எசுப்பானிய பழமொழிகள்
Jump to navigation
Jump to search
எசுப்பானியா (Spain) என்றழைக்கப்படும் எசுப்பானியா இராச்சியம் ஐரோப்பா கண்டத்தின் தென்மேற்குப்பகுதியில் உள்ள ஐபீரியத் தீவக்குறையில் (தீபகற்பம்) அமைந்துள்ள இறைமையுள்ள ஒரு நாடு. ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடாகவும் இது உள்ளது. இதன் தலைநகரம் மாட்ரிட். இந்நாட்டினரின் மொழி எசுப்பானிய மொழி.
பழமொழிகள்[தொகு]
- அழகுக்கும் கற்புக்கும் இடைவிடாத போர் இருந்தே வரும்.
- ஆடவர் அழகை ஒரு குணமாகப் பார்க்கின்றனர்; பெண்கள் குணத்தை அழகாகப் பார்க்கின்றனர்.
- என் வீட்டுக்கு நானே ராஜா.
- ஒரு காதல் மற்றொன்றை வெளியேற்றிவிடும்.
- ஒவ்வொரு மனிதனும் பொதுமக்களே
- உனக்கு நல்ல மனைவி வேண்டுமானால், அவளை ஞாயிற்றுக் கிழமையில் தேர்ந்தெடுக்காதே
- ஒரு பெண் அழகாயிருப்பதாக நாம் ஒரு முறை சொன்னால், அதையே சயித்தான் அவளிடம் பத்து முறை சொல்வான்.
- ஒரு பெண்ணின் காதல் கூடையிலுள்ள தண்ணீர் போன்றது.
- கடலில் உப்பைத்தான் பெறலாம், பெண்ணிடம் தீமையைத் தான் பெறலாம்.
- கற்புடைய கன்னியும், நொண்டியும் வீட்டிலேயேயிருப்பது மேல்.
- காதலர் மற்றவர் கண்களெல்லாம் அவிந்து விட்டது போல எண்ணுவர்.
- காதலிலும் மரணத்திலும் நம்வலிமை பயனில்லை.
- காதலின் பார்வையில் செம்பு தங்கமாயிருக்கும், ஏழைமை செல்வமாகும்.
- காதல் சுளுக்குப் போன்றது, இரண்டாம் தடவை அது எளிதில் வந்துவிடும்.
- காதல் வெட்கப்பட்டால், அது உண்மையானதன்று.
- கூவுகிற கோழியும், லத்தீன் படித்த பெண்ணும் நல்ல முடிவை அடைய மாட்டார்கள்.
- கெட்ட ஸ்திரீகளைக் காவல் காப்பது வீண் வேலை.
- சாளரக் கம்பிகளின் இடைவழியாகவே காதலுக்கு உயிர் வருகிறது.
- 'சூப்'பிலும் காதலிலும் முதலாவது தான் சிறந்தது.
- செயல்களே காதல், இனிமையான சொற்களல்ல.
- சேவல் தன் குப்பை மேட்டிலிருந்துதான் கூவும், கோழி ஊரெங்கும் சுற்றிக் கூவி வரும்.
- தன் முகத்தைப் பற்றியே பெருமைப்படும் பெண்ணால் வீடு பாழாகும்.
- தன்னையே அதிகமாய்ப் பார்த்துக் கொண்டிருக்கும் பெண் வீட்டை நாசாமாக்குவாள்.
- தேர்ந்தெடுப்பது என்பது காதலில் இல்லை
- நன்றாக உடையணியும் ஒரு பெண் தன் கணவன் வேறு பெண்ணை நாடாமல் காத்துக் கொள்ளமுடியும்.
- நன்றியுள்ள மனிதன் எது சொன்னாலும் நம்பலாம். ஏனெனில், அவன் துரோகம் செய்ய மாட்டான்.
- நெருப்புக்குக் காற்று எப்படியோ, அப்படிக் காதலுக்குக் பிரிவு.
- பெண்கள் கிடைத்ததை மதிக்கமாட்டார்கள், மறுத்ததையே விரும்பி வாடுவார்கள்.
- மரணம் வரும் வரையில் எல்லாம் வாழ்க்கைதான்.
- மூன்று பெண்களும், ஒரு தாயும்- ஆகத் தந்தைக்கு நான்கு சயித்தான்கள்.