காய விடாதே; கண்ட மாட்டைக் கட்டி உழு
  • கன்னி நிலவிலே கட்டி ஓட்டடா கடா மாட்டை
  • கன்னிப் பூ மலரவில்லை
  • கன்னியாகுமரிக் கடலறியார்; சுசீந்திரம் தேரறியார்
  • கன்னியும் துக்கமும் தனிவழிப் போகா
  • கன்னி வளரக் காடு எரிய
  • கன ஆசை, கன நஷ்டம்
  • கன எலி வளை எடாது
  • கன எலி விளையாடாது
  • கனக மாரி பொழிந்தது போல
  • கனத்த உடைமைக்கு அனர்த்தம் இல்லை
  • கனத்தால் இனம் ஆகும்; மனத்தால் ஜனம் ஆகும்
  • கனத்திற்கு நற்குணம் சுமைதாங்கி
  • கனத்தைக் கனம் அறியும்; கருவாட்டுப் பொடியை நாய் அறியும்
  • கனத்தைக் கனம் காக்கும்; கருவாட்டுச் சட்டியைப் பூனை காக்கும்
  • கனத்தைக் கனம் காக்கும்; கறிச் சட்டியை நாய் காக்கும்
  • கனத்தைக் கனம் தேடும்; கருவாட்டுத் தலையை நாய் தேடும்
  • கனதாராளம்; மனசு குறுகல்
  • கனபாடிகள் வீட்டுக் கட்டுத்தறியும் வேதம் சொல்லும்
  • கன நேசம் கண்ணைக் கெடுக்கும்
  • கனம் கனத்தைப் பார்க்கும்; கருவாட்டுப் பானையைப் பூனை பார்க்கும்
  • கனம் செய்தால் இஷ்டம்; கன ஈனத்தால் நஷ்டம்
  • கன மழை பெய்தாலும் கருங்கல் கரையுமா?
  • கனமழை பெய்து காடு தளிர்த்தது போல
  • கண்மூடன் கைப் பொருள் இழப்பான்
  • கனவில் உண்ட சோறு பசி தீர்க்குமா?
  • கனவில் கண்ட கத்தரிக்காய் கறிக்கு ஆகுமா?
  • கனவில் கண்ட பணம் கைச் செலவுக்கு உதவுமா?
  • கனவில் கண்ட பணம் கடனைத் தீர்க்குமா?
  • கனவில் கண்ட பொருள் கானில் கண்ட புல்
  • கனவில் கண்ட பொருள் கைக்கு எட்டுமா?
  • கனவில் கண்டவனுக்குப் பெண் கொடுத்த கதை
  • கனவிலும் காக்கைக்கு மலம் தின்கிறதே நினைப்பு
  • கனவோ, நனவோ என்று ஐயுற்றான்
  • கனா முந்துறாத வினை இல்லை
  • கனி இருக்கக் காய் கவர்வது போல
  • கனிந்த பழம் தானே விழும்
  • கனிந்த பழம் நீர் தின்றீர்; காயை உலுக்கி விட்டீர்
  • கனிந்த பொங்கலில் கரும்புச் சாறும் கலந்ததாம்
  • கனிந்த மரத்தில் கல்லடி கில்லடி
  • கனியாத கனியை அடித்துப் பழமாக
  • கனியிலே முள் ஏறினது போல
  • கனியை விட்டுக் காயைத் தின்கிறதா?
  • கஜ கரணம்
  • கஜ கரணம் கோ கரணம் போட்டுப் பார்க்கிறான்
  • கஜ கர்ப்பம்
  • கஜப் புளுகு
  • கஷ்டம் தெரியாமல் நெல்லுக் குத்தலாமா?
  • கஷ்டத்திற்கு நஷ்டம் அதிகம்
  • கஷ்டத்தின் அந்தியத்தில் சுகம்
  • கஷ்டப் படலாம்; துக்கப்படல் ஆகாது
  • கஷ்டப் படாவிட்டால் லாபம் இல்லை

கா[தொகு]

  • காக்கனுக்கும் பூக்கனுக்கும் பூத்தாயோ புன்னை?
  • கண்ணாளன் வரும் வரையில் பொறுக்கவில்லையே புன்னை?
  • காக்கனும் பூக்கனும் சேர்ந்து ராக்கன் வீட்டு நெல்லுக்கு வினை வைத்தார்கள்
  • காக்கை இருந்த கொம்பு அசையாது
  • காக்கை ஏறப் பனம்பழம் விழுந்தது போல
  • காக்கை ஏறின கொம்பு அசையாதா?
  • காக்கைக் கழுத்தில் சீட்டுக் கட்டினது போல
  • காக்கைக்கு இருட்டில் கண் தெரியாது
  • காக்கைக்கு ஐந்து குணம்
  • காக்கைக்கு ஒரு கீர்த்தி, நரிக்கு ஒர் அபகீர்த்தி
  • காக்கைக்குக் கொண்டாட்டம்; எருதுக்குத் திண்டாட்டம்
  • காக்கைக் குஞ்சையும் கணக்கன் குஞ்சையும் கண்ட இடத்தில் குத்தவேண்டும்
  • காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சு
  • காக்கைக்குப் பயந்திருப்பாள்; கழுகுக்குத் துணிந்திருப்பாள்
  • காக்கைக்குப் பயந்து அழுவாள்; கழுகுக்குத் துணிந்து எழுவாள்
  • காக்கைக்கு புடுக்கு உண்டானால் பறக்கிற போது தெரியாதா?
  • காக்கைக்குப் போடு என்றால் நாய்க்குப் போட்டாற் போல
  • காக்கைக்கும் காக்கையிலும் கன சிறப்பு
  • காக்கைக் கூட்டம் போலக் கட்டுக் கோப்பு
  • காக்கைக் கூட்டில் குயிற் குஞ்சு வளர்வது போல
  • காக்கை கண்ணுக்குப் பீர்க்கம் பூப்பொன் நிறம்
  • காக்கை கதறப் பயந்து கணவனைக் கட்டிக் கொண்டாளாம்
  • காக்கை கர் என்றதாம்; அகமுடையானை இறுகக் கட்டிக்கொண்டாளாம்
  • காக்கை கரிச் சட்டியைப் பழித்ததாம்
  • காக்கை கரைந்தால் ஆரோ வருவார்
  • காக்கை கரைந்து உண்ணும்
  • காக்கை குசுவினாற் போல் இருக்கிறது
  • காக்கை குருவி மூக்காலே கொரிக்கிறது போல
  • காக்கை குளிக்கிறது போல
  • காக்கை நோக்கு அறியும்; கொக்கு உப்பு அறியும்
  • காக்கை பிடிக்கி போல் இருக்கிறான்
  • காக்கை பிடிக்கிறவருக்குக் காலம்
  • காக்கை பிடிக்கிறவனை நம்பாதே, காக்கை பிடித்தல்
  • காக்கை மிளகாய்ப்பழம் கொத்தினாற் போல்
  • காக்கை மூக்கு நிழலிலே கண்டாலும் கம்மாளன் கண்ணிலே எழுபது கோடி பசும் பொன் படும்
  • காக்கையிற் கரிது களம் பழம்
  • காக்கையின் கண்ணுக்குப் பீர்க்கம்பூப் பொன் நிறம்
  • காக்கையின் கழுத்தில் பனம்பழம் கட்டினது போல
  • காக்கையினும் கன சிவப்பு
  • காக்கையும் கத்திப் போகிறது; கருவாடும் உலர்ந்து போகிறது
  • காக்கையும் காற்றும் போக்கு உண்டானால் வரும்
  • காக்கையும் குயிற்குஞ்சைத் தன் குஞ்சு போல் வளர்க்கும்
  • காக்கையைக் கண்டு அஞ்சுவான்; கரடியைப் பிடித்துக் கட்டுவான்
  • காக்கையைக் கண்டு அஞ்சுவான்; காவேரி ஆற்றை நீந்துவான்
  • காக்கையைக் கண்டு பயப்படுவான்; கள்ளன் கூடப் புறப்படுவான்
  • காக்கையை விடக் கரியது களாப்பழம்
  • காக்கை விரும்பும் கனி வேம்பு
  • காகத்திலே வெள்ளை உண்டா?
  • காகத்தின் கழுத்துக் கறுத்தென்ன? வெளுத்தென்ன?
  • காகம் இருக்கப் பனம்பழம் விழுந்தது போல
  • காகம் இல்லாத ஊர் சோனகன் இல்லாத ஊர்
  • காகம் இல்லாத ஊர் பாவி இல்லாத ஊர்
  • காகம் உட்கார்ந்த கிளை ஆடாமல் இருக்குமா?
  • காகம் ஏறிப் பனங்காய் உதிருமா?
  • காசா லேசா?
  • காசி இரண்டு எழுத்துத்தான்;காண எத்தனை நாள் செல்லும்?
  • காசிக்குத் திருவையாறு அதிகம்
  • காசிக்குப் போய்த் தயிர் கொண்டு வந்ததைப் போல்
  • காசிக்குப் போயும் கருமம் தொலையவில்லை
  • காசிக்குப் போயும் மூடத் தவசி காலில் விழுகிறதா?
  • காசிக்குப் போன கடா மாடு போல
  • காசிக்குப் போனால் கால் ஆட்டலாம்; கால் ஆட்டக் கால் ஆட்டத் தோள் ஆட்டலாம்
  • காசிக்குப் போனாலும் அகப்பை அரைக்காசு
  • காசிக்குப் போனாலும் கட்கத்தில் மூட்டையா?
  • காசிக்குப் போனாலும் கதி பெற வழி இல்லை
  • காசிக்குப் போனாலும் கருமம் தொலையாது
  • காசிக்குப் போனாலும் தன் பாவம் தன்னோடே
  • காசிக்குப் போனான்; கங்கை கொணர்ந்தான்
  • காசிக்குப் போனான்; காவடி கொண்டு வந்தான்
  • காசிக்கு வீசம் அதிகம் திருப்பூவணம்
  • காசி முதல் ராமேசுவரம் வரையில்
  • காசியில் இருக்கிறவன் கண்ணைக் குத்தக் காஞ்சீபுரத்திலிருந்து கையை நீட்டிக் கொண்டு போகிறதா?
  • காசியில் இறக்க முக்தி; கமலையில் பிறக்க முக்தி
  • காசியில் தண்டம்; பிரயாகையில் முண்டம்; கயையில் பிண்டம்
  • காசியில் பாதி கல்பாத்தி
  • காசியில் வாசி அவிநாசி
  • காசியிலே கலமானால் நமக்கு என்ன?
  • காசி வாசி கண்ணைக் குத்தக் காஞ்சியிலிருந்து கை நீட்டிப்போனானாம்
  • காசி விசாலாட்சி, கஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி
  • காசு இருந்தால் பெட்டியிலே, பவிசு இருந்தால் மூஞ்சியிலே; எனக்கு என்ன ஆச்சு?
  • காசு இல்லாதவன் முழுவதும் போட்டது போல
  • காசு இல்லாதவனுக்கு வராகன் பேச்சு என்ன?
  • காசு இல்லாதவனை வேசியும் துப்பமாட்டாள்
  • காசுக்கு இரண்டு ஆனை வேணும், காற்றைப் போல் பறக்கவும் வேணும்
  • காசுக்கு இரண்டு: பீசுக்கு நான்கு
  • காசுக்கு இரண்டும் பீசுக்கு ஒன்றும்
  • காசுக்கு எட்டுச் சட்டி வாங்கிச் சட்டி எட்டுக் காசுக்கு விற்றாலும் வட்டிக்குக் கட்டாது
  • காசுக்கு ஒரு குஞ்சு விற்றாலும் கணக்கன் குஞ்சு ஆகாது
  • காசுக்கு ஒரு குஞ்சு விற்றாலும் கம்மாளன் குஞ்சு ஆகாது
  • காசுக்கு ஒரு குட்டி ஆனாலும் கருர்க் குட்டி ஆகாது
  • காசுக்கு ஒரு குதிரையும் வேண்டும்; அது காற்றைப் போல் பறக்கவும் வேண்டும்
  • காசுக்கு ஒரு குதிரையும் வேண்டும் காற்றைப் போலப் பறக்கவும் வேண்டும்
  • காசுக்கு ஒரு தம்பி ஆனாலும் கள்ளத் தம்பி ஆகாது
  • காசுக்கு ஒரு படி என்றால் பணத்துக்குப் பத்துப் படி என்கிறாயே!
  • காசுக்கு ஒரு புடைவை விற்றாலும் நாய்க்கு லாபம் என்ன?
  • காசுக்கு ஒரு முழம் விற்றாலும் நாய் அம்மணந்தான்
  • காசுக்குக் கம்பன்
  • காசுக்குப் பத்துப் பெண்டாட்டி; கொசுவுக்கு ஒரு குத்து
  • காசுக்குப் போன மானம் கோடி கொடுத்தாலும் வராது
  • காசுக் கூடு கரிக் கூடாய்ப் போயிற்று
  • காசுக்கு லோபி கழுதையினிடத்தில் போனாற் போல
  • காசு கண்ட இடம் கைலாசம்; சோறு கண்ட இடம் சொர்க்கம்
  • காசு கிடைப்பது குதிரைக் கொம்பாய் இருக்கிறது
  • காசு கொடுத்தவனே கணவன்
  • காக கொடுத்தால் வேசி வருவாள்; கலம் நெல் கொடுத்தால் அவள் ஆத்தாளும் வருவாள்
  • காசுப் பையோடே களவு போனால் கடையிலே செட்டிக்குக் காரியம் என்ன?
  • காசைக் கரி ஆக்காமல் சீனி வெடி வாங்கிச் சுடு
  • காசைக் கொடுத்தால் தாசி வருவாள்;கலம் நெல்லைக் கொடுத்தால் அவள் தாயும் வருவாள்
  • காசைக் கொடுத்து நோயை விலைக்கு வாங்காதே
  • காசைப் பார்த்தால் ஆசையாய் இருக்கிறது; கண்ணைப் பார்த்தால் போதையாய் இருக்கிறது
  • காசையும் கொடுத்து தேளையும் கொட்டிக் கொண்டதுபோல்
  • காஞ்சிக்குப் போனாலும் மஞ்சத்தின் கால் நான்கு
  • காஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி. காசி விசாலாட்சி
  • காஞ்சிரங் கனி கடுஞ்சிவப்பாய் இருந்தால் கடிதாக உயிர் மாய்க்கும்
  • காஞ்சீபுரத்து உபசாரம்
  • காஞ்சீபுரத்துக்குப் போனால் காலை ஆட்டிக் கொண்டு சாப்பிடலாம்
  • காஞ்சீபுரம் குடை அழகு
  • காஞ்சீபுரம் குடை, திருப்பதி வடை, சீரங்கத்து நடை
  • காட்சிகள் காணக் கண்ணுக்கு அலுப்பா?
  • காட்டக் கொடுத்த பணத்தை எடுத்துக் கொண்டு குமர கண்ட வலிப்பு வருகிறது
  • காட்ட முடியுமே தவிர ஊட்ட முடியுமா?
  • காட்டாளுக்கு ஒரு நீட்டாள்; நீட்டாளுக்கு ஒரு முடக்கான்; முடக்காளுக்கு ஒரு நொண்டிக் குதிரை
  • காட்டாளுக்கு ஒரு மோட்டாள்; மோட்டாளுக்கு ஒரு மொண்டி ஆள்
  • காட்டாற்றுச் சரசாப்புக் காட்டானைக்குப் பரபரப்பா?
  • காட்டாற்று வெள்ளம் போல
  • காட்டான் மோட்டான் சண்டைக்கு இளைச்சான்
  • காட்டானை உண்ட கனி போல் இருக்கும், தேட்டாளன் திரவியம்
  • காட்டானை தின்ற கனிபோலே
  • காட்டானைக்கு வீட்டு ஆனையைக் கண்டால் இளப்பம்
  • காட்டானை கனவில் நாட்டுச் சிங்கம் வந்தது போல
  • காட்டானையைக் காட்டி வீட்டுப் பெண்ணைத் தள்ளுகிறது
  • காட்டானையைப் பிடிக்க வீட்டானை வேண்டும்
  • காட்டானை ராஜாவுக்கு எலிக்குஞ்சு மந்திரியாம்
  • காட்டானை விட்டாலும் கவியானை விடாது
  • காட்டிக் கொடுத்தாலும் கூட்டிக் கொடுக்காதே
  • காட்டிக் கொடுத்துக் கடக்கப்போய் நிற்கலாமா?
  • காட்டில் அழுத குரல்
  • காட்டில் ஆனையைக் காட்டி வீட்டில் பெண்ணைக் கொடுக்கிறது போல
  • காட்டில் உள்ள ஆனையைக் காட்டி வீட்டில் உள்ள பெண்ணைக் கடத்து
  • காட்டில் எரித்த நிலாவும் கசட்டுக்குச் செய்த நன்றியும் வீண்
  • காட்டில் எரித்த நிலாவும் கானலில் பெய்த மழையும்
  • காட்டில் கடுவாய்; கடலில் கொடுவாய்
  • காட்டில் செத்தாலும் வீட்டில்தான் தீட்டு
  • காட்டில் செய்த சபதம் வீட்டில் மறந்தது போல
  • காட்டில் புதைத்த கன தனமும் பாட்டில் புதைத்த பழம் பொருளும் வீட்டில் மனையாள் மனமும் நாட்டில் அறிவது அரிது
  • காட்டில் புலி கொல்லும்; நாட்டில் புளி கொல்லும்
  • காட்டில் யானையைக் காட்டி வீட்டில் பெண்ணைக் கொடுப்பது போல
  • காட்டிலே மேயுதடி காடை, அவன் காட்டுகிறானடி பெண்ணை ஜாடை
  • காட்டு எரு முட்டை பொறுக்கி மட்கலம் சுட்ட புகை போய் மேற்கே மேகம் கிளம்ப, மின்னிக் குமுறி மழை பொழிய, ஆற்றில் வெள்ளம் பெருகி அடித்துப் போன பலசரக்கை ஊரார் இழுப்பது வழக்கு; குயவன் இழுப்பது கணக்கு
  • காட்டுக் கட்டைக்கு ஏற்ற முரட்டுக் கோடாலி
  • காட்டுக் களாக்காயும் கண்கெட்ட தயவு இல்லாத ஒணானும் கோத்துக் குலாவுவது போல
  • காட்டுக் காடையைப் பிடிக்க வீட்டுக் காடை வேணும்
  • காட்டுக்காரன் சும்மா இருந்தாலும் பூட்டைப் பிடுங்கி சும்மா இருக்க மாட்டானாம்
  • காட்டுக்கு எறித்த நிலாவும் கசட்டுக்குச் செய்த நன்றியும் வீண்
  • காட்டுக்கு எறித்த நிலாவும் கானலுக்குப் பெய்த மழையும்
  • காட்டுக்கு ஒரு தெய்வம்; வீட்டுக்கு ஒரு தெய்வமா?
  • காட்டுக்குப் புலி ஆதரவு; புலிக்குக் காடு ஆதரவு
  • காட்டுக்குப் பெய்த மழை, கானலுக்கு எறித்த நிலா
  • காட்டேரி உடைமை இராத் தங்காது
  • காட்டேரிக்கும் கணக்கனுக்கும் அடிக்கடி கொடுக்க வேணும்
  • காட்டைக் காத்த நரியும் வீட்டைக் காத்த நாயும் வீண் போகா
  • காட்டைக் காத்தவனும் கடையைக் காத்தவனும் வீண் போவது இல்லை
  • காட்டை வெட்டிச் சாய்த்தவனுக்குக் கம்பு பிடுங்கப் பயமா?
  • காட்டை வைத்துக் கொண்டு அல்லவோ வேட்டை ஆட வேணும்?
  • காடிக் கஞ்சி ஆனாலும் மூடிக் குடி
  • காடிக்குப்போய்த் தயிர் கொண்டு வந்தது போல
  • காடு அழிந்தால் நாடு அழியும். காடு அறியாதவன் கல்லாங் காட்டை உழுவான்
  • காடு ஆறு மாசம்; நாடு ஆறு மாசம்
  • காடு எரியும் பொழுது வீடு எரியக் கூடாது
  • காடுகள் இருப்பின் நாடுகள் செழிக்கும்
  • காடு காத்த நாயும் வீடு காத்த நாயும் வீண் போகுமா?
  • காடு காத்தவனும் கச்சேரி காத்தவனும் பலன் அடைவான்
  • காடு கெட ஆட்டை விடு
  • காடு கெட வீடு கெடு
  • காடு திருத்திப் பருத்தி விதைக்கப் போகிறேன் என்றானாம் அப்பன்; அதற்குள் மகன் அந்த நூலில் தனக்குத் துப்பட்டி நெய்து தர வேணும் என்றானாம்
  • காடும் செடியும் அவளாகத் தோன்றுகின்றன என் கண்களுக்கே
  • காடும் செடியும் இல்லாத ஊருக்குக் கழுதை முள்ளி கற்பக விருட்சம்
  • காடு வளம் குண்டை வளம், குண்டை வளம் குடி வளம், குடி வளம், கோல் வளம், கோல் வளம் கோன் வளம்
  • காடு வா வா என்கிறது; வீடு போ போ என்கிறது
  • காடு விளைந்தாலும் ஒரு மேடு விளைந்தாலும் கடன் கழிந்துவிடும்
  • காடு விளைந்து என்ன மச்சானே, நம் கையும் காலுந்தானே மிச்சம்?
  • காடு விளையாவிட்டாலும் கடமை போகுமா?
  • காடு வெட்டிச் சாய்த்தவனுக்குக் கம்பு வெட்டப் பயமா?
  • காடு வெட்டி நஞ்சை பண்ணு: மாடு கட்டி வைக்கோல் போடு
  • காடு வெந்தால் சந்தன மரமும் வேகாதோ?
  • காடை இடம் ஆனால் நாட்டை ஆளலாம்
  • காடை கத்தினால் பாடை கட்டும்
  • காத்து வலம் பார்த்து மூத்திரம் பெய்யத் தெரியாதவன்
  • காண்பாரைக் கண்டு கழுதையும் பரதேசம் போயிற்றாம்
  • காண ஒரு தரம், கும்பிட ஒரு தரமா?
  • காணக் கிடைக்காத தங்கம்
  • காணக் கிடைக்குமோ? காண என்றால் கிட்டுமோ?
  • காணக் கிடைத்தது. கார்த்திகைப் பிறை போல
  • காணப் பட்டன எல்லாம் அழியப் பட்டன
  • காணம் என்றால் வாயைத் திறக்கிறது; கடிவாளம் என்றால் வாயை மூடிக் கொள்கிறது
  • காணம் விற்று ஒணம் கொண்டாட வேண்டும்
  • காணலாம், கேட்கக் கூடாது; கேட்கலாம். காணக்கூடாது; காணவும் காணலாம், கேட்கவும் கேட்கலாம்
  • காண வேண்டி இருப்பாரைக் கிள்ள வேண்டி இருக்குமாம்
  • காணாத கனவு கண்டால் ஒருவரோடும் சொல்லாதே
  • காணாததை எல்லாம் காணலாம் கந்த புராணத்திலே
  • காணாத நாயைக் கண்ட மனிதன் போல
  • காணாத மூளி கஞ்சியைக் கண்டால் ஓயாமல் கூட்டரைப்பாளாம்
  • காணாதவன் கஞ்சியைக் கண்டானாம்; ஓயாமே ஓயாமே ஊதிக் குடித்தானாம்
  • காணாதவன் கண்டால் கண்டதெல்லாம் கைலாசம்
  • காணாது கண்ட கம்பங் கூழைச் சிந்தாது குடியடா சில்லி மூக்கா
  • காணாது கண்டாற் போல
  • காணாப் பால் கலப் பால்
  • காணாப் பீ கழுவாமல் போம்
  • காணாமல் கண்டேனே கம்பங்கதிரை
  • காணாமல் கோணாமல் கண்டு கொடு
  • காணாமல் போன முயல் பெரிய முயல்
  • காணார் என மாணாவினை செய்யார்
  • காணி அறுத்தாலும் கோணி கொள்ளவில்லை
  • காணி ஆசை கோடி கேடு, காணி ஏறக் கோடி அழியும்
  • காணிக்கு ஒத்தது கோடிக்கு
  • காணிக்குச் சோம்பல், கோடிக்கு வருத்தம்
  • காணி கவிழ்ந்து போகிறதா? காணி காணியாய்ச் சம்பாதித்துக் கோடி கோடியாய்ச் செலவழிக்கிறது
  • காணிச் சோம்பல் கோடி கேடு
  • காணி தேடிக் கோடி அழிப்பதா?
  • காணி தேடினும் கரிசல் தேடு
  • காணி நாணம், ஊண் நாணம் உயிர்க்கே சேதம்
  • காணி மந்தம். கோடி துக்கம்
  • காணியாளன் வீடு வேகும் போது காலைப் பிடித்து இழுத்த கதை
  • காணியில் இல்லாததா கோடியில் வரப் போகிறது?
  • காணியை நட்டபின் களத்தில் நிற்பதே நன்மை
  • காணி லாபம், கோடி நஷ்டம்
  • காத்திருந்த நாய்க்குக் கல்லெறிதான் மிச்சம்
  • காத்திருந்தவன் பெண்டாட்டியை நேற்று வந்தவன் கொண்டு போனான்
  • காதம் ஓடினும் முயலுக்குக் கைத்துாக்கு
  • காதம் கொடுத்து இரு காதம் வாங்குகிறது போல
  • காதம் போனாலும் கண்ணுக்கு உரியவர் வேண்டும்
  • காதம் விட்டு இரு காதம் சுற்றுவது போல
  • காதலரோடு ஆடார் கவறு
  • காத வழிதான் குத்தும் வெட்டும்; அப்புறம் ராமராஜ்யம்
  • காத வழி பேர் இல்லாதவன் கழுதைக்குச் சமானம்
  • காத வழி போய் அறியாதவன் மாதம் எல்லாம் நடந்தானாம்
  • காத வழி போய் அறியான் கழுதைப் பிறப்பு
  • காதில் கடுக்கன் இட்டால் முகத்தினுக்கு அழகு
  • காதில் கேட்டதும் பொய்; கண்ணில் கண்டதும் பொய்; தீர விசாரிப்பதே மெய்
  • காதில் சிலந்தி, ஓதடி ஆனந்தி
  • காதில் நாராசம் காய்ச்சி விட்டது போல
  • காது அற்ற ஊசியும் வாராது காணும் கடை வழிக்கே
  • காது அறுத்த கூலி கை மேலே
  • காது அறுத்தாலும் அறுக்கும், பேன் எடுத்தாலும் எடுக்கும் குரங்கு
  • காதுக்கு இட்டால் முகத்துக்கு அழகு
  • காதுக்குக் கடுக்கன் இட்டு ஆட்டிக் கொண்டு திரிகிறான்
  • காதுக்குக் கடுக்கன் முகத்துக்கு அழகு
  • காதுக்குக் கம்மல் அழகு
  • காது காது என்றால் செவிடு செவிடு என்கிறான்
  • காது காது என்றால் நாதி நாதி என்கிறான்
  • காது காது என்றால் வேது வேது என்கிறான்
  • காது குத்த மனம் பொறுக்காதா?
  • காது குத்துகிறான்
  • காதும் காதும் வைத்தாற் போல
  • காதுரா காதுரா என்றால் நாதிரா நாதிரா என்கிறான்
  • காதை அறுத்தவன் கண்ணைக் குத்தாமல் விட்டானே!
  • காதை அறுத்தவன் கண்ணைக் குத்தினாலும் குத்துவான்
  • காதை அறுத்தவன் கண்ணையும் குத்துவானா?
  • காதை அறுத்தாலும் அறுக்கும்; பேனை எடுத்தாலும் எடுக்கும் குரங்கு
  • காதை அறுத்தாலும் அறுத்தது; பேனைப் பார்
  • காதைக் கடிக்கிறான்
  • காதோடு காது வைத்தாற்போல் இருக்க வேண்டும்
  • காந்தத்தின்முன் ஊசி கம்பித்தாற் போல
  • காந்தம் இழுத்த ஊசியைப் போல
  • காந்தமும் ஊசியும் போல
  • காந்தலே ருசி; கறுப்பே அழகு
  • காந்தாரி கண் பட்டால் கல்லும் கரிந்து விடும்
  • காந்துார் நாயும் களத்துார்ப் பேயும்
  • காப்பானுக்குக் கள்ளம் இல்லை
  • காப்புச் சொல்லும் கை மெலிவை
  • காப்பு இட அத்தை இல்லை; கலகமிட அத்தை உண்டு; தண்டை இட அத்தை இல்லை; சண்டை இட அத்தை உண்டு
  • காப் பொன்னிலும் மாப் பொன் திருடுவான்
  • காமத்துக்குக் கண் இல்லை
  • காமனுக்குக் கண் இல்லை
  • காமாட்டிப் பையனுக்கு ஒரு சீமாட்டி கிடைத்தது போல
  • காமாலைக் கண்ணனுக்குக் கண்டது எல்லாம் மஞ்சள்
  • காமாலைக் கண்ணுக்குக் கண்டதெல்லாம் மஞ்சள் நிறம்
  • கா மாறிக் கட்டினால் கனம் குறையுமா?
  • காமிக்கு முறை இல்லை
  • காமுகனுக்குக் கண்ட இடத்தில் கண்
  • காய்க்கு அலைந்தவன் பீர்க்குப் போடு
  • காய்க்குக் கொடி இளைக்குமா?
  • காய் கொடிக்குக் கனமா? காய்ச்சல் இல்லா நிலம் கடுகளவும் பயன் கொடாது
  • காய்ச்சலும் கழிச்சலும் சேர்ந்து விட்டால் நம்பப் படாது
  • காய்ச்சிக் காய்ச்சித்தானே நீட்ட வேண்டும்?
  • காய்ச்சிக் குடிக்கிறதையும் கெடுத்தான், கன்னாரப் பட்டு விழுவான்
  • காய்ச்சித் தோய்த்த தயிரைக் கண்ணை மூடிக்கொண்டு சாப்பிட்டாயே!
  • காய்ச்சி வார்த்த பெண்ணுக்குப் பேச்சு மூச்சு அற்றது
  • காய்ச்சின கஞ்சி வார்க்க ஆள் இல்லாமல் போனாலும், கச்சை கட்ட ஆள் இருக்கிறது
  • காய்ச்சினவள் காய்ச்சினால் கழுதை மூத்திரமும் ருசியாய் இருக்கும்
  • காய்த்த கொம்பு பணியும்
  • காய்த்த மரத்தில் கல் எறிபடும்; காயாத மரத்தில் எறிபடுமா?
  • காய்த்த மரத்திலே கல் எறியும் சில் எறியும்
  • காய்த்த மரம் கல் அடிபடும்
  • காய்த்த மரம் வளைந்து நிற்கும்; நற்குணமுடையவர் தணிந்து நிற்பார்
  • காய்த்த மரம் வளையாத கணக்கும் உண்டோ?
  • காய்த்த மரம் வளையும்
  • காய்ந்த இரும்பு குடித்த நீரை விடாது
  • காய்ந்த ஒட்டிலே தண்ணீரை ஊட்டினாற் போல
  • காய்ந்த ஓட்டுக்குச் சேதம் இல்லை
  • காய்ந்த கொம்பு பணியும்
  • காய்ந்த சுண்ணாம்பையும் வதங்கின வெற்றிலையையும் இளைத்த ராஜாவையும் விடக் கூடாது
  • காய்ந்த புலி ஆட்டு மந்தையில் விழுந்தது போல
  • காய்ந்த புலி ஆவிலே விழுகிறது
  • காய்ந்த மரம் தளிர்க்குமா?
  • காய்ந்த மாடு கம்பில் புகுந்தாற் போல
  • காய்ந்த வானம் பெய்தால் விடாது
  • காய்ந்த வித்துக்குப் பழுது இல்லை
  • காய்ந்த வெள்ளத்தில் விழுந்த பூனை பச்சை வெள்ளத்தைக் கண்டாலும் பேடிக்கும்
  • காய்ந்த வெற்றிலையையும் மெலிந்த ராஜாவையும் கைவிடாதே
  • காய்ந்தால் காயும் கார்த்திகை
  • காய்ந்தாலும் கவலை; பேய்ந்தாலும் கவலை
  • காய்ந்தாலும் வெந்நீர் அவம் போமோ?
  • காய்ந்து கெட்டது பிசானம்; காயாமல் கெட்டது கார்
  • காய்ந்து போன கார்த்திகை வந்தால் என்ன? தீய்ந்து போன தீபாவளி வந்தால் என்ன? மகாராஜன் பொங்கல் வந்தால் மார்பு முட்டும் சோறு
  • காய்ந்தும் கெடுத்தது வெயில்; பேய்ந்தும் கெடுத்தது மழை
  • காய்ந்தும் கெடுத்தது பெய்தும் கெடுத்தது
  • காய்ப் பாரத்தைக் கொடி தாங்காதா?
  • காய் பறிக்கக் கத்தரி நடு
  • காய் மகாரன் நெஞ்சிலே கொள்ளிக் கட்டையால் சுடவேண்டும்
  • காய சித்தி பெற்றோர் சட்டை கழற்றுவது போல
  • காயத்திரி ஜபத்துக்குச் சமர்த்தியும் சமைக்க மாட்டாள்
  • காயம் என்ன கற்கண்டா? உயிர் என்ன தித்திப்பா?
  • காயாகக் காய்த்துப் பூவாகப் பூத்ததாம்
  • காயா? பழமா?
  • காயிலே கெட்டது கத்தரிக்காய்
  • காயும் கனியும் உண்டானால் கார்த்திகை மாதம் கல்யாணம்
  • காயும் பயிருக்குப் பெய்யும் மழை போல
  • காயும் பழமும் கலந்தது போல்
  • காயும் புழுவுக்குச் சாயும் நிழல் போல
  • காயேனவாசா-கறி என்ன சமைச்சாள்?
  • கார் அரிசிச் சாதம், கருணைக் கிழங்குத் துவையல். அத்தையைச் சமைக்கச் சொன்னாளாம்: அகப்பையை எடுத்துக் காட்டினாளாம்
  • கார் அறுக்கட்டும்; கத்தரி பூக்கட்டும்
  • கார்த்திகை அகத்தி காம்பெல்லாம் நெய்-வழியும்
  • கார்த்திகை அகத்தி காம்பு எல்லாம் ருசி
  • கார்த்திகை எண்ணெயும் கனுவுப் பழையதும் ஆர் இடுவார் அம்மா என்று அழுதாளாம்
  • கார்த்திகைக் கார் கடை விலை; தைச் சம்பா தலை விலை
  • கார்த்திகைக் கீரை கணவனுக்குக் கொடாதே
  • கார்த்திகைக்குப் பின் மழை இல்லை: கர்ணனுக்குப் பின் கொடை இல்லை
  • கார்த்திகை கண்டு களம் இடு
  • கார்த்திகை கன மழை
  • கார்த்திகை கார்த்திகை என்று கழுத்தறுத்த பிராமணா, கார்த்திகைக்குப் பின் இந்த அகமுடையாள்தானா?
  • கார்த்திகை கால் கோடை
  • கார்த்திகை நண்டுக்குக் கரண்டி நெய்
  • கார்த்திகைப் பனியைப் பாராதே; கட்டி ஓட்டடா ஏர் மாட்டை
  • கார்த்திகைப் பிறை போல
  • கார்த்திகைப் பிறையைக் கண்ட கண்ணால் கைப்பிடி நாற்றைப் போட்டுக் கரை ஏறு
  • கார்த்திகை பின் மழையும் இல்லை, கர்ணனுக்குப்பின் கொடையும் இல்லை
  • கார்த்திகைப் பொரியும் கணுவுப் பழஞ் சோறும்
  • கார்த்திகை மழை கல்லை உடைக்கும்
  • கார்த்திகை மாசத்தில் உழுதால் கடுகு மிளகு காணாது
  • கார்த்திகை மாசத்தில் கடு மழை பெய்தால் கல்லின் கீழ் இருக்கிற புல்லும் கதிர் விடும்
  • கார்த்திகை மாசத்தில் கால் கொள்ளு விதைத்தால் மேல் கொள்ளு முதலாகாது
  • கார்த்திகை மாசத்தில் தண்ணீர்ப் பந்தல் வைத்தது போல
  • கார்த்திகை மாசத்துக் கர்க்கட சந்திர யோகம் கல்லைத் துளைக்கும்
  • கார்த்திகை மாசத்து நாய் படும் பாடு போல
  • கார்த்திகை மாசத்துப் பூமா தேவியைப் போல
  • கார்த்திகை மாசத்து மழை கலம் கழுவுகிறதற்கு முன்னே வந்து போகும்
  • கார்த்திகை மாசம் கல்லுக்குள் இருக்கும் நெல்லும் கதிராகும்
  • கார்த்திகை மாசம் கலம் கழுவப் போது இல்லை
  • கார்த்திகை மாசம் கலம் கழுவ மழை விடாது
  • கார்த்திகை மாசம் கையிலே; மார்கழி மாசம் மடியிலே
  • கார்த்திகையில் கருக்கல் கண்ட இடத்தில் மழை
  • கார் நடவைக் கலக்க நட்டது போல. கார்ப் பயிர் கலந்து கெட்டது; பிசானப் பயிர் நெருங்கிக் கெட்டது
  • கார்ப் பயிரைக் கண்ணைக் கட்டி அறு
  • கார் மின்னிக் கெட்டது; பருவம் மின்னாமல் கெட்டது
  • கார் மேக மழையில் காற்றடித்தால் போச்சு
  • காரண குருவே காரிய குரு
  • காரணம் அடா கல்லுக் கொத்தா; சாகிற கிழவி பிள்ளை பெற்றாள்
  • காரணம் இல்வாமல் நாய் குரைக்காதே
  • காரணம் இன்றிக் காரியம் இல்லை
  • காராம் பசுவுக்குப் புல் ஆனால் நந்தவனத்துக்குக் களையும் ஆம்
  • காரிகை கற்றுக் கவி பாடுவதிலும் பேரிகை அடித்துப் பிழைப்பது நன்று
  • காரியக்காரன் கொல்லையிலே கழுதை வந்து மேய்கிறது
  • காரியத்தில் வருகிற போதுதான் மாடு படுத்துக் கொள்கிறது
  • காரியத்திலே கண் அல்லாமல் வீரியத்திலே இல்லை
  • காரியத்திலே கப்பல்
  • காரியத்துக்குச் சோம்பினவர்களுக்குக் கைக் குழந்தை ஒரு சாக்கு
  • காரியத்துக்கு வாசுதேவர் கழுதையின் காலைப் பிடித்தார்
  • காரியத்தைப் பற்றிக் கழுதையையும் காலைப் பிடி
  • காரியப் பைத்தியம்
  • காரியம் ஆகிற வரையில் கழுதையையும் காலைப் பிடி
  • காரியம் ஆகிறவரையில் காலைப் பிடி; பின்னே கழுத்தைப் பிடி
  • காரியம் ஆகுமட்டும் காலைப் பிடி, காரியம் ஆன பிறகு குடுமியைப்பிடி
  • காரியம் ஆகுமானால் தலையைப் பிடி, காரியம் ஆகாவிட்டால் காலைப் பிடி
  • காரியம் இல்லாத மாமியாருக்குக் கல்லும் நெல்லும் கலந்து வைத்தாள்
  • காரியம் உண்டானால் கழுதையையும் காலைப் பிடி
  • காரியம் உள்ளவரை காலைப் பிடி; இல்லாவிட்டால் பல்லைப் பிடி
  • காரியம் செய்துவிட்டுக் கழுநீர்ப் பானையில் கைவிட்டாளாம்
  • காரியம் பெரிதா? வீரியம் பெரிதா?
  • காரியம் முடிந்தால் கம்மாளன் புறத்தே
  • காரியமாகும் வரையில் கழுதையையும் காலைப்பிடி
  • காரியும் வெள்ளையும் கருதிப் பயிரிடு
  • காருக்கு ஒன்று; சம்பாவுக்கு ஒன்று
  • காருக்குக் களை எடுத்தாற் போல்
  • காருக்குப் பட்டம் இல்லை
  • காருக்குப் பின் பட்டம் இல்லை; கார்த்திகைக்குப் பின் மழையும் இல்லை
  • காருக்கும் கத்தரிக்கும் காலம் இல்லை
  • காருக்கு வயலும் மோருக்குச் சாதமும் அதிகமாக வைக்கக்கூடாது
  • காரும் கம்பும் கதிரிலே
  • காரை முத்தினா பாறை
  • காரைக்காட்டானோ? ஊரைச் சுட்டானோ?
  • காரைக் கிள்ளி நடு; சம்பாவை அள்ளி நடு
  • காரையை வெட்டிக் கரணை போட்டால் எடையும் பணமும் காணும்
  • கால் அடிபட்ட நாயும் காது அறுந்த செருப்பும் கவைக்கு உதவுமா?
  • கால் அடி வைக்கச்சே நீச்சானால் கரை ஏறுகிறது எப்படி?
  • கால் அணாக் கொடுக்கிறேன் என்றால் காத வழி நடப்பான்
  • கால் அளவே ஆகுமாம் கப்பலின் ஓட்டம்; நூல் அளவே ஆகுமாம் நுண் சீலை
  • கால் ஆட்டக் கால் ஆட்டத் தூணாட்டம் வீங்கிப் போயிற்று
  • கால் ஆட்டி வீட்டில் வாலாட்டி இருக்காது
  • கால் ஆட்டுகிறவர் வீட்டில் வாலாட்டி நாய் தங்காது
  • கால் ஆடக் கோல் ஆடும்; கோல் ஆடக் குரங்கு ஆடும்
  • கால் இல்லா முடவன் கடலைத் தாண்டுவானா?
  • கால் எட்டினால் காகுழியில் போடு
  • கால் ஒடிந்த கோழிக்கு உரற்குழியே கைலாசம்
  • கால் காசுக்குக் குதிரை வாங்க வேணும்; அது காற்றாகவும் பறக்க வேணும்
  • கால் காசு தாலி கட்டாதவனும் காலில் விழாத பிள்ளையும் பிரயோசனம் இல்லை
  • கால் காசுப் பூனை முக்காற் காசுத் தயிரைக் குடித்தது
  • கால் காசு பெறாது
  • கால் சிறிது ஆகில் கண் ஊரும்; கன்னியர்மேல் மால் சிறிது ஆகில் மனம் ஊரும்
  • கால் துட்டுக்குப் பசு வாங்க வேணும்; அது கால்படி பால் கறக்க வேணும்
  • கால் தூக்குகிற கணக்கப் பிள்ளைக்கு மாசம் பத்து ரூபாய்
  • கால் தூசு பெற மாட்டார்கள்
  • கால் நடைக்கு இரண்டு காசு, கைவீச்சுக்கு ஐந்து காசு
  • கால் படி அரிசி இருந்தால் கஞ்சி, அரைப் படி அரிசி இருந்தால் அன்னம்
  • கால் படி அரிசிக்காரன் உள்ள மட்டுந்தான்
  • கால் பணத்துக் குரங்கு முக்கால் பணத்து வாழைப்பழம் தின்றதாம்
  • கால் பாடகம் கழன்று விடுமோ?
  • கால் போகா இடத்தில் தலையிட்டுக் கொள்ளாதே
  • கால்மாடு, தலைமாடு தெரியாதவன்
  • கால் மாறிக் கட்டினால் கனம் குறையுமா?
  • கால் வந்து சூழக் கரி வந்து சூழ்ந்தது
  • கால்வாயைத் தாண்டாதவன் கடலைத் தாண்டுவானா?
  • கால கதியை ஆரும் கடக்க மாட்டார்கள்
  • கால சக்கரம் சுழல்கிறது
  • காலத்தில் ஒட்டை அடைக்கப்படாவிட்டால் கப்பலும் முழுகிவிடும்
  • காலத்தில் பயிர் செய்தால் கடன் வாங்க வேண்டாம்
  • காலத்தில் பிறந்த பிள்ளை கைக்கு உதவும்
  • காலத்தில் பெய்த மழை போல
  • காலத்தில் போனாலும் சூலத்தில் போகாதே
  • காலத்தினால் செய்த நன்றி
  • காலத்துக்கு ஏற்ற கோலம்
  • காலத்துக்கு ஏற்றபடி பெருச்சாளி காவடி எடுத்து ஆடிற்றாம்
  • காலத்துப் பயிர் கரம்பிலே
  • காலத்து விதை கரம்பிலே
  • காலத்தே பயிர் செய்
  • கால தாமதம் காரியம் நஷ்டம்
  • காலப் பயிர் கடக்க நிற்கும்
  • காலப் புழுதி இல்லாதவன் கைம்முதல் இழப்பான்
  • காலம் அல்லாத காலத்தில் கடல் ஏறிக் கதிர்காமா, கதிர்காமா என்றால் கைகொடுக்குமா?
  • காலம் அல்லாத காலத்தில் கப்பல் ஒட்டி
  • காலம் அல்லாத காலத்தில் காய்த்ததாம் பேய்ச் சுரைக்காய்
  • காலம் அறிந்து ஞாலம் ஒழுகு
  • காலம் அறிந்து பிழையாதவன் வாலறுந்த குரங்கு ஆவான்
  • காலம் அறிந்து பெய்யாத மழையும், நேரம் அறிந்து உண்ணாத உணவும் வீண்
  • காலம் எவருக்காகவும் காத்திருப்பதில்லை
  • காலம் கண்ட கூனி
  • காலம் கலி காலம் அல்லவா?
  • காலம் கலி காலம்; கறுப்புக் கோழி வெள்ளை முட்டை இடும்
  • காலம் கெட்ட கேட்டிற்குக் கருத்தான் என்ன செய்வான்?
  • காலம் கெட்டுக் கிடக்கிறது; ஜாக்கிரதையாய் இரு
  • காலம் கெட்டுக் கைப்பிச்சை எடுத்தாற் போல
  • காலம் செய்கிறது ஞாலம் செய்யாது
  • காலம் செய்த கோலத்துக்கு ஆரை வெறுப்பது?
  • காலம் செய்வதைக் காலன் செய்வான்
  • காலம் செய்வதைக் கோலம் செய்யாது
  • காலம் துக்கத்தை மாற்றும்
  • காலம் போம் வார்த்தை நிற்கும், கப்பல் போம் துறை நிற்கும்
  • காலம் போன காலத்தில் மூலம் வந்து குறுக்கிட்டது போல
  • காலம் வரும் வரைக்கும் யமன் காத்திருப்பான்
  • காலமே எழுந்திருந்து காக்கை பார்க்கிறது ஆகாது
  • காலமே எழுந்திருந்து காக்கை முகத்தில் விழித்தல் ஆகாது
  • காலளவே ஆகுமாம் கப்பலின் ஓட்டம், நூலளவே ஆகுமாநுண்சீலை
  • காலனுக்கு விளைச்சல் கூடுதல்
  • கால க்ஷேபத்துக்குக் கூலிக்குக் குத்தினாலும் கமுக்கட்டு மயிர் வெளியே தெரியக்கூடாதாம்
  • காலா காலத்தில் செபம் பண்ணினால் மேல் ஒரு பாவமும் இல்லை
  • காலால் இடுவதைத் தலையால் செய்கிறான்
  • காலால் காட்டினதைக் கையால் செய்கிறது
  • காலால் நடக்காமல் காற்றாய்ப் பறக்கிறது
  • காலால் நடந்தால் காத வழி? தலையால் நடந்தால் எவ்வளவு தூரம்?
  • காலால் முடிந்ததைக் கையால் அவிழ்க்கக் கூடாது
  • காலில் அழுக்கு இருந்தால் தலையில் அமேத்தியம் என்பார்
  • காலில் கட்டினால் விருது; குப்பையில் கிடந்தால் துணி
  • காலில் தைத்தது கண்ணிலே தைத்தது போல
  • காலில் நகம் முளைத்த நாள் முதலாக
  • காலில் பட்டது கண்ணில் பட்டது போல
  • காலில் பட்டது கையிலும் படும்; மூக்கிலும் படும்
  • காலில் பட்ட பிறகு கிரகசாரம் போய் விடாது
  • காலில் பட்ட பீ மூஞ்சிக்கு வந்தாற் போலே
  • காலில் விழுகிறது நல்லது; மேலில் விழுகிறது கெட்டது
  • காலுக்கு ஆகாத செருப்பைக் கழற்றி எறி
  • காலுக்கு ஆகிற செருப்புத் தலைக்கு ஆகுமா?
  • காலுக்கு என்றால் தலைக்கு இடுவான்
  • காலுக்குக் கடுப்பே தவிரக் கண்ட பலன் ஒன்றும் இல்லை
  • காலுக்குக் கண் வேண்டுமா?
  • காலுக்குக் கை உதவி, கைக்குக் கால் உதவி
  • காலுக்குச் சேராத செருப்பைக் கழற்றி எறிய வேண்டும்
  • காலுக்குதக்க செருப்பும்,கூலிக்குத் தக்க உழைப்பும்
  • காலுக்குப் போட்டால் தலைக்குப் போடுகிறான்
  • காலும் இல்லாமல் தலையும் இல்லாமல் பேசுகிறான்
  • காலும் தலையும் சாமி குடுமியும் போல
  • காலை இஞ்சி, கடும் பகல் சுக்கு, மாலை கடுக்காய் மண்டலம் தின்றால் கோலை ஊன்றிக் குறுகி நடந்தவர் கோலை விட்டுக் குலாவி நடப்பரே
  • காலை உப்பலும் கடும்பகல் வெயிலும் மாலை மேகமும் மழைதனில் உண்டு
  • காலைக் கடம்பர், மத்தியான்னச் சொக்கர், அந்தித் திருவேங்கிநாதர், அர்த்தஜாமம் சிம்மபுரீசுவரர்
  • காலைக் கல், மாலைப் புல்
  • காலைக் குளி மாதம் தாங்கும்; நடுப்பகல் குளி வாரம் தாங்கும்; அந்திக் குளி அன்றைக் குளி
  • காலைக் கடன் வாங்கச் சொல்லும்; அந்தி ஆனை கட்டச் சொல்லும்
  • காலைக் கூழைத் தள்ளாதே; கம்மாளன் வரவைக் கொள்ளாதே
  • காலைக் கேட்டுக் கொண்டா நடக்கிறது?
  • காலைச் சுற்றிய பாம்பு கடிக்காமல் ஒழிய விடாது
  • காலைச் செவ்வானம் கடலுக்குப் பெய்யும்
  • காலைச் செவ்வானம் கரம்பில் கட்டு; அந்திச் செவ்வானம் ஆற்றில் கட்டு
  • காலைச் செவ்வானம் காலத்திலும் மழை இல்லை; அந்திச் செவ்வானம் அப்பொழுதே மழை
  • காலைச் செல் பூத்தால் அடுத்த மழை அடங்கும்
  • காலைத் தூக்குகிற கணக்கப்பிள்ளைக்கு மாசம் பத்து ரூபாய்
  • காலைத் தென்றல் மழையைக் காட்டும்; மாலைத் தென்றல் மழையை விலக்கும்
  • காலை துயில்வானும் மாலை இருப்பானும் பதர்
  • காலைப் பனிக்கும் கண் விழிக்கும் ஒத்தது செல்வம்
  • காலைப் பிடி என்றால் கழுத்தைப் பிடித்தாளாம்
  • காலைப் பிடித்த சனி நடந்தால் ஒழிய விடாது
  • காலைப் பிடித்த சனியன் ஊரைச் சுற்றியடிக்கும்
  • காலைப் புல்லும் மாலைக் கல்லும் ஆளைக் கொல்லும்
  • காலை மிதித்தால் தலையை மிதிப்பான்
  • காலை மேகமும் கருந்தனி வெயிலும் மாலை உப்பலும் மழைதனில் இல்லையே
  • காலை மோட்சமும் வாலை ஞானமும் நிலைக்காது
  • காலையில் எழுந்து காக்கை முகத்தில் விழிக்காதே
  • காலையில் தயிர், கடும் பகலில் மோர், மாலையில் பால்
  • காலையில் பூத்த மலர் மாலையில் வாடுவதைப் போல
  • காலை வாடை, மாலை உப்பு, மழை அப்புறம்
  • காலை விருத்தைத் தட்டாதே; கசடருடன் கூடித் திரியாதே
  • காவடிப்பாரம் சுமக்கிறவனுக்குத்தான் தெரியும்
  • காவடிப் பாரம் சுமக்கிறவனுக்குத் தெரியும்
  • காவல் காக்க வந்த குரங்கு கைத்துப்பாக்கி கேட்டதாம்
  • காவல்தானே பாவையர்க்கு அழகு
  • காவேட்டி ரங்கனுக்கு மேல் வெட்டி இரண்டாம்
  • காவேட்டி ரங்கனுக்கு மேல் வேட்டி வெள்ளை
  • காவேட்டி ரங்கனுக்கு வைப்பாட்டி இரண்டாம்
  • காவேரிக் கரைப் பசுப் போல் அலைகிறான்
  • காவேரி கடவாக் கந்தாடை அண்ணன்
  • காவேரித் தண்ணீர் குடித்தவனுக்குச் சாவேரி ராகம் கஷ்டமா?
  • காவேரி ஆறு கரை புரண்டு போனாலும் வீராணத் தேரி விதை முதலுக்குக் கட்டாது
  • காவேரி ஆற்றை மறிப்பாய்; கார்த்திகை மாதத்துக் கர்க்கடகச் சந்திரனையும் மறிப்பாயா?
  • காவேரி கஞ்சியாய்ப் போனாலும் நாய் நக்கித்தான் குடிக்கவேன்டும்
  • காவேரி பாதி, கர்ணன் பாதி
  • காவேரியைப் போல நதி இல்லை; சாவேரியைப் போல ராகம் இல்லை
  • காவோலை விழுந்ததென்று குருத்தோலை சிரித்ததாம்
  • காழி பாதி, வீழிபாதி
  • காளை தேட, சோமன் அழிக்க, சுந்தரன் சுகிக்க
  • காளவாய்க்கு மழையும் கைம்பெண்டாட்டிக்குப் பிள்ளையும்
  • காளி தோட்டத்துக் கற்பக விருட்சம் ஆருக்கும் உதவாது
  • காளிப் பட்டம் போனாலும் மூளிப் பட்டம் போகாது
  • காளியோடு பிறந்த மூளி, மூளியோடு பிறந்த காளி
  • காளை ஈன்றதென்று கேட்குமுன்னே கயிறு எடு என்றானாம்
  • காளை கட்டிக் கார் உழவை ஒட்டு
  • காளை போன வழியே கன்று போகும்
  • காளை மாடு ஆனாலும் கன்றுக்கு உழக்குப் பால் தா என்றானாம்
  • காளையைக் கட்டுத் தறியில் விட்டுவிட்டு மேயும் இடத்தில் பிடிக்க முடியுமா?
  • காற்ற ஊசியும் வாராது காணுங் கடைவழிக்கே
  • காற்றில் அகப்பட்ட இலவம் பஞ்சு போல
  • காற்றில் அகப்பட்ட கப்பல் போல அலைகிறது மனம்
  • காற்றின் இடைப்பட்ட கயவர் மனம் போல
  • காற்று அடிக்கக் காற்று அடிக்க நாற்று முடி தூக்குகிறாயா? வேர்த்து வேர்த்துவிட உம்மாச்சி பண்ணுகிறாயா?
  • காற்றில் ஆடினதாம் கம்பங்கதிர்; அதற்குப் பயந்ததாம் சிட்டுக்குருவி
  • காற்றில்லாமல் தூசி பறக்குமா?
  • காற்றிலே கருப்பிலே கண்டதில்லை
  • காற்றடிக்கக் காற்றடிக்க நாற்றுக் கட்டு சுமக்கிறாயா?
  • கரிவடியக் கரிவடியச் சிவபூஜை செய்கிறாயா?
  • காற்றடிக்கத் தாழை பூத்தது போல்
  • காற்று உள்ள போதே தூற்றிக்கொள்
  • காற்றுக்கா, மழைக்கா, போர்த்துக் கொள்ளத் துணிக்கா?
  • காற்றுக் காற்றோடே போயிற்று
  • காற்றுக்கு எதிர் ஏற்றிய விளக்குப் போல
  • காற்றுக்கு எதிர்லே துப்பினால் முகத்தில் விழும்
  • காற்றிலே அகப்பட்ட கப்பல் போல் அலைகிறது மனம்
  • காற்றுக்கு எதிரே ஏற்றின விளக்கைப் போல
  • காற்றிலே கருப்பிலே கண்டது இல்லை
  • காற்று இல்லாமல் தூசி பறக்குமா?
  • காற்றுக்கு எதிரே சுற்றினால் முகத்துக்கு நேரே விழும்
  • காற்றுக்குத் தகுந்தாற் போல் பாயை மாற்றிக் கட்டு
  • காற்றுக்குத் தோணி எதிர்த்து ஓடாது
  • காற்றுக்கோ மழைக்கோ போர்த்திக் கொள்ளத் துணி இருக்கிறதா?
  • காற்று காற்றோடு போயிற்று
  • காற்றுப் படாமல் காப்பாற்றுகிறேன்
  • காற்றும் சிலரை நீக்கி வீசுமோ?
  • காற்றும் மழையும் கலந்து அடித்தது போல்
  • காற்றைப் பார்த்துக் கப்பல் நாட்டு
  • காற்றைப் பிடித்துக் கரகத்தில் அடைத்த கதை
  • காற்றைப் பிடித்துக் கையினில் அடக்க முடியுமா?
  • காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்
  • கானகத்து உக்க நிலா
  • கானல் நீர் போல
  • கானலைத் தண்ணீராய்க் கண்டதைப் போல
  • கானலை நீர் என்று எண்ணும் மான் போலே
  • கானலைச் சலமாய்க் கண்டது போல
  • காஷ்மீர்க் கண்டமோ?
  • காஷ்மீரம் முதல் கன்யாகுமரிவரை
  • காஷ்மீருக்குப் போனால் காசு மீறாது

கி[தொகு]

  • கிட்டத்தில் கட்டினால் எட்டத்தில் மழை, எட்டத்தில் கட்டினால் கிட்டத்தில் மழை
  • கிட்டாதாயின் வெட்டென மற
  • கிணற்றுக்குத் தப்பித் தீயிலே பாய்ந்தான்.
  • கிணற்றுத் தவளைக்கு நாட்டு வளப்பம் ஏன்?
  • கிங்கிணிக்குக் கிங்கிணியும், மங்கிணிக்கு மங்கிணியும் கெட்டது.
  • கிட்ட உறவு முட்டப் பகை. ( + தூர இருந்தால் நீள உறவு.)
  • கிட்டக் கிட்ட வந்தாலும் எட்ட எட்டப் போகிறான்.
  • கிட்ட வா நாயே, என்றால் எட்டி மூஞ்சியை நக்க வந்தாற் போல.
  • கிட்டிற்று, முட்டிற்று, வடுகச்சி கல்யாணம்.
  • கிட்டினால் ராமா, கோவிந்தா; கிட்டாவிட்டால் ஒன்றும் இல்லை.
  • கிடக்கிறது எல்லாம் கிடக்கட்டும்; கிழவனைத் தூக்கி மனையில் வை.(கிழவியை, கிழவனை எடுத்து மடியில் வைத்துக்கொள்)
  • கிடக்கிறது எல்லாம் கிடக்கக் கிழவியைத் தூக்கி மனையில் வைத்தாளாம்.
  • கிடக்கிறது ஒட்டுத் திண்ணை; கனவு காண்கிறது மச்சு வீடு.
  • கிடக்கிறது கிடக்கட்டும்; கிழவனையும் கிழவியையும் உள்ளே விடுங்கள்.
  • கிடக்கிறது குட்டிச்சுவர்; கனாக் காண்கிறது மச்சு வீடு. (மச்சு மாளிகை.)
  • கிடந்த கிடைக்கு நடந்த நடை மேல்.
  • கிடந்த பசியைக் கிள்ளிக் கிளப்பினானாம்.
  • கிடாக் கன்று போட்டது என்றால் பிடித்துக் கட்டு என்றானாம்.
  • கிடாரம் உடைந்தால் கிண்ணிக்கு ஆகும்; கிண்ணி உடைந்தால் என்னத்துக்கு ஆகும்?
  • கிடாவும் காளையும் பிணைத்தாற் போல.
  • கிடைக்காத சரக்குக் கிடைத்ததைப் போல. (கிடையா.)
  • கிடைக்குத் கிடை ஆடுதான்.
  • கிடை கிடந்த இடத்தில் மயிர் கூடக் கிடையாது.
  • கிடைப்பது குதிரைக் கொம்பு.
  • கிண்டக் கிண்ட அம்பட்டன் குப்பையிலே மயிரே புறப்படும்.
  • கிண்டக் கிண்டக் கீரையும் மயிரும்.
  • கிண்டி விட்டுக் கிளறி வைக்கிறது. (கிளறி விடு.)
  • கிண்டி விட்டு வேடிக்கை பார்க்கிறது.
  • கிண்ணி பட்டாலும் பட்டது; கிடாரம் பட்டாலும் பட்டது.
  • கிண்ணி வைத்துக் கிண்ணி மாற்றுகிறது.
  • கிணற்றில் அகப்பட்டது போல.
  • கிணற்றில் இருக்கும் ஆமைபோல் இருப்பவனுக்கு உலகம் தெரியுமோ?
  • கிணற்றில் கல்லைப் போட்டது போல. (கிணற்றில் தள்ளிக் கல்லையும் போட்டான்.)
  • கிணற்றில் தண்ணீர் உதித்தது.
  • கிணற்றில் போட்ட கல் மாதிரி.
  • கிணற்றில் போட்டாலும் எண்ணிப் போடு.
  • கிணற்றில் விழுந்தவன் மறுபடியும் விழுவானா?
  • கிணற்றின் ஆழமும் கயிற்றின் நீளமும் பார்க்க வேண்டும்.
  • கிணற்று ஆழத்தைக் கண்டாலும் காணலாம்; நெஞ்சு ஆழத்தைக் காண முடியுமா?
  • கிணற்றுக்குத் தப்பித் தீயில் பாய்ந்தான். (விழுந்தது போல.)
  • கிணற்றுக்குள் இருந்து பேசுகிறவனைப் போல் பேசுகிறான்.
  • கிணற்றுக்குள் இருப்பவனை விளக்கிட்டுத் தேடினாற்போல.
  • கிணற்றுக்குள்ளே கங்கை குதித்தாற் போல.
  • கிணற்றுத் தண்ணீரை வெள்ளமா கொண்டு போகும்?
  • கிணற்றுத் தவளைக்குக் கிணறுதான் சமுத்திரம்.
  • கிணற்றுத் தவளைக்கு நாட்டு வளப்பம் ஏன்?
  • கிணற்றுத் தவளை தண்ணீர் குடித்ததைக் கண்டது யார்? கேட்டது யார்? (குடியாததை.)
  • கிணற்று நீரை வெள்ளம் கொண்டு போகுமா?
  • கிணற்றைக் கண்டு கடல் ஒதுங்கிப் போகுமா?
  • கிணற்றைக் காத்தால் வயிற்றைக் காக்கும்.
  • கிணற்றைத் தூர்த்தால் வயிற்றைத் தூர்க்கும்.
  • கிணறு இருக்க மலை தோண்டாதே. (கிடக்க மலை கல்லாதே.)
  • கிணறு இறைக்க இறைக்கச் சுரக்கும்.
  • கிணறு தப்பித் துரவில் விழலாமா?
  • கிணறு மெத்தினால் கீழ்வரை பொசியும்.
  • கிணறு வெட்டப் பூதம் புறப்பட்டாற் போல.
  • கிணறு வெட்டித் தவளையையும் பிடித்து விடுகிறதா?
  • கிணறு வெட்டித் தாகம் தீர்க்கலாமா?
  • கிரக சாந்திக்கு க்ஷவரம் செய்து கொள்கிறதா?
  • கிராக்கி மொச்சைக் கொட்டை; வராகனுக்கு இரண்டு கொட்டை. (பத்துக் கொட்டை,)
  • கிராம சாந்திக்காகத் தலையைச் சிரைத்துக் கொண்டானாம்.
  • கிராமத்தைப் பார்க்கச் சொன்னால் சேரியைப் பார்க்கிறான்.
  • கிராம தேவதை முதல் க்ஷாம தேவதை வரை ராம தேவனுக்குச் சரியாமோ?
  • கிரிசை கெட்டு வரிசை மாறுகிறது.
  • கிரியை அற்றோன் மறை சாற்றுவது ஏன்?
  • கிரியை அறிந்து சொன்னால் கிழித்துக் கொள்கிறதா?
  • கிருக சாந்திக்கு க்ஷவரம் பண்ணுவதா?
  • கிருபா நிதியே கருணாநிதி. (சருவா நிதி.)
  • கிருஷ்ண பட்சத்துச் சந்திரனைப் போல்.
  • கிருஷ்ண வாத்தியார் திவசம் பண்ணுகிறதற்கும் கிழக்கு வெளுக்கிறதற்கும் சரியாய்ப் போகும்.
  • கிருஷ்ணா ராமா கோவிந்தா. கிழக்கு எப்போது வெளுக்குமடா?
  • கிலி பிடித்ததோ? புலி பிடித்ததோ?
  • கிழ ஓணான் மரம் ஏறாதா?
  • கிழக் கிடாவைப் புகழ்கிறது இகழ்ச்சி அல்லவா?
  • கிழக்கிலும் மேற்கிலும் கருவிலும் கடன் படாதே. (கொடாதே.)
  • கிழக் குடலுக்குச் சோறும் இடி சுவருக்கு மண்ணும் இடு.
  • கிழக் குரங்கு குட்டி போட்டாற் போல.
  • கிழக் குரங்குபோல விழிக்கிறதைப் பார்.
  • கிழக்கே கடன் கொடாதே.(செங்கற்பட்டு வழக்கு.)
  • கிழட்டுக் குதிரைக்குச் சவுக்கடி கொடுத்து போல்.
  • கிழத்துக்குச் சாதமும் முறத்துக்குச் சாணியும்.
  • கிழ நாய் குரைப்பதற்கும் காரணம் உண்டோ?
  • கிழப் பேச்சுக் கவைக்கு உதவுமா?
  • கிழம் ஆனாலும் கெட்டு ஆனாலும் கட்டிக் கொண்டவன் பிழைப்பான்.
  • கிழமைக்கு வைத்து அழுவது. (8ஆம் நாளில் திருநெல்வேலி வேளாளர் இறந்தவன் விரும்பிய பொருள்களை வைத்து அழுவார்கள்.)
  • கிழவன் கொடுத்த பணத்துக்கு நரை உண்டா?
  • கிழவன்தான் நரை, கிழவன் கொடுத்த பணமுமா நரை?
  • கிழவன் பேச்சுக் கிண்ணாரக்காரனுக்கு ஏற்குமா? (கிழவி பேச்சு. கேட்குமா?)
  • கிழவனுக்கு வாழ்க்கைப் படுவதிலும் கிணற்றில் விழலாம்.
  • கிழவனைக் கல்யாணம் பண்ணிக் கொண்டால் கடைசி வரையில் சாப்பாடு.
  • கிழவி இருந்த வீடும், கிளி இருந்த காடும் ஈடேற முடியா.
  • கிழவி கிண்ணாரம் போடுகிறாள்.
  • கிழவி சொல்லக் குமரி கேளாள். (யாழ்ப்பாண வழக்கு)
  • கிழவி தலை நரைத்தது என்ன? அதை மழுங்கச் சிரைத்தது என்ன?
  • கிழவி திரண்டாளாம்; பஞ்சாங்கக்காரன் பிட்டுக்கு அழுதானாம்.
  • கிழவி பாட்டைக் கிண்ணாக்காரன் கேட்பானா? (கிழவி பேச்சைக் கின்னரக்காரன்.)
  • கிழவி போன போது சுவர் இடிந்து விழுந்ததாம்.
  • கிழவியும் காதம் குதிரையும் காதம். (ஒளவையார் கூற்று.)
  • கிழவியும் காலை மடக்க மாட்டாள்.
  • கிழவியை அடித்தால் வழியிலே பேளுவாள்.
  • கிழவியை எடுத்து மணையிலே வைத்தாற் போல.
  • கிழவியைப் பாட்டி என்பதற்குக் கேட்க வேண்டுமா?
  • கிழிஞ்சாப்பிள்ளை மணியத்திலே நீட்டின விரல் அற்றுப் போம்.
  • கிழித்த கோட்டைத் தாண்ட மாட்டான்.
  • கிழிந்த சேலை காசுக்கு இரண்டு.
  • கிழிந்த சேலையும் பேச்சுக் கற்ற வாயும் சும்மா இரா.
  • கிழிந்தது கிருஷ்ணன் வேட்டி; தைத்தது தாசன் வேட்டி.
  • கிழிந்த பம்பரம் காசுக்கு இரண்டு,(கிழிந்த பட்டு.)
  • கிள்ளப் பழுக்குமாம்; கிளி இருந்து கொஞ்சுமாம்.
  • கிள்ளாவுக்குச் செல்லும் கெடி மன்னர் போல.
  • கிள்ளி எடுக்கச் சதை இல்லை; பேர் தொந்தியா பிள்ளை.
  • கிள்ளுக் கீரை போல் உள்ளத்தில் எண்ணாதே.
  • கிள்ளுக் கீரையா?
  • கிள்ளுகிறவனிடத்தில் இருந்தாலும் அள்ளுகிறவனிடத்தில் இருக்கக் கூடாது.
  • கிள்ளுவார் கீழே இருந்தாலும் இருக்கலாம்; அள்ளுவார் கீழே இருக்க முடியாது.
  • கிள்ளை பழுக்குமாம்; கிளி வந்து கொஞ்சுமாம்.
  • கிளர்த்தும் கல்வி தளர்ச்சி படாது.
  • கிளி அருமையைப் பூனை அறியுமா?
  • கிளி அழுதால் பூனை விடுமா?
  • கிளி போலப் பெண்டாட்டி இருந்தாலும் குரங்குபோலக் கூத்தியாள் வேணுமாம்.
  • கிளியைப் போலப் பேச்சும் மயிலைப் போல நடையும்.
  • கிளியை வளர்த்துக் குரங்கு கையில் கொடுத்தது போல.

கீ[தொகு]

  • கீர்த்தியால் பசி தீருமா?
  • கீறி ஆற்றினால் புண் ஆறும்.
  • கீர்த்தி பெற்றும் கிலேசம் என்ன?
  • கீர்த்தியால் பசி தீருமா?
  • கீர்த்தியும் அபகீர்த்தியும் வந்தால் போகா.
  • கீரிக்கும் பாம்புக்கும் தீராப் பகை.
  • கீரி கடித்த பாம்பு போல.
  • கீரி கீரி நண்டு பிடி, வாய்க்கால் கீரி நண்டு பிடி, வயலுக்கு கீரி நண்டு பிடி. (வாயை மூடித் திறக்கும் விளையாட்டு.)
  • கீரியும் பாம்பும் போல
  • கீரி வாய்ப் பாம்பு போல.
  • கீரை இல்லாச் சோறும் கிழவன் இல்லா பட்டணமும் பாழ்.
  • கீரைக் கட்டை வெட்டச் சொன்னால் தோரணம் கட்டுவதற்கா? (கட்டுகிறதா?)
  • கீரைக் கடைக்கும் எதிர்க்கடை வேண்டும். (வைப்பது போல.)
  • கீரைக்குக் கழுவின தண்ணிர் கிண்டி அவிக்கப் போதும்.
  • கீரைக்குப் புல்லுருவி கீழே முளைத்தாற் போல்.
  • கீரைக்குப் புழு வேரில்.
  • கீரை, கீரைத்தண்டு, கீரைப் புளிக் குழம்பு என்றானாம்.
  • கீரைத்தண்டு பிடுங்க ஏலேலப் பாட்டு ஏன்? (பாட்டா?)
  • கீரை நல்லதானால் கழுவின தண்ணீரே போதாதா? (கழுவின தண்ணீரிலே வெந்துவிடும்.)
  • கீரை மசித்த வாணாயில் ரசம் வைத்த உறவு.
  • கீரையும் இரண்டு கறி பண்ணாதே.
  • கீரையும் மயிரும் விரவியது போல.
  • கீரையும் மாவும் கெட்ட புளிச்சாறும்.(கட்ட )
  • கீரை விற்ற தானியம் போல.
  • கீழ் அகத்து மன்னி குளித்தால் கிழக்கு வெளுக்கும்.
  • கீழ் எலி போலத் தோண்டிக் கிளறுகிறது.
  • கீழ் ஏழ் உலகமும் மேல் ஏழ் உலகமும் பார்த்தவன் போல் பேசுகிறான்.
  • கீழ் ஏழு லோகமும் மேல் ஏழு லோகமும் கண்ட காட்சியா?
  • கீழ்க்காது மூளி, மேற்காது மூளி, சண்டைக்கு ரணபத்திரகாளி.
  • கீழ்க்குலத்தான் ஆனாலும் கற்றவன் கற்றவன்தான்.
  • கீழ்க் குலத்தான் ஆனாலும் கற்றவன் மேற்குலத்தான்.
  • கீழக் கரை நாய் அடிபட்டாற் போல் அடிபடுகிறாயே.
  • கீழே பாம்பு என்றால் மேலே பார்க்கின்றான்.
  • கீழே போட்டு உதைக்கச்சே மீசையில் மண் படவில்லை என்ற கதை.
  • கீழே போனால் பிணம்; மேலே வந்தால் பணம். (கோலார் தங்க வயலில்.)
  • கீழே விழுகிற மாப்பிள்ளைக்கு அரிவாள் மணையை முட்டுக் கொடுத்தது போல.
  • கீழே விழுந்தாலும் மீசையில் மண் படவில்லை என்றானாம்.
  • கீழைத்தெருக் கிழவி அவிசாரி போனாள் என்று மேலைத் தெருக்கிழவன் கோவணத்தில் கிட்டியைக் கட்டி அடித்தானாம்.
  • கீழைத் தெருவிலே பல்லக்குக் கொடுத்து மேலைத் தெருவிலே பிடுங்கிக் கொள்கிறது. (கீழைத் தெருவிலே கொடுத்து.)
  • கீழோர் ஆயினும் தாழ உரை.
  • கீற்றிலே கனவிலே தெரியுமா?
  • கீற்றிலே வேண்டாம்; காற்றிலே வாரு.
  • கீறி ஆற்றினால் புண் ஆறும்.

கு[தொகு]

  • குங்குமம் சுமந்த கழுதை மணம் அறியுமா?
  • குசவனுக்கு ஆறுமாதம் தடிகாரனுக்கு அரை நாழிகை.
  • குடல் காய்ந்தால் குதிரையும் வைக்கோல் தின்னும்.
  • குடி, சூது, விபசாரம் குடியைக் கெடுக்கும்.
  • குடி வைத்த வீட்டிலே கொள்ளி வைக்கலாமா?
  • குடும்பத்தில் இளையவனும் கூத்தாடியில் கோமாளியும் ஆகாது.
  • குட்டுப் பட்டாலும் மோதுகிற கையால் குட்டுப்படவேண்டும்.
  • குணத்தை மாற்றக் குருவில்லை.
  • குணம் இல்லா வித்தை எல்லாம் அவித்தை.
  • குணம் பெரிதேயன்றிக் குலம் பெரியதன்று.
  • குதிரை இருப்பு அறியும், கொண்ட பெண்டாட்டி குணம் அறிவாள்.
  • குதிரை ஏறாமல் கெட்டது, கடன் கேளாமல் கெட்டது.
  • குதிரை குணமறிந்தல்லவோ தம்பிரான் கொம்பு கொடுக்கவில்லை.
  • குந்தி இருந்து தின்றால் குன்றும் மாளும்.
  • குப்பை உயரும் கோபுரம் தாழும்.
  • குரங்குப் புண்ணுக்கு மருந்தில்லை.
  • குருட்டுக் கண்ணுக்குக் குறுணி மையிட்டுமென்ன?
  • குரு மொழி மறந்தோன் திருவழிந்து அழிவான்.
  • குரைக்கிற நாய் வேட்டை பிடிக்குமா?
  • குலம் குப்பையிலே, பணம் பந்தியிலே
  • குலவித்தை கற்றுப் பாதி கல்லாமற் பாதி.
  • குல வழக்கம் இடை வழக்கும் கொஞ்சத்தில் தீராது.
  • குறைகுடம் தளும்பும், நிறைகுடம் தளும்பாது.
  • குற்றமுள்ள நெஞ்சு குறுகுறு என்றும், குறும்பியுள்ள காது தினவு கொள்ளும்
  • குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை
  • குழந்தையும் தெய்வமும் கொண்டாடின இடத்திலே.
  • குழைகின்ற நாய் கடிக்காது.
  • குப்பையிற் கிடந்தாலும் குன்றிமணி நிறம் போகுமா?
  • கும்பிடு கொடுத்துக் கும்பிடு வாங்கு.
  • குரங்கின் கைப் பூமாலை.
  • குரங்குக்குப் புத்திசொல்லித் தூக்கணாங்குருவி கூண்டு இழந்தது.
  • குரு இலார்க்கு வித்தையுமில்லை முதல் இல்லார்க்கு ஊதியமில்லை.
  • குங்குலியத் தூபம் காட்டிச் சன்னதமும் குலைந்தால் கும்பிடு எங்கே? (காட்டியும்.)
  • குங்குமக் கோதைக்கும் அஞ்சு பணம்; குருட்டுக் கண்ணிக்கும் அஞ்சு பணமா?
  • குங்குமம் இட்ட நெற்றியும் குசு விட்ட குண்டியும் சரியாகுமா?
  • குங்குமம் சுமந்த கழுதை வாசனை அறியுமா? (பரிமளம்.)
  • குச்சத்திரம் குசுவாகப் போக.
  • குச்சத்திரம் குடியைக் கெடுக்கும்.
  • குச்சு நாய்க்கு மச்சு வீடா?
  • குச்சு வீடு கட்டி அல்லவா மச்சு வீடு கட்ட வேண்டும்?
  • குசத்தாதனும் இடை ஆண்டியும் இல்லை.
  • குசத்தி நாக்கை அறுத்தாலும் குண்டு மூன்று காசு என்பாள்.
  • குசத்தி நாக்கைக் குட்டம் போட்டு நறுக்கினாலும் குடம் தோண்டி இரண்டு காசு என்பாள். (கூழ் கூழாய் அறுத்தாலும் கூழையாய் அறுத்தாலும்.)
  • குசவனுக்கு ஆறு மாதம் வேலை; தடிகாரனுக்கு அரை நாழிகை. (தடியனுக்கு ஆறு நாழிகை வேலை.)
  • குசவனுக்குப் பல நாள் வேலை; தடிகாரனுக்கு ஒரு நிமிஷ வேலை. (ஒரு கடின வேலை, அரை நாழிகை வேலை.)
  • குசு கும்பிடப் போனால் தெய்வம் திருடுக்கென்றதாம்.
  • குசு கொண்டு வந்திருக்கிறேன், கதவைத் திற, கொட்டி வைக்க இடம் இல்லை.
  • குசு புடைக்க வெறும் முறம் ஆச்சு.
  • குசும்புக்கும் கவுண்டிக்கும் மருந்து ஏது? (பொறாமைக்கும். வழுக்கைக்கும். நாஞ்சில் நாட்டு வழக்கு.)
  • குசு விடாமல் இருந்தால் குங்கிலியம் மணக்கும்.
  • குசுவுக்குப் பயந்து குடி ஓடிப்போனாளாம்.
  • குஞ்சிரிப்புக்கு மருந்து சாப்பிட உள்ள சிரிப்பும் போனாற் போல.
  • குஞ்சு செத்த காக்கை சிறகு அடித்துக் கொள்வது போல.
  • குஞ்சுடன் மேய்ந்த கோழியைப் போல.
  • குட்டக் குட்டக் குனிகிறவனும் முட்டாள்; குனியக் குனியக் குட்டுகிறவனும் முட்டாள். (மடையன்.)
  • குட்டங்கோனி தட்டான் குறைக்கும் வரி வைத்தான்.
  • குட்ட நாடு கெட்டால் எட்டு நாடும் கெட்டன. குட்டி ஆடு கொழுத்தாலும் வழுவழுப்புப் போகாது. (குறையாது.)
  • குட்டி ஆடு செத்ததென்று கோனாய் குந்தி அழுததாம்.
  • குட்டி ஆனைக்குக் கொம்பு முளைத்தது; பட்டணமெல்லாம் பறந்தோடிப் போச்சு.
  • குட்டி ஆனையும் குளத்தைக் கலக்கும்.
  • குட்டி இட்ட நாய்க்குக் குப்பை மேடு கோபுரம்.
  • குட்டிக் கரணம் போட்டாலும் கொடுப்பது அரிது.
  • குட்டிக் கரணம் போட்டாலும் மட்டி புத்தி போகாது. (மட்ட)
  • குட்டிக் கரணம் போட்டாலும் லோபி கொடான். (காசு கொடான்.)
  • குட்டிக் கரணம் போட்டாலும் வட்டில் சோற்றுக்கு வழி இல்லை.
  • குட்டிக் கலகம் பண்ணுகிறவன் குட்டுப்பட்டுச் சாவான். (செய்பவன்.)
  • குட்டிக் கிடையிலே ஓநாய் புகுந்தது போல.
  • குட்டிக்கும் பட்டிக்கும் குடிபோகச் சந்தோஷம். (குட்டிக்கும் நாய்க்கும், பட்டி-நாய். குடிபோகக் கொண்டாட்டம்.)
  • குட்டிக் குரங்கானாலும் கெட்டிப் பிடி.
  • குட்டிக் கொழுந்தனும் கோள் சொல்லி நாத்தனாரும்.
  • குட்டிக் கொள்ளும் போதே கண்ணில் குட்டிக் கொண்டான். (கொண்டால்.)
  • குட்டிக் கொள்ளும் போதே முட்டிக் கொண்டானாம்.
  • குட்டி குரைத்து நாயின் தலையிலே வைத்தது போல.
  • குட்டி கொழுத்தாலும் வழுக்கை வழுக்கைதான்.
  • குட்டிச் சுவரில் முட்டிக் கொள்ள வெள்ளெழுத்தா?
  • குட்டிச் சுவரிலே தேள் கொட்டக் கட்டுத் தறியிலே நெறி ஏறுமா?(இடுமா?)
  • குட்டிச் சுவரிலே தேள் கொட்டத் தண்ணீர் மிடாவிலே நெறி கட்டினது போல.
  • குட்டிச் சுவரிலே தேள் கொட்ட நெடுஞ் சுவரிலே நெறி கட்டியதாம்.
  • குட்டிச் சுவரும் குரங்கு இருந்த மாளிகையும் பாழ். (மாளிகையும் போல.)
  • குட்டிச் சுவரே. கூறை இல்லா வீடே!
  • குட்டி செத்ததுமல்லாமல் குழி தோண்ட இரண்டு பணம்.
  • குட்டி செத்தாலும் குரங்கு விடாது.
  • குட்டி நரை குடியைக் கெடுக்கும்.
  • குட்டி நாய்க்குப் பல் முளைத்தது போல.
  • குட்டி நாய்க்கும் குழந்தைப் பிள்ளைக்கும் இடம் கொடுக்கக் கூடாது.
  • குட்டி நாய் குரைக்கிறது போல.
  • குட்டி நாய் குரைத்துப் பட்டி நாய்க்குக் கேடு வந்தது. (உதை வந்தது.)
  • குட்டி நாய் கொண்டு வேட்டை ஆடினது போல. (நாயை.)
  • குட்டி நாய் வேட்டை நாயை விரட்டினாற் போல.
  • குட்டி நாயும் குழந்தைப் பிள்ளையும் இட்ட கையைப் பார்க்கும்.
  • குட்டிப் பாம்பை அடித்தாலும் குற்றுயிராக விடக்கூடாது. (விடாதே.)
  • குட்டி பெருத்தாலும் வழுக்கை வழுக்கைதான்.
  • குட்டி போட்ட நாய் கூனி உட்கார்ந்தது போல.
  • குட்டி போட்ட நாய் போலக் குரைக்கிறது.
  • குட்டி போட்ட நாய் போல வள்ளென்று விழுகிறான்.
  • குட்டி போட்ட நாய் முடங்கினாற் போல.
  • குட்டி போட்ட நாய் முணுமுணுத்தாற் போல.
  • குட்டி போட்டி நாயைப் போல் ஏன் உறுமுகிறாய்?
  • குட்டி போட்ட பூனைபோல அலைகிறான்.
  • குட்டி மானம் விட்டுக் குசவனோடு பேசினால் சட்டையும் பண்ணான்; சட்டியும் கொடான். (சட்டியும் கொடான், சட்டையும் பண்ணான் மானம் தப்பி.)
  • குட்டியின் கையைப் பிடித்துக் குரங்கு கொள்ளிக் கட்டைச் சூடு பார்த்தாற் போல.
  • குட்டி வேதாந்தம் குடியைக் கெடுக்கும்.
  • குட்டின குட்டும் குண்டிற் பாய்ந்த தண்ணீரும் வருமா? (குழியிற் பாய்ந்த.)
  • குட்டுப்பட்டாலும் மோதிரக் கையால் குட்டுப்பட வேண்டும்.
  • குட்டை ஏறிக் குரைத்த நாயே, சதை வீங்கிச் செத்த நாயே!
  • குட்டை குழப்பினால் சேறுதான் மிஞ்சும்.
  • குட்டை குழப்புகிறான்.
  • குட்டைத் தாதன் குட்டையிலே விழுந்தான்.
  • குட்டைத் தாதன் மகன் மட்டைத்தாதன் குளத்திலே விழுந்து செத்தான்.
  • குட்டை மரம் குலை குலையாய்க் காய்த்திருக்கிறது.
  • குட்டையில் ஊறிய மட்டை.
  • குட்டையைக் கலக்கிப் பருந்து இரை இட்டதுபோல. (இரை தேடுவது.)
  • குட்டையைக் குழப்பி மீனைப் பிடிக்கிறது போல.
  • குட்டை வால் நாய்க்கு நெஞ்சில் அறிவு.
  • குடத்தில் பாக்குப் போடு; மிளகாய்ப் பொடிக்கு உப்புப் போடாதே.
  • குடத்தில் பொன் கூத்தாடுமா?
  • குடத்தில் விளக்கை இட்டுக் கோபுரத்தின் மேல் வைத்தாற் போல.
  • குடத்து விளக்குக்கும் குன்றி மணிச் சாதத்துக்கும் இருக்கிறேன்.
  • குடத்துள் ஏற்றிய விளக்குப் போல.(குடத்தில்.)
  • குடத்தைக் கவிழ்த்துப் பழத்தைச் சொரிந்த கதை.
  • குடப் பாம்பினிடைச் சிறு தேரை.
  • குடப்பால் கறந்தாலும் குதிரையோட்டம் ஓட மாட்டாது.
  • குடப்பால் கறந்தாலும் கூரை பிடுங்குகிற மாடு ஆகாது.(கூரைபிடுங்கித் தின்னுமாம் மாடு.)
  • குடப்பாலில் கையைவிட்டுச் சத்தியம் செய்.
  • குடம் தண்ணீரில் கொள்ளி வைத்தாற் போல.
  • குடல் அறுந்த கோழி எங்கே போகும்?
  • குடல் அறுந்த நரி எவ்வளவு தூரம் ஓடும்? (எந்த மட்டும்.)
  • குடல் ஏற்றத்துக்குக் கோடி வைத்தியம்.
  • குடல் காய்ந்தால் குதிரையும் வைக்கோல் தின்னும்.
  • குடல் காய்ந்தால் நாய்க்கு நாற்றம் நறுமணம்.
  • குடல் காய உண்டால் உடல் காயம் ஆகும்.
  • குடல் கூழுக்கு அழுகிறதாம்; கொண்டை பூவுக்கு அழுகிறதாம்.
  • குடலில் கண்ட தினவு போல்.
  • குடலும் கூந்தலும் கொண்டது மட்டும் கொள்க. (கொள்கை.)
  • குடலைப் பிடுங்கிக் காட்டினாலும் அதுவும் கஜகர்ண வித்தை என்கிறான்.
  • குடலைப் பிடுங்கிக் காட்டினாலும் வாழைநார் என்பார். (உருவிக் காட்டினாலும்.)
  • குடலைப் பிடுங்கி மாலையாய்ப் போட்டுக் கொள்வேன்.
  • குடிலைப் பிடுங்குகிறது ஓக்காளம்.
  • குடி இருக்க வந்தாயோ? கொள்ளி வைக்க வந்தாயோ?
  • குடி இருந்த வீட்டிலே கொள்ளி வைக்கிறவன். (வீட்டுக்கே வைப்பதா?)
  • குடி இருந்து அறி; வழி நடந்து அறி.
  • குடி இருந்து பார்; கூட்டுப் பயிர் இட்டுப் பார்.
  • குடி இருப்பது குச்சு வீடு; கனாக் காண்பது மச்சு மாளிகை. (மச்சு வீடு.)
  • குடி இல்லா ஊரிலே அடியிடல் ஆகாது.
  • குடி இல்லா ஊரிலே ஒற்றைப் பணக்காரன். (ஒற்றை விர்த்தகன்.)
  • குடி இல்லா ஊரிலே குருவியும் பறக்காது.
  • குடி இல்லா ஊருக்குக்குள்ள நரியே அரசன்.
  • குடி இல்லா விட்டால் குண்டுப் பெருச்சாளி உலவும். (குடியில்லா வீட்டில்.)
  • குடி உடையானே முடி உடையான்.
  • குடி உயரக் கோல் உயரும். குடி உயர முடி உயரும்.
  • குடிக்கக் கஞ்சி இல்லை; கொப்புளிக்கப் பன்னீராம்.
  • குடிக்கச் செம்பும் எரிக்க விளக்கும் வேண்டாமா?
  • குடிக்கச்சே குமட்டினால் எடுக்கும்.
  • குடிக்கத் தண்ணீர் கேட்டால் குளிப்பாட்டக் கொண்டு வருவான்.
  • குடிக்கத் தெரியாதவன் கவிழ்த்துக் கொட்டினானாம்.
  • குடிக்கா விட்டால் கொட்டிக் கவிழ்,(குடிக்கத் தெரியாவிட்டால்.)
  • குடிப்பது எருமை மூத்திரம்; கடித்துக் கொள்வது இஞ்சிப் பச்சடி.
  • குடிக்கிறது காடி நீர்; அதற்குத் தங்க வட்டிலா?
  • குடிக்கிறது கூழ்; இருக்கிறது சிங்காசனம்.
  • குடிக்கிறது கூழ், கொப்புளிக்கிறது பன்னீர். (குடிக்கிறது நீர் )
  • குடிக்கிறது பழங் கஞ்சி; கொப்புளிக்கிறது பன்னீர்.
  • குடிக்கிறது வெந்நீர்; கொப்புளிப்பது பன்னீர்.
  • குடிக்கிற பாலை வெடிப்பிலே வார்க்கிறதா?
  • குடிக்கிற முலையும் சரி, பிடிக்கிற முலையும் சரியா? (ஒன்றுதானா?)
  • குடிக்கிறவன் கையைச் சுற்றிச் சூடு போட்டாலும் குடியை விடான்.
  • குடிக்கிற வீடு விடியுமா?
  • குடிக்குச் சகுனியும் கொல்லைக்குப் பல்லியும் கூடா.
  • குடிகாரன் புத்தி விடிந்தால் தெரியும்.
  • குடிகாரன் பேச்சு விடிந்தால் போச்சு. (பொழுது விடிந்தால்.)
  • குடிகாரன் வீட்டில் விடிய விடியச் சண்டை.
  • குடி கெடுத்த குஷியிலே குரங்கைக் கட்டிக்கொண்டு அழுதானாம்.
  • குடி, சூது, விபசாரம் குடியைக் கெடுக்கும்.
  • குடித்த மருந்து குடித்தாற் போல எடுத்தால் பரிகாரி வாயிலே மண்ணுதான். (பரிகாரி. வைத்தியன்.)
  • குடித்த மறி கூட்டில் கிடைக்காது.
  • குடித்தனம் என்று பண்ணினால் நன்மையும் வரும்; தீமையும் வரும்.
  • குடித்தனம் செழித்தால் துரைத்தனம் செழிக்கும்.
  • குடித்தனம் மேலிட வேண்டிப் பிடாரியைப் பெண்டு வைத்துக் கொண்டான்.
  • குடித்தனமே துரைத் தனம்.(குடித்தனமோ, துரைத்தனமோ?)
  • குடிப்பது கூழ், ஏறுவது தந்தப் பல்லக்கு.
  • குடிப்பது கூழ், கொப்புளிப்பது பன்னீராம்.
  • குடிப்பது மல ஜலம்; கொப்புளிப்பது பன்னீர்.
  • குடிப் பெண் வயிறு எரிய, கொடிச் சீலை நின்றெரிய.
  • குடி போகிற வீட்டுக்கு வரச் சொன்ன கதை.
  • குடி போன வீட்டிலே வறட்டு நாய் காத்தது போல.
  • குடி மக்கள் துரைத்தனம் செய்கிறது போல்.
  • குடி மதம் அடிபடத் தீரும்.(அடிபட்டால்.)
  • குடியனும் வெறியனும் அடிபடாமல் குணப்பட மாட்டார்கள்.
  • குடியனும் வெறியனும் சரி.
  • குடியாத வீடு விடியாது.
  • குடியில் பிறந்து குரங்காட்டம் ஆடுகிறான்.
  • குடியில் பிறந்து செடியில் விழுந்தான்.
  • குடியில் பெண் வயிறு எரிந்தால் கொடியிற் சேலை நின்று எரியும்.
  • குடியில்லா ஊரில் ஒற்றைப் பணக்காரன் வர்த்தகன்.
  • குடியிலே குரங்கானாலும் கொள்.
  • குடியும் கெட்டுக் குடிக்கிற ஓடும் கெட்டது.
  • குடியும் சூதும் குடியைக் கெடுக்கும்.
  • குடியே குடியைக் கெடுக்கும்.
  • குடி வரி உயர்த்திக் கொள்ளை அடிக்காதே.
  • குடி வைத்த வீட்டில் கொள்ளி வைக்கலாமா?
  • குடி வைத்துக் கொண்டாயோ? கொள்ளி வைத்துக் கொண்டாயோ?
  • குடு குடு என்று ஓடிக் குடுமியைச் சிரைத்தானாம். (ஓடி வந்தானாம்.)
  • குடும்பத்தில் இளையவனும், கூத்தாடியில் மூத்தவனும் உதவார். (கூத்தாடியில் சோம்பேறியும்.)
  • குடும்பா என்றால் கொத்து வேண்டாம்.
  • குடுமிக்கு ஏற்ற கொண்டை.
  • குடுமித் தலையின் வீறாப்பைக் கொண்டைத் தலையா பாரடா.(பார்த்தாயா?)
  • குடுமித் தலையும் மொட்டைத் தலையும் கூடுமா?
  • குடுமித் தலையும் மொட்டைத் தலையுமாய்க் கட்டுகிறது.
  • குமரிப்பெண்ணின் தாவணி தாலிகட்டுக்குப் பின்னர் சேலையாகி விட்டதாம்.

கூ[தொகு]

  • கூத்திக்கு முடிச்சிட்டுக் குரங்கு ஆனான், வேசிக்கு முடிச்சிட்டு விறகு ஆனான்
  • கூரைமேலே சோறு போட்டால் ஆயிரம் காகம்.
  • கூலியைக் குறைக்காதே வேலையைக் கெடுக்காதே?
  • கூழுக்கு மாங்காய் கொண்டாட்டம், குரங்குத் தேங்காய் கொண்டாட்டம்.
  • கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை.

கெ[தொகு]

  • கெஞ்சினால் மிஞ்சுவது, மிஞ்சினால் கெஞ்சுவது.
  • கெஞ்சும் புத்தி கேவலம் கொடுக்கும்.
  • கெஞ்சு மணியம் பண்ணுகிறது, (கெஞ்சி பண்ணுகிறதா?)
  • கெடுக்கினும் கல்வி கேடுபடாது
  • கெடுமதி கண்ணுக்குத் தோன்றாது
  • கெடுவான் கேடு நினைப்பான்
  • கெட்ட இடையனுக்கு எட்டு ஆடு போதும்.
  • கெட்ட ஊருக்கு எட்டு வார்த்தை.
  • கெட்ட கழுதைக்குத் துஷ்ட புத்தி.
  • கெட்ட கழுதைக்குப் பட்டது கண்டது.
  • கெட்ட காலத்துக்கு நாரை கெளிற்று மீனை எடுத்து விழுங்கினது போல.
  • கெட்ட காலத்துக்கு விபரீத புத்தி. (விநோத புத்தி.)
  • கெட்ட குடிக்கு ஒரு கேட்டை பிறந்தது.
  • கெட்ட குடிக்கு ஒரு துஷ்டப் பிள்ளை.
  • கெட்ட குடி கட்டி வருமா?
  • கெட்ட குடி கெட்டது; பூராவாய்க் குடி அப்பா!
  • கெட்ட குடி கெட்டாலும் வட்டி நஷ்டம் இல்லாமல் வாங்கிவிடு.
  • கெட்ட குடியே கெடும்; பட்ட காலிலே படும்.
  • கெட்ட கேட்டுக்குக் கொட்டு ஒன்று, முழக்கு ஒன்றா?
  • கெட்ட கேட்டுக்குக் கெண்டை போட்ட (கொண்டை போட்ட.) முண்டாசு குறைச்சலா?
  • கெட்ட கேட்டுக்கு நெட்டை ஆள் கூலியா? (இரட்டையாள்.)
  • கெட்ட கேட்டுக்குப் பட்டுப் பீதாம்பரம்!
  • கெட்ட கேட்டுக்குப் பிச்சைக் குடுவை இரண்டாம்.
  • கெட்ட கேட்டுக்கு வட்டம் காற்பணம்.
  • கெட்ட நிலத்துக்கு எட்டு வன்னி கெட்ட குடும்பத்துக்கு எட்டு வெள்ளாடு
  • கெட்டது கிழவன் குடித்தனம்.
  • கெட்டாலும் செட்டியே, கிழிந்தாலும் பட்டு பட்டே.
  • கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளையில் தெரியும்.
  • கெட்டும் பட்டணம் சேர்
  • கெண்டையைப் போட்டு வராலை இழு.
  • கெரடி கற்றவன் இடறி விழுந்தால் அதுவும் ஒரு வித்தை என்பான்.
  • கெலிப்பும் தோற்பும் ஒருவர் பங்கல்ல.

கே[தொகு]

  • கேடு வரும் பின்னே, மதி கெட்டுவரும் முன்னே.
  • கேட்டதெல்லாம் நம்பாதே. நம்பினதெல்லாம் சொல்லாதே.
  • கேளும் கிளையுங் கெட்டோர்க்கு இல்லை.
  • கேள்விப் பேச்சில் பாதிதான் நிசம்.

கை[தொகு]

  • கை அழுத்தமானவன் கரையேற மாட்டான்.
  • கை இல்லாதவன் கரணம் போடலாமா? கால் இல்லாதவன் ஓடலாமா?
  • கை ஈரம் காயாமல் காட்ட வருகிறது.
  • கை உண்டாவது கற்றவர்க்கு ஆமே.
  • கை ஊன்றி அல்லவோ கரணம் போட வேண்டும்?
  • கை கண்ட பலன்.
  • கை கண்ட மாத்திரை, வைகுண்ட யாத்திரை.
  • கை கண்ட வேசிக்குக் கண்ணீர் குறைச்சலா?
  • கை கண்ணைக் குத்தினால் கையை வெட்டி விடுகிறதா?
  • கை கருணைக் கிழங்கு: வாய் வேப்பங்காய்.
  • கை காய்த்தால் கமுகு காய்க்கும்.
  • கை கைக்குமா நெய் வார்க்க வரும்?
  • கை கொடுத்துக் கொண்டே கடையாணி பிடுங்குகிறான்.
  • கை தப்பிக் கண்ணில் பட்டால் கையைக் கண்டிப்பது உண்டா?
  • கை நிறைந்த பணத்தை விடக் கண் நிறைந்த புருஷன்தான் வேண்டும்.
  • கை பட்டால் கண்ணாடி.
  • கை போடாத புருஷன் இல்லை; விரல் போடாத பெண் இல்லை.
  • கை முடக்காரன் கழுத்தில் தாலி கட்டியது போல
  • கை விதைப்பை விடக் கலந்த நடவை நல்லது.
  • கை வைத்தால் கை இற்றுப் போம்.
  • கைக் காசு இல்லாமல் கடைப் பக்கம் போகாதே.
  • கைக் காடையைக் காட்டிக் காட்டுக் காடையைப் பிடிக்க வேண்டும்.
  • கைக் குருவியைக் கொண்டுதான் காட்டுக் குருவியைப் பிடிக்க வேணும்.
  • கைக் கொள்ளாத சத்தியத்தைக் கற்காதிருத்தல் நலம்.
  • கைக்கு அடங்காத விளக்குமாறும் வாய்க்கு அடங்காத மருமகளும்.
  • கைக்கு எட்டியது வாய்க்கு எட்ட வில்லை.
  • கைக்கு எட்டினது வாய்க்கு எட்டவில்லை.
  • கைக்கு வாய் உபசாரமா?
  • கைக்குக் கண்ணாடியா?
  • கைக்குக் கை நெய் வார்த்தாலும் கணக்குத் தப்பாது.
  • கைக்கோளறுக்குக் கால் புண்ணும் நாய்க்குத் தலைப் புண்ணும் ஆறா.
  • கைக்கோளனுக்குக் காற்புண்ணும் நாய்க்குத் தலைப்புண்ணும் ஆறா
  • கைத் தாலி கழுத்தில் ஏறட்டும்.
  • கைத் துப்பைக் கொண்டு காரியம் இல்லை; வாய்த் துப்பைக் கொண்டு வாழ வந்தேன் மாமியாரே.
  • கைத்தது மானானாலும் கை ஏல்வை.
  • கைபிடித்து இழுத்தும் அறியாதவன் சைகை அறிவானா?
  • கைப் பழத்தை நம்பி வாய்ப் பழத்தை வழியில் விட்டான்.
  • கைப் பழத்தைக் கொடுத்துத் துறட்டுப் பழத்துக்கு அண்ணாந்து நிற்பானேன்?
  • கைப் பறவையைப் பறக்க விட்டுக் காட்டுப் பறவைக்குக் கண்ணி வைக்கலாமா?
  • கைப் பிள்ளைக்கு முன் கயிற்றுப் பிள்ளை.
  • கைப் புண்ணுக்குக் கண்ணாடியா?
  • கைப் பூணுக்குக் கண்ணாடி வேண்டுமா?
  • கைப் பொருள் அற்றவனைக் கட்டின பெண்டாட்டியும் எட்டிப் பாராள்.
  • கைப் பொருள் அற்றால் கட்டுக் கழுத்தியும் பாராள்.
  • கைப் பொருள் இல்லா வழிப்போக்கனுக்குக் கள்வர் முன் படலாம்.
  • கைப் பொருள் இல்லாதவனைக் கள்வன் என்ன செய்வான்?
  • கைப் பொருள் போனாலும் கல்விப் பொருள் போகாது
  • கைப் பொருள்தன்னிலும் மெய்ப் பொருள் கல்வி.
  • கைப் பொன்னுக்குக் கண்ணாடியா?
  • கைப்பண்டம் கருணைக் கிழங்கு,
  • கைப்புண்ணுக்குக் கண்ணாடி வேண்டுமா?
  • கைப்பொருளற்றால் கட்டினவளும் பாராள்
  • கைம்பெண் பிள்ளை ஆனாலும் செய்கிற சடங்கு செய்.
  • கைம்பெண் வளர்த்த கழிசடை.
  • கைம்பெண்டாடிக்கும் காளவாய்க்கும் எங்கே என்று காத்திருக்கும்.
  • கைம்பெண்டாட்டி எருமையிலே கறவை பழகினாற் போல.
  • கைம்பெண்டாட்டி தாலியைக் கூழைக் கையன் அறுத்தானாம்.
  • கைம்பெண்டாட்டி பெற்ற பிள்ளை ஆனாலும் செய்யும் சடங்கு சீராய்ச் செய்ய வேண்டும்.
  • கைம்பெண்டாட்டி வளர்த்த கழுக்காணி.
  • கைம்பெண்டாட்டிக்கு ஒருத்தன் ஆனால் கட்டுக் கழுத்திக்கு எட்டுப் பேர்.
  • கைம்மேல் கண்ட பலன்.
  • கையது சிந்தினால் அள்ளலாம்;வாயது சிந்தினால் அள்ளமுடியாது.
  • கையாலே தொட்டது கரி.
  • கையால் ஆகாத சிறுக்கி வர்ணப் புடைவைக்கு ஆசைப்பட்டாளாம்.
  • கையால் ஆகாத சுப்பி. திருவாரூர்த் திப்பி.
  • கையால் ஆகாததற்கு வாய் பெரிது.
  • கையால் ஆகாதவனுக்குக் கரம்பிலே பங்கு உழாதவனுக்கு ஊரிலே பங்கு.
  • கையால் கிழிக்கும் பனங் கிழங்குக்கு ஆப்பும் வல்லிட்டுக் குற்றியும் ஏன்?
  • கையால் கிள்ளி எறியும் வேலைக்குக் கனத்த கோடரி வேண்டுமோ?
  • கையால் பிடிக்கப் பொய்யாய்ப் போச்சுது.
  • கையாளத ஆயுதம் துருப்பிடிக்கும்
  • கையாளாத ஆயுதம் துருப் பிடிக்கும்.
  • கையாளுகிற இரும்பு பளபளக்கும்.
  • கையானைக் கொண்டு காட்டானையை பிடிக்க வேண்டும்.
  • கையிலே காசு வாயிலே தோசை
  • கையிலே காசு; வாயிலே தோசை.
  • கையில் அகப்பட்ட துட்டுக் கணக்குப் பேசுகிறது.
  • கையில் அகப்பட்ட பொருளுக்கும் கணக்கு.
  • கையில் அரிசியும் கமண்டலத்தில் தண்ணீரும்.
  • கையில் அரைக் காசுக்கும் வழி இல்லாத அஷ்ட தரித்திரம், கையில் இருக்க நெய்யிலே கைவிடுவானேன்?
  • கையில் இருக்கிற கனியை எறிந்து மரத்தில் இருக்கிற கனியைத் தாவுகிறது போல.
  • கையில் இருக்கிற குருவியை விட்டு விட்டுப் பறக்கிறதற்கு ஆசைப்பட்டாற் போல்.
  • கையில் இருக்கிற சோற்றைப் போட்டு விட்டு எச்சிற் சோற்றுக்குக் கை ஏந்தினது போல.
  • கையில் இருக்கிற பறவையை விட்டு விட்டுக் காட்டுப் பறவைக்குக் கண்ணி வைக்கலாமா?
  • கையில் இருந்தால் கடை கொள்ளலாம்.
  • கையில் இருந்தால் கர்ணன்.
  • கையில் இருந்தால் பாக்கு: கையை விட்டால் தோப்பு.
  • கையில் இருப்பது செபமாலை; கட்கத்தில் இருப்பது கன்னக்கோல்.
  • கையில் இல்லா விட்டால் கண்டாரும் பேச மாட்டார்; கேட்டாரும் மதிக்க மாட்டார்.
  • கையில் இல்லாதவன் கள்ளன்.
  • கையில் உண்டானால் காத்திருப்பார் ஆயிரம் பேர்.
  • கையில் உண்டானால் காத்திருப்பார் ஆயிரம் பேர்.
  • கையில் உள்ள களப்பழம் மரத்தில் உள்ள பலாப்பழத்துக்கு மேல்.
  • கையில் எடுக்குமுன் கோழி மோசம் என்று அறியாது.
  • கையில் எடுப்பது ஜபமாலை; கட்கத்தில் வைப்பது கன்னக்கோல்.
  • கையில் ஒரு காசும் இல்லை; கடன் கொடுப்பார் ஆரும் இல்லை.
  • கையில் காசு இருக்கக் கறிக்கு அலைவானேன்?
  • கையில் காசு இருந்தால் அசப்பில் ஒரு வார்த்தை வரும்.
  • கையில் காசு, வாயில் தோசை.
  • கையில் காசும் இல்லை; முகத்தில் பொலிவும் இல்லை.
  • கையில் கிடைத்த அமுதைச் சமரில் ஊற்றலாமா?
  • கையில் குடையும் காலில் சோடும் வேண்டும்.
  • கையில் கெளுத்தி மீனை வைத்துக்கொண்டு ஆணத்திற்குக் கத்தரிக்காயைத் தேடி அலைந்தாளாம்.
  • கையில் சாவு, வாயில் கோல்.
  • கையில் தாழ்வடம், மனசிலே கரவடம்.
  • கையில் பணம் இருக்கிறதா என்றால், பணம் இருந்த கை இருக்கிறது என்றானாம்.
  • கையில் பறவையை விட்டுக் காட்டுப் பறவைக்குக் கண்ணி வைக்கலாமா?
  • கையில் பிடப்பது துளசி மாலை; கட்கத்தில் இடுக்குவது கன்னக்கோல்,
  • கையில் பிடிப்பது துளசி மாலை, கக்கத்தில் இடுக்குவது கன்னக்கோலம்
  • கையில் பிள்ளையோடு கடலில் விழுந்தாள்.
  • கையில் மஞ்சள் ஆனால் காரியம் மஞ்சூர்தான்.
  • கையில் வெண்ணெய் இருக்க நெய்க்கு அழுவானேன்?
  • கையில் ஜபமணி கொண்டு மிரட்ட வருகிறாயே!
  • கையில் ஜபமாலை; கட்கத்தில் கன்னக் கோல்.
  • கையும் இல்லை; காலும் இல்லை; திம் தடாக்கா.
  • கையும் கணக்கும் சரி.
  • கையும் களவுமாய்க் கண்டு பிடிக்கிறது.
  • கையூன்றிக் கரணம் போடவேண்டும்.
  • கையெழுத்துப் போடத் தெரிந்தால் கடனுக்குத்தான் வழி.
  • கையை அறுத்து விட்டாலும் அகப்பையைக் கட்டிக் கொண்டு திருடுவான்.
  • கையை உடைத்து விட்டவன் தலையை உடைத்தாலும் உடைப்பான்.
  • கையை ஊன்றித்தான் கரணம் போட வேண்டும்
  • கையை மூடிக் கொண்டிருந்தால் கமுக்கம்; விரலைத் திறந்தால் வெட்டவெளி.
  • கையை விட்டுத் தப்பினால் காடை காட்டிலே.
  • கையைக் காட்டி அவலட்சணமா?
  • கையைச் செட்டியார் குறைத்தால் காலைக் கைக்கோளன் குறைப்பான்.
  • கையைப் பார். முகத்தைப் பார் என்று இருந்தால் காரியம் ஆகுமா?
  • கையைப் பார்த்து முகத்தைப் பார்.
  • கையைப் பிடித்தால் காலபலன்.
  • கையைப் பிடித்து இழுத்து வராதவள் கண்ணைக் காட்டி அழைத்தால் வருவாளா?
  • கையைப் பிடித்துக் கண்ணைப் பார்த்து மயிரைப் பிடித்துக் காசு வாங்குவதா?
  • கையைப் பிடித்துக் கள்ளை வார்த்து மயிரைப் பிடித்துக் காசு வாங்குகிறது.
  • கையைப் பிடித்துத் தூக்கிவிடு; பிணக் காடாயக் குவிக்கிறேன் என்றானாம்.
  • கைவரிசை இருந்தாலும் மெய்வரிசை வேண்டும்.
  • கைவிரல் கண்ணிலே பட்டால் கையை என்ன பண்ணலாம்?

கொ[தொகு]

  • கொடிக்கு காய் கனமா?
  • கொடுக்கிறவனைக் கண்டால் வாங்குகிறவனுக்கு இளக்காரம்.
  • கொடுங்கோல் அரசு நெடுங்காலம் நில்லாது.
  • கொடுத்தைக் கேட்டால் அடுத்த தாம் பகை.
  • கொட்டினால் தேள், கொட்டாவிட்டால் பிள்ளைப் பூச்சியா?
  • கொண்டானும் கொடுத்தானும் ஒன்று,கலியாணத்தைக் கூட்டி வைத்தவன் வேறு.
  • கொலைக்கு அஞ்சாதவன் பழிக்கு அஞ்சான்.
  • கொல்லன் தெருவில் ஊசி விலைபோமா?
  • கொல்லைக் காட்டு நரி சலசலப்புக் அஞ்சுமா?
  • கொள்ளிக்கு எதிர்போனாலும், வெள்ளிக்கு எதிர்போகலாது.
  • கொற்றவன் தன்னிலும் கற்றவன் மிக்கோன்.


கோ[தொகு]

  • கோட் சொல்பவைக் கொடுந்தேள் என நினை.
  • கோட் சொல்லும் வாய் காற்றுடன் நெருப்பு.
  • கோணிகோடி கொடுப்பதிலும் கோணாமற் காணி கொடுப்பது நல்லது.
  • கோத்திரமறிந்து பெண்ணைக்கொடு, பாத்திரமறிந்து பிச்சையிடு.
  • கோபம் உள்ள இடத்தில் குணம் உண்டு.
  • கோபம் சண்டாளம்.
  • கோயிற் பூனை தேவர்க்கு அஞ்சுமா?
  • கோழி மிதித்துக் குஞ்சு முடம் ஆகுமா?
  • கோளுஞ் சொல்லி கும்பிடுவானேன்?
  • கோடானுகோடி கொடுப்பினும் தன்னுடைய நாக்கு கோடாமை கோடி பெறும்
  • கோடானுகோடி கொடுத்தாலும் நாவினால் தவறு சொல்லாதது கோடி பெறும்.
  • கோடி கொடுத்தாலும் பத்தினியின் தாலியை வாங்கமுடியாது.
  • கோடி கொடுப்பினும் குடில் பிறந்தார் தம்மோடு கூடுவதே கோடி பெறும்.

[தொகு]

  • சக்களத்தி அறுத்தால் தானும் அறுப்பாள்
  • சக்களத்திக்கு ஆண்பிள்ளை பெற்றால் பொறாமை, மலடிக்கு எவள் பிள்ளை பெற்றாலும் பொறாமை
  • சக்களத்தி பிள்ளை தலைமாட்டுக் கொள்ளி
  • சக்களத்தி மாமியார்
  • சக்கிலித் தெரு நாய் சமயத்துக்கு உதவாது
  • சக்கிலிப் பெண் நெற்றியிலே குஜ்ஜிலிப் பொட்டைப் பார்
  • சக்கிலிப் பெண்ணும் சாமைக் கதிரும் பக்குவத்திலே பார்த்தால் அழகு
  • சக்கிலியன் சாமிக்குச் செருப்படிதான் பூஜை
  • சக்கிலியன் சாமியைச் செருப்பால் அடித்துக் கும்பிடுவானா?
  • சக்கு சக்கு என்று பாக்குத் தின்பான். சபை மெச்ச வீட்டிலே வந்து கடைவாய் நக்குவான்
  • சக்கை போடு போடுகிறான்
  • சக்தி இருந்தால் செய்; சக்தி இல்லாவிட்டால் சிவனே என்று இரு
  • சக்தி இல்லா விட்டால் சிவனே என்று கிட
  • சத்தியம் பயந்து சங்கீதம்
  • சகசண்டி மாட்டுக்கு இரண்டொரு சூடு: நம் சைவப் பின்னைக்கு மேலெல்லாம் சூடு
  • சகத்தைக் கெடுத்துச் சுகத்தை வாங்குகிறார்
  • சகத்தைக் கொடுத்தும் சுகம் வாங்கிக் கொள்
  • சகதியில் கல்லை விட்டு எறிந்தால் மேலே தெறிக்கும்
  • சகல தீர்த்தங்களுக்கும் சமுத்திரமே ஆதரவு
  • சகல நட்சத்திரமும் ஒன்றாய்க் கூடினாலும் சந்திரனுக்கு இணை ஆகுமா?
  • சகலமும் கற்றவன்தன்னைச் சார்ந்து இரு
  • சகலன் உறவில் சாண் கொடி பஞ்சமா?
  • சகுனம் சொன்ன பல்லி கழுநீர்ப் பானையில் விழும்
  • சகுனம் நன்றாக இருக்கிறது என்று பொழுது விடிகிற வரைக்கும் கன்னம் வைக்கலாமா?
  • சகுனம் பார்க்கப் போகும்போது மடியில் பூனையைக் கட்டிக் கொண்ட மாதிரி
  • சகுனம் பார்க்காதவன் காத வழியில் மாண்டான்
  • சகோதரன் உள்ளவன் படைக்கு அஞ்சான்
  • சங்கஞ் செடி ஒணானைக் கண்டு சாகிற கிழவியைக் குத்தின கதை
  • சங்கட சனியனே, சடுதியில் விட்டுத் தொலை
  • சங்கடமான பிள்ளையைப் பெற்று வேங்கடராமன் எனப் பெயர் வைப்பார்
  • சங்கட வேதனைக்கெல்லாம் தலையிட்டுக் கொள்கிறதா?
  • சங்கடப் பாட்டா, தங்கப் பாட்டா?
  • சங்கரா சங்கரா என்றால் சாதம் வாயில் விழுமா?
  • சங்கனும் புங்கனும் சந்நியாசிக்கு உதவியா?
  • சங்கிலே வார்த்தால் தீர்த்தம்; செம்பிலே வார்த்தால் தண்ணீர்
  • சங்கீதம் தெரியாவிட்டாலும் இங்கிதம் தெரியும்
  • சங்கு ஆயிரத்தோடு காசி போனாலும் தன் பாவம் தன்னோடே
  • சங்கு ஆயிரம் கொண்டு வங்காளம் போனால் பொன்பாளம் வந்தாலும் வந்தது: மண் பாளம் வந்தாலும் வந்தது
  • சங்கு உடைந்தது; மண் கரைந்தது
  • சங்கு ஊதாமல் தாலி கட்டுவது உண்டா?
  • சங்கு ஊதிப் பொழுது விடியுமா?
  • சங்கு சுட்டாலும் தன் வெண்மை குன்றாது
  • சங்கு சுட்டாலும் வெண்மை தரும்
  • சங்கு சூத்து ஆகிறது; ஆண்டி வாய் ஆகிறது
  • சங்கூதிப் பண்டாரம், அங்கு ஊதி இங்கு வராதே, இங்கு ஊதி அங்கே போ
  • சங்கைச் சுட்டாலும் மங்குமா நிறம்?
  • சங்கோசம் விட்டால் சங்கையும் இல்லை
  • சட்டி ஓட்டை ஆனாலும் கொழுக்கட்டை வெந்தால் சரி
  • சட்டி சுட்டது; கை விட்டது
  • சட்டி திருடும் நாய்க்குப் பெட்டி பணம் எதற்கு?
  • சட்டி பாலுக்கு ஒரு சொட்டு மோர் பிரை
  • சட்டி புழைக்கடையிலே; அகப்பை வாசலிலே
  • சட்டியில் இருந்தால் அல்லவா அகப்பையில் வரும்?
  • சட்டியோடு அகப்பை தட்டாமல் போகுமா?
  • சட்டியோடு தின்று பானையோடு கை அலம்புகிறது
  • சட்டுவம் கறிச் சுவையை அறியுமா?
  • சட்டைக்காரன் நாயை எட்ட நின்று பார்
  • சட்டைநாதபுரம் உழவு; சீகாழி இழவு: செம்மங்குடி வறட்டி
  • சடை கொண்ட இலுப்பையைத் தடிகொண்டு அடித்தாற்போல
  • சடை கொண்டு வெருட்டல் வேண்டா
  • சடைத் தம்பிரான் சோற்றுக்கு அழுகிறானாம்; லிங்கம் பஞ்சாமிர்தத்துக்கு அழுகிறதாம்
  • சடைத் தம்பிரான் தவிட்டுக்கு அழுகிறான்; லிங்கம் பரமான்னத்துக்கு அழுகிறதாம்
  • சடைத் தம்பிரானுக்குச் சாதம் இல்லாதபோது மொட்டைத் தம்பிரானுக்கு மோர் எங்கே கிடைக்கும்?
  • சடையைப் பிடித்தால் சந்நியாசி தன்னாலே வருவான்
  • சண்ட மாருதத்துக்குமுன் எதிர்ப்பட்ட சருகுபோல்
  • சண்டிக்கு ஏற்ற மிண்டன்
  • சண்டிக் குதிரைக்கு ஏற்ற மொண்டிச் சாரதி
  • சண்டிக் குதிரை நொண்டிச் சாரதி
  • சன்டி முறைத்தால் காடு கொள்ளாது
  • சண்டியிலும் சண்டி சகசண்டி
  • சண்டைக்குச் சிங்காரம் இல்லை
  • சண்டை நடந்ததற்குச் சாட்சி என் மகன் இருக்கிறான்
  • சண்டை பிடிக்கிறவனுக்குக் கூடச் சனிக்கிழமை ஆகாது
  • சண்டை முகத்திலே உறவா?
  • சண்டை வந்தது பிராமணா, சோற்று மூட்டையை இறக்கு
  • சண்டை வருகிறது மாமியாரே, சாதத்தை எடுத்து உள்ளே வையும்
  • சண்ணி அண்ணாமலை என்று பெயர் இடுவான்
  • சணப்பன் கையில் அகப்பட்ட சீலைப் பேனைக் கொல்லவும் மாட்டான்; விடவும் மாட்டான்
  • சணப்பன் வீட்டுக் கோழி தானாக வந்து மாட்டிக்கொள்ளும்
  • சணப்பன் வீட்டு நாய் சணல் கட்டிலின் மேல் ஏறினாற் போல்
  • சத்தத்துக்கு அளப்பதற்குமுன் பொதிக்கு அள
  • சத்தம் பிறந்த இடத்தே சகல கலையும் பிறக்கும்
  • சத்த மேகங்களும் கூடி நெருப்பு மழை பெய்தாற் போல
  • சத்தாவரணம் சேவித்தால் செத்தவுடனே வைகுண்டம்
  • சத்தியத்தில் சிறந்தவன் அரிச்சந்திரன்
  • சத்தியத்திலே சாமி சாட்சி என்கிற சத்தியம் பெரிது
  • சத்தியத்துக்கு அரிச்சந்திரன்: சாந்தத்துக்குத் தருமராஜன்
  • சத்தியத்துக்கு இல்லாத பிள்ளை துக்கப்பட்டு அழப்போகிறானா?
  • சத்திய நெறியே சன்மார்க்க நெறி
  • சத்தியம் இல்லாத வாய் போலே
  • சத்தியம் தலை காக்கும்
  • சத்தியம் நண்ணலை. சாவைத் தினம் நினை
  • சத்தியம் வெல்லும், அசத்தியம் கொல்லும்
  • சத்தியமே கொல்லும்; சத்தியமே வெல்லும்
  • சத்தியமே ஜயம்
  • சத்திய வாசகன் சமஸ்த சற்குணன்
  • சந்தியிலே அடித்ததற்குச் சாட்சியா?
  • சத்திரத்தில் இன்னும் நுழைய விடவில்லை; இலை கிழிசல் என்றானாம்
  • சத்திரத்தில் சந்நியாசிக்குப் போஜனம், மடத்தில் நித்திரை
  • சத்திரத்தில் சாப்பாடு; சாவடியில் நித்திரை
  • சத்திரத்தில் சாப்பாடு; மடத்தில் நித்திரை
  • சத்திரத்தில் சோறு இல்லை என்றால் இலை பீற்றல் என்றானாம்
  • சத்திரத்துக் கூழுக்கு நாயக்கர் அப்பனையோ?
  • சத்திரத்துச் சாப்பாட்டுக்கு அப்பணையங்கார் சிபாரிசா?
  • சத்திரத்துச் சாப்பாட்டுக்குச் தாத்தையங்கார் அப்பனையா?
  • சத்திரத்துச் சாப்பாட்டுக்கு நாயின் சிபாரிசா?
  • சத்திரத்துச் சோற்றுக்குத் தாத்தையங்கார் அப்பணையா?
  • சத்திரத்து நாயை அடித்தால் கேட்பார் யார்?
  • சத்திரத்துப் பாட்டுக்குத் தெருப்பாட்டு மேலா?
  • சத்திரத்தைக் கட்டி நாயைக் காவல் வைத்தது போல
  • சத்திரா போஜனம்; மடத்தில் நித்திரை
  • சத்துக்களோடு சத்துக்கள் சேர்வர்: சந்தனத்தோடு கர்ப்பூரம் சேரும்
  • சத்துருக்களையும் சித்தமாய் நேசி
  • சத்துரு பகை; மித்துரு வதை
  • சத்துரு பொறுமை தனக்கே தண்டனை
  • சத்துருவைச் சார்ந்து கொல்ல வேண்டும்
  • சத்ரா போஜனம், மடா நித்ரா
  • சதகோடி சங்கத்திலே மொட்டைத் தாதனைக் கண்டாயோ என்கிறது போல
  • சத சுவோகீ ஏக பண்டித
  • சதி செய்கிறவர்களுக்குச் சமர்த்தர் என்று பெயர்
  • சதுரக் கன்னியில் அகில் உண்டாகும்
  • சதை இல்லாமல் கத்தி நாடுமா?
  • சதை உள்ள இடத்திலே கத்தி நாடும்
  • சதை கண்டு கத்தி நாட வேண்டும்
  • சந்தடி சாக்கிலே கந்தப் பொடி காற்பணம்
  • சந்தம் இல்லாக் கவிக்கு அந்தம் இல்லை
  • சந்தனக் கட்டை தேய்ந்தது; சாதமும் வடித்தாச்சு
  • சந்தனக் கட்டை தேய்ந்தால் கந்தம் குறையுமா?
  • சந்தனக் கருடன் வந்த வழி போனால் கங்கையில் போட்டதும் தன் கைக் கூடும்
  • சந்தனக் குறடு தேய்ந்தாலும் மணம் குறையாது
  • சந்தனக்கோல் குறுகினாலும் பிரப்பங் கோல் ஆகாது
  • சந்தனம் கொடுத்த சரஸ்வதி
  • சந்தனம் தெளித்த கையாலே சாணி தெளிக்கலாச்சுது
  • சந்தனம் தேய்ப்பவன் அலைவது போலே
  • சந்தனம் மிகுந்தால் பிட்டத்தில் பூசிக் கொள்கிறதா?
  • சந்தன மரம் போல் பிள்ளை; சம்பங்கிப்பூப் போல் பெண்
  • சந்தன வாள் போல
  • சந்தனவிருட்சக் காட்டிலே சர்ப்பம் இருக்கிறது போல
  • சந்திக்குச் சந்தி நாய் அடிபடுவது போல
  • சந்திக்கும் பொறையாற்றுக்குமாக அலையாதே
  • சந்தி சிரிக்கிறது
  • சந்தியில் அடித்தால் சாட்சிக்கு ஆர் வருவார்
  • சந்தியில் நிற்கிறது
  • சந்தியிலே அடித்ததற்குச் சாட்சியா?
  • சந்திர சூரியர் உள்ள வரைக்கும்
  • சந்திர சூரியர் உள்ள வரைக்கும் வார்த்தை பிசகான்
  • சந்திரன் இல்லாத வானம் போல
  • சந்திரன் இல்லா வானமும் மந்திரி இல்லா அரசும் பாழ்
  • சந்திரன் குளிர்ச்சியாய்க் காய்ந்தாலும் சூரியனையே உலகத்தார் நாடுவார்கள்
  • சந்திரன் கோயிலிலும் விளக்கு எரிகிறது
  • சந்திரன் சண்டாளன் வீட்டிலும் பிரகாசிக்கிறான்
  • சந்திரன் மறைந்த பின் நிலா நிற்குமா?
  • சந்திரனுக்கு உண்டோ சண்டாளன் வீடு?
  • சந்திரனுக்குச் சரியாக முட்டை தட்டினாளாம்
  • சந்திரனுக்கும் களங்கம் உண்டு
  • சந்திரனைப் பார்த்த கண்ணுக்குச் சனியனைப் பார்த்தாற் போல
  • சந்திரனைப் பார்த்து நாய் குரைத்தாற் போல
  • சந்தில் சிந்து பாடுகிறான்
  • சந்திலே சமாராதனை செய்ய முடியுமா?
  • சந்துக்குச் சந்து சதிராட்டம்
  • சந்து விட்டால் வந்து விட்டேன்
  • சந்தை இரைச்சலில் குடியிருந்து கெட்டேனே
  • சந்தைக்குப் போகிறவன் வழித்துணை வாரான்
  • சந்தைக்குப் போய் வந்த நாய் போல
  • சந்தைக்கு வந்தவர்கள் வழிக்குத் துணையா?
  • சந்தைக் கூட்டம், பொம்மலாட்டம்
  • சந்தைக் கோபாலம்; தந்தப் பல்லக்கா?
  • சந்தையில் அடித்ததற்குச் சாட்சி ஏன்?
  • சந்தையில் அடிபட்டவனுக்குச் சாட்சி ஆர்?
  • சந்தையில் கும்பிட்டால் வாழ்த்துவாரும் இல்லை; வைவாரும் இல்லை
  • சந்தோஷம் சாண் பலம்
  • சந்தோஷ வார்த்தை சமயத்தில் வந்தது
  • சந்தியாசம் சகல நாசம்
  • சந்நியாசிக்கு என்ன சம்சாரக் கவலை?
  • சந்நியாசிக்குச் சாப்பாட்டுக் கவலையா?
  • சந்நியாசிக்கும் பழைய குணம் போகாது
  • சந்நியாசிக்கும் போகாது ஜாதி அபிமானம்
  • சந்நியாசி கோவணத்துக்கு இச்சித்துச் சம்சாரம் மேலிட்டது போல
  • சந்நியாசி கோவணம் கட்டினது போல
  • சந்நியாசி செய்த சத்திக்குள் அகப்பட்ட சடை
  • சந்நியாசி பயணம் திண்ணை விட்டுக் குதிப்பதுதான்
  • சந்நியாசி பிரயாணம் திண்ணை விட்டு இறங்கினால் ஆச்சு
  • சந்நியாசி பூனை வளர்த்தது போல
  • சந்நியாசியார் சந்தையிலே கண்டவனே என்று ஆட்டினார்: தவசிப் பிள்ளை சந்நியாசியால் கண்டவனே என்று ஆட்டினான்
  • சந்நியாசியைக் கடித்த நாய்க்குப் பின்னாலே நரகமாம்; சந்நியாசிக்கு முன்னே மரணமாம்
  • சந்நியாசி வீடு திண்ணையிலே
  • சப்தப் பிரம்மத்தில் அசப்தப் பிரம்மம் பிரகாசிக்கிறது
  • சப்தப் பிரம்மம் பரப்பிரம்மம், இரண்டையும் அறிய வேண்டியது
  • சப்தம் பிறந்த இடத்திலே சகல கலைகளும் பிறக்கும்
  • சப்த மேகங்களும் ஒன்று கூடி நெருப்பு மழை பெய்தாற்போல
  • சப்பரத்துக்கு முன்னே வந்தாயா? பின்னே வந்தாயா?
  • சப்பாணிக்கு நொண்டி குடுகுடுப்பை
  • சப்பாணிக்கு நொண்டி சண்டப் பிரசண்டன்
  • சப்பாணிககு விட்ட இடத்திலே கோபம்
  • சப்பாணி மாப்பிள்ளைக்கு சந்து ஒடிந்த பெண்டாட்டி
  • சப்பாணி வந்தால் நகர வேணும்; பல்லக்கு வந்தால் ஏறவேணும்
  • சப்பை கட்டுகிறான்
  • சபையிலே நக்கீரன் அரசிலே விற்சேரன்
  • சபைக் கோழை ஆகாது
  • சபையிலே நக்கீரன்; அரசிலே விற்சேரன்
  • சம்சாரக் குட்டு, வியாதி ரெட்டு
  • சம்சாரக் குட்டு வெளியிட்டால் நஷ்டம், சம்சாரம் சாகரம் துக்கம்
  • சம்சாரம் பெருத்துப்போச்சு என்று சாலுக்குக் குறுணி விதைத்தானாம்
  • சம்சாரி அகத்திலே சாதத்துக்கு என்ன குறைவு?
  • சம்பத்தும் விபத்தும் கூடவே இருக்கின்றன
  • சம்பந்தன் தன்னைப் பாடுவான்; அப்பன் என்னைப் பாடுவான்; சுந்தரன் பொன்னைப் பாடுவான்
  • சம்பந்தி கிருகஸ்தன் வந்தான்; தவலையை எடுத்து உள்ளே வை
  • சம்பந்தியும் சம்பந்தியும் ஒன்று; கொட்டு மேளக்காரன் தனி
  • சம்பந்தியும் சம்பந்தியும் ஒன்று; கொட்டு மேளக்காரனுக்குக்கோணக் கோண இழுக்கும்
  • சம்பந்தியும் சம்பந்தியும் சத்திரத்துக்குப் போனால் ஏச்சும் இல்லை; பேச்சும் இல்லை
  • சம்பந்தி வாய்க்கும் மாப்பிள்ளை குணத்துக்கும் இன்னும் ஒரு பெண்ணை இழுத்து விட்டாளாம்
  • சம்பளம் அரைப்பணம் ஆனாலும் சலுகை இருக்க வேண்டும்
  • சம்பளம் இல்லாத சேவகனும் கோபம் இல்லாத எசமானும்
  • சம்பளம் இல்லாத மந்திரி; கோபம் இல்லாத ராஜா
  • சம்பளம் இல்லாத சேவகனும், கோபமில்லாத எசமானும் சருகைக் கண்டு தணலஞ்சுமா
  • சம்பளம் இல்லாமல் ஆஜர்
  • சம்பளம் குறைந்தாலும் சலுகை இருக்க வேண்டும்
  • சம்பளம் சனிக்கிழமை; பெண்டாட்டி பேர் புதன் கிழமை
  • சம்பள விதத்திலேயா குண்டு படுகிறது?
  • சம்பா விளைந்து காய்ந்து கிடக்கிறது: உண்பார் இல்லாமல் ஊர்க்குருவி மேய்கிறது
  • சம்மன் இல்லாமல் ஆஜர்
  • சமண சந்தியாசிக்கும் வண்ணானுக்கும் சம்பந்தம் என்ன?
  • சமண சந்நியாசி கையில் அகப்பட்ட சீலைப்பேன் போல
  • சமய சஞ்சீவி
  • சமயத்திலே காலைப்பிடி, தீர்ந்து போனதும் தலையைப் பிடி
  • சமயம் வாய்த்தால் களவு செய்வான்
  • சமயம் வாய்த்தால் நமனையும் பலகாரம் செய்வான்
  • சமயம் வாய்த்தால் நமனையும் வெல்லலாம்
  • சமர்த்தன் சந்தைக்குப் போனால் கொள்ளவும் மாட்டான், கொடுக்கவும் மாட்டான்
  • சமர்த்தன் பெண் சதியும் சோரம் போவாள்
  • சமர்த்தனுக்கு ஏதும் பெரிது அல்ல
  • சமர்த்தி என்ன பெற்றாள்? சட்டிச் சோறு தின்னப் பெற்றாள்
  • சமர்த்தி என்ன பெற்றாள்? தலைச்சன் பெண் பெற்றாள்
  • சமர்த்தில் குண்டு பாயுமா?
  • சமர்த்தில் வாழ்ந்தவர்களும் இல்லை; அசட்டில் கெட்டவரும் இல்லை
  • சமர்த்து உள்ள சேவகனுக்குப் புல்லும் ஆயுதம்
  • சமர்த்துக்கிட்டே பேசி ஜயிக்கலாம்; அசட்டுக்கிட்டே சண்டை போட்டாலும் முடியாது
  • சமர்த்துச் சனியன்
  • சமர்த்து சந்தியில் நிற்கிறது
  • சமாசாரம் தெரியாமல் அமாவாசைக்குப் போகிறான்
  • சமிக்ஞை அறியாதவன் சதுரன் அல்ல
  • சமிக்ஞை காட்டிச் சண்டைக்கு அழைக்கிறான்
  • சமுத்திர அலைகள் ஓயப் போகிறதும் இல்லை; தம்பி தலை முழுகித் தர்ப்பணம் பண்ணப் போகிறதும் இல்லை
  • சமுத்திரத்தில் ஏற்றம் போட்டது போல் இருக்கிறது
  • சமுத்திரத்தில் ஏற்றம் போட்டுத் தண்ணீர் இறைத்தாற்போல
  • சமுத்திரத்திலே பாய்கிற நதி வயலிலே பாயட்டுமே என்றாற் போல்
  • சமுத்திரத்திலே பெருங்காயம் கரைத்தது போல
  • சமுத்திரத்துக்கும் சாண் துண்டுக்கும் எம்மாத்திரம்?
  • சமுத்திரத்து ஜலத்தை முட்டை கொண்டு அளந்தாளாம்
  • சமுத்திரம் பொங்கினால் கிணறு கொள்ளுமா?
  • சமுத்திரமும் சாக்கடையும் சரியா?
  • சமுத்திர வன்கணன் சண்டாளன்
  • சமுத்திர ஜலம் தாகத்துக்கு உதவாது
  • சமைக்கப் படைக்கத் தெரியாமல் போனாலும் உடைக்கக் கவிழ்க்கத் தெரியும்
  • சமையல் தெரிந்தவனுக்கு உமையவள் உள்ளங்கையில்
  • சமையல் பாகம் தெரிந்தவளுக்கு உமையவள் பாகன் உள்ளங்கையில்
  • சமையல் வீட்டிலே நாய் நுழைந்தாற் போல
  • சமையல் வீட்டிலே முயல் தானே வந்தது போல
  • சர்க்கரை என்றால் தித்திக்குமா?
  • சர்க்கரை என்று எழுதி நக்கினால் தித்திக்குமா?
  • சர்க்கரை தின்று பித்தம் போனால் கசப்பு மருந்து ஏன் தின்ன வேண்டும்?
  • சர்க்கரை தின்னக் கூலியா?
  • சர்க்கரை தொண்டை மட்டும்; சவ்வாது கண்ட மட்டும்
  • சர்க்கரைப் பந்தலில் தேன் மாரி பெய்தது போல
  • சர்க்கரைப் பாகுத் தோண்டியிலே தாழ மொண்டாலும் தித்திப்பு: மேலே மொன்டாலும் தித்திப்பு
  • சர்க்கரைப் பொங்கலுக்கு ஒரு சத்தியமா?
  • சர்க்கரைப் பொங்கலுக்குப் பத்தியம் இல்லை; சாண்வயிறு நிரம்பி விட்டால் வைத்தியம் இல்லை
  • சர்க்கரைப் பொம்மையில் எந்தப் பக்கம் தித்திப்பு?
  • சர்க்கரை முத்துக்குட்டி சாதம் குழைந்து போச்சு: எடுடா பல்லக்கை; பிறந்தகத்துக்குப் போகிறேன்
  • சர்க்கரையும் தேனும் சிற்றப்பா, ஏட்டில் எழுதி நக்கப்பா
  • சர்க்கரையும் நெய்யும் சேர்ந்தால் கம்பளத்தையும் தின்னலாம்
  • சர்க்கரையும் மணலும் சரி ஆகுமா?
  • சர்க்காரான் பணத்தை வெட்டியான் சுமந்தானாம்
  • சர்த்திக்கும் பிள்ளை வர்த்திக்கும்
  • சர்ப்பத்தின் வாய்த் தவளை போல
  • சர்வ வில்லங்க சித்தி
  • சரக்குக் கண்ட இடத்தில் பிள்ளைக்கு அமிழ்தம் கொடுக்க நினைக்கிறது போல
  • சரக்குக் கண்ட இடத்திலே பிள்ளை பெறுகிறது போல
  • சரக்கு மலிந்தால் கடைக்கு வரும்
  • சரத்தைப் பார்த்து பரத்தைப் பார்
  • சரசம் மிஞ்சி ரவிக்கையில் கை போடக் கூடாது
  • சரடு ஏறுகிறது கந்தைக்கு லாபம்
  • சரப்பளி சந்திரஹாரம் தாங்க முடியவில்லை
  • சரம் பார்த்தவனைச் சருகாதே; பட்சி பார்த்தவனைப் பகைக்காதே
  • சரம் பார்ப்பான், பரம் பார்ப்பான்
  • சரமாரியாய்ப் பொழிகிறான்
  • சரி விற்கக் குழி மாறுகிறதா?
  • சரீரப் பிரயாசை எதற்கு? சாண் வயிற்றுக்குத்தான்
  • சருகு அரிக்க நேரம் இருந்ததன்றிக் குளிர் காய நேரம் இல்லை
  • சருகு உதிர்ந்த மரம் போல
  • சருகைக் கண்டு தழல் அஞ்சுமா?
  • சல்லடைக் கண் போலச் சில்லுச் சில்லாய்த் துளைக்கிறது
  • சல்லி கட்டின மாட்டுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டுமா?
  • சல்லி மோதக் கல்லி பறிக்கிறது
  • சல்லிய சார்த்தியம்
  • சல்லிவேர் அறக் கல்லி பறக்கிறது
  • சலித்துக் கொடுத்த காரியம் சந்தோஷம் வந்தால் தீருமா?
  • சலிப்போடு சம்பந்தி இழுத்தால் இலைப் பருக்கை
  • சலுகை உள்ள மாடு படுகை எல்லாம் மேய்ந்ததாம்
  • சவ்வாதில் மயிர் வாங்கினது போல
  • சவத்துக்கு அழுவாரும் தம் துக்கம்
  • சவலைப் பிள்ளை முலைக் குத்து அறியுமா?
  • சவுடால் பொடி மட்டை, தட்டிப் பார்த்தால் வெறு மட்டை
  • சவுண்டிக்குச் சாப்பிட்டவன் இருக்கச் செத்தது பொய்யா
  • சளி பிடிக்காத மூக்கு இல்லை; சாராயம் குடிக்காத நாக்கு இல்லை
  • சளி பிடித்ததோ. சனி பிடித்ததோ?
  • சளுக்கன் தனக்குக் சத்துரு; சவுரிக்காரனுக்கு மித்துரு
  • சற்குருவைப் பழித்தோர் சாய்ந்தே போவார்
  • சற்சனர் உறவு சர்க்கரைப் பாகு
  • சற்புத்திரன் இருக்கிற இடத்திலே தறிதலையும் இருக்கிறது
  • சன்னதம் குலைந்தால் கும்பிடு எங்கே?
  • சன்னம் சன்னம் பர்வதம்
  • சனத்தோடு சனம் சேரும்: சந்தனத்தோடு கர்ப்பூரம் சேரும்
  • சனப்பலம் இருந்தால் மனப் பலம் வரும்
  • சனமருளோ, சாஸ்திர மருளோ?
  • சனி ஒழிந்தது; சங்கடம் தீர்ந்தது
  • சனிக்கிழமையும் புதன் கிழமையும் தவறாமல் எண்ணெய் தேய்த்துக் குளிப்பான்
  • சனி நீராடு
  • சனிப்பயிர் சாத்திரத்துக்கு உதவும்
  • சனிப் பிணம் தனிப் போகாது
  • சனிப் பிணம் துணை தேடும்
  • சனிப் பெருக்கு
  • சனி பிடித்த நாரை கெளிற்றைப் பிடித்து விழுங்கினாற் போல
  • சனியன் தொலைந்தது
  • சனியன் பிடித்தவள் சந்தைக்குப் போனாலும் புருஷன் அகப்படமாட்டான்
  • சனியன் பிடித்தவனுக்குச் சந்தையிலும் கந்தை அகப்படாது
  • சனியனை அடிமடியில் கட்டியது போல
  • சனியனை விலைக்கு வாங்கினது போல
  • சனியும் புதனும் தங்கும் வழி போகக் கூடாது
  • சனியும் புதனும் தன்னை விட்டுப் போகாது
  • சனியைப் போலக் கொடுப்பவனும் இல்லை: சனியைப்போலக் கெடுப்பவனும் இல்லை
  • சஜ்ஜனர் உறவு சர்க்கரைப் பாகுபோல

சா[தொகு]

  • சாக்கடைக்குப் போக்கிடம் எங்கே?
  • சாக்கடைக் கும்பிக்குப் போக்கிடம் எங்கே?
  • சாக்கடைக்குப் போக்கிடம் இல்லை
  • சாக்கடைச் சேறு என்றாலும், சக்களத்தி என்றாலும் சரி
  • சாக்கடைப் புழு என்றாலும் சக்களத்தி என்றாலும் போதும்
  • சாக்கடைப் புழு என்றாலும் சக்களத்தியை வெல்லப் போகாது
  • சாக்கடைப் புழுவிற்குப் போக்கிடம் எங்கே?
  • சாக்கிரி செய்யப் போனாலும் போக்கிரித் தனம் குறைவாது
  • சாக்குப் போக்குச் சொல்லுதல்
  • சாக்கும் போக்கும் ஏற்கா ஐயன்முன்
  • சாக்கோ, நாக்கோ, அம்மையார் வாக்கோ?
  • சாகத் துணிந்தவனுக்கு சமுத்திரம் முழங்கால்
  • சாகிறவரைக்குவஞ் சங்கடமானால் வாழுகிறது எக்காலம்?
  • சாகிறவரையில் வைத்தியன் விடான், செத்தாலும் விடான் பஞ்சாங்கக்காரன்.
  • சாட்சிக்காரன் காலில் விழுவதிலும் சண்டைக்காரன் காலில் விழலாம்.
  • சாட்டை இல்லாப் பம்பரம் ஆட்டிவைக்க வல்லவன்.
  • சாண் ஏற முழம் சறுக்கிறது.
  • சாது மிரண்டால் காடு கொள்ளாது.
  • சாத்திரம் பாராத வீடு சமுத்திரம், பார்த்த வீடு தரித்தரம்.
  • சாத்திரம் பொய் என்றால் கிரகணத்தைப் பார்.
  • சாப்பிள்ளை பெற்றாலும் மருத்துவச்சிக் கூலி தப்பாது.

சி[தொகு]

  • சித்திரை உழவு பத்தரை மாற்றுத் தங்கம்.

சீ[தொகு]

  • சீரைத் தேடின் ஏரைத் தேடு

சு[தொகு]

  • சுக்கிர உதயத்தில் தாலி கட்டி, சூரிய உதயத்திற்குள் அறுத்தாள்.
  • சுக துக்கம் சுழல் சக்கரம்.
  • சுடர் விளக்காயினும் தூண்டுகோல் ஒன்று வேண்டும்.
  • சுட்ட சட்டி அறியுமா சுவை.
  • சுட்ட மண்ணும் பச்சை மண்ணும் ஒட்டுமா?
  • சுண்டைக்காய் காற்பணம் சுமை கூலி முக்காற்பணம்.
  • சுத்தம் சோறு போடும் எச்சில் இரக்க வைக்கும்.
  • சுத்த வீரனுக்கு உயிர் துரும்பு.
  • சும்மா வந்த மாட்டை பல்லைப் பிடித்தப் பாராதே
  • சும்மா இருக்கிற தம்பிரானுக்கு இரண்டு பட்டை.
  • சும்மா கிடக்கிற சங்கை ஊதிக்கெடுத்தான் ஆண்டி.
  • சுமங்கலிப் பெண்ணுக்கு அவள் கழுத்துத்தாலி தானே எல்லாம்.
  • சுமங்கலி காலடி பட்ட வீடு போல
  • சுயபுத்தி போனாலும் சொற்புத்தி வேண்டாமா?
  • சுவரை வைத்துதான் சித்திரம் வரையவேண்டும்.
  • சுவாமி வரங் கொடுத்தாலும் பூசாரி இடங்கொடுக்க மாட்டான்.

சூ[தொகு]

  • சூடு கண்ட பூனை அடுப்பங் கரையிற் சேராது.

செ[தொகு]

  • செக்களவு பொன்னிருந்தாலும் செதுக்கியுண்டால் எத்தனை நாளுக்குக் காணும்.?
  • செக்கானிடம் சிக்கின மாடும் பார்ப்பானிடம் சிக்கிய ஆளும் உருப்படமாட்டார்கள்
  • செக்கில் அரைபட்ட எள்ளுப் போல
  • செக்கில் அரைபட்ட எள் திரும்ப முழுசு ஆகுமா?
  • செக்கில் அரைபட்ட தேங்காய் பிண்ணாக்கு ஆவது போல
  • செக்கு அடிக்கும் தம்பூருக்கும் ஒத்து வருமா?
  • செக்கு அடி முண்டம் போல உட்கார்ந்திருக்கிறான்
  • செக்கு அடி முத்தி, எனக்கு என்ன புத்தி?
  • செக்கு அளவு பொன் இருந்தாலும் செதுக்கி உண்டால் எத்தனை நாளுக்குக் காணும்?
  • செக்கு உலக்கைபோல் நிற்கிறான்
  • செக்கு உலக்கையை விழுங்கினவனுக்குச் சுக்குக் கஷாயம் மருந்து ஆமா?
  • செக்கு என்றும் சிவலிங்கம் என்றும் தெரியாதா?
  • செக்குக் கண்ட இடத்தில் எண்ணெய் தேய்த்துச் சுக்குக் கடை இடத்தில் பிள்ளை பெறுவது
  • செக்குக்கு ஏற்ற சிவலிங்கம்
  • செக்குக்கும் சிவலிங்கத்துக்கும் வித்தியாசம் தெரியாதவன்
  • செக்குக்கு மாடு கொடுத்தாலும் கொடுக்கலாம்; சீவலப்பேரியில் பெண் கொடுக்கக் கூடாது
  • செக்கு நக்குகிற தம்பிரானே, உன் திருவடிக்குத் தண்டம்; அந்தண்டை நக்குடா பிள்ளாய்; ஐசுவரியம் பெருகி இருப்பாய்,
  • செக்கு நக்குகிற தம்பிரானே, தண்டம்; நீ தென்புறம் நக்கு; நான் வடபுறம் நக்குகிறேன்
  • செக்கும் சிவலிங்கமும் தெரியாதா?
  • செக்குமாட்டைக் கவலையிலே கட்டினாற் போல
  • செக்குமாடு போல் உழைக்கிறான்
  • செக்கை நக்குகிற தம்பிரானே, தண்டம், நீ தென்புறம் நக்கு;நான் உட்புறம் நக்குகிறேன்
  • செக்கை வளைய வரும் எருதுகளைப் போல்
  • செக்கை விழுங்கிவிட்டுச் சுக்குத் தண்ணீர் குடித்தாற் போல
  • செங்கதிர் முன்னே வெண்கதிர் அடங்கினது போல
  • செங்கோல் அரசனே தெய்வம் ஆவான்
  • செங்கோல் ஓங்குபவன் திரித்துவத் தேவன்
  • செங்கோல் கோணினால் எங்கும் கோணும்
  • செங்கோலுக்கு முன் சங்கீதமா?
  • செஞ்சி அழிந்தது; சென்னை வளர்ந்தது
  • செடியிலே வணங்காததா மரத்திலே வணங்கும்?
  • செட்டிக்கு இறுத்துப் பைக்கும் இறுத்தேன்
  • செட்டிக்கு உறக்கம் உண்டு; வட்டிக்கு உறக்கம் இல்லை
  • செட்டிக்கு எதற்குச் செம்புச் சனியன்?
  • செட்டிக்கு ஏன் சென்மச் சனியன்?
  • செட்டிக்கு ஒரு சந்தை; திருடனுக்கு ஓர் அமாவாசை
  • செட்டிக்கு ஒரு தட்டு; சேவகனுக்கு ஒரு வெட்டு
  • செட்டிக்குத் தெற்குச் செம்புச் சனியன்
  • செட்டிக்கும் பயிருக்கும் சென்மப் பகை
  • செட்டிக்கும் மட்டிக்கும் சென்மப் பகை
  • செட்டிக்கு வேளாண்மை சென்மப் பகை
  • செட்டிகள் மாடு மலை ஏறி மேயுமா?
  • செட்டி கப்பலுக்குச் செந்தூரான் துணை
  • செட்டி கூடிக் கெட்டான்; சேணியன் பிரிந்து கெட்டான்
  • செட்டி கெட்டால் பட்டு உடுத்துவான்
  • செட்டி கொடுத்துக் கெட்டான்
  • செட்டி மிடுக்கோ சரக்கு மிடுக்கோ?
  • செட்டி சிதம்பரம்,
  • செட்டி சுற்றாமல் கெட்டான்; தட்டான் தட்டாமல் கெட்டான்
  • செட்டி நீட்டம் குடி தலையிலே
  • செட்டி நட்டம் தட்டானில்; தட்டான் நட்டம் ஊர்மேலே
  • செட்டிப் பிள்ளையோ? கெட்டிப் பிள்ளையோ!
  • செட்டி பட்டினி, கால்பணம் சொட்டினான்
  • செட்டி படை வெட்டாது; செத்த பாம்பு கொத்தாது
  • செட்டி படை வெல்லுமா? சேற்றுத் தவளை கடிக்குமா?
  • செட்டி பணத்தைக் குறைத்தான்; சேணியன் நூலைக் குறைத்தான்
  • செட்டி பிள்ளை கெட்டி
  • செட்டி புறப்படப் பட்டணம் முடியும்
  • செட்டி போன இடம் எல்லாம் வட்டம் காற்பணம்
  • செட்டி மகன் கப்பலுக்குச் செந்துாரான் துணை
  • செட்டி முறை எட்டு முறை; எட்டு முறையும் கெட்ட முறை
  • செட்டியார் கப்பலுக்குத் தெய்வமே துணை
  • செட்டியார் பிணம் சீத்தென்று போயிற்று
  • செட்டியார் பிள்ளை செல்லப் பிள்ளை ஆனால் படைக்குப் போகிற நாயக்கரைப் பயமுறுத்தலாமா?
  • செட்டியார் வாழ்வு செத்தால் தெரியும்
  • செட்டியாருக்கு ஒரு காலம்; சேவகனுக்கு ஒரு காலம்
  • செட்டியாரே, செட்டியாரே என்றால் சீரகம் பண எடை முக்காற் பணம் என்கிறான்
  • செட்டியாரே, செட்டியாரே என்றால் சீரகம் மணக்கிறது என்பாள்
  • செட்டியாரே, வாரும்; சந்தையை ஒப்புக் கொள்ளும்
  • செட்டியும் தட்டானும் ஒன்று; கட்டிப் புரண்டாலும் தனி
  • செட்டியை நீலி தொடர்ந்தது போல
  • செட்டி வீட்டில் பணம் இருக்கிறது; ஆல மரத்தில் பேய் இருக்கிறது
  • செட்டி வீட்டு நாய் சேர் காத்திருந்தது போல
  • செட்டி வீட்டு நாயும் கணக்குப் பார்த்துக் கடிக்கும்
  • செட்டி வெள்ளரிக்காய் என்றால் நரி நொட்டை விட்டுத் தின்னுமாம்
  • செட்டுக்கு ஒரு தட்டு; தேவடியாளுக்கு ஒரு மெட்டு
  • செட்டும் கட்டுமாக வாழ்ந்தான்
  • செடி இல்லாத குடி போல
  • செடி கண்டு பேளாதான் வாழ்க்கை தடி கொன்ட நாயோடு ஒக்கும்
  • செடியில் இருக்கிற ஓணானை மடியில் கட்டிக் கொண்டு குடைகிறது குடைகிறது என்றாள்
  • செடியில் வணங்காதது மரத்தில் வணங்குமா?
  • செடியை வைத்துக் கொண்டு விலை கூறலாமா?
  • செண்ணூருக்குப் போகிறேன்; செம்மை உண்டா என்ற கதை
  • செத்த அன்று வா என்றால் பத்தன்று வருவான்
  • செத்த ஆட்டுக்குக் கண் பெரிது; தாய் இல்லாப் பிள்ளைக்கு வயிறு பெரிது
  • செத்தவன் உடைமை இருந்தவனுக்கு அடைக்கலம்
  • செத்த ஆடு காற் பணம்; சுமை கூலி முக்காற் பணம்
  • செத்த இடத்தில் புல் முளைத்துப் போகும்
  • செத்தது செத்தாயே, செட்டி குளத்தில் விழுந்து சாகலாமா?
  • செத்த நாய் ஊதினாற் போல
  • செத்த நாய் செருப்பைக் கடித்தது போல,
  • செத்த நாய் திரும்பக் கடிக்காது
  • செத்த நாயில் உண்ணி கழன்றது போல
  • செத்த நாயை இழுத்து எறிவது போல
  • செத்த பாம்பு வருகிறதே அத்தை, நான் மாட்டேன் என்றதைப் போல
  • செத்த பாம்பை அடிப்பது எளிது
  • செத்த பாம்பை ஆட்டுகிறான்
  • செத்த பாம்பை ஆட்டுவாளாம் வித்தைக்காரப் பெண் பிள்ளை
  • செத்த பாம்பை எட்ட நின்று அடிப்பான், சீனத்து அதிகாரி
  • செத்த பாம்பை எட்டித் தள்ளி நின்று அடிக்கும் தீரன்
  • செத்த பிணத்திற் கடை, உற்றார்க்கு உதவாதவன்
  • செத்த பிணத்துக்கு அருகே நாளைச் சாகும் பிணம் அழுகிறது
  • செத்த பிணத்துக்கு இனிச் சாகும் பிணம் அழுகிறது
  • செத்த பிணத்துக் கண் ஏன்? சிவசிவ ஆண்டிக்குப் பெண் ஏன்?
  • செத்த பிணத்தைச் சுற்றித் திரிந்தாற் போல
  • செத்த பிறகே செய்தவனுக்குச் செய்கிறது?
  • செத்த பிறகா செல்வம் அநுபவிக்கிறது?
  • செத்தபின் எப்படிப் போனால் என்ன?
  • செத்தபின் வீட்டில் கெட்டவன் யார்?
  • செத்த மாட்டை அறுக்காத கத்தி சொத்தைக் கத்தரிக்காயை அறுக்கும்
  • செத்த மாடு புல் தின்னுமா?
  • செத்தவன் இருக்கச் சவுண்டி சாப்பிட்டது நிஜம் என்பது போல்
  • செத்தவன் உடலம் சுமந்தவன் கண்மேலே
  • செத்தவன் உடைமை இருந்தவனுக்குக் கிடைக்கும்
  • செத்தவன் கண் கடாக்கண்; இருந்தவன் கண் இல்லிக்கண்
  • செத்தவன் கண் செந்தாமரைக் கண்; இருக்கிறவன் கண் நொள்ளைக் கண்
  • செத்தவன் கண் பெரிய கண்
  • செத்தவன் காதில் சுக்கு வைத்து ஊதினாற் போல
  • செத்தவன் கையில் வெற்றிலை பாக்குக் கொடுத்த சம்பந்தம்
  • செத்தவன் சாட்சிக்கு வருவது இல்லை
  • செத்தவன் செந்தாமரைக் கண்ணன்
  • செத்தவன் தலை கிழக்கே இருந்தால் என்ன? மேற்கே இருந்தால் என்ன?
  • செத்தவன் தலையில் எத்தனை வண்டி ஏறினால் என்ன?
  • செத்தவன் நான் இருக்கச் சவுண்டி சாப்பிட்டவன் நான் என்றானாம்
  • செத்தவன் பாரம் சுமந்தவன் தலையில்
  • செத்தவன் பிழைத்தால் வெற்றி கொள்கிறது ஆர்?
  • செத்தவன் பிட்டத்தில் நெய் எடுத்துத் திருவண்ணாமலைக்கு விளக்கு ஏற்று
  • செத்தவன் பிட்டம் தெற்கே கிடந்தால் என்ன? வடக்கே கிடந்தால் என்ன?
  • செத்தவன் பிள்ளை இருககிறவனுக்கு அடைக்கலம்
  • செத்தவன் பெண்டாட்டியை இருந்தவன் கொண்டது போல
  • செத்தவன் பெண்டினைக் கட்டினாலும் விட்டவன் பெண்டினைக் கட்டக் கூடாது
  • செத்தவன் வாயிலே மண்; இருந்தவன் வாயிலே சோறு
  • செத்தவன் வீட்டில் கெட்டிவன் யார்?
  • செத்தவன் வீட்டில் பாடுபட்டவர் ஆரோ?
  • செத்தன்று வா என்றால் பத்தன்று வருவான்
  • செத்தாருக்கு உவமானம் வையகத்தில் இல்லையா?
  • செத்தாரைச் சாவார் சுமப்பார்கள்
  • செத்தால் செடியைக் கா; பிழைத்தால் வீட்டைக் கா
  • செத்தால் தெரியும் செட்டியார் வாழ்வு
  • செத்தால் பிழைக்க மாட்டான்,
  • செத்துக் கிடக்கிற பிணத்தைக் கண்டால் சிறுக்கச் சிறுக்க வெட்டுவேன் என்ற கதை
  • செத்துச் சுண்ணாம்பாய்ப் போகிறேன்
  • செத்துத் தெய்வமாய் நிற்கிறாள்
  • செத்துப் போகும் போது தலையில் கட்டிக் கொண்டு போகிறானோ?
  • செத்துப் போன தாதன் மொட்டுப் போல முளைத்தான்
  • செத்துப் போன பசுவைக் கெட்டுப் போன பாப்பானுக்குத் தாரை வார்த்த கதை
  • செத்துப் போன பாட்டின் இருந்தால் தாடியைப் பிடித்துக் கொண்டு தொங்கலாம்
  • செத்துப் போன பாட்டி இருந்தால் கூட இரண்டு சிற்றப்பனைப் பெற்றிருப்பாள்
  • செத்துப் போன பார்ப்பானுக்குச் செட்டிப் பெண்ணைக் கொடுத்தாளாம்
  • செத்துப் போன பிறகு நித்திய சிராத்தம் செய்கிறது
  • செத்துப் போன மாடு உயிரோடு இருந்தால் உடைந்து போன கலயத்தால் ஒன்பது கலயம் கறப்பேன் என்றாளாம்
  • செத்தும் கொடுத்தான் சீதக்காதி
  • செத்தும் கொடுத்தான் சீவரத்துக் கிராமணி
  • செத்தும் சாகாதவன் தியாகம் கொடுப்போன்
  • செத்தைக்குள் கிடந்ததைத் தூக்கி மெத்தை மேலே வைத்தால் அது செத்தையைச் செத்தையைத்தான் நாடும்
  • செத்தைக் கூலி கால் பணம்; சுமை கூலி முக்கால் பணம்
  • செந்தழலை முன்றானையில் முடியலாமா?
  • செந்நாய்க் கூட்டத்துக்குச் சிறுத்தையும் அஞ்சும்
  • செந்நாயைச் செருப்பால் அடி; கருநாயைக் கழியால் அடி
  • செப்படி வித்தை எப்படிச் செய்கிறான்?
  • செப்படி வித்தை எப்படிப் போவேன்?
  • செப்பு இல்லாக் குடிக்கு அப்பாப் பட்டமா?
  • செப்புக் கொட்டப்பா, செப்புக் கொட்டு, அப்பம் தின்னலாம் செப்புக் கொட்டு, அவல் இடிக்கலாம் செப்புக் கொட்டு
  • செப்பும் பந்தும் போல
  • செம்பிலும் இல்லை; கல்லிலும் இல்லை
  • செம்பால் அடித்த காசும் கொடாத லோபி
  • செம்பிலும் இல்லை; கல்லிலும் இல்லை
  • செம்பரம்பாக்கத்தான் பெயர் பெற்றான்; மாங்காட்டான் நீர் பெற்றான்
  • செம்பாடு அடித்தால் என் பாடு தீர்ந்தது
  • செம்பு, கம்பளி, எம்பெருமான், பாதேயம், பாதரக்ஷணம்
  • செம்பு நடமாடினால் குயவன குடி போவான
  • செம்பொற் சோதி, தம்பிரான சடையைச் சோதி
  • செம்போத்து உண்டானால் சம்பத்து உண்டாகும்
  • செம்மறி ஆடு வெளியே ஓடத் திருட்டு ஓநாய் உள்ளே
  • செம்மறிக் குளத்தான் சுரைக் கொடிக்குப் பாத்தி வெட்டியதுபோல
  • செய்கிறது எல்லாம் செய்து விட்டுக் கழுநீர்ப்பானையில் கை அலம்பினாளாம்
  • செய்கிறது சிரைக்கிற வேலை; நினைக்கிறது சிரஸ்தார் வேலை
  • செய்கிறதை விட்டு விட்டுச் சினையாட்டுக்கு மயிர் பிடுங்குகிறான்
  • செய்கிறவர்களுக்குச் சொல்லத் தெரியாது; சொல்கிறவர்களுக்குச் செய்யத் தெரியாது
  • செய்த தீவினை செய்பவர்க்கே
  • செய்த நன்றியைச் செத்தாலும் மறக்கலாமா?
  • செய்த பாவத்தைச் சொல்லிக் கழி
  • செய்தவம் மறந்தால் கைதவம் ஆகும்
  • செய்தவர் பாவம் சொன்னவர் வாயோடே
  • செய்தவனுக்குச் செய்ய வேணும்; செத்தவனுக்கு அழ வேணும்
  • செய்த வினை செய்தவர்க்கே எய்திடும்
  • செயவன திருந்தச் செய்
  • செயற்கை வாசனையோ? இயற்கை வாசனையோ?
  • செருப்பாக உழைத்தான்
  • செருப்பால் அடித்தாலும் திருட்டுக்கை நில்லாது
  • செருப்பால் அடித்துக் கருப்பட்டி கொடுப்பது போல
  • செருப்பால் அடித்துக் குதிரைக் கொடை கொடுத்தாற் போல
  • செருப்பால் அடித்துக் குதிரையோடு தீவட்டி பிடித்தாற்போல
  • செருப்பால் அடித்துப் பட்டுப் புடைவை கொடுத்தாற்போல
  • செருப்பால் அடித்துப் பருப்புச் சோறு போட்டது போல
  • செருப்பின் அருமை வெயிலில் தெரியும்; நெருப்பின் அருமை குளிரில் தெரியும்
  • செருப்புக் கடித்தால் திருப்பிக் கடிப்பதா?
  • செருப்புக்காகக் காலைத் தறிக்கிறதா?
  • செருப்புக்காகக் காலைக் குறைக்க முடியுமா?
  • செருப்புக் காலைக் கடித்தால் நாம் செருப்பைக் கடிப்பதா?
  • செருப்புக்கு அச்சாரம் துரும்பு
  • செருப்புக்குத் தகுந்தாற்போல் காலை வெட்டுவதா?
  • செருப்புப் போட்டவன் கூடவும் சந்நியாசி கூடவும் துணை போகாதே
  • செருப்பு வைத்துச் சேவடி தொழுமாப் போலே
  • செல் அரித்த காதுக்கு வெள்ளைக் கம்மல் ஏன்?
  • செல்லச் சக்கிலிப் பிள்ளை செருப்புச் செருப்பாய்த் தின்று கழிகிறது
  • செல்லச் சிறுக்கி அகமுடையான் செவ்வாய்க்கிழமை செத்தானாம்; வீடு வெறிச்சாய் போகுமென்று வெள்ளிக்கிழமை எடுத்தாளாம்
  • செல்வத்தில் ஒரு பெண் பிறந்தது; செட்டித் தெரு எல்லாம் திரிந்து விட்டு வந்தது
  • செல்லப் பிள்ளை; ஒன்றும் சொல்லப் புள்ளை
  • செல்லப் பிள்ளை சீலை உடாதாம், பிள்ளை பெறுமட்டும்
  • செல்லப் பிள்ளை செத்தாலும் சொல்லப் பிள்ளை சாகாது
  • செல்லம் சறுக்காதா? வாசற்படி வழுக்காதா?
  • செல்லம் சிரிப்பாணி, சீரங்கத்துத் குந்தாணி
  • செல்லம் சீர் அழிக்கும்
  • செல்லம் சொல்லுக்கு அஞ்சாள்; அழகி நடைக்கு அஞ்சாள்
  • செல்லம் சொல்லுக்கு அஞ்சுமா?
  • செல்லம் பரமண்டலத்தில் செல்லாது; எல்லா மண்டலமும் செல்லும்
  • செல்லன் சொல்லுக்கு அஞ்சான்; அழகன் நடைக்கு அஞ்சான்
  • செல்லாக் கோபம் பொறுமைக்கு அடையாளம்
  • செல்லாத காசு என்றைக்கும் செல்லாது
  • செல்லாத பணம் என்று எண்ணாதே; செட்டியார் இருக்கிறார்; காட்டிக் கொள்
  • செல்லிக்குச் சிரங்கு; சிறுக்கிக்கு அரையாப்பு; பார்க்க வந்த பரிகாரிக்குப் பக்கப் பிளவை
  • செல்லுகளால் தினந்தோறும் வளர்க்கப் படாத புற்றுப் போல்
  • செல்லும் காசுக்கு வட்டம் உண்டா?
  • செல்லும் செல்லாததற்குச் செட்டியாரைக் கேள்
  • செல்லும் பொழுது செலுத்துவாய் சிந்தையை
  • செல்வச் செருக்கினால் திரட்டுப்பால் குமட்டுகிறது
  • செல்வ நிலையில் சேட்டன் கீழ்க் குரு
  • செல்வப் பெண் சீரங்க நாயகிக்குச் சீதனம் வந்ததாம் வறையோடு
  • செல்வப் பொருள் கொடுத்தால் குறையும்; கல்விப் பொருள் குறையுமோ?
  • செல்வம் உண்டாகும் காலம் செய்கை உண்டு; வல்லமை உண்டு
  • செல்வம் என்பது சிந்தையின் நிறைவே
  • செல்வம் சகடக்கால் போல வரும்
  • செல்வம் சீர் அழியுமா?
  • செல்வம் சீரைக் கெடுக்கும்
  • செல்வம் செருக்குகிறது; காசுக்கு வழி இல்லை
  • செல்வம் செருக்குகிறது; வாசற்படி வழுக்குகிறது
  • செல்வம் சொல்லுக்கு அஞ்சாது
  • செல்வம் தொகற்பால போழ்தே தொகும்
  • செல்வம் நிலைகவ; சேட்டன் கீழ் இரு
  • செல்வம் பரமண்டலத்தில் செல்லாது; எல்லா மண்டபமும் செல்லும்
  • செல்வமும் சீரும் வளர்த்தாளோடே போயின
  • செல்வமே ஜீவாதாரம்
  • செல்வர் எழுந்தருள்வது காலக்ஷேபத்துக்கு விரோதம்
  • செல்வர்க்கு அழகு செழுங்கிளை தாங்குதல்
  • செல்வன் சொல்லுக்கு அஞ்சான்; வீரன் போருக்கு அஞ்சான்
  • செலவில் குறைந்த வரவானால் சேமிப்பது எப்படி?
  • செலவில்லாச் செலவு வந்தால் களவில்லாக் களவு வரும்
  • செலவு அதிகம்; வரவு போதாது
  • செலவு இல்லாச் செலவு வந்தால் களவு இல்லாக் களவு வரும்
  • செலவு இல்லாத சிங்காரம் போல
  • செலவு இல்லாப் பணத்துக்குச் சில்லறைக் கடை வைத்துப் பார்த்தானாம்
  • செலவு உண்டானால் சேவகம் உண்டு
  • செலவோடு செலவு, கந்தப் பொடிக்குக் காற்பணம்
  • செவ்வாய் நட்டுப் புதன் அறுக்கல் ஆகாது
  • செவ்வாய் புதன் வடக்கே சூலம்
  • செவ்வாய் வெள்ளி செலவிடாதே
  • செவ்வாயோ? வெறுவாயோ?
  • செவிட்டில் அடித்தால் ராகம் போட்டு அழத் தெரியாது
  • செவிட்டில் அறைந்தாலும் தேம்பி அழத் தெரியாது
  • செவிட்டுக்குச் சூன்யம்; அசட்டுக்கு ஆங்காரம்
  • செவிடன் காதிலே சங்கு ஊதின மாதிரி
  • செவிடன் பாட்டுக் கேட்கப் போனது போல்
  • செவிடன் பாட்டுக் கேட்ட சம்பந்தம்
  • செவிடனும் குருடனும் கூத்துப் பார்த்தாற் போல
  • செவிடு இருந்தால் ஊமை இருக்கும்
  • செழிப்புக்குத் தேன் குருவி
  • சென்மக் குணத்தைச் செருப்பால் அடித்தாலும் போகாது
  • சென்மக் குருடனுக்குக் கண் கிடைத்தது போல
  • சென்மத்தில் பிறந்தது செருப்பால் அடித்தாலும் போகாது
  • சென்ற இடம் எல்லாம் சிறப்பே கல்வி
  • சென்ற இடம் சிறப்பும், கொண்ட இடம் காணியும்
  • சென்ற காசுக்கு வட்டம் இல்லை
  • சென்ற காரியத்தைப் பார்த்து, வரும் காரியத்தை அறி
  • சென்றது எல்லாம் போகப் பிள்ளையாரே வாரும்
  • சென்றும் செலவழித்தும் சீர் அழிந்த குடித்தனம்
  • சென்னிமலை, சிவன்மலை, சேர்ந்ததொரு பழனிமலை
  • சென்னைக்கு வந்து சிவம் ஆனேன்

சே[தொகு]

  • சேராத இடத்திலே சேர்ந்தால் துன்பம் வரும்.
  • சேற்றிலே புதைந்த யானையைக் காக்கையுங் கொத்தும்.
  • சேற்றிலே செந்தாமரை போல.

சை[தொகு]

  • சை எனத் திரியேல்
  • சைகை அறியாதவன் சற்றும் அறியான்
  • சைகை அறியாதவன் சற்றும் சங்கதியா அறியான்
  • சைவத்துக்கு ஆசைப்பட்டு மரக்கறியைத் தள்ளிவிட்டேன்
  • சைவத்தைக் கெடுக்கப் பண்டாரம்; வைணவத்தைக் கெடுக்கத் தாதன்
  • சைவப் பழம், வில்வக் கிளை
  • சைவம் முற்றி எலும்பு எலும்பாய்க் கழிகிறது
  • சைவ முத்தையா முதலியாருக்குச் சமைத்துப் போட வள்ளுவப் பண்டாரம்
  • சைனன் கையில் அகப்பட்ட பேனைப் போல்

சொ[தொகு]

  • சொக்கட்டான், சோழி, சதுரங்கம் இம் மூன்றும் துக்கம் அற்றார் ஆடும் தொழில்
  • சொக்கட்டான் விளையாட்டு, பொல்லாத சூது
  • சொக்கட்டானும் செட்டியும் தோற்றினாற் போல
  • சொக்கநாதர் கோவிலுக்குப் புல்லுக்கட்டுக் கட்டினாற் போல
  • சொக்கர் உடைமை அக்கரை ஏறாது
  • சொக்கனுக்குச் சட்டி அளவு; சொக்கன் பெண்டிாட்டிக்கும் பானை அளவு
  • சொக்கனும் செட்டியும் தொற்றினது போல
  • சொக்கா, சொக்கா, சோறுண்டோ? சோழியன் வந்து கெடுத்தாண்டா
  • சொக்காயை அவிழ்த்தால் சோம்பேறி
  • சொக்காரன் குடியைப் பிச்சை எடுத்துக் கெடுப்பான்
  • சொக்குப் பொடி போட்டு மயக்குகிறான்
  • சொட்டையிலே உள்ள சீலம் சுடலை வரை
  • சொட்டை வாளைக் குட்டி போல் துள்ளி விழுகிறது
  • சொத்தி கை நீளாது; நீளக் கை சுருங்காது
  • சொத்துக் கால் பணம்; சுமை கூலி முக்கால் பணம்
  • சொத்துக் குடலிலே சோறு புகுந்தால் தத்தக பித்தக என்ற கதை
  • சொத்தைக் கொடுத்துப் புத்தி வர வேண்டும்; இல்லாவிட்டால் செருப்படி பட்டும் புத்தி வர வேண்டும்
  • சொத்தைப் போல வித்தைப் பேணு
  • சொந்தக்காராய் இருந்தாலும் பெட்ரோல் இருந்தால் தான் கார் நகரும்
  • சொந்தக் கோழி தோல் முட்டை இடுகிறது
  • சொந்த மாப்பிள்ளையை வீட்டுக்கு அழைக்கப் பறை ஏன்?
  • சொப்பனங் கண்ட அரிசி சோற்றுக்காகுமா?
  • சொப்பனத்தில் கண்ட அரிசி சோற்றுக்கு உதவுமா? கனவு கண்ட பணம் செலவுக்கு உதவுமா?
  • சொப்பனத்தில் கண்ட பணம் செலவுக்கு ஆகுமா?
  • சொப்பிலே சோறு ஆக்கினால் சுளுவுதான்; சும்மா இருந்து பிள்ளை பெற்றால் அழகுதான்
  • சொர்க்கத்திலே தோட்டியும் சரி; தொண்டைமானும் சரி
  • சொர்க்கத்துக்கு நான் போனால் போகலாம்
  • சொர்க்கத்துக்குப் போகிற போதும் கட்கத்திலே மூட்டை ஆகுமா?
  • சொர்க்கத்துக்குப் போகிற போதும் கட்கத்திலே கழுதைக் குட்டியா?
  • சொர்க்கத்துக்குப் போகிற போதும் கட்கக்திலே ராட்டினமா?
  • சொர்க்கத்துக்குப் போகிறபோதும் பக்கத்திலே கூத்தியாரா?
  • சொர்க்கத்துக்குப் போயும் ராட்டினமா?
  • சொர்க்கத்துக்குப் போனாலும் கட்கத்திலே அக்ஷயபாத்திரமா?
  • சொர்க்கத்துக்குப் போனாலும் கட்கத்திலே ஒரு பிள்ளை ஏன்?
  • சொருக்கி போனாள், சிறுக்கி வந்தாள்
  • சொருக்குக் கொண்டைக்காரி, சொக்குப்பொடி போடுவாள்
  • சொருகி இருந்த அகப்பை சொத்தென்று விழுந்ததாம்
  • சொருகிக் கிடந்த அகப்பையும் சோறு அள்ளப் புறப்பட்டது
  • சொருகி வைத்த அகப்பை
  • சொல் அம்போ வில் அம்போ?
  • சொல்கிறது ஒன்று; செய்கிறது ஒன்று
  • சொல்கிறவனுக்கு வாய்ச்சொல்; செய்கிறவனுக்குத் தலைச் சுமை
  • சொல் கேளாப் பிள்ளையினால் குலத்துக்கு ஈனம்
  • சொல்திறம் கூறல் கற்றவர்க்கு அழகு
  • சொல்லச் சொல்லச் செவிடி புக்ககம் போனாளாம்
  • சொல்லச் சொல்லப் பட்டிப் பெண்ணைப் பெற்றான்
  • சொல்லச் சொல்ல மட்டி மண்ணைத் தின்றான்
  • சொல்லப் போனால் பொல்லாப்பு; சொறியப் போனால் அரையாப்பு
  • சொல்லாததை மனையாளுக்குச் சொன்னவன் பட்ட பாடுபோல
  • சொல்லாது பிறவாது அள்ளாது குறையாது
  • சொல்லாது விளையாது; இல்லாது பிறவாது
  • சொல்லாமல் இருக்கிறவனே பண்டிதன்
  • சொல்லாமற் செய்வார் நல்லோர் சொல்லியுஞ் செய்யார் கசடர்
  • சொல்லிக் கொடுத்த சொல்லும் கட்டிக் கொடுத்த சோறும் எதுவரையில் நிற்கும்?
  • சொல்லிச் செய்வார் சிறியோர்; சொல்லாமற் செய்வார் பெரியோர்; சொல்லியும் செய்வார் கயவர்
  • சொல்லிப் போகவேணும் சுகத்திற்கு, சொல்லாமற் போகவேணும் துக்கத்திற்கு
  • சொல்லின் உறுதி நல்ல நெறியே
  • சொல்லுக்கு அரிச்சந்திரன்
  • சொல்லுக்குச் சொல் சிங்காரமா?
  • சொல்லுக்கும் பொருளுக்கும் எட்டாதான்; சோதிக்கும் சாதிக்கும் நடு ஆனான்
  • சொல்லுகிறவனுக்கு வாய்ச்சொல் , செய்கிறவனுக்கு தலைச்சுமை
  • சொல்லும் சொல், ஆக்கமும் கேடும் தரும்
  • சொல்லும் சொல் கேட்டால் சுட்டாற் போல் கொடுப்பார்
  • சொல்லும் பொருளும் தோன்றும் கல்வி
  • சொல்லுவதிலும் செய்து காட்டுதல் நல்லது
  • சொல்வது யார்க்கும் எளிது; சொல்லியபடி செய்தல் அரிது
  • சொல்வது லேசு, செய்வது அல்லவா பிரயாசம்?
  • சொல்வல்லவனை வெல்லல் அரிது
  • சொல்லியும் கொடுத்து எழுதியும் கொடுத்துப் பின்னோடே போனாளாம்
  • சொல்வதைக் கேளாத பிள்ளையும் நீட்டின காலை மடக்காத நாட்டுப் பெண்ணும்
  • சொல்வதை விடச் செய்வது மேல்
  • சொல்வளம் இல்லாத நற்கதை, சொல்லில் அதுவே துர்க்கதை
  • சொல்வார் எல்லாம் துணிவாரா தீப் பாய?
  • சொல்வார் சொன்னால் கேட்பாருக்கு மதி எங்கே போச்சு?
  • சொல் பேச்சையும் கேளான்; சுய புத்தியும் இல்லை
  • சொற்கோளாப் பிள்ளையினால் குலத்துக்கீனம்
  • சொறி சொறிகிற சுவாரசியத்தில் ஆனை விலைகேட்ட மாதிரி
  • சொறிந்து தேய்க்காத எண்ணெயும் எண்ணெய் அல்ல; பரிந்து இடாத சாதமும் சாதம் அல்ல
  • சொறிந்து தேய்க்காத எண்ணெயும் பரிந்து இடாத சோறும் பாழ்
  • சொறி நாய்க்குக் குட்டையே சொர்க்கம்
  • சொறி நாய் சுகம் பெற்றது போல
  • சொறி நாய் சோர்ந்து விழும்; வெறி நாய் விழுந்து கடிக்கும்
  • சொறி பிடித்த நாயானாலும் வீட்டைக் காக்கும்
  • சொறியக் கொடுத்த பசுப் போல
  • சொறியாந் தவளையும் வேட்டை ஆடுகிறதாம்
  • சொன்ன சொல்லுக்கு இரண்டு இல்லாமல் வருவான்
  • சொன்னது இருக்கச் சுரை பிடுங்குகிறாய்
  • சொன்னதைச் சொல்லடி, சுரணை கெட்ட மூளி
  • சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை
  • சொன்னதை சொல்லுமாம் கிளி; செய்ததைச் செய்யுமாம் குரங்கு
  • சொன்னதை விட்டுச் சுரையைப் பிடுங்குகிற மாதிரி
  • சொன்னபடி கேட்காவிட்டால் மண்ணை வெட்டி மாப்படைப்பேன்
  • சொன்னபடி கேட்டால் மாப்படைப்பேன்; கேளாவிட்டால் மண்ணை வெட்டிப் படைப்பேன்
  • சொன்னபடியே கேட்பவனுக்குச் சோறும் இல்லை; புடைவையும் இல்லை
  • சொன்னபடி கேட்டால் சுட்டவுடன் தருவேன்
  • சொன்னால் ஆய் செத்துப் போவாள்; சொல்லாவிட்டால் அப்பன் செத்துப் போவான்
  • சொன்னால் குற்றம்; சொறிந்தால் அரிப்பு
  • சொன்னால் துக்கம்; அழுதால் வெட்கம்
  • சொன்னால் வெட்கக் கேடு; அழுதால் துக்கக் கேடு
  • சொன்னால் பெரும்பிழை; சோறு என்றால் பட்டினி
  • சொன்னால் போலக் கேட்டால் சுட்டாற் போலக் கொடுப்பேன்
  • சொன்னாலும உறைப்பதில்லை; சுட்டாலும் உறைப்பதில்லை
  • சொன்னாலும் பொல்லாது; சும்மா இருந்தாலும் தோஷம்
  • சொன்னான் சுரைக்காய்ககு உப்பு இல்லை என்று
  • சொன்னேன், சுரைக்காய்ககு உப்பு இல்லை, பாகற்காய்க்குப் பருப்பு இல்லை என்று

சோ[தொகு]

  • சோணாசலத்திற்குச் சிறந்த க்ஷேத்திரம் இல்லை; சோமவாரத்திற் சிறந்த விரதம் இல்லை
  • சோதி இல்லா வானமும் நீதி இல்லா அரசனும்
  • சோதி பிறவாதோ? சம்பா விளையாதோ?
  • சோதி மின்னல்
  • சோம்பர் என்பவர் தேம்பித் திரிவர்
  • சோம்பல் அம்பலம் வேகிறதே என்றால் அதைச் சொல்வானேள்? வாய் வலிப்பானேன் என்பானாம்
  • சோம்பல் இல்லாத தொழில் சோதனை இல்லாத் துணை
  • சோம்பலுக்குத் தொடர்ச்சி இளைப்பு; சும்மா இருத்தலுக்குத் தொடர்ச்சி முடம்
  • சோம்பலே சோறு இன்மைக்குப் பிதா
  • சோம்பலே துன்மார்க்கத்திற்குப் பிதா
  • சோம்பேறி அம்பலம் தீப்பற்றி எரியுதடா; அதைத்தான் சொல்வானேன்? வாயைத்தான் நோவானேன்?
  • சோம்பேறிக்கு ஒரு வேலையும் தீராது
  • சோம்பேறிக்குச் சோளம் வேளாண்மை
  • சோம்பேறிக்குச் சோறு கண்ட இடம் சுகம்
  • சோம்பேறிக்கு வாழைப்பழம் தோலோடே
  • சோம்பேறி கோல் எடுத்தால் நூறு ஆடு ஆறு ஆடு ஆயினவாம்
  • சோம்பேறித் தனத்துக்குப் பசிதான் மருந்து
  • சோமசுந்தரம், உம் சொம்பு பத்திரம்
  • சோழ நாடு சோறுடைத்து; பாண்டி நாடு முத்துடைத்து; சேர நாடு வேழம் உடைத்து
  • சோழ நீதி பெண்டு விற்றுப் போகிறதா?
  • சோழபுரத்தானோ? சூது பெருத்தானோ?
  • சோழ மண்டலமோ? சூது மண்டலமோ?
  • சோழவரத்துக் குப்பு, சோப்புப் போட்டுக் குப்பு
  • சோழியன் குடுமி சும்மா ஆடுமா?
  • சோழியன் குடுமியைச் சுற்றிப் பிடித்தாற் போல
  • சோழியன் கெடுத்தான்
  • சோளக் கொல்லைப் பொம்மை மாதிரி
  • சோளக் கொல்லையில் மாடு மேய்ந்தால் சொக்கனுக்கு என்ன?
  • சோளப் பயிரை மேய்ந்த மாட்டுக்குச் சொர்க்க லோகம் வேண்டுமா?
  • சோளி சோளியோடே, சுரைக் குடுக்கை ஆண்டியோடே
  • சோளியைப் பிடுங்கிக் கொண்டா பிச்சை போடுகிறது?
  • சோற்றால் எடுத்த சுவர்
  • சோற்றில் இருக்கிற கல்லை எடுக்க மாட்டாதவன் மோகனக் கல்லைத் தாங்குவானா?
  • சோற்றில் இருக்கும் கல்லைப் பொறுக்கு என்றால் சொக்கநாதர் கோயில் மதிலைப் பிடுங்குகிறேன் என்கிறான்
  • சோற்றில் இருக்கும் கல்லைப் பொறுக்க முடியவில்லை. சொக்கநாத சுவாமி அடிக்கல்லை பேர்க்கிறானாம்
  • சோற்றில் இருந்த கல்லை எடுக்காதவன் சேற்றில் கிடக்கிற எருமையைத் தூக்குவானா?
  • சோற்றில் கல் எடுக்க அறியாதவன் முகவணைக் கல் எடுப்பானா?
  • சோற்றில் கிடக்கிற கல்லை எடுக்க மாட்டாதவன், ஞானத்தை எப்படி அறிவான்?
  • சோற்றிலே மலம்; தெளிவாய் இறு
  • சோற்றின் மறைவில் பத்தியம் பிடிக்கிறது
  • சோற்றுக்கு அலைந்தவன் சோளத்தைப் போடு; காய்க்கு அலைந்தவன் பீர்க்கைப் போடு
  • சோற்றுக்கு ஆளாய்ப் பறக்கிறான்
  • சோற்றுக்கு இல்லாச் சுப்பன் சொன்னதை எல்லாம் கேட்பான்
  • சோற்றுக்கு இல்லாத பூசணிக்காய் பந்தலிலே கட்டி ஆட்டவோ?
  • சோற்றுக்கு இல்லாத வாழைக்காயைப் பந்தலில் கட்டித் தொங்கவிடுகிறதா?
  • சோற்றுக்கு இளைத்தாலும் சொல்லுக்கு இளைக்கிறதா?
  • சோற்றுக்கு ஏற்ற பலம்
  • சோற்றுக்குக் கதிகெட்ட நாயே, பெரும் பொங்கல் அன்றைக்கு வாயேன்
  • சோற்றுக்குக் கதி கெட்ட நாயே, மாட்டுப் பொங்கலுக்கு வாயேன்
  • சோற்றுக்குக் காற்றாய்ப் பறக்கிறது
  • சோற்றுக்குக் கேடு பூமிக்குப் பாரம்
  • சோற்றுக்குச் சூறாவளி; வேலைக்கு வெட்ட வெளி
  • சோற்றுக்குத் தாளம் போடுகிறான்
  • சோற்றுக்கும் கறுப்பு உண்டு; சொல்லுக்கும் பழுது உண்டு
  • சோற்றுக்கு வீங்கி
  • சோற்றுக்கு வீங்கினவன் பேளுக்குறிச்சி போக வேண்டும்; அடிக்கு வீங்கினவன் போச்சம்பாளையம்போக வேண்டும்
  • சோற்றுக்கே தாளமாம்; பருப்புக்கு நெய் கேட்டானாம்
  • சோற்றுக்கே திண்டாடும் நாய் சிங்கத்துக்குச் சிம்மாசனம் போட முடியுமா?
  • சோற்றுச் சுமையோடு தொத்தி வந்த நொள்ளை
  • சோற்றுப் பானை உடைந்தால் மாற்றுப் பானை இல்லை
  • சோற்று மறைவிலே யாரடா? சுரக்காரன் பத்தியம் பிடிக்கிறேன்
  • சோற்றைக் கொடுத்துக் கழுத்தை அறுக்கிறதா?
  • சோற்றைக் கொடுத்துத் தொண்டையை நெரிப்பபது போல
  • சோற்றைப் போட்டு மென்னியைப் பிடித்தாற் போல
  • சோற்றை விடுவானேன்? சொல்லுக கேட்பானேன்?
  • சோறு அகப்பட்ட இடம் சொர்க்கம்
  • சோறு இல்லாமல் செத்தவன் இல்லை
  • சோறு இல்லையேல் ஜோலியும் இல்லை
  • சோறு எங்கே விக்கும்? தொண்டையிலே விக்கும்
  • சோறு என்ன செய்யும்; சொன்ன வண்ணம் செய்யும்
  • சோறு கண்ட இடம் சுகம்
  • சோறு கண்ட இடம் சொர்க்கம்; கஞ்சி கண்ட இடம் கைலாசம்
  • சோறு கிடைக்காத நாளில் ஜோடி நாய் எதற்கு?
  • சோறு சிந்தினால் பொறுக்கலாம்; சுணை சிந்தினால் பொறுக்கலாமா?
  • சோறு சிந்தினால் பொறுக்கலாம்; நீர் சிந்தினால் பொறுக்கலாமா?
  • சோறு சிந்தினால் பொறுக்கலாம்; மானம் சிந்தினால் பொறுக்கலாமா?
  • சோறும் சீலையும் கேளாமல் இருந்தால் சொந்தப் பிள்ளையைப் போலப் பார்த்துக் கொள்கிறேன்
  • சோறும் இலையும் கேளாமல் இருந்தால் பெற்ற பிள்ளைக்குச் சமானம்
  • சோறும் துணியும் கேளாமல் இருந்தால் பெற்ற பிள்ளைக்குச் சமானம்
  • சோறும் துணியும் தவிர மற்றதுக்கெல்லாம் குறைவு இல்லை
  • சோறு போட்டு மலமும் வார வேண்டியது ஆயிற்று
  • சோறு வேண்டாதவன் கருப்புக்குப் பயப்படான்

சௌ[தொகு]

  • சௌப்யம் பேசேல்

[தொகு]

  • ஞயம் பட உரை

ஞா[தொகு]

  • ஞாபகம் இல்லை என்று எவனும் சொல்வான்; ஞானம் இல்லை என்று எவனும் சொல்லான்
  • ஞாயப்பிரமாணம் இல்லாத குருக்கள் வீண்
  • ஞாயிற்றுக் கிழமை அன்று நாய்கூட எள்ளுக்காட்டிப் போகாது
  • ஞாயிற்றுக்கிழமை ஒரு பொழுது; நண்டு வேண்டாம்; சாறு விடு
  • ஞாயிற்றுக் கிழமை சென்றால் நாய் படாத பாடு
  • ஞாயிற்றுக் கிழமை நாய்கூட எள்ளுக் காட்டில் நுழையாது
  • ஞாயிற்றுக் கிழமை பிறந்தவர் நாய் படாத பாடு படுவர்
  • ஞாயிற்றுக்கிழமை ருதுவானால் நாய்படாத பாடுதான்
  • ஞாயிற்றுக் கிழமை மறைப்பார் இல்லை
  • ஞானத்துக்கு உலகம் பகை; உலகத்துக்கு ஞானம் பகை
  • ஞானம் இல்லாத சேயர்கள் ஆவின் கற்றிலும் அதிகம் அல்ல
  • ஞானம் எல்லாம் ஒரு மூட்டை; உலகம் எல்லாம் ஒரு கோட்டை
  • ஞானம் தனத்தையும் கனத்தையும் கொடுக்கும்
  • ஞானம் முற்றி எலும்பு எலும்பாய்க் கழிகிறது
  • ஞானமும் கல்வியும் நாழி அரிசியிலே
  • ஞானிக்கு மன்னன் துரும்பு
  • ஞானிக்கு இல்லை, இன்பமும் துன்பமும்
  • ஞானிக்கு நார் துரும்பு
  • ஞானிக்கும் மூடனுக்கும் சங்காத்தம் இல்லையே
  • ஞானியார் ஆடும் திருக்கூத்தோடே நானும் ஆடுகிறேன்

[தொகு]

  • டக்கு டம்மாரம்
  • டம்பப் பொடி மட்டை; தட்டிப் பார்த்தால் வெறும் மட்டை
  • டம்பாசாரி பொடி மட்டை, தட்டிப் பார்த்தால் வெறுமட்டை
  • டமாரக் காளை போல் அலையாதே
  • டமாரம் அடிபட, மரகதம் உடைபட

டா[தொகு]

  • டா என்றால் டூ என்கிறான்
  • டாம்பீகனை நம்பாதே
  • டால் டம்மாரம் போட்டுக் கொண்டு போகாதே

டி[தொகு]

  • டில்லிக்குப் பாட்சாவானாலும் தல்லிக்குப் பிட்டா
  • டில்லிக்கு ராஜாவானாலும் பள்ளிக்குப் பிள்ளை
  • டில்லி ராணி சொல்லிவிட்டால் கல்லிலிருந்து நெல் விளையும்

டீ[தொகு]

  • டீக்காவுக்கு ஒரு டூக்கா வேணும்

த்[தொகு]

  • த்ரி விதம் துஷ்ட லக்ஷணம்
  • த்ரி ஜாக்கி யம தரிசனம்

[தொகு]

  • தக்க வாசல் இருக்கத் தாளித்த வாசலிலே நுழைகிறது
  • தக்கா புக்கா தண்டடி தடியடி
  • தக்கோன் எனத் திரி
  • தகப்பன் ஒரு பாக்கு; பிள்ளை ஒரு தோப்பு
  • தகப்பன் தேடக் கர்த்தன்; பிள்ளை அழிக்கக் கர்த்தன்
  • தகப்பன் பட்டத்தைப் பிள்ளைக்குக் கட்டினால் தகப்பன் சாஷ்டாங்க தண்டம் செய்ய வேண்டும் அல்லவா?
  • தங்கம் தரையிலே தவிடு பானையிலே.
  • தஞ்சம் என்று வந்தவனை வஞ்சித்தல் ஆகாது.
  • தடி எடுத்தவன் தண்டல்காரனா ?
  • தட்டானுக்குப் பயந்தல்லவோ பரமசிவனும் அணிந்தான் சர்ப்பத்தையே.
  • தட்டிப்பேச ஆள் இல்லாவிட்டால் தம்பி சண்டப் பிரசண்டன்.
  • தணிந்த வில்லுத்தான் தைக்கும்.
  • தண்ணீரிலே விளைந்த உப்புத் தண்ணீரிலே கரைய வேண்டும்.
  • தண்ணீரையும் தாயையும் பழிக்காதே.
  • தண்ணீர் வெந்நீரானாலும் நெருப்பை அவிக்கும்.
  • தந்தை எவ்வழி புதல்வன் அவ்வழி.
  • தம்பி உடையான் படைக்கு அஞ்சான்.
  • தருமம் தலைகாக்கும்.
  • தலை இடியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தெரியும்.
  • தலை இருக்க வால் ஆடலாமா ?
  • தலைக்கு மேல் வெள்ளம் சாண் ஓடி என்ன, முழம் ஓடி என்ன ?
  • தலை எழுத்தை தந்திரத்தால் வெல்லலாமா?
  • தலையாரியும் அதிகாரியும் ஒன்றானால் சம்மதித்தபடி திருடலாம்.
  • தவத்துக்கு ஒருவர் கல்விக்கு இருவர்.
  • தவளை தன் வாயாற் கெடும்.
  • தவிட்டுக்கு வந்த கை தங்கத்துக்கும் வரும்.
  • தகப்பன் பட்டம் பிள்ளைக்கு அல்லவா?
  • தகப்பன் பேரை எடுக்கிற பின்ளையே பிள்ளை.
  • தகப்பன் வெட்டின கிணறு என்று தலைகீழாய் விழுவார்களா?
  • தகப்பனுக்கு இட்டது தலைச்சனுக்கு.
  • தகப்பனுக்க ஒட்டுக் கோவணமாம்; மகன் எடுத்துப் போட்டது வேண்டும் என்கிறான்.
  • தகப்பனுக்கு ஒட்டுக் கோவணமாம்; பிள்ளைக்கு எங்கே இழுத்துப் போர்த்துகிறது.
  • தகப்பனுக்குக் கட்டக் கோவணம் இல்லை; மகன் தஞ்சாவூர் மட்டும் நடை பாவாடை போடச் சொன்னானாம்.
  • தகப்பனுக்குக் காய்ச்சுகிற பாலில் ஆடையைத் துவைக்கிற பிள்ளை.
  • தகப்பனைக் கொன்ற பாவம் மாமியார் வீட்டில் ஆறு மாதம் இருந்தால் போகும்.
  • தகப்பனைக் கொன்ற பிள்ளை.
  • தங்கக் கத்தி என்று கழுத்தை அறுத்துக் கொள்ளலாமா?
  • தங்கக் கத்தி என்று வயிற்றைக் கிழித்துக் கொள்ளலாமா?
  • தங்கக் குடத்துக்குப் பொட்டு இட்டுப் பார்த்தாற் போல்.
  • தங்கக் கொழு என்றால் நெஞ்சிலா இடித்துக் கொள்வது?
  • தங்கச்சி பிள்ளை தன் பிள்ளை ஆகுமா? தண்ணீர்க் குடமும் தன் குடம் ஆகுமா?
  • தங்கச்சி பிள்ளை தன் பிள்ளை ஆனால் தவத்துக்குப் போவானேன்.
  • தங்கச் செருப்பு ஆனாலும் தலைக்கு ஏறாது.
  • தங்கத் தூள் அகப்பட்டாலும் செங்கல் தூள் அகப்படாது.
  • தங்கத்தை உருக்கி விட்டது போல.
  • தங்கத்தைக் குவிக்கிறேன் என்றாலும் தன் புத்தி விடுகிறது இல்லை என்கிறான்.
  • தங்கத்தைத் தவிட்டுக்கு மாறுவதா?
  • தங்கத்தை விற்றுத் தவிடு வாங்கினது போல.
  • தங்கப் பெண்ணே, தாராவே, தட்டான் கண்டான் பொன் என்பான்; தராசிலே வைத்து நிறு என்பான்; எங்கும் போகாமலே இங்கேயே இரு.
  • தங்கம் எல்லாம் தவிட்டுக்கு மாறுகிறது.
  • தங்கம் செய்யாததைச் சங்கம் செய்யும்.
  • தங்கம் தரையிலே கிடக்கிறது; ஒரு காசு நார்த்தங்காய் உறி கட்டித் தொங்குகிறது.
  • தங்கம் தரையிலே; தவிடு பானையிலே.
  • தங்கம் புடத்தில் வைத்தாலும் தன் நிறம் போகாது.
  • தங்கம் விற்ற கையால் தவிடு விற்க வேணுமா?
  • தங்க முடி சூட்டினாலும் தங்கள் குணம் விடார் கசடர்.
  • தங்கமும் பொன்னும் தரையிலே; ஒரு காசு நார்த்தங்காய் உறியிலே.
  • தங்க வேலை அறியாத ஆசாரியும் இல்லை; தாய்ப் பால் குடிக்காத குழந்தையும் இல்லை.
  • தங்கின வியாழன் தன்னோடு மூன்று பேர்.
  • தச்ச வாசல் இருக்கத் தாளித்த வாசலாலே புறப்படுகிறது.
  • தச்சன் அடிக்கக் கடா இழுத்தது.
  • தச்சன் அடித்த தலைவாசல் எல்லாம் உச்சி கடிக்க உலாவித் திரிகிறான்.
  • தச்சன் அடித்த வாசலில் எல்லாம் தலை குனிகிறது.
  • தச்சன் கருமான் தள்ளுபடி, மற்றவை எல்லாம் ஏறுபடி.
  • தச்சன் கோணல் நிமிர்ந்தான்; தப்பிதச் சொல்லாகப் பேசாதே.
  • தச்சன் தொட்டு என்றால் தச்சத்தி அரிசி என்பாள்.
  • தச்சன் பெண்சாதி அறுத்தால் என்ன? கொல்லன் பெண்சாதி கூலிக்கு அறுத்தால் என்ன?
  • தச்சன் பெண்சாதி தரையிலே; கொல்லர் பெண்சாதி கொம்பிலே.
  • தச்சன் லொட்டு என்றால் அவன் பெண்டாட்டி துட்டு என்பான்.
  • தச்சன் வீட்டில் தயிரும் எச்சன் வீட்டில் சோறும் எப்படிச் சேரும்?
  • தச்சன் வீட்டில் பால் சோற்றை நக்காதே, வெள்ளாளா.
  • தச்சன் வீட்டுப் பாயசம்.
  • தசமி எண்ணெய் தந்தால் தேய்த்துக் கொள்ளலாம்; ஏகாதசி எண்ணெய் இரந்தும் தேய்க்கலாம்; துவாதசி எண்ணெய் தந்தாலும் கூடாது.
  • தசை கண்டு கத்தியை நாட்ட வேண்டும்.
  • தஞ்சம் என்ற பேரைக் கெஞ்ச அடிப்பதா?
  • தஞ்சம் என்று வந்தவனை வஞ்சித்தல் ஆகாது.
  • தஞ்சாவூர் எத்தனும் திருவாரூர் எத்தனும் கூடினாற் போல.
  • தஞ்சாவூருக்கப் போனக்கால், சண்டை கிண்டை வந்தக்கால், ஈட்டி கிட்டி உடைந்தக்கால், ஊசிக்கு இத்தனை இரும்பு தருகிறேன்.
  • தஞ்சி தாப்பாளு, தச்சப் பையன் கூத்தியார்.
  • தஞ்சையில் திருட இங்கிருந்தே பம்ப வேணுமா?
  • தட்சிணை இல்லாவிட்டாலும் அப்பத்தில், பார்த்துக் கொள்ளலாம்.
  • தட்சிணையோடே பட்சணமாம்.
  • தட்டத் தட்ட எள்ளு; கொட்டக் கொட்டக் கேழ்வரகு.
  • தட்டார்கள் புரட்டைக் கூற எட்டாறு வழியும் போதா.
  • தட்டார் தட்டினால் வாழ்வர்; தட்டாமல் போனால் தாழ்வார்.
  • தட்டாரச் சித்துத் தரையிலே; வண்ணாரச் சித்து வழியிலே.
  • தட்டாரச் சித்துத் தறிசித்து; வண்ணாரச் சித்துக்கு வராது.
  • தட்டாரப் பூச்சி தாழப் பறந்தால் தப்பாமல் மழை வரும்.
  • தட்டான் ஆத்தாளுக்குத் தாலி செய்தாலும் மாப்பொன்னில் காப்பொன் திருடுவான்.
  • தட்டான் இடத்தில் இருக்கிறது; அல்லது கும்பிடு சட்டியில் இருக்கிறது.
  • தட்டான் காப்பொன்னிலும் மாப்பொன் எடுப்பான்.
  • தட்டான் கொசு தடுமாறுகிறது போல.
  • தட்டான் தட்டினால் தட்டாத்தி துட்டு என்பாள்.
  • தட்டான் தாய்ப் பொன்னிலும் மாப்பொன் திருடுவாள்.
  • தட்டான் தாழப் பறந்தால் தப்பாமல் மழை வரும்.
  • தட்டான் பறந்தான் கிட்டமழை.
  • தட்டான் பொன் அறிவான்; தன் பெண்களுக்கு ஒன்று செய்யான்.
  • தட்டானிடம் இருந்தால் என்ன? கும்மிட்டியில் இருந்தால் என்ன?
  • தட்டானுக்குப் பயந்தல்லவோ, அணிந்தான் சிவன் சர்ப்பத்தை?
  • தட்டானும் செட்டியும் ஒன்று ஆனால் தங்கம் கொடுத்தவன் வாயிலே மண்.
  • தட்டானும் செட்டியும் தலைப்பட்டாற் போல.
  • தட்டானும் செட்டியும் கண்; சட்டியும் பானையும் மண்.
  • தட்டானைச் சேர்ந்த தறிதலை.
  • தட்டானைத் தலையில் அடித்து வண்ணாணை வழி பறித்தது.
  • தட்டிக் கொடுத்தால் தம்பி தலைவிரித்து ஆடுவான்.
  • தட்டிப் பேச ஆள்இல்லாவிட்டால் தம்பி சண்டப் பிரசண்டன்.
  • தட்டிப் போட்ட வடையைத் திருப்பிப் போட நாதி இல்லை.
  • தட்டிப் போட்ட வறட்டியைத் திருப்பிப் போட நாதி இல்லை.
  • தட்டினால் தட்டான்; தட்டா விட்டால் கெட்டான்.
  • தட்டுக் கெட்ட சால்ஜாப்பு.
  • தட்டுக் கெட்டு முறுக்குப் பாய்ந்து கிடக்கிறது.
  • தடவிப் பிடிக்க மயிர் இல்லை; அவள் பெயர் கூந்தல் அழகி.
  • தடவிப் பிடிக்க மயிர் இல்லை; அவன் பெயர் சவரிராஜப் பெருமாள்.
  • தடி எடுத்தவன் எல்லாம் வேட்டைக்காரனா?
  • தடி எடுத்தவன் தண்டல்காரன்.
  • தடிக்கு அஞ்சிக் குரங்கு ஆடினது போல.
  • தடிக்கு மிகுந்த மிடா ஆனால் என்ன செய்யலாம்?
  • தடிக்கு மிஞ்சின மாடா?
  • தடிக்கு மிஞ்சின மிடாவானால் என்ன செய்யலாம்?
  • தடித் திருவாரூர்.
  • தடி பிடிக்கக் கை இல்லை; அவன் பெயர் செளரியப் பெருமாள்.
  • தடி மழை விட்டும் செடி மழை நிற்கவில்லை.
  • தடிமனும் தலையிடியும் தன் தனக்கு வந்தால் தெரியும்.
  • தடியங்காய் திருடினவன் தோளைத் தடவிப் பார்த்துக் கொண்டானாம்.
  • தடுக்கில் பிள்ளை தடுக்கிலேயா?
  • தடுக்கின் கீழே நுழைந்ததால், கோலத்தின் கீழே நுழைகிறான்.
  • தடுங்கித் தள்ளிப் பேச்சுப் பேசுகிறது.
  • தடுக்கு விழுந்தால் தங்கப் போகிணி; எகிறி விழுந்தால் இருப்புச் சட்டி.
  • தடுக்கி விழுந்தால் பிடிக்குப் பாதி.
  • தடும் புடும் பயம் நாஸ்தி; நிஸப்தம் ப்ராண சங்கடம்.
  • தடைக்கு அஞ்சாத பாம்பு.
  • தண்ட சோற்றுக்காரன் குண்டு போட்டால் வருவான்.
  • தண்ட சோற்றுத் தடிராமன்.
  • தண்ட சோற்று ராமா, குண்டு போட்டு வாடா.
  • தண்டத்துக்கு அகப்படும்; பிண்டத்துக்கு அகப்படாது.
  • தண்டத்துக்குப் பணமும்திவசத்துக்குக்கறியும் அகப்படும்.
  • தண்டத்துக்குப் பணமும் திவசத்துக்குக் காசும் அகப்படும்.
  • தண்டத்துக்குப் பெற்றுப் பிண்டத்துக்கு வளர்த்தேன்.
  • தண்டத்துக்கு வந்தான் பண்டாரவாடையான்.
  • தண்டரிந்த முக்கு; தலைக்கு இரண்டு அமுக்கு.
  • தண்டிகை ஏறப் பணம் இருக்கிறது; தலையில் கூடத் துணி இல்லை.
  • தண்டில் போனால் இரட்டிப்புச் சம்பளம்.
  • தண்டிலே போனால் இரண்டிலே ஒன்று.
  • தண்டுக்கு ரொட்டி சுட்டுப் போடுகிறவன்.
  • தண்டு முண்டுக்காரனுக்குத் தயிறும் சோறும்; அடிபிடிக்காரனுக்கு ஆனமும் சோறும்.
  • தண்டு முண்டுக்காரனுக்குத் தயிறும் சோறும்; விசுவாசக்காரனுக்கு வெந்நீர்க் சோறு.
  • தண்டை இட அத்தை இல்லாவிட்டாலும் சண்டை இட அத்தை உண்டு.
  • தண்ணீர் இல்லாத வேளாண்மையும் தான் உழாத நிலமும் தரிசு.
  • தண்ணீர் உள்ள மட்டும் மீன் குஞ்சு துள்ளும்.
  • தண்ணீர் என்று சொன்னால் நெருப்பு அவியுமா?
  • தண்ணீர்க்குடம் உடைந்து தவியாய்த் தவிக்கையிலே கோவணத்தை அவிழ்த்துக் கொண்டு குதியாய்க் குதிக்கிறாயே!
  • தண்ணீர் கண்டாயா? பால் கண்டாயா?
  • தண்ணீர்க்குடம் உடைந்தாலும் ஐயோ! தயிர்க்குடம் உடைந்தாலும் ஐயோ!
  • தண்ணீர் காட்டினான்.
  • தண்ணீர் கிடக்கும் நாக்குத் தலை கீழாய்ப் புரளும்.
  • தண்ணீர் குடித்த வயிறும் தென்னோலை இட்ட காதும் சரி.
  • தண்ணீர் தகராறு, பிள்ளை பதினாறு.
  • தண்ணீர் தவளை குடித்ததும் குடியாததும், யார் அறிவார்?
  • தண்ணீர் பட்ட பாடு.
  • தண்ணீர் மிஞ்சினால் உப்பு; உப்பு மிஞ்சினால் தண்ணீர்.
  • தண்ணீர் வெந்நீர் ஆனாலும் நெருப்பை அவிக்கும்.
  • தண்ணீரில் இருக்கிற தவளை குடித்ததைக் கண்டதார்? குடியாததைக் கண்டதார்?
  • தண்ணீரில் இறங்கினால் தவளை கடிக்கும் என்கிறான்.
  • தண்ணீரில் இறந்தவரிலும் சாராயத்தில் இறந்தவர் அதிகம்.
  • தண்ணீரில் உள்ள தவளை தண்ணீர் குடித்ததோ, இல்லையோ?
  • தண்ணீரில் மூச்சு விட்டால் தலைக்கு மேலே.
  • தண்ணீரில் விழுந்தவர்களுக்கும் தடுமாறி நிற்பவர்களுக்கும் ஆனைப்பலம் வந்து விடும்.
  • தண்ணீரிலே தடம் பிடிப்பான்.
  • தண்ணீரிலே போட்டாலும் நனையாது; கரையில் போட்டாலும் காயாது.
  • தண்ணீரிலேயே தன் பலம் காட்டுகிறது.
  • தண்ணீரிலே விளைந்த உப்புத் தண்ணீரிலே கரைய வேண்டும்.
  • தண்ணீருக்குள் கிடைக்கும் தவளை தண்ணீரைக் குடித்ததும் குடிக்காததும் யாருக்குத் தெரியும்?
  • தண்ணீரின் கீழே மூச்சுவிட்டால் தலைக்கு மேலே.
  • தண்ணீருக்குள் குசுவினாலும் தலைக்கு மேலே வந்துவிடும்.
  • தண்ணீரும் கோபமும் தாழ்ந்த இடத்திலே.
  • தண்ணீரும் தாமரையும் போல.
  • தண்ணீரும் பாசியும் கலந்தாற் போல.
  • தண்ணீரும் மூன்று பிழை பொறுக்கும்.
  • தண்ணீரைத் தடிகொண்டு அடித்தாலும் தண்ணீரும் தண்ணீரும் விலகுமா?
  • தண்ணீரையும் தாயையும் பழிக்கலாமா?
  • தணிந்த வில்லுத்தான் தைக்கும்.
  • தத்திக் குதித்துத் தலைகீழே விழுகிறது.
  • தத்தி விழுந்தால் தரையும் பொறுக்காது.
  • தத்துவம் அறிந்தவன் தவசி.
  • தந்தவன் இல்லை என்றால் வந்தவன் வழியைப் பார்க்கிறான்.
  • தந்தனம் பாடுகிறான்.
  • தந்தானா என்பது பாட்டுக்கு அடையாளம்.
  • தந்தால் ஒன்று; தராவிட்டால் ஒன்று
  • தந்தி தாழ்ப்பாள் தச்சப் பையன் கூத்தியார்.
  • தந்திரத்தால் தேங்காய் உடைக்கலாமா?
  • தந்திரம் படைத்தவன் தரணி முழுவதையும் ஆள்வான்.
  • தந்திரம் பெரிதா? மந்திரம் பெரிதா?
  • தந்தை எவ்வழி, தனையன் அவ்வழி.
  • தந்தைக்குத் தலைப் பிள்ளை, தாய்க்குக் கடைப் பிள்ளை.
  • தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை.
  • தப்படி எடுத்துத் தாடையில் போடாதே.
  • தப்பில் ஆனவனை உப்பிலே போடு.
  • தப்பு அடித்தவன் தாதன்; சங்கு ஊதினவன் ஆண்டி.
  • தப்புப் புடலுக்கு நல்ல ருசி.
  • தப்பும் திப்பும் தாறுமாறும்.
  • தபசே அணிகலன்; தாழ்மையே மேன்மை.
  • தம் இனம் தம்மைக் காக்கும்; வேலி பயிரைக் காக்கும்.
  • தம்பி உடையான் படைக்கு அஞ்சான்.
  • தம்பி உழுவான்; மேழி எட்டாது.
  • தம்பி கால் நடையிலே; பேச்சுப் பல்லக்கிலே.
  • தம்பி குசு தவிடு மணக்கும்; வேற்றுக் குசுவாக இருக்கிறது, ஏற்றடி விளக்கு.
  • தம்பி சமர்த்தன்; உப்பு இல்லாமல் கலக் கஞ்சி குடிப்பான்.
  • தப்பி சிம்புகிற சிம்பலுக்குத் தயிரும் சோறும் சாப்பாடு
  • தம்பி சோற்றுக்குச் சூறாவளி: வேலைக்கு வாரா வழி.
  • தம்படி நாஸ்தி; தடபுடல் ஜாஸ்தி.
  • தம்பி தலை எடுத்துத் தறி முதலும் பாழாச்சு.
  • தம்பி தாய் மொழி கற்கத் தாளம் போடுகிறான்; அண்ணன் அந்நிய மொழியிலே ஆர்ப்பாட்டம் செய்கிறானாம்.
  • தம்பி தெள்ளு மணி; திருட்டுக்கு நவமணி.
  • தம்பி படித்த படிப்புக்குத் தயிரும் பழையதுமாம்; ஈரவங்காயமாம்,எலுமிச்சங்காய் ஊறுகாயாம்.
  • தம்பி பள்ளிக்கூடத்தான்.
  • தம்பி பிடித்த முயலுக்கு மூன்றேகால்.
  • தம்பி பிள்ளையாண்டான் அலுவல், தலை சொறிய நேரம் இல்லை.
  • தம்பி பிறக்கத் தரைமட்டம் ஆச்சு.
  • தம்பி பெண்டாட்டி தன் பெண்டாட்டி.
  • தம்பி பேச்சைத் தண்ணீரில்தான் எழுத வேண்டும்.
  • தம்பி மொண்டது சமுத்திரம் போல.
  • தம்பி ரோசத்தில் ராஜபாளயத்தான்.
  • தம்பி வெள்ளோலை வாசிக்கிறான்.
  • தம்பி ஸ்ரீரங்கத்தில் கோதானம் கொடுக்கிறான்; தன்னைப் பெற்ற தாய் கும்பகோணத்தில் கெண்டிப் பிச்சை எடுக்கிறாள்.
  • தம்ளர் தீர்த்தம் இல்லை; பேர் கங்கா பவானி.
  • தமக்கு மருவார் தாம்.
  • தமக்கு மூக்குப் போனாலும் எதிரிக்குக் சகுனப்பிழை வேண்டும்.
  • தமிழுக்கு இருவர் கதி.
  • தமிழுக்கு இருவர்; தத்துவத்துக்கு ஒருவர்.
  • தமையன் தந்தைக்குச் சமம்; தம்பி பிள்ளைக்குச் சமம்.
  • தயிர் குடிக்க வந்த பூனை சட்டியை நக்குமா?
  • தயிர்ப் பானை உடைந்தால் காக்கைக்கு விருந்து.
  • தயிர்ப்பானையை உடைத்துக் காகத்துக்கு அமுது இட்டாற் போல.
  • தயிர்ப் பானையை உடைத்து நாய்களுக்கு பங்கு வைத்தாற் போல.
  • தயிருக்குச் சட்டி ஆதாரம்; சட்டிக்குத் தயிர் ஆதாரம்.
  • தயிரும் பழையதும் கேட்டான்; கயிறும் பழுதையும் பெற்றான்.
  • தயை தாக்ஷிண்யம் சற்றாகிலும் இல்லை.
  • தர்மத்துக்கு அழிவு சற்றும் வராது.
  • தர்மத்துக்கு உள்ளும் பாவத்துக்குப் புறம்பும்.
  • தர்மத்துக்குத் தாழ்ச்சி வராது.
  • தர்மத்துக்குத் தானம் பண்ணுகிற மாட்டைப் பல்லைப் பிடித்துப் பதம் பார்க்கிறதா?
  • தர்மத்தைப் பாவம் வெல்லாது.
  • தர்ம புத்திரனுக்குச் சகுனி தோன்றினாற் போல.
  • தர்மம் உள்ள இடத்தில் ஜயம்.
  • தர்மம் கெடின் நாடு கெடும்.
  • தர்மம் தலை காக்கும்.
  • தர்மமே ஜயம்.
  • தரகுக்காரப் பயலுக்குத் தன் காடு பிறன் காடு ஏது?
  • தரத்தர வாங்கிக் கொள்ளுகிறாயா? தலையை முழுகிப் போட்டுப் போகட்டுமா?
  • தராதரம் அறிந்து புராதனம் படி.
  • தரித்திரப் பட்டாலும் தைரியம் விடாதே.
  • தரித்திரப் பட்டி மகன் பேர் தனபால் செட்டி.
  • தரித்திரம் அறியாப் பெண்டாட்டியால் பயன் இல்லை.
  • தரித்திரம் பிடித்தவள் தலைமுழுகப் போனாளாம்; அப்போதே பிடித்ததாம் மழையும் தூற்றலும்.
  • தரித்திரம் பிடித்தவள் தலை முழுகப் போனாளாம்; ஏகாதசி விரதம் எதிரே வந்ததாம்.
  • தரித்திரன் சந்தைக்குப் போனால் தங்கமும் பித்தளை ஆகும்.
  • தரித்திரனுக்கு உடம்பெல்லாம் வயிறு.
  • தரித்திரனுக்குப் பணம் கிடைத்தது போல.
  • தரித்திரனுக்கு விஷம் கோஷ்டி.
  • தரைக்குப் பண்ணாடி; மலைக்கு மண்ணாடி.
  • தரையில் படுத்தவன் பாய்க்குப் போவான்; * * பாயில் படுத்தவன் தரைக்கு வருவான்.
  • தரக்கு வந்தால் சரக்கு விற்கும்.
  • தரை நீக்கிக் கரணமா?
  • தரையில் தேளும் தண்ணீரில் தேளி மீனும் கொட்டியது போல.
  • தலை அளவும் வேண்டாம்; அடி அளவும் வேண்டாம்; குறுக்கே அள அடா படியை.
  • தலை ஆட்டித் தம்பிரான்.
  • தலை இடிக்குத் தலையணையை மாற்றி ஆவது என்ன?
  • தலை இடியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தெரியும்.
  • தலை இருக்க வால் ஆடுமா?
  • தலை இருக்கிற இடத்தில் கழுத்து வரட்டும் பார்த்துக் கொள்வோம்.
  • தலை எழுத்து இருக்கத் தந்திரத்தால் ஆவது என்ன?
  • தலை எழுத்துத் தலையைச் சிரைத்தாற் போகுமா?
  • தலை எழுத்தை அரி என்று சொல்வார், அதல்ல.
  • தலை எழுத்தோ, சிலை எழுத்தோ?
  • தலைக்கு ஏற்ற குல்லாயா? குல்லாய்க்கு ஏற்ற தலையா?
  • தலைக்கு ஏறினால் தனக்குத் தெரியும்.
  • தலைக்குத் தலை நாட்டாண்மையாய் இருக்கிறது.
  • தலைக்குத் தலை பண்ணாட்டு.
  • தலைக்குத் தலை மூப்பு.
  • தலைக்குத் தலை பெரிய தனம்; உலைக்குத்தான் அரிசி இல்லை.
  • தலைக்கு மிஞ்சிய தலைப்பாகை.
  • தலைக்கு மிஞ்சின ஆக்கினை இல்லை; காலுக்கு மிஞ்சின உபகாரம் இல்லை.
  • தலைக்கு மிஞ்சின ஆக்கினை இல்லை; கோவணத்திற்கு மிஞ்சின தரித்திரம் இல்லை
  • தலைக்கு மிஞ்சின மிடா.
  • தலைக்கு முடியோ? காலுக்கு முடியோ?
  • தலைக்கு மேல் ஐசுவரியம் இருந்தாலும் தலையணை மேல் உட்காராதே.
  • தலைக்கு மேல் வெள்ளம் போகும் போது சாண் போனால் என்ன? முழம் போனால் என்ன?
  • தலைக்கு மேலே கை காட்டுகிறதா?
  • தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போச்சு.
  • தலைக்கு வந்தது மயிரோடே போச்சு.
  • தலைக்கு வேறே, தாடிக்கு வேறா?
  • தலை கண்டால் பெண் சிணுங்கும்.
  • தலை கழன்றவனுக்கு உலகமெல்லாம் சுற்றும்.
  • தலை கழுத்தில் நிற்கவில்லை.
  • தலைகீழ் நின்றாலும் வராது.
  • தலைகீழ்ப் பாடம்.
  • தலைகீழாய் இருந்து தபசு செய்தாலும் கூடுகிற காலந்தான் வந்து கூட வேண்டும்.
  • தலைகீழாய் நிற்கிறான்.
  • தலைச்சன் பிள்ளைக்காரி இடைச்சன் பிள்ளைக்காரிக்குத் தைரியம் சொன்னாளாம்.
  • தலைச்சன் பிள்ளைக்காரிக்குத் தாலாட்டும், தாலி அறுத்தவளுக்கு ஒப்பாரியும் தாமே வரும்.
  • தலைச்சன் பிள்ளைக்கு இல்லாத தண்டையும் சதங்கையும் இடைச்சன் பிள்ளைக்கு வந்தனவா?
  • தலைச்சனுக்குத் தாலாட்டும் கணவன் செத்தால் அழுகையும் தாமே வரும்.
  • தலைச் சுமை தந்தான் என்று தாழ்வாய் எண்ணாதே.
  • தலை சுழன்றவனுக்கு உலகமெல்லாம் சுற்றும்.
  • தலை சொறியக் கொள்ளி தானே வைத்துக் கொண்டது.
  • தலை சொறியக் கொள்ளியா?
  • தலை தப்பியது தம்பிரான் புண்ணியம்.
  • தலை தெரியாமல் எண்ணெய் தேய்ப்பதா?
  • தலை தெரியாமல் தத்தித் தடவுகிறது.
  • தலை தெறிக்க ஓடி வருதல்.
  • தலை நோய்க்குத் தலையணையைத் திருப்பிப் போட்டால் தீருமா?
  • தலை நோவும் தரித்திரமும் தனக்கு வந்தால் தெரியும்.
  • தலைப்பாகை மாற்றுபவன்.
  • தலைப் பிள்ளை ஆண்; தப்பினால் பெண்.
  • தலைப் புறத்தைத் தந்தால் தருவேன் மருந்துப் பையை.
  • தலை பெரிது என்று கல்லில் முட்டிக் கொள்ளலாமா?
  • தலை போக வந்தது தலைப்பாகையோடு போயிற்று
  • தலை போனாலும் விலையைச் சொல்லாதே.
  • தலை மயக்கமே சர்வ மயக்கம்.
  • தலைமாட்டில் சொல்வன் தலையணை மந்திரம்.
  • தலைமாட்டிற்குக் கொள்ளி தானே தேடிக் கொண்டாய்.
  • தலைமுறை இல்லாத தாழ்வு.
  • தலைமுறை தலைமுறையாய் மொட்டை; அவள் பேர் கூந்தலழகி.
  • தலைமேல் அம்பு பறந்தாலும் நிலையிற் பிரிதல் ஆகாது.
  • தலைமேல் ஓடின வெள்ளம் சாண் ஓடினால் என்ன? முழம் ஓடினால் என்ன?
  • தலைமேலே இடித்தால்தான் குனிவான்.
  • தலைமேலே தலை இருக்கிறதா?
  • தலைமொட்டை; கூந்தலழகி என்று பெயர்.
  • தலையார் உறவு தலைக்கு.
  • தலையாரியும் அதிகாரியும் ஒன்றானால் சம்மதித்தபடி திருடலாம்.
  • தலையாரி வீட்டில் திருடி அதிகாரி வீட்டில் ஒளித்தது போல.
  • தலையாரி வீட்டுக் கோழிமுட்டை குடியானவன் வீட்டு அம்மியை உடைக்கும்.
  • தலையாலே மலை பிளப்பான்.
  • தலையில் இடித்த பின் தாழக் குனிவான்.
  • தலையில் இடித்தும் குனியாதா?
  • தலையில் எழுத்து இருக்கத் தந்திரத்தால் வெல்லலாமா?
  • தலையில் எழுத்துக்குத் தாய் என்ன செய்வாள்?
  • தலையில் களிமண்ணா இருக்கிறது?
  • தலையில் விடித்தால் அரைப்பு; இலையில் விடித்தால் பருப்பு.
  • தலையிலே, இடி விழ.
  • தலையிலே கொள்ளிக் கட்டையால் சொறிந்து கொள்ளலாமா?
  • தலையிலே விறகுக் கட்டு; காலிலே தந்தப் பாதுசையா?
  • தலையும் தலையும் பொருதால் மலையும் வந்து பொறுக்கும்.
  • தலையும் நனைத்துக் கட்டியும் நாட்டின பிறகா?
  • தலையைச் சுற்றிப் பிடிக்கிறான்.
  • தலையைச் சுற்றியும் வாயாலே.
  • தலையைச் சுற்றுகிற மாடும் கூரையைப் பிடுங்கித் தின்கிற மாடும் குடும்பத்துக்கு ஆகா.
  • தலையைத் தடவி மூளையை உரிய வேண்டாம்.
  • தலையைத் திருகி உரலில் போட்டு இடிக்கச்சே, சங்குசக்கரம் கடுக்கள் உடைந்து போகப் போகிறது என்றானாம்.
  • தலையும் நனைத்தாச்சு; கத்தியும் வைத்தாச்சு.
  • தலையை வெட்டிச் சமுத்திரத்தின்மேற் போடலாமா?
  • தலைவலிக்குத் தலை அணையைத் தானே மாற்றிப் போட்டாற் போல.
  • தலைவலி போகத் திருகுவலி வந்தது.
  • தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தெரியும்.
  • தலைவலியும் பசியும் தனக்கு வந்தால் தெரியும்.
  • தலைவன் சொற் கேள்.
  • தலைவன் நிற்கத் தண்டு நிற்கும்.
  • தலைவன் மயங்கச் சர்வமும் மயங்கும்.
  • தவசிக்குத் தயிரும் சாதமும் விசுவாசிக்கு வெந்நீரும் பருக்கையும்.
  • தவசிப்பிள்ளை நமசிவாயம் கையாசாரம்.
  • தவசே அணிகலன்; தாழ்மையே மேன்மை.
  • தவத்தில் இருந்தால் தலைவனைக் காணலாம்.
  • தவத்து அளவே ஆடுமாம் தான் பெற்ற செல்வம்.
  • தவத்துக்கு ஒருவர்; கல்விக்கு இருவர்; வழிக்கு மூவர்.
  • தவத்துக்கு ஒருவர்; தமிழுக்கு இருவர்.
  • தவத்தோர் மனம் அழுங்கச் செய்யக் கூடாது.
  • தவம் இருக்க அவம் செய்தாற் போல்.
  • தவழும் குழந்தைக்கு நடக்கும் குழந்தை யமன்.
  • தவளை கத்தினால் உடனே மழை.
  • தவளை கூவிச் சாகும்.
  • தவளை தண்ணீருக்கு இழுக்கிறது; ஓந்தி மேட்டுக்கு இழுக்கிறது.
  • தவளை தன் வாயால் கெடும்.
  • தவளை தாமரைக்குஅருகில் இருந்தும் அதன் தேனை உண்ணாது.
  • தவளை வாழ்வும் தனிசு வாழ்வும் ஆகா.
  • தவிட்டுக்கு ஆசைப்பட்டுத் தீட்டிய அரிசியை நாய் கொண்டு போனதாம்.
  • தவிட்டுக்கு வந்த கைதான் தங்கத்துக்கும் வரும்.
  • தவிட்டுக்கு வாங்கிய பிள்ளை தன் பிள்ளை ஆகுமா?
  • தவிட்டுப் பானைக்குள்ளே எலி குமரி ஆனது போலே.
  • தவிட்டை நம்பிப் போகச் சம்பா அரிசியை நாய் கொண்டு போயிற்று.
  • தவிடு அள்ளின கை தனம் அள்ளும்.
  • தவிடு தவிடு என்றால் குருடு குருடு என்கிறான்.
  • தவிடு தின்கிறதில் ஒய்யாரம் வேறா?
  • தவிடு தின்பவன் அமுதை விரும்புவானா?
  • தவிடு தின்பவனை எக்காளம் ஊதச் சொன்னாற் போல.
  • தவிடு தின்னும் அம்மையாருக்கு விளக்குப் பிடிக்க ஓர் ஆளா?
  • தவிடு தின்னும் ராஜாவுக்கு முறம் பிடிப்பவன் மந்திரி.
  • தவித்த வாய்க்குத் தண்ணீர் தராத பாவி.
  • தழைத்த மரத்துக்கு நிழல் உண்டு; பிள்ளை பெற்றவளுக்குப் பால் உண்டு.
  • தழைத்த மரம் வளையாத கணக்கும் உண்டோ?
  • தழைந்து போனால் குழைந்து வருவான்.
  • தள்ளத் தள்ளத் தாழ்ப்பாளைப் பிடிப்பானேன்?
  • தள்ளத் தள்ளத் தாழ்ப்பாளை மெள்ள மெள்ளத் திறப்பானேன்?
  • தள்ளரிய தாறு வந்து தாய் வாழையைக் கெடுத்தாற் போல.
  • தள்ளாதவன் மனைவி பிள்ளைத்தாய்ச்சி; தள்ளிவிட்டு ஓடுதாம் குள்ளநரி.
  • தள்ளாவிட்டால் ஆசாரம் இல்லை; இல்லாவிட்டால் உபசாரம் இல்லை.
  • தள்ளாதவனுக்கு ஆசாரம் இல்லை; தரித்திரனுக்கு உபசாரம் இல்லை.
  • தள்ளி ஊட்டினது தலைக்குட்டி.
  • தள்ளிப் பேசினாலும் தழுவிக் குழைகிறது.
  • தளபதி இல்லாத தளம், கரை இல்லாத குளம்.
  • தளர்ந்த கிழவனுக்குச் சோறும், இடிந்த சுவருக்கு மண்ணும் உண்டானால் சில நாட்கள் நிற்கும்.
  • தறுதலைக்குத் தயவு ஏது?
  • தறுதலைக்கு ராஜா சவுக்கடி.
  • தன் அழகு தனக்குத் தெரியாது.
  • தன் அறிவு வேணும்; இல்லை என்றால் சொல்லறிவு வேணும்.
  • தன் ஆள் இல்லா வேளாண்மையும்; தான் உழாத நிலமும் தரிசு.
  • தன் இச்சையை அடக்காவிட்டால் அது தன்னையே வருத்தும்.
  • தன் இனம் தன்னைக் காக்கும்; வேலி பயிரைக் காக்கும்.
  • தன் உயிர் கருப்பட்டி.
  • தன் உயிர் தனக்குச் சர்க்கரை.
  • தன் உயிர் போல மண் உயிர் காக்க
  • தன் உயிரைத் தின்கிறான்.
  • தன் உயிரைப் போல மண்ணுயிருக்கு இரங்கு.
  • தன் ஊர் கிழக்கு, தங்கின ஊர் மேற்கு, வேட்டகம் தெற்கு, வேண்டா ஊர் வடக்கு.
  • தன் ஊர்ச் சுடுகாட்டுக்கும் அயல் ஊர் ஆற்றுக்கும் அஞ்ச வேண்டும்.
  • தன் ஊரில் தாய் அடிக்காதவன் அயலூரில் ஆனை அடித்தானாம்.
  • தன் ஊருக்கு அன்னம், பிற ஊருக்குக் காகம்.
  • தன் ஊருக்கு ஆனை; அயலூருக்குப் பூனை.
  • தன் ஊருக்குக் காளை; அயல் ஊருக்குப் பூனை.
  • தன் ஊருக்குப் புலி; அசலூருக்கு நரி.
  • தன் கண் இரண்டும் போனாலும் அயலான் கண் ஒன்றாவது போகவேண்டும்.
  • தன் கண் தனக்குத் தெரியாது.
  • தன் கண்ணைக் கொடுத்து வெங்கண்ணை வாங்க வேண்டும்.
  • தன் கஷ்டத்தை விடப் பெண் கஷ்டம் பொல்லாது.
  • தன் காசு செல்லாவிட்டால் தட்டானைக் கட்டி அடித்தானாம்.
  • தின் காயம் தனக்குத் தித்திப்பு.
  • தன் காரியதுரந்தான், பிறர் காரியம் வழவழ என்று விடுகிறவன்.
  • தன் காரியப் புலி.
  • தன் காரியம் என்றால் தன் சீலையும் பதைக்கும்.
  • தன் காரியம் தனக்குத் தித்திப்பு.
  • தன் காரியம் பாராதவன் சதைக்கு ஒரு புழுப் புழுப்பான்.
  • தன் காரியம் ஜரூர், சாமி காரியம் வழவழா.
  • தன் கால் பெருவிரலைப் பார்த்து நடக்க வேண்டும்.
  • தன் காலைத் தானே கும்பிட்டுக் கொள்ளலாமா?
  • தன் கீர்த்தியை விரும்பாதவனைத் தள்ளிவிடு.
  • தன் குஞ்சு என்று வளர்க்குமாம், குயிற் குஞ்சைக் காகம்.
  • தன் குணம் போல் தனக்கு வரும் வாழ்வு.
  • தன் குற்றம் இருக்கப் பிறர் குற்றம் பார்க்கிறதா?
  • தன் குற்றம் கண்ணுக்குத் தோன்றாது.
  • தன் குற்றம் தனக்குத் தெரியாது.
  • தன் குற்றம் பார்ப்பவர் இங்கு இல்லை.
  • தன் குற்றம் முதுகில்; பிறர் குற்றம் எதிரில்.
  • தன் குற்றமும் பெண்டாட்டி நாற்றமும் தெரியா.
  • தன் குற்றமும் முதுகும் தனக்குத் தெரியா.
  • தன் கை ஆயுதம் பிறன் கையிற் கொடுப்பவன் பதர்.
  • தன் கைத் தவிடு உதவுவது போலத் தாயார் கைத்தனம் உதவாது.
  • தன் கையே கண்ணைக் குத்தினாற் போல.
  • தன் கையே தனக்கு உதவி.
  • தன் கொல்லையில் கீரையை வைத்துக் கொண்டு அசல் வீட்டுக்குப் போவனேன்?
  • தன் சோற்றில் உள்ள கல்லைப் பொறுக்கமாட்டாதவன் சொக்கனார் கோயில் மதிற் கல்லைப் பிடுங்கப் போனானாம்.
  • தன் சோற்றைத் தின்று தரையில் இருந்தால் வீண் சொல் கேட்க விதியோ!
  • தன் சோறு தின்று, தன் புடைவை கட்டி, விண் சொல் கேட்க விதியோ?
  • தன் தப்புப் பிறருக்குச் சந்து.
  • தன் தலையில் அக்ஷதை போட்டுக் கொள்கிறான்.
  • தன் தார் தார் பரதார புத்திரன்.
  • தன் தொழிலைப் பாராதவனுக்குத் தலையளவு பஞ்சம்.
  • தன் நாயை உசுப்பியே தன்னைக் கடிக்கச் செய்யலாம்.
  • தன் நாற்றத்தைத் தானே. கிளப்பிக் கொள்கிறதா?
  • தன் நிலத்தில் குறுமுயல் தந்தியிலும் வலிது.
  • தன் நிழல் தன்னைக் காக்கும்.
  • தன் நெஞ்சு அறியாத பொய் இல்லை; தாய் அறியாத சூல் இல்லை.
  • தன் நெஞ்சே தன்னைச் சுடும்.
  • தன் நோய்க்குத் தானே மருந்து.
  • தன் பணம் செல்லா விட்டால் தட்டானைக் கட்டி அடித்தானாம்.
  • தன் பல்லைக் குத்திப் பிறர் மூக்கில் வாசனை காட்டுவது போல.
  • தன் பல்லைக் குத்தித் தன்னையே நாத்திக் கொள்ளலாமா?
  • தன் பல்லைப் பிடுங்கிப் பிறர் வாயில் வைக்கலாமா?
  • தன் பலம் கண்டு அம்பலம் ஏற வேண்டும்.
  • தன் பாவம் தவினோடே.
  • தன் பானை சாயப் பிடிக்கிறது இல்லை.
  • தன் பிள்ளை என்று தலைமேல் வைத்துக் கொள்ளலாமா?
  • தன் பிள்ளைக்குப் பதைக்காதவள் சக்களத்தி பிள்ளைக்குப் பதைப்பாளா?
  • தன் பிள்ளையைத் தான் அடிக்கத் தலையாரியைச் சீட்டுக் கேட்கிறது போல.
  • தன் மகன் போனாலும் குற்றம் இல்லை; மருமகள் தாலி அறுக்க வேண்டும்.
  • தன் மனம் பொன் மனம்.
  • தன் மா ஆனால் தின்னாளோ? தானே வாரி மொக்காளோ
  • தன் முதுகில் அழுக்கு இருப்பது தெரியாமல் பிறன் முதுகில் அழுக்கு அழுக்கு என்பது போல.
  • தன் முதுகு ஒரு போதும் தனக்குத் தெரியாது.
  • தன் மூக்கு அறுபட்டாலும் எதிரிக்குச் சகுனப் பிழை.
  • தன்மை உடைமை தலைமை.
  • தன் வயிற்றைத் தான் உலர வைக்கலாமா?
  • தன் வாய்க் கஞ்சியைக் கவிழ்த்துப் போட்டான்.
  • தன் வாயிலே சீதேவி, முன் வாயிலே மூதேவி.
  • தன் வாயால் தவளை கெட்டது.
  • தன் வாயால்தான் கெட்டதாம் ஆமை.
  • தன் வாயால் தான் கெட்டான்.
  • தன் வாலைச் சுற்றிக் கொள்ளும் நாய் போல.
  • தன் வினை தன்னைச் சுடும்; ஒட்டப்பம் வீட்டைச் சுடும்.
  • தன் வீட்டு அகமுடையான் தலை மாட்டிலும் அசல் வீட்டு அக முடையான் கால் மாடும் நலம்.
  • தன் வீட்டுக் கதவை இரவல் கொடுத்துவிட்டு விடிய விடிய நாய் காத்தாளாம்.
  • தன் வீட்டுக் கதவைப் பிடுங்கி அயல் வீட்டுக்கு வைத்தாற் போல.
  • தன் வீட்டுக்குத் தவிடு இடிக்கவில்லையாம்; ஊரார் வீட்டுக்கு இரும்பு இடிக்கப் போனாளாம்.
  • தன் வீட்டுக்கு வந்த விருந்தாளியை அசல் வீட்டுக்குப் போகச் சொன்னால் போவானா?
  • தன் வீட்டு நாய் என்று தாவ விடுவதா?
  • தன் வீட்டுப் படலை இரவல் கொடுத்துவிட்டு விடிய விடிய நாய் காத்தானாம்.
  • தன் வீட்டு விளக்கு என்று முத்தம் இடலாமா?
  • தன் வீட்டு விளக்குத் தன்னைச் சுடாதா?
  • தன் வீடு தவிர அசல் வீட்டுக்கு மேட்டு வரி என்றான்.
  • தன்னது தன்னது என்றால் குசுவும் மணக்கும்.
  • தன்னந் தனியே போகிறாள்; திமிர் பிடித்து அலைகிறாள்.
  • தன்னவன் செய்கிறது மன்னனும் செய்யான்.
  • தன்னவன் தனக்கானவனாய் இருந்தால் தலைப் பாதியில் இருந்தால் என்ன? கடைப் பந்தியில் இருந்தால் என்ன?
  • தன்னால் இல்லாத வேளாண்மையும் தான் உழாத நிலமும் தரிசு.
  • தன்னால் தான் கெட்டான் பத்மாசுரன்.
  • தன்னாலே தாழ் திறந்தால் தச்சன் என்ன செய்கிறது.
  • தன்னாலே தான் கெட்டால் அண்ணாவியார் என்ன செய்வார்.
  • தன்னில் எளியது தனக்கு இரை.
  • தன்னை அழுத்தினது சமுத்திரம்.
  • தன்னை அறிந்தவன் தலைவனை அறிவான்.
  • தன்னை அறிந்தவன் தானே தலைவன்.
  • தன்னை அறிந்து பின்னைப் பேசு.
  • தன்னை அறியாச் சன்னதம் உண்டா?
  • தன்னை அறியாதவன் தலைவனை அறியான்.
  • தன்னை அறியாப் பேயாட்டம் உண்டா?
  • தன்னை இகழ்வாரைப் பொறுத்தலே தலையாம்.
  • தன்னை ஒளித்து ஒரு வஞ்சனை இல்லை.
  • தன்னைக் கட்டக் கயிறு யானை தானே கொடுத்தாற் போல்.
  • தன்னைக் காக்கிற் கோபத்தைக் காக்க வேண்டும்.
  • தன்னைக் கொல்ல வந்தது ஆயினும் பசுவைக் கொல்லல் ஆகாது.
  • தன்னைக் கொல்லவந்த பசுவைத் தான் கொன்றால்பாவம் இல்லை.
  • தன்னைச் சிரிப்பது அறியாதாம் பல்லாவரத்துக் குரங்கு
  • தன்னைச் சிரிப்பாரைத் தான் அறியான்.
  • தன்னைத் தானே பழிக்குமாம். தென்ன மரத்திலே குரங்கு இருந்து,
  • தன்னைத் தானே மெச்சிக் கொள்ளுமாம் தவிட்டுக் கொழுக்கட்டை.
  • தன்னைப் பணிவாரைத் தான் பணியக் காலம் வந்தது.
  • தன்னைப் பாடுவான் சம்பந்தன்; என்னைப் பாடுவான் அப்பன்; பொன்னைப் பாடுவான் சுந்தரன்.
  • தன்னைப் பார்த்துச் சிரிக்கவில்லையாம் தென்னமரத்துக் குரங்கு; பார்த்துப் பார்த்துச் சிரிக்கிறதாம் பலா மரத்துக் குரங்கை.
  • தன்னைப் புகழ்தலும் தரும் புலவோர்க்கே.
  • தன்னைப் புகழ்வானும் சாண் ஏறி நிற்பானும் பொன்னைப் புதைத்துப் போவானும் பேய்.
  • தன்னைப் புகழாத கம்மாளன் இல்லை.
  • தன்னைப் புகழாதவரும் இல்லை; தனித்த இடத்தில் குசுவாத வரும் இல்லை.
  • தன்னைப் பெற்ற ஆத்தாள் கிண்ணிப் பிச்சை எடுக்கிறாள்; தம்பி கும்பகோணத்தில் கோதானம் பண்ணுகிறான்.
  • தன்னைப் பெற்ற தாய் கிண்ணிப்பிச்சை வாங்குகிறாள்; தங்கத்தாலே சரப்பளி தொங்க ஆடுகிறதாம்.
  • தன்னைப் பெற்றவள் கொடும்பாவி; தன் பெண்ணைப் பெற்றவள் மகராசி.
  • தன்னைப் போல வேணுமாம் தவிட்டுக்குக் கட்டை.
  • தனக்காகப் புத்தி இல்லை; பிறத்தியார் சொல் கேட்கிறதும் இல்லை.
  • தனக்கு அழகு மொட்டை; பிறர்க்கழகு கொண்டை.
  • தனக்கு அழகு மொட்டை, பிறர்க்கு அழகு கொண்டை.
  • தனக்கு ஆகாத பானை உடைந்தால் என்ன? இருந்தால் என்ன?
  • தனக்கு இல்லாத அழகு தண்ணீர்ப் பானையைப் பார்த்தால் தீருமா?
  • தனக்கு இன்னா, இன்னா பிறர்க்கு.
  • தனக்கு உகந்த ஊணும் பிறர்க்கு உகந்த கோலமும்.
  • தனக்கு உண்டு; எதிரிக்கு இல்லை.
  • தனக்கு உதவாத பாலைக் கொட்டிக் கவிழ்த்தாளாம்.
  • தனக்கு உதவாத பிள்ளை ஊருக்கு உதவும்.
  • தனக்கு எளிய சம்பந்தம்; விரலுக்குந் தகுந்த வீக்கம்.
  • தனக்கு எளியது சம்பந்தம்; தனக்குப் பெரியது விம்மந்தம்.
  • தனக்கு என்றால் பிள்ளையும் களை வெட்டும்.
  • தனக்கு என்றால் புழுக்கை கலம் கழுவி உண்ணான்.
  • தனக்கு என்று அடுப்பு மூட்டித் தான் வாழும் காலத்தில் வயிறும் சிறுக்கும்; மதியும் பெருக்கும்.
  • தனக்கு என்று இருந்தால் சமயத்துக்கு உதவும்.
  • தனக்கு என்று ஒருத்தி இருந்தால் தலைமாட்டில் இருந்து அழுவாள்.
  • தனக்கு என்று கொல்ல நாய் வெடுக்கென்று பாயும்.
  • தனக்கு என்ன என்று இருக்கல் ஆகாது; நாய்க்குச் சோறு இல்லை ஆயின்.
  • தனக்கு ஒன்று, பிறத்தியாருக்கு ஒன்று.
  • தனக்குக் கண்டுதானே தானம் வழங்க வேண்டும்?
  • தனக்குச் சந்தேகம்; அடைப்பைக்காரனுக்கு இரட்டைப் படியாம்.
  • தனக்குத் தகாத காரியத்தில் பிரவேசிப்பவன் குரங்கு பட்ட பாடுபடுவான்.
  • தனக்குத் தகாத காரியம் செய்தால் ஆளுக்குப் பிராண சேதத்துக்கு வரும்.
  • தனக்குத் தங்கையும் தம்பிக்குப் பெண்டாட்டியும்.
  • தனக்குத் தவிடு இடிக்கத் தள்ளாது; ஊருக்கு இரும்பு அடிக்கத் தள்ளும்.
  • தனக்குத் தவிடு குத்த மாட்டாள்; அயலாருக்கு இறுங்கு இடிப்பாள்.
  • தனக்குத் தனக்கு என்றால் தாய்ச்சீலையும் பதக்குக் கொள்ளும்.
  • தனக்குத் தனக்கு என்றால் பிடுங்கும் களை வெட்டும்.
  • தனக்குத் தாறும் பிறைக்குத் தூணும்.
  • தனக்குத் தானே கனியாத பழத்தைத் தடி கொண்டு அடித்தால் கனியுமா?
  • தனக்கும் தெரியாது; சொன்னாலும் கேட்கமாட்டான்.
  • தனக்குப் பிறந்த பிள்ளை தவிட்டுக்கு அழுகிறதாம்; ஊரார் பிள்ளைக்குக் கூட்டுக் கல்யாணம் செய்கிறானாம்.
  • தனக்குப்பின் தானம்.
  • தனக்குப் பின்னால் அகம் இருந்து என்ன? கவிழ்ந்து என்ன?
  • தனக்குப் பின்னால் வாழ்ந்தால் என்ன? கெட்டால் என்ன?
  • தனக்குப் பெரியாரைத் தடிகொண்டு அடிக்கிறது.
  • தனக்குப் போகத் தானம்.
  • தனக்கும் உயர்ந்த குலத்தில் பெண்ணைக் கொடு; தன்னிலும் குறைந்த இடத்தில பெண்ணை எடு.
  • தனக்கு மிஞ்சித்தான் பரோபகாரம்.
  • தனக்கு மூக்குப் போனாலும் எதிரிக்குச் சகுனப்பிழை வேண்டும்.
  • தனக்கு வந்தால் தெரியும் தலைவலியும் காய்ச்சலும்.
  • தனக்கே தகராறாம்; தம்பிக்குப் பழையதாம்.
  • தனக்கே தாளமாம்; தம்பிக்குப் பலகாரமாம்.
  • தனத்தால் இனம் ஆகும்; பணத்தால் ஜனம் ஆகும்.
  • தனம் இரட்டிப்பு; தானியம் முத்திப்பு.
  • தனிக் காட்டு ராஜா.
  • தனி மரம் தோப்பு ஆகுமா?
  • தனி வழி போகாதே; அரவத்தொடு ஆடாதே.
  • தனிவழியே போனவளைத் தாரம் என்று எண்ணாதே.

தா[தொகு]

  • தாக்ளா மோக்ளா இல்லை
  • தாகம் இருக்கிறது; இரக்கம் இல்லை
  • தாங்கித் தாங்கிப் பார்த்தால் தலைமேல் ஏறுகிறான்
  • தாங்கினால் தலைமேல் ஏறுகிறான்
  • தாங்குகிற ஆள் உண்டு; தளர்ச்சி உண்டு
  • தாசரி தப்புத் தண்டவாளத்துக்குச் சரி
  • தாசிக்குப் பாளையம் கொடுத்தால் தகப்பனும் போகலாம்; பிள்ளையும் போகலாம்
  • தாசி பகட்டும் தாவணி மிரட்டும் போகப் போகத் தெரியும்
  • தாசி பிள்ளைக்குத் தகப்பன் யார்?
  • தாசில் தடுமாறிப் போகிறது!
  • தாசில்தார் கோழி முட்டை சம்சாரி அம்மிக்கல்லையும் உடைக்கும்
  • தாசில்தாருக்குத் தாசில் வேலை போனாலும் சமையல்காரனுக்குச் சமையல் வேலை போகவில்லை
  • தாசில்தாருக்கு வேலை போச்சு; சமையல்காரனுக்கு என்ன கவலை?
  • தாசி வீட்டுக்குப் போனபின் தாய் இல்லாப் பிள்ளை என்றால் விடுவாளா?
  • தாலி இல்லாத கல்யாணமும், புருஷன் இல்லாத பேறும் அர்த்தமற்றது.
  • தாலி இல்லாமல் கல்யாணம் பண்ண முடியுமா?
  • தாலி கழுத்தில் இருந்தால் தான் சுமங்கலி; இல்லாவிட்டால் அமங்கலி
  • தாலி கட்டிய புருஷனை எதிர்த்துப் பேசலாமா?
  • தாலி கழுத்துல ஏறிட்டா புருஷன் கூடத்தான் சேர்ந்து வாழனும்.
  • தாலி பெண்ணுக்கு வேலி
  • தாலிக்கு அக்கினி சாட்சி. வேலிக்கு ஓணான் சாட்சி.
  • தாட்டோட்டக்காரனுக்குத் தயிறும் சோறும்; விசுவாசக்காரனுக்கு வெந்நீரும், பருக்கையும்.
  • தாட்டோட்டக்காரனைக் கூடுவதிலும் தனியே இருப்பது நலம்
  • தாடிக்குப் பூக் கட்டலாமா?
  • தாடிக்கும் பூண் கட்டலாமா?
  • தாடிக் கொம்புத் தள வரிசை மாதிரி
  • தாடி பற்றி எரியும் போது சுருட்டுக்கு நெருப்புக் கேட்டது போல
  • தாடி வளர்த்தவர்கள் எல்லாம் தத்துவ ஞானிகளா?
  • தாதத்தியைக் கெடுத்தவன் தாதன்; குயவனைக் கெடுத்தவள் குயத்தி
  • தாதன் ஆட்டம் திருப்பதியிலே தெரியும்
  • தாதன் கையிலே அகப்பட்ட குரங்கு போல அலைகிறான்
  • தாதனும் பறையனும் போல
  • தாதனைக் கண்டால் ரங்கன். ஆண்டியைக் கண்டால் லிங்கன்
  • தாதா கோடிக்கு ஒருவர்
  • தாது அறியாதவன் பேதை வைத்தியன்
  • தாதும் இல்லை, பிராதும் இல்லை
  • தாபரம் இல்லா இளங் கொடி போல
  • தாம் கெட்டாலும் பிறருக்குக் கேடு நினைக்கல் ஆகாது
  • தாம்பும் அறுதல், தோண்டியும் பொத்தல்
  • தாம்பூலத் தட்டுச் சாதிக்காதது இல்லை,
  • தாம்பை விட்டு வாலைப் பிடிக்கிறது போல,
  • தாம்வளர்த்ததோநேச்சு மாமரம் ஆயினும் கெடார்
  • தாம் வளைவார் பிறருக்கு ஊற்றங்கோள் ஆகார்
  • தாமதம் தாழ்வுக்கு ஏது
  • தாமரை இல்லாத் தடாகம் போல
  • தாமரை இலைத் தண்ணீர் போல
  • தாமரை இலையில் தண்ணீரைப் போல் தவிக்கிறான்
  • தாமரையில் விழுந்த மழைத் துளி போல
  • தாய் அவிடே, தாக்கோல் இவிடே
  • தாய் அற்றால் சீர் அறும்
  • தாய் அறியாத சூல் இல்லை
  • தாய் இட்டி பேரை ஊர் இட்டு அழைக்கும்
  • தாய் இடப் பிள்ளை இடந் தானே மனம் மகிழ
  • தாய் இருந்தால் நாய் வருமா?
  • தாய் இல்லாக் குழந்தை தானே வளரும்
  • தாய் இல்லாத போது தகப்பன் தாயாதி
  • தாய் இல்லாத பிள்ளை ஊருக்கு ஆகுமா?
  • தாய் இல்லாத பிள்ளை தறுதலை
  • தாய் இல்லாத பிறந்தகமும் கணவன் இல்லாத புக்ககமும்
  • தாய் இல்லாதவனுக்கு ஊர் எல்லாம் தாய்
  • தாய் இல்லாப் பிள்ளை என்றால் தேவடியாள் கேட்க மாட்டாள்
  • தாய் இல்லாப் பிள்ளைக்கு நாய் பட்ட பாடு
  • தாய்வார்த்தை கேளாப் பிள்ளை நாய்வாய்ச் சீலை
  • தாயும் பிள்ளையும் ஒன்றானாலும், வாயும் வயிறும் வேறு.
  • தாயைப் பார்த்து மகளைக் கொள்ளு.
  • தான் தின்னத் தவிடில்லை, தங்கத்தாலே தாலி தொங்கத் தொங்கப் போடச் சொன்னாளாம்.

தீ[தொகு]

  • தீப்பட்ட புண்ணில் ஈர்க்கினால் குத்தியது போல
  • தீப்பட்ட வீட்டிலே கரிக்கட்டைக்குப் பஞ்சமா?
  • தீப்பட்ட வீட்டிலே பிடுங்கினது ஆதாயம்
  • தீப்பட்ட வீட்டுக்குப் பீக்குட்டைத் தண்ணீர்
  • தீப்பட்ட வீட்டுக்கு மேல் காற்றுப் போல
  • தீப்பட்டால் பூனை காட்டிலே
  • தீப்பந்தம் கண்ட ஆனை போல
  • தீப்புண் ஆறும்; வாய்ப்புண் ஆறாது
  • தீபத்தில் ஏற்றிய தீவட்டி
  • தீபாவளிக் கோழியைப் போல
  • தீ மிஞ்ச வைத்தாலும் பகை மிஞ்ச வைக்கல் ஆகாது
  • தீமை மேலிடத் தெய்வம் கைவிட்டது
  • தீமையை மெச்சுகிறவன் தீமையாளிதான்
  • தீமையை வெல்ல நன்மையைச் செய்
  • தீயாரைச் சேர்ந்து ஒழுகல் தீது; தீயார் பணி செய்வதுவும் தீது
  • தீயாரோடு இணங்காதே; சேப்பங் கிழங்குக்குப் புளி குத்தாதே
  • தீயில் இட்ட நெய் திரும்பி வருமா?
  • தீயினால் சுட்ட புண் ஆறும்; வாயினால் சுட்ட புண் ஆறாது
  • தீயும் தீயும் சேர்ந்து பெருந்தீ ஆனாற் போல்
  • தீயும் பயிருக்குப் பெய்யும் மழைபோல
  • தீயைச் செல் அரிக்குமா?
  • தீயை மிதித்தவன்போல் திகைத்து நிற்கிறான்
  • தீயோரை விடுதலை ஆக்குகிறவன் நல்லோருக்கு நஷ்டம் செய்வான்
  • தீர்க்கத் திறன் அற்றவன் தேசிகன் ஆவான்
  • தீர்க்கதரிசி, பீங்கான் திருடி
  • தீர்த்தக் கரைப் பாவி
  • திரக் கற்றவன் தேசிகன் ஆவான்
  • தீராக் கோபம் போராய் முடியும்
  • தீராச் சந்தேகம் போருக்கு யத்தனம்
  • தீராச் செய்கை சீர் ஆகாது
  • தீரா நெஞ்சுக்குத் தெய்வமே சாட்சி
  • தீரா நோய்க்குத் தெய்வமே கதி
  • தீராப் பொறிக்குத் தெய்வமே துணை
  • தீரா வழக்குக்குத் தெய்வமே சாட்சி
  • தீரா வழக்கு நேர் ஆகாது
  • தீவட்டிக்காரனுக்குக் கண் தெரியாது
  • தீவட்டிக் கொள்ளை கால் வட்டிக்கு ஈடு ஆகாது
  • தீவட்டிக் கொள்ளை போன பின் திருமங்கல்யச் சரடு தேடினாளாம்
  • தீவட்டி தூக்க வேண்டுமானாலும் திருமண் போடத் தெரியவேணும்
  • தீவட்டியின் கீழ் விளக்கு
  • தீவாள் திடுக்கிடுவாள்; திண்ணைக்கு மண் இடுவாள்; வருகிற கிழமைக்கு வாசலுக்கு மண் இடுவாள்
  • தீவிளிக்குத் தீவிளி தலை முழுகுகிறாள்
  • தீவினை செய்தவர்க்கே சேரும்
  • தீவினை செய்யின் பெய்வினை செய்யும்
  • தீவினை முற்றிப் பாழ்வினை ஆச்சுது
  • தீனிக்கு அடுத்த லத்தி; சாதிக்கு அடுத்த புத்தி
  • தீனிக்குத் திம்ம ராஜா, வேலைக்கு வெற்று ராஜா
  • தீக்ஷிதன் வீட்டுக் கல்யாணம் திமிலோகப்படுகிறது

து[தொகு]

  • துக்கத்தை எல்லாம் விட்டுவிட்டுத் தொட்டிச்சியைக் குத்தகையாக வைத்துக் கொண்டானாம்
  • துக்கத்தைச் சொல்லி ஆற்ற வேண்டும்; கட்டியைக் கீறி ஆற்ற வேண்டும்
  • துக்கப்பட்டவருக்கு வெட்கம் இல்லை
  • துக்கம் அற்றவனுக்குச் சொக்கட்டான்
  • துக்கம் உள்ள மனசுக்குத் துன்பம் ஏன் வேறே?
  • துக்கலூரிலும் கல்யாணம்; துடியலூரிலும் கல்யாணம்; நாய் அங்கு ஓடியும் கெட்டது; இங்கு ஓடியும் கெட்டது
  • துக்கிரிக்குத் துடையிலே மச்சம்
  • துக்குணிச் சிறுக்கிக்கு முக்கலக் கந்தை
  • துக்குணிச் சொகன்
  • துஞ்சி நின்றான்; மிஞ்சி உண்ணான்
  • துட்டுக்கு இரண்டு; துக்காணிக்கு மூன்று
  • துட்டுக்கு எட்டுக் குட்டி ஆனாலும் துலுக்கக் குட்டி உதவாது
  • துட்டுக்கு எட்டுச் சட்டி வாங்கிச் சட்டி எட்டுத் துட்டுக்கு விற்றாலும் வட்டிக்கு ஈடு ஆகாது
  • துட்டுக்கு ஒரு சேலை விற்றாலும் நாய் பிட்டம் அம்பலம்
  • துட்டுக்கு ஒரு பிள்ளை கொடுத்தாலும் துலுக்கப் பிள்ளை கூடாது
  • துட்டு வந்து பெட்டியில் விழுந்ததோ? திட்டு வந்து பெட்டியில் விழுந்ததோ?
  • துட்டைக் கொடுத்துத் துக்கத்தை வாங்கிக் கொண்டாளாம்
  • துடிக்கக் கிள்ளித் தொட்டிலையும் ஆட்டுகிறது
  • துடியாப் பெண்டிர் மடியில் நெருப்பு
  • துடுப்பு இருக்கக் கை வேளானேன்?
  • துடைகாலி முண்டை துடைத்துப் போட்டாள்
  • துடைகாலி வந்ததும் எல்லாம் தொலைந்து போச்சுது
  • துடை தட்டின மனிதனும் அடை தட்டின வீடும் பாழ்
  • துடைப்புக் கட்டைக்குப் பட்டுக் குஞ்சலம் கட்டினது போல
  • துடையில் புண், மாமனார் வைத்தியம்
  • துடையையும் கிள்ளித் தொட்டிலையும் ஆட்டுகிறதா?
  • துண்டுப் பாளையக்காரன் இடைநடுவில் அடிக்கிறது போல
  • துண்டும் துணியும் சீக்கிரம் விலை போகும்; பட்டும் பணியும் பையத்தான் விலை போகும்
  • துணிக்குப் போதுமானபடி சொக்காய் வெட்டு; வரவுக்கு மிஞ்சிச் செலவு செய்யாதே
  • துணிகிறவளுக்கு வெட்கம் இல்லை; அழுகிறவளுக்குத் துக்கம் இல்லை
  • துணிந்த மல்லுக்குத் தோளில் சுட்டால் அதுவும் ஒரு ஈக்கடி
  • துணிந்த முண்டையைத் துடையில் சுட்டால் அதுவும் ஒர் ஈக்கடி என்று சொன்னாளாம்
  • துணிந்தவருக்குச் சமுத்திரம் முழங்கால் ஆழம்
  • துணிந்தவன் ஐயம்பேட்டையான்
  • துணிந்தவனுக்குத் துக்கம் இல்லை; அழுதவனுக்கு அகங்காரம் இல்லை
  • துணிந்தவனுக்குத் துணை வேண்டுமா?
  • துணிந்தவனுக்குப் பயமா?
  • துணிந்தாருக்குத் துக்கம் உண்டா? பணிந்தாருக்குப் பாடு உண்டா?
  • துணியைத் தூக்குவதற்கு முன்னே தொடையில் வைப்பது போல
  • துணிவது பின்; நினைவது முன்
  • துணிவும் பணிவும் துக்கம் தீர்க்கும்
  • துணை இரண்டானால் தூக்கணத்துக்கு மனைவி இரண்டு
  • துணை இருப்பாருக்கு வினை இழைப்பதா?
  • துணை உடையான் படைக்கு அஞ்சான்
  • துணைக்குத் துணையும் ஆச்சு: தொண்டைக் குழிக்கு வினையும் ஆச்சு
  • துணைப்பட்டால் சாக வேணும்; பிணைப்பட்டால் இருக்க வேணும்
  • துணை பெற்றவன் வீண் போகான்
  • துணை போய் இரு; பொங்கினதைத் தேடு
  • துணை போனாலும் வினை போகாதே
  • துணையோடு அல்லது நெடுவழி போகேல்
  • துப்பட்டியில் கிழித்த கோவணந்தானே?
  • துப்பாக்கி வயிற்றில் பீரங்கி பிறந்தாற் போல
  • துப்பு அற்ற நாரிக்குக் கொம்பு அழகைப் பார்
  • துப்பு அற்ற புருஷனுக்குத் துறுதுறுத்த பெண்டாட்டி
  • துப்பு அற்றவனை உப்பிலே பார்; சீர் அற்றவனை நீரிலே பார்
  • துப்புக் கெட்ட சாம்பானுக்கு இரட்டைப் படித்தரம், தூர்ந்த கிணற்றுக்கு இரட்டை ஏற்றம்
  • துப்புக் கெட்ட நாய்க்கு இரட்டைப் பங்கு
  • துப்புக் கெட்ட மாப்பிள்ளைக்கு இரட்டைப் பெண்டாட்டி
  • துப்புக் கெட்டவனுக்கு இரட்டைப் பங்கு
  • துப்புக் கெட்டவளுக்கு இரட்டைப் பரிசமா?
  • தும்பி பறந்தால் தூரத்தில் மழை
  • தும்பைத் தறித்து வாலைப் பிடிப்பது போல
  • தும்பை விட்டுப் பிடிக்க வேண்டும்
  • தும்பை விட்டு வாலைப் பிடிக்காதே
  • தும்மல் நன்னிமித்தம்
  • தும்மினால் குற்றம், இருமினால் அபராதம்
  • தும்பினால் மூக்கு அறுந்து போகிறதே!
  • தும்பினும் குற்றம்; ஒழியினும் குற்றம்
  • தும்முகிற போது போகிற மூக்கா?
  • துயரப்பட்டால் ஆறுதல் உண்டு; துன்பப் பட்டால் தேறுதல் உண்டு
  • துர்ச்சனப் பிள்ளைக்கு ஊரார் புத்தி சொல்வார்கள்
  • துர்ச்சனன் உறவிலும் சற்சனன் பகை நலம்
  • துர்ச்சனனைக் கண்டால் தூர விலகு
  • துர்ப்பலத்திலே கர்ப்பிணி ஆனால் எப்படி முக்கிப் பெறுகிறது?
  • துர்ப்புந்தி மந்திரியால் அரசுக்கு ஈனம்; சொற்கேளாப் பிள்ளைகளால் குலத்துக்கு ஈனம்
  • துரியோதனன் குடிக்குச் சகுனி வாய்த்ததைப் போல
  • துருசு கல்வி; அரிது பழக்கம்
  • துருத்தியைக் கண்ட இரும்பா?
  • துரும்பு கிள்ளுவது துர்க்குறித்தனம்
  • துரும்பு தூண் ஆகுமா?
  • துரும்பு தூண் ஆனால் தூண் என்ன ஆகாது?
  • துரும்பு நுழைய இடம் இருந்தால் ஆனையை நுழைப்பான்
  • துரும்பும் கலத் தண்ணீர் தேக்கும்
  • துரும்பு முற்றின கோபம் விசும்பு முட்டத் தீரும்
  • துரும்பைத் தூண் ஆக்குகிறதா?
  • துரும்பை மலை ஆக்காதே
  • துரும்பை வைத்து மூத்திரம் பெய்கிறதா?
  • துரை ஆண்டால் என்ன? துலுக்கர் ஆன்டால் என்ன?
  • துரை இஷ்டம்; கனம் இஷ்டம்
  • துரை உதைத்தது தோஷம் இல்லை; பட்லர் சிரித்தது பழியாய் வளர்ந்தது
  • துரைகளுடனே சொக்கட்டான் ஆடினாற் போலே
  • துரைகளோடே சொக்கட்டான் ஆடினால் தோற்றாலும் குட்டு; வென்றாலும் குட்டு
  • துரைகளோடே சொக்கட்டான் ஆடினாற் போல
  • துரைகளோடே சொக்கட்டான் போடலாகுமோ?
  • துரை கையில் எலும்பு இல்லை
  • துரைச் சித்தம் கனச்சித்தம்
  • துரை நல்லவர்; பிரம்பு பொல்லாதது
  • துரை நாய்ச்சியார் கும்பிடப் போய்ப் புறப்பட்ட ஸ்தனம் உள்ளே போச்சுது
  • துரை வீட்டு நாய் நாற்காலி மேல் ஏறினது போல
  • துரோகத்தால் கொண்ட துரைத்தனம், குடிகளை வருத்தும் கொடுங்கோல்
  • துரோபதையைத் துகில் உரிந்தது போல
  • துலக்காத ஆயுதம் துருப்பிடிக்கும்
  • துலாத்தில் வெள்ளி உலாத்தில் பெய்யும் மழை
  • துலுக்குக் குடியில் ஏது பேயாட்டம்?
  • துலுக்கச்சிக்கு எதற்கு உருக்கு மணி?
  • துலுக்கத் தெருவிலே ஊசி விற்றது போல
  • துலுக்கத் தெருவிலே தேவாரம் ஓதினது போல
  • துலுக்கன் உடுத்துக் கெட்டான்; பார்ப்பான் உண்டு கெட்டான்
  • துலுக்கன் கந்தூரி தூங்கினால் போச்சு
  • துலுக்கன் செத்தால் தூக்குவது எப்படி?
  • துலுக்கன் துணியால் கெட்டான்; பார்ப்பான் பருப்பால் கெட்டான்
  • துலுக்கன் புத்தி தொண்டைக்குழி வரைக்கும்
  • துலுக்கன் வீட்டில் துணிக்கு என்ன பஞ்சம்?
  • துலுக்கனுக்கு ஏன் துறட்டுக் கடுக்கன்?
  • துவி நாக்கு இடறும்
  • துவைத்துத் தோள்மேற் போட்டுக் கொண்டான்
  • துழாவிக் காய்ச்சாதது கஞ்சியும் அல்ல; வினாவிக் காட்டாதது கல்யாணமும் அல்ல
  • துள்ளாதே, துள்ளாதே ஆட்டுக்குட்டி. என் கையில் இருக்கிறது சூரிக் கத்தி
  • துள்ளாதே, துள்ளாதே, குள்ளா, பக்கத்தில் பள்ளமடா
  • துள்ளிக் துள்ளிக் குதித்தாலும் வெள்ளிப் பணமும் கிடையாக் காலத்தில் கிடையாது
  • துள்ளித் துள்ளித் தொப்பென்று விழுகிறாய்
  • துள்ளின மாடு பொதி சுமக்கும்
  • துள்ளுகிற கெளுத்துச் செத்துப்போகிறது தெரியாதா?
  • துள்ளுகிற மாடு பொதி சுமக்காது
  • துள்ளும் மாள் துள்ளித் துரவில் விழுந்தது
  • துள்ளு மறி கொலை அறியாது
  • துளசிக்கு வாசனையும் முள்ளுக்குக் கூர்மையும் முளைக்கிற போதே உண்டு
  • துளி என்றால் நீர்த்துளி
  • துற்றிச் சமுத்திரம் பொங்கினால் கொள்ளுமாம் கிணறு அநேகம்
  • துறக்கத் துறக்க ஆனந்தம்; துறந்தபின் பேரின்பம்
  • துறட்டுக்கு எட்டாதது கைக்கு எட்டுமா?
  • துறவறம் இல்லறம் மனசிலே
  • துறவறமும் பழிப்பு இன்றேல் எழிலதாகும்
  • துறவிக்கு வேந்தன் துரும்பு
  • துறுதுறத்த வாலு, துக்காணிக்கு நாலு
  • துன்பத்திற்கு இடம் கொடேல்
  • துன்பத்தின் முடிவு இன்பம்
  • துன்பம் உற்றவர்க்கு இன்பம் உண்டு
  • துன்பம் தருகிற காக்கையின் சத்தத்தால் அதை விரட்டுவார்கள்; இன்பம் தருகிற குயிலை விரட்டார்கள்
  • துன்பம் தொடர்ந்து வரும்
  • துன்பம் முந்தி; இன்பம் பிந்தி
  • துஷ்ட சகவாசம் பிராண சங்கடம்
  • துஷ்ட சதுஷ்டயம்
  • துஷ்ட நிக்ரகம், சிஷ்ட பரிபாலனம்
  • துஷ்டப் பிள்ளைக்கு ஊரார் புத்தி சொல்வார்கள்
  • துஷ்டர் நேசம் பிராண நஷ்டம்
  • துஷ்டருடன் சேருவதைவிடத் தனியே இருப்பது மேலானது
  • துஷ்டரைக் கண்டால் தூர விலகு; கெட்டாரைக் கண்டால் காறி உமிழ்
  • துஷ்டனைக் கண்டால் எட்டி நில்
  • துஷ்டனைக் கண்டால் தூர விலகு

தூ[தொகு]

  • தூக்கணத்துக்குத் துயரம் இல்லை; மூக்கணத்துக்கு முசு இல்லை
  • தூக்கணாங்குருவி குரங்குக்குப் புத்தி சொன்னது போல
  • தூக்க நினைத்து நோக்கிப் பேசு
  • தூக்கி ஏற விட்டு ஏணியை வாங்கும் தூர்த்தர் சொல்லைக் கேளாதே
  • தூக்கி நிறுத்தடா, பிணக்காடாய் வெட்டுகிறேன் என்றாளாம்
  • தூக்கி நினைத்து நோக்கிப் பேசு
  • தூக்கிப் போட்டதும் அல்லாமல் குதிரை தோண்டிக் குழிப் பறித்ததாம்
  • தூக்கி வளர்த்த பிள்ளையும் துடையில் வைத்துத் தைத்த இலையும் உருப்படா
  • தூக்கி வினை செய்
  • தூக்கினால் சென்னி துணிக்கத் துணித்துவிடு; மாக்கினால் சக்கரம் போல அடை
  • தூக்கு உண்டானால் நோக்கு உண்டு
  • தூங்காதவனது கடாக்குட்டி, விழித்திருந்தவனுக்கும் விளங்கும் குட்டி
  • தூங்காதவனுக்குச் சுகம் இல்லை
  • தூங்காதவனே நீங்காதவன்
  • தூங்கிய நாய்க்குத் துடைப்பம் எதிரி
  • தூங்கினவன் கன்று கிடாக்கன்று
  • தூங்கினவன் கன்று சேங்கன்று
  • தூங்கினவன் சாகிறதில்லை; வீங்கினவன் பிழைக்கிறதில்லை
  • தூங்கினவன் தொடையிலே கயிறு திரிக்கிறான்
  • தூங்கினவன் தொடையிலே திரித்த வரைக்கும் லாபம்
  • தூங்கினவனது கடாக்குட்டி, விழித்திருந்தவனது ஊட்டுக்குட்டி
  • தூங்குகிற நரிக்கு இரை கிடையாது
  • தூங்குகிற நாய் தூங்கட்டும்
  • தூங்குகிற புலியைத் தட்டி எழுப்பினதுபோல
  • தூங்குகிற வரிக்காரனை எழுப்பி விட்டால் போன வருஷத் தீர்வையும் கொடுத்துவிட்டுப் போ என்பான்
  • தூங்குகிறவன் துடையிலே சுப்பல் எடுத்துக் குத்தினாற்போல
  • தூங்குகிறவனை எழுப்புவானேன்? அவன் தொண்ணூறு பணம் குறைந்தது என்பானேன்?
  • தூங்குகிறவனைத் தட்டி எழுப்பி அத்தாளம் இல்லை என்றாற் போல
  • தூங்கும் புலியை வால் உருவி விட்டாற் போல
  • தூங்கு மூச்சி மாப்பிள்ளைக்கு எருமுட்டை பணியாரம்
  • தூங்குவது சிறிய தூக்கம்; போவதே பெரிய தூக்கம்
  • தூண்டா விளக்குப் போல
  • தூண்டில் காரனுக்கு மிதப்பிலே கண்
  • தூண்டில் நுனி இரைக்கு ஆசைப்பட்டு மீன் உயிர் இழப்பது போல
  • தூண்டில் போட்டவனுக்குத் தக்கைமேல் கண்
  • தூண்டில் போட்டு ஆனை பிடிக்கும் புத்திசாலி
  • தூண்டிலில் அகப்பட்ட மீன் துள்ளி நத்தினால் விடுவார்களா?
  • தூண்டிலைப் போட்டு வராலை இழுக்கிறது
  • தூண்டின விரல் சொர்க்கம் பெறும்
  • தூணி என்கிற அகமுடையானாம்; தூணிப்பதக்கு என்கிற அகமுடையாளாம்; முக்குறுணி என்று பிள்ளை பிறந்தால் மோதகம் பண்ணி நிவேதனம் செய்தார்களாம்
  • தூணில் புடைவையைக் கட்டினாலும் தூக்கிப்பார்ப்பான் தூர்த்தன்
  • தூணிலும் இருப்பான்; துரும்பிலும் இருப்பான்
  • தூணிலும் உண்டு; துரும்பிலும் உண்டு; சாணிலும் உண்டு; கோணிலும் உண்டு
  • தூத்துக்குடிச் சந்தையிலே துட்டுக்கு ஒரு பெண்டாட்டி
  • தூமத் தீயைக் காட்டிலும் காமத் தீக் கொடிது
  • தூமை துடைக்கப் பண்ணும்
  • தூய்மை வாய்மை தரும்
  • தூர்த்தர் என்போர் சொல் எழுத்து உணரார்
  • தூர்த்தர் சொல்லைக் கேட்டால் வாய்த்திடும் கேடு
  • தூர்ந்த கிணற்றைத் தூர் வாராதே
  • தூர இருந்தால் சேர உறவு
  • தூர உறவு சேரப் பகை
  • தூரத்துத் தண்ணீர் ஆபத்துக்கு உதவாது
  • தூரத்துப் பச்சை கண்ணுக்கு அழகு
  • தூரத்துப் பச்சை கண்ணுக்குக் குளிர்ச்சி
  • தூரத்துப் பச்சை பார்வைக்கு இச்சை
  • தூரத்துப் பார்வைக்கு மலை மழமழப்பு; கிட்டப் போனால் கல்லும் கரடும்
  • தூரப் போக வேண்டுமா, கீரைப் பாத்தியிற் கை வைக்க?
  • தூரப் போய்க் கீரைப் பாத்தியிற் பேண்டானாம்
  • துார மண்டலம் சேய மழை; சேர மண்டலம் தூர மழை
  • தூர நின்றாலும் தூவானம் நில்லாது
  • தூலம் இழுத்த கடா நடுவீட்டில் தூங்குமா?
  • தூற்றித் திரியேல்
  • தூற்றும் பெண்டிர் கூற்று எனத் தகும்
  • தூறு ஆடின குடி நீறு ஆகும்
  • தூஷிப்பாரைப் பூஜிப்பார் இல்லை

தெ[தொகு]

  • தெட்டிப் பறிப்பாரை எட்டிடத்தில் பறிக்கிறது
  • தெந்தினப் பாட்டுப் பாடித் திருநாமம் இட வந்தான்
  • தெய்வ அருள் இருந்தால் செத்தவனும் பிழைப்பான்
  • தெய்வத்துக்குச் சத்தியம்; மருந்துக்குப் பத்தியம்
  • தெய்வத்துக்குச் செய்வதும் செய்க்கு உரம் போடுவதும் வீண் அல்ல
  • தெய்வத்தை இகழ்ந்தவர் செல்வத்தை இழந்தார்
  • தெய்வப் புலவனுக்கு நா உணரும்; சித்திர ஓடாவிக்குக் கை உணரும்
  • தெய்வ பலமே பலம்
  • தெய்வம் இட்டபடி நடக்கிறது
  • தெய்வம் இட்டு விடாமல் வீணர் படியிட்டு விடிவதுண்டோ
  • தெய்வம் இல்லாமலா பொழுது போகிறதும் பொழுது விடிகிறதும்?
  • தெய்வம் உண்டு என்பார்க்கு உண்டு; இல்லை என்பார்க்கு இல்லை
  • தெய்வம் காட்டும்; எடுத்து ஊட்டுமா?
  • தெய்வம் காட்டுமே தவிர ஊட்டாது
  • தெய்வம் கெடுக்காத குடியைத் தெலுங்கன் கெடுப்பான்
  • தெய்வம் கைகூட்டி வைத்தது
  • தெய்வம் சீறின் கைதவம் ஆகும்
  • தெய்வம் துணைக் கொள்; தேகம் அநித்தியம்
  • தெய்வம் படி அளக்கும்
  • தெய்வம் பண்ணின திருக்கூத்து
  • தெய்வமே துணை
  • தெய்வ வணக்கம் நரக வாசலை அடைக்கும் தாழ்
  • தெரிந்தவர்கள் தென்னம் பிள்ளை வைப்பார்கள்
  • தெரிந்தவன் என்று கும்பிடு போட்டால் உன் அப்பன் பட்ட கடனை வைத்துவிட்டுப் போ என்றானாம்
  • தெரிந்தவனுக்குத்தான் தெரியும் செம்மறியாட்டு முட்டை
  • தெரியாத் துணையே, பிரியாத் துணை நீ
  • தெருச் சண்டைக்கு இடுப்புக் கட்டல்
  • தெருச்சண்டை கண்ணுக்கு இன்பம்
  • தெருவில் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைக்காதே
  • தெருவிலே ஊர்வலம் போகிறதென்று திண்ணையில் தூங்குபவன் திணறிக்கொண்டு செத்தானாம்
  • தெருவிலே போகிற சனியனை விலை கொடுத்து வாங்கினது போல
  • தெருவிலே போகிறவனை அண்ணை என்பானேன்? ஆத்தைக்கு இரண்டு கேட்பானேன்
  • தெருவோடு போகிற சண்டையை வீட்டு வரைக்கும் வந்து போ என்றது போல
  • தெருவோடு போகிற வண்டியைக் காலில் இழுத்துவிட்டுக் கொண்டது போல
  • தெருளா மனசுக்கு இருளே இல்லை
  • தெலுங்கச்சி சுவர்க்கம் போனாற் போல
  • தெவிட்டாக் கனி பிள்ளை; தெவிட்டாப் பானம் தண்ணீர்
  • தெள்ளிய திருமணி, திருட்டுக்கு நவமணி
  • தெள்ளுப் பிடித்த நாயைப் போல
  • தெளிந்த தண்ணீர் நீர் குடித்தீர்; சேற்றைக் கலக்கி விட்டீர்
  • தெளிவு கூறும் பரதேவ தேசிகன்
  • நெற்கத்திக் குருவியை வடக்கத்திக்குருவி தெற்றி அழைத்ததாம்;சீசம் பழம் தின்னம் போக
  • தெற்கு விழுந்த கருக்கலும் தேவடியாளிடம் போன காசும் திரும்பா
  • தெற்கே அடித்த காற்றுத் திரும்பி அடியாதா?
  • தெற்கே சாய்ந்தவன் தெரு எல்லாம் கூடை
  • தெற்கே சாய்ந்தால் தெருவெல்லாம் விலைப் பெட்டி; வடக்கே சாய்ந்தால் வரப்பெல்லாம் நெல்
  • தெற்கே போகிற நாய்க்கு வடக்கே வால்
  • தெற்கே போன வெள்ளி வடக்கே வந்தால் மழை
  • தெறிக்க அடித்த தட்டானைப் போல
  • தென்காசி ஆசாரம்; திருநெல்வேலி உபசாரம்
  • தென்காசி வழக்கா, பாதி போடு
  • தென் திசைப் புலையன் வட திசைக்கு ஏகின் நடை திருந்திப் பார்ப்பான் ஆவான்
  • தென்றல் அடிக்கிற காற்றே, என் இறுக்கத்தை ஆற்றே
  • தென்றல் திரும்பியும் மழையா?
  • தென்றல் முற்றிப் பெருங்காற்று ஆனது போல
  • தென்றல் முற்றானால் புயலாக மாறும்
  • தென்றலும் வாடையும் இறக்கும் பயிர்கள்
  • தென்னங் குரும்பை திருக்குரும்பை, பன்னாடை எல்லாம், ஒரு மரத்துக் காய்
  • தென்னந்தோப்பில் குரங்கு வளர்த்தது போல
  • தென்னமரத்தில் ஏண்டா ஏறினாய் என்றால், கன்றுக்குட்டிக்குப் புல் பிடுங்க என்றானாம்; தென்னமரத்தில் புல் ஏதடா என்றால், அதுதான் கீழே இறங்குகிறேன் என்றான்
  • தென்னமரத்தில் ஏறுபவனை எவ்வளவு தூரம் தூக்கிவிட முடியும்?
  • தென்ன மரத்தில் தேள் கொட்டப் பன மரத்திலே பதவளை காட்டினது போல
  • தென்ன மரத்தில் தேள் கொட்டிப் பனமரத்தில் நெறி ஏறிற்றாம்
  • தென்ன மரத்தில் பாதி, என்னை வளர்த்தாள் பாவி
  • தென்ன மரத்திற்குத் தண்ணீர் வார்த்தால் தலையாலே தரும்
  • தென்ன மரத்தின் நிழலும் தேவடியாள் உறவும் ஒன்று
  • தென்ன மரத்துக் குரங்கே, என்னைப் பார்த்து இறங்கே
  • தென்னாலிராமன் குதிரை வளர்த்தது போல
  • தென்னாலிராமன் பூனை வளர்த்தது போல
  • தென்னாலிராமன் போட்ட சித்திரம் போல
  • தென்னை செழித்தால் பண்ணை செழிக்கும்
  • தென்னையிலே தேள் கொட்டித் திருவையாற்றுக்கு நெறி கட்டியதாம்
  • தென்னையிலே பாதி என்னை வளர்த்தாள் பாவி
  • தென்னை வைத்து வாழை ஆச்சு; வாழை வைத்து மஞ்சள் ஆச்சு மஞ்சள் வைத்து முள்ளி ஆச்சு

தே[தொகு]

  • தேகம் அநித்தியம்; தெய்வம் துணைக் கொள்
  • தேகம் சந்தேகம்
  • தேங்காய் ஆடும்; இளநீர் ஆடும்; திருவுமணையில் தூக்கமா? தேங்காய்க்குள் நீர் போல
  • தேங்காய்க்கு மூன்று கண்; எனக்கு ஒரு கண்
  • தேங்காய் தின்றவன் ஒருத்தன்; தண்டம் கொடுத்தவன் ஒருத்தன்
  • தேங்காய் தின்னலாம், இளநீர் குடிக்கலாம்; திருவு பலகையிலே வந்ததோ தூக்கம்?
  • தேங்காயிற் சிறிது; மாங்காயிற் பெரிது
  • தேங்காயை உடைத்தால், சிரட்டையை உடைக்கிறேன்
  • தேங்காயை உடைத்தாற்போல் பேசுகிறான்
  • தேங்காயைத் தின்றவன் தின்னக் கோம்பை சூப்பினவன் தண்டம் இறுக்கிறதா?
  • தேங்காயை விழுங்குகிறது தினை; பருவத்தை விழுங்குகிறது பனை
  • தேசங்கள் தோறும் பாஷைகள் வேறு
  • தேசத்து நன்மை தீமை அரசர்க்கு இல்லையா?
  • தேசத்தோடு ஒத்து வாழ்
  • தேச பத்தியே தெய்வ பத்தியாம்
  • தேசம் எல்லாம் பறக்கும் காகம் தான் இருக்கும் கொம்பை அறியாது
  • தேடக் கிடையாது; தேட என்றால் கிட்டாது. திருப்கொட்பா, திருப்பிக் கொடு
  • தேடத்தசை இருந்தும் அனுபவிக்க அதிர்ஷ்டம் இல்லை
  • தேட நினைப்பது தெய்வத்தை
  • தேடப் போன மச்சினன் செருப்படியில் அகப்பட்டது போல
  • தேடாது அழிக்கின் பாடாய் முடியும்
  • தேடாது அழித்த தேவடியாள் தேவடியாள்
  • தேடி அழைத்த விருந்துக்கு வாடி இருந்ததுபோல
  • தேடி எடுத்துமோ திருவாழி மோதிரத்தை
  • தேடித் திருவிளக்கு வை
  • தேடித் தின்றவர் தெய்வத்தோடு ஒத்தவர்
  • தேடிப் பிடித்தாள் தேவடியாள் கள்ளனை
  • தேடிப் புதைத்துத் தெருவில் இருக்கிறதா?
  • தேடிப் போகாதே; கூறி விற்காதே
  • தேடிப் போனது அகப்பட்டது போல
  • தேடிப் போன தெய்வம் எதிரே வந்தது போல
  • தேடிப் போன மருந்துக் கொடி காலில் அகப்பட்டது போல
  • தேடியதை எல்லாம் கொடுத்துத் தேட்டு மீன் வாங்கித் தின்னு
  • தேடின பூண்டு காலிலே மிதிபட்டது போல
  • தேடின பொருள் காலிலே தட்டினது போல
  • தேடுவார் அற்ற பிணம் தெருவோடே
  • தேய்ந்த அம்மாள் தெய்வயானை, தெய்வத்துக்கு இட்டாலும் ஏறாது
  • தேய்ந்த கட்டை மணம் நாறும்
  • தேய்ந்தாய், மாய்ந்தாய் கொம்பும் கறுத்தாய், தும்பிக்கையும் உள்ளே இழுத்துக் கொண்டாயா?
  • தேய்ந்தாலும் சந்தனக் கட்டை மணம் போகாது
  • தேய்ந்து மாய்ந்து போகிறான்
  • தேய்ந்து மூஞ்சூறாய்ப் போகிறது
  • தேயத் தேய மணக்கும் சந்தனக் கட்டை
  • தேர் இருக்கிற மட்டும் சிங்காரம்; தேர் போன பிறகு என்ன?
  • தேர் ஓடித் தன் நிலையில் நிற்கும்
  • தேர் ஓடி நிலைக்குத்தான் வரவேணும்
  • தேர் செய்கிற தச்சனுக்கு அகப்பை போடத் தெரியவில்லை
  • தேர் தாழ்ந்து தில்லை உயர்ந்தது; ஆனை தாழ்ந்து அரசு வளர்ந்தது
  • தேர் தெருத் தெருவாக ஓடினாலும் தன் நிலையில்தான் நிற்கும்
  • தேர்ந்தவன் என்பது கூர்ந்து அறிவதனால்
  • தேர் வேந்தன் தன் களத்தில் சிலர் வெல்லச் சிலர் தோற்பர்; ஏர் வேந்தன் களத்தில் இரப்பவரும் தோலாரே
  • தேராச் செய்கை தீராச் சஞ்சலம்
  • தேருக்கு உள்ள சிங்காரம் தெரு எல்லாம் கிடக்கிறது
  • தேருக்குப் போகிறபோது தெம்பு; திரும்பி வருகிறபோது வம்பு
  • தேருக்குள் சிங்காரம், தெரு எல்லாம் அலங்காரம்
  • தேரைகள் பாம்பைத் திரண்டு வளைத்தாற் போல
  • தேரை மோந்த தேங்காய் போல
  • தேரோடு திருநாள் ஆயிற்று; தாயோடு பிறந்தகம் போயிற்று
  • தேரோடு திருநாள் போம்
  • தேரோடு நின்று தெருவோடு அலைகிறான்
  • தேவடியாள் இருந்து ஆத்தாள் செத்தால் கொட்டு முழக்கு; தேவடியாள் செத்தால் ஒன்றும் இல்லை
  • தேவடியாள் சிந்தாக்கு உள்ள வரையில் நட்டுவனுக்குப் பஞ்சம் இல்லை
  • தேவடியாள் குடியில் குமரிப் பெண்ணை ஈடு வைக்கலாமா?
  • தேவடியாள் சிங்காரிக்கும் முன்னே தேர் ஓடி நிலையில் நின்றது
  • தேவடியாள் செத்தால் பிணம்; தேவடியாள் தாய் செத்தால் மணம்
  • தேவடியாள் தெரு கொள்ளை போகிறதா?
  • தேவடியாள் மகன் திவசம் செய்தது போல
  • தேவடியாள் மகனுக்கும் திவசம்
  • தேவடியாள் மலம் எடுத்தாற் போல
  • தேவடியாள் மூக்கில் மூக்குத்தி கிடந்தால் நட்டுவக்காரன் பட்டினி கிடப்பான்
  • தேவடியாள் வீட்டில் ஆண் பிள்ளை பிறந்தாற் போல
  • தேவடியாள் வீட்டில் பெண்குழந்தை பிறந்தாற் போல
  • தேவடியாள் வீடு போவது போல
  • தேவடியாளுக்குத் தினமும் ஒரு கணவன்
  • தேவர் உடைமை தேவருக்கே
  • தேவர்கள் பணிவிடை சேப்பு மேலவன் கர்த்தா
  • தேவரீர் சித்தம்; என் பாக்கியம்
  • தேவரே தின்றாலும் வேம்பு கைக்கும்
  • தேவரைக் காட்டிலும் பூதம் பணி கொள்ளும்
  • தேவலோகத்து அமிர்தத்தை ஈ மொய்த்த கதை
  • தேவாமிர்தத்தை நாய் இச்சித்த கதை
  • தேள் கொட்டப் பாம்புக்கு மந்திரிக்கிறதா?
  • தேள் கொட்டிய நாய் போல்
  • தேள் நெருப்பில் விழுந்தால் எடுத்துவிட்டவனையே கொட்டும்
  • தேளுக்குக் கொடுக்கில் விடம்; உனக்கு உடம்பெல்லாம் விடம்
  • தேளுக்குக் கொடுக்கில் விடம், தீயவருக்கு நாவில் விடம்
  • தேளுக்குக் கொடுக்கில் விடம்; தேவடியாளுக்கு உடம்பு எங்கும் விடம்; துஷ்டனுக்குச் சர்வாங்கமும் விடம்
  • தேளுக்கு மணியம் கொடுத்தால் நிமிஷத்துக்கு நிமிஷம் கொட்டும்
  • தேளோடு போனாலும் தெலுங்கனோடு போகாதே
  • தேற்றிக் கழுத்து அறுக்கிறது
  • தேற்றினும் மகப் பிரிவு தேற்றல் ஆகாது
  • தேன் உண்டானால் ஈத் தேடி வரும்
  • தேன் உள்ள இடத்தில ஈ மொய்க்கும்
  • தேள் எடுத்தவரைத் தண்டிக்குமா தேனீ?
  • தேன் எடுத்தவன் புறங்கையை நக்காமல் இருப்பானா?
  • தேன் எடுத்தவனுக்கு ஒரு சொட்டு; மாமன் மனையில் இருந்தவனுக்கு ஒரு சொட்டு
  • தேன் ஒழுகப் பேசித் தெருக்கடக்க வழிவிடுவான்
  • தேன் ஒழுகப் பேசுவான்
  • தேன் குடித்த குரங்கைத் தேள் கொட்டியது போல
  • தேன் கூட்டிலே கல்லை விட்டு எறியலாமா?
  • தேன் சர்க்கரை சிற்றப்பா, ஏட்டில் எழுதி நக்கப்பா?
  • தேன் தொட்டவர் கையை நக்காரோ?
  • தேன் நீரைக் கண்டு வான்நீர் ஒழுகுவது போல்
  • தேன் வார்த்து வளர்த்தாலும் காஞ்சிரம் நுங்கு ஆகுமோ?
  • தேனாகப் பேசித் தெருக் கடக்க வழிவிடுவான்
  • தேனில் விழுந்த ஈப்போலத் தவிக்கிறான்
  • தேனுக்கு ஈயைத் தேடி விடுவார் உண்டா?
  • தேனுக்கு ஈயைப் தேடி விடுவார் யார்?
  • தேனுக்கு ஈயைப் பிடித்து விடவேண்டுமா?
  • தேனும் தினை மாவும் தேவருக்கு அமிர்தம்
  • தேனும் பாலும்போல் இருந்து கழுத்தை அறுத்தான்
  • தேனும் பாலும் போல் சேரவேண்டும்
  • தேனும் பாலும் போல
  • தேனும் பாலும் செந்தமிழ்க் கல்வி
  • தேனை எடுத்தவரைத் தண்டிக்குமாம் தேனீ
  • தேனைக் குடித்துவிட்டு இளித்த வாயன் தலையில் தடவினாற்போல
  • தேனைத் தடவிக் கொண்டு தெருத் தெருவாய்ப் புரண்டாலும் ஒட்டுவதுதான் ஒட்டும்
  • தேனைத் தொட்டாயோ? நீரைத் தொட்டாயோ?
  • தேனைத் தொட்டு நீரைத் தொட்டாற்போல் பழகுதல்
  • தேனை வழிக்கிறவன் புறங்கையை நக்கமாட்டானா?
  • தேனை வார்த்து வளர்த்தாலும் காஞ்சிரங்காய் தேங்காய் ஆகாது

தை[தொகு]

  • தை ஈனாப் புல்லும் இல்லை; மாசி ஈனா மரமும் இல்லை
  • தை உழவு ஐயாட்டுக் கிடை
  • தை உழவோ, நெய் உழவோ?
  • தை எள்ளுத் தரையில்; மாசி எள் மடியில் பணம்; வைகாசி எள் வாயில்
  • தைக்கவும் வேண்டாம்; பிய்க்கவும் வேண்டாம்
  • தைக் குறுவை தரையை விட்டு எழும்பாது
  • தைக் குறுவை தவிட்டுக்கும் உதவாது
  • தைக் குறுவையோ, பொய்க் குறுவையோ?
  • தைத்த வாய் இருக்கத் தாணிக் கதவாற் புறப்பட்டாற் போல
  • தைத்த வாயிலும் இருக்கத் தாணித்த வாயிலும் இருக்க எங்காலே போனீர் உப்பனாரே!
  • தைப் பணி தரையைத் துளைக்கும்; மாசிப் பனி மச்சைத் துளைக்கும்
  • தைப் பிள்ளையைத் தடவி எடு
  • தைப் பிறை கண்டது போல
  • தைப் பிறை தடவிப் பிடி; ஆடிப் பிறை தேடிப் பிடி
  • தைப் பிறையைத் தடவிப் பார்
  • தைப் பிறை வட கொம்பு உயர்ந்தால் வடவனுக்குச் சோறு உண்டு; தென் கொம்பு உயர்ந்தால் தெரு எங்கும் தீய வேண்டும்
  • தைப்புக்குத் தைப்பு மரம் பிடித்தாற் போல
  • தை பிறந்தது; தரை வறண்டது
  • தை பிறந்தால் தரை ஈரம் காயும்
  • தை பிறந்தால் தலைக் கோடை
  • தை பிறந்தால் தழல் பிறக்கும். தை பிறந்தால் வழி பிறக்கும்
  • தை மழை தவிட்டுக்கும் ஆகாது
  • தை மழை நெய் மழை
  • தை மாசத்து விதைப்புத் தவிட்டுக்கும் ஆகாது
  • தை மாசப் பனி தலையைப் பிளக்கும்; மாசி மாசப் பணி மச்சைப் பிளக்கும்
  • தை மாசம் தரை எல்லாம் பனி
  • தை மாசம் தரையும் குளிரும்; மாசி மாசம் மண்ணும் குளிரும்
  • தையல் இட்ட புடைவை நைய நாள் செல்லும்
  • தையல் சொல் கேட்டால் எய்திடும் கேடு
  • தையல் சொல் கேளேல்
  • தையலின் செய்கை மையலை ஊட்டும்
  • தையலும் இல்லான், மையலும் இல்லான்
  • தையலும் மையலும்
  • தையலே உலகம் கண்ணாடி
  • தையில் கல்யாணமாம்; ஆடியிலே தாலி கட்டிப் பார்த்துக் கொண்டாளாம்
  • தையில் வளராத புல்லும் இல்லை; மாசியில் முளையாத மரமும் இல்லை
  • தையும் மாசியும் வையகத்து உறங்கு
  • தைரியம் ஒன்றே தனமும் கனமும்
  • தைரியமே சகல நன்மையும் தரும்
  • தைரிய லக்ஷ்மி தனலக்ஷ்மி
  • தை வாழை தரையில் போடு
  • தை வெள்ளம் தாய்க்குச் சோறு

தொ[தொகு]

  • தொக்கலூரிலும் கல்யாணம்; தொங்கலூரிலும் கல்யாணம்.
  • தொங்குகிறது குட்டிச் சுவர்; கனாக் காண்கிறது மச்சுவீடு.
  • தொட்ட காரியம் துலங்காது.
  • தொட்டது துலங்கும்; வைத்தது விளங்கும்.
  • தொட்டதை விட்டபின், விட்டதைத் தொடுமுன் கல்வி கல்.
  • தொட்டவன் மேல் தொடுபழி.
  • தொட்டவன் மேலே பழி; உங்கள் அப்பனை பிடித்து வலி.
  • தொட்டால் கெட்டுவிடும் கண்; தொடாவிட்டால் கெட்டுவிடும் தலை.
  • தொட்டால் சிணுங்கி.
  • தொட்டால் சிணுங்கி, தோட்டத்து முள்ளங்கி.
  • தொட்டால் தோழன்; விட்டால் மாற்றான்.
  • தொட்டால் பிடித்துக் கொள்ள வேண்டியதுதான்.
  • தொட்டால் விடாது தொட்டியப் பிசாசு.
  • தொட்டான்; மூக்கு அறுந்து போச்சு என்றாளாம்.
  • தொட்டியப் பேய் சுடுகாடு மட்டும்.
  • தொட்டில் கண்ட இடத்தில் தாலாட்டலாமா?
  • தொட்டிலில் பிள்ளைக்கு நடக்கிற பிள்ளை நமன்.
  • தொட்டிலுக்குப் பிள்ளையும் கொட்டிலுக்குப் பெண்ணும்.
  • தொட்டிலை ஆட்டித் தொடையைக் கிள்ளுவது போல.
  • தொட்டிலை ஆட்டும் கை தொல்லுலகை ஆட்டும் கை.
  • தொட்டிலையும் ஆட்டிப் பிள்ளையையும் கிள்ளுவாள்.
  • தொட்டு எடுத்த பணத்தைத் தட்டிப் பறித்தாற்போல.
  • தொட்டுக் காட்டாத வித்தை சுட்டுப் போட்டாலும் வராது.
  • தொட்டுக் கெட்டது கண்; தொடாமற் கெட்டது தலை.
  • தொட்டுத் தடவ எண்ணெய் இல்லை; போடுடா பட்டுக் கோட்டைக்கு இரண்டு தீவட்டி.
  • தொட்டுத் தாலி கட்டின புருஷனை எதிர்த்துப் பேசலாமா?
  • தொட்டுக் கொள் துடைத்துக் கொள் என்று இருக்கிறது.
  • தொட்டுத் தடவ எண்ணெய் இல்லை அடிமகளே, தோட்டம் எல்லாம் தீ விளக்காம்.
  • தொட்டுப் பார்த்தால் தோட்டியும் உறவு.
  • தொடங்குகிறது குட்டிச்சுவர்; நினைப்பது மச்சு மாளிகை.
  • தொடாத தொழிலைத் தொட்டவனும் கெட்டான்; தொட்ட தொழிலை விட்டவனும் கெட்டான்.
  • தொடுக்கத் தெரியாவிட்டாலும் கெடுக்கத் தெரியாதா?
  • தொடுத்த காரியத்தை விடுகிறதா?
  • தொடையிலே சிரங்கு; மாமனார் வைத்தியம்.
  • தொண்டர்கள் அன்பன் துணைக்கு நிற்பவன்.
  • தொண்டு எனப் படேல்.
  • தொண்டை பெரிதென்று அம்பட்டன் கத்தியை விழுங்குகிறதா?
  • தொண்டைமான் நாட்டில் தொட்டதெல்லாம் கல்.
  • தொண்டையிலே கண்டமாலை புறப்பட.
  • தொண்டையிலே தூறு முளைக்க.
  • தொண்டையைக் கிழித்துக் கொண்டு பேசுகிறான்.
  • தொண்டை வலிக்குச் சாராயம்; தொடை வலிக்கு வெந்நீர்.
  • தொண்ணூற்றோடே துவரம் பருப்பு ஒரு பணம்.
  • தொண்ணூறு பணம் கடனோடே துவரம் பருப்புக் காற்பணம்.
  • தொத்துக்குத் தொத்து சாட்சி; துவரம் பருப்புக்கு மத்தே சாட்சி.
  • தொத்துக்கு வந்தவன் துரைத்தனம் செய்வானா?
  • தொத்தும் என்றால் மீனாட்சி; தொனுக்கும் என்றால் காமாட்சி.
  • தொப்புள் அறுத்த கத்தி என்னிடத்தில் இருக்கிறது.
  • தொப்புளுக்கு மேல் கஞ்சி.
  • தொம்பைக் கூண்டிலே எலியைக் காவல் வைத்துக் கட்டினது போல.
  • தொழில் இல்லாதவன் தோட்டம் செய்.
  • தொழிலை விட்டவன் முகடி தொட்டவன்.
  • தொழுத கையுள்ளும் படை ஒடுங்கும்.
  • தொழுதாலங்குடிக்குப் பொழுதும் போகவேணுமா?
  • தொழுதூண் சுவையின் உழுதூண் இனிது.
  • தொழுவம் புகுந்த ஆடு புழுக்கை இடாமல் போகுமா?
  • தொழுவார் எல்லாம் உழுவார் தலைக்கடையில்.
  • தொழுவார்க்கு ஒரு கோயிலும் உழுவார்க்கு ஒரு நிலமும் கிடையாவா?
  • தொன்மை நாடி நன்மை நாடாதே.
  • தொன்மை மறவேல்.
  • தொன்னிலம் முழுதும் தோன்றியது கல்வி.

தோ[தொகு]

  • தோகை அழகைத் தொட்டுப் பொட்டு இட்டுக் கொள்ளலாம்
  • தோசிப் பெண்ணுக்கு ஏற்ற சொறியங் கொள்ளி மாப்பிள்ளை
  • தோசைக்குத் தோசை ஓட்டை
  • தோசை சுட்டது கைவிட்டது
  • தோட்டக்காரன் வாழ்வு காற்று அடித்தால் போச்சு
  • தோட்டக்காரனும் திருடனும் சேர்ந்தால் விடிய விடியத் திருடலாம்
  • தோட்டத்தில் அந்தம்
  • தோட்டத்தில் பழம் இருக்கத் தூரத்தில் போவானேன்?
  • தோட்டத்தில் பாதி கிணறு
  • தோட்டத்து நரி கூட்டத்தில் வருமா?
  • தோட்டத்துப் பச்சிலைக்கு வீரியம் மட்டு
  • தோட்டத்துப் பச்சிலை மருந்துக்கு உதவாது
  • தோட்டப் பாய் முடைகிறவனுக்குத் தூங்கப் பாய் இல்லை
  • தோட்டம் நிலைக்குமுன் கத்தரிக் கொல்லை வைக்கிறாயே?
  • தோட்டம் நிலைத்தல்லவோ தென்னம்பிள்ளை வைக்க வேணும்?
  • தோட்டம் முச்சாண்; சுரைக்காய் அறு சாண்
  • தோட்டம் வைத்தால் வாட்டம் இல்லை
  • தோட்டி உறவு தமுக்கோடு சரி
  • தோட்டி பிள்ளை அவனுக்குத் துரைப்பிள்ளை
  • தோட்டிபோல் உழைத்துத் துரைபோல் சாப்பிட வேண்டும்
  • தோட்டிபோல் உழைத்துத் தொண்டைமான் போல் வாழ்
  • தோட்டி முதல் தொண்டைமான் வரையில்
  • தோடு ஒரு நகையா? தோசை ஒரு பலகாரமா?
  • தோண்டக் குறுணி; தூர்க்க முக்குறுணி
  • தோண்டிக் கள்ளைத் தொடர்ந்து குடித்தால் பாண்டியன் மகனும் பறையன் ஆவான்
  • தோண்டியும் பொத்தல்; தாம்பும் அறுதல்
  • தோண்டுகிறது பதக்கு; தூற்றுகிறது முக்குறுணி
  • தோணி போகும்; துறை கிடக்கும்
  • தோ தோ என்றால் மூஞ்சியை நக்கிற்றாம்
  • தோ தோ நாய்க்குட்டி, தொத்தி வா; குடிநாய்க்குட்டி, வேறு பெண்சாதி. தண்ணீருக்குப் போகிறாள், வீட்டைப் பார்த்துக் கொள் நாய்க்குட்டி
  • தோ தோ நாயே, செட்டியார் வீட்டு நாயே, வியாழக்கிழமை சந்தைக்குப் போகிறேன்; வீட்டைக் காத்துக் கொள் நாயே
  • தோ தோ நாயே தொட்டியாங்குளத்து நாயே, நீராவிக்குப் போகிறேன்; வீட்டைக் காத்துக் கொள் நாயே
  • தோய்க்கிற வண்ணாத்திக்கு உஸ் என்ன ஓர் ஆளா?
  • தோய்த்துக் கொண்டு தின்பேன்; உனக்கென்ன?
  • தோரணி கெட்டால் கோரணி
  • தோல் இருக்கச் சுளை போமா?
  • தோல் இருக்கச் சுளை விழுங்கி
  • தோல்வியே வெற்றிக்கு அறிகுறி
  • தோல் விற்ற காசு வீசுமா?
  • தோலுக்குத் தோலாட்டம்; தோல்பனாட்டுக்கு நாயாட்டம்
  • தோலோடு வாழைப்பழம்
  • தோழனாவது துலங்கிய கல்வி
  • தோழனோடும் ஏழைமை பேசேல்
  • தோழி வீட்டுக்குப் போனாலும் தூக்கோடு போக வேணும்
  • தோளில் இருந்து செவியைக் கடிக்கிறதா?
  • தோளின் பேரில் தொண்ணூறு அடி அடித்தாலும் துடைத்துப் போடுவான்
  • தோளின் மேலே தொண்ணூறடி; துடைத்துவிட்டால் ஒன்றும் இல்லை
  • தோளுக்கு மிஞ்சினால் தோழன்
  • தோளுக்கு மேலே துண்ணூறு, துடைச்சுப் பார்த்தால் ஒன்றும் இல்லை
  • தோளுக்கு மேலே துண்ணூறு, துடைத்துப் பார்த்தால் வெண்ணீறு
  • தோளோடு தாலி தொங்கத் தொங்க மகராஜி
  • தோற்பது கொண்டு சபை ஏறேல்
  • தோற்பும் கெலிப்பும் ஒருவர் பங்கு அல்ல
  • தோற்றம் உண்டேல் மரணம் உண்டு
  • தோற்றின யாவும் தோற்றம் அற்று ஒழியும்
  • தோன்றின யாவும் அழியும்
  • தோஷம் பிறந்தால் ஆடு புழுக்கை இடாதா?

தௌ[தொகு]

  • தெளவித் திரியேல்
  • தெளவையின் மனசுக்கு ஒப்புதல் இல்லை

[தொகு]

  • நக்கத் தவிடும் இல்லை; குடிக்கத் தண்ணீரும் இல்லை.
  • நக்கல் வாய் தேட, நாறல் வாய் அழிக்க.
  • நக்கவாரக் கச்ச வடம்போல.
  • நக்க விட்ட நாயும் கொத்த விட்ட கோழியும் நில்லா.
  • நக்கிக் கொண்ட நாயும் கொத்திக் கொண்ட கோழியும் போகா.
  • நக்கு உண்டார் நா எழார்.
  • நக்குகின்ற நாய்க்குச் செக்கு என்றும் சிவலிங்கம் என்றும் தெரியுமா?
  • நக்குகிற பொழுது நாவு எழும்புமா?
  • நக சிகை பரியந்தம்.
  • நகத்தாலே கிள்ளுகிறதைக் கோடாரி கொண்டு வெட்டுகிறான்.
  • நகத்தால் கிள்ளாவிட்டால் கோடரி வெட்டுக்கும் அசையாது.
  • நகத்தாலே கிள்ளுவதைக் கோடரி கொண்டு வெட்டுகிறதா?
  • நகத்தால் கிள்ளாததைக் கோடரி கொண்டு வெட்ட நேரிடும்.
  • நகமும் சதையும் போல.
  • நகரத்துக்கு இரண்டாமவனாக இருப்பதிலும் நாட்டுப் புறத்துக்குத் தலைவனாய் இருப்பதே நன்று.
  • நகரம் எல்லாம் நமக்குச் சொந்தம்; ஆனால் தங்கத்தான் இடம் இல்லை.
  • நகரிப் பெண் நாடு ஏறாது.
  • நகரேஷு காஞ்சி.
  • நகரைக்குப் பெத்தை வழி காட்டுகிறதோ?
  • நடக்க அறியாதவனுக்கு நடுவீதி காத வழி.
  • நடந்தால் நாடெல்லாம் உறவு , படுத்தால் பாயும் பகை.
  • நட்டுவன் பிள்ளைக்குக் கொட்டிக் காட்ட வேண்டுமா !
  • நண்டு கொழுத்தால் வளையில் இராது, தண்டு கொழுத்தால் தரையில் இராது.
  • நத்தையின் வயிற்றிலும் முத்துப் பிறக்கும்
  • நமக்கு ஆகாததது நஞ்சோடு ஒக்கும்.
  • நமனுக்கு நாலு பிள்ளை கொடுத்தாலும் உற்றாருக்கு ஒரு பிள்ளை கொடுக்கமாட்டான்.
  • நமன் அறியாத உயிரும் நாரை அறியாத குளமும் உண்டோ?
  • நயத்திலாகிறது பயத்திலாகாது.
  • நரிக்கு இடங்கொடுத்தால் கிடைக்கு இரண்டு ஆடு கேட்டும்.
  • நரிக்கு கொண்டாட்டம் நண்டுக்குத் திண்டாட்டம்.
  • நரை திரை இல்லை, நமனும் அங்கில்லை.
  • நல் இணக்க மல்லது அல்லற் படுத்தும்.
  • நல்லது செய்து நடுவழியே போனால், பொல்லாதது போகிற வழியே போகிறது.
  • நல்ல மாட்டுக்கு ஒரு சுவடு.
  • நல்ல வேளையில் நாழிப்பால் கறவாதது கன்று செத்துக் கலப் பால் கறக்குமா ?
  • நல்லவன் என்று பெயர் எடுக்க நெடுநாட் செல்லும்.
  • நல்லவன் ஒரு நாள் நடுவே நின்றால் அறாத வழக்கும் அறும்.
  • நல்லார் பொல்லாரை நடக்கையால் அறியலாம்.
  • நகைக்கு மகிழ்ச்சி; நட்புக்கு நஞ்சு.
  • நகைச் சொல் தருதல் பகைக்கு ஏதுவாம். 
  • நகைத்து இகழ்வோனை நாய் என நினை.
  • நகை போட்டதும் இல்லை; போட்டவர்களைப் பார்த்ததும் இல்லை.
  • நங்கும் நாளமும்.
  • நங்கூரம் பாய்ச்சிய கப்பல் போல.
  • நச்சுப் பேச்சு நாளும் தரித்திரம்.
  • நச்சு மரம் ஆனாலும் நட்டவர்கள் வெட்டுவார்களா?
  • நச்சுமரம் ஆனாலும் வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான்
  • நச்சுவாயன் வீட்டில் நாறல் வாயன் குடியிருந்தாற்போல.
  • நச்சுவாயன் வீட்டில் நாறல் வாயன் பெண் கொடுத்தது போல.
  • நசை கொன்றான் செல் உலகம் இல்.
  • நஞ்சுக்குள் இருந்தாலும் நாகமணி, குப்பையில் இருந்தாலும் கோமேதகம்.
  • நஞ்சு நாற்கலம் வேண்டுமா?
  • நட்ட அன்றும் சாவி; அறுத்த அன்றும் பட்டினி.
  • நட்ட அன்று மழையும், கெட்ட அன்று விருந்தும் கேடு.
  • நட்ட குழி நாற்பது நாள் காக்கும்.
  • நட்டது எல்லாம் மரம் ஆமா? பெற்றது எல்லாம் பிள்ளை ஆமா?
  • நட்ட நடுவில் முழம் ஆனேன்; நடவு திரும்பிச் சாண் ஆனேன்; தட்டான் இட்ட வேளாண்மை தானாய்ப் பொன்னிறம் ஆச்சுது.
  • நட்டாலும் தில்லை நாயகம் நடவேண்டும்.
  • நட்டாற்றில் கைவிட்டாற் போல.
  • நட்டாற்றுக் கோரையைப் போல.
  • நட்டு அறான் ஆதலே நன்று.
  • நட்டு ஆயினும், பட்டு ஆயினும்.
  • நட்டுக் காய்ந்தால் நாழி நெல் காணாது.
  • நட்டுவன் பிள்ளைக்குக் கொட்டிக் காட்ட வேண்டுமா?
  • நட்டுவன் பிள்ளைக்குக் கொட்டு அடிக்கத் தெரியாதா?
  • நட்டுவன் பிள்ளைக்கு நாட்டியம் கற்க வேண்டுமா?
  • நட்டுவன் பிள்ளைக்கு முட்டு அடிக்கத் தெரியாதா?
  • நட்டுவனுக்கு உண்டு தட்டுவாணித் தனம்.
  • நட்டுவனுக்கு நொட்டுப் பழக்குகிறாயா?
  • நடக்க அறியாதவனுக்கு நடுவீதி காதவழி.
  • நடக்கக் கற்ற பிள்ளை தவழக் கற்றதாம்; தாயார் செய்த தவம்.
  • நடக்கப் பால்மாறிச் சிற்றப்பன் வீட்டில் பெண்கட்டிக் கொண்டானாம்.
  • நடக்க மாட்டாத தலவாடிக்கு நாலு பக்கமும் சவாரி.
  • நடக்க மாட்டாதவன் சிற்றப்பன் வீட்டிலே பெண் கேட்டாற் போல.
  • நடக்கிறது நடக்கட்டும், தெய்வம் இருக்கிறது.
  • நடக்கிற பிள்ளை தவழ்கிறது; தாயார் செய்த தருமம்.
  • நடக்கிற வரையில் நாராயணன் செயல்.
  • நடக்கும் கால் இடறும்.
  • நடக்குந்தனையும் நாடங்கம்; படுத்தான்தான் பாயும் தானும்.
  • நடக்கும் கால் தவறுதலிலும் நாத் தவறுதல் கெட்டது.
  • நடத்தை தப்பினவன் அண்ணனாகிலும் தம்பியாகிலும் நறுக்கு.
  • நடந்த காலிலே சீதேவி; இருந்த காலிலே மூதேவி.
  • நடந்தபிள்ளை நகருகிறது.
  • நடந்த மட்டும் நடக்கட்டும்; நஷ்டத்துக்கு உத்தரவாதம் பண்ணப் போகிறீரா?
  • நடந்தவரை நமது செயல்; நாளை நடப்பது நாயன் செயல்.
  • நடந்தவன் காலிலே சீதேவி; இருந்தவன் காலிலே மூதேவி.
  • நடந்தார்க்கு நாடு எங்கும் உறவு; கிடந்தார்க்குப் பாயே உறவு.
  • நடந்தால் நடை அழகி; நாவிலும் பல் அழகி.
  • நடந்தால் நாடு எல்லாம் உறவு; படுத்தால் பாயும் பகை.
  • நடபடி உண்டானால் மிதியடி பொன்னாலே.
  • நடலப் புடலங்காய் காய்க்கிறதாம்! நாழிக்குப் பத்தெட்டு விற்கிறாளாம்.
  • நடவாத காரியத்தில் பிடிவாதம் பிடிக்கிறது.
  • நடவில் சிரிப்பு; அறுவடையில் நெருப்பு.
  • நடவுக்குத் தெளி, நாலத் தொன்று.
  • நடவு நட்டாலும் நாற்று மீந்தாலும் நான் நடக்கிற நடை இதுதான் என்று சொல்லுமாம் கடா.
  • நடு உழவிலே நத்தை தெறித்தது போல.
  • நடு ஊரிலே நச்சுமரம் பழுத்து என்ன?
  • நடுக்கடல் போனாலும் மறுப்படாமல் வரக்கடவீர்.
  • நடுக்கடலில் விழுந்து அலைகிறவனுக்கு ஒரு தெப்பம் அகப்பட்டதைப் போல.
  • நடுக்கத் தட்டானுக்குக் கல்யாணம்; நாற்பத்தெட்டாந் தேதி.
  • நடுக்காட்டில் போனாலும் வடுப்படாமல் வருவார்.
  • நடுங்க அடித்துப் பிடுங்குகிறதா?
  • நடுச் சமுத்திரத்திலும் நாய்க்கு நக்குத் தண்ணீர்தான்.
  • நடுச் செவியில் நாராசம் காய்ச்சி விட்டாற்போல.
  • நடுத்தரம் ஆனவருடைய தாங்கல் பொன்னின் பிளவு போலப் பற்ற வைத்தால் மாறும்.
  • நடுத் தெரு நாராயணன்.
  • நடுத்தெருப் பிச்சைக்கு நாணயம் பார்க்கலாமா?
  • நடுப்படையில் போனாலும் வடுப்படாமல் வருவான்.
  • நடுப்புடைவையில் கோவணம் கிழிக்கிற மாதிரி.
  • நடு மேட்டில் நரி கத்திற்றாம், தீர்த்த முடக்கில் தேள் கொட்டிற்றாம்.
  • நடைக்கு அஞ்சிச் சிற்றப்பன் வீட்டில் பெண் கொண்டானாம்.
  • நடைக்குச் சோம்பற்பட்டுச் சிற்றப்பன் வீட்டில் வாழ்க்கைப் பட்டாளாம். 
  • நடை சிறிது ஆகில் நாள் ஏறும்; படை சிறிது ஆகில் பயம் ஏறும்.
  • நடை பாக்கியம்; இடை போக்கியம்.
  • நண்டு அளந்த நாழி போல.
  • நண்டு இழந்த நாழி போல.
  • நண்டு இழந்த நாழியும் தொண்டு இழந்த கயிறும்.
  • நண்டு உதவும்; நண்டுகள் உதவா.
  • நண்டு ஊர நாடு செழிக்கும்.
  • நண்டு எழுத்துக் கண்டு எழுதலாமா?
  • நண்டு எழுத்துப் போல்.
  • நண்டுக்கு அழகு சேறும் கலங்கலும்.
  • நண்டுக்குக் கல்யாணம்; நரிக்குச் சங்கராந்தி.
  • நண்டுக் குடுவையை நடுத் தெருவில் உடைத்தது போல.
  • நண்டுக்குச் சீவன் போகிறது; நரிக்குக் கொண்டாட்டம்.
  • நண்டுக்குத் திண்டாட்டம், நரிக்குக் கொண்டாட்டம்.
  • நண்டுக்குப் பட்டால்தான் தெரியும்; குரங்குக்குச் சுட்டால்தான் தெரியும்.
  • நண்டுக்குப் புளியங்காய் இட்டு நறுக்கினாற் போல.
  • நண்டுக்கடி காலைவிட்டு ஓடியது போல.
  • நண்டு கால் விரித்தாற் போல.
  • நண்டு கொழுத்தால் வளையில் இராது; பள்ளி கொழுத்தால் பாயில் இரான்.
  • நண்டு பொரித்திட்டுத் திகைப்பூண்டு கண்டாற் போல.
  • நண்டு வளையிற் கை இட்டது போல.
  • நண்டு வளையைச் சுற்றிய நரியைப் போல.
  • நண்டைக் கொடுக்கு ஒடித்தாற் போல.
  • நண்டைச் சுட்டு நரியைக் காவல் வைத்தது போல.
  • நண்டை நாழி கொண்டு அளக்கலாமா?
  • நண் பொருள் கொடுத்து நன்றாய் ஓது.
  • நத்தத்திலே நாய் பெருத்தது போல.
  • நத்த வாழைக்கு நித்தம் ஒரு காசு.
  • நத்த வாழையிலே நித்தம் காற் பணம்.
  • நத்துக்கும் சுழி, முத்துக்கும் சுழி, குன்றிமணிக்கும் பிட்டத்திலே சுழி.
  • நத்துப் புல்லாக்கு நாணயம் பார்க்கிறது; இரட்டைக் குண்டு அட்டிகை எட்டி எட்டிப் பார்க்கிறது.
  • நத்தையின் வயிற்றில் முத்துப் பிறந்தது போல.
  • நதி எல்லாம் பால் ஆனாலும் நாய் நக்கித்தான் குடிக்க வேண்டும்.
  • நதி மூலத்தையும் ரிஷி மூலத்தையும் விசாரிக்கக் கூடாது.
  • நந்தன் தோல் காசு வழங்கினாற் போல.
  • நந்தன் படைத்த பண்டம் நாய் பாதி, பேய் பாதி.
  • நந்தன் படை வீடா?
  • நந்தோ ராஜா பவிஷ்யதி.
  • நபும்சகன் கையில் ரம்பை அகப்பட்டது போல
  • நம் நிழல் நம்மோடே.
  • நம்ப நட, நம்பி நடவாதே.
  • நம்பமாட்டாதவன் பெண்சாதிக்கு நாற்பது பேர் மாப்பிள்ளைமார்.
  • நம்பவைத்து கழுத்து அறுக்கலாமா?
  • நம்பியான் விட்டதே தீர்த்தம்.
  • நம்பின பேருக்கு நடராஜா, நம்பாத பேருக்கு யமராஜா.
  • நம்பினவரை உண்மையில் காத்தான்.
  • நம்பினவரைக் காட்டில் விடலாமா?
  • நம்பினவரை நட்டாற்றில் விடலாமா?
  • நம்பினால் தெய்வம்; நம்பாவிட்டால் கல்.
  • நம்பூதிரி சொத்தை எழுதி வைத்த மாதிரி.
  • நம்பூதிரி வெற்றிலை போட்டுக் கொண்ட மாதிரி.
  • நம்மாழ்வார் நம்மைக் கெடுத்தார்; கூரத்தாழ்வார் குடியைக் கெடுத்தார்.
  • நம்மைச் செருப்பால் அடித்தாலும் நம் அண்ணன் வீட்டுப் பயலை வாடா, போடா என்னலாமா?
  • நம்மை நம்ப வேண்டாம்; அம்மாளைத் தாலி வாங்கச் சொல்.
  • நம்மை வணங்குகிறவனை நாம் வணங்குகிறதா?
  • நம் வீட்டு விளக்கென்று முத்தம் இடலாமா?
  • நமக்கு ஆகாதது நஞ்சோடு ஒக்கும்.
  • நமக்கு எல்லாம் எப்போது அமாவாசை? சூத்திரர்களுக்கு எப்போது அமாவாசை?
  • நமது தலைமயிர் அவன் கையில் அகப்பட்டுக் கொண்டது.
  • நமன் அறியாத உயிரும் நாரை அறியாத குளமும் உண்டோ?
  • நமன் அறியாமல் உயிர் போய் விடுமா?
  • நமன் எடுத்துக் கொண்டு போகும் பொழுது நழுவி விழுந்தவன்.
  • நமன் வாயிலே மண் போட்டாயா?
  • நமனுக்கு நாலு பிள்ளை கொடுத்தாலும் உற்றாருக்கு ஒரு பிள்ளை கொடுக்க மாட்டான்
  • நயத்தில் ஆகிறது பயத்தில் ஆகாது.
  • நய மொழியால் ஜயம் உண்டு.
  • நரசிம்மரை நரி மிரட்டியதாம்; நரியை நாய் மிரட்டியதாம்.
  • நரப்புப் புல்லைப் பிடுங்கினாலும் வரப்புப் புல்லைப் பிடுங்காதே.
  • நரா போகம் சரா போகம்.
  • நரி அம்மணமாய்ப் போகிறதா?
  • நரி இடம் போனால் நல்லதா? வலம் போனால் நல்லதா என்றால் மேலே விழுந்து கடிக்காமல் போனால் நல்லது என்பது.
  • நரி ஊரை விட்டுப் புலி ஊருக்குப் போனேன்; புலி ஊரும் நரி ஊர் ஆயிற்று.
  • நரி ஊளையிட்டால் சமுத்திரம் மட்டும்.
  • நரி எதிர்த்தால் சிங்கம்.
  • நரி ஒரு சாலுக்கு உழப் போனது.
  • நரிக்கு அதிகாரம் கொடுத்தால் கிடைக்கு ஒரு கிடாய் கேட்கும்.
  • நரிக்கு உபதேசம் செய்தாற் போல.
  • நரிக்குக் கல்யாணம்; நண்டுக்குப் பிராம்மணார்த்தம்.
  • நரிக்குக் கொண்டாட்டம்; நண்டுக்குத் திண்டாட்டம்.
  • நரிக்குட்டிக்கு ஊளை இடப் பழக்க வேண்டுமோ?
  • நரிக்கு நண்டு ஆசை; நாய்க்கு எலும்பு ஆசை.
  • நரிக்கு மணியம் கொடுத்தால் கிடைக்குக் கிடை இரண்டு ஆடு கேட்கும்.
  • நரிக்கு வால் முளைத்தாற்போல.
  • நரிக் குளிப்பாட்டி.
  • நரிக் கூப்பாடு கடல் முட்டிப் போகும்.
  • நரிக் கொம்பு போல.
  • நரி கல்யாணத்துக்கு வெயிலோடு மழை.
  • நரி கல்யாணத்துக்கு நண்டு பிராமணார்த்தம்.
  • நரி கிணற்றில் விழுந்தால் தண்டடி தடியடி.
  • நரி குசு விட்டதாம், கடல் கலங்கிப் போயிற்றாம்.
  • நரி கூக்குரல் சமுத்திரம் எட்டியது போல.
  • நரி கூப்பிட்டுக் கடல் ஒதுங்குமா?
  • நரி கொழுத்தால் வளையில் இராது.
  • நரி கொழுத்து என்ன? காஞ்சிரம் பழுத்து என்ன?
  • நரி செத்த இடத்திலே நாய் வட்டம் போட்டது போல.
  • நரி தின்ற கோழி போல.
  • நரி நாலு கால் திருடன்; இடையன் இரண்டு கால் திருடன்.
  • நரி முகத்தில் விழித்தது போல.
  • நரி முன்னே நண்டு கரணம் போட்டது போல
  • நரியின் கல்யாணத்தில் வெயிலோடு மழை.
  • நரியின் கையில் இறைச்சியை வைத்த கதை.
  • நரியின் கையிலே குடல் கழுவக் கொடுத்தது போல.
  • நரியின் பிரசவத்துக்கு நாய் மருத்துவச்சி.
  • நரியை எழுப்பிப் புலியைக் கலைப்பது போல.
  • நரியை ஏய்க்கப் பார்க்கிறதாம் தில்லை நண்டு.
  • நரியை நனையாமல் குளிப்பாட்டுவான்.
  • நரியை வெள்ளரிக்காய் மிரட்டினாற் போல.
  • நரி வாயிலே மண் போட்டாயா?
  • நரி வால்பற்றி நதி கடக்கல் ஆகாது.
  • நரி வாலைக்கொண்டு கடல் ஆழம் பார்க்கிறது போல.
  • நரைத்த மயிர் கறுத்து நங்கை நாய்ச்சியார் கொண்டை முடிப்பாளாம்.
  • நரைத்த தலைக்கு இட்ட எண்ணெயும் இதயமற்றவனுக்குப் போட்ட சோறும்.
  • நரைத்தவன் எல்லாம் கிழவனா?
  • நரைத்தவன் கிழவன், நாமம் இட்டவன் தாதன்.
  • நரை திரை இல்லை; நமனும் அங்கு இல்லை.
  • நல் இணக்கம் அல்லது அல்லற் படுத்தும்.
  • நல் இனத்தில் நட்பு வலிது.
  • நல் உடலுக்கு இளைப்பாற்றிக் கொடாவிடினும் நாவுக்குக் கொடு.
  • நல்ல அமைச்சு இல்லாத அரசு, விழியின்றி வழிச் செல்வான் போலாம்.
  • நல்ல ஆத்மாவுக்கு நாற்பது நாள்.
  • நல்ல ஆரம்பமே நல்ல முடிவு.
  • நல்ல இளங்கன்றே, துள்ளாதே.
  • நல்ல உயிர் நாற்பது நாள் இருக்கும்.
  • நல்ல எழுத்து நடுவே இருக்கக் கோணல் எழுத்துக் குறுக்கே போட்டது என்ன?
  • நல்ல எழுத்து நடுவே இருக்கக் கோணல் எழுத்துக் குறுக்கே போட்டது என்ன?
  • நல்ல எழுத்து நடுக்கே; கோணல் எழுத்துக் குறுக்கே.
  • நல்ல கதை நீளம் இல்லை.
  • நல்ல காரியத்துக்கு நானூறு இடைஞ்சல்.
  • நல்ல காலத்திலேயே நாயகம்.
  • நல்ல குடிக்கு நாலத்தொரு பங்காளி
  • நல்ல குதிரை புல்லுக்கு அழுகிறது; நொண்டிக் குதிரை கொள்ளுக்கு அழுகிறது.
  • நல்ல குருவினை நாடிக் கொள்.
  • நல்லது எல்லாம் பொல்லாதது, நாய் எல்லாம் பசு.
  • நல்லதுக்கா நரையான் இடமாச்சு?
  • நல்லதுக்கா நாய்க்குணம்?
  • நல்லதுக்கா நாய்மேல் சன்னதம் வந்தது?
  • நல்லதுக்கா வந்திருக்கிறது, நாய்மேல் சங்கராந்தி?
  • நல்லதுக்கு ஒரு பொல்லாதது; பொல்லாததுக்கு ஒரு நல்லது.
  • நல்லதுக்கு நாலு இடையூறு வரும்.
  • நல்லது கண்டால் இறைவனுக்கு என்பார் நல்லோர்.
  • நல்லது கண்டால் நாயகனுக்கு நல்குவார்.
  • நல்லது கெட்டது நாலுபேர் சொல்வார்கள்.
  • நல்லது கெட்டால் நாய்க்கும் கடை.
  • நல்லது செய்கிறவன் பெண்சாதியை நாய்க்குப் பிடித்துக் கட்டு.
  • நல்லது செய்து நடுவழியே போனால் பொல்லாதது போகிற வழியே போகிறது.
  • நல்லது செய்வதில் நாலு இடையூறு வரும்.
  • நல்லது சொல்ல நாட்டுக்கு ஆகாது.
  • நல்லது சொல்ல நாடும் இல்லை; உற்றது சொல்ல ஊரும் இல்லை.
  • நல்லது சொல்லிக் கெட்டார் இல்லை.
  • நல்லது சொல்லி நடுவழியே போனாலும் பொல்லாதது போகிற வழியே போகும்.
  • நல்லது தெரியுமா நாய்க்கு?
  • நல்லது நாற்கலம்; ஊத்தை ஒன்பது கலம்.
  • நல்லது போனால் தெரியும்; கெட்டது வந்தால் தெரியும்.
  • நல்ல தேசத்துக்கு நாலு செம்பு.
  • நல்ல நாய் ஆனாலும் நரகலை நாடித்தானே செல்லும்.
  • நல்ல நாய்ச்சியார் கடைந்த மோர் நாழி முத்துக்கு நாழி மோர்.
  • நல்ல நாயைக் கிள்ளியா பார்க்க வேணும்?
  • நல்ல நாளில் நாழிப்பால் கறக்காது; அதிலும் கன்று செத்த கசுமாலம்.
  • நல்ல நாளில் நாழிப்பால் கறவாதது, கன்று செத்துக்கப்பால் கறக்குமா?
  • நல்ல நாளில் நாழிப்பால் கறவாத மாடா ஆகாத நாளிலே அரைப்படி கறக்கும்?
  • நல்ல நாளிலே நாழிப் பால் கறவாதது, கோடை நாளிலே குறுணி கறக்குமா?
  • நல்ல நினைவை அநுசரித்தலே கெட்ட நினைவை நீக்கல்.
  • நல்ல பாம்பு ஆடியது கண்டு நாகப்பூச்சி ஆடியது போல.
  • நல்ல பாம்பை ஆட்டுகிற பிடாரன் நாகப்பூச்சியைக் கண்டு பயப்படுவானா?
  • நல்ல பிராணன் நாற்பது நாள்.
  • நல்ல பெண்டுக்கு ஒரு சொல்; நல்ல மாட்டுக்கு ஓர் அடி.
  • நல்ல மரத்தில் நச்சுக்கனி பழுக்காது.
  • நல்ல மரத்தில் நரையான் விழுந்த மாதிரி.
  • நல்ல மரத்தில் நல்ல பாம்பு குடியிருந்தாற் போல.
  • நல்ல மரத்தில் புல்லுருவி முளைத்தது போல.
  • நல்ல மரம் நச்சுக் கனியைத் தராது; நச்சு மரத்திலே நல்ல கனியும் வராது.
  • நல்ல மனைவி நல்லதைக் கண்டால் நமது புருஷனுக்கு என்பாள்.
  • நல்ல மாட்டுக்கு ஒரு சூடு; நல்ல பெண்டாட்டிக்கு ஒரு வார்த்தை.
  • நல்ல மாட்டுக்கு ஒரு சூடு; பட்டி மாட்டுக்குப் பத்துச் சூடு.
  • நல்ல மாட்டுக்கு ஓர் அடி; நல்ல மனுஷர்களுக்கு ஒரு சொல்.
  • நல்ல மாடு ஆனால் உள்ளூரில் விலை போகாதா?
  • நல்லவர் ஒரு நாள் செய்த உபகாரத்தை மறவார்.
  • நல்லவர் கண்ணில் நாகம் பட்டாலும் கொல்லார்.
  • நல்லவர்களுக்குச் சொல்லாமல் சாவு வரும்.
  • நல்லவர் கெட்டால் நாயும் சீந்தாது.
  • நல்லவர் சங்காத்தம் நல்ல மணலில் விழுந்த நீர் போல உதவும்.
  • நல்லவரிடத்தில் நல்ல பாம்பும் சேரும்.
  • நல்லவரிடத்தில் நன்மை விளங்கும்.
  • நல்லவன் உறவை நாலு பணம் கொடுத்துச் சம்பாதிக்க வேண்டும்; கெட்டவன் உறவைப் பத்துப் பணம் கொடுத்து நீக்க வேண்டும்.
  • நல்லவன் என்று பெயர் எடுக்க நாள் செல்லும்.
  • நல்லவன் ஒருவன் நடுவே நின்றால் அறாத வழக்கும் அறும்.
  • நல்லவனுக்கு அடையாளம் சொல்லாமற் போவது.
  • நல்லவனுக்கு ஒரு சொல்; நல்ல மாட்டுக்கு ஓர் அடி.
  • நல்லவனுக்குக் காலம் இல்லை.
  • நல்லவனுக்கு நாடு எங்கும் உறவு.
  • நல்லவனுக்கு நாலு இடத்தில் மயிர்; போக்கிரிக்குப் பொச்சு வாயெல்லாம் மயிர்.
  • நல்லவனுக்கும் கெட்டவனுக்கும் நாட்டும் வேண்டாம்; சீட்டும் வேண்டாம்.
  • நல்ல வார்த்தை சொல்லி நாடியைத் தாங்குகிறான்.
  • நல்ல வார்த்தை சொன்னால் பொல்லாப்பு வராது.
  • நல்ல வீடு என்று பிச்சைக்கு வந்தேன்; கரியை வழித்துக் கன்னத்தில் தடவினார்கள்.
  • நல்ல வேலைக்காரன் ஆற்றோடே போகிறான்.
  • நல்ல வேளை முளைக்கிற இடத்தில் நாய் வேளையும் முளைக்கிறது.
  • நல்ல வேளையிலே ஞாயிற்றுக் கிழமையிலே.
  • நல்லறம் உள்ளது இல்லறம்.
  • நல்லறம் செய்வது, செய்யாது கேள்.
  • நல்லாயிருந்தது தாதரே, பல்லை இளித்துக்கொண்டு பாடினது.
  • நல்லாக் கள்ளி விழித்தாற் போல.
  • நல்லார் ஒருவர்க்குப் பெய்யும் மழை எல்லார்க்கும் ஆம்.
  • நல்லார்க்கு நாக்கில் உரை; பொன்னுக்குக் கல்லில் உரை.
  • நல்லார் கையில் நாகம் அகப்பட்டாலும் கொல்லார்
  • நல்லார் சங்காத்தம் நல்ல மண்ணில் விழுந்த நீர்போல உதவும்.
  • நல்லார் நடக்கை தீயோர்க்குத் திகில்.
  • நல்லார் பொல்லாரை நடத்தையால் அறியலாம்.
  • நல்லாருக்குப் பெய்த மழை எல்லாருக்கும் ஆம்.
  • நல்லாரும் நல்ல பாம்பைப் போலத் தங்கள் வலிமையை அடக்கி மறைத்திருப்பார் சில வேளை.
  • நல்லாரைக் கண்டால் நாய் போல; பொல்லாரைக் கண்டால் பூனை போல.
  • நல்லாரை நாவில் உரை; பொன்னைக் கல்லில் உரை.
  • நல்லாரை நாவு அழியப் பேசினால் பல்லாலே பதக்குப் புழுச் சொரியும்.
  • நல்லுடலுக்கு இளைப்பாற்றிக் கொடாவிடினும் நாவிற்குக் கொடு.
  • நல்லெருமை நாகு; நற்பசு சேங்கன்று; அடியாள் பெண்பெற.
  • நல்லோர்க்குப் பொறுமையே துணை.
  • நல்லோர் நடத்தை தீயோருக்குத் திகில்.
  • நல்லோரை ஏசினால் நாவு புழுக்கும்.
  • நல்லோரை நாடு அறியும்; பொன்னை நெருப்பு அறியும்.
  • நல்லோரை நாவில் உரை; பொன்னைக் கல்லில் உரை.
  • நல்லோன் என வளர்.
  • நலம் உள்ளோன் கவலை தீர்க்க, நமக்கு அந்தக் கவலை ஏற்க நல்லது.
  • நவாபு அத்தனை ஏழை; புலி அத்தனை சாது.
  • நவாபு தர்பார்.
  • நவாபு நா அசைந்தால் நாடு அசையும்; பக்கிரி நாடு அசைந்தால் மோவாய்க் கட்டைதான் அசையும்.
  • நழுவ முடிந்தால் நம்பாதே.
  • நழுவப் போகிறவனைத் தழுவிப் பிடிக்கிறதா?
  • நளபாகம் பீமபாகம் போல.
  • நற்குணமே நல்ல ஆஸ்தி.
  • நற்சிங்கத்துக்கு நாயா முடி சூட்டுகிறது.
  • நற் பெண்டாட்டிக்கு ஒரு சொல்.
  • நற் பெண்டிர் நல்லதைக் கண்டால் நமது நாயகனுக்கு என்பார்.
  • நற் பெண்டுக்கு ஒரு சொல்; நல்ல மாட்டுக்கு ஒரு சூடு.
  • நற் பெயரே பணத்தை விட மேலானது.
  • நறுக்குத் தெறித்தாற் போல நாலு வார்த்தை பேசு.
  • நறுவிலிப்பழம் திருத்தினாற் போல.
  • நன்செய்க்கு ஏர் உழவு; புன்செய்க்கு நால் உழவு.
  • நன் பொருள் கொடுத்தும் நன்றாய் ஓது.
  • நன்மை ஆனதைக் கொடுத்தால் நஷ்டத்திலும் நஷ்டம்.
  • நன்மை கடைப்பிடி.
  • நன்மை செய்தார் நன்மை பெறுவார்? தீமை செய்தார் தீமை பெறுவார்.
  • நன்மை செய்திடில் நாலு இடையூறும் வரும்.
  • நன்மை செய்பவருக்கு இடையூறு செய்கிறதா?
  • நன்மை செய்யக் கன்மம் விடையாது.
  • நன்மை செய்யக் கனம்.
  • நன்மை செய்வார் நலம் பெறுவர்; தீமை செய்தால் தீமை பெற்று நலிவர்.
  • நன்மையும் தீமையும் இம்மையிலே தெரியும்.
  • நன்மையைப் பெருக்கித் தீமையைக் குறைத்தல் நன்னெறி.
  • நன்றாய் இருக்கிறது நாயகரே,இளித்துக் கொண்டு ஆடுகிறது.
  • நன்றாய் இருந்தாலும், நல்லி சுட்ட பணியாரம்.
  • நன்றாய் இருந்தாலும் பார்க்க மாட்டார்கள்; கெட்டாலும் தாங்க மாட்டார்கள்.
  • நன்றாய் இருந்தாலும் பார்க்க மாட்டார்கள்; நலம் தப்பினாலும் பார்க்கமாட்டார்கள்.
  • நன்றாய் முடிவது எல்லாம் நன்றே.
  • நன்றிக்கு நாய்; கர்வத்துக்குக் களிறு.
  • நன்றி கெட்ட நாய் தின்றதெல்லாம் மண்ணா?
  • நன்றி கெட்டவன் நாயினும் கடையன்.
  • நன்றி செய்த கீரிப்பிள்ளையைக் கொன்ற கதை போல.
  • நன்றி செய்தவனை நாயின் கழுத்தில் கட்டு.
  • நன்றி மறந்தாரைத் தெய்வம் நின்று கொல்லும்.
  • நன்றி மறந்தாரை நடுங்கக் கேட்கும் தெய்வம்
  • நன்றி மறவேல்.
  • நன்று செய் மருங்கில் தீது இல்.
  • நன்னிலம் கரந்தை; நடு நிலம் கொளிஞ்சி.
  • நனவிலும் இல்லது கனவிலும் இல்லை.
  • நனைத்துச் சுமக்கிறதா?
  • நனைந்த கிழவன் வந்தால் உலர்ந்த விறகுக்குச் சேதம்.
  • நனைந்த கோழி மயிர் போலே.
  • நனையா வறட்டி இல்லையெனில் ஆனைக்கால் நோய் இல்லை.
  • நஷ்டத்துக்கு ஒருவன், நயத்துக்கு ஒருவன்.
  • நஷ்டத்துக்குப் பலர்; நயத்துக்கு ஒருவனோ?
  • நக்ஷத்திரத்தை எண்ண முடியாது; நாய்வாலை நிமிர்த்த முடியாது.

நா[தொகு]

  • நா அசைய நாடு அசையும்.
  • நாக்கிலே இருக்கிறது நன்மையும் தீமையும்.
  • நாடறிந்த பார்ப்பானுக்கு பூணூல் அவசியமா ?
  • நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும்.
  • நாயைக் கண்டால் கல்லை காணோம், கல்லைக் கண்டால் நாயை காணோம்.
  • நாய் இருக்கிற சண்டை உண்டு.
  • நாய்க்கு வேலையில்லை நிறக நேரமும் இல்லை.
  • நாய் விற்ற காசு குரைக்குமா?
  • நாலாறு கூடினால் பாலாறு.
  • நாள் செய்வது நல்லார் செய்யார்.
  • நாற்பது வயதுக்கு மேல் நாய் குணம்.
  • நாற்பது வயதுக்கு மேல் நாய் குணம்.
  • நா அசைய நாடு அசையும்.
  • நா உள்ளவன் கழு ஏற மாட்டான்.
  • நா என்னும் அட்சரம் நாதன் இருப்பிடம்.
  • நாக்காலே போட்ட முடி பல்லால் கடித்து இழுத்தாலும் வருமா?
  • நாக்கில் இருக்கின்றன நன்மையும் தீமையும்.
  • நாக்கில் தர்ப்பையைப் போட்டுப் பொசுக்க வேணும்.
  • நாக்கில் நரம்பு இல்லாமல் பேசுகிறான்.
  • நாக்கில் புண்ணாம்; நாய் நொண்டி நொண்டி நடந்ததாம்.
  • நாக்கிலே வெல்லம், நாவிலே விஷம்.
  • நாக்கிற்கு நரம்பு இல்லை.
  • நாக்கு ஒன்றா இரண்டா?
  • நாக்குக்கு எலும்பு இல்லை; எப்படிப் புரட்டினாலும் புரளும்.
  • நாக்குப் புரட்டர் போக்குப் புகல்வர்.
  • நாக்குப் புரண்டாலும் வாக்குப் புரளாது.
  • நாக்கும் சீக்கும் பொல்லா.
  • நாக்கை அடக்கிப் பேசு.
  • நாக்கைத் தொங்கவிட்டுத் தலை ஆட்டும் நாய் போல.
  • நாக்கை நறுக்கி நாய்க்குப் போடவேண்டும்.
  • நாக்கைப் படைத்தவர்கள் நாலையும் சொல்வார்கள்; பல்லைப் படைத்தவர்கள் பத்தையும் சொல்வார்கள்.
  • நாக்கை விற்று ஆக்கித் தின்கிறது.
  • நாகசுரம் என்றால் தெரியாதா? மத்தம் போலக் கலகல என்னும்.
  • நாகசுரம் பொய், நாசனம் பொய், நாயினம் ஆயினேனே!
  • நாகப்பட்டினம். 
  • நாகப் பாம்பு ஆடினதைப் பார்த்து நாங்கூழ்ப் பூச்சியும் ஆடினதைப் போல.
  • நாகம் கட்டினால் நாதம் கட்டும்.
  • நாகரிகப் பெண்ணுக்கு நாக்குத் தூக்கு மிச்சம்.
  • நாகலோகத்து நஞ்சு அமிர்தம் உண்டவன்.
  • நாகூர் உபசாரம்.
  • நாகைக்கும் காரைக்கும் காதம், காரைக்கும் கடவூருக்கும் காதம்; கடவூருக்கும் காழிக்கும் காதம்; காழிக்கும் தில்லைக்கும் காதம்.
  • நாகை செழித்தால் நாடு செழிக்கும்.
  • நாங்களும் கங்கணம் கட்டினது உண்டு; கழுத்துக்குக் கங்கணம் கட்டினது இல்லை.
  • நாங்கை நாலாயிரம்.
  • நாச்சியாரும் ஒன்றைப் பற்றி வார்க்கிறாள்; நானும் ஒன்றைப் பற்றிக் குடிக்கிறேன்.
  • நாச்சியாரைக் காணாத இடத்திலே முணுமுணுப்பது போல.
  • நாசியால் போகிற சீவனைக் கண்ட்ர கோடரியால் வெட்டுவதா?
  • நாசுவக் கிருதும் வண்ணான் ஒயிலும்.
  • நாசேத்தி மாத்ரா, வைகுண்ட யாத்ரா.
  • நாட்கள் பாரேல்.
  • நாட்டரசன் கோட்டை, நாலு பக்கம் ஓட்டை
  • நாட்டாண்மைக் காரனைப் பகைத்துக் கொண்டால் பழைய கந்தாயத்தைக் கேட்பான்.
  • நாட்டாண்மை யாரடா கொடுத்தார்? நானும் என் பெண்சாதியுமாக வைத்துக் கொண்டோம்.
  • நாட்டாள் பெற்ற குட்டி, நாகரிகம் பேச வல்ல குட்டி.
  • நாட்டாளுக்கு ஒரு சீட்டாள்; வெற்றிலை மடிக்க ஒரு வெற்றாளி.
  • நாட்டாளுக்கு ஒரு நீட்டாளோ?
  • நாட்டான் பெண்சாதி என்றால் ஏன் என்பாள்; நாலு பேருக்குச் சோறு என்றால் ஊமை எனபாள்.
  • நாட்டான் வைத்த கோட்டானா; கோட்டான் வைத்த நாட்டானா?
    • (நாட்டார் என்பதை 'நாட்டான்' எனவும், court என்பதை 'கோட்டான்' எனவும் வழக்கு மொழியில் கூறுவர்)
  • நாட்டில் பஞ்சாங்கம் போனால் நட்சத்திரமும் போச்சோ?
  • நாட்டிலே விளைந்தால் நன்னாரி; மலையிலே விளைந்தால் மாகாளி.
  • நாட்டுக் கலப்பையால் நாலு முறை உழு.
  • நாட்டுக்கு அடுத்தது கொங்கராயனுக்கு.
  • நாட்டுக்கு அரசன்; வீட்டுக்கு நாய்.
  • நாட்டுக்கு ஒரு தலைவன்; நாய்க்கு ஒரு எஜமானன்.
  • நாட்டுக்கு ஒரு மழை; நமக்கு இரண்டு மழை.
  • நாட்டுக்குக் கரும்பு; வீட்டுக்கு வேம்பு
  • நாட்டுக்கு நல்ல துடைப்பம்;வீட்டுக்குப் பீற்றல் துடைப்பம்.
  • நாட்டுக்கு நல்ல துரை வந்தாலும் தோட்டிக்குப் புல் சுமை போகாது.
  • நாட்டுக்குப் பேச்சு; நாய்களுக்கு வார்த்தை.
  • நாட்டுக்குப் பொல்லான்; நாரணனுக்கு நல்லான்.
  • நாட்டுட்கு ராஜா; வீட்டுக்கு வேம்பு.
  • நாட்டுக் கோட்டைக் செட்டி, நாகபட்டினம் ராவுத்தர், மொட்டைப் பாப்பாத்தி மூவருக்கு மயிர்பிடி சண்டை நடந்தது போல.
  • நாட்டுப் புறத்தான் மிட்டாய்க் கடையை விறைத்துப் பார்த்தது போல.
  • நாட்டை ஆளப் பெண் பிறந்தாலும் போட்ட புள்ளி தப்பாது.
  • நாட்டைக் கலக்கி நாளில் நாட்டினாலும் நாய் வாலை நிமிர்த்த அரனாலும் முடியாது.
  • நாடி அறிவான் நமன் அறிவான்.
  • நாடிக் கொடுப்பாரைக் கூடிக் கெடுக்கிறதா?
  • நாடிய பொருள் கைகூடும்.
  • நாடிய வரம் எல்லாம் நல்கும் நாயகன்.
  • நாடு அறிந்த பார்ப்பானுக்குப் பூணூல் ஏன்?
  • நாடு அறிந்த பெருச்சாளி.
  • நாடு ஆண்டதும் பாண்டவர்; காடு ஆண்டதும் பாண்டவர்.
  • நாடு ஆளப் பிறந்தானா? காடு ஆளப் பிறந்தானா?
  • நாடு எங்கும் வாழக் கேடு ஒன்றும் இல்லை.
  • நாடு எல்லாம் உழைத்தாலும் நாய்வால் நேராகாது.
  • நாடு எல்லாம் பாதி; நாட்டை வாய்க்கால் பாதி ஜலம்.
  • நாடு ஏற்பன செய்.
  • நாடு ஓட நடு ஓடு.
  • நாடு கடந்தாலும் நாய்க்குணம் போகுமா?
  • நாடு காடு ஆயிற்று; காடு கழனி ஆயிற்று.
  • நாடு சுற்றியும் வீடு வந்து சேரவேண்டும்.
  • நாடு செழித்தால் கேடு ஒன்றும் இல்லை.
  • நாடு செழித்தால் நாகரிகம் தானே வரும்.
  • நாடு பாதி; நங்கவரம் பாதி.
  • நாண் இல்லா நங்கை, பூண் இல்லா மங்கை.
  • நாணம் இல்லாக் கூத்தாடிக்கு நாலு திக்கும் வாசல்.
  • நாணம் இல்லாத பெண் நகைக்கு இடம் வைப்பாள்.
  • நாணம் இல்லாத கூத்தாடிக்கு நாலு திக்கும் கூத்தி.
  • நாணம் கெட்ட நாரி ஓணம் வந்தாள் வருவாளா?
  • நாணமும் அச்சமும் நாய்களுக்கு ஏது ?
  • நாணமும் இல்லை; மானமும் இல்லை.
  • நாணி நடந்தாலும் மாமி குணம் போகுமா?
  • நாணினால் கோணும்; நடந்தால் இடறும்.
  • நாணும் கால் கோணும்; நடக்கும் கால் இடறும்.
  • நாதமும் கீதமும் ஒத்திருப்பது போல வேதமும் போதமும் ஒத்திருக்க வேண்டும்.
  • நாதன் நாயைப் பிடித்தது போல.
  • நாதனின் பட்சம் ஆயிரம் லட்சம்.
  • நாதாரி வீட்டுக்கு நாலு பக்கம் வாசற்படி.
  • நாதி அற்றவன்.
  • நாதிக்காரன் பாதிக்காரன் போல.
  • நாம் ஒருவருக்குக் கொடுத்தால் நமக்கு ஒருவர் கொடுப்பார்.
  • நாம் ஒன்று நினைக்கத் தெய்வம் ஒன்று நினைக்கும்.
  • நாம் நாயை மறந்தாலும் நாய் நம்மை மறக்குமா?
  • நாமம் போட்ட குரங்கு ஆனாலும் நடுத்தெருவிலே போக முடியுமா?
  • நாமம் போட்டவன் எல்லாம் தாதனா? விபூதி பூசினவன் எல்லாம் ஆண்டியா?
  • நாமம் போட்டு விடுவான்.
  • நாய் அங்கு ஓடியும் கெட்டது; இங்கு ஓடியும் கெட்டது.
  • நாய் அடிக்கக் குறுந்தடியா?
  • நாய் அடிக்கக் கோல் தேவையா?
  • நாய் அடிக்கிற மாதிரி அடிக்கிறான்.
  • நாய் அடித்த துட்டு குரைத்தா காண்பிக்கிறது?
  • நாய் அடித்த படுபாவி சேய் இல்லாது அழுதானாம்.
  • நாய் அடையுமா, சிவலோக பதவி?
  • நாய் அறியுமா, ஒரு சந்திப் பானை?
  • நாய் அறியுமா, நறு நெய்யை.
  • நாய் அன்பு நக்கினாலும் தீராது.
  • நாய் ஆசை மலத்தோடு.
  • நாய் ஆனாலும் அதற்கும் ஒரு வாயும் வயிறும் உண்டல்லவா?
  • நாய் ஆனாலும் சேய் போல.
  • நாய் இருக்கிற இடத்தில் சண்டை உண்டு.
  • நாய் இருக்கிற வீட்டில் திருடப் போனது போல.
  • நாய் இருப்பது ஓர் ஆள் இருக்கிற மாதிரி.
  • நாய் இல்லா ஊரில் நரி அம்பலம் பண்ணிற்றாம்.
  • நாய் இறந்ததென்று ஓநாய் அழுததாம்.
  • நாய் உண்ட புலால் போல.
  • நாய் உதறினால் நல்ல சகுனம்.
  • நாய் உள்ள ஆட்டுக் கிடையில் நரி புகுந்தாற் போல.
  • நாய் உளம்புதல் மாதிரி.
  • நாய் ஊளையிட்டா மழை பெய்ய வேண்டும்?
  • நாய் ஊளையிட்டால் ஊர் நாசம் ஆகும்.
  • நாய் ஊளையிட்டாற் போல.
  • நாய் ஊளையிடுவது நடுச்சாமத்துக்கு மேல்.
  • நாய் ஊளையும் சொல்லி நரி ஊளையும் சொல்லலாமா?
  • நாய் எங்கே? சிவலோகம் எங்கே?
  • நாய் எச்சில், தாய் எச்சில்.
  • நாய் என்றாலும் நாயகன்; பேய் என்றாலும் புருஷன்.
  • நாய் ஏறினாலும் உப்பு மூட்டை நாழி குறையும்.
  • நாய் ஒரு சிறு எலும்புக்கும் சந்தோஷம் அடையும்.
  • நாய் ஓட்டமும் சில்லறைப் பாய்ச்சலும்.
  • நாய் ஓட ஓட நரியும் விரட்டும்.
  • நாய் ஓடினால் துரத்தும்; துரத்தினால் ஓடும்.
  • நாய்க் கடிக்குச் செருப்படி.
  • நாய்க் கடிக்கு நாற்பது நாள் பத்தியம்.
  • நாய்க்கடி பட்டவன் நாற்பதாம் நாள் குரைத்தாற் போல.
  • நாய்க்கடி பட்டவனுக்கு நாட்டில் ஒரு மூலிகை இல்லாது போகாது.
  • நாய்க்கடி போதாதென்று செருப்படி பட்டானாம்.
  • நாய்க்கடி விஷம் நாற்பத்தெட்டு நாள்
  • நாய்க்கருக்கு அவசரம்; நாலு மூன்று மாசப் பாடு.
  • நாய்க்கால் சிறு விரல் போல.
  • நாய்க் காவல் தாய்க்காவல் போல.
  • நாய்க்கு அழகு வாலும், வாய்க்கு அழகு பல்லும்.
  • நாய்க்கு இரும்புக் கடையில் அலுவல் என்ன?
  • நாய்க்கு உண்டான நல்லறிவும் இல்லை; பேய்க்கு உண்டான பெரிய அறிவும் இல்லை.
  • நாய்க்கு உண்டோ நாளும் கிழமையும்?
  • நாய்க்கு உண்டோ மலப் பஞ்சம்? நாவிதனுக்கு உண்டோ மயிர்ப் பஞ்சம்?
  • நாய்க்கு உபசாரம் நாள் முழுக்கச் சொன்னாலும் வள்வள் என்பதை விடாது.
  • நாய்க்கு உள்ள அறிவு கூட இல்லையா?
  • நாய்க்கு உள்ள நன்றி நல்லவர்க்கும் கிடையாது.
  • நாய்க்கு எங்கே அடிப்பட்டாலும் காலைத்தான் நொண்டும்.
  • நாய்க்கு எச்சில் இலை; பேய்க்கு வேப்பிலை.
  • நாய்க்கு எதற்கு நன்னாரிச் சர்பத்து?
  • நாய்க்கு எதிரே நாய் வராமல் இருந்தால் காசிக்குப் போய்த் திரும்புமாம்.
  • நாய்க்கு எலும்புத் துண்டம் போட்ட மாதிரி.
  • நாய்க்கு என்ன வேலை? கஞ்சியைக் கண்டால் குடிக்க வேண்டியது; கதுப்பைக் கண்டால் குரைக்க வேண்டியது.
  • நாய்க்கு ஏது சேமியா பாயசம்?
  • நாய்க்குத் தெரியுமா ஒரு சந்திப் பானை?
  • நாய்க்குத் தெரியுமா கொக்குப் பிடிக்க?
  • நாய்க்குத் தெரியுமா தீவட்டி வெளிச்சம்?
  • நாய்க்குத் தெரியுமா தேங்காய் ருசி?
  • நாய்க்குத் தெரியுமா தோல் தேங்காய்?
  • நாய்க்குத் தெரியுமா நல்லெண்ணெய்ப் பானை?
  • நாய்க்குத் தேனீக் கொட்டினால் சுற்றிச் சுற்றிக் குரைக்குமாம்.
  • நாய்க்குத் நக்கத் தெரியும்; முதலைக்கு முழுங்கத் தெரியும்.
  • நாய்க்கு நடை போட்டால் நாய்க்கு அழகா? நாயகனுக்கு அழகா?
  • நாய்க்கு நடவாத நடப்பு நடக்கும்.
  • நாய்க்கு நரகல் சர்க்கரை.
  • நாய்க்கு நரிக் குணம்.
  • நாய்க்கு நருள் வேண்டும்; பூனைக்கு இருள் வேண்டும்.
  • நாய்க்கு நல்ல காலம் என்றால் நான்கு எச்சில் இலை கிடைக்கும்.
  • நாய்க்கு நல்ல தனம்; பேய்க்குப் பெரிய தனம்.
  • நாய்க்கு நல்ல ருசி தெரியுமா?
  • நாய்க்கு நறு நெய் இணங்காது.
  • நாய்க்கு நாக்கில் வேர்க்கும்; காக்கைக்கு மூக்கில் வேர்க்கும்.
  • நாய்க்கு நாக்கில் ஜலம் சொட்டுகிறது போல.
  • நாய்க்கு நாணயம் எதுக்கு?
  • நாய்க்கு நாய் பகை; கோழிக்குக் கோழி பகை; வைத்தியனுக்கு வைத்தியன் பகை, தாசிக்குத் தாசி பகை.
  • நாய்க்கு நாலு சலாம் போட்டாலும் நன்றி கெட்டவனுக்குச் சலாம் போடாதே.
  • நாய்க்கு நாலு மாசம்; பூனைக்கு ஆறு மாசம்.
  • நாய்க்கு நாறல் கஞ்சி வார்த்தாலும் அது வீண் போகாது.
  • நாய்க்கு நோய் ஏது?
  • நாய்க்குப் பகை நாயேதான்.
  • நாய்க்குப் பட்டம் கட்டினால் நாயகன் பேரைச் சொல்லும்.
  • நாய்க்குப் பயந்து நரியிடம் ஒளிந்தாற் போல.
  • நாய்க்குப் பல் நாற்பத்திரண்டு.
  • நாய்க்குப் பிறந்த நாயே.
  • நாய்க்குப் பிறந்தவனை இப்போதுதான் கட்டவிழ்த்து விட்டிருக்கிறது.
  • நாய்க்குப் பின்னால் வால் வளைவு; ஆனைக்கு முன்னால் கை வளைவு.
  • நாய்க்குப் பின்னால் வால் வளைவு; ஆனைக்கு முன்னால் கை வளைவு.
  • நாய்க்குப் புண் வந்தால் நக்கும்; கோழிக்குப் புண் வந்தால் கொத்தும்.
  • நாய்க்குப் பூர்வ ஜன்ம வாசனை வந்தது போல.
  • நாய்க்குப் பெயர் முத்துமாலை; அதற்கு ஆக்கிப் படைக்கிறது வரகந் தவிடு.
  • நாய்க்குப் பெரிய தனம் தந்தால் விநாடிக்கு ஒரு தரம் கடிக்காதா?
  • நாய்க்கும் ஈக்கும் தடை இல்லை.
  • நாய்க்கும் உண்டு சூல் அழகு.
  • நாய்க்கும் உதவாது; நளவனுக்கும் உதவாது.
  • நாய்க்கும் தன் வீடுதான் பெரிது.
  • நாய்க்கும் தெளியும் நாலாம் மாதம்.
  • நாய்க்கும் நரிக்கும் கல்யாணம் ஆனால் உனக்கு என்ன ஆச்சு? எனக்கு என்ன ஆச்சு ?
  • நாய்க்கும் நாகத்துக்கும் தலை உயிர் நிலை.
  • நாய்க்கும் நாய்க்குடைக்கும் என்ன சம்பந்தம்?
  • நாய்க்கும் பருத்திக் கடைக்கும் என்ன சம்பந்தம்?
  • நாய்க்கும் பேய்க்கும் உறவு இல்லை.
  • நாய்க்கும் பேய்க்கும் கோவில் பெயராம்.
  • நாய்க்கு மட்டையோடு தேங்காய் கிடைத்தது போல.
  • நாய்க்கு மீசை முளைத்தால் நாவிதனுக்கு என்ன வேலை?
  • நாய்க்கு முழுத் தேங்காய் கிடைத்தாற் போல
  • நாய்க்கு முறை இல்லை.
  • நாய்க்கு மூத்தாள் தாய்க்கும் ஈயாள்.
  • நாய்க்கு வால் போனால் என்ன? கழுதைக்குப் பல் போனால் என்ன?
  • நாய்க்கு வாழ்க்கைப் பட்டால் குரைக்க வேணும்; பேய்க்கு வாழ்க்கைப்பட்டால் புளிய மரத்தில் ஏற வேணும்.
  • நாய்க்கு வாழ்ந்து நாலு பிள்ளை பெற்றாலும் தாய்க்கு உதவி.
  • நாய்க்கு வெண்டயம் கட்டினால் நாயகனுக்கு அழகு.
  • நாய்க்கு வெண்டயம் போட்டது போல.
  • நாய்க்கு வேர்வை நாக்கிலே சொட்டும்.
  • நாய்க்கு வேலை இல்லை; அதைப் போல் அலைச்சல் இல்லை.
  • நாய்க்கு வேலையும் இல்லை; நிற்க நேரமும் இல்லை.
  • நாய்க் கூத்துக் கட்டினால் குரைக்க வேணும்.
  • நாய் கக்கித் தின்றது போல.
  • நாய் கடித்ததற்கும் செருப்பால் அடித்ததற்கும் சரி.
  • நாய் கடித்ததும் அல்லாமல் செருப்படியும் படவேண்டும்.
  • நாய் கடித்த வீட்டில் நீராகாரம் சாப்பாடு.
  • நாய் கடித்தால் கூட வைத்துக் கட்டக் காசு இல்லை.
  • நாய் கடித்தால் செருப்பால் அடிக்கலாமா?
  • நாய் கத்தினால் நமனும் பயப்படுவான்.
  • நாய் கருப்புக் கட்டியைக் கடித்தாற் போல.
  • நாய்களிலுமா ஜாதி வித்தியாசம்?
  • நாய் காசிக்குப் போன மாதிரி.
  • நாய் காணிற் கற்காணாவாறு.
  • நாய் கிழடானாலும் மலம் தின்னும் புத்தி போகாது.
  • நாய் குட்டி போட்ட இடமும் நாரத்தை பட்ட இடமும் பாழ்.
  • நாய் குப்பை மேட்டிலே; பேய் புளிய மரத்திலே.
  • நாய் குரைக்கப் பேய் நடுங்கும்.
  • நாய் குரைத்துக் காது செவிடானது; நாய் கடித்து கால் ரணமானது.
  • நாய் குரைத்துக் குட்டி தலையில் வைத்தது போல.
  • நாய் குரைத்து நத்தம் பாழாகுமா?
  • நாய் குரைத்து நந்தவனம் பாழாகாது.
  • நாய் குரைத்து விடியுமா? கோழி கூவி விடியுமா?
  • நாய் கெட்ட கேட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை ஒரு சந்தி.
  • நாய் கெட்ட கேட்டுக்குத் தேங்காய்ப் பாலும் சோறுமா?
  • நாய் கெட்ட கேட்டுக்கு நடு வீட்டில் ஒரு சந்தியா?
  • நாய் கெட்ட கேட்டுக்குப் பூமரம் நிழலாம்.
  • நாய் கெட்ட கேட்டுக்கு மாமரத்து நிழல்; அது கெட்ட கேட்டுக்குப் புளி போட்ட கறி.
  • நாய் கெட்ட கேட்டுக்கு வெள்ளிக் கிழமை விரதமா?
  • நாய் கெட்டால் குப்பையிலே.
  • நாய் கொடுத்ததாம் அரசு பதவி; சிங்கமும் அதை ஏற்றுக் கொண்டதாம்.
  • நாய் கொண்டு போன பானையை ஆர் கொண்டு போனால் என்ன?
  • நாய் கெட்டால் குப்பையிலே.
  • நாய் கோவிலுக்குப் போவானேன்? கோவில் காத்தவன் தண்டம் இறுப்பானேன்?
  • நாய்ச் சகவாசம் சீலையைக் கிழிக்கும்.
  • நாய் சண்டை நாலே விநாடிதான்.
  • நாய் சத்திரத்திலே போனாலும் நக்குத் தண்ணீர்.
  • நாய் சந்தைக்குப் போகிற மாதிரி.
  • நாய் சந்தைக்குப் போச்சாம்; அங்கும் தராசுக் கோலால் அடிபட்டதாம்.
  • நாய் சந்தைக்குப் போய் மொந்தையடி வாங்கிற்றாம்.
  • நாய் சந்தைக்குப் போனதென்று நரியும் சந்தைக்குப் போனதாம்.
  • நாய் சாம்பலிற் சுருட்டினாற் போல.
  • நாய் சிங்கத்துக்குப் பட்டம் கட்டுமா?
  • நாய் சிலிர்த்தால் நல்ல சகுனம்.
  • நாய் சொப்பனம் கண்டாற் போல.
  • நாய்த் தூக்கம் போல.
  • நாய்த் தோல் செருப்பு ஆகுமா?
  • நாய்த் தோலில் கட்டி வரும் நல்லதொரு பெருங்காயம்.
  • நாய் தன் கடமையில் தவறியதென்று கழுதை ஆத்திரப் படுவானேன்?
  • நாய் தின்றதோ, நரி தின்றதோ, யார் கண்டார்கள்?
  • நாய் துப்பட்டி வாங்கினாற் போல.
  • நாய் தொட்ட சட்டி நல்லதுக்கு உதவாது.
  • நாய் தொட்ட பாண்டம். 
  • நாய் நக்க நக்கக் கல் தேயும்.
  • நாய் நக்கிக் குளம் வற்றி விடுமா?
  • நாய் நக்கிச் சமுத்திரம் குறையுமா?
  • நாய் நக்கிப் பிழைக்கும்; காக்கை கத்திப் பிழைக்கும்.
  • நாய் நக்கிப் பிழைக்கும்; கோழி குத்திப் பிழைக்கும்.
  • நாய் நக்கிய கற்சட்டி.
  • நாய் நக்கிய சட்டியை நாய்க்கே போடு.
  • நாய் நக்கினாற் போல.
  • நாய் நடு ரோட்டில் உறங்கும்; சேய் தாய் மடியில் உறங்கும்.
  • நாய் நம்மைக் கடித்தால் நாம் நாயைக் கடிக்கிறதா?
  • நாய் நல்லதானால் குணம் நல்லதாகுமா?
  • நாய் நல்ல வழி காட்டும்; பூனை பொட்டை வழி காட்டும்.
  • நாய் நன்றி மறவாது; பசு கன்றை மறவாது.
  • நாய் நாலு காதம் ஓடினாலும் குதிரை வேகம் ஆகுமா?
  • நாய் நுழையலாம்; நான் நுழையக் கூடாதாம்.
  • நாய் நொண்டி ஆனாலும் எச்சில் இலை கண்டால் ஓடத்தான் செய்யும்.
  • நாய்ப் பஞ்சம் நக்கித் தீரும்; கோழிப் பஞ்சம் கொத்தினால் போல.
  • நாய் நடு ரோட்டில் உறங்கும்; சேய் தாய் மடியில் உறங்கும்.
  • நாய்ப் பிட்டத்தில் தேள் கொட்டினால் நாய்தான் நக்க வேணும்.
  • நாய்ப் பிட்டத்தில் தேன் வைத்த மாதிரி.
  • நாய்ப் பிறவி.
  • நாய்ப் பீயை மிதிப்பானேன்? நல்ல தண்ணீர் வார்த்துக் கழுவுவானேன்?
  • நாய்ப் புண்ணுக்குச் சாம்பல் மருந்து.
  • நாய்ப் புத்தியைச் செருப்பால் அடி.
  • நாய் பகைத்தால் நாழி அரிசியோடே; பேய் பகைத்தால் ஒரு பிள்ளையோடே.
  • நாய் பட்ட பாடு தடிக் கம்புக்குத் தெரியும்.
  • நாய் பல்லைக் கெஞ்சுகிறாற் போல.
  • நாய் பிடிக்க மனிதன் குரைத்தானாம்.
  • நாய் பிடுங்கினாற் போல.
  • நாய் பின்னோடே நாலைந்து குட்டிகள்; பீப்பன்றிகள் பின்னோடே பத்தெட்டுக் குட்டிகள்.
  • நாய் பூபாளம் பாடுகிறது.
  • நாய் பெற்ற தெங்கம் பழம்.
  • நாய் பொல்லாதது ஆகுமா? நல்ல பசு மாடு ஆகுமா?
  • நாய் போல அலைகிறான்.
  • நாய் போல் அலைந்தாலும் நாலு காசு கிடைக்கும்.
  • நாய் போல் உழைத்தாலும் வாய்ச் சோறு இல்லை.
  • நாய் போல் ஏன் எறிந்து விழுகிறாய்?
  • நாய் போல் குரைத்து நடுத் தெருவில் நிற்பானேன்?
  • நாய் போர்வ வாங்குன கதெ போல
  • நாய் மடி சுரந்தால் என்ன? சுரக்காமற் போனால் என்ன?
  • நாய் மலையைப் பார்த்துக் குரைத்ததாம்; பேய் மரத்தைப் பிடித்துக் குலுக்கிற்றாம்.
  • நாய் மனிதனைக் கடித்தால் அதற்காக மனிதன் நாயைக் கடிப்பதா?
  • நாய் மாதிரி இளைப்பு வாங்குகிறது.
  • நாய் மாதிரி காத்துக் கிடந்தேன்.
  • நாய் மாதிரி சுருட்டிக் கொண்டு படுத்துக் கிட.
  • நாய் மாதிரி விழுவான்; நரி மாதிரி குழைவான்.
  • நாய் முகத்திலே மீசை முளைத்தால் அம்பட்டனுக்கு என்ன லாபம்?
  • நாய் முழுத் தேங்காயை உருட்டுகிற மாதிரி.
  • நாய் முன் தின்னாதே; கொதி வந்து விடும்.
  • நாய் மூத்திரம் குத்துக் கல்லில்.
  • நாய் மேல் ஏறி வையாளி விட்டால் என்ன? வீழ்ந்தால் என்ன?
  • நாய் மேல் ஏறி வையாளி விட்டாற் போல.
  • நாய் மோப்பம் பிடிக்கிற மாதிரி.
  • நாய் ராஜ்யத்தில் காதல் ஏது? கல்யாணம் ஏது?
  • நாய் ராஜாவுக்கு எச்சில் இலை கப்பம்.
  • நாய் வந்தால் நாழி எண்ணெய்க்குக் கேடு; பேய் வந்தால் ஒரு பிள்ளைக்குக் கேடு.
  • நாய் வயிற்றில் நரி பிறக்குமா?
  • நாய் வயிற்றில் நாலு; பன்றி வயிற்றில் பத்துப் பிறந்தது போல.
  • நாய் வயிற்றைப் போல்.
  • நாய் வளர்த்தால் நல்வழி காட்டும்.
  • நாய் வாசலைக் காத்து என்ன? கையில் இல்லாதவன் பணக்காரனைக் காத்து என்ன?
  • நாய் வாய்ச் சீலை போல.
  • நாய் வாய்ப்பட்ட தேன் நல்லது ஆகுமா?
  • நாய் வாய் வைத்தது போல.
  • நாய் வாயில் அகப்பட்ட முயல் போல.
  • நாய் வாயில் கோல் இட்டால் லொள் லொள் என்றுதானே குரைக்கும்?
  • நாய் வாயில் கோல் இடலாமா?
  • நாய் வாயில் நெய் சொட்டுகிறது என்றால் கேட்பவருக்கு மதி இல்லையா?
  • நாய் வாயிலும் நாலு சோறு.
  • நாய் வாயை வைத்தது போல் வேலை செய்கிறது.
  • நாய் வால் அசைந்தாலும் பிடுங்க வராது.
  • நாய் வாலிலே தேன் வைத்தால் ஆருக்குக் கூடும்?
  • நாய் வாலுக்கு மட்டையை வைத்துக் கட்டினாற் போல.
  • நாய் வாலுக்கு மட்டையை வைத்துக் கட்டினாற் போல.
  • நாய் வாலைக் குணக்கு எடுக்கலாமா?
  • நாய் வாலைக் குறை நீக்கலாமா?
  • நாய் வாலைக் கொண்டு சமுத்திரத்தை அடைக்கலாமா?
  • நாய் வாலை நறுக்க நாவிதன் வேண்டுமா?
  • நாய் வாலை நிமிர்த்தப் பேயால் ஆகுமா?
  • நாய் வாலை நிமிர்த்த முடியுமா?
  • நாய் வாலை நிமிர்த்தவும் முடியாது; பேய்க் காலைப் பார்க்கவும் முடியாது.
  • நாய் வாலைப் பற்றி ஆற்றில் இறங்கலாமா?
  • நாய் வாலைப் பிடித்துக் கொண்டு காவிரியைக் கடக்க முடியுமா?
  • நாய் வாழ்ந்தால் என்ன? உறி அறுந்தால் என்ன?
  • நாய் வாழ்ந்தால் என்ன? பூனை தாலி அறுத்தால் என்ன?
  • நாய் விற்ற காசு குரைக்குமா? மீன் விற்ற காசு நாறுமா?
  • நாய் விற்ற துட்டைக் குரைத்தா காண்பிக்கிறது?
  • நாய் வீட்டைக் காக்கும்; புலி காட்டைக் காக்கும்.
  • நாய் வீட்டைக் காக்கும்; பூதம் பணத்தைக் காக்கும்.
  • நாய் வீட்டைக் காக்கும்; பூனை அடுப்படியைக் காக்கும்.
  • நாய் வீட்டைக் காக்கும்; பெருச்சாளி வீட்டைக் கெடுக்கும்.
  • நாய் வீட்டைச் சுற்றும்; நோய் உடலைச் சுற்றும்.
  • நாய் வேட்டை ஆடும்; குதிரை ஓட்டம் ஓடும்.
  • நாய் வேண்டும் என்றால் நரியைக் கொண்டு வருகிறான்.
  • நாய் வேதம் படித்தது போல.
  • நாய் வேஷம் போட்டால் குரைக்க வேண்டும்; பேய் வேஷம் போட்டால் ஆடவேண்டும்.
  • நாய் வேஷம் போட்டால் குரைத்துத்தான் ஆகவேண்டும்.
  • நாயகன் பட்சம் ஆயிரம் லட்சம்.
  • நாயம் கேட்டுக் கொண்டா காயம் உரைக்கிறார்கள்; அம்மியைக் கேட்டுக் கொண்டா மிளகாய் அரைக்கிறார்கள்?
  • நாயன் இல்லாத நங்கை இருந்தென்ன போயென்ன?
  • நாயாகக் கத்திப் பேயாகப் பறந்தாலும் முடியாது.
  • நாயா சிங்கத்துக்கு நற்பட்டம் கட்டுகிறது?
  • நாயாடி மக்களோடு போய் ஆட வேண்டாம்.
  • நாயாய்ப் பிறந்தாலும் நல்ல நேரத்தில் பிறக்க வேண்டும்.
  • நாயால் ஆகுமா கொக்குப் பிடிக்க?
  • நாயிடம் தேன் இருக்கிறது; நக்கவா, துக்கவா, எதுக்கு ஆகும்?
  • நாயின் அவசரம் வாலுக்குத்தான் தெரியும்.
  • நாயின் கழுத்தில் நவரத்தினம் கட்டினாலும் நாய்க்குத் தெரியுமா அதன் மகிமை?
  • நாயின் காதில் தேன் அடை வைத்தது போல
  • நாயின் கோபத்தைப் பற்றிப் பூனையைக் கேட்டால் தெரியும்.
  • நாயின் நிழல் போல வாழ் நாள், கடிகம் பால் கழிவது போல.
  • நாயின் பின்னோடு நாலைந்து; பன்றியின் பின்னோடு பத்தெட்டு.
  • நாயின் புண்ணை நாய் கக்கும். 
  • நாயின் மலத்தை மிதிப்பானேன்? நல்ல தண்ணீர் வார்த்துக் கழுவுவானேன்?
  • நாயின் முதுகில் அம்பாரியைக் கட்டினது போல.
  • நாயின்மேல் ஏறி வையாளி விட்டால் என்ன? விழுந்தால் என்ன?
  • நாயின் வாயில் கோலைக் கொடுக்கிறதா?
  • நாயின் வாயில் சிக்கிய எலியைப் போல.
  • நாயின் வாலைக் குணக்கு எடுக்கலாமா?.
  • நாயின் வாலைப் பன்னீராண்டு குழலில் இட்டாலும் எடுக்கும்போது வளைந்துதானே இருக்கும்?
  • நாயின் விசுவாசம் பூனைக்கு வருமா?
  • நாயின் வீரம் தன் வீட்டு வரையில்தான்.
  • நாயினும் கடையேன்.
  • நாயின் வீரம் தன் வீட்டு வரையில்தான்.
  • நாயும் எறும்பும் போல.
  • நாயும் கரிச் சட்டியும் போல.
  • நாயும் காகமும் போலச் சண்டை போடாதே.
  • நாயும் சரி, நாவியும் சரி உனக்கு.
  • நாயும் தன் நிலத்துக்கு ராஜா.
  • நாயும் தீண்டாத உணவு; புலையனும் தீண்டாத யாக்கை.
  • நாயும் நரியும் ஊளையிட.
  • நாயும் நரியும் ஒன்றாகுமா?
  • நாயும் நரியும் போல.
  • நாயும் நாயும் போல.
  • நாயும் பசுப்பட்டு மோரும் விலை போகிறபோது பார்க்கலாம்
  • நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு.
  • நாயும் பூனையும் அடித்துக் கொண்டது போல.
  • நாயும் பூனையும் போல.
  • நாயும் பேயும் பிள்ளை ஆகுமா?
  • நாயும் வர உறியும் அறுந்தவன் சீலம்.
  • நாயும் வயிறு வளர்க்கும் நடு ஜாமத்திலே.
  • நாயும் வளர்த்து நரகலையும் வாருவானேன்?
  • நாயே நல்லப்பா, பேயே பெரியப்பா.
  • நாயே பேயே, நங்கண்ண, செங்கண்ண, தாயார் வளர்த்த தறிதலையே, பாட்டுக்கும் உனக்கும் எவ்வளவு தூரம்?
  • நாயேன் சொல் அம்பலத்துக்கு ஏறுமா?
  • நாயை அடக்க நாலு பேர்; நாவை அடக்க நாலாயிரம்.
  • நாயை அடிக்கக் குறுந்தடி வேண்டுமா?
  • நாயை அடிக்காதே; நாய் முள்ளைச் சுமக்காதே.
  • நாயை அடித்த பாவம் குரைத்தால் போகுமா?
  • நாயை அடித்தால் காலைத் தூக்கும்.
  • நாயை அடித்தாலும் நாலு காசு கிடைக்குமா?
  • நாயை அடித்துப் பல்லியைப் பார்ப்பானேன்?
  • நாயை அடித்துப் போட்டது போல.
  • நாயை அடிப்பதற்கு நல்ல தடி வேண்டுமா?
  • நாயை அடிப்பானேன்? காலைக் கடிப்பானேன்?
  • நாயை அடிப்பானேன்? காலைப் பிடிப்பானேன்?
  • நாயை அடிப்பானேன்? பல் இழிவு பார்ப்பானேன்?
  • நாயை அடிப்பானேன்? நடு வீடெல்லாம் கழிவானேன்?
  • நாயை அடிப்பானேன்? மலத்தைச் சுமப்பானேன்?
  • நாயை உசுப்பச் செய்து நரி உள்ளே நுழைந்து கொண்டது.
  • நாயை எங்கே அடித்தாலும் காலில்தான் நோக்காடு.
  • நாயை ஏய்க்குமாம் நரி, அதையும் ஏய்க்குமாம் ஒற்றைக் கால் நண்டு.
  • நாயை ஏவினால் அது தன் வாலை ஏவுமாம்.
  • நாயை ஓட்டிப் பேயைக் கூட்டி வந்தானாம்.
  • நாயை ஓட்டிவிட்டு நடுக் குப்பையில் உட்காரவா வேண்டும்?
  • நாயைக் கட்டிக் கொண்டு அழுவது போல.
  • நாயைக் கட்டி மாரடித்து நல்ல மனிதனும் நாயாய்ப் போனான்.
  • நாயைக் கண்டா காயம் கரைக்கிறது?
  • நாயைக் கண்டால் கல்லைக் காணோம்; கல்லைக் கண்டால் நாயைக் காணோம்.
  • நாயைக் கண்டால் நகர்ந்து போ.
  • நாயைக் கண்டால் நரிக்கு லட்டுண்டை மாதிரி.
  • நாயைக் கண்டால் பேயும் விலகும்.
  • நாயைக் கண்டால் மனிதனுக்குப் பயம்; மனிதனைக் கண்டால் நாய்க்கும் பயம்.
  • நாயைக் கண்டு காயம் கரைக்கிறதா?
  • நாயைக் கண்டு பயந்த முயல் போல.
  • நாயைக் கிளப்பிவிட்டு முயலைப் பிடிப்பது போல.
  • நாயைக் குளிப்பாட்டி நட்டுள்ளே வைத்தாலும் வாலைக் குழைத்துக் கொண்டு மலம் தின்னப் போகும்.
  • நாயைக் குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தாலும், அது வாலைக் குழைத்துக் கொண்டு வாசலில்தான் படுக்கும்.
  • நாயைக் குளிப்பாட்டிப் பல்லக்கில் ஏற்றினாலும் எலும்பைக் கண்டால் வள்ளென்று தாவும்.
  • நாயைக் கூப்பிடுகிற நேரத்தில் மலத்தையும் எடுத்துச் சாணத்தையும் பூசிவிடலாம்.
  • நாயைக் கொஞ்சினால் வாயை நக்கும்.
  • நாயைக் கொண்டு போனால் மிளாவைக் கொண்டு வரலாம்.
  • நாயைக் கொழுக்கட்டையால் எறிந்தது போல.
  • நாயைக் கொன்ற பாவம் நாலு ஜன்மம் எடுத்தாலும் போகாது.
  • நாயைச் சீ என்றால் காத வழி போகும்.
  • நாயை நல்லம்மா என்றும், பேயைப் பெத்தப்பா என்றும் பேச வேண்டிய காலம்.
  • நாயைப் பற்றிக் கேட்பாரும் இல்லை; நடு வீட்டில் வைப்பாரும் இல்லை.
  • நாயைப் பார்க்க நரி தேவலை; ஊரைப் பார்த்து ஊளை இட.
  • நாயைப் பிடித்துக் கட்டிப் பிச்சை போட்டாற் போல.
  • நாயைப் பிடித்து நரிக்குக் கல்யாணம் செய்து வைத்தது போல.
  • நாயைப் பூஜித்தாலும் அதனிடம் புனுகு உண்டாகுமா?
  • நாயைப் போல் அலைந்தாலும் நாலு காசுக்கு வழி இல்லை.
  • நாயைப் போல் குழைகிறான்.
  • நாயைப் போல் நாக்கு நாலு முழம்.
  • நாயைப் போல் நான்கு யுகம் வாழ்ந்து என்ன?
  • நாயைப் போல் பல்லை இளிக்காதே.
  • நாயைப் போல் பாடுபட்டால் ஆனையைப் போல் அரசாளலாம்.
  • நாயையும் சூக் காட்டி முயலையும் எழுப்பி விடுவது போல.
  • நாயையே திருடன் அடித்துக் கொண்டு போனால் யார் ஐயா குரைப்பது?
  • நாயை வளர்த்தால் நல்ல வழி காட்டும்; பூனையை வளர்த்தால் பொட்டை வழி காட்டும்.
  • நாயை விரட்டிவிட்டு நடுவழியில் படு.
  • நாயை வெட்டிச் சூக் காட்டினாலும் அது தன் வாலை ஆட்டும்.
  • நாயை வைத்துக் கொண்டு தானே குரைத்தாற் போல்.
  • நாயோடு சேர்ந்தாலும் நல்ல முயல் கிடைக்கும்.
  • நாயோடு படுப்பானேன்? தெள்ளுப் பூச்சியோடு எழுந்திருப்பானேன்?
  • நார் அற்றால் கூடும்; நரம்பு அற்றால் கூடுமா?
  • நார் அறுந்தால் முடியலாம்; நரம்பு அறுந்தால் முடியலாம்; மனம் அறுந்தால் முடியலாகாது.
  • நார் இல்லாமல் மாலை தொடுக்கலாமா?
  • நாரசிங்கமும் இரணியனும் போல.
  • நாரத்தங்காய்க்கு இட்ட உப்பும் நாத்தனாருக்கு இட்ட சாதமும் எவ்வளவானாலும் போதா.
  • நாரத்தங்காய்க்குப் போடுகிற உப்பும் நாத்தனாருக்குப் போடுகிற சாதமும் வீண் போகா.
  • நாரத்தங்காய் விற்ற காசு கசக்குமா?
  • நாரத்தை காய்க்க நாய்ப்பலி இட வேண்டுமாம்.
  • நாரதா, கலகப்ரியா.
  • நாராசம் காய்ச்சி நடுச் செவியில் விட்டாற் போல்.
  • நாராயணன் ஒருவன்தான்; இரண்டாமவன் ஒருவனும் இல்லை.
  • நாராயணன் குடுமியை நாராலே பின்னிக் கோபாலன் குடுமியைக் கோரையாலே பின்னி.
  • நாராயணன் கோவிலுக்கு நாலு வாசல்.
  • நாரும் பூவும் போல.
  • நாரை அறியாத குளமும் நமன் அறியாத உயிரும் உண்டோ?
  • நாரையைப் பார்க்க நரியே தேவலாம், ஊரைப் பார்த்து ஊ ளை இட.
  • நால்வர் கூடினால் தேவர் சபை.
  • நால்வர் வாக்குத் தேவர் வாக்கு
  • நால்வரோ தேவரோ?
  • நாலடி இரண்டடி கற்றவனிடம் வாயடி கையடி அடிக்காதே.
  • நாலாம் தலைமுறையைப் பார்த்தால் நாவிதனும் சிற்றப்பன் ஆவான்.
  • நாலாம் பாதம் நாழி பிடித்து உட்காரும்; எட்டாம் மாதம் எடுத்து அடி வைக்க வேணும்.
  • நாலாம் பிறை பார்த்தால் நாய் அலைச்சலாய்த்தான் முடியும்.
  • நாலாம் பேற்றுப் பெண் நாதாங்கியை விற்று உண்ணும்.
  • நாலாவது பெண், நாதாங்கி முளைக்கும் திக்கு இல்லை.
  • நாலு அடி அடித்துப் போர்மேல் போட்டாயிற்று.
  • நாலு ஆறு கூடினால் பாலாறு.
  • நாலு கரண்டி நல்லெண்ணெய்; நாற்பத்தாறு தீவட்டி; வாரார் ஐயா சுப்பையா; வழிவிடடி மீனாட்சி.
  • நாலு காரை கூடினால் ஒரு பழுதை.
  • நாலு கால் சோமாரியும் ஒரு காலிலே இறங்கினாற் போல.
  • நாலு காலிலே நரி கள்ளன்; இரண்டு காலிலே இடையன் கள்ளன்.
  • நாலு செத்தை கூடினது, ஒரு கத்தை.
  • நாலு தடவை தப்பினவனுக்கு நமன் பயம் ஏது?
  • நாலு தலைமுறைக்கு முன் நாவிதனும் சிற்றப்பன் ஆவான்.
  • நாலு பறையனடி, நானூறு பள்ளனடி; ஆள் இல்லாப் பாவமல்லோ ஆளேற்றம் கொள்கிறான்?
  • நாலு பிள்ளை பெற்றவளுக்கு நடுத்தெருவிலே சோறு; ஒரு பிள்ளை பெற்றவளுக்கு உறியிலே சோறு. 
  • நாலு பிள்ளையும் நல்ல பிள்ளையானால் மேலும் பிள்ளை பெறுவானேன்?
  • நாலு பேர் கூடினது சபை.
  • நாலு பேர் போன வழி.
  • நாலு பேர் போன வழியில் நாமும் போக வேண்டும்.
  • நாலு பேர் வாக்குத் தெய்வ வாக்கு.
  • நாலு பேர் வாழ நடுவிலே நாம் வாழ.
  • நாலு பேருக்குச் சொல்லி மனசிலே போட்டு வைக்கிறவன்.
  • நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி; ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி.
  • நாலும் கிடக்க நடுவிலே நாத்தனார் தலையைச் சிரைத்தாளாம்.
  • நாலு மாதம் வரையில் நாய்கூடப் பிள்ளையை வளர்க்கும்.
  • நாலு முழத்தில் நடுவில் ஒரு முழம்.
  • நாலு வீட்டில் கல்யாணம்; நாய்க்கு நாய் தொங்கோட்டம்.
  • நாலு வீட்டில் நக்கிக் குடிக்கிற நாய்க்கு ஏன் இந்த வாய்?
  • நாலு வீட்டுச் செல்ல நாய் நடுத் தெருவில் அலைகிறது.
  • நாலு வீடு ஆடுது; ஒரு வீடு ஆடுது.
  • நாலு வேதமும் தெரியும்; ஆறு சாஸ்திரமும் தெரியும்; வாய் மட்டும் ஊமை.
  • நாவல் பழுத்தால் நாடு செழிக்கும்.
  • நாவலும் பாவலும் ரத்த புஷ்டிக்கு.
  • நாவாய் கவிழ்த்த நாய்கன் போல.
  • நாவிதன் செய்தி அறிந்து குடுமியைப் பத்திரப் படுத்தினானாம்.
  • நாவில் பிறக்கும் நன்மையும் தீமையும்.
  • நாவு அசைய நாடு அசையும்.
  • நாவுக்கு இசைந்தால் பாவுக்கு இசையும்.
  • நாவுக்கு எலும்பு இல்லை; எப்படிப் புரண்டாலும் புரளும்.
  • நாவை அடக்கி ஆளாவிட்டால் அது தன்னையே ஆளும்.
  • நாவைச் சுற்றிப் பிடிக்கிற தாரத்துக்கு நாள் கேட்டானாம் கிணறு வெட்ட.
  • நாழி அரிசிச் சாதம் சாப்பிட்டாலும் நாய் நாலு வீட்டில் நக்கித் தான் தின்னும்.
  • நாழி அரிசி சோறு உண்டவன் நமனுக்கு உயிர் கொடான்.
  • நாழி அரிசிச் சோறு தின்றாலும் நாய்க்குக் குடல் நிறையாது.
  • நாழி அரிசி நாய் கொண்டு போனால் ஞானமும் கல்வியும் பேய் கொண்டு போகும்.
  • நாழி உடைந்தால் நெல்லுக்குச் சேதமா?
  • நாழி உப்பும் நாழி அப்பும் நாழி ஆன வாறு போல.
  • நாழி உள்ளார்க்கு நானாழி கடனோ?
  • நாழி நெல்லுக்கு ஓர் அந்து.
  • நாழி நெல்லுக்கு ஒரு புடைவை விற்றாலும் நாய் நிர்வாணந்தான்.
  • நாழிப் பணம் கொடுத்தாலும் மூளிப்பட்டம் போகாது.
  • நாழிப் பால் வார்த்தாலும் நடுச் சொல்வர் அறிவுடையோர்.
  • நாழி மாவுக்கு நானாழி வெள்ளம்.
  • நாழி முகவாது நானாழி.
  • நாழியாய சமுத்திரத்தில் நானாழி மொள்ளலாமா?
  • நாழியை மூளி என்றால் மரக்காலைப் பொட்டை என்பது போல்.
  • நாழிவர மூதேவி; மரக்கால் வரச் சீதேவி.
  • நாள் ஆற்றுகிறது நல்லார் ஆற்றார்.
  • நான் ஏர் உழும் போதே வரப்பிலே ஏற்றினாளாம்.
  • நான் ஒரு மேனியும் பொழுது ஒரு வண்ணமும்
  • நான் ஏறினால் கீழ் ஏறும்.
  • நாள் செய்வது நல்லுற்றார் செய்யார்.
  • நாள் சென்ற கொடை நடைக்கூலி ஆகும்.
  • நாள் வருமட்டும் நாராய்த் தோலாய் இழுத்துக் கொண்டிருக்கும்.
  • நாளுக்கு நாள் நகர்ந்தது சாண் அம்மானை.
  • நாளுக்கு நான் நரியாய்ப் போகிறது. 
  • நாளும் கிழமையும் நலிந்தோர்க்கு இல்லை.
  • நாளும் கோளும் நன்மை செய்யும்.
  • நாளை என்பது இல்லை என்பதற்கு அடையாளம்.
  • நாளை என்பது நமன் நாள் ஆகும்.
  • நாளை என்பதைவிட இல்லை என்பவர் நல்லவர்.
  • நாளைக்குக் கல்யாணம்; பிடியடி பாக்கு வெற்றிலையை.
  • நாளைக்குத் தாலி கட்டுகிறேன்; கழுத்தே சுகமாய் இரு.
  • நாளைக்குத் தின்கிற பலாப்பழத்திலும் இன்றைக்குத் தின்கிறகளாப் பழம் நல்லது.
  • நாளைக்குத் தெரியும் நாச்சியாத்தாள் மாரடி.
  • நாளைக்கும் சீர் நடக்கத்தான் போகிறது; இன்றைக்கும் சீர் இருக்கத்தான் போகிறது.
  • நாளைக் குறைத்தால் தன்னைக் குறைக்கும்.
  • நாளை மடக்கினால் நம்மை மடக்கும்.
  • நாளை வரும் நெற்குவியலிலும் இன்று உள்ள படி விதை பெரிதென்று விழுங்கலாமா?
  • நாளை வரும் பலாக்காயை விட இன்று வரும் களாக்காய் நல்லது.
  • நாற்கலக் கூழுக்கு நானே அதிகாரி.
  • நாற்பதுக்குமேல் சென்றால் நாய்க் குணம்.
  • நாற்பதுக்குமேல் நாய்க்குணம்; அம்பதுக்கு ஆட்டம்; அறுபதுக்கு ஓட்டம்.

நி[தொகு]

  • நிச்சயம் இல்லாத வாழ்வு; நிலை இல்லாத காயம்
  • நிசங்கனுக்குக் கோட்டை முற்றுகை கண்டது உண்டா?
  • நிசம் ஒன்று பல தீங்கு நீக்கும்
  • நிசம் நிச போகம்; வியாசம் வியாச போகம்
  • நித்தம் என்றால் முத்தமும் சலிக்கும்
  • நித்தம் சாவார்க்கு அழுவார் உண்டா?
  • நித்தம் நடந்தால் முற்றமும் சலிக்கும்
  • நித்தம் போனால் முத்தம் சலிக்கும்
  • நித்திய கண்டம் பூரண ஆயிசு
  • நித்திய கண்டம் பூர்ணாயுசு
  • நித்திய கல்யாணம்; பச்சைத் தோரணம்
  • நித்தியங் கிடைக்குமா அமாவாசை சோறு?
  • நித்திய தரித்திரத் தகப்பனாரை நின்ற நிலையில் வரச் சொன்னாள்
  • நித்திய தரித்திரனுக்கு ஆசை அதிகம்
  • நித்தியம் கிடைக்குமா அமாவாசைச் சோறு?
  • நித்திரைக்கு நேரிழை சத்துரு
  • நித்திரை சுகம் அறியாது
  • நித்திரை சுகம் அறியாது; பசி ருசி அறியாது
  • நித்திரையிலும் தண்ணீர்ப்பால் குடிக்கிறது இல்லை
  • நிதம் கண்ட கோழி நிறம் கொடுக்கும்
  • நிதானியே நேராணி
  • நிதி அற்றவன் பதி அற்றவன்
  • நிந்தனை சொல்லேல்
  • நிமித்தம் பார்க்கிறவன் இரண்டகக்காரி மகன்; பொருத்தம் பார்க்கிறவன் பொல்லாங்கன் மகன்
  • நிமிர்ந்தால் வானம்; குனிந்தால் பூமி
  • நிமிர்ந்து போட்டது என்ன? குனிந்து எடுத்தது என்ன?
  • நிமிஷ நேரம் நிற்கும் இன்பம் சிற்றின்பம்
  • நிமிஷ நேரம் நீடிய இன்பம்
  • நிமைப் பொழுதேனும் நில்லாது நீச உடல்
  • நியாய சபைத் தீர்ப்பு, சேற்றில் நாட்டிய கம்பம் போல; மதில்மேற் பூனை போல
  • நிர்வாண தேசத்தில் சீலை கட்டினவள் பைத்தியக்காரி
  • நிர்வாண தேசத்தில் நீர்ச் சீலை கட்டினவன் பைத்தியக்காரன்
  • நிரக்ஷர குக்ஷி
  • நிருபன் ஆன போதே கருவம் மெத்த உண்டு
  • நில்லாத காலடி நெடுந்தூரம் போகும்
  • நில்லாது ஏதும்; நிலையே கல்வி
  • நிலத்தில் எழுந்த பூண்டு நிலத்தில் அழிய வேண்டும்
  • நிலத்தில் எழுந்த பூண்டு நிலத்தில் மடிய வேண்டும்
  • நிலத்து அளவே பயிர்; குலத்து அளவே குணம்
  • நிலத்துக்கு ஏற்ற நீரும் குலத்துக்கு ஏற்ற சீரும்
  • நிலத்துக்கு ஏற்ற விதை; குலத்துக்கு ஏற்ற பெண்
  • நிலத்துக்குத் தகுந்த களியும் குலத்துக்குத் தகுந்த குணமும்
  • நிலத்தைப் பொறுத்து எரு விடு
  • நிலம் ஓய்ந்து வாழ்க்கைப்பட முடியுமா?
  • நிலம் கடக்கப் பாயலாமா?
  • நிலம் பொட்டல் அல்ல; தலைதான் பொட்டல்
  • நிலவுக்கு ஒளித்துப் பரதேசம் போனதுபோல
  • நிலாக் காய்கிற இடமும் தெரியாது; நெல் விளைகிற பூமியும் தெரியாது
  • நிலாப் புறப்பட எழுந்தானாம்; நெல்குழி வரைக்கும் நகர்ந்தானாம்
  • நிலை இல்லான் வார்த்தை நீர்மேல் எழுத்து
  • நிலை குலைந்தால் சீர் குலையும்
  • நிலைமை தப்பியவனுக்கு நீதி
  • நிலையாமை ஒன்றே நிலையானது
  • நிலையிற் பிரியேல்
  • நிலைவிட்டால் நீச்சல்
  • நிழல் அருமை வெயிலில் தெரியும்
  • நிழல் கடக்கப் பாயலாமா?
  • நிழல் நல்லது; முசிறு ஒட்டாது
  • நிழலின் அருமை வெயிலிற் போனால் தெரியும்
  • நிழலின் பெருமை வெயிலில் போனால் தெரியும்
  • நிழலுக்கு இடம் கொடுத்தாலும் நீருக்கு இடம் கொடாதே
  • நிழலுக்கும் கனவுக்கும் ஒத்தது ஆக்கை
  • நிற்க நிழல் இல்லை; சாயச் சுவர் இல்லை
  • நிற்க ஜீவன் இல்லாமல் போனாலும் பேர் நிரப்புக் கட்சி
  • நிறம் சுட்டாற் போம்; குணம் கொன்றாற் போம்
  • நிறை குடத்தில் பிறந்து நிறை குடத்தில் புகுந்தவன்
  • நிறைகுடம் தளும்பாது
  • நிறைகுடம் நிற்கும்; குறை குடம் கூத்தாடும்
  • நிறைகுடம் நீர் தளும்பல் இல்
  • நிறைந்த ஆற்றிலே பெருங்காயம் கரைத்தது போல
  • நிறைந்த சால் நீர் கொள்ளுமா?
  • நிறை பொதியிலே கழுதை வாய். வைத்தாற் போல்
  • நிறையக் குளித்தால் கூதல் இல்லை
  • நிறையக் குறுணி வேண்டாம்; தலை தடவிக் குறுணி கொடு
  • நிறையக் கேள்; குறையப் பேசு
  • நிறைய முழுகினால் குளிர் இல்லை
  • நின்ற இடத்தில் நெடுநேரம் போனால் நின்ற மரமே நெடு மரம்
  • நின்ற மரமே நெடுமரம்
  • நின்ற வரைக்கும் நெடுஞ்சுவர்; விழுந்தாற் குட்டிச் சுவர்
  • நின்ற வெள்ளத்தையும் வந்த வெள்ளம் கொண்டு போயிற்று
  • நின்றால் நெடு மரம்; விழுந்தால் பன மரம்
  • நின்றாற்போல் விழுந்தால் தலை உடையும்
  • நின்று தின்றால் குன்றும் மாளும்
  • நின்று போட்டதும் இல்லை; குனிந்து எடுத்ததும் இல்லை
  • நினைக்க முத்தி அண்ணாமலை
  • நினைக்கும் முன் வருவான்; நினைப்பதும் தருவான்
  • நினைத்தது இருக்க, நினையாதது எய்தும்; நினைத்தது வந்தாலும் வந்து சேரும்
  • நினைத்ததும் கறி சமைத்ததும்
  • நினைத்த நேரம் நெடு மழை பெய்யும்
  • நினைத்த போது பிள்ளை பிறக்குமா?
  • நினைத்துக் கொண்டாளாம் கிழவி, வயசுப் பிள்ளைக்கு வாழ்க்கைப்பட
  • நினைப்பின் வழியது உரை
  • நினைப்பு எல்லாம் பிறப்பு
  • நினைப்புக் குடியைக் கெடுத்ததாம்; நேர்வானம் பிட்டத்தைக் கெடுத்ததாம்
  • நினைப்புப் பிழைப்பைக் கெடுத்தது; நீர்த்த தண்ணீர் உப்பைக் கெடுத்தது
  • நினைவே கனவு
  • நிஜமாகத் தூங்குகிறவனை எழுப்பலாம், பொய்யாகத் தூங்குகிறவனை எழுப்ப முடியாது
  • நிஜாம் அலி தண்டில் நிஜார்க்காரனைக் கண்டாயா?
  • நிஷ்டூரன் கண்ணைத் தெய்வம் கெடுக்கும்; நீதிமான் கண்ணைப் பரிதானம் கெடுக்கும்

நீ[தொகு]

  • நீ அவல் கொண்டு வா; நான் உமி கொண்டு வருகிறேன்; ஊதி ஊதித் தின்னலாம்
  • நீ அறையில் ஆட்டினாய்; நான் அம்பலத்தில் ஆட்டினேன்
  • நீ இருக்கிற அழகுக்கா திருட வந்தாய்?
  • நீ இழு, நான் இழு, மோருக்கு வந்த மொட்டச்சி இழு
  • நீ உளறாதே; நான் குழறுகிறேன்
  • நீக்குப் போக்குத் தெரியாமல் நேர்ந்தபடி
  • நீ கஜகர்ணம் போட்டாலும் நடக்காது
  • நீ கூத்திக்கு வாழ்க்கைப்பட்டுக் குடியிருப்பு வீடு, செப்பனிட்டாலும் நான் வாத்திக்கு வாழ்க்கைப்பட்ட வயிற்றெரிச்சல் தீராது
  • நீ கோபம் மா லாபம்
  • நீச்சம் அறியாதவரை வெள்ளம் கொண்டு போகும்
  • நீச்சக் கடலிலே நெட்டி மிதிக்கிறது போல
  • நீச்சத் தண்ணீருக்குக் கெஞ்சினவன் பசும்பாலுக்குச் சர்க்கரை தேடுகிறான்
  • நீச்சு நிலை இல்லாத ஆற்றிலே நின்று எப்படி முழுகுகிறது?
  • நீசர் ஆனவர் நிலைபெறக் கல்லார்
  • நீசனை நீசன் நோக்கில் ஈசன் ஆவான்
  • நீ செத்தால் உலகம் எல்லாம் எறும்பாய்ப் போகுமா?
  • நீ செய்த நன்றிக்கு நான் நன்றியாப் பெற்றுப் பேர் இட வேணும்
  • நீ சொம்மு நா சொம்மே, நா சொம்மு நீ சொம்மே
  • நீ சொல்கிறது நிஜம் ஆனால் நாக்கினால் மூக்கைத் தொடு
  • நீட்டவும் மாட்டார்; முடக்கவும் மாட்டார்
  • நீட்டிச் சுருக்கின் மூண்டது நெடும்பகை
  • நீட்டி நீட்டிப் பேசுகிற வேளாளப் பையா, உங்கள் துரைசாணி எங்கள் சிறைச்சாலையில் இருக்கிறான்
  • நீட்டின விரலில் பாய்வது போல
  • நீட்டு வித்தை ஏறாது
  • நீண்ட கை குறுகாது
  • நீண்ட கை நெருப்பை அள்ளும்
  • நீண்ட தச்சும் குறுகிய சொல்லும்
  • நீண்ட பல்காரன் சிரித்தாலும் அழுவது போல் இருக்கும்
  • நீண்ட புல் நிற்க நிழலாமா?
  • நீ தடுக்கிலே நுழைந்தால் நான் கோலத்திலே நுழைவேன்
  • நீதி அற்ற பட்டணத்திலே நிறை மழை பெய்யுமா?
  • நீதி இல்லா ஊருக்குப் போகிறதே வழி
  • நீதி இல்லாத நாடு நிலவு இல்லாத முற்றம்
  • நீதி கேளாமல் தலை வெட்டுவார்களா?
  • நீதிமான் தீவினை செய்யிற் பிழைப்பானா? நீதி இல்லாதவன் நீதி புரிந்தால் மரிப்பானா?
  • நீந்த அறியாதவனுக்கு வெள்ளம்
  • நீந்த அறியாதவனை ஆறு இழுத்துப் போகும்
  • நீந்தத் தெரியாமல் குளத்தில் இறங்கமாட்டேன் என்றானாம்
  • நீந்த மாட்டாத மாட்டை வெள்ளம் கொண்டு போகும்
  • நீந்த மாட்டாதவனை ஆறு கொண்டு போகிறது
  • நீந்த மாட்டாதவனை ஆறு கொண்டு போகும்
  • நீ நட்சத்திரந்தான்
  • நீ படித்த பள்ளியிலேதான் நானும் படித்தேன்
  • நீ பிறர்க்கு உதவி செய்தால் தெய்வம் உனக்கு உதவி செய்யும்
  • நீ போய் அலப்பிவிட்டு வராதே; நான் போய் உளறிவிட்டு வருகிறேன்
  • நீயும் நானும் அடா, சாறும் சோறும் அடா
  • நீயும் நானும் அடி, எதிரும் புதிரும் அடி
  • நீர் அடித்தால் நீர் விலகுமா?
  • நீர் அழியச் சீர் அழியும்
  • நீர் அளவே ஆகுமாம் நீராம்பல்
  • நீர் ஆழம் கண்டாலும் நெஞ்சு ஆழம் காண முடியாது
  • நீர் ஆழம் கண்டாலும் நேரிழையார் நெஞ்சாழம் காண முடியாது
  • நீர் ஆனாலும் மோர்; பேய் ஆனாலும் தாய்
  • நீர் இருக்க மோருக்கு என்ன குறை?
  • நீர் இல்லா நாடு நிலவு இல்லா முற்றம்
  • நீர் இல்லா நாடும் சீர் இல்லா ஊரும்
  • நீர் இல்லையானால் மீன் இல்லை
  • நீர் உயர நெல் உயரும்
  • நீர் உள்ள மட்டும் மீன் குஞ்சு துள்ளும்
  • நீர் என்று சொல்லி நெருப்பாய் முடிந்தது
  • நீர் என்று சொன்னால் நெருப்பு அவியுமா?
  • நீர் என்று சொன்னால் நெருப்பு அவிவதும் சர்க்கரை என்று சொன்னால் அதனால் வாய் இனிப்பதும் உண்டா?
  • நீர் ஏற நெல் ஏறும்
  • நீர் ஓட்டித்தில் தெப்பம் செல்வதைப் போல
  • நீர்க்கடன் நிழற்கடன் கொடுத்து வைத்தமட்டும் இருக்கும்
  • நீர்க்குள் பாசிபோல் வேர்க் கொள்ளாது
  • நீர் கண்ட இடத்தில் சாப்பிடு; நிழல் கண்ட இடத்தில் படுத்து உறங்கு
  • நீர்க்குமிழி போல
  • நீர்ச்சிலை இல்லை; நெடு முக்காடா?
  • நீர்ச்சோறு தின்று நிழலில் இருந்தால் மலடிக்கும் மசக்கை வரும்
  • நீர்ப்பாடு மெய்யானால் கெளபீனம் தாங்குமா?
  • நீர்ப்பாம்பு கடித்தாலும் ரஸப்பட்டியாகும்
  • நீர் பெருத்தால் நெல் சிறுக்கும்
  • நீர் போனால் மீன் துள்ளுமா?
  • நீர் மடையும் அம்பலமும் நின்றவனுக்கு உண்டு
  • நீர்மேல் எழுத்துக்கு நிகர்
  • நீர் மேல் எழுத்து போல்
  • நீர்மேல் குமிழிபோல் நிலையில்லாக் காயம்
  • நீர் மோருக்கும் கதியற்ற வீட்டிலே ஓமத்துக்கும் பசு நெய் கேட்டாற்போல
  • நீர் மோரும் சாதமும் நெடுநாளைக்கு இருந்தால் போதும்
  • நீர் வளம் உண்டானால் நெல்வளம் உண்டாகும்
  • நீர் வறண்டால் மீன் துள்ள மாட்டாது
  • நீர் விளையாடேல்
  • நீர் விற்ற காசு நீரோடு பேச்சு; மோர் விற்ற காசு மோரோடு போச்சு
  • நீர் வேலி கோப்பாய் நிலை செல்வம் ஆவார்
  • நீரகம் பொருந்திய ஊரகத்திரு
  • நீரளவே ஆகுமாம் நீராம்பல்
  • நீராலே விலகினாய் நீ; நான் நெருப்பாலே விலகினேன்
  • நீரில் இறங்கினால் தவளை கடிக்குமா?
  • நீரில் எழுத்தாகும் யாக்கை
  • நீரில் குமிழி இளமை
  • நீரும் கொல்லும்; நெருப்பும் கொல்லும்
  • நீரும் சோறும் தின்று நிழலில் படுத்தால் மலடிக்கும் மயக்கம் வரும்
  • நீரும் நிலமும் இருந்தாலும் பருவம் பார்த்து பயிர் செய்
  • நீரும் பாசியும் கலந்தாற் போல
  • நீரே பிராணாதாரம்
  • நீரை அடித்தால் நீர் விலகுமா?
  • நீரை அடித்தால் வேறாகுமா?
  • நீரைக் கழுவி நிழலைப் புதைப்பது போல
  • நீரைச் சிந்தினையோ? சீரைச் சிந்தினையோ?
  • நீரைச் சுருக்கி மோரைப் பெருக்கு
  • நீரைத் தொட்டாயோ, பாலைத் தொட்டாயோ?
  • நீரைத் தொட்டுத் தேனைத் தொட்டாற் போல
  • நீரோடு வந்தது ஆற்றோடே போச்சு, பாலோடு வந்தது காலோடே வந்தது
  • நீலம் கட்டுப்படப் பேசுகிறாள்
  • நீலம் பிடிக்கிற வார்த்தை
  • நீலத்துக்குக் கறுப்பு ஊட்ட வேண்டுமா?
  • நீலிக்குக் கண்ணீர் இமையிலே
  • நீலிக்குக் கண்ணீர் நிமையிலே
  • நீலிக்குக் கண்ணீர் நெற்றியிலே; மாலிக்குக் கண்ணீர் மடிமேலே
  • நீலிக்கு நிலக்கண்ணில் தண்ணீர்
  • நீள நீளத் தெரியும் மெய்யும் பொய்யும்
  • நீறு இல்லா நெற்றி பாழ்
  • நீறு பூத்த நெருப்புப் போல்

நு[தொகு]

  • நுகத்துப் பகலாணி போல
  • நுங்கு தின்றவள் போகக் கூந்தல் நத்தியவன் அகப்பட்டது போல
  • நுட்பப் புத்திமான் திட்டச் சித்தனாவான்
  • நுண்ணறிவுடையார் நண்ணுவார் புகழே
  • நுண்ணிய கருமமும் எண்ணித் துணி
  • நுண்ணிய ஞானம் உரைப்பார்கள்; சொன்னபடி ஒன்றும் நடவார்கள்
  • நுண்பொருள் கொடுத்து நுண்ணியர் ஆவர்
  • நுண்மை நுகரேல்
  • நுணலும் தன் வாயாற் கெடும்
  • நுரை ஒத்ததுவே தரையில் பவிஷு
  • நுரையைத் தின்றால் பசி போகாது
  • நுழையாத வீடு இல்லை; அடிக்காத செருப்பு இல்லை
  • நுழை விட்டுச் செய், நூல் கற்று அடங்கு
  • நுளையன் அறிவானா, ரத்தினத்தின் பெருமை?
  • நுளையன் பேச்சு அம்பலம் ஏறாது
  • நுனையிலே ஆசாரமா?
  • நுனிக்கொம்பில் ஏறி அடிக்கொம்பு வெட்டுவார்களா?
  • நுனிப்புல் மேய்தல்
  • நுனி மரத்தில் இருந்து அடி மரத்தை வெட்டுபவன் போல்
  • நுனியில் மேய்கிறது

நூ[தொகு]

  • நூரணிப் பெண் ஊருணி தாண்டாது
  • நூல் அளவே ஆகுமாம் நுண்ணறிவு
  • நூல் இல்லாமல் மாலை கோத்தது போல
  • நூல் இழந்த நங்கை போல
  • நூல் கற்றவனே மேலவன் ஆவான்
  • நூல் முறை அறிந்து சீலத்து ஒழுகு
  • நூலளவே யாகுமாம் நுண்ணறிவு
  • நூலுக்கு ஏற்ற சரடு
  • நூலும் சூலும் சேரக் கூடாது
  • நூலும் புடைவையும் நூற்றெட்டுக் காலமா?
  • நூலைக் கற்றோர்க்கு உண்டு நுண்ணறிவு
  • நூலைப் போல் சேலை; தாயைப் போல் மகள்
  • நூற்க வேண்டுமானால் வெண்ணெய்க் கட்டிபோல் நூற்கலாம்
  • நூற்றில் ஒன்று; ஆயிரத்தில் ஒன்று
  • நூற்றுக் கிழவி போல் பேசுகிறாள்
  • நூற்றுக்கு இருந்தாலும் கூற்றுக்கு அறைக்கீரைதான்
  • நூற்றுக்கு இருப்பார் ஐம்பதில் சாகார்
  • நூற்றுக்கு ஒரு பேச்சு
  • நூற்றுக்கு ஒரு பேச்சு; ஆயிரத்துக்கு ஒரு தலை அசைப்பு
  • நூற்றுக்குத் துணிந்த துற்றுக் கூடை
  • நூற்றுக்கு மேல் ஊற்று
  • நூற்றுக் மேல் ஊற்று, ஆயிரத்துக்கு மேல் ஆற்றுப் பெருக்கு
  • நூற்றெட்டு அடிக் கம்பத்திலே ஆடினாலும் பூமியில் வந்துதான் தானம் வாங்க வேண்டும்
  • நூற்றைக் கெடுத்ததாம் குறுணி
  • நூறு ஆண்டு ஆயினும் கல்வியை நோக்கு
  • நூறு குற்றம், ஆறு பிழை கொண்டு பொறுக்க வேண்டும்
  • நூறு நாள் ஓறி ஆறு நாள் விடத் தீரும்
  • நூறு பலம் மூளையை விட ஒரு பலம் இதயம் உயர்ந்தது
  • நூறு பிள்ளை பெற்றவளுக்கு ஒரு பிள்ளை பெற்றவள் மருத்துவம் பார்க்கப் போனாளாம்
  • நூறு வயசுக் கிழவன். ஆனாலும் நுழைந்து பார்க்க ஆசை
  • நூறோடு நூற்றொன்று
  • நூறோடு நூறு ஆகிறது; நெய்யிலே சுட்ட பணியாரம்

நெ[தொகு]

  • நெகிழ்ந்த இடம் கல்லுகிறதா?
  • நெகிழ்ந்த இடம் பார்த்துக் கல்லுவது போல
  • நெசவாண்டிக்கு ஏன் கோதிபில்லா?
  • நெசவு நெய்பவனுக்குக் குரங்கு எதற்காக?
  • நெஞ்சில் ஈரம் இல்லாதவன்
  • நெஞ்சிலே கைவைத்துச் சொல்
  • நெஞ்சு அறி துன்பம் வஞ்சனை செய்யும்
  • நெஞ்சு அறியப் பொய் சொல்லலாமோ?
  • நெஞ்சு அறியாத பொய் இல்லை
  • நெஞ்சு இலக்கணம் தெரியாதவனுக்குப் பஞ்ச லட்சணம் தெரிந்து பயன் என்ன?
  • நெஞ்சு ஒளித்து ஒரு வஞ்சகம் இல்லை
  • நெஞ்சு மிக்கது வாய் சோறும்
  • நெஞ்சைப் பஞ்சைப் போட்டுத் துவட்டியிருக்கிறது
  • நெட்டி ஒரு பிள்ளை, சர்க்கரைக்குட்டி ஒரு பிள்ளையா?
  • நெட்டைக் குயவனுக்கும் நேரிட்ட கம்மாளனுக்கும் பொட்டைக்கும் புழு ஏர்வை
  • நெட்டையனை நம்பினாலும் குட்டையனை நம்பக்கூடாது
  • நெடியார் குறியாரை ஆற்றிலே தெரியலாம்
  • நெடுங்கடல் ஓடியும் நிலையே கல்வி
  • நெடுங்காலம் நின்றாலும் நெல் முற்றிப் பணம் இரட்டி
  • நெடுங் கிணறும் வாயாலே தூரும்
  • நெடுந்தீவான் சரக்கு வாங்கப் போனது போல
  • நெடும் பகலுக்கும் அஸ்தமனம் உண்டு
  • நெடு மரம் விழுந்தால் நிற்கிற மரம் நெடுமரம்
  • நெய் இல்லாத உண்டி பாழ்
  • நெய் உருக்கி மோர் பெருக்கி நீர் அருக்கிச் சாப்பிட வேண்டும்
  • நெய்க் குடத்தில் எறும்பு மொய்த்தாற் போல
  • நெய்க் குடத்தைத் தலையில் வைத்து எண்ணமிட்டவனைப் போல
  • நெய்க் குடம் உடைந்தால் நாய்க்கு விருந்து
  • நெய்க்குத் தொன்னை ஆதாரமா? தொன்னைக்கு நெய் ஆதாரமா?
  • நெய்கிறதை விட்டு நினைத்துக் கொண்டானாம் கைக்கோளன்
  • நெய்கிறவனுக்கு ஏன் குரங்குக்குட்டி?
  • நெய் நேத்திர வாயு; அன்னம் அதிக வாயு
  • நெய் முந்தியோ, திரி முந்தியோ?
  • நெய்யும் திரியும் போனால் நிற்குமா விளக்கு?
  • நெய்யும் நெருப்பும் சேர்ந்தாற் போல
  • நெய்யை உருக்கித் தயிரைப் பெருக்கிச் சாப்பிட வேண்டும்
  • நெய்வதை விட்டு நினைத்துக் கொண்டானாம் கைக்கோளன்
  • நெய் வார்த்த கடன் நின்று வாங்கினாற் போல
  • நெய் வார்த்த பணம் முழுகிப் போகிறதா?
  • நெய் வார்த்து உண்டது நெஞ்சு அறியாதா?
  • நெருக்க நட்டு நெல்லைப் பார்; கலக்க நட்டுக் கதிரைப் பார்
  • நெருஞ்சி முள் தைத்தாலும் குனிந்தல்லவா பிடுங்க வேண்டும்?
  • நெருஞ்சி முள்ளுக்குக் கோபம் வந்தால் கவட்டை மட்டுந்தானே?
  • நெருப்பால் வெந்த குழந்தை நெருப்பைப் பார்த்தால் பயப்படும்; சூடுண்ட பூனை அடுப்பங்கரை போகாது
  • நெருப்பில் ஈ மொய்க்குமா?
  • நெருப்பில் நெய் விட்டது போல
  • நெருப்பில் பஞ்சு போட்டாற் போல
  • நெருப்பில் பட்ட மெழுகைப் போல
  • நெருப்பில் புழுப் பற்றுமா?
  • நெருப்பில் போட்டாலும் நெஞ்சு வேகாது
  • நெருப்பில் போட்டாலும் வேகுமா?
  • நெருப்பில் மெழுகைப் போட்டாற் போல
  • நெருப்பில் விழுந்த புழுப் போல
  • நெருப்பினும் பொல்லாச் செருப்பு
  • நெருப்பினும் பொல்லாது கருப்பின் வாதை
  • நெருப்பு அருகில் செத்தை கிடந்த கதை
  • நெருப்பு ஆறு, மயிர்ப்பாலம்
  • நெருப்பு இருக்கிற காட்டை நம்பினாலும் நீர் இருக்கிற காட்டை நம்பக் கூடாது
  • நெருப்பு இல்லாமல் நீள் புகை எழும்புமா?
  • நெருப்பு இல்லாமல் நீள் புகை எழுமா?
  • நெருப்பு இல்லாமல் புகை கிளம்பாது
  • நெருப்பு என்றால் வாய் சுடுமா?
  • நெருப்பு என்றால் வாய்வெந்து போமா?
  • நெருப்பு என்றால் வீடு வெந்து போகுமா?
  • நெருப்புக்கு ஈரம் உண்டா?
  • நெருப்புக்குத் தீட்டு இல்லை; எச்சிலும் இல்லை
  • நெருப்புககு நீர் பகை
  • நெருப்புச் சிறிது எனறு முன்றானையில் முடியலாமா?
  • நெருப்புச் சுட்டு உமிக் காந்தலில் விழுந்தது போல
  • நெருப்பு நிறை காட்டில் ஏதாவது நிற்கும்; நீர் நின்ற காட்டில் ஒன்றும் நிற்காது
  • நெருப்புப் பந்தம் கட்டிக் கொண்டு நிற்கிறான்
  • நெருப்புப் பந்திலிலே மெழுகுப் பதுமை ஆடுமோ
  • நெருப்புப் பந்தலிலே மெழுகுப் பொம்மை ஆடுமா?
  • நெருப்பும் சரி; பகையும் சரி
  • நெருப்பு ஜ்வாலையில் தண்ணீர் விட்டு அணைத்தது போல
  • நெருப்பை அறியாமல் தொட்டாலும் சுடும்
  • நெருப்பை ஈ மொய்க்குமா?
  • நெருப்பைக் கண்டு மிதித்தாலும் சுடும்; காணாமல் மிதித்தாலும் சுடும்
  • நெருப்பைச் சார்ந்த யாவும் அதன் நிறம் ஆகும்
  • நெருப்பைச் சிறிது என்று நினைக்கலாமா?
  • நெருப்பைச் செல் அரிக்குமா?
  • நெருப்பைத் தலைகீழாய்ப் பிடித்தாலும் அதன் ஜ்வாலை கீழ் நோக்குமா?
  • நெருப்பை நம்பினாலும் நீரை நம்பக்கூடாது
  • நெருப்பைப் புழுப் பற்றுமா?
  • நெருப்பை மடியில் கட்டிக் கொண்டிருக்கிறான்
  • நெருப்பை மடியில் முடிகிறதா?
  • நெல் அல்லாதது எல்லாம் புல்
  • நெல் இருக்கப் பொன்; எள் இருக்க மண்
  • நெல் எடுக்கவும் புல் எடுக்கவும் ஆச்சே
  • நெல் ஏறக் குடி ஏற
  • நெல் குறுணி; எலி முக்குறுணி
  • நெல்லால் அடித்தால் கல்லால் அடிப்பான்
  • நெல்லிக்காய் மூட்டை
  • நெல்லிக்காயைத் தின்று தண்ணீர் குடித்தால் உடன் பிறந்தவர்களுடன் பேசினமாதிரி இருக்கும்; மாம்பழம் தின்று தண்ணீர் குடித்தால் மாமியாருடன் பேசினமாதிரி இருக்கும்
  • நெல்லுக்கடை மாடு கன்று போடட்டும்
  • நெல்லுக் காய்ச்சி மரம் என்று கேட்டவன் போல
  • நெல்லுக்கு இறைத்த நீர் புல்லுக்கும் பாயும்
  • நெல்லுக்கு நண்டு, வாழைக்கு வண்டி, தென்னைக்குத் தேர்.
  • நெல்லுக்குத் தாளும் பெண்ணுக்குத் தோழனும்
  • நெல்லுக் குத்தினவனுக்கு நேர் உடன் பிறந்தாள்
  • நெல்லுக் குத்துகிறவளுக்குக் கல்லுப் பரீட்சை தெரியுமா?
  • நெல்லுக்கு நேரே புல்
  • நெல்லுக்குப் பாய்கிற தண்ணீர் புல்லுக்கும் பாயும்
  • நெல்லுக்குள் அரிசி இருக்கிறது என்றானாம்
  • நெல்லுக்குள்ளே அரிசி இருக்கிறது; எள்ளுக்குள்ளே எண்ணெய் இருக்கிறது
  • நெல்லுடன் பதரும் சேர்ந்தே இருக்கும்
  • நெல்லும் உப்பும் பிசைந்து உண்ணக்கூடுமா?
  • நெல்லூர் மாடுபோல இருக்கிறாள்
  • நெல்லைக் காணாத காக்கை அரிசியைக் கண்டாற் போல
  • நெல்லை விற்ற ஊரில் புல்லை விற்பதா?
  • நெல்லோடு பதரும் உண்டு
  • நெல்வகை எண்ணினாலும் பள்ளுவகை எண்ண முடியாது
  • நெல் விளைந்த பூமியும் அறியாய்: நிலா எறித்த முற்றமும் அறியாய்
  • நெல் வேர் இடப் புல் வேர் அறும்
  • நெற் செய்யப் புல் தேய்ந்தாற் போல
  • நெற்பயிர் செய்யின் பிற்பயிர் விளையும்
  • நெற்றிக் கண் காட்டினாலும் குற்றம் குற்றமே
  • நெற்றிக்குப் புருவம் தூரமா?
  • நெற்றியில் கண்
  • நெற்றியில் கண் படைத்தவனா?
  • நெற்றியில் மூன்று கண் படைத்தவன் வரவேண்டும்
  • நெற்றி வேர்வை நிலத்தில் விழ உழைத்தான்
  • நெறி தப்புவார்க்கு அறிவிப்பது வீண்

நே[தொகு]

  • நேசம் உள்ளளர் வார்த்தை நெல்லிக்கனி தின்றது போல
  • நேசமும் பாசமும் நேசனுக்கு உண்டு
  • நேத்திர மணியே சூத்திர அணியே
  • நேயமே நிற்கும்
  • நேர் உத்தரம் சென்மப் பழி
  • நேர்ந்து நேர்ந்து சொன்னாலும் நீசக் கசடர் வாசமாகார்
  • நேர்பட ஒழுகு
  • நேர்மை இல்லா மந்திரியும் நீதி இல்லா அரசும் பாழ்
  • நேர்மை உண்டானால் நீர்மையும் உண்டு
  • நேர்வழி நெடுக இருக்கக் கோணல் வழி குறுக்கே வந்ததாம்
  • நேரா நோன்பு சீர் ஆகாது
  • நேருக்கு நேர் சொன்னாலும் கூர் கெட்டவனுக்கு உறைக்காது
  • நேரும் சீருமாக
  • நேரும் சீருமாய்ப் போக வேண்டும்
  • நேரே போனால் எதிரும் புதிரும்
  • நேற்று இருந்தவனை இன்றைக்குக் காணோம்
  • நேற்று உள்ளார் இன்று இல்லை
  • நேற்று உள்ளார் இன்று மாண்டார்
  • நேற்றுப் பிறந்த நாய்க்கு வந்த பசியைப் பார்
  • நேற்றுப் பெய்த மழையில் முளைத்த காளான்
  • நேற்று வந்த மொட்டைச்சி நெய் வார்த்து உண்ணச் சிணுங்குகிறாள்
  • நேற்று வந்தாளாம் குடி; அவள் தலைமேல் விழுந்ததாம் இடி
  • நேற்று வெட்டின கிணற்றில் முந்தா நாள் முதலை புறப்பட்டதாம்
  • நேற்றே நெருப்பு அணைந்துவிட்டது என்பாளே அவள்

நை[தொகு]

  • நைடதம் புலவர்க்கு ஒளடதம்
  • நைபவர் எனினும் நொய்ய உரையேல்
  • நையக் கற்கினும் நொய்ய நன்குரை
  • நையப் புடைத்தாலும் நாய் நன்றி மறவாது
  • நைவினை நணுகேல்

நொ[தொகு]

  • நொடிக்கு நூறு கவி
  • நொடிக்கு நூறு குற்ற நொடிக்கு நூறு வசனம் சொல்வாள்
  • நொடிப் போதும் வீண் கடேல்
  • நொண்டி ஆயக்காரன் கண்டு மிரட்டுகிறது போல
  • நொண்டி ஆனைக்கு நூறு குறும்பு
  • நொண்டி ஆனை நொடியில் அழிக்கும்
  • நொண்டிக் கழுதைக்குச் சறுக்கினது சரக்கு
  • நொண்டிக்கு உண்டு நூற்றெட்டுக் கிறுக்கு
  • நொண்டிக்குக் குச்சோட்டமா?
  • நொண்டிக் குதிரைக்குச் சறுக்கினது சாக்கு
  • நொண்டிக் குப்பன் சண்டைக்குப் போனான்
  • நொண்டிக்கு நூற்றெட்டுக் கால்
  • நொண்டிக்குப் பெயர் தாண்டவராயன்; நொள்ளைக் கண்ணனுக்குப் பெயர் செந்தாமரைக் கண்ணன்
  • நொண்டிக்கு விட்ட இடத்திலே கோபம்
  • நொண்டிக் கோழிக்கு உரல் கிடை தஞ்சம்
  • நொண்டி நாய்க்கு ஓட்டமே நடை
  • நொண்டி நொண்டி நடப்பானேன்? கண்டதற் கெல்லாம் படைப்பானேன்?
  • நொண்டி புரத்தான் முயல் போச்சு
  • நொண்டியால் முயல் போயிற்று
  • நொண்டுகிற மாடு பொதி சுமக்காது
  • நொந்த கண் இருக்க நோக்கக் கண்ணுக்கு மருந்து இட்ட மாதிரி
  • நொந்ததை உண்டால் நோய் உண்டாகும்
  • நொந்த புண்ணிலே வேல் கொண்டு குத்தலாமா?
  • நொந்த மாட்டில் ஈ ஒட்டினது போல
  • நொந்தவர்களைக் கொள்ளை இடுகிறதா?
  • நொந்து அறியாதவன் செந்தமிழ் கற்றோன்
  • நொந்து நூல் அழிந்து போகிறது
  • நொந்து நொந்து சொன்னாலும் நீசக்கயவர் வசமாகார்
  • நொய் அரிசி கொதி பொறுக்குமா?
  • நொய் அரிசி பொரி பொரிக்காது
  • நொய்யர் என்பவர் வெய்யவர் ஆவார்
  • நொள்ளைக் கண்ணனுக்கு நோப்பாளம்
  • நொள்ளைக் கண்ணனுக்கு மை இடுகிறதா?
  • நொள்ளைக் கண்ணு நரிவிழுந்து லோகம் மூணும் சென்ற கதை
  • நொள்ளைக் கண் மூடி என்ன? விழித்தென்ன?
  • நொள்ளை நாய்க்கு வெள்ளை காண்பித்தாற் போல
  • நொறுங்கத் தின்றால் நூறு ஆயிசு
  • நொறுங்கத் தின்றால் நூறு வயது
  • நொறுங்குண்டவனைப் புறங்கொண்டு உரைப்பான்

நோ[தொகு]

  • நோக்க நோக்குவ, நோக்காமுன் நோக்குவான்
  • நோகாது உணர்வோர் கல்வியை நோற்பார்
  • நோகாமல் அடிக்கிறேன்; ஓயாமல் அழு
  • நோஞ்சல் பூனை மத்தை நக்குகிறது போல
  • நோய் அற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
  • நோய் அற்ற வாழ்வே வாழ்வு; குறைவற்ற செல்வமே செல்வம்
  • நோய் ஒரு பக்கம்; சூடு ஒரு பக்கமா?
  • நோய்க்கு இடம் கொடேல்
  • நோய்க்கும் பார்; பேய்க்கும் பார்
  • நோய் கண்டார் பேய் கண்டார்
  • நோய் கொண்டார் பேய் கொண்டார்
  • நோய் கொண்டால் பார்ப்பாரும் தின்பார் உடும்பு
  • நோய் தீர்ந்தபின் வைத்தியனை மதிக்கமாட்டார்
  • நோய்ந்த புலியானாலும் மாட்டுக்கு வலிது
  • நோய்ப்புலி ஆகிலும் மாட்டுக்கு வல்லது
  • நோய் பிடித்த கோழி போலத் தூங்கி வழிகிறான்
  • நோய் போக்குவது நோன்பு; பேய் போக்குவது இரும்பு
  • நோயற்ற வாழ்வே குறையற்ற செல்வம்
  • நோயாளிக்கு ஆசை வார்த்தை சொன்னாற் போல
  • நோயாளிக்குத் தெரியும் நோயின் வருத்தம்
  • நோயாளி தலைமாட்டில் பரிகாரி இருந்து அழுதாற் போல
  • நோயாளி விதியாளி ஆனால் பரிகாரி பேதாளி ஆவான்
  • நோயைக் கண்ட மனிதன் போல்; நாயைக் கண்ட திருடன் போல்
  • நோயோடு நூற்றாண்டு
  • நோயோ, பேயோ?
  • நோலா நோன்பு சீர் ஆகாது
  • நோலாமையினால் மேலானது போம்
  • நோவு ஒரு பக்கம் இருக்கச் சூடு ஒரு பக்கம் போட்டாற் போல
  • நோவு ஒன்று இருக்க, மருந்து ஒன்று கொடுத்தது போல
  • நோவு காடு எறிப் போச்சு
  • நோன்பு என்பது கொன்று தின்னாமை

நௌ[தொகு]

  • நௌவித் தொழில் நாசம்
  • நௌவியில்தானே கல்வியறிவைக் கல்
  • நௌவியும் முதுமையும் நடுவும் அற்றவன்
  • நௌவியும் வாழ்க்கையும் அழகு அல்ல. நற்குணம் ஒன்றே அழகு

[தொகு]

  • பட்சிக்குப் பசித்தாலும் எட்டியைத் தின்னாது.
  • பத்தில் குரு வந்தபோது பரமனும் பிச்சை எடுத்தான்.
  • பத்தில் பசலை; இருபதில் இரும்பு.
  • பத்தில் பார்வை; இருபதில் ஏற்றம்; முப்பதில் முறுக்கு; நாற்பதில் நழுவல்; ஐம்பதில் அசதி; அறுபதில் ஆட்டம்; எழுபதில் ஏக்கம்; எண்பதில் தூக்கம்.
  • பத்தில் விழுந்த பாம்பும் சாகாது.
  • பத்தினிக்கு கணவன் தான் எல்லாமே.
  • பத்தினிப்பெண் தாலிப்பிச்சை கேட்டால் எமனும் மனமுருகிப் போவான்.
  • பத்தினி என்ற பெயரோடே பத்துப் பிராயம் கழித்தாளாம்.
  • பத்தங்கியானையும் பலாக்காயையும் பார்த்த இடத்தில் சிராத்தம் பண்ணலாம்.
  • பத்தரை மாற்றுப் பசுந்தங்கம்.
  • பத்தாம் பசலிப் பேர் வழி.
  • பத்தாம் பேறு பாடையில் வைக்கும்.
  • பத்தாம் வீட்டைப் பார்ப்பான் பதவியைக் கொடுப்பான்.
  • பத்தியத்திற்கு முருங்கைக்காய் கொண்டுவரச் சொன்னால் பால் தெளிக்க அகத்திக்கீரை கொண்டு வருகிறான்.
  • பத்தியம் இருந்தாலும் மருந்து எதற்கு? பத்தியம் இல்லா விட்டாலும் மருந்து எதற்கு?
  • பத்தியம் பத்து நாள்; இளம் பிள்ளை இரண்டு மாதம்.
  • பத்திய முறிவுக்குப் பாகற்காய்.
  • பத்திரம், என் வாசலில் அடி வைக்காதே.
  • பத்திரிகை படியாதவன் பாதி மனிதன்.
  • பதிவிரதையின் கோபப் பார்வை ஊரையே எரித்துவிடும்.
  • பணம் போனால் சம்பாதிக்கலாம்; குணம் போனால் வராது.
  • பணம் போனாலும் குணம் போகாது.
  • பணம் வேண்டும்; அல்லது பத்துச் சனம் வேண்டும்.
  • பணமும் பத்தாய் இருக்க வேண்டும்; பெண்ணும் முத்தாய் இருக்க வேண்டும்.
  • பக்தங்கி கல்யாணம் பகலோடே.
  • படை முகத்திலும் அறிமுகம் வேண்டும்.
  • பணக்காரனுக்குப் பச்சிலை மருந்து சொல்லாதே.
  • பணம் உண்டானால் படையையும் வெல்வான்.
  • பணம் உண்டானால் மணம் உண்டு.
  • பணம் என்றால் பிணமும் கை தூக்கும்.
  • பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும.
  • பணம் என்றால் பேயாய்ப் பறக்கிறான்.
  • பணம் என்ன செய்யும்? பத்து விதம் செய்யும்.
  • பணம் என்ன பாஷாணம்; குணம் ஒன்றே போதும்.
  • பணம் கண்ட தேவடியாள் பாயிலே படுக்க மாட்டாள்.
  • பணம் குணம் ஆகும்; பசி கறி ஆகும்.
  • பணம் செல்லா விட்டால் அரிசிக்காரிக்கு என்ன?
  • பணம் பசியைப் போக்காது
  • பணம் பணந்தோடே சேரும்; இனம் இனத்தோடே சேரும்,
  • பணம் பந்தியிலே; குலம் குப்பையிலே,
  • பணம் பாதாளம் மட்டும் பாயும்.
  • பணம் பார்த்துப் பண்டம் கொள்; குணம் *பார்த்துப் பெண்ணைக் கொள்.
  • பணம் பாஷாணம்.
  • பணம் பெரிதா? குணம் பெரிதா?
  • பணம் பெரிதோ? பழமை பெரிதோ?
  • பணம் பெருத்தது நீலகிரி.
  • பணக்காரனுடன் பந்தயம் போடலாமா?
  • பணக்காரனும் தூங்கமாட்டான், பைத்தியக்காரனும் தூங்கமாட்டான்.
  • பணக்கேடு ஆனாலும் குணக்கேடு ஆகாது.
  • பணத்துக்கு ஓர் அம்பு கொண்டு பாழில் எய்கிறது போல.
  • பணத்துக்குப் பயறு பத்துப்படி; உறவுக்குப் பயறு ஒன்பது படி.
  • பணத்துக்குப் பெயர் ஆட்கொல்லி.
  • பணத்தைவிட பருந்துகள் கூட பறக்க முடியாது
  • பணத்தைக் கொடுக்கச் சொல்லி உயிரை வாங்குகிறது.
  • பணத்தைக் கொடுத்தானாம்; காட்டைக் கேட்டானாம்.
  • பணத்தைக் கொடுத்துப் பணியாரத்தை வாங்கிப் பற்றைக்குள்ளே இருந்து தின்ன வேண்டுமோ?
  • பணத்தைக் கொடுத்துப் பழந் தொழி வாங்கு.
  • பணத்தைப் பார்க்கிறதா? பழமையைப் பார்க்கிறதா?
  • பணந்தான் குலம்; பசிதான் கறி,
  • பணம் அற்றால் உறவு இல்லை; பசி அற்றால் ருசி இல்லை.
  • பணம் இருக்க வேணும்; இல்லா விட்டால் பத்து ஜனம் இருக்க வேணும்.
  • பணம் இருந்தால் பாட்சா; இல்லா விட்டால் பக்கிரி.
  • பணம் இல்லாதவன் பிணம்.
  • பணக்காரன் பின்னே பத்துப் பேர்; பரதேசி பின்னே பத்துப் பேர்.
  • பணக்காரனுக்குத் தகுந்த பருப்புருண்டை; ஏழைக்குத் தகுந்த எள்ளுருண்டை.
  • பணக்காரனுக்குத் தகுந்த மண் உண்டை; ஏழைக்குத் தகுந்த எள் உருண்டை.
  • பண்ணி வைத்தாற் போல, பையனுக்கு ஏற்றாற் போல.
  • பண்ணின பொங்கல் பத்துப் பேருக்குத்தான்.
  • பண்ணைக் காரன் பெண்டாட்டி பணியக் கிடந்து செத்தாளாம்.
  • பண்ணெக்காரன் பெண்டு பணியக் கிடந்து செத்தாளாம், பரியாரி பெண்டு புழுத்துச் செத்தான்.
  • பண்ணைப் பூப்போல நரைத்தும் புத்தி இல்லை.
  • பண்ணையார் வீட்டு நாயும் எச்சில் இலை என்றால் ஒருகை பார்க்கும்.
  • பண ஆசை தீமைக்கு வேர்.
  • பணக் கள்ளி பாயிற் படாள்.
  • பணக்காரன் பின்னும் பத்துப் பேர்; பயித்தியக்காரன் பின்னும் பத்துப் பேர்.
  • பண்ணாடிக்கு மாடு போன கவலை; சக்கிலிக்குக் கொழுப்பு இல்லையே என்ற கவலை.
  • பண்ணிப் பார்த்தாற் போல.
  • பண்ணிய பயிரில் புண்ணியம் தெரியும்.
  • பண்ணிய பாவத்துக்குப் பயன் அநுபவித்தாக வேணும்.
  • பண்ணிய பாவத்தைப் பட்டுத் தொலைக்க வேண்டும்.
  • பண்டாரம் பிண்டத்துக்கு அழுதானாம்; லிங்கம் பஞ்சாமிர்தம் கேட்டதாம்.
  • பண்டாரமே, குருக்களே, பறைச்சி மூத்திரம் குடித்தவரே!
  • பண்டித வம்சம்.
  • பண்டிதன் பிள்ளை சும்பன்.
  • பண்டை பட்ட பாட்டைப் பழங்கிடுகில் போட்டுவிட்டுச் சம்பா நெற்குத்திப் பொங்கல் இடுகிறாள்.
  • பண்ணப் பண்ணப் பல விதம் ஆகும்.
  • பண்ணாடி படியிலே பார்த்தால், ஆண் நடையிலே பார்த்துக் கொள்வான்.
  • பண்டாரம் பிண்டத்துக்கு அழுகிறான்; லிங்கம் பால் சோற்றுக்கு அழுகிறது.
  • பண்டாரத்துக்கும் நாய்க்கும் பகை.
  • பண்டாரம் என்றால் இலை போடும் ஆளா?
  • பண்டாரம் கூழுக்கு அழச்சே, லிங்கம் பரமான்னத்துக்கு அழுத கதை.
  • பண்டாரம் கூழுக்கு முன்றானையா?
  • பண்டாரம் படபடத்தால் பானைசட்டி லொடலொடக்கும்.
  • பண்டாரம் பழத்துக்கு அழும்போது பிள்ளை பஞ்சாமிர்தத்துக்கு அழுததாம்.
  • பணி செய்வோன் வாயும் சங்குப் பின்னுமாய்ப் பேசுகிறான்.
  • பணியாரம் தின்னச் சொன்னார்களா? பொத்த லை எண்ணச் சொன்னார்களா?
  • பணியாரமோ கிலுகிலுப்போ?
  • படையாது படைத்த மருமகளே. உன்னைப் பறையன் அறுக்கக் கனாக் கண்டேன்.
  • படையிலும் ஒருவன்; கொடையிலும் ஒருவன்.
  • பண்டம் ஓரிடம்; பழி ஓரிடம்.
  • பண்டம் ஓரிடம்; பழி பத்திடம்.
  • பட்டுக்கோட்டைக்கு வழிகேட்பவனிடம் கொட்டைப் பாக்கு பலம் பத்து ரூபாய் என்கிறாய்?
  • பட்டு மட்கினாலும் பெட்டியிலே.
  • படி தாண்டாப் பத்தினி.
  • படைத்தவன் காக்க வேண்டு.
  • படை பண்ணியும் பாழும் கோட்டை.
  • படை மிருந்தால் அரண் இருக்கும்.
  • படை முகத்தில் ஒப்பாரியா?
  • படைக்குப் போகாதவர் நல்ல வீரர்.
  • படை கெட்டு ஓடுகையில் நரைமயிர் பிடுங்குகிறதா?
  • படைச்சாலுக்கு ஒரு பணம் இருந்தாலும் பயிர் இல்லாதவன் பாவி.
  • படைச்சாலுக்கு ஒரு பணம் கொடுத்தாலும் பயிரிடும் குடிக்குச் சரி ஆமா?
  • படைத்த உடைமையைப் பாராமல் போனால் பாழ்.
  • படைக் களத்திலே ஒப்பாரி இடுகிறதா?
  • படைக்காமல் படைத்தானாம்; காடு மேடு எல்லாம் இழுத்து அடித்தானாம்.
  • படைக்கு ஒருவன்; கொடைக்கு ஒருவன்.
  • படைக்கு ஓடி வாழ்; பஞ்சத்துக்கு இருந்து வாழ்
  • படைக்குப் பயந்து செடிக்குள் ஒளிகிறதா?
  • படுத்தால் பசி பாயோடே போய் விடும்.
  • படுத்திருப்பவன் எழுவதற்குள்ளே நின்றவன் நெடுந்துாரம் போவான்.
  • படுதீப் பட்டு வேகிற வீட்டில் படுத்துக் கொள்ள இடம் கேட்டானாம்.
  • படுவது பட்டும் பட்டத்துக்கு இருக்க வேண்டும்.
  • படுகளப்பட்ட பன்னாடை.
  • படுகுழி வெட்டினவன் அதிலே விழுவான்.
  • படித்துக் கெட்டவன் இராவணன்; படிக்காமல் கெட்டவன் துரியோதனன்.
  • படிதாண்டாப் பத்தினி.
  • படிப்படியாகத்தான் ஏற வேண்டும்.
  • படித்தது ராமாயாணம்; இடிப்பது பெருமாள் கோவில்.
  • படிப்பது திருவாசகம்; இடிப்பது சிவன் கோயில்.
  • படிப்பது வேதம்; அறுப்பது தாலி.
  • படிப்புக்கும் பதவிக்கும் சம்பந்தம் இல்லை.
  • படித்த வித்தை பதினெட்டும் பார்த்தான்.
  • படித்துக் கிழித்தான்.
  • படித்தவனுக்கும் படிக்காதவனுக்கும் கொக்குக்கும் அன்னத்துக்கும் உள்ள வித்தியாசம் போல.
  • படித்த முட்டாள் படு முட்டாள்.
  • படித்த முட்டாளாக இருக்கிறான்.
  • படித்தவன் பாட்டைக் கெடுத்தான்; எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான்,
  • படித்தவன் பின்னும் பத்துப் பேர்; பைத்தியக்காரன் பின்னும் பத்துப் பேர்.
  • படிக்கிறது திருவாய்மொழி; இடிக்கிறது. பெருமாள் கோயில்.
  • படிக்கிற பிள்ளை பாக்குப் போட்டால் நாக்குத் தடிப்பாயப் போம்.
  • படிக்கு அரசன் இருந்தால் குடிக்குச் சேதம் இல்லை.
  • படிக்குப் படி நமசிவாயம்.
  • படிக்குப் பாதி தேறாதா?
  • படிக்கும் மரக்காலுக்கும் இரண்டு பட்டை. பார்ப்பாரப் பையனுக்கு மூன்று பட்டை,
  • பட்டு மடிச்சால் பெட்டியிலே; பவிஷு குறைந்தால் முகத்திலே.
  • பட்டைக்குத் தகுந்த பழங்கயிறு.
  • பட்டை நாமத்தைப் பாக்கச் சாத்தினான்.
  • பட்டை பட்டையாய் விபூதி இட்டால் பார்ப்பான் என்று எண்ணமோ?
  • படர்ந்த அரசு, வளர்ந்த ரிஷபம்.
  • படாத பாடு பதினெட்டுப் பாடும் பட்டான்.
  • படாள் படாள் என்கிற பாடகன் மகள் பாடையில் ஏறியும் பட்டானாம்.
  • படி ஆள்வார் நீதி தப்பின் குடி ஆர் இருப்பார் குவலயத்தில்,
  • படிக்கம் உடைந்து திருவுருக் கொண்டால் பணிந்து பணிந்து தான் கும்பிட வேண்டும்.
  • படிக்கிறது சிவ புராணம்; இடிக்கிறது சிவன் கோயில்,
  • பட்டுக் கோட்டைக்கு வழி எது என்றால், கொட்டைப் பாக்குப் பணத்துக்குப் பத்து என்றாளாம்.
  • பட்டுப் புடைவை இரவல் கொடுத்ததும் அல்லாமல் பாயையும் தூக்கிக் கொண்டு அலையலாயிற்று.
  • பட்டுப் புடைவை இரவல் கொடுத்து மணையை எடுத்துக் கொண்டுதிரிவது போல.
  • பட்டுப் புடைவை கொடுத்துத் தடுக்கும் போடுகிறதா?
  • பட்டுப் புடைவையில் ஊசி தட்டுகுவிப் பாய்ந்தாற் போல.
  • பட்டும் ஒன்று, பழுக்காயும் ஒன்றா?
  • பட்டும் பட்டாவளியும் பெட்டியில் இருக்கும்? காற்காசுக் கந்தை ஓடி உலாவும்.
  • பட்டும் பாழ்; நட்டும் சாவி.
  • பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டைப் பாக்கு விலை என்ன என்றான்.
  • பட்டு நூல் தலை கெட்டாற் போல.
  • பட்டு நூலுக்குள்ளே சிக்கெல்லாம் இருக்கிறது.
  • பட்டவர்க்கு உண்டு பலன்.
  • பட்டுக் கிடக்கிற பாட்டிலே கட்டிக் கொண்டு அழ முடிய வில்லையாம், கற்றாழை நாற்றம்.
  • பட்டுக் கிடப்பானுக்கு வாழ்க்கைப் பட்ட நாள்முதல் நெட்டோட்டம் ஒழியக் குச்சோட்டம் இல்லை.15265
  • பட்டுக் கிழிந்தால் தாங்காது; பங்கரைக்கு வாழ்வு வந்தால் நிற்காது.
  • பட்டுக்கு அழுவார், பணிக்கு அழுவார்; வையகத்தில் பாக்குக்கு அழுத பாபத்தைக் கண்டதில்லை.
  • பட்டுக் குலைந்தால் பொட்டு.
  • பட்டினி இருக்கும் நாய்க்குத் தின்னப் பகல் ஏது? இரவு ஏது?
  • பட்டினியே சிறந்த மருந்து.
  • பட்டு அறி; கெட்டு அறி; பத்தெட்டு இறுத்து அறி.
  • பட்டுக் கத்தரித்தது போலப் பேச வேண்டும்.
  • பட்டிக் காட்டுப் பெருமாளுக்குக் கொட்டைத் தண்டே கருட கம்பம்.
  • பட்டிக்குப் பிராயச்சித்தம் உண்டு; பழையக்துகுப் பிராயச்சித்தம் இல்லை.
  • பட்டி குரைத்தால் படி திறக்குமோ?
  • பட்டி கூட ஆனை போதும்.
  • பட்டி நாய்க்குப் பட்டது சரி.
  • பட்டி நாய் தொட்டி சேராது.
  • பட்டி மாட்டுக்குக் கட்டை கட்டினது போல.
  • பட்டி மாட்டுக்குச் சூடு போட்டது போல.
  • பட்டினத்து நரியைப் பனங்காட்டு நரி ஏய்த்தாற் போல.
  • பட்டினம் பெற்ற கலம்.
  • பட்டிக் காட்டானுக்குச் சிவப்புத் துப்பட்டி பீதாம்பரம்.
  • பட்டால் பாழ் போகுமா?
  • பட்டி என்று பேர் எடுத்தும் பட்ட கடன் அடையவில்லை.
  • பட்டிக்காட்டான் ஆனையைக் கண்டது போல்.
  • பட்டிக்காட்டான் நாய்க்கு அஞ்சான்; பட்டினத்தான் பேய்க்கு அஞ்சான்.
  • பட்டிக்காட்டான் மிட்டாய்க் கடையை முறைத்துப் பார்த்தாற் போல.
  • பட்டவளுக்குப் பலன் உண்டு; பதவியும் உண்டு.
  • பட்டால் தெரியும் பார்ப்பானுக்கு; கெட்டால் தெரியும் செட்டிக்கு.
  • பட்டால் பகற்குறி; படாவிட்டால் இராக்குறி
  • பட்டால் பலன் உண்டு.
  • பட்டவர்க்குப் பதவி உண்டு.
  • பட்டவர்கள் பதத்தில் இருப்பார்கள்.
  • பட்டம் கட்டின குதிரைக்கு லட்சணம் பார்ப்பதுண்டா?
  • பட்டம் தப்பினால் நட்டம்
  • பட்ட மரம் காற்றுக்கு அஞ்சாது.
  • பட்ட ருணம் சுட்டாலும் தீராது.
  • பட்டர் வீட்டில் பாவம் படுத்திருக்கும்.
  • பட்டப் பகலைப் போல நிலா எறிக்கக் குட்டிச் சுவரிலே முட்டிக் கொள்ள வெள்ளெழுத்தா?
  • பட்ட பாட்டிலும் பெருத்த பாடாக,
  • பட்ட பாட்டுக்குப் பலன் கைமேலே.
  • பட்ட பாடும் கெட்ட கேடும்.
  • பட்டம் அறிந்து பயிர் இடு
  • பட்டப் பகல் விளக்குப் பாழடைந்தாற் போல.
  • பட்டப் பகலில் குட்டிச் சுவரில் முட்டிக் கொள்வதா?
  • பட்டப் பகலில் நட்சத்திரம் கண்டாற் போல.
  • பட்டப் பகலில் பட்டணம் கொள்ளை போச்சாம்.
  • பட்டப் பகலில் டோகிறவளுக்குத் தட்டுக் கூடை மறைப்பா?
  • பட்டது எல்லாம் பாடு; நட்டது எல்லாம் சாவி.
  • பட்டது கெட்டது எல்லாம் பக்கத்தில் பக்கத்தில் வைத்து விட்டுப் புட்டுக் கூடையை ஏந்திக் கொண்டாள் பூப்பறிக்க.
  • பட்டதும் கெட்டதும் பாய் முடைந்து விற்றதும் ஓலை முடையாமல் உட்கார்ந்திருந்ததும்.
  • பட்டப் பகல் போல,
  • பட்டப் பகல் போல் நிலவு எறிக்கக் குட்டிச்சுவரிலே முட்டிக் கொள்ள என்ன வெள்ளெழுத்தா?
  • பட்டணத்தைப் படல் கட்டிச் சாத்தலாமா?
  • பட்டணம் பறி போகிறது.
  • பட்டத்து ஆனை பல்லக்குக்குப் பின்னே வருமா?
  • பட்டத்து ஆனை பவனி வந்தாற் போல.
  • பட்டத்து ஆனையைப் பார்த்துக் காட்டானை சிரித்ததாம்.
  • பட்டணத்துக் காசு பாலாறு தாண்டாது.
  • பட்டணத்து நரியைப் பனங்காட்டு நரி ஏய்த்ததாம்.
  • பட்டணத்துப் பெண் தட்டுவாணி; பட்டிக் காட்டுப் பெண் ருக்மிணி.
  • பட்டணத்து வாசலைப் பட்டாலே மூடியிருக்கிறதோ?
  • பட்சி சிறகு பறி கொடுத்தாற் போல.
  • பட்சித்தாலும் அவர் சித்தம்; ரட்சித்தாலும் சித்தம்.
  • பட்சி மாறி விட்டது.
  • பட்ட இடம் பொழுது; விட்ட இடம் விடுதி.
  • பட்ட கடனுக்குக் கொட்டை நூற்று அடைத்தாளாம்.
  • பட்ட காலிலே படும்; கெட்ட குடியே கெடும்.
  • பட்ட குணம் சுட்டாலும் போகாது.
  • பட்டடையோடு நின்று தின்ற மாட்டுக்குக் கட்டி வைத்துப் போடக் கட்டுமா?
  • பட்டணத்தாள் பெற்ற குட்டி; பணம் பறிக்க வல்ல குட்டி.
  • பங்கு இடுபவன் பந்து ஆனால் பந்தியில் எங்கே இருந்தால் என்ன?
  • பஞ்சாங்கம் பல சாத்திரம்; கஞ்சி குடித்தால் கல மூத்திரம்.
  • பஞ்சும் நெருப்பும் ஒன்றாய்க் கிடக்குமோ?
  • பஞ்சும் நெருப்பும் பக்கத்தில் இருந்தாற் போல
  • பஞ்சும் நெருப்பும் போல.
  • பட்சத்துக்குக் கண் இல்லை
  • பஞ்சுப் பொதியில் நெருப்புப் பட்டாற் போல.
  • பஞ்சுப் பொதியில் பட்ட அம்பு போல.
  • பஞ்சு படாப் பாடு படும்.
  • பஞ்சு படிந்த பழஞ்சித்திரம் போல.
  • பஞ்சு போலப் பறக்கிறேன்
  • பஞ்சாங்கம் பொய் என்றால் கிரகணத்தைப் பார்.
  • பஞ்சாங்கம் போனாலும் நட்சத்திரம் போகாது.
  • பஞ்சானும் குஞ்சானும் பறக்கத் தவிக்கின்றன.
  • பங்கு இல்லாப் பங்கை விழுந்து அள்ளலாமா?
  • பஞ்சாங்கம் கெட்டுப் போனாலும் நவக்கிரகம் கெட்டுப் போகுமா?
  • பஞ்சத்துக்கு இருந்து பிழை; படைக்கு ஓடிப் பிழை.
  • பஞ்சத்துக்கு மழை பனி போல.
  • பஞ்சபாண்டவர் என்றால் தெரியாதா, கட்டில் சாலைப்போல் மூன்று பேர் என்று இரண்டு விரல் காட்டி ஒரு கோடு எழுதினாள்.
  • பஞ்சம் இல்லாக் காலத்தில் பசி பறக்கும்.
  • பஞ்சம் தீரும்போது கொல்லும்.
  • பஞ்சம் பணியாரம் சுட்டது; வீங்கல் வெறிக்க வெறிக்கப் பார்க்கிறது.
  • பஞ்சம் போம்; பஞ்சத்தில் பட்ட வசை போகாது.
  • பஞ்சம் போம்; பழி நிற்கும்.
  • பஞ்சம் வந்தாலும் பரதேசம் போகாதே,
  • பஞ்சமே வந்தாலும் நெஞ்சமே அஞ்சாதே.
  • பஞ்சாங்கக் காரன் மனைவி வெற்றிலை போடுகிறது போல.
  • பஞ்சாங்கக் காரன் வீட்டில் சாப்பாடு நடக்கிற வேளை.
  • பஞ்சாங்கம் கிழிந்தாலும் நட்சத்திரம் அழியாது.
  • பசுவைக் கொன்று செருப்புத்தானம் செய்ததுபோல.
  • பசுவைப் போல் இரு; புலியைப் போல் பாய்.
  • பசுவை விற்றால் கன்றுக்கு வழக்கா?
  • பசையைக் கண்டால் ஒட்டடி மகளே
  • பஞ்சத்தில் அடிபட்ட மாடு கம்பங் கொல்லையிற் புகுந்தாற்போல.
  • பஞ்சத்தில் அடிபட்டவன் போல.
  • பஞ்சத்தில் பிள்ளை விற்றது போல.
  • பசுவிலே சாதுவையும் பார்ப்பானிலே ஏழையையும் நம்பக்கூடாது.
  • பசுவின் உரத்திலும் பழம் புழுதி மேல்.
  • பசுவின் வயிற்றில்தான் கோரோசனை பிறக்கிறது
  • பசுவுக்கு இரை கொடுத்தால் மதுரமான பால் கொடுக்கும்.
  • பசுவுக்குத் தண்ணீர் பத்துப் புண்ணியம்.
  • பசுவுக்குப் பிரசவ வேதனை; காளைக்குக் காம வேதனை.
  • பசுவும் பசுவும் பாய்ச்சலுக்கு நிற்க, நடுப்புல் தேய்ந்தாற்போல.
  • பசுவும் புலியும் பரிந்து ஒரு துறையில் நீர் உண்கின்றன
  • பசுவைக் கொன்றால் கன்று பிழைக்குமா?
  • பசுவில் மோழையும் இல்லை; பார்ப்பானில் ஏழையும் இல்லை.
  • பசு விழுந்தது புலிக்கு ஆதாயம்.
  • பசு போன வழியே கன்று போகும்.
  • பசும் உரத்திலும் பழம் புழுதி மேல்.
  • பசும் புல் தேய நட வாத பாக்கியவான்.
  • பசும்புல் நுனிப் பனி ஜலம் போல
  • பசு மரத்தில் அறைந்த ஆணி போல.
  • பசுமாடு நொண்டியானால் பாலும் நொண்டியா?
  • பசுமாடும் எருமை மாடும் ஒன்று ஆகுமா?
  • பசுவன் பிடிக்கப் போய்க் குரங்கானாற் போல.
  • பசுவில் ஏழை, பார்ப்பானில் ஏழை
  • பசுந்தாள் உரமே பக்குவ உணவாம்.
  • பசுப் பிராயம்
  • பசுப் போல இருந்து புலிபோலப் பாய்கிறான்.
  • பசுச் சாதும் பார்ப்பான் ஏழையும் நம்பப்படாது.
  • பசுத் தின்னாவிடில் பார்ப்பானுக்கு.
  • பசுத் தோல் போர்த்த புலி.
  • பசுத் தோல் போர்த்துப் புலிப் பாய்ச்சல் பாய்கிறது.
  • பசுச் சாதும் பார்ப்பான் ஏழையும் உண்டா?
  • பசு கிழமானால் பால் ருசி போமா?
  • பசி வந்தால் பக்தி பறக்கும்.
  • பசி வந்திடப் பத்தும் பறந்து போம்.
  • பசி வேளைக்குப் பனம் பழம் போல வை.
  • பசு உரத்திலும் பழம் புழுதி நல்லது.
  • பசு உழுதாலும் பயிரைத் தின்ன ஒட்டான்.
  • பசு ஏறு வாலும் எருது கூழை வாலும்.
  • பசுக் கறக்கு முன் பத்துப் பாட்டம் மழை பெய்யும்.
  • பசுக் கறந்தாற் போல.
  • பசு கறுப்பானால் பாலும் கறுப்பா?
  • பசு கிழமானாலும் பாலின் சுவை போகுமா?
  • பசு குசுவினாற் போல.
  • பசி ருசி அறியாது; நித்திரை சுகம் அறியாது.
  • பசித்தார் பொழுதும் போம்; பாலுடனே அன்னம் புசித்தால் பொழுதும் போம்.
  • பசித்தால் ௫சி இல்லை. பசித்துப் புசி.
  • பசித்து வந்து பானையைப் பார்க்காமல், குளித்து வந்து கொடியைப் பார்க்காமல்.
  • பசித்து வருவோர் கையிலே பரிந்து அமிர்தம் ஈந்தாற் போல.
  • பசித்தோர் முகம் பார்.
  • பசி தீர்ந்தால் பாட்டும் இன்பமாம்.
  • பசி பசி என்று பழையதில் கை விட்டாளாம்.
  • பசியாத போது புசியாதே.
  • பசியாமல் இருக்க மருந்து கொடுக்கிறேன்; பழையது இருந்தால் போடு என்பது போல.
  • பசியாமல் வரம்தருகிறேன்; பழங்கஞ்சி இருந்தால் பார்.
  • பசியா வரம் படைத்த தேவர் போல.
  • பசியிலும் எழை இல்லை; பார்ப்பாரிலும் ஏழை இல்லை.
  • பசியுடன் இருப்பவனுக்குப் பாதித் தோசை போதாதா?
  • பசித்த வீட்டில் பச்சை நாவி சேராது.
  • பசித்த செட்டி பாக்கைத் தின்றானாம்.
  • பசித்த பறையனும் குளித்த சைவனும் சாப்பிடாது இரார்.
  • பசித்தவன் தின்னாததும் இல்லை; பகைத்தவன் சொல்லாததும் இல்லை.
  • பசித்தவன் பயிற்றை விதை; இளைத்தவன் என்னை விதை.
  • பசித்தவன் பழங்கணக்கைப் பார்த்தது போல.
  • பசித்தவன் மேல் நம்பிக்கை வைக்கலாமா?
  • பசித்தவனுக்குப் பால் அன்னம் இட்டாற் போல
  • பசித்த கணக்கன் பழங்கணக்குப் பார்த்ததுபோல.
  • பசி ஏப்பமா? புளி ஏப்பமா?
  • பசிக்குக் கறி வேண்டாம்; தூக்கத்துக்குப் பாய் வேண்டாம்.
  • பசிக்குப் பனம் பழம் தின்னால் பித்தம் பட்ட பாடு படட்டும்.
  • பசிக்குப் பனம் பழம் தின்றால் பித்தம் போகும் இடத்துக்குப் போகும்.
  • பசிக்குப் பனம் பழம் தின்றால் பின்னால் பட்டபாடு படலாம்
  • பசிக்குப் பனம் பழமும் ருசிக்கும்.
  • பசிக்குமுன் பத்தும் பறக்கும்.
  • பசி இல்லாதவனுக்குக் கருப்பு மயிர் மாத்திரம்.
  • பசி உள்ளவன் ருசி அறியான்.
  • பசி உற்ற நேரத்தில் இல்லாத பால் பழம் பசி அற்ற நேரத்தில் ஏன்?
  • பசி ஏப்பக்காரனுக்கும் புளி ஏப்பக்காரனுக்கும் வித்தியாசம் இல்லையா?
  • பசி ஏப்பக்காரனும் புளி ஏப்பக்காரனும் கூட்டுப் பயிர் இட்டாற் போல
  • பச்சை மரம் படப் பார்ப்பான்.
  • பச்சை மீனைப் பட்டிலே பொதித்து வை.
  • பச்சையைக் கண்டால் ஒட்டடி மகளே,
  • பசங்கள் கஷ்டம் பத்து வருஷம்
  • பச்சை மரத்துக்கு இத்தனை என்றால் பட்ட மரத்துக்கு எத்தனை?
  • பச்சை மட்டைக்குப் போனவன் பதினெட்டாந் துக்கத்துக்கு வந்தாற் போல.
  • பச்சை மண்ணும் சுட்ட மண்ணும் ஒட்டுமா?
  • பச்சை மரத்தில் ஆணி அடித்தது போல
  • பச்சைப் பாண்டத்தில் பாலை வைத்தால் பாலும் உதவாது; பாண்டமும் உதவாது.
  • பச்சைப் புண்ணில் ஊசி எடுத்துக் குத்தினது போல.
  • பச்சை பாதி புழுங்கல் பாதி,
  • பத்தினித் தாயே.
  • பச்சை நெல்லுக்கு பறையனிடத்தில் சேவிக்கலாம்.
  • பச்சை கொடுத்தால் பாவம் தீரும்; வெள்ளை கொடுத்தால் வினை தீரும்;
  • பச்சைச் சிரிப்புப் பல்லுக்குக் கேடு; தூவு பருக்கை வயிற்றுக்குக் கேடு.
  • பச்சைத் தண்ணீரிலே விளக்குக் கொடுத்துப் படா பத்தினித் தாயே; பெண்டாண்டவனே, உன்னைத் தொட்டவர்கள் எத்தனை பேரடி? துலுக்குப்
  • பச்சிலையும் கிள்ளப் படுமோ பராபரமே.
  • பச்சை உடம்பிலே போடாத மருந்தும் மருந்தா? பந்தியிலே வைக்காத சீரும் சீரா?
  • பச்சைக் குழந்தைக்கு எத்தத் தெரியும்.
  • பச்சைக் கூட்டோடே கைலாயம் சேர்வாய்,
  • பச்சை கண்டால் ஒட்டடி மகளே.15055
  • பச்சரிசியும் பறங்கிக் காயும் உடம்புக்கு ஆகா.
  • பச்சிலைத் தோசை அறியாத பன்னாடை இட்டலியைப் பார்த்ததும் எடுத்து எடுத்துப் பார்த்ததாம்
  • பங்குனி மாதம் பந்தலைத் தேடு.
  • பங்கூர் ஆண்டி கட்டின மடம்.
  • பங்குனி மழையால் பத்தெட்டும் சேதம்.
  • பங்குனி மாதம் பகல் வழி நடந்தவன் பெரும்பாவி.
  • பங்குனி மாதம் பகல் வழி நடந்தவனைப் பார்த்திருப்பவனும் பாவி.
  • பங்குனி மாதம் பத்துக்கும் நஷ்டம்.
  • பங்குனி மாதம் பதர்கொள்.
  • பங்குனி என்று பருப்பதும் இல்லை; சித்திரை என்று சிறுப்பதும் இல்லை.
  • பங்குனி சித்திரையில் பகல் வழி நடப்பது போல.
  • பங்குனிப் பனி பால் வார்த்து முழுகியது போல.
  • பங்குனி மழை பத்துக்கும் நஷ்டம்.
  • பங்குனி மழை பதம் கொடுக்கும்.
  • பங்குனி மழை பல விதத்திலும் சேதம்.
  • பங்கு இல்லாப் பங்கை விழுந்து அள்ளலாமா?
  • பங்கு இட்டவளுக்குப் பானைதான் மிச்சம்.
  • பங்கு இடுபவன் பந்து ஆனால் பந்தியில் எங்கே இருந்தால் என்ன?
  • பங்குனி மழையால் பத்தெட்டும் சேதம்.
  • பங்குனிப் பனி பால் வார்த்து முழுகியது போல.
  • பங்குனி மழை பத்துக்கும் நஷ்டம்.
  • பங்குனி மழை பதம் கொடுக்கும்.
  • பங்குனி மழை பல விதத்திலும் சேதம்.
  • பங்குனி சித்திரையில் பகல் வழி நடப்பது போல.
  • பங்கு இடுபவன் பந்து ஆனால் பந்தியில் எங்கே இருந்தால் என்ன?
  • பங்கு இல்லாப் பங்கை விழுந்து அள்ளலாமா?
  • பங்குனி என்று பருப்பதும் இல்லை; சித்திரை என்று சிறுப்பதும் இல்லை.
  • பங்கு இட்டவளுக்குப் பானைதான் மிச்சம்.
  • பங்காளத்து நாய் சிங்காசனம் ஏறினதென்று வண்ணான் கழுதை வெள்ளாவிப் பானையில் ஏறினதாம்.
  • பங்காளிக்குப் பல்லிலே விஷம்.
  • பங்காளிச் சண்டை பொங்கலுக்கு இருக்காது.
  • பங்காளியையும் பனங்காயையும் பதம்பார்த்து வெட்ட வேண்டும்.
  • பங்காளியோ, பகையாளியோ?
  • பங்காளி வீடு வேகிறது; சுக்கான் கொண்டு தண்ணீர் விடு.
  • பங்கில் பாதி பரத்வாஜம்.
  • பங்குனி மாதம் பகல் வழி நடந்தவன் பெரும்பாவி.
  • பகையாளி குடியைக் கெடுக்க வெங்காயக் குழி போடச் சொன்னது போல.
  • பகையும் உறவும் பணம் பக்குவம்.
  • பகைவர் உறவு புகை எழா நெருப்பு.
  • பகைவரிடம் நல்ல வார்த்தை சொன்னால் பொல்லாப்பு இல்லை.
  • பகைவன் இல்லாத ஊரில் குடி இருக்காதே.
  • பங்கறை சாவானுக்குப் பல்லழகைப் பார்.
  • பங்கன் இருக்குமிடத்தைத் தேடிக் கங்கை வந்தது போல.
  • பங்குனி மழை பத்துக்கும் நஷ்டம்.
  • பங்குனி மழை பதம் கொடுக்கும்.
  • பங்குனி மழை பல விதத்திலும் சேதம்.
  • பங்குனி மழையால் பத்தெட்டும் சேதம்.
  • பங்குனி என்று பருப்பதும் இல்லை; சித்திரை என்று சிறுப்பதும் இல்லை.
  • பங்குனி சித்திரையில் பகல் வழி நடப்பது போல.
  • பங்குனிப் பனி பால் வார்த்து முழுகியது போல.
  • பகலில் பக்கம் பார்த்துப் பேசு இரவில் அதுதானும் பேசாதே.
  • பக்கச் சொல் பதினாயிரம்.
  • பங்கு இட்டவளுக்குப் பானைதான் மிச்சம்.
  • பங்காளியோ, பகையாளியோ?
  • பங்காளி வீடு வேகிறது; சுக்கான் கொண்டு தண்ணீர் விடு.
  • பங்கில் பாதி பரத்வாஜம்.
  • பங்காளிச் சண்டை பொங்கலுக்கு இருக்காது.
  • பங்காளியையும் பனங்காயையும் பதம்பார்த்து வெட்ட வேண்டும்.
  • பகைவன் இல்லாத ஊரில் குடி இருக்காதே.
  • பங்கன் இருக்குமிடத்தைத் தேடிக் கங்கை வந்தது போல.
  • பங்காளத்து நாய் சிங்காசனம் ஏறினதென்று வண்ணான் கழுதை வெள்ளாவிப் பானையில் ஏறினதாம்.
  • பங்காளிக்குப் பல்லிலே விஷம்.
  • பங்கறை சாவானுக்குப் பல்லழகைப் பார்.
  • பகையாளி குடியைக் கெடுக்க வெங்காயக் குழி போடச் சொன்னது போல.
  • பகையும் உறவும் பணம் பக்குவம்.
  • பகைவர் உறவு புகை எழா நெருப்பு.
  • பகைவரிடம் நல்ல வார்த்தை சொன்னால் பொல்லாப்பு இல்லை.
  • பகையாளி குடியை உறவாடிக் கெடு.
  • பகுஜன வாக்யம் கர்த்தவ்யம்,
  • பகைக்கச் செய்யேல்; மறு ஜனனப்படு.
  • பகைத்தவர் சொல்லாதது இல்லை; பசித்தவர் தின்னாதது இல்லை.
  • பகைத்தவன் பாட்டைப் பகலில் கேள்,
  • பகைத்தால் உறவு இல்லை.
  • பகையாளிக்குப் பருப்பிலே நெய் விட்டது போல.
  • பகிடியைப் பாம்பு கடித்தது போல,
  • பகிர்ந்து தின்றால் பசி ஆறும்.
  • பகுத்தறிவு இல்லாத துணிவு, பாரம் இல்லாத கப்பல்.
  • பகுத்து அறியாமல் துணியாதே; படபடப்பாகப் பேசாதே.
  • பகலில் பசுமாடு தெரியாதவனுக்கு இரவில் எருமை மாடு தெரியுமா?
  • பகலில் பன்றி வேட்டைக்கு அஞ்சும் நாய், இரவில் கரித்துண்டுக்கு அஞ்சும்.15005
  • பகலிலே தாலி கட்டுவதும் இரவில் பிள்ளை கொடுப்பதும் புருஷனின் வேலை. கொடுப்பதை மறுக்காமல் பெறுவது பொண்டாட்டியின் வேலை.
  • பகலை இருள் விழுங்குமா?
  • பகற் கனாப் போல,
  • பகடிக்குப் பத்துப் பணம் கொடுப்பார்; திருப்பாட்டுக்கு ஒரு காசும் கொடார்.
  • பகடியைப் பாம்பு கடித்தது போல.
  • பகல் உண்ணான் பருத்திருப்பான்.
  • பகட்டிப் பங்கு எடுத்தால் என்ன? இடியடி பொரியரிசி.
  • பகடிக்குப் பத்துப் பணம் கொடுப்பார்; திருப்பாட்டுக்கு ஒரு காசும் கொடார்.
  • பகடியைப் பாம்பு கடித்தது போல.
  • பகல் உண்ணான் பருத்திருப்பான்.
  • பகல் உணவுக்குப் பாகல்
  • பகல் கனவாய் முடிந்தது.
  • பகலில் தோட்டக்காரன்; இரவில் பிச்சைக்காரன்.
  • பகலில் பக்கம் பார்த்துப் பேசு; இரவில் அதுவும் பேசாதே.
  • பகட்டிப் பங்கு எடுத்தால் என்ன? இடியடி பொரியரிசி.
  • பக்தியோடே பாகற்காய் சட்டியோடே தீய்கிறது
  • பக்தி கொள்பவன் முக்தி உள்ளவன்,
  • பக்தி படபட, யானை சட்டி லொட லொட.
  • பக்குவம் தெரிந்தால் பல்லக்கு ஏறலாம்.
  • பக்தர் உளத்தில் ஈசன் குடியிருப்பான்.
  • பக்தி இருந்தால் முக்தி கிடைக்கும்.
  • பக்தி இல்லாச் சங்கீதம் பாடுவதேன்? சக்தி இல்லாவிட்டால் சிவனே என்று இரு.
  • பக்தி இல்லாப் புத்தி அசேதனம்.
  • பக்தி இல்லாப் பூசை போல.
  • பக்தி இல்லாப் பூனை பரமண்டலத்துக்கு ஏறுமா?
  • பக்தி இல்லாப் பூனை பரமண்டலத்துக்குப் போயிற்றாம், நெத்திலி மீனை வாயிலே கல்விக் கொண்டு.
  • பக்தி உண்டானால் முக்தி உண்டாம்.
  • பக்தி உள்ள பூனை பரலோகம் போகிறபோது, கச்சைக் கருவாட்டைக் கட்கத்திலே இடுக்கிக் கொண்டு போயிற்றாம்.
  • பக்தி உள்ளவனுக்குப் புட்டுக் கூடை அண்டம் புறப்பட்டுப் போயிற்றா?
  • பக்திக்கும் சிரத்தைக்கும் பகவான் பலன் கொடுப்பான்.
  • பகுத்தறியாமல் துணியாதே , படபடப்பாகச் செய்யாதே.
  • பகைவர் உறவு புகை எழு நெருப்பு.
  • பசியுள்ளவன் ருசி அறியான்.
  • பசி வந்திடில் பத்தும் பறந்துபோம்
  • பசுவிலும் ஏழை இல்லை பார்ப்பாரிலும் ஏழையில்லை.
  • பச்சை மண்ணும் சுட்டமண்ணும் ஒட்டுமா?
  • பஞ்சும் நெருப்பும் ஒன்றாய்க் கிடக்குமோ?
  • படிக்கிறது திருவாய் மொழி இடிக்கிறது பெருமாள் கோயில்.
  • படைக்கும் ஒருவன் கொடைக்கும் ஒருவன்.
  • படையிருந்தால் அரணில்லை.
  • படை முகத்திலும் அறிமுகம் வேண்டும்.
  • பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும்.
  • பட்டா உன்பேரில் சாகுபடி என்பேரில்.
  • பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால், கொட்டைப் பாக்கு விலை சொல்லுகின்றாய்.
  • பட்டும் பட்டாடையும் பெட்டியிலிருக்கும், காற்காசு கந்தையில் ஓடி உலாவும்.
  • பணக்காரன் பின்னும் பத்துப்பேர், பைத்தியக்காரன் பின்னும் பத்துப்பேர்.
  • பணத்தைப் பார்க்கிறதா பழைமையைப் பார்க்கிறதா?
  • பணம் என்ன செய்யும் பத்தும் செய்யும்.
  • பணக்காரன் பின்னும் பத்துப்பேர், பைத்தியக்காரன் பின்னும் பத்துபேர்.
  • பணம் உண்டானால் மணம் உண்டு.
  • பணம் பந்தியிலே குலம் குப்பையிலே.
  • பண்ணப் பண்ணப் பலவிதம் ஆகும்
  • பண்ணிய பயிரிலே புண்ணியம் தெரியும்.
  • பதறாத காரியம் சிதறாது.
  • பந்திக்கில்லாத வாழைக்காய் பந்தலிலே கட்டித் தொங்குகிறது.
  • பத்துப்பேருக்குப் பல்குச்சி ஒருவனுக்குத் தலைச்சுமை.
  • பரணியிலே பிறந்தால் தரணி ஆளலாம்.
  • பருத்திக்கு உழும் முன்னே தம்பிக்கு எட்டு முழம்.
  • பருவத்தே பயிர் செய்
  • பலநாளைத் திருடன் ஒரு நாளைக்கு அகப்படுவான்.
  • பல மரம் கண்ட தச்சன் ஒரு மரமும் வெட்டமாட்டான்.
  • பல்லக்கு ஏய யோகம் உண்டு உன்னி ஏறச் சீவன் இல்லை.
  • பல்லுப் போனால் சொல்லுப் பேச்சு.
  • பழகப் பழகப் பாலும் புளிக்கும்.
  • பழி ஒரு பக்கம் பாவம் ஒரு பக்கம்.
  • பழுத்த ஒலையைப் பார்த்துக் குருத்தோலை சிரிக்கிறதாம்.
  • பழுத்த பழம் கொம்பிலே நிற்குமா?
  • பள்ளிக் கணக்குப் புள்ளிக்கு உதவாது.
  • பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சுமா?
  • பனி பெய்தால் மழை இல்லை, பழம் இருந்தால் பூ இல்லை.
  • பனை நிழலும் நிழலோ, பகைவர் உறவும் உறவோ?
  • பனை மரத்தின் கீழே பாலைக் குடித்தாலும் கள் என்று நினைப்பர்.
  • பன்றிக்குப் பின் போகிற கன்றும் கெடும்.
  • பன்றி பல குட்டி சிங்கம் ஒரு குட்டி.
  • பத்துப் பேருக்குப் பல் குச்சி; ஒருவனுக்குத் தலைச்சுமை.
  • பத்தங்கியானையும் பலாக்காயையும் பார்த்த இடத்தில் சிராத்தம் பண்ணலாம்.
  • பத்தரை மாற்றுப் பசுந்தங்கம்.
  • பத்தாம் பசலிப் பேர் வழி.
  • பத்தாம் பேறு பாடையில் வைக்கும்.
  • பத்தாம் வீட்டைப் பார்ப்பான் பதவியைக் கொடுப்பான்.
  • பத்தியத்திற்கு முருங்கைக்காய் கொண்டுவரச் சொன்னால் பால் தெளிக்க அகத்திக்கீரை கொண்டு வருகிறான்.
  • பத்தியம் இருந்தாலும் மருந்து எதற்கு? பத்தியம் இல்லா விட்டாலும் மருந்து எதற்கு?
  • பத்தியம் பத்து நாள்; இளம் பிள்ளை இரண்டு மாதம்.
  • பத்திய முறிவுக்குப் பாகற்காய்.
  • பத்திரம், என் வாசலில் அடி வைக்காதே.
  • பத்திரிகை படியாதவன் பாதி மனிதன்.
  • பத்தில் குரு வந்தபோது பரமனும் பிச்சை எடுத்தான்.
  • பத்தில் பசலை; இருபதில் இரும்பு.
  • பத்தில் பார்வை; இருபதில் ஏற்றம்; முப்பதில் முறுக்கு; நாற்பதில் நழுவல்; ஐம்பதில் அசதி; அறுபதில் ஆட்டம்; எழுபதில் ஏக்கம்; எண்பதில் தூக்கம்.
  • பத்தில் விழுந்த பாம்பும் சாகாது.
  • பத்தினி என்ற பெயரோடே பத்துப் பிராயம் கழித்தாளாம்.
  • பத்தினிப் பானை படபடவென வெடிக்கிறது
  • பத்தினிப் பெண்ணைப் பதற்றமாய்ப் பேசாதே.
  • பத்தினி படாபடா என்றாளாம், பானைசட்டி லொட லொட என்றனவாம்.
  • பத்தினியைத் தொட்டதும் துரியோதனன் கெட்டதும்.
  • பத்தினியைப் பஞ்சணையில் வைத்துக் கொள்.
  • பத்தினி வாக்குப் பலிக்கும்.
  • பத்தினி வாக்குக்குப் பழுது வராது.
  • பத்தினி வாக்கும் உத்தமி வாக்கும் பலித்தே விடும்.
  • பத்து அடி பிள்ளை, எட்டு அடி வாழை.
  • பத்து அரிசியும் வேகவில்லை, பாவி என் பிராணனும் போக வில்லை.
  • பத்து ஆண்டிக்கு ஒருவன் பாதக் குறட்டாண்டி.
  • பத்து ஆனாலும் பதற்றம் வேண்டாம்; அஞ்சு ஆனாலும் அவசரம் வேண்டாம்.
  • பத்து இறுத்த பின்பு பாரச் சந்தேகம் தீர்ந்தது.
  • பத்து இறுத்தாலும் பராச் சத்தேகம் தீராது.
  • பத்து உள்ள என் தம்பி, பணமுள்ள என் தம்பி, காசுள்ள என் தம்பி, கணக்கப் பிள்ளை உன்தம்பி.
  • பத்து ஏர் வைத்துப் படி முறமும் தோற்றேன்; எத்தனை ஏர் வைத்துக் கோவணமும் தோற்றாய்?
  • பத்துக் கப்பல் வந்தாலும் பறந்த கப்பல்; எட்டுக் கப்பல் வந்தாலும் இறந்த கப்பல்.
  • பத்துக் காதம் போனாலும் பழக்கம் வேண்டும்.
  • பத்துக் குட்டி அடித்தாலும் சட்டிக்கறி ஆகாது.
  • பத்துக் குடியைக் கெடுத்தவன் பணக்காரன்.
  • பத்துக்குப் பத்தரை விற்றால் ஒரு பள்ளிக் குடும்பம்.
  • பத்துக்குப் பின் பயிர்.
  • பத்துக்கு மிஞ்சின பதி விரதை எது?
  • பத்துக்கு மேலே ஒரு பறையனுக்காவது தள்ள வேண்டும்.
  • பத்துப் பணம் கையில் தந்தால் பதிவிரதையும் வசப்படுவாள்.
  • பத்துப் பணம் கொடுத்தாலும் இத்தனை பதைப்பு ஆகாது.
  • பத்துப் பணம் வேணும்; இல்லாவிட்டால் பத்து சனம் வேணும்.
  • பத்துப் பிள்ளை பெற்றவளுக்கு ஒரு பிள்ளை பெற்றவள் முக்கிக் காட்டினாளாம்.
  • பத்துப் பேர் கண்ட பாம்பு சாகாது.
  • பத்துப் பேர் மருத்துவச்சிகள் கூடிக் கொண்டு குழந்தை கையை ஒடித்தார்கள்.
  • பத்துப் பேர் மெச்சப் படிக்கிறதிலும், ஆயிரம் பேரை அடிக்கிறதிலும், நாலு பேர் மெச்ச நடிக்கிறதிலும், மிடாமிடாவாகக் குடிக்கிறதே கெட்டிக்காரத்தனம்.
  • பத்துப் பேருக்குப் பல் குச்சி; ஒருவனுக்குத் தலைச்சுமை.
  • பத்துப் பேரைக் கொன்றவன் பரியாரி.
  • பத்துப் பேரோடு பதினோராம் பேராய் இருக்க வேணும்.
  • பத்தும் தெரிந்தவன் பல்லக்கு ஏறுவான்; சூனியமானவன் சுமந்து செல்வான்.
  • பத்து மாட்டில் கட்டுக்கு அடங்காதவன்.
  • பத்து மிகை இருந்தால் பகைவன் வீட்டிலும் விருந்துண்ணலாம்.
  • பத்து வந்தாலும் பதற்றம் ஆகாது; ஆயிரம் வந்தாலும் அவசரம் ஆகாது.
  • பத்து வயதானால் பறையனுக்காவது பிடித்துக் கொடுக்க வேண்டும்.
  • பத்து வயதிலே பாலனைப் பெறு.
  • பத்து வராகன் இறுத்தோம்; என்றாலும் சந்தேகம் நிவர்த்தி ஆயிற்றே.
  • பத்து வராகனுக்கு மிஞ்சின பதிவிரதை இல்லை.
  • பத்து வருஷம் கெட்டவன் பருத்தி விதை; எட்டு வருஷம் கெட்டவன் எள் விதை.
  • பத்து விதத்திலும் பறையனை நம்பலாம்; பார்ப்பானை நம்பக்கூடாது.
  • பத்து விரலாலே வேலை செய்தால் ஐந்து விரலால் அள்ளிச் சாப்பிடலாம்.
  • பத்தூர் பெருமாளகரம்; பாழாய்ப் போன கொரடாச்சேரி; எட்டூர் எருமைக் கடா? இழவெடுத்த நாய்.
  • பத்தைக்குள் கிடந்ததைத் தூக்கி மெத்தையிலே வைத்தால் அது பத்தையைப் பத்தையைத்தான் நாடும்.
  • பத்தோடே பதினொன்று; அத்தோடே இது ஒன்று.
  • பத்மாசுரன் பரீட்சை வைத்தது போல.
  • பதக்குக் குடித்தால் உழக்குத் தங்காதா?
  • பதக்குப் போட்டால் முக்குறுணி என்றானாம்.
  • பதத்துக்கு ஒரு பருக்கை.
  • பதம் கெட்ட நாயைப் பல்லக்கில் வைத்தால் கண்ட இடமெல்லாம் இறங்கு இறங்கு என்னுமாம்.
  • பதமாய்ச் சிநேகம் பண்ண வேண்டும்.
  • பதவி தேடும் இருதயம் போல.
  • பதறாத காரியம் சிதறாது.
  • பதறிச் செய்கிற காரியம் சிதறிக் கெட்டுப் போகும்.
  • பதறின காரியம் பாழ்.
  • பதனம் பத்துக்கு எளிது.
  • பதி இல்லாத பூனை பரதேசம் போயிற்றாம், நெத்திலி மீனை வாயிலே கவ்விக் கொண்டு.
  • பதிவிரதா பத்தினி கதை கேட்டு வந்தேன்; பட்டுக் கிடப்பாய் காலை மடக்கு.
  • பதிவிரதை ஆனால் தேவடியாள் வீட்டிலும் தங்கலாம்.
  • பதிவிரதைக்குப் பர்த்தாவே தெய்வம்.
  • பதிவிரதையைக் கெடுக்கப் பதினைந்து பொன்.
  • பதின்காதம் போனாலும் தன் பாவம் தன்னோடே.
  • பதின்காதம் போனாலும் பழக்கம் வேண்டும்.
  • பதின்மர் பாடும் பெருமாள்.
  • பதினாயிரம் கொடுத்தாலும் பதைபதைப்பு ஆகாது.
  • பதினாறு பல்லில் ஒரு நச்சுப் பல் இருக்கும்.
  • பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ வேண்டும்.
  • பதுங்குகிற புலி பாய்ச்சலுக்கு அடையாளம்.
  • பதுமை போல நடிக்கின்றான்.
  • பத்தடி போல் துள்ளிப் பரிதவிக்கிறது.
  • பத்தைக் கண்டு பயந்த ஆனை போல.
  • பனியால் குளம் நிறைதல் இல்(லை)

பி[தொகு]

  • பிகுவான சம்பந்தி இழுத்தாராம் இரண்டு இலை.
  • பிகுவோடு சம்பந்தி கழற்றினாளாம் துணியை.
  • பிச்சன் வாழைத் தோட்டத்தில் புகுந்ததுபோல.
  • பிச்சை இட்டால் மோட்சம்.
  • பிச்சை இட்டுக் கெட்டவர்களும் இல்லை; பிள்ளை பெற்றுக் கெட்டவர்களும் இல்லை.
  • பிச்சை எடுக்கப் போனாலும் முகராசி வேண்டும்.
  • பிச்சை எடுக்குமாம் பெருமாள்; அத்தைப் பிடுங்குமாம் அனுமார்.
  • பிச்சை எடுக்கிறதிலும் பிகுவா?.
  • பிச்சை எடுத்தும் சத்துருவின் குடி கெடு.
  • பிச்சைக்கார நாய்க்குப் பட்டுப் பல்லக்கு.
  • பிச்சைக்கார நாரிக்கு வைப்புக்காரன் பெருமை; கூலிக்குச் செய்பவனுக்குக் கூத்தியாள் பெருமை.
  • பிச்சைக்காரன் சோற்றில் சனீசுவரன் புகுந்தது போல.
  • பிச்சைக்காரன் சோற்றை எச்சில் நாய் பங்கு கேட்டதாம்.
  • பிச்சைக்காரன் பிச்சைக்குப் போனால் எங்கள் வீட்டுக்காரர் அதுக்குத்தான் போகிறார் என்றாளாம்.
  • பிச்சைக்காரன் மேலே பிரம்மாஸ்திரம் தொடுக்கிறதா?
  • பிச்சைக்காரன் வாந்தி எடுத்தாற் போல்.
  • பிச்சைக்காரனுக்கு ஏது கொட்டு முழக்கு?
  • பிச்சைக்காரனுக்கு ஒரு மாடாம்; அதைப் பிடித்துக்கட்ட ஓர் ஆளாம்.
  • பிச்சைக்காரனுக்குப் பயப்பட்டு அடுப்பு மூட்டாமல் இருக்கிறதா?
  • பிச்சைக்காரனுக்குப் பிச்சைக்காரன் பொறாமை அதிகம்.
  • பிச்சைக்காரனை அடித்தானாம்; அடுப்பங்கரையிலே பேண்டானாம்
  • பிச்சைக்காரனை அடித்தானாம்; சோளியைப் போட்டு உடைத்தானாம்
  • பிச்சைக்காரனைக் கடனுக்கு வேலை வாங்கினானாம்
  • பிச்சைக்காரனைப் பேய் பிடித்ததாம்; உச்சி உருமத்தில்
  • பிச்சைக்கு அஞ்சிக் குடிபோனாளாம்; பேனுக்கு அஞ்சித் தலையைச் சிரைத்தாளாம்
  • பிச்சைக் குட்டிக்குத் துக்கம் என்ன? பெருச்சாளிக்கு வாட்டம் என்ன?
  • பிச்சைக் குடிக்கு அச்சம் இல்லை
  • பிச்சைக்குடி பெரிய குடி
  • பிச்சைக் குடியிலே சனீசுவரன் புகுந்தது போல
  • பிச்சைக்குப் பிச்சையும் கெட்டது; பின்னையும் ஒருகாசு நாமமும் கெட்டது
  • பிச்சைக்குப் பெரிய குடி
  • பிச்சைக்கு மூத்தது கச்சவடம்
  • பிச்சைக்கு வந்த ஆண்டி இல்லை என்றால் போவாளா?
  • பிச்சைக்கு வந்த பிராமணா, பெருங்காயச் செம்பைக் கண்டாயோ?
  • பிச்சைக்கு வந்தவன் ஆண்டார் இல்லை என்றால் போகிறான்
  • பிச்சைக்கு வந்தவனைப் பெண்டாள அழைத்தது போல
  • பிச்சைக்கு வந்தவன் எல்லாம் பெண்ணுக்கு மாப்பிள்ளையா?
  • பிச்சைக்கு வந்தவன் பெண்ணுக்கு மாப்பிள்ளை ஆனான்
  • பிச்சைச் சோற்றிலும் எச்சில் சோறா?
  • பிச்சைச் சோற்றிலும் குழந்தைச் சோறா?
  • பிச்சைச் சோற்றிலும் குழைந்த சோறு உண்ணலாமா?
  • பிச்சைச் சோற்றுக்கு இச்சகம் பேசுகிறான்
  • பிச்சைச் சோற்றுக்கு எச்சில் இல்லை
  • பிச்சைச் சோற்றுக்குப் பஞ்சம் உண்டா?
  • பிச்சைச் சோற்றுக்குப் பேச்சும் இல்லை; ஏச்சும் இல்லை
  • பிச்சைப் பாத்திரத்தில் கல் இட்டது போல
  • பிச்சைப் பாத்திரத்தில் சனீசுவரன் புகுந்தாற் போல
  • பிச்சை புகினும் கற்கை நன்றே
  • பிச்சை போட்டது போதும்; நாயைக் கட்டு
  • பிச்சை வேண்டாம் தாயே; நாயைப் பிடி
  • பிசினாரி தன்னை வசனிப்பது வீண்
  • பிஞ்சிலே பழுத்தவன்
  • பிஞ்சிலே முற்றிய பீர்க்காங்காய்
  • பிஞ்சு வற்றினால் புளி ஆகாது
  • பிட்சாதிபதியோ, லட்சாதிபதியோ?
  • பிட்டு எங்கே விக்கும்? தொண்டையிலே விக்கும்
  • பிட்டுக் கூடை முண்டத்தில் பொறுக்கி எடுத்த முண்டம்
  • பிட்டுத் தின்று விக்கினாற் போல
  • பிடரியைப் பிடித்துத் தள்ளப் பெண்ணுடைய சிற்றப்பன் என்று நுழைந்தானாம்
  • பிடாரம் பெரிதென்று புற்றிலே கை வைக்கலாமா?
  • பிடாரன் கைப் பாம்பு போல
  • பிடாரனுக்கு அஞ்சிய பாம்பு எலிக்கு உறவு ஆச்சுதாம்
  • பிடாரியாரே, கடா வந்தது
  • பிடாரியைப் பெண்டு கொண்டாற் போல்
  • பிடாரியைப் பெண்டு வைத்துக் கொண்டவன் பேயன்
  • பிடாரி வரம் கொடுத்தாலும் ஓச்சன் வரம் கொடுப்பது அரிது
  • பிடி அழகி புகுந்தால் பெண் அழகி ஆவாள்
  • பிடிக்கிற முலை அல்ல; குடிக்கிற முலை அல்ல
  • பிடிக்குப்பிடி நமச்சிவாயம்
  • பிடிக்குப் பிடி நமஸ்காரம்
  • பிடித்த காரியம் கடித்த வாய் துடைத்தாற் போல் வரும்
  • பிடித்த கிளையும் மிதித்த கொம்பும் முறிந்து போயின
  • பிடித்த கொம்பு ஒடிந்து மிதித்த கொம்பும் முறிந்தாற் போல ஆனேன்
  • பிடித்த கொம்பும் விட்டேன்; மிதித்த கொம்பும் விட்டேன்
  • பிடித்த கொம்பை விடாதே
  • பிடித்ததன் கீழே அறுத்துக் கொண்டு போகிறது
  • பிடித்த துன்பத்தைக் கரைத்துக் குடிக்கலாம்
  • பிடித்தவர்க்கு எல்லாம் பெண்டு
  • பிடித்தால் கற்றை; விட்டால் கூளம்
  • பிடித்தால் குரங்குப் பிடி பிடிக்க வேண்டும்; அடித்தால் பேயடி அடிக்க வேண்டும்
  • பிடித்தால் சுமை; விட்டால் கூளம்
  • பிடித்தால் பானை, விட்டால் ஓடு
  • பிடித்தால் புளியங்கொம்பைப் பிடிக்க வேணும்
  • பிடித்தால் பெரிய கொம்பைப் பிடிக்க வேணும்
  • பிடித்தாலும் பிடித்தாய், புளியங்கொம்பை
  • பிடித்து ஒரு பிடியும், கிழித்து ஒரு கிழியும் கொடுத்தது உண்டா?
  • பிடித்துத் தின்றதைக் கரைத்துக் குடிக்கலாம்
  • பிடித்து வைத்தால் பிள்ளையார்; வழிந்து எறிந்தால் சாணி மொத்தை
  • பிடி பிடியாய் நட்டால் பொதி பொதியாய் விளையுமா?
  • பிடி யானையைக் கொண்டு களிற்று யானையை வசப்படுத்துவது போல
  • பிடியில் அழகு புகுந்தால் வபன் அழகு ஆவாள்
  • பிடிவாதம் குடி நாசம்
  • பிடி விதை விளையும்; மடி விதை தீயும்
  • பிண்டத்துக்குக் இருக்காது; தண்டத்துக்கு இருக்கும்
  • பிண்டத்துக்குக் கிடையாது; தண்டத்துக்கு அகப்படாது
  • பிண்டம் பெருங்காயம்; அன்னம் விலவாதி லேகியம்
  • பிண்ணாக்குத் தராவிட்டால் செக்கிலே பேளுவேன்
  • பிண்ணாக்குத் தின்பாரைச் சுண்ணாம்பு கேட்டால் வருமா?
  • பிணத்துக்கு அழுகிறாயா? குணத்துக்கு அழுகிறாயா?
  • பிணத்தை மூடி மணத்தைச் செய்
  • பிணம் சுட்ட தடியும் கூடத்தான் போட்டுச் சுடுகிறது
  • பிணம் தின்கிற பூச்சி போல
  • பிணம் தின்னிக் கழுகு
  • பிணம் தூக்குவதில் தலைமாடு என்ன? கால்மாடு என்ன?
  • பிணம் பிடுங்கத் தின்றவன் வீட்டில் புத்தரிசி யாசகத்துக்குப் போனானாம்
  • பிணம் போகிற இடத்துக்குத் துக்கமும் போகிறது
  • பிணை ஓட்டினாலும் நெல் கொரிக்கலாம்
  • பிணைப்பட்ட நாயே குப்பையைச் சும
  • பிணைப்பட்டாயோ? துணைப் பட்டாயோ?
  • பிணைப்பட்டால் குரு; துணைப்பட்டால் சா
  • பிணைப்பட்டுக் கொள்ளாதே; பெரும்பாவத்தை உத்தரிப்பாய்
  • பிணைப்பட்டுத் துணைப் போகாதே
  • பிணையில் இட்ட மாட்டின் வாயைக் கட்ட முடியுமா?
  • பித்தம் கிறுகிறு என்கிறகு; மலம் கரைத்துக் குடி குடி என்கிறது
  • பித்தம் பத்து விதம்
  • பித்தருக்குத் தம் குணமே செம்மையான பெற்றி
  • பித்தளை சோதித்தாலும் பொன்குணம் வருமா?
  • பித்தளை நாற்றம் போகாது
  • பித்தளை மணி அற்ற வருக்குப் பொன்மணி என்று பெயர்
  • பித்தனுக்குப் புத்தி சொன்னால் கேட்பானா?
  • பித்தியுடைய பாகற்காய் சட்டியோட தீயுது
  • பித்தும் பிடித்தாற் போலப் பிடித்ததைப் பிடிக்கிறது
  • பிதாவைப் போல் இருப்பான் புத்திரன்
  • பிந்திகா மார்ஜால நியாயம்
  • பிய்த்து விட்டாலும் பேச்சு; பிடுங்கி விட்டாலும் போச்சு
  • பிய்ந்த சீலையும் பேச்சுக் கற்ற வாயும் சும்மா இரா
  • பிய்ப்பானேன்? தைப்பானேன்?
  • பிரகசரண ஊழல்
  • பிரகசரணம் பெப்பே
  • பிரசங்க வைராக்கியம்
  • பிரசவ வைராக்கியம், புராண வைராக்கியம், ஸ்மசான வைராக்கியம்
  • பிரதோஷ வேளையில் பேய்கூடச் சாப்பிடாது
  • பிரம்மசாரி எள்ளுக் கணக்குப் பார்த்ததுபோல
  • பிரம்மசாரி ஓடம்கவிழ்த்ததுபோல
  • பிரம்மச்சாரி குடித்தனம்
  • பிரம்ம செளசம்
  • பிரம்ம தேவன் நினைத்தால் ஆயுசுக்குப் பஞ்சமா?
  • பிரம்ம தேவன் போட்ட புள்ளிக்கு இரண்டாமா?
  • பிரம்ம வித்தையோ?
  • பிரம்மா நினைத்தால் ஆயுசுக்கு என்ன குறை?
  • பிராணன் போகும் போது மென்னியைப் பிடித்த மாதிரி
  • பிராணன் போனாலும் மானம் போகிறதா?
  • பிராமணப் பிள்ளை நண்டு பிடித்தது போல
  • பிராமணனுக்கு இடம் கொடாதே
  • பிராமணா உன் வாக்குப்பலித்தது
  • பிராமணா, பிராமணா, உன் கால் வீங்குகிறதே; எல்லாம் உன் தாலி அறுக்கத்தான்
  • பிராமணா போஜனப்ரியா
  • பிராமணார்த்தக்காரனுக்கு நெய்விலை எதற்கு?
  • பிராமணார்த்தம் சாப்பிட்டுப் பங்கு மனையை விற்றானாம்
  • பிரிந்த அன்றைத் தேடித் திரும்பும் பசுவைப்போல
  • பிரியம் இல்லாத கூடு, பிண்டக்கூடு
  • பிரியம் இல்லாத சோறு, பிண்டச் சோறு
  • பிரியம் இல்லாத பெண்டாட்டியிலும் பேய் நன்று
  • பிரியைக் கட்டி இழுப்பேன்
  • பிழுக்கை ஒழுக்கம் அறியாது; பித்தளை நாற்றம் அறியாது
  • பிழுக்கை ஒழுக்கம் அறியுமா? பிண்ணாக்குக் கட்டி பதம் அறியுமா?
  • பிழுக்கைக்குணம் போகாது ஒரு காலும்
  • பிழுக்கைக்குப் புத்தி பிடரியிலே
  • பிழுக்கைக்குப் பொன்முடி பொறுக்குமா?
  • பிழுக்கை கலம் கழுவித் தின்னாது
  • பிழுக்கைக்கு மேல் சன்னதம் வந்தால் பூவிட்டுக் கும்பிட வேண்டும்
  • பிழுக்கை சுகம் அறியுமா?
  • பிழுக்கை வாரியும் பால்கொள்வர்
  • பிழுக்கை வெட்கம் அறியுமா?
  • பிழைக்கப் போன இடத்திலே பிழை மோசம் வந்தது போல
  • பிழைக்க மாட்டாத பொட்டை, என் பெண்ணை ஏண்டா தொட்டாய்?
  • பிழைக்கிற பிள்ளை ஆனால் உள்ளூரிலே பிழைக்காதா?
  • பிழைக்கிற பிள்ளை ஆனால் பிறந்தபோதே செத்துப் போலிருக்கும்
  • பிழைக்கிற பிள்ளை குரைக் கழிச்சல் கழியுமா?
  • பிழைக்கிற பிள்ளை பிறக்கும் போதே தெரியாதா?
  • பிழைக்கிற பிள்ளையைக் காலைக் கிளப்பிப் பார்த்தால் தெரியாதா?
  • பிழைத்த பிழைப்புக்குப் பெண்டாட்டி இரண்டு
  • பிழைப்பு இல்லாத நாசுவன் பூனையைப் பிடித்துச் சிரைத்தானாம்
  • பிழைப்பு இல்லாத நாவிதன் பெண்டாட்டி தலையைச் சிரைத்தானாம்
  • பிழை பொறுத்தார் என்று போகிறவர் குட்டுகிறதா?
  • பிள்ளை அருமை பெற்றவருக்குத் தெரியும்
  • பிள்ளை அருமை மலடி அறிவாளா?
  • பிள்ளை ஆசைக்கு மலச்சீலையை மோந்து பார்த்தாற் போல
  • பிள்ளை இருக்கப் பிடித்து விழுங்கி
  • பிள்ளை இருக்கப் பிடித்து விழுங்கினாள், கொள்ளா கொள்ளி வயிறே
  • பிள்ளை இல்லாச் சொத்துப் பாழ் போகிறதா?
  • பிள்ளை இல்லாச் சோறு புழு
  • பிள்ளை இல்லாத பாக்கியம் பெற்றிருந்து என்ன சிலாக்கியம்?
  • பிள்ளை இல்லாத வீட்டில் கிழவன் துள்ளி விளையாடினானாம்
  • பிள்ளை இல்லாதவன் வீட்டுக் கூரை கூடப் பொருந்தாதே
  • பிள்ளை எடுத்துப் பிழைக்கிறதை விடப் பிச்சை எடுத்துப் பிழைக்கலாம்
  • பிள்ளை என்றால் எல்லாருக்கும் பிள்ளை
  • பிள்ளை என்றால் பேயும் இரங்கும்
  • பிள்ளைக்கா பிழுக்கைக்கா இடம்கொடுக்கப் போகாது
  • பிள்ளைக்காரன் பிள்ளைக்கு அழுகிறான்; பணிச்சவன் காசுக்கு அழுகிறான்
  • பிள்ளைக்காரி குசுவிட்டாய் பிள்ளைமேல் சாக்கு
  • பிள்ளைக்கு அலைந்து மலநாயைக் கட்டிக் கொண்டது போல
  • பிள்ளைக்கு இளக்காரம் கொடுத்தாலும் புழுக்கைக்கு இளக்காரம் கொடுக்கக்கூடாது
  • பிள்ளைக்குப் பால் இல்லாத தாய்க்குப் பிள்ளைச் சுறாமீனை சமைத்துக் கொடு
  • பிள்ளைக்குப் பிள்ளைதான் பெறமுடியாது; மலத்துக்கு மலம் விடிக்க முடியாதா?
  • பிள்ளைக்கும் பிள்ளையாயிருந்து பெட்டைப் பிள்ளையை வேலை ஆக்கினான்
  • பிள்ளைக்கும் புழுக்கைக்கும் இடம் கொடாதே
  • பிள்ளைக்கு வாத்தியார்; பெண்ணுக்கு மாமியார்
  • பிள்ளைக்கு விளையாட்டு; சுண்டெலிக்குப் பிராண சங்கடம்
  • பிள்ளைகள் கல்யாணம், கொள்ளை கிடைக்காதா?
  • பிள்ளை குலம் அழித்தால் பெற்றோர்கள் என்ன செய்வார்கள்?
  • பிள்ளைச் சீர் கொள்ளக் கிடைக்குமா?
  • பிள்ளைத் தாய்ச்சி நோயைச் சவலைப் பிள்ளை அறியுமா?
  • பிள்ளைதான் உயர்த்தி; மலம் கூடவா உயர்த்தி?
  • பிள்ளை திறத்தைப் பேள விட்டுப் பார்
  • பிள்ளை நல்லதுதான்; பொழுது போனால் கண் தெரியாது
  • பிள்ளை நோவுக்குக் கள்ளம் இல்லை
  • பிள்ளைப் பாசம் பெற்றோரை விடாது
  • பிள்ளைப் பேறு பார்த்ததும் போதும்; என் அகமுடையானைக் கட்டி அணைத்ததும் போதும்
  • பிள்ளைப் பைத்தியம் பெரும் பெத்தியக்
  • பிள்ளை படிக்கப் போய் பயறு பசறு ஆச்சு
  • பிள்ளை படைத்தவனுக்கும் மாடு படைத்தவனுக்கும் வெட்கம் இல்லை
  • பிள்ளை பதினாறு பெறுவாள் என்று எழுதியிருந்தாலும் புருஷன் இல்லாமல் எப்படிப் பெறுவாள்?
  • பிள்ளை பாதி, புராணம் பாதி
  • பிள்ளை பிறக்கும்; பூமி பிறக்காது
  • பிள்ளைப் பிறக்கிறதற்கு முன்னே தின்று பார்; மருமகள் வருவதற்கு முன்னே பூட்டிப் பார்
  • பிள்ளை பிறந்த ஊ௫க்குப் புடைவை வேணுமா?
  • பிள்ளை புழுக்கை; பேர் முத்துமாணிக்கம்
  • பிள்ளை பெற்றபின் அன்றோ பேரிட வேண்டும்?
  • பிள்ளை பெற்றவளோ? நெல் எடுத்த குழியோ?
  • பிள்ளை பெற்றவளைப் பார்த்துப் பெருமூச்சு எறிந்து பயன் என்ன?
  • பிள்ளை பெற்றவளைப் பார்த்து மலடி பெருமூச்சு விட்டு அழுதது போல
  • பிள்ளை பெற்றாயோ, பிறப்பை எடுத்தாயோ?
  • பிள்ளை பெற்றுக் கெட்டவனும் இல்லை; பிச்சை எடுத்து வாழ்ந்தவனும் இல்லை
  • பிள்ளை பெற்றுப் பிணக்குப் பார்; கல்யாணம் முடித்துக் கணக்குப் பார்
  • பிள்ளை பெற்றுப் பேர் இட வேண்டும்
  • பிள்ளை பெறப் பெற ஆசை; பணம் சேரச் சேர ஆசை
  • பிள்ளை மலபாதை செய்ததென்று துடையை அறுக்கிறதா?
  • பிள்ளையாண்டான் கெட்டிக்காரன்; பொழுது போனால் கண் தெரியாது
  • பிள்ளையாய்ப் பிறந்து சோடையாய்ப் போனேனே!
  • பிள்ளையார் அப்பா, பெரியப்பா, பிழைக்கும் வழியைச் சொல்லப்பா
  • பிள்ளையார் குட்டுக் குட்டி ஆயிற்று
  • பிள்ளையார் கோயில் பெருச்சாளி போல
  • பிள்ளையார் கோயிலில் திருடன் இருப்பான்
  • பிள்ளையார் கோயிலைப் பெருக்கலாம்; மெழுகலாம்; அமேத்தியம் விடித்தால் கண் போய் விடும்
  • பிள்ளையார் சதுர்த்திக்கும் மீராசாயபுவுக்கும் என்ன சம்பத்தம்?
  • பிள்ளையார் சுழி போட்டாயிற்று
  • பிள்ளையார் பிடிக்கக் குரங்காய் முடிந்தது
  • பிள்ளையார் பிறகே திருடன் இருக்கிறான்; சொன்னால் கோளாம்
  • பிவளையார் வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்க விடமாட்டான்
  • பிள்ளையார் வேஷம்
  • பிள்ளையாருக்குக் கல்யாணம் நடக்கிறபோது
  • பிள்ளையாருக்குப் பெண் கொள்வது போல
  • பிள்ளையாரைக் கண்டால் தேங்காயைக் காணோம்; தேங்காயைக் கண்டால் பிள்ளையாரைக் காணோம்
  • பிள்ளையாரைச் சாக்கிட்டுப் பூதம் விழுங்கிற்றாம்
  • பிள்ளையாரைச் சாக்கு வைத்துப் பூசாரி போட்டாற்போல
  • பிள்ளையாரைப் பிடித்த சனி அரசமரத்தைப் பிடித்தது போல
  • பிள்ளையின் அழகைப் பேளவிட்டுப் பார்த்தால் உள்ள அழகும் ஓட ஓடக் கழிகிறது
  • பிள்ளையின் திறமையைப் பேளவிட்டுப் பார்த்தானாம்
  • பிள்ளையின் நிறமையை வேலை விட்டுப் பார்
  • பிள்ளையின் பாலைப் பீச்சிக் குடிக்கிறதா?
  • பிள்ளையின் மடியிலே பெற்றவன் உயிர் விட்டால் பெருங்கதி உண்டு
  • பிள்ளையும் இல்லை; கொள்ளியும் இல்லை
  • பிள்ளையும் மலமும் பிடித்ததை விடா
  • பிள்ளையும் பிழுக்கையும் சரி
  • பிள்ளையை அடித்து வளர்க்க வேணும்? முருங்கையை ஒடித்து வளர்க்க வேணும்
  • பிள்ளையைக் காட்டிப் பூதம் விழுங்குகிறது
  • பிள்ளையைப் பெற்றபின்தான் பெயர் இடவேண்டும்
  • பிள்ளையையும் கிள்ளித் தொட்டிலையும் ஆட்டுகிறதா?
  • பிள்ளையை விட்டுத் திருடுவது போல
  • பிள்ளை வரம் கேட்கப் போய்ப் புருஷனையே பறி கொடுத்தது போல
  • பிள்ளை வருத்தம் பெற்றவளுக்குத் தெரியும்; மற்றவளுக்குத் தெரியுமா?
  • பிள்ளை வீட்டுக்காரர் சம்மதித்தால் பாதி விவாகம் முடிந்தது போல
  • பிறக்காத பிள்ளைக்கு நடக்காத தொட்டில்
  • பிறக்கிறபொழுதே முடமானால் இட்டுப் படைத்தால் தீருமா?
  • பிறக்கும்போது தம்பி; பெருத்தால் தாயாதி
  • பிறக்கும்போது யார் என்ன கொண்டு வந்தார்?
  • பிறத்தியார் புடைவையில் தூரம் ஆவது என்றால் கொண்டாட்டம்
  • பிறத்தியார் வளர்த்த பிள்ளை பேய்ப் பிள்ளை
  • பிறத்தியாருக்கு வாத்தியார்
  • பிறத்தியானுக்கு வெட்டுகிற குழி தனக்கு
  • பிறந்த அன்றே இறக்க வேண்டும்
  • பிறந்து இடத்து வண்மையை உடன்பிறந்தானிடத்தில் சொல்கிறதா?
  • பிறந்த ஊருக்குச் சேலை வேண்டாம்; பெண்டு இருந்த ஊருக்குத் தாலி வேண்டாம்
  • பிறந்த ஊருக்குப் புடைவை வேணுமா?
  • பிறந்தகத்துக்குச் செய்த காரியமும் பிணத்துக்குச் செய்த அலங்காரமும் வீண்
  • பிறந்தகத்துப் பெருமையை அக்காளிடம் சொல்வது போல
  • பிறந்தகத்துப் பெருமையை உடன் பிறந்தானோடு சொன்னாளாம்
  • பிறந்தகத்துத் துக்கம் கொல்லையிலே
  • பிறந்தது எல்லாம் பிள்ளையா?
  • பிறந்த நாளும் திருவாதிரையும்
  • பிறந்த நாளும் புதன் கிழமையும்
  • பிறந்த பிள்ளை பிடி சோற்றுக்கு அழுகிறது; பிறக்கப் போகிற பிள்ளைக்குத் தண்டை சதங்கை தேடுகிறார்கள்
  • பிறந்த பிறப்போ பெருங் கணக்கு
  • பிறந்தவன் இறப்பதே நிஜம்
  • பிறந்த வீட்டுச் செல்லி
  • பிறந்த வீட்டுப் பெருமையை உடன் பிறந்தானிடம் சொல்லிக் கொண்டாளாம்
  • பிறந்தன இறக்கும்; தோன்றின மறையும்
  • பிறந்தால் தம்பி; வளர்ந்தால் பங்காளி
  • பிறந்தால் வெள்ளைக்காரனாகப் பிறக்க வேணும்; இல்லா விட்டால் அவன் வீட்டு நாயாய்ப் பிறக்க வேணும்
  • பிறந்தும் பிறந்தும் பேதைப் பிறப்பு
  • பிறப்பும் சிறப்பும் ஒருவர் பங்கு அல்ல
  • பிறப்பு உரிமை வேறு, சிறப்பு உரிமை வேறு
  • பிறர் குற்றம் அறியப் பிடரியிலே கண்
  • பிறர் பொருளை இச்சிப்பான் தன் பொருளை இழப்பான்
  • பிறர் மனைத் துரும்பு கொள்ளான், பிராமணன் தண்டு கொண்டான்
  • பிறவாத குழந்தைக்கு நடவாத தொட்டில் இட்டாளாம்
  • பிறவிக்குணத்துக்கு மட்டை வைத்துக் கட்டினாலும் தீராது
  • பிறவிக்குணத்தைச் செருப்பால் அடித்தாலும் போகாது
  • பிறவிக்குருடன் காது நன்றாகக் கேட்கும்
  • பிறவிக் குருடனுக்குக் கண் கிடைத்தது போல
  • பிறவிக் குருடனுக்குத் தெய்வம் கண் கொடுத்தாற் போல
  • பிறவிக் குருடனுக்குப் பண நோட்டம் தெரியுமா?
  • பிறவிச் செவிடனுக்குப் பேசத்திறம் உண்டா?
  • பிறவிச் செல்வம் பின்னுக்குக் கேடு
  • பிறை வடக்கே சாய்ந்தால் வரப்பெல்லாம் நெல்; தெற்கே சாய்ந்தால் தெற்கெல்லாம் பாழ்
  • பின் இருக்கிறது புரட்டாசிக் காய்ச்சல்
  • பின் இருந்து உண்டு குடைகிறான்
  • பின் குடுமி புறங்கால் தட்ட ஓடுகிறான்
  • பின்புத்திக்காரன் பிராமணன்
  • பின்னல் இல்லாத தலை இல்லை; சன்னல் இல்லாத வீடு இல்லை
  • பின்னால் இருந்து கூண்டு முடைகிறான்
  • பின்னால் வரும் பலாக்காயினும் முன்னால் வரும் களாக்காய் நலம்
  • பின்னே ஆனால் எறியும்; முன்னால் ஆனால் முட்டும்
  • பின்னே என்பதும் நாளைக்கு என்பதும் இல்லை என்பதற்கு அடையாளம்
  • பின்னை என்பதும் பேசாதிருப்பதும் இல்லை என்பதற்கு அடையாளம்
  • பிக்ஷாதிபதி, லக்ஷாதிபதி

பீ[தொகு]

  • பீக்கு முந்தின குசுப் போல
  • பீச்சண்டை பெருஞ்சண்டை
  • பீடம் தெரியாமல் சாமி ஆடினது போல
  • பீடு படைத்தவன் கோடியில் ஒருவன்
  • பீதாம்பரத்துக்கு உண்டு ஆடம்பரச் செய்கை
  • பீ தின்கிறது போலக் கனவு கண்டால் பொழுது விடிந்தால் யாருக்குச் சொல்கிறது?
  • பீ தின்கிறவன் வீட்டுக்குப் போனால் பொழுது விடியுமட்டும் பேளச் சொல்லி அடித்தானாம்
  • பீ தின்னப் போயும் வயிற்றுவலிக்காரன் பீயா?
  • பீ தின்ன வந்த நாய் பிட்டத்தைக் கடிக்கப் போகிறதா
  • பீ தின்ன வேண்டுமென்றால் வாயை நன்றாய்க் கழுவிப் போட வேண்டும்
  • பீ தின்னுகிற நாய்க்குப் பேர் முத்துமாலை
  • பீ தின்னும் வாயைத் துடைத்தது போல
  • பீ போடப் புறக்கடையும் பிணம் போட வாசலும்
  • பீ போனால் பலம் போச்சு
  • பீ மேலே நிற்கிறாற் போல
  • பீயிலே கல விட்டு எறிந்தால் மேலேதான் தெறிக்கும்
  • பீயிலே தம்படி இருந்தாலும் பெருமாளுக்குத் தளிகை போடுவான்
  • பீயும் சோறும் தின்கிறதா? ஈயும் தண்ணீரும் குடிக்கவா?
  • பீயும் சோறும் பிசைந்து தின்கிறான்
  • பீயும் பிள்ளையும் பிடித்ததைப் பிடிக்கும்
  • பீயைப் பெரிதாய் எண்ணிப் பொய்க்காமல் வேடு கட்டுவானேன்
  • பீர்க்குப் பூத்தது; விளக்கை ஏற்று
  • பீலா பூத்த சோறு பெரிய பறங்‘கிலாப்’ பேளும் பேளும்
  • பீலி காலாழி இன்றியும் கல்யாணமா?
  • பீற்றல் பட்டைக்கு அறுதற் கொடி
  • பீற்றல் முறமும் எழுதாத ஓலையும்
  • பீற்றிக் கொள்கிறான்
  • பீறின புடைவை பெருநாள் இராது
  • பீறின புடைவையும் பொய் சொன்ன வாயும் நிற்குமா?

பு[தொகு]

  • புகழ்ச்சியானுக்கு ஈந்தது பூதக்கண்ணாடி
  • புகழ்ந்தாரைப் போற்றி வாழ்
  • புகழால் புண்ணியம்
  • புகுந்தடித்துப் போனோம் ஆனால் பிடித்து அடித்துத் தள்ளுவார்களா?
  • புகை இருந்தால் நெருப்பு இருக்கும்
  • புகைக்கினும் காரசில் பொல்லாங்கு கமழாது
  • புகைச் சரக்கு வகைக்கு ஆகாது
  • புகைந்த கொள்ளி புறத்தே
  • புகைந்த வீட்டைச் சுற்றுகிறது
  • புகை நுழையாத இடத்தில் புகுந்திடும் தரித்திரம்
  • புகை நுழையாத இடத்திலும் அவன் நுழைவான்
  • புகை நுழையாத இடத்திலும் போலீஸ் நுழையும்
  • புகையிலைக்குப் புழுதிக் கொல்லை
  • புகையிலையைப் பிரிக்காதே; பெண் பிள்ளை பேச்சைக் கேட்காதே
  • புகையிலை விரித்தால் போச்சு; பெண் பிள்ளை சிரித்தால் போச்சு
  • புகை வீட்டைச் சுற்றும்
  • புங்க நிழலும் புது மண்ணும் போல்
  • புங்கப் புகழே, தங்க நிழலே
  • புங்கை நிழலுக்கும் புளியைத் தழலுக்கும்
  • புஞ்சையிற் புதிது; நஞ்சையிற் பழையது
  • புட்டுக்கூடை முண்டத்திலும் பொறுக்கி எடுத்த முண்டம்
  • புட்பம் என்றும் சொல்லலாம்; புஸ்பம் என்றும் சொல்லலாம்; ஐயர் சொன்னமாதிரியும் சொல்லலாம்
  • புடம் இட்ட பொன் போ
  • புடைக் கட்டுப் பயிருக்கு மடைக்கட்டுத் தண்ணீர்
  • புடைவை கொடுப்பாள் என்று பெண் வீட்டுக்குப் போனால்; கோணிப் பையைக் கட்டிக் கொண்டு குறுக்கே வந்தாளாம்
  • புடைவையை வழித்துக்கொண்டு சிரிக்க வேணும்
  • புண் எல்லாம் ஆறி விட்டது; தாமரை இலை அகவந்தான் இருக்கிறது என்றானாம்
  • புண்ணியத்துக்கு உழுத மாட்டைப் பல்லைப் பிடித்துப் பதம் பார்த்தால் போல
  • புண்ணியத்துக்குக் கிணறு வெட்டப் பூதம் புறப்பட்டது போல
  • புண்ணியத்துக்குப் பசுவைக் கொடுத்தால் பல் எத்தனை என்றாளாம்
  • புண்ணியத்துக்குப் புடைவை கொடுத்தால் புறக்கடையில் போய் முழம் போட்டாளாம்
  • புண்ணிய பாவத்துக்குப் புடைவை கொடுத்தாளாம்; பின்னாலே போய் முழம் போட்டுப் பார்த்தாளாம்
  • புண்ணியம் இல்லாத வழிகாட்டி வீண்
  • புண்ணியம் ஒருவர் பங்கு அல்ல
  • புண்ணியம் பார்க்கப் போய்ப் பாவம் பின்னே வந்ததாம்
  • புண்ணில் எரி இட்டது போல
  • புண்ணில் கோல் இட்டது போல
  • புண்ணில் புளிப் பெய்தாற் போல
  • புண்ணுக்கோ மருந்துக்கோ வீச்சம்
  • புண்ணைக் கீறி ஆற்ற வேண்டும்
  • புண்பட்ட புலிக்கு இடுப்பு வலி எம்மாத்திரம்?
  • புத்தி அற்றவர்கள் பக்தியாய்ச் செய்வதும் விபரீதம் ஆம்
  • புத்தி அற்றான் பலன் அற்றான்
  • புத்தி இல்லா மாந்தர் புல்லினும் புல்லர் ஆவார்
  • புத்தி ஈனர்கள் குளிக்கப் போய்ச் சேற்றைப் பூசிக் கொள்வார்கள்
  • புத்தி உரம்
  • புத்தி உள்ளவர் பொறுப்பார்
  • புத்தி உறப் புகழ்
  • புத்தி எத்தனை? சுத்தி எத்தனை?
  • புத்தி கட்டை, பெயர் முத்து மாணிக்கம்
  • புத்திகெட்ட இராசாவுக்கு மதிகெட்ட மந்திரி
  • புத்தி கெட்ட புதுப்பாளையம், போக்கிரி பாண்டமங்கலம், மூணும் கெட்ட மோகனூர்
  • புத்திசாலியின் விரோதம் தேவலை; அசட்டின் நட்பு உதவாது
  • புத்திமான் பலவான் ஆவான்
  • புத்தி முற்றினவர்க்குச் சித்தியாதது ஒன்றும் இல்லை
  • புத்தியோ கட்டை, பெயரோ முத்துமாணிக்கம்
  • புத்தூர் சிறுப்பிட்டி பூம்பட்டி ஆவார்
  • புத்தூரான் பார்த்திருக்க உண்பான்; பசித்தோர் முகம் பாரான்; கோத்திரத்துக்குள்ள குணம்
  • புத்ராத் சதகுணம் புத்ரீ
  • புதன் கோடி தினம் கோடி
  • புதன் சனி முழுகு
  • புதிது புதிதாய்ப் பண்ணையம் வைத்தால் மசிரு மசிரா விளைஞ்சதாம்
  • புதிசுக்கு வண்ணான் கோணியும் வெளுப்பான்
  • புதிதாய்ப் புதிதாய்க் குலம் புகுந்தேன், பீலாப் பூத்தகச் சோறு
  • புதிதாய் வந்த சேவகன் நெருப்பாய்க் கட்டி வீசுகிறான்
  • புதிதாய் வந்த மணியக்காரன் நெருப்பாய் இருக்கிறான்
  • புதிய காரியங்களில் புதிய யோசனை வேண்டும்
  • புதிய துடைப்பம் நன்றாகப் பெருக்கும்
  • புதிய வண்ணான் பொந்து கட்டி வெளுப்பான்
  • புதிய வண்ணானையும் பழைய அம்பட்டனையும் தேடவேண்டும்
  • புதிய வெள்ளம் வந்து பழைய வெள்ளத்தை அடித்துக் கொண்டு போயிற்று
  • புதியாரை நம்பிப் பழையாரைக் கைவிடலாமா?
  • புதுக் குடத்தில் வார்த்த தண்ணீரைப் போல
  • புதுக்கோட்டை அம்மன் காசு பெற மாட்டான்
  • புதுக்கோட்டைக் கறுப்பண்ணனுக்கும் பூணைப் பார்; செட்டி நாட்டுத் தூணுக்கு உறையைப் பார்
  • புதுக்கோட்டைப் புஷ்பவல்லியைப் பார்; தேவகோட்டைத் தேவடியாளைப் பார்
  • புதுக்கோடி கிடைத்தாலும் பொன் கோடி கிடைக்காது
  • புதுத்துடைப்பம் நன்றாய்ப் பெருக்கும்
  • புதுப்பணக்காரனிடம் கடன் வாங்காதே
  • புதுப்பணம் படைத்தவன் அறிவானோ போன மாதம் பட்ட பாட்டை
  • புதுப்பானைக்கு ஈ சேராது
  • புதுப்புனலும் புதுப்பணமும் மண்டையை இடிக்கும்; தொண்டையை அடைக்கும்
  • புதுப் புடைவையிலே பொறி பட்டாற் போல
  • புதுப் பெண் என்று தலை சுற்றி ஆடுகிறதா?
  • புதுப் பெண்ணே, புதுப் பெண்ணே, நெருப்பு எடுத்து வா, உனக்குப் பின்னாலே இருக்கிறது செருப்படி
  • புதுப் பெண் போல் நாணுகிறது
  • புதுப் பெண் மோடு தூக்கும்
  • புது மண அறைப் பெண் போல நாணுகிறது
  • புது மாட்டுப்பெண் மேட்டைத் துடைக்கும்
  • புது மாடு குளிப்பாட்டுகிறது போல
  • புது மாடு புல்லுப் பெறும்
  • புதுமைக்கு வண்ணான் கரை கட்டி வெளுப்பான்; பழகப் பழகப் பழந் துணியும் கொடான்
  • புதுமையான காரியந்தான் இந்தக் கலியுகத்தில்
  • புது வண்ணான் கோணியும் வெளுப்பான்
  • புது வாய்க்கால் வெட்ட வேண்டாம்; பழ வாய்க்கால் தூர்க்க வேண்டாம்
  • புது வெள்ளத்தில் கெளுத்தி மீன் ஏறுவது போல
  • புது வெள்ளம் வந்து பழைய வெள்ளத்தையும் அடித்துக்கொண்டு போயிற்று
  • புதையல் எடுத்தவனைப் போல
  • புயலுக்குப் பின் அமைதி
  • புரட்டாசிக் கருக்கல் கண்ட இடத்து மழை
  • புரட்டாசிக் காய்ச்சல்
  • புரட்டாசிச் சம்பா பொன் போல் விளையும்
  • புரட்டாசி நடுகை, திரட்சியான நடுகை
  • புரட்டாசிப் பகலில் பொன் உருகக் காய்ந்து இரவிலே மண் உருகப் பெய்யும்
  • புரட்டாசி பதினைந்தில் நடவே நடாதே
  • புரட்டாசி பாதியில் சம்பா நடு
  • புரட்டாசி பெய்தாலும் பெய்யும்; காய்ந்தாலும் காயும்
  • புரட்டாசி பெய்து பிறக்க வேணும்; ஐப்பசி காய்ந்து பிறக்க வேணும்
  • புரட்டாசி மாதத்தில் கோவிந்தா என்ற குரலுக்குப் பஞ்சமா?
  • புரட்டாசி மாதத்து நடவு பெரியோர் தேடிய தனம்
  • புரட்டாசி மாதத்தில் பேரெள் விதை; சித்திரை மாதத்தில் கூர் எள் விதை
  • புரட்டாசி மாதம் முப்பதும் ஒரு கந்தாயமா?
  • புரட்டாசியில் பொன் உருகக் காய்ந்தாலும் காயும்; மண்ணுருகப் பெய்தாலும் பெய்யும்
  • புரட்டாசியில் பொன் உருகக் காயும்; ஐப்பசியில் மண் உருகப் பெய்யும்
  • புரட்டாசி விதை ஆகாது; ஐப்பசி நடவு ஆகாது
  • புரட்டாசியில் வில் போட்டால் புனல் அற்றுப் போகும்
  • புரட்டாசி வெயில் பொன் உருகக் காய்ந்து மண் உருகப் பெய்யும்
  • புரட்டாசி வெயிலில் பொன் உருகும்
  • புரட்டிப் புரட்டி உதைக்கிற போதும் மீசையில் மண் ஒட்டவில்லை என்றான்
  • புரண்டும் பத்து நாள்; மருண்டும் பத்து நாள்; பின்னையும் பத்து நாள்
  • புரவி இல்லாப் படை போல
  • புரளன் கரை ஏறமாட்டான்
  • புராண வைராக்கியம்
  • புரிந்ததா மட்டைக்கு இரண்டு கீற்று என்று?
  • புருவத்தில் பட்டால் கரிக்குமோ? கண்ணில் பட்டால் கரிக்குமோ?
  • புருஷக் கைம்பெண்
  • புருஷன் அடிக்கக் கொழுந்தனைக் கோபித்தது போல
  • புருஷன் அடித்தது பெரிது அல்ல; சக்களத்தி சிரித்ததுதான் கோபம்
  • புருஷன் அழைப்புக்கு சரணடைபவளே பொண்டாட்டி.
  • புருஷன் இல்லாமல் பிள்ளை பெறலாமா?
  • புருஷன் உத்தரவிட்டால் பொண்டாட்டி அடங்கித்தான் ஆகவேண்டும்.
  • புருஷன் உயிரோடு இருக்க பொண்டாட்டி தாலி அறுத்தாற்போல
  • புருஷன் காலில் விழுந்தால் செல்வம் தானாக வரும்.
  • புருஷன் கூப்பிட்டா பொண்டாட்டி போகத்தானே வேணும்.
  • புருஷன் செத்தால் பொண்டாட்டி தாலியை அறுத்துத்தான் ஆகவேண்டும்.
  • புருஷன் செத்தால் விதவை. பொண்டாட்டி செத்தால் புதுமாப்பிள்ளை.
  • புருஷன் செத்தால் வெட்கம்; பிள்ளை செத்தால் துக்கம்
  • புருஷன் பொண்டாட்டி விவகாரத்திற்குள் மாற்றான் நுழைந்தால் போல
  • புருஷன் வலு இருந்தால் பெண்டாட்டி குப்பை மேடு ஏறிச் சண்டை போடுவாள்
  • புருஷனுக்கு ஏற்ற மாராப்பு
  • புருஷனைப் பார்க்கும்போது தாலி எங்கே என்று தேடினாளாம்
  • புருஷனை வைத்துக் கொண்டு அவிசாரி போவது போல்
  • புல் அற உழாதே; பயிருக்கு வேலி கட்டாதே
  • புல் உள்ள இடத்தில் மேயாது; தண்ணீர் உள்ள இடத்தில் குடிக்க ஒட்டாது
  • புல் என்றாலும் புருஷன்; கல் என்றாலும் கணவன்
  • புல்லனுக்கு எது சொன்னாலும் கேளான்
  • புல்லனுக்கு நல்லது சொன்னால் புண்ணிலே கோல் இட்ட கதை
  • புல்லும் பூமியும் உள்ள மட்டும் என் நிலத்தை அநுபோகம் பண்
  • புல்லும் பூமியும் கல்லும் காவேரியும் உள்ள மட்டும்
  • புல்லூரோ, நெல்லூரோ?
  • புல்லைத் தின்னும் மாடுபோலப் புலியைத் தின்னும் செந்நாய் உதவுமா?
  • புல்லோருக்கு நல்லோர் சொன்ன பொருளாகி விட்டது
  • புல் விற்கிற கடையிலே பூ விற்கிறது
  • புலவர் இல்லாத சபையும் அரசன் இல்லாத நாடும் பாழ்
  • புலவர் வறுமை பூமியிலும் பெரிது
  • புலவருக்கு வெண்பாப் புலி
  • புலி அடிக்கும் முன்னே கிலி அடிக்கும்
  • புலி இருக்கிற காட்டில் பசு போய்த் தானே மேயும்?
  • புலி இருந்த குகையில் போகப் பயப்படுகிறதா?
  • புலி இளைத்தாலும் புல்லைத் தின்னாது
  • புலி ஏகாதசி விரதம் பிடித்தது போல
  • புலிக் காட்டிலே புகுந்த மான் போல
  • புலிக்கு அஞ்சாதவன் படைக்கு அஞ்சான்
  • புலிக்கு அரிய உணவைப் பூனை புசிக்குமோ?
  • புலிக்குத் தன் காடு பிறவி காடு இல்லை
  • புலிக்குத் தன் காடு வேற்றுக் காடு உண்டா?
  • புலிக்குப் பயந்தவர்கள் எல்லாரும் என்மேல் படுத்துக் கொள்ளுங்கள்
  • புலிக்குப் பயந்து பூனை புழுக்கையை மூடுமாம்
  • புலிக்குப் பிறந்தது பூனையாய்ப் போகுமா?
  • புலிக்குப் பிறந்தது நகம் இல்லாமல் போகுமா?
  • புலிக்குப் புதர் துணை; புதருக்குப் புலி துணை
  • புலிக் கூட்டத்தில் மான் அகப்பட்டது போல
  • புலி குத்தின சூரி என்று கையில் எடுத்தாலும் போதும்; பூனை குத்தின சுளுக்கி என்று கையில் எடுத்தால் பெருமையா?
  • புலி செவி திருகிய மத களிறு
  • புலி நகம் படாவிட்டாலும் அதன் மீசை குத்தினாலும் விஷம்
  • புலிப் பாய்ச்சல் பாய்கிறான்
  • புலிப்பால் குடித்தவன் போல் இருக்கிறான்
  • புலிப்பால் வேண்டுமானாலும் கொண்டு வருவான்
  • புலிப்பாலைக் கொணர்ந்தவன் எலிப்பாலுக்கு அலைந்தானாம்
  • புலி பசித்தால் புல்லைத் தின்னுமா?
  • புலி பதுங்கிப் பாயும்
  • புலி பதுங்குவது பாய்ச்சலுக்கு அடையாளம்
  • புலி புலி என்று ஏமாற்றுவது போல
  • புலிமேல் வீச எடுத்த கத்தியைப் பூனைமேல் வீசுகிறதா?
  • புலியின் கைப்பட்ட பாலகனைப் போல
  • புலியின் முகத்தில் உண்ணி எடுக்கலாமா?
  • புலியும் பசுவும் ஒரு துறையில் தண்ணீர் குடிக்க
  • புலியும் பசுவும் பொருந்தி வாழ்ந்தாற்போல
  • புலியூருக்குப் பயந்து நரியூருக்கு வந்தேன்; நரியூரும் புலியூராய்ப் போயிற்று
  • புலியூருக்குப் பயந்து புத்தூருக்குப் போனால் புத்தூரும் புலியூரான கதை
  • புலியூரை விட்டு எலியூருக்குப் போக, எலியூரும் புலியூர் ஆனது போல
  • புலியை இடறின சிதடன் போல
  • புலியைக் கண்ட மான் போல
  • புலியைக் கண்டால் கிலி
  • புலியைப் பார்த்த நரி சூடிக் கொண்டது போல
  • புலியை விடக் கிலி பெரிது
  • புலி வயிற்றில் பிறந்தால் நகம் இல்லாமல் போகுமா?
  • புலையனுக்குப் பூமுடி பொறுக்குமா?
  • புலையனுக்கு வாக்குச் சுத்தியும் ஆணையும் இல்லை
  • புலையாடியும் பொருளைத் தேடு; பொருள் வந்து புலையை நீக்கும்
  • புலையும் கொலையும் களவும் தவிர்
  • புவி அரசர் போற்றும் கவி அரசர் கம்பர்
  • புழுங்கிப் புழுங்கி மா இடித்தாலும் புழுக்கைச்சிக்கு ஒரு கொழுக்கட்டை
  • புழுத்த சரக்கு; கொழுத்த பணம்
  • புழுத்த நாய் குறுக்கே போகாது
  • புழுதி உண்டானால் பழுது இல்லை
  • புழுவும் புரளும்
  • புழைக்கடைக் கீரை மருந்துக்கு உதவாது
  • புழைக்கடை மருந்து சுவைக்கு உதவாது
  • புள்ளிக் கணக்கன் பள்ளிக்கு ஆவானா?
  • புள்ளிக் கணக்குப் பள்ளிக்கு உதவாது
  • புள்ளிக்காரன் கணக்குப் பள்ளிக்கு உதவாது
  • புள்ளிப் பொறி பாய்ந்த மூங்கில் கொள்ளிச் சாம்பல் ஆனாற்போல
  • புள்ளும் புறாவும் இரை தின்னா
  • புளி ஆயிரம், போந்து ஆயிரம்
  • புளி எத்தனை தூக்கு? ஒரே தூக்கு
  • புளி ஏப்பக்காரனும் பசி ஏப்பக்காரனும்
  • புளித்த காய்க்குப் புளி யுகுத்துவாயோ?
  • புளியங்காய்க்குப் புளிப்புப் புகுத விட்டால் வருமா?
  • புளியங் கொட்டைக்குச் சனி மூலையா?
  • புளியங் கொம்பைப் பிடிக்கப் போகிறது புத்தி
  • புளியந் தோடும் பழமும் போல
  • புளியம் பழத்துக்குப் புளிப்புப் புகுதவிட வேணுமா?
  • புளியம் பழமும் ஓடும் போல
  • புளிய மரத்தில் ஏறினவன் நாக்கு எரிவு காணாமுன் இறங்குவானா?
  • புளிய மரத்தில் ஏறினவன் பல் கூசினால் இறங்குவான்
  • புளிய மரத்துப் பிசாசு பிள்ளையாரையும் பிடித்ததாம்
  • புளிய மரத்தைக் கண்டால் வாயும் நில்லாது; வீதியிலே போகிற நாயைக் கண்டால் கையும் நில்லாது
  • புளியும் ஓடும் போல் ஒட்டாமல் இருக்கிறது
  • புளி வற்றினால் கரைக்கலாம்; பிஞ்சு வற்றினால் கரைக்கலாமா?
  • புளுகினாலும் பொருந்தப் புளுக வேண்டும்
  • புற்றில் ஆந்தை விழிப்பது போல விழிக்கிறான்
  • புற்றில் ஈசல் புறப்பட்டது போல
  • புற்றில் ஈசல் புறப்பட்டாலும் மண்ணில் கறையான் கூடினாலும் மழை வரவே வரும்
  • புற்றில் கால் இட்டாற் போல
  • புற்றில் கிடந்த புடையன் எழுந்தது போல
  • புற்றிலிருந்து ஈசல் புறப்பட்டது போல
  • புற்று அடிமண் மருந்தும் ஆகும்
  • புற்று கண்டு கிணறு வெட்டு
  • புறக்குடத்துத் தண்ணீர் போல
  • புறக் குற்றம் அறியப் பிடரியிலே கண்
  • புற மடையில் பொலியைத்துவி அடைக்கப் பார்த்தானாம்
  • புறமுதுகு காட்டி ஓடாதே
  • புறாவுக்கு எறிந்த கல்லை மடியில் கட்டுகிறதா?
  • புன்சிரிப்புக்கு மருந்து சாப்பிடப் போய் உள்ள சிரிப்பும் போச்சுதாம்
  • புன்டெயிற் புதியது; நன்செயிற் பழையது
  • புன்னாலைக் கட்டுவன் பாழ்ப்பட்டுப் போவார்
  • புஷ்பம் கொடுத்த புண்ணியவதி
  • புஸ்தகம் ஹஸ்த பூஷணம்

பூ[தொகு]

  • பூ இல்லாக் கொண்டை புலம்பித் தவிக்கிறதோ?
  • பூ இல்லாமல் மாலை கோத்துப் புருஷன் இல்லாமல் பின்ளை பெறுகிறது போல
  • பூ உதிரப் பிஞ்சு உதிரக் காய் உதிரக் கனி உதிர
  • பூ உள்ள மங்கையாம், பொற்கொடியாம், போன இடம் எல்லாம் செருப்படியாம்
  • பூக்கடைக்கு விளம்பரம் தேவையா?
  • பூச்சாண்டி காட்டுதல்
  • பூச்சி காட்டப் போய்த் தான் பயந்தாற் போல
  • பூச்சி காட்டப் போய்ப் பேய் பிடித்த கதை
  • பூச்சி பூச்சி என்றால் புழுக்கை தலைமேல் ஏறும்
  • பூச்சி பூச்சி என்றாளாம் பூலோகத்திலே; அவளே போய் மாட்டிக் கொண்டாளாம் சாலகத்திலே
  • பூச்சி பூச்சி என்னும் கிளி பூனை வந்தால் சீச்சுக் கீச்சு என்னுமாம்
  • பூச்சி மரிக்கிறது இல்லை; புழுவும் சாகிறதில்லை
  • பூச்சூட்ட அத்தை இல்லை; போரிட அத்தை உண்டு
  • பூசணிக்காய் அத்தனை முத்தைக் காதில் ஏற்றுகிறதா? மூக்கில் ஏற்றுகிறதா?
  • பூசணிக்காய் அத்தனை முத்தைப் போட்டுக் கொள்கிறது எங்கே?
  • பூசணிக்காய் அத்தனையும் சதை
  • பூசணிக்காய் அழுகினது போல
  • பூசணிக்காய் எடுத்தவனைத் தோளிலே காணலாம்
  • பூசணிக்காய்க்கும் புடலங்காய்க்கும் வித்தியாசம் தெரியாமல் பேசுகிறாய்
  • பூசணிக்காய் களவாடினவன் தோளைத் தொட்டுப் பார்த்துக் கொண்ட கதைபோல
  • பூசணிக்காய்ப் பருமன் முத்து; அதைக் காதில் தொங்கவிடலாமா? மூக்கில் தொங்க விடலாமா?
  • பூசணிக்காய் போகிற இடம் தெரியாது; கடுகு போகிறதை ஆராய்வார்
  • பூசப் பழையது பூனைக்கும் ஆகாது
  • பூசப் பூசப் பொன் நிறம்; தின்னத் தின்னத் தன்னிறம்
  • பூசாரி ஆலய மணியை அடித்தால் ஆனை தெரு மணியைத் தானே அடிக்கும்?
  • பூசாரி பாட்டுக்குப் பின்பாட்டு இல்லை
  • பூசாரி புளுகும் புலவன் புளுகும் ஆசாரி புளுகில் அரைப் புளுக்குக்கு ஆகாது
  • பூசாரி பூ முடிக்கப் போனானாம்; பூவாலங்காடு பலாக்காடாய்ப் போச்சுதாம்
  • பூசாரி பெண்டாட்டியைப் பேய் பிடித்த கதை
  • பூசுவது தஞ்சாவூர் மஞ்சளாம்; அதைக் கழுவுவது பாலாற்றுக் கரைத் தண்ணீராம்
  • பூசை வளர்ந்தது போச்சு
  • பூசை வேளையில் கரடி விட்டு ஒட்டியது போல்
  • பூட்டிக் சுழற்றினால் பறைச்சி; பூட்டாமலே இருந்தால் துரைச்சி
  • பூட்டிப் புசிக்காமல் புதைப்பார்; ஈயைப் போல் ஈட்டி இழப்பார்
  • பூட்டும் திறப்பும் போல
  • பூண்டிப் பொத்தறை, ஏண்டி கத்தறாய்?
  • பூண்டியில் விளையாடும் புலிக்குட்டிப் பசங்கள்
  • பூணத் தெரிந்தால் போதுமா? பேணத் தெரிய வேண்டாமா?
  • பூணாதார் பூண்டால் பூஷணமும் விழுந்து அழும்
  • பூத்தது என்றால் காய்த்தது என்பது போல
  • பூத்தானம் ஆன பிள்ளை ஆத்தாளைத் தாலி கட்டிற்றாம்
  • பூத்தானம் ஆன பிள்ளை பிறந்து பூவால் அடிபட்டுச் செத்தது
  • பூத்துச் சொரியப் பொறுப்பார்கள்; முட்டிக் கட்டக் கலங்குவார்கள்
  • பூத உடம்பு போனால் புகழ் உடம்பு
  • பூதலம் தன்னில் இவ்வூர் புண்ணியம் என் செய்ததோ?
  • பூதலம் யாவும் போற்றும் முச்சுடர்
  • பூப்பட்டால் கொப்புளிக்கும் பொன்னுத் திருமேனி
  • பூ மலர்ந்து கெட்டது வாய் விரிந்து கெட்டது
  • பூமி அதிர நடவாத புண்ணியவான்
  • பூமி ஆளலாம் என்று மனப்பால் குடிக்கிறது போல
  • பூமி கிருத்தி உண்
  • பூமியில் வரகு கொடுத்தால் கொடுக்கலாம்; இல்லாவிட்டால் ராஜன் கொடுக்க வேண்டும்
  • பூமியைப் போலப் பொறுமை வேண்டும்
  • பூர்வ சேஷ்டை போச்சுதோ, இருக்கிறதோ என்று பார்த்தானாம்
  • பூர்ளோத்தரம் மேரு சாத்திரம் போல் இருக்கிறது
  • பூராடக்காரன் ஊசாடத் தீரும்
  • பூராடக்காரனோடு போராட முடியாது
  • பூராடக்காரி ஊசாட ஊசாடப் பொருள் தொலையும்
  • பூராடத்தன் அப்பன் ஊராடான்
  • பூராடத்திலே பிறந்தவளுக்கு நூல் ஆகாது
  • பூராடத்தின் கழுத்தில் நூல் ஆடாது
  • பூராயமாய் வேலை கற்றுக் கொள்ள வேண்டும்
  • பூரி இல்லாத கல்யாணமா?
  • பூரியோர்க்கு இல்லை சீரிய ஒழுக்கம்
  • பூலு அம்மின ஊருல கட்டிலு அம்ம தகுனா?
  • பூலோகத்தார் வாயை மூடக் கூடுமா?
  • பூலோக முதலியார் பட்டம், புகுந்து பார்த்தால் பொட்டல்
  • பூவரசு இருக்கப் பொன்னுக்கு அழுவானேன்?
  • பூவிரிந்து கெட்டது; வாய் மலர்ந்து கெட்டது
  • பூவிலே பூ பூனைப் பூ
  • பூ விழுந்த கண்ணிலே கோலும் குத்தியது
  • பூவிற்ற ஊரிலே கட்டை விற்கத் தகுமா?
  • பூ விற்ற கடையிலே புல் விற்றது போல
  • பூ விற்ற கடையிலே புல் விற்கவும், புலி இருந்த காட்டிலே பூனை இருக்கவும், சிங்கம் இருந்த குகையிலே நரி இருக்கவும், ஆனை ஏறினவன் ஆடு மேய்க்கவும் ஆச்சுதே
  • பூ விற்ற காசு மணக்குமா? புலால் விற்ற காசு நாறுமா?
  • பூ விற்றவளைப் பொன் விற்கப் பண்ணுவேன்
  • பூவுக்கும் உண்டு புது மணம்
  • பூவும் மணமும் போல
  • பூவைத்த மங்கையாம், பொற் கொடியாம், போன இடமெல்லாம் செருப்படியாம்
  • பூவோடு சேர்ந்து நாரும் மணம் பெற்றது போல
  • பூனியல் தன் வாயால் கெட்டது போல
  • பூனை இளைத்தால் எலி சுலவிக் களிக்கும்மாம்
  • பூனை உள்ள இடத்திலே எலி பேரன் பேத்தி எடுக்கிறது
  • பூனை எச்சில் புலவனுக்குக் கூட ஆகாது; நாய் எச்சில் நாயகனுக்கு ஆகும்
  • பூனைக்கு இல்லை தானமும் தவமும்
  • பூனைக்கு ஒரு சூடு போடுவது போலப் புலிக்கும் ஒரு சூடு போடு
  • பூனைக்கு ஒன்பது இடத்திலே உயிர்
  • பூனைக்குக் கும்மாளம் வந்தால் பீற்றல் பாயைச் சுரண்டுமாம்
  • பூனைக் குட்டிக்குச் சிம்மாளம்; ஓலைப் பாய்க்குக் கேடு
  • பூனைக்கு கொண்டாட்டம், எலிக்குத் திண்டாட்டம்
  • பூனைக்குச் சிங்கம் பின் வாங்குமா?
  • பூனைக்குச் சிம்மாளம் வந்தால் பீற்றல் பாயில் புரளுமாம்
  • பூனைக்குத் தன் குட்டி பொன் குட்டி
  • பூனைக்குப் பயந்தவன் ஆனையை எதிர்த்துப் போனானாம்
  • பூனைக்குப் பயந்திருப்பாள்; புலிக்குத் துணிந்திருப்பாள்
  • பூனைக்கு மருந்து வாங்க ஆனையை விற்பதா?
  • பூனைக்கு மீன் இருக்கப் புளியங்காயைத் தின்றதாம்
  • பூனைக்கு யார் மணி கட்டுவது?
  • பூனை கட்டும் தோழத்தில் ஆனை கட்டலாமா?
  • பூனை கண்ணை மூடினால் உலகமே அஸ்தமித்து விடுமா?
  • பூனை கண்ணை மூடினால் உலகமே இருண்ட தென்று நினைக்குமாம்
  • பூனை குட்டி போட்டாற்போல் தூக்கிக் கொண்டு அலைகிறான்
  • பூனை குட்டியைத் தூக்கிக் கொண்டு போவது போல
  • பூனை குண்டு சட்டியில் தலையை விட்டுக் கொண்டு பூலோகம் எல்லாம் இருண்டு போச்சென்று நினைக்குமாம்
  • பூனைக் குத்தின சுளுக்கி என்று கையில் எடுத்தால் பெருமையா?
  • பூனை கொன்ற பாவம் உன்னோடே; வெல்லம் தின்ற பாவம் என்னோடே
  • பூனை சிரித்ததாம்; எலி பெண்டுக்கு அழைத்ததாம்
  • பூனை செய்கிறது துடுக்கு; அதை அடித்தால் பாவம்
  • பூனை நோஞ்சல் ஆனாலும் சகுனத்தடையில் குறைவு இல்லை
  • பூனை பால் குடிக்கிறது போல
  • பூனை பிராமண போஜனம் பண்ணுகிறது என்று பூணூல் போட்டுக் கொண்டதாம் எலி
  • பூனை பிராமண போசனம் பண்ணுகிறேன் என்று பூணூல் போட்டுக் கொண்டதாம்
  • பூனை புறக்கடை, நாய் நடு வீடு
  • பூனை போல் அடங்கினான்; புலிபோல் பாய்ந்தான்
  • பூனை போல் இருந்து புலி போல் பாயும்
  • பூனை போல் ஒடுங்கி ஆனை போல் ஆக்கிரமிக்கிறது
  • பூனை போல நடுங்கிப் புலி போலப் பாய்வான்
  • பூனை போன்ற புருஷனுக்கு வாழ்க்கைப் பட்ட சுண்டெலிப் பெண் போல்
  • பூனை மயிர் ஆனாலும் பிடுங்கினது மிச்சம்
  • பூனைமுன் கிளிபோல் புலம்பித் தவிக்கிறது
  • பூனையின் அதிர்ஷ்டம், உறி அறுந்து விழுந்தது
  • பூனையும் எலியும் போல்
  • பூனையைக் கண்ட கிளிபோல
  • பூனையைக் கண்டு புலி அஞ்சுமா?
  • பூனையைக் கொன்ற பாவம் உனக்கு; பிடி வெல்லம் தின்ற பலன் எனக்கு
  • பூனையைத் தான் வீட்டுப் புலி என்றும் எலியரசன் என்றும் சொல்வார்கள்
  • பூனையை மடியில் வைத்துக் கொண்டு சகுனம் பார்ப்பது போல்
  • பூனையை வளர்த்தால் பொல்லாத வழி; நாயை வளர்த்தால் நல்ல வழி
  • பூனை வயிற்றில் ஆனை பிறந்தது போல
  • பூனை வாய் எலிபோல் புலம்பித் தவிக்கிறது
  • பூனை வாயில் அகப்பட்டி எலி போல்
  • பூனை விற்ற காசுக்கு ஆனை வாங்க இயலுமா?

பெ[தொகு]

  • பெண் அவளது கழுத்தில் தாலி கட்டியவனுக்கு மட்டும் தான் சொந்தம்
  • பெண் என்றால் பேயும் இரங்கும்.
  • பெண் கல்யாண மேடையில் அமர தாலி கட்டியது போல
  • பெண் யாரை மதிக்காவிட்டாலும் தாலி கட்டிய புருஷனை மதித்துத்தான் ஆகவேண்டும்.
  • பெண்புத்தி பின்புத்தி
  • பெண்டு வாய்க்கும் புண்ணியவானுக்கு பண்டம் வாய்க்கும் பாக்கியவானுக்கு.
  • பெண்ணின் கோணல் பொன்னிலே நிமிரும்.
  • பெண்ணென்று பிறந்த போது புருஷன் பிறந்திருப்பான்.
  • பெண் வளர்த்தி பீர்க்கங் கொடி.
  • பெருமாள் இருக்கிற வரையில் திருநாள் வரும்.
  • பெருமையும் சிறுமையும் வாயால் வரும்.
  • பெற்ற மனம் பித்து பிள்ளை மனம் கல்லு.

பே[தொகு]

  • பேசப் பேச மாசு அறும்.
  • பேசாதிருந்தால் பிழையொன்றுமில்லை.
  • பேராசை பெருநட்டம்.
  • பேர் இல்லாச் சந்நிதி பாழ், பிள்ளை இல்லாச் செல்வம் பாழ்

பை[தொகு]

  • பையனாப் பொறந்தா ஒற்றை வாழ்க்கை; பொண்ணாப் பொறந்தா இரட்டை வாழ்க்கை (பொறந்த வீடு, புகுந்த வீடு)

பொ[தொகு]

  • பொங்கும் காலம் புளி , மங்குங் காலம் மாங்காய்.
  • பொண்டாட்டி தாலியே புருஷன் ஆயுளை கெட்டியாக்கும்.
  • பொண்டாட்டியின் அரிப்பை புருஷனே தீர்த்துவைக்க வேண்டும்.
  • பொண்டாட்டியின் கடமை புருஷனுக்காக வாழ்வதே.
  • பொண்டாட்டிக்கு புருஷனும் அவன் கட்டுன தாலியுந்தான் முக்கியம்.
  • பொண்டாட்டினா புருஷன் கிழிச்ச கோட்டை தாண்டக்கூடாது.
  • பொண்ணா பொறந்தா ஒருநாள் ஆம்பளைக் கிட்ட கழுத்தை நீட்டிக்கணும். அவன் ஒன்னு, ரெண்டு, மூனு முடிச்சுப் போட்டா மாட்டிக்கணும்.
  • பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை, மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை.
  • பொய் சொன்ன வாய்க்குப் போசனங் கிடையாது.
  • பொறந்த வீட்டு உறவு தாலி கட்டும் வரை. புகுந்த வீட்டு உறவு சமாதி கட்டும் வரை.
  • பொறுத்தார் பூமி ஆள்வார் பொங்கினார் காட்டாள்வார்.
  • பொறி வென்றவனே அறிவின் குருவாம்.
  • பொறுமை கடலினும் பெரிது.
  • பொற்கலம் ஒலிக்காது, வெண்கலம் ஒலிக்கும்.
  • பொன் ஆபரணத்தைப் பார்க்கிலும் புகழ் ஆபரணமே பெரிது.

போ[தொகு]

  • போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து.
  • போரோடு தின்கிற மாட்டுக்குப் பிடுங்கி போட்டுக் கட்டுமா?
  • போனதை நினைக்கிறவன் புத்தி கெட்டவன்.

[தொகு]

  • மகன் கட்டிய தாலியை மாமியார் அறுத்தது போல
  • மகன் செத்தாலும் சாகட்டும், மருமகள் தாலி அறுக்கவேணும்.
  • மடிவிதையைவிட பிடிவிதை முளைக்கும்
  • மடியிலே கனமிருந்தால்தான் வழியிலே பயம்.
  • மட்டான போசனம் மனதிற்கு மகிழ்ச்சி.
  • மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்கலாமா?
  • மண்டையுள்ள வரை சளிபோகாது.
  • மண்ணுக்குப் பூசிப்பார்; பெண்ணுக்குப் பூட்டிப்பார்!
  • மணாளனே மங்கையின் பாக்கியம்
  • மதியார் வாசலை மிதியாதிருப்பதே உத்தமம்.
  • மந்திரிக்கும் உண்டு மதிக்கேடு.
  • மரத் தாலி கட்டி அடிக்கிறது.
  • மரம் வெட்டுகிறவனுக்கு நிழலும்..., மண் தோடுகிறவனுக்கு இடமும் கொடுக்கும்.
  • மரம் வைத்தவன் தண்ணீர் வார்ப்பான்.
  • மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.
  • மருந்து கால் பாகம், மதி முக்கால் பாகம்.
  • மருந்தும் விருந்தும் மூன்று வேளை.
  • மருந்தே யாயினும் விருந்தோடு உண்.
  • மலிந்த சரக்குக் கடைத்தெருவுக்கு வரும்.
  • மலையைத் துளைக்கச் சிற்றுளி போதாதா?
  • மல்லாந்து உமிழ்ந்தால் மார்மேல்தான் விழும்.
  • மவுனம் கலக நாசம்
  • மழையடி புஞ்சை மதகடி நஞ்சை
  • மழைமுகம் காணாத பயிரும் தாய்முகம் காணாத பிள்ளையும்.
  • மழை விட்டாலும் தூவானம் விடவில்லை.
  • மனதிலிருக்கும் இரகசியம் மதி கேடனுக்கு வாக்கிலே.
  • மனமுரண்டிற்கு மருந்தில்லை.
  • மனம் உண்டானால் இடம் உண்டு.
  • மனந்தடுமாறினால் மாற்றானுக்கு வலிமை.
  • மனம் போல வாழ்வு.
  • மன்னன் எப்படியோ மன்னுயிர் அப்படி.
  • மன்னுயிரைத் தன்னுயிர்போல் நினை.
  • மனைவியில்லாத புருஷன் அரை மனிதன்
  • மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்
  • மனைவி இறந்தால் மணம், மகள் இறந்தால் பிணம்
  • மனைவியின் கௌரவம் கணவனுக்கு அடிபணிந்து நடப்பதில் தான் இருக்கிறது.
  • மயிலைக் கண்டு வான்கோழி ஆடினாற் போல

மா[தொகு]

  • மாடம் இடிந்தால் கூடம்.
  • மாடு கிழமானாலும் பாலின் சுவை போகுமா?
  • மாடு கெட்டால் தேடலாம் மனிதர் கெட்டால் தேடலாமா?
  • மாடு மேய்க்காமற் கெட்டது பயிர் பார்க்காமற் கெட்டது.
  • மாட்டுக்கு மூக்கணாங்கயிறு போல பொண்ணுக்கு தாலிக்கயிறு
  • மாதா ஊட்டாத சோறு மாங்காய் ஊட்டும்.
  • மா பழுத்தால் கிளிக்காம், வேம்பு பழுத்தால் காக்கைக்காம்.
  • மாப்பிள்ளை மணப்பெண்ணுக்கு தாலி கட்டிமுடிந்த பின்னர் கல்யாணத்தை நிறுத்தியது போல
  • மாமியாரும் ஒரு வீட்டு மாட்டுப் பெண்தான்.
  • மாமியாரும் நாத்தனாரும் புதுப்பெண்ணின் எதிர்ப்படையோ?
  • மாமியார் உடைத்தால் மண் குடம் மருமகள் உடைத்தால் பொன்குடம்.
  • மாமியார் மெச்சின மருமகளில்லை, மருமகள் மெச்சின மாமியாரில்லை.
  • மாரடித்த கூலி மடி மேலே.
  • மாரிக்காலத்தில் பதின்கல மோரும் கோடைக்காலத்தில் ஒருபடி நீருஞ் சரி.
  • மாரி யல்லது காரியம் இல்லை.
  • மாவுக்குத் தக்க பணியாரம்.
  • மாற்றானுக்கு இடங் கொடேல்.
  • மானம் பெரிதோ? உயிர் பெரிதோ?
  • மானைக் காட்டி மானைப் பிடிப்பார்.

மி[தொகு]

  • மிஞ்சியது கொண்டு மேற்கே போகுதல் ஆகாது.
  • மிதித்தாரை கடியாத பாம்பு உண்டோ?
  • மின்னுக் கெல்லாம் பின்னுக்கு மழை.

மீ[தொகு]

  • மீகாமன் இல்லா மரக்கலம் ஓடாது.
  • மீ தூண் விரும்பேல்.

மு[தொகு]

  • முகத்துக்கு முகம் கண்ணாடி
  • முக்காலும் காகம் முழுகிக் குளித்தாலும் கொக்காகுமா?
  • முகூர்த்த நேரத்தில் தாலி காணாமற்போனது போல
  • முட்டையிடுகிற கோழிக்கு வருத்தம் தெரியும்.
  • முதலையும் மூர்க்கனும் கொண்டது விடா
  • முதல் கோணல் முற்றுங் கோணல்
  • முத்தால் நத்தைப் பெருமைப்படும், மூடர் எத்தாலும் பெருமை படார்.
  • முப்பது வருடம் வாழ்ந்தவனும் இல்லை, முப்பது வருடம் தாழ்ந்தவனும் இல்லை.
  • முருங்கை பருத்தால் தூணாகுமா?
  • முள்ளுமேல் சீலைபோட்டால் மெள்ள மெள்ள வாங்கவேண்டும்.
  • முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.
  • முற்றும் நனைந்தவர்களுக்கு ஈரம் ஏது?
  • முன் ஏர் போன வழிப் பின் ஏர்
  • முன்னத்தி ஏருக்குப் பின்னாடிதான் பின்னத்தி ஏரும் போகும்
  • முன்கை நீண்டால் முழங்கை நீளும்.
  • முன் வைத்த காலைப் பின் வைக்கலாமா?
  • முன்னவனே முன் நின்றால் முடியாத பொருள் உளதோ?
  • முட்டாள் தனத்துக்கு முதல் பாக்குக்காரன்
  • முதலியார் டம்பம் விளக்கெண்ணெய்க்குக் கேடு
  • முள் முடிச்சைக் கூட கழற்றிவிடலாம். மூன்று முடிச்சைக் கழற்ற ஆளில்லை.

மூ[தொகு]

  • மூட கூட்டுறவு முழுதும் அபாயம்.
  • மூத்தோர் சொல் வார்த்தை அமுதம்.
  • மூன்று முடிச்சு கழுத்திலே விழட்டும். முப்பது இலைகள் குப்பையிலே விழட்டும்.

மெ[தொகு]

  • மெய்ச்சொல்லிக் கெட்டவனுமில்லை பொய்சொல்லி வாழ்ந்தவனுமில்லை.
  • மெல்லப் பாயும் தண்ணீர் கல்லையும் குழியாக்கும்.

மே[தொகு]

  • மேருவைச் சார்ந்த காகமும் பொன்னிறம்
  • மேற்கே மழை பெய்தால் கிழக்கே வெள்ளம் வரும்.

மொ[தொகு]

  • மொழி தப்பினவன் வழி தப்பினவன்

மோ[தொகு]

  • மோகம் முப்பது நாள், ஆசை அறுபது நாள்.

மெள[தொகு]

  • மெளனம் மலையைச் சாதிக்கும்.

யா[தொகு]

  • யானை அசைந்து கொண்டே தின்னும், வீடு நின்று கொண்டே தின்னும்.

[தொகு]

  • வஞ்சகம் வாழ்வைக் கெடுக்கும்.
  • வடக்குப் பார்த்த மச்சு வீட்டைப் பார்க்கிலும் தெற்குப் பார்த்த குச்சு வீடு நல்லது.
  • வடக்கே கருத்தால் மழை வரும்.
  • வட்டி ஆசை முதலுக்கு கேடு.
  • வணங்கின முள் பிழைக்கும்.
  • வரவுக்குத் தக்கபடி செலவை வரையறு.
  • வருந்தினால் வாராதது இல்லை.
  • வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்.
  • வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு.
  • வலுத்தவனுக்கு வாழை; இளைத்தவனுக்கு எள்ளு.
  • வலுவில் வந்தவள் கிழவி.
  • வளவனாயினும் அளவறிந் தளித்துண்
  • வழவழத்த உறவைப் பார்க்கிலும் வைரம் பற்றிய பகை நன்று.

வா[தொகு]

  • வாங்கிறதைப் போலிருக்க வேண்டும் கொடுக்கிறதும்
  • வாத்தியாரிடம் தோற்காத மாணவன், கணவனிடம் தோற்காத மனைவி வென்றும் பிரயோசனமில்லை.
  • வாயுள்ள பிள்ளை பிழைக்கும்.
  • வாய் சர்க்கரை கை கருணைக் கிழங்கு.
  • வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று பேசக் கூடாது.
  • வாய் மதத்தால் வாழ்வு இழக்கும்.
  • வால் நீண்ட கருங்குருவி வலமிருந்து இடம் போனால் கால் முறிந்த கிழவியும் குமரி ஆவாளே
  • வாழ்கிறதும் கெடுகிறதும் வாயினால்தான்.
  • வாழ்வும் தாழ்வும் சில காலம்.
  • வாழாவெட்டியின் நிலை காற்றில் அகப்பட்ட காகிதம் போன்றது.
  • வாழாவெட்டி கழுத்துத்தாலி ஊரார் கண்ணைக் குத்தும்.

வி[தொகு]

  • விக்க விக்கச் சோறு போட்டுக் கக் சக் கக்க வேலை வாங்க வேணும்.
  • விக்குகிற வாய்க்கு விளாங்காய்; விழுகின்ற இடத்துக்கு அரிவாள் மனை
  • விகட கவியா?
  • விச்சுளி வலமானால் நிச்சயம் வாழ்வு உண்டாம்.
  • விசாகத்தில் மழை; பயிர்களில் புழு.
  • விசாரம் முற்றினால் வியாதி.
  • விசிறிக் காதும் வேள்விப் பணமும் விரைவில் வரும்
  • விசிறிக்குக் காற்றும் வேள்விக்குப் பணமும் எங்கிருந்தாலும் வரும்.
  • விசும்பில் துளி விழின் அல்லது பசும்புல் தலை காண்பது அரிது.
  • விசும்பு முட்டான கோலும் துரும்பு முட்டத் தீரும்.
  • விசுவாசக்காரனுக்கு வெந்நீரும் பருக்கையும்; தாட்டோட்டக்காரனுக்குத் தயிரும் சோறும்.
  • விசுவாசக் கொக்கு நடமாடிச் செத்ததாம்.
  • விசுவாசப் பூனை கருவாட்டைத் தூக்கிக் கொண்டு போகிறதாம்.
  • விசுவாசம் இருந்தால் வேசியும் பிழைப்பாள்; நிசம் இருந்தால் நீசனும் தழைப்பான்.
  • விசுவாசம் கெட்ட நாயே!
  • விட்ட இடம் பட்டணம்; விழுந்த இடம் சுடுகாடு.
  • விட்ட குறை. தொட்டகுறை
  • விட்டத்தில் இருக்கிற பூனை இங்கிட்டுத் தாவுகிறதோ, அங்கிட்டுத் தாவுகிறதோ?
  • விட்டத்துக்கு எட்டாம் நாள் அட்டமி.
  • விட்டதடி உன் ஆசை விளாம் பழத்து ஓட்டோடே.
  • விட்டதே நம் உறவு, வெண்கலத்தில் ஓசை போல.
  • விட்ட பாம்பும் பட்டுப் போகும்
  • விட்டில் பூச்சியைப் போல் பறந்த திரிகிறான்.
  • விட்டில் பூச்சி விளக்கில் விழுவதுபோல.
  • விட்டு அடித்தால் என்ன? கட்டி அடித்தால் என்ன?
  • விட்டு அடிக்கிறதிலும் தொட்டு அலை.
  • விட்டு அறுத்தாலும் ஆகாது என்று ஒட்ட அறுத்திடுவேன்
  • விட்டுக் கெட்டது காது; விடாமல் கெட்டது கண்.
  • விட்டுச் சொன்னால் குட்டுக் குலையும்.
  • விட்டு விட்டாலும் ஒட்டிக் கொண்டு வருகிறான்.
  • விட்டு விட்டுப் பெய்கிற மழையிலும் விடாமல் பெய்கிற தூவானம் நல்லது.
  • விட்டு வைத்த கடனும் பெற்று வைத்த பிள்ளையும் எங்கும் போகா
  • விடக்கே ஆயினும் வடிக்கு ஆகாது.
  • விடாச் சுரத்துக்கு விஷ்ணுக் கரந்தை.
  • விடாத மழை பெய்தாலும் படாத பாடு பட வேண்டும்.
  • விடாத மழையால் இல்லி ஒழுக்கு அடைபடும்.
  • விடா முன்டனும் கொடாக் கண்டனும்.
  • விடாய் தீரச் கங்க ஸ்நானம் பண்ணிப் பாவம் போகுமாப் போலே.
  • விடிக்கப் போன இடத்தில் விளாம் பழம் கிடைத்தது போல்.
  • விடிகிற மட்டும் இறைத்தவனும் சாலை உடைத்தவனும் சரியா?
  • விடிந்ததும் பெண்ணுக்கு முக்காடோ?
  • விடிந்தால் தெரியும் மாப்பிள்னை குருடும், பெண் குருடும்
  • விடிந்தால் தெரியும் வெளிச்சம்.
  • விடியக் கல்யாணம்; பிடி தாம்பூலம்.
  • விடிய விடிய இறைக்க, விடித்த பிறகு உடைக்க.
  • விடிய விடியக் கதை கேட்டுச் சீதைக்கு ராமன் சிற்றப்பன் என்றானாம்.
  • விடிய விடியக் கதை கேட்டு ராமனுக்குச் சீதை என்ன வேண்டும் என்றானாம்
  • விடிய விடியத் துரத்தியும் ஆண் கழுதையாகத்தான் முடிந்தது
  • விடிய விடியத் தேய்த்தாலும் கறுப்பு நாய் வெள்ளை நாய் ஆகுமா?
  • விடிய விடியப் பாடுபட்டும் விளக்குக்கு எண்ணெய் இல்லை
  • விடிய விடிய மழை பெய்தாலும் ஒட்டாஞ்சில்லு முளைக்காது (ஒட்டாங் கிளிஞ்சல். கொட்டாங்கச்சி.)
  • விடிய விடிய ராமாயணம் கேட்டுச் சீதைக்கு ராமன் என்ன ஆகவேணும் என்றானாம்.
  • விடியற் காலத்தில் கல்யாணம்; பிடியடா பயலே பாக்கு வெற்றிலை
  • விடியற்காலைத் தூக்கம் வெல்லம் போல
  • விடியாமல் உலை வைத்து வடியாமல் விடுவேனோ?
  • விடியா மூஞ்சி வேலைக்குப் போனால் வேலை கிடைத்தாலும் கூலி கிடைக்காது
  • விடியும் மட்டும் இறைத்தவனும் விடிந்த பின்பு சாலை உடைத்தவனும் சரி
  • விடியும் மட்டும் குரைத்தாலும் வீட்டு நாய் வேட்டை நாய் ஆக முடியுமா?
  • விடியும் மட்டும் மழை பெய்தாலும் ஒட்டாங் கிளிஞ்சில் கரையுமா?
  • விடியும் மட்டும் மழை பெய்தாலும் ஒட்டாஞ்சில்லுக் கரையுமா?(ஒட்டாங் கிளிஞ்சல்.)
  • விடு விடு சங்கிலி, வேப்பஞ் சங்கிலி, விட்டால் குடி கெட்டும் போம்.
  • விடை தனிக்கு அஞ்சாது
  • விண் ஏற தப்பினாலும் கண் ஏறு தப்பாது (பொய்த்தாலும் பொய்க்காது.)
  • விண் காட்டப் போனவன் கண் காட்ட வந்தானாம்
  • விண் பொய்த்தால் மண் பொய்க்கும்
  • விண்டு அழுத பிள்ளையைக் கொண்டு அணைப்பா இல்லை
  • விண்ணாண எங்கே கிண்ணாரம் எங்கே
  • விண்ணு மாலைக்குக் கல்யாணம்; விழுந்து கோட்டா சாம்பலா
  • வின்தொடு கொடுமுடி மேகுவும் வீறளி தென்திசைக் கிரியும்
  • விண் பொய்த்தால் மண் பொய்க்கும்
  • விண் வலிதேச, மண் வலிதோ?
  • விண் விடும் குடிக்கு விண் விடும்; என் பாவி குடிக்கு விண் விடுமா?
  • வித்தாரக் கள்ளி விறகு ஒடிக்கப் போனாளாம்; கற்றாழை முன் கொத்தோடே தைத்ததாம்.
  • வித்தாரக்கள்ளி வெறகொடிக்கப் போனாளாம், கத்தாள முள்ளு கொத்தோட வந்துச்சாம்
  • வித்தாரக்காரன் செத்தால் பிழைக்கான்.
  • வித்தியா சாலை விநோத சாலை.
  • வித்தின்றி விளைச்சல் இல்லை
  • வித்து இருக்கும் இடத்தில் வேர் இருக்க வேண்டும்.
  • வித்து இல்லாத சம்பிரதாயம், மேலும் இல்லை; கீழும் இல்லை.
  • வித்து இல்லாமல் மரம் இல்லை; மரம் இல்லாமல் வித்தும் இல்லை.
  • வித்து இல்லாமல் முளை உண்டாகுமா?
  • வித்து இன்றிச் சம்பிரதம் இல்.
  • வித்துக்கு விட்ட சுரைக்காய்போல.
  • வித்துப் பலம் பத்துப் பலம்.
  • வித்துவான் அருமையை விறகு தலையன் அறிவானா?
  • வித்துவான் அருமையை வித்துவான் அறிய வேண்டுமே.அல்லாமல் விறகு விற்கிறவனா அறியப் போகிறான்?
  • வித்துவான் கத்துவான்.
  • வித்துவான்களுக்கு எது பெரிது?
  • வித்துவான் தனவான்.
  • வித்துவானுக்கு ஏது பரதேசம்? (வேற்று நாடு ஏது?)
  • வித்துவானும் மதயானையும் சரி.
  • வித்துவானை அடித்தவனும் இல்லை; பெற்ற தாயுடன் போனவனும் இல்லை.
  • வித்தை அடிக்கிற கோழிக்கு விலாவில் இருக்கிறதாம் பித்து.
  • வித்தை அடித்தான் தட்டான்; பொன்னிறம் ஆச்சுது கொக்கு
  • வித்தை அடித்தே செத்த பாம்பு ஆடுது.
  • வித்தை அடி மாமி, கொத்துதடி கோழி.
  • வித்தை அடி மாமி, விற்கிறதடி பணியாரம்.
  •  வித்தை அழிக்கிற கோழிக்கு விலாவில் இருக்கிறதாம் பத்து.
  • வித்தை அற்றவன் அழகு, வாசனை இல்லாத முருக்கம்பூப் போல.
  • வித்தை இல்லாத மாந்தர் விலங்கினும் கடையர்.
  • வித்தை உள்ளவன் தூங்கமாட்டான்; விசாரம் உள்ளவனும் தூங்க மாட்டான்.
  • வித்தை உள்ளவன் பெரியவன்.
  • வித்தைக் கள்ளி மாமியார் விறகொடிக்கப் போனானாம்; கற்றாழை முள் கொத்தோடே தைத்ததாம்.
  • வித்தாரக்கள்ளி வெறகொடிக்கப் போனாளாம், கத்தாள முள்ளு கொத்தோட வந்துச்சாம்
  • வித்தைக் கள்ளி, விளையாட்டுக் கள்ளி, பாகற்காய் விற்ற பழங்கள்ளி.
  • வித்தைக்காரப் பெண்பிள்ளை செத்த பாம்பை ஆட்டுகிறாள்.
  • வித்தைக்காரன் தவறி விழுந்தால் அதுவும் ஒரு விளையாட்டு.
  • வித்தைக்காரன் நாய்க்குக் கற்ற வித்தை எல்லாம் தெரியும்.
  • வித்தைக்குச் சத்துரு விசனம் தரித்திரம்.
  • வித்தைக் குதிரைக்குப் புல்லா?
  • வித்தை பதினெட்டும் விழல்.
  • வித்தையில் எளிது சூனியம்.பன்னத்திலே எளிது நீற்றுப் பெட்டி.
  • வித்தையில் வித்தை வகார வித்தை.
  • வித்தை விரும்பு.
  • விதி அற்ற நாய்க்கு வில்லி வீரமாம் தாய் வீடு.
  • விதி அற்ற மாடு கதி வெட்ட புல்லைத் தின்னும்.
  • விதி அற்றவன் வேட்டகத்துக்குப் போவான்.
  • விதி உடையவன் கண்ணுக்கு விளக்காய்த் தெரிந்தது.
  • விதி உள்ள அகமுடையானுக்கு ரதியாக இருப்பாளாம்.
  • விதி எப்படியோ, மதி அப்படி.
  • விதி கெட்டவல் விறகுக்குப் போனால் விறகு கிடைத்தாலும், கட்டக் கொடி கிடைக்காது (யாழ்ப்பாண வழக்கு.)
  • விதித்த விதியை விட வேறு நடக்குமா?(கிடக்க வேறு விதி.)
  • விதிப்பயனை வெல்ல முடியுமா?
  • விதிப்பழத்தை விலை கொடுத்து வாங்குவது போல.
  • விதி பார்த்து வகுத்த விபத்தை விஷ்ணுவாலும் தடுக்க முடியாது.
  • விதி போகிற வழியே மதி போகும்.
  • விதி முடிந்தவனை விரியன் கடிக்கும்.
  • விதியின் பயனே பயன்.
  • விதியின் வழியே மதி செல்லும்.
  • விதியை மதியால் தடுக்கலாமா?
  • விதியை மதியால் வெல்லலாம்.
  • விதியை வெல்லுவார் உண்டோ?
  • விதிவசம் போல் ஆகும்.
  • விதி வலிது.
  • விதி வழி மதி செல்லும்.
  • விதி வழி வந்த நிதி சதி செய்து விடும்.
  • விதை ஒன்று போட்டால் சுரை ஒன்று முளைக்குமா?(போடக்.. காய்க்குமா?
  • விதை பாதி வேலை பாதி
  • விதைக்கு ஏற்ற விளைச்சல்.
  • விதைக்கு விட்டி காய் போல,
  • விதைக் கூடை எடுக்கையில் பட்டி மாடு தொடர்ந்த கதை.
  • விதைக் கோட்டையில் எலியை வைத்துக் கட்டலாமா?
  • விதை நெல்லைத் தின்றவன் விளங்க மாட்டான்.
  • விதைத்ததும் குறுணி, கண்டதும் குறுணி.
  • விதைத்தால் வரகை விதை; சேவித்தால் வடுகனைச் சேவி.
  • விதைப்பதன் முன் வேலி அடை
  • விதை முதல் அகப்பட்டாலும் வேளாண்மையை விடாதே.
  • விதை முந்தியா, மரம் முந்தியா?
  • விதையின் தன்மைதானே விளைச்சலில் வரும்?
  • விதையை அடித்தானாம்; விலவிலே, போய்ப் பட்டதாம்,
  • விதையைக் குற்றித் தின்னு.
  • விதையை விழுங்கிய கோழி போல்
  • விந்து விட்டாயோ, நொந்து கெட்டாயோ?
  • விநயம் இல்லாத வித்தை பயன் இல்லை.
  • விநாச சாலே விபரீத புத்தி.
  • விபசாரம் செய்வாரைச் சுட்டாலும் விடமாட்டார்.
  • விபசாரி என்று விமானம் ஏறினாலும் திருடி என்று தெரு வழிப்போக முடியுமா?
  • வியாச்சியம் சேற்றில் நட்ட கம்பம்.
  • வியாதிக்குப் பத்தியம்: வேதாந்தத்துக்கு வைராக்கியம்.
  • வியாதிக்கு மருந்து உண்டு; விதிக்கு மருந்து உண்டா?
  • வியாதியிலும் மருந்து கொடியது.
  • வியாழன் கூடினால் விவாகம் கூடும்(வியாதியாயினும்.)
  • வியாழன் தெற்கே சூலம்.
  • விரகன் கோசம் கட்டை தட்டிப் போம்.
  • விரதத்திலும் பெரிதோ ஒரு சந்தி?
  • விரதம் கெட்டாலும் சுகம் தக்க வேண்டும்; சுகம் கெட்டாலும் விரதம் தக்க வேண்டும்.
  • விரல் உதவி விருந்தினர் உதவார்.
  • விரல் உரல் ஆனால் உரல் உத்தரம் ஆகாதா?உரல் என்ன ஆகும்?)
  • விரல் கண்ணிலே குத்தினது என்று வெட்டி விடுவார்களா?
  • விரல் சுற்றின் மேல் அம்மி விழுந்ததுபோல்.(உரல் விழுந்தது போல்.)
  • விரல் நக்கி மோர் குடிப்பது போல.
  • விரல் நுழைய இடம் உண்டானால் தலையைப் புக விடலாம்
  • விரல் நுழைய இடம் கொடுத்தால் கூரலை நுழைக்கிறான்.(உலக்கையை, தலையை.)
  • விரல் போகாத இடத்தில் உரல் போகுமா?
  • விரலுக்குத் தகுந்த வீக்கம்.(வீக்கந்தான் வீங்கலாம்.)
  • விரலுக்குமேல் நீணடால் வெட்டி விடவேண்டும் என்கிறாயே!
  • விரலூண்டு இடம் கொடுத்தால் வீடு எல்லாம் கைக் கொள்கிறதா?
  • விரலைக் காட்டி உரலை விழுங்குவான். விரித்த ஜமக்காளம். விடியும் மட்டும் கச்சேரி
  • விரித்து உடுத்தினால் அழுக்குப் படும்.
  • விரித்த உலகில் தெரிந்தவர் சிலர்.
  • விரியன் புரளுகிறது போல.
  • விருத்தாசலம் போனால் திரட் பாவம் போகும்.
  • விருத்தர நாரீ பதிவ்ரதா.
  • விருதுக்காகவா வேட்டை ஆடுகிறது?
  • விருதுகூறி வந்து செடியிலே நுழைகிறது போல.
  • விருதுப்பட்டிக்குப் போன சனியனை வீட்டுக்கும் வந்து விட்டுப்போ என்றானாம்
  • விருதுபட்டிச் சனியனை விலைக்கு வாங்கினது போல.
  • விருந்து இட்டுப் பகையை விளைக்கிறது(இட்டா - பகைமையை.)
  • விருந்து இல்லாச் சோறு மருந்தோடு ஒக்கும்.
  • விருந்து இல்லோர்க்கு இல்லை பொருந்திய ஒழுக்கம்.
  • விருந்துக்காகவா வேட்டை ஆடுவது?
  • விருந்துக்கு அழைத்து விஷத்தைக் கொடுத்தது போல.
  • விடுத்துக்கு நான்; பரியப் பணம் அண்ணளைக் கேள்.
  • விருந்தும் மருந்தும் மூன்று நாள்(வேளை, பொழுது.)
  • விருந்தைப் பண்ணிற் பொருந்தப் பண்ணு.
  • விருப்பத்தினால் ஆகாதது விம்பினால் ஆகுமா?
  • விரும்பினால் வேம்பும் கரும்பு ஆகும்.
  • விருஷ்டியில் விதை மேல்,
  • விரை ஒன்று போட்டால் சுரை ஒன்று முளைக்குமா(விதை .)
  • விரைக்கு விட்ட காய் போல.{விதைக்கு.)
  • விரைக் கோட்டையில் எலியை வைத்துக் கட்டினது போல(விதைக் கோட்டையில் பெருச்சாளி புகுந்தாற் போல.)
  • விரை முந்தியோ மரம் முந்தியோ?{விதை .)
  • விரைவில் கருமம் சிதையும் இடராய் விடும்.
  • வில் அடியால் சாகாதது, கல் அடியால் சரகுமா?
  • வில் அம்பை விடச் சொல் அம்பு கொடியது.
  • வில் அம்போ, சொல் அம்போ?
  • வில் இல்லாதவன் அம்பு தேடுவானேன்?
  • வில்லடிச்சான் கோவிலிலே விளக்கேத்த நேரமில்லையாம், குடமாடிச்சான் கோவிலிலே குத்துவிளக்கேத்த நாதியில்லையாம்
  • வில்லங்கத்தை விலைக்கு வாங்கினாற் போல.
  • வில்லுக்குச் சேரன்; சொல்லுக்குக் கீரன்,
  • வில்லுக்கு விஜயன்; சொல்லுக்கு அரிச்சந்திரன்.
  • வில்லுக்கு விஜயன்; சொல்லுக்குக் கீரன்.
  • வில் வளைந்தால் மோசம் தரும்
  • வில் வளைவதும் பெரியோர்கள் பணிவதும் நல்லதற்கு அடையாளம் அல்ல.
  • விலக்கக் கூடாத துன்பத்துக்கு விசனப்படாதே. விலங்கும் பறவையும் விதித்த கோடு கடவா,
  • விலங்கு வேண்டாம்; குட்டையில் மாட்டு என்றது போல,
  • விலங்கு வேண்டாம்; தொழுவில் இருக்கிறேன்,
  • விலங்கை விட்டுத் தொழுவில் மாட்டிக் கொண்டது போல.
  • விலா இறச் சிரிப்பார்கள்.
  • விலாங்கு மீன் வழுக்கி ஓடுவது போல.
  • விலைக்குக் கொண்டு விருதுக்கு வேட்டை ஆடுகிறது.
  • விலைமகட்கு அழகு மேனி மினுக்குதல்.
  • விலை மோரில் வெண்ணெய் எடுத்துத் தலைமகனுக்குக் கல்யாணம் பண்ணுவான்,
  • விலை மோரில வெண்ணெய் எடுப்பது.
  • விவேகத்தில் மேன்மை அவிவேகத்தை ஒழித்தல்,
  • விழக்குழி பாய்ச்சுகிறது.
  • விழலுக்கு இறைத்த நீர் போல.
  • விழலுக்கு முத்துலை போட்டு இறைத்தேன்.
  • விழிக்கு விழி பாய்ச்சுகிறது
  • விழித்த முகம் நல்ல முகம்.
  • விழித்தவன் கன்று நாகு கன்று; தூங்கினவன் கன்று கடாக்கன்று.
  • விழித்து இருக்க விழியைத் தோண்டினாற் போல.
  • விழியில் குத்தின விரலை அறுப்பார் உண்டோ?
  • விழுகிற சுவரில் கை வைத்தாற் போல.
  • விழுகிற பிள்ளைக்கு அரிவாள்மணையை அண்டல் கொடுத்தாற் போல.
  • விழுங்கின இரகசியம் வயிற்றில் இராது.
  • விழுந்த இடம் சுடுகாடு.
  • விழுந்த இடம் பொழுது; விட்ட இடம் விடுதி.
  • விழுந்தது பாம்பு; கடித்தது மாங்கொட்டை.
  • விழுந்த பிள்ளையை எடுக்க நேரம் இல்லை.
  • விழுந்தவன் எழுந்திருந்தால் வெட்கத்துக்கு அஞ்சிச் சிரிப்பான்.
  • விழுந்தவன் சிரித்தான் வெட்கத்துக்கு அஞ்சி.
  • விழுந்தாரைச் சிரியாத வெந்துக்களும் இல்லை.(பந்துக்களும், யாழ்ப்பாண வழக்கு.)
  • விழுந்தால் சிரிப்பார்; வேடிக்கை பார்ப்பார்.
  • விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்கிறான்.
  • விழுந்து உடுத்தால் அழுக்குத் தெரியும்.
  • விழுந்தும் கரணம் போட்டேன் என்ற கதை.
  • விழுந்து விழுந்து சம்பாதிக்கிறான்.
  • விழுந்து விழுந்து புரண்டாலும் ஒட்டுவதுதான் ஒட்டும்.
  • விள்ளாதது குறையாது; இல்லாதது வராது.
  • விளக்கில் கொளுத்தின பந்தம் போல.
  • விளக்கில் விழும் விட்டிற் பூச்சி போல.(விளக்கில் மொய்த்த விட்டிற் பறவை போல.)
  • விளக்கு இருக்க நெருப்புக்கு அலைவானேன்?
  • விளக்கு இருக்க மின்மினித் தீக் காய்ந்தவாறே.
  • விளக்கு இல்லாத வீட்டில் பேய் குடி இருக்கும்.
  • விளக்கு ஏற்றிக் கூடையால் மறைக்கிறது
  • விளையும் பயிர் முளையில் தெரியும்.

வீ[தொகு]

  • வீட்டைக் கட்டிப் பார், கலியாணத்தைச் செய்து பார்.
  • வீழ்வது தோல்வியல்ல; வீழ்ந்தே கிடப்பதுதான் தோல்வி.

வெ[தொகு]

  • வெட்டிக் கெட்டது தென்னை, வெட்டாமல் கெட்டது முருங்கை
  • வெந்து கெட்டது முருங்கை
  • வெள்ளமே ஆனாலும் பள்ளத்தே பயிர் செய்

வை[தொகு]

  • வைத்தியனுக்குக் கொடுப்பதை வாணியனுக்குக் கொடு.

வெளி இணைப்புக்கள்[தொகு]

Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


Wiktionary
Wiktionary
விக்சனரியில் இருக்கும் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் என்ற சொல்லையும் பார்க்க.