வறுமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"படிமம்:Thamizhar.jpg|thumb|right|250px|வறும..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
சி வி. ப. மூலம் பகுப்பு:பொருளியல் சேர்க்கப்பட்டது |
||
வரிசை 21: | வரிசை 21: | ||
== குறிப்புகள் == |
== குறிப்புகள் == |
||
{{Reflist}} |
{{Reflist}} |
||
[[பகுப்பு:பொருளியல்]] |
08:39, 27 சூன் 2019 இல் நிலவும் திருத்தம்
வறுமை என்பது, உணவு, உடை, உறைவிடம், பாதுகாப்பான குடிநீர், கல்வி பெறும் வாய்ப்பு, பிற குடிமக்களிடம் மதிப்புப் பெறுதல் போன்றவை உட்பட்ட, வாழ்க்கைத் தரத்தைத் தீர்மானிப்பவற்றை இழந்தநிலை ஆகும்.
மேற்கோள்கள்
- தான் செல்வன் என்று அறியாதவனே வறிஞன். -பால் ரிச்சர்ட்
- உலக உடைமைகளை ஒரு பொருளாக மதியாதவரே உண்மையான செல்வர். -பால் ரிச்சர்ட்
- வறிஞர் என்பவர் கொஞ்சமாக உடையவர் அல்லர். அதிகமாக ஆசைப்படுபவரே யாவர். -ஆவ்பரி
- வறுமையினும் பெருங்கேடுமில்லை; செல்வத்தினும் உயர்ந்த நன்மையுமில்லை. -கதே
- வறுமையே தீமையிற் தீமையும், குற்றத்திற் கொடியதுமாகும். -பெர்னார்ட்ஷா
- வறுமையை நீக்க சதாகாலமும் பாடுபடுகிறவன் சன்மார்க்க அபிவிருத்தி காண முடியாது. -மாஜினி
- எவன் பாக்கியசாலி? மண் குடிசையில் இருந்து கொண்டு மாளிகையைக் கண்டுலயித்து நிற்பவனே. மாளிகையில் வாழ்ந்தும் அதைக் கண்டுலயித்து நிற்க கொடுத்து வைக்காதவன் பாக்கியசாலி அல்லன். - ரஸ்கின்
- யோக்கியமான வறிஞர் சில சமயமேனும் வறுமையை மறந்திருக்க முடியும். ஆனால் யோக்கியமான செல்வரோ வறுமையை ஒரு நாள் கூட மறந்திருக்க முடியாது. -செஸ்டர்ட்டன்
- செல்வமே வறுமைக்குக்காரணம், குவியல் உயர உயர குழி ஆழமாகிக்கொண்டே போகும். ஒருவனுடைய மிதமிஞ்சிய ஊண் மற்றொருவனுடைய பட்டினியாகும். -பால் ரிச்சர்ட்
- கிறிஸ்து வறுமையை ஒரு அறமாக வகுத்தார். கிறிஸ்தவர் அதை ஒரு குற்றமாகக் கருதுகின்றனர்; ஆனால் வருங்காலத்தவரோ செல்வத்தையே ஒரு குற்றமாக இகழ்வர். -பால் ரிச்சர்ட்
- இயேசு கூறும் அதர்மச் செல்வம் எது? அனைவர்க்கும் சொந்தமாயிராத சகல செல்வமும் அதர்மச் செல்வமேயாகும். -பால் ரிச்சர்ட்
- குறையாத செல்வமும் குலையாத சமாதானமும் கோழைகளைக் கோடிக்கணக்காய்ப் பெற்றுத்தள்ளும். வறுமையே என்றும் மனவுறுதியின் தாய். -ஷேக்ஸ்பியர்
- வறுமைதான் கலாதேவியின் பிதிரார்ஜிதம். - பர்ட்டன்
- வறுமை என்பது அஞ்சியவரை அடிக்கவரும் போக்கிரியாகும். ஆனால் அஞ்சாமல் எதிர்த்து நின்றால் அது நல்ல குணமுடையதே. - தாக்கரே
- வறிஞரே பாக்கியசாலிகள். ஏனெனில் அவரோடுதான் வறிஞர் எப்பொழுதும் வதிந்து கொண்டிருப்பதிலர். -செஸ்டர்ட்டன்
- நாணங்கொள்ள வேண்டிய விஷயம் . வறிஞனாயிருப்பதன்று, வறிஞனாயிருக்க நாணங்கொள்வதே. -பழமொழி
- அனேக சமயங்களில் வறுமை ஆடம்பரங்களிலும் அளவுகடநத செலவுகளிலும் ஒளித்து வைக்கப்படும். -ஜாண்ஸன்