கேலி

விக்கிமேற்கோள் இலிருந்து

ஏளனம், பரிகாசம், கேலி குறித்த மேற்கோள்கள்.

  • துன்பம் நேர்ந்த காலத்தில் நல்ல கேலிப் பேச்சு உணவும் பானமும் போன்றது. - வேர்[1]
  • கேலி செய்வதில், செய்தவனே முதலில் சிரிக்கும்படி ஏற்பட்டால், அதன் முக்கியம் போய்விடும். - ஷில்லர்[1]
  • சாதாரணமாக ஒரு முறை கேலி பேசுவது நல்லது. ஆனால், கேலியைத் தொழிலாக வைத்துக்கொள்ளக்கூடாது. - ஃபுல்லர்[1]
  • கேலியைக் கண்டு பயப்பட வேண்டாம் உன்மீது ஒருவன் உப்பை அள்ளிப் போட்டால், உன்மீது புண்கள் இருந்தாலன்றி, உனக்கு ஒரு தீங்கும் நேராது. - ஜூனியஸ்[1]
  • வேடிக்கைப் பேச்சால் அடிக்கடி ஒரு நண்பனை இழக்க நேரும். ஆனால், அது பகைவனை உண்டாக்காது. - ஷிஸிம்மன்ஸ்[1]
  • கேலியின் பெருமை கேட்பவரின் செவியைப் பொறுத்தது. ஒரு போதும் சொல்பவர் நாவில்லை. - ஷேக்ஸ்பியர்[1]
  • சிரித்து முடிந்த பிறகு கேலிப் பேச்சை மதிப்பிடு. - டபுள்யு. லாயிட்[1]
  • கேலி பேசுவதில் எச்சரிக்கையாயிருக்கவும் கேலியால் பலர் பெரு நஷ்டமடைந்துள்ளனர்.[1]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 164-165. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=கேலி&oldid=21049" இலிருந்து மீள்விக்கப்பட்டது