சிந்தனை

விக்கிமேற்கோள் இலிருந்து

சிந்தனை என்பது நம் மனதில் தோன்றுவதாகும். சிந்தனைக் குறித்த தேற்கோள்கள்

சார்லி சாப்ளின்[தொகு]

  • நமது அறிவு யார் மீதும் நம்மை நம்பிக்கையற்றவர்களாக ஆக்கிவிட்டது. நமது புத்திசாலித்தனம் கடின மனம் கொண்டவர்களாகவும் இரக்கமற்றவர்களாகவும் நம்மை மாற்றிவிட்டது.
  • நாம் மிக அதிகளவு சிந்திக்கிறோம். ஆனால், மிகமிகக் குறைவான அளவுக்கே அக்கறைகொள்கிறோம்.
  • அறிவுக்கூர்மையை விட நமக்கு அதிகம் தேவை இரக்க உணர்வும் கண்ணியமுமே.

அப்துல் கலாம்[தொகு]

  • சிந்திக்கத் தெரிந்தவனுக்கு ஆலோசனை தேவை இல்லை, துன்பங்களை சந்திக்கத் தெரிந்தவனுக்கு வாழ்க்கையில் தோல்வியே இல்லை.

பிறர்[தொகு]

  • ஆன்மா தானே தன்னுடன் பேசிக்கொள்வது சிந்தனை. -பிளேட்டோ[1]
  • இறுதியில், சிந்தனையே உலகை ஆள்கின்றது. - ஜே. மக்கோஷ[1]
  • வெறும் வளர்ச்சி மனிதனாக்குவதில்லை. சிந்தனைதான் மனிதனை உருவாக்குகின்றது. - ஐஸக் டெலர்[1]
  • தங்கத்தைப் போல் சிந்தனையாளர் அரிதாகவே இருப்பர் - லவேட்டர்[1]
  • உண்மையில் சிறந்த சிந்தனைகள் யாவும் முன்பே பல்லாயிரம் தடவைகள் சிந்திக்கப்பெற்றவையாகும். ஆனால், அவைகளை நம் சொந்தமாக்கிக்கொள்வதற்கு. நாம் மறுபடி அவைகளை நேர்மையாகச் சிந்தனை செய்ய வேண்டும். பிறகு, அவை அறுபவத்துடன் வேரூன்றிவிடுகின்றன. -கதே[1]
  • சிந்தனை இல்லாத படிப்பு பயனில்லாத உழைப்பு: படிப்பில்லாத சிந்தனை ஆபத்தானது. - கன்ஃபூஷியஸ்[1]
  • வெளிப்படையான செயல்களைவிடச் சிந்தனைகள் மனிதருடைய பண்பாட்டைக் காட்டுகின்றன. - புளுமெர்[1]
  • செயல் திறன் வாய்ந்தவர்கள். தங்களை அறியாமலே சிந்தனையாளர்களின் கருவிகளாகவே விளங்குகின்றனர். - ஹீய்ன்[1]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 182. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=சிந்தனை&oldid=24393" இலிருந்து மீள்விக்கப்பட்டது