நாணயம்

விக்கிமேற்கோள் இலிருந்து

நாணயம் என்பது ஒருவரின் நேர்மையான செயல்களாகும். இதுகுறித்த மேற்கோள்கள்:

  • நாணயம் ஒரு முகம் பார்க்கும் கண்ணாடி, அதில் மூச்சுக் காற்றுப் பட்டு, அது அழுக்கடைந்தால் துடைத்துவிடலாம். ஆனால், அது உடைந்துபோனால், அதைப் பழுது பார்க்க முடியாது. -.வால்டர் ஸ்காட்[1]
  • ஒரு மனிதனின் நாணயத்தைப் பாதிக்கக்கூடிய மிகச்சிறிய விஷயங்களிலேகூடக் கவனமாயிருக்க வேண்டும். அதிகாலை ஐந்து மணிக்கும் இரவு ஒன்பது மணிக்கும் உன் சம்மட்டியின் ஓசையை உனக்குக் கடன் கொடுத்தவன் கேட்டால், அவன் உன் கடனை மேலும் ஆறு மாதத்திற்குக் கேளாமலிருப்பான். நீ வேலை செய்துகொண்டிருக்க வேண்டிய நேரத்தில், அவன் உன்னை மேடைப் பந்தாட்டத்திலே கண்டாலும், மதுக்கடையிலே உன் குரலைக் கேட்டாலும், மறு நாளே அவன் தன் கடனைக் கேட்டு ஆளனுப்புவான். - ஃபிராங்க்லின்[1]
  • கடன் வாங்கியவர்களைவிடக் கடன் கொடுத்தவர்களுக்கு ஞாபகம் அதிகம். -ஃபிராங்க்லின்[1]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 236. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=நாணயம்&oldid=21857" இலிருந்து மீள்விக்கப்பட்டது