குற்றமுள்ள நெஞ்சு

விக்கிமேற்கோள் இலிருந்து

குற்றமுள்ள நெஞ்சு குறித்த மேற்கோள்கள்

  • குற்றமே சோகத்தின் நரம்பு. - புஷ்னெல்[1]
  • குற்றமான செயல் என்ற உடலிலிருந்து பயங்கள். பழைய நினைவுகளாகிய ஆயிரம் ஆவிகள் கிளம்பி வருகின்றன. - வோர்ட்ஸ்வொர்த்[1]
  • குற்றத்தைத் தவிர, இயற்கையிலுள்ள மற்ற எல்லாத் துயரங்களும் சேர்ந்து உடனே வந்தாலும் நாம் தாங்கலாம். - ஷேக்ஸ்பியர் [1]
  • நெஞ்சிலே குற்றமுள்ளவர்கள் ஒவ்வொரு கண்ணும் தங்களையே பார்ப்பதாக எண்ணுவர். -ஷேக்ஸ்பியர்[1]
  • குற்றமுள்ள நெஞ்சு சந்தேகத்தால் குறுகுறுத்துக்கொண்டேயிருக்கும் திருடன் ஒவ்வொரு செடியையும் ஓர் அதிகாரி யென்று அஞ்சுவான். - ஷேக்ஸ்பியர்[1]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 163-164. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=குற்றமுள்ள_நெஞ்சு&oldid=21025" இலிருந்து மீள்விக்கப்பட்டது