கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம்

விக்கிமேற்கோள் இலிருந்து

எவ்வித தணிக்கையும், தடையும் இன்றி கருத்தை ஆக்க, அறிய, வெளிப்படுத்த, கற்பிக்க ஒருவருக்கு இருக்கும் சுதந்திரமே கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் ஆகும். இது அடிப்படை மனித உரிமைகளில் ஒன்று. கருத்து வெளிப்பாடு என்பது பேச்சுச் சுதந்திரம், ஊடகச் சுதந்திரம், சிந்தனைச் சுதந்திரம், சமயச் சுதந்திரம் போன்ற பல்வேறு சுதந்திரங்களுடன் இணையாக முன்னிறுத்தப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  • நீ சொல்லக்கூடிய ஓவ்வோரு சொல்லிலிருந்தும் நான் வேறுபடுகிறேன். ஆனால் அதைச் சொல்லுவதற்கு உனக்கு இருக்க்கூடிய உரிமையை என் கடைசி மூச்சுவரை பாதுகாத்துக்கொண்டிருப்பேன். -வால்டேர்[1]
  • சுதந்திரமுள்ள ஒவ்வோர் அரசும், குடிமக்கள் தங்கள் விருப்பத்தை வெளிப் படுத்துவதற்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று நான் கூறுவேன் -நிக்கோலோ மாக்கியவெல்லி[2]

குறிப்புகள்[தொகு]

  1. து. அரிபரந்தாமன், உயர்நீதிமன்ற நீதிபதி (ஓய்வு) (2017). சிந்தனையாளன் பொங்கல் மலர் 2017. சென்னை: சிந்தனையாளன். pp. 49. 
  2. நாரா. நாச்சியப்பன் (1993). சிந்தனையாளன் மாக்கியவெல்லி. நூல் 149-162. பிரேமா பிரசுரம். Retrieved on 14 ஏப்ரல் 2020.