தீபாவளி
Jump to navigation
Jump to search

தீபாவளி (Deepavali, Diwali) அல்லது தீப ஒளித்திருநாள் என்பது ஐந்து நாட்கள் கொண்டாடப்படுகின்ற பண்டிகையாகும். இது இந்து மதத்தின் மிகவும் பிரபலமான பண்டிகைகளில் ஒன்றாகும். இப்பண்டிகை இந்தியா உட்பட பல நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. சில இடங்களில் வெவ்வேறு நாட்களில் கொண்டாடப்படுகிறது. அதாவது, வாழ்க்கையின் இருளை நீக்கி, ஒளியைக் கொடுக்கும் பண்டிகையாக தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
மேற்கோள்கள்[தொகு]
- "தீபாவளி" என்ற சொல்லுக்கு ஒர் ஏற்பாடு அல்லது விளக்குகளின் வரிசை என்று பொருள். ஒளி என்பது கடவுள், உண்மை மற்றும் ஞானத்திற்கான அடையாளமாகக் கருதப்படுகிறது.
- ஆரியர்கள், திராவிடர்களை ராமர் மற்றும் கிருஷ்ணரின் பிறந்தநாளை தீபாவளி விழாவாகக் கொண்டாடச் செய்தனர். அதேபோல் வடக்கில் இருந்து வந்தவர்கள் ஆகஸ்ட் 15 ஆம் நாள் விடுதலை நாளகாக் கொண்டாடச் செய்தனர். அவ்வளவு தான். இந்த தினத்தைக் கொண்டாடுவதில் வேறு எந்த நன்மையும் பாராட்டத்தக்க காரணமும் இல்லை
- பெரியார் வெ.ராமசாமி (தந்தை பெரியார்) Collected works of Periyar E.V.R, பெரியார் சுய மரியாதை பிரச்சார நிறுவனம், 2005, ப. 502
அயல்நாட்டில் கிறிஸ்மஸைப் போலவே, தீபாவளியும் பரிசுகளை வாங்குவதற்கும் பரிமாறிக்கொள்வதற்கும் உகந்த நேரமாக இந்தியாவில் உள்ளது. பாரம்பரியமிக்க இந்த திருவிழாவின் ஆரம்பகாலங்களில் இனிப்புகள் மற்றும் உலர்ந்த பழங்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன. ஆனால் தற்போது இது வணிக திருவிழாவாக இது மாறியுள்ளது. மேலும், ஆன்மிக பங்களிப்புகளை இது குறைக்கிறதோ எனும் கவலைக்கு வழிவகுக்கிறது.
வெளியிணைப்புகள்[தொகு]
- Also Know About Dhanteras - GuideMyIndia