வினைத்திட்பம்

விக்கிமேற்கோள் இலிருந்து

வினைத்திட்பம் என்பது மேற்கொண்ட காரியத்தை செய்து முடிக்கும் மன உறுதி ஆகும். இது குறித்த மேற்கோள்கள்

  • வெற்றியின் இரகசியம் எடுத்த காரியத்தில் நிலையாக நிற்றல். - டிஸ்ரேலி[1]
  • உறுதியுள்ளவன், உள்ளத்தில் திடமுள்வன் உலகைத் தனக்கு வேண்டிய முறையில் அமைத்துக்கொள்கிறான். - கதே[1]
  • தளராத நரம்பு, மாறாத பார்வை, சிதறாத சிந்தனை, தயங்காத குறிக்கோள் - இவைகளே வெற்றிக்குரிய ஆசிரியர்கள். - பழைய வாக்கியம்[1]
  • ஒரு தோல்வியைக் கண்டு, நீ நிறைவேற்றக் கருதியதைக் கைவிட வேண்டாம். - ஷேக்ஸ்பியர்[1]
  • நான் வழியைக் கண்டுபிடிப்பேன் அல்லது நானே வழியை உண்டாக்கிக்கொள்வேன். - சர் பி. ஸிட்னி[1]
  • பெரிய காரியங்கள் வல்லமையால் நிறைவேறவில்லை. விடாமுயற்சியாலேயே நிறைவேறியுள்ளன. - ஜான்ஸன்[1]
  • எதிலும் கஷ்டமில்லை. தேடினால் அகப்படும். - ஹெர்ரிக்[1]
  • வெற்றிக்குரிய நிபந்தனைகள் எளிதானவை. நாம் ஓரளவு கஷ்டப்பட்டு உழைக்க வேண்டும்; எப்பொழுதும் நம்பிக்கை கொள்ள வேண்டும் பின்புறம் திரும்பிப் போய்விடக்கூடாது. - ஸிம்ஸ்[1]
  • பொறுமையோடு இடைவிடாமல் முயற்சி செய்பவனுக்கே மகுடம் சூட்டப்பெறும். - ஹெர்டர்[1]
  • உன்னதமான ஒவ்வொரு வேலையும் முதலில் முடியாததாகவே தோன்றும். - கார்லைல்[1]
  • வினைத்திட்டம் என்பது ஒருவன் மனத்திட்பம்;
    மற்றைய எல்லாம் பிற. - திருவள்ளுவர்[1]
  • கலங்காது கண்ட வினைக்கண் துலங்காது
    தூக்கம் கடிந்து செயல். - திருவள்ளுவர் [1]
  • துன்பம் உறவரினும் செய்க, துணிவாற்றி
    இன்பம் பயக்கும் வினை. -திருவள்ளுவர்[1]

குறிப்புகள்[தொகு]

  1. 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 1.11 1.12 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 315-316. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=வினைத்திட்பம்&oldid=36150" இலிருந்து மீள்விக்கப்பட்டது