வால்டர் ஸ்காட்

விக்கிமேற்கோள் இலிருந்து
Scott (1822)

வால்டர் ஸ்காட் ((15 ஆகத்து 1771 – 21 செப்டம்பர் 1832, Walter Scott) என்பவர் ஸ்காட்டிஷ் வரலாற்று புதின ஆசிரியர், கவிஞர், நாடக ஆசிரியர், வரலாற்றாசிரியர் ஆவார்.

கண்ணீர்[தொகு]

  • அன்பு. கண்ணீருடன் கலந்து வரும் பொழுது. அது பெரும் பேறாகும்.[1]

மேற்கோள்கள்[தொகு]

கல்வி[தொகு]

  • நாம் பெறும் கல்வியில் அதிகச் சிறப்பான பாகம் நமக்கு நாமே கொடுத்துக் கொள்வதுதான்.[2]

கவிதை[தொகு]

  • இதயத்தில் நல்லுணர்ச்சிகளை ஏற்படுத்துவதைத் தவிர ஏனையவெல்லாம் பேதமை என்று கருதுவதே கவிஞனின் நோக்கமும் தொழிலுமாகும்.[3]

குறிக்கோள்[தொகு]

  • பனிக்கட்டியில் சிலைகள் செய்து. அவை கரைந்து போவதைக் கண்டு நாம் கண்ணிர் பெருக்குகின்றோம்.[4]

நம்பிக்கை[தொகு]

  • ரோஜா மலரும்போதே அழகு மிகுந்திருக்கும்; அச்சம் அகலும்போது அரும்பும் நம்பிக்கையே அதிக உள்சானம் அளிப்பதாகும்.[5]

நாணயம்[தொகு]

  • நாணயம் ஒரு முகம் பார்க்கும் கண்ணாடி, அதில் மூச்சுக் காற்றுப் பட்டு, அது அழுக்கடைந்தால் துடைத்துவிடலாம். ஆனால், அது உடைந்துபோனால், அதைப் பழுது பார்க்க முடியாது.[6]

நேர்மையின்மை[தொகு]

  • ஏமாற்றிப் பழக ஆரம்பிக்கும்பொழுது எவ்வளவு தூரம் நம்பக்கூடிய பொய்களைச் சொல்லத் தெரியாமல் திண்டாடுகிறோம்![7]

படித்தல்[தொகு]

  • கற்பவை கற்கவும், அஞ்சுவதஞ்சவும், நிச்சயமாக நன்மை வரும் என்று நம்பவும், நன்மை அருளும்படி பிரார்த்திக்கவும், நன்மை செய்ய முனையவும் கொடுத்து வைத்தவரே பேரின்பம் துய்ப்பவர். தர்க்கம் செய்யவேண்டும் என்பதற்காகவோ ஏளனம் செய்ய வேண்டும் என்பதற் காகவோ கற்பவர் பிறவாமலே இருந்தால் எத்துணை நன்மையாயிருக்கும்![8]

மரபு வழி[தொகு]

  • ஐரோப்பாவின் அரச பரம்பரையைப் பார்த்தால், எல்லாம் ஆதியில் வெற்றிகரமான ஒரு போர் வீரனில் போய் முடியும் என்பதைத் தவிர வேறு என்ன பார்க்கிறோம்?[9]

குறிப்புகள்[தொகு]

  1. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 151. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  2. பொ. திருகூடசுந்தரம் (1959). அறிவுக் கனிகள்/கல்வி. நூல் 150-157. காந்தி நிலையம். Retrieved on 13 மே 2019.
  3. பொ. திருகூடசுந்தரம் (1959). அறிவுக் கனிகள்/கவிதை. நூல் 159-163. காந்தி நிலையம். Retrieved on 13 மே 2019.
  4. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 106-107. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  5. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/வாழ்க்கைக்கு நம்பிக்கை. நூல் 80- 82. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  6. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 236. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  7. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/வஞ்சகம். நூல் 74- 75. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  8. பொ. திருகூடசுந்தரம் (1959). அறிவுக் கனிகள்/படித்தல். நூல் 168-171. காந்தி நிலையம். Retrieved on 13 மே 2019.
  9. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 256. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=வால்டர்_ஸ்காட்&oldid=37606" இலிருந்து மீள்விக்கப்பட்டது