நட்பு

விக்கிமேற்கோள் இலிருந்து

திருவள்ளுவர்[தொகு]

நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்
பின்னீர பேதையார் நட்பு.[1]

வளர்பிறை சந்திரன் போல வளர்வது பண்பு நிறைந்தவருடன் கொள்ளும் நட்பு. தேய்பிறை சந்திரன் போலத் தேய்வது அறியாமையில் உழல்பவருடன் கொள்ளும் நட்பு.

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென் றிடித்தற் பொருட்டு.[2]

நட்பு என்பது நகுதலுக்காக (சிரித்தல், பொழுது போக்குதல் (enjoyment)) அல்ல. நண்பர் தவறு செய்ய முற்படும் போது அதை கண்டிப்புடன் சுட்டிக்காட்டுதலே நட்பாகும்.

புணர்ச்சி பழகுதல் வேண்டா வுணர்ச்சிதா
னட்பாங் கிழமை தரும்.[3]

கூடிப் பழகுதலும், அடிக்கடி சந்தித்தலும், ஒருவரையொருவர் விசாரித்தலும் மட்டுமே நட்பாகிவிடாது. கூடிப் பழகாவிட்டாலும், மனதால், உணர்ச்சியால் ஒன்றுபடுவதே உண்மையான நட்பு

முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்
தகநக நட்பது நட்பு.[4]

முகத்தைப் பார்த்து சிரித்துக் கொண்டால் மட்டுமே அது நட்பாகிவிடாது. நெஞ்சத்தால், உள்ளத்தால் ஒன்றுபடுதலே உண்மையான நட்பு.

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு.[5]

உடல் மேல் உடுத்தியிருக்கும் ஆடை நழுவும் போது உடனே கையானது விரைந்து சென்று நழுவும் ஆடையை சரி செய்யும். அது போல் நண்பர் துன்பப்படும் போது விரைந்து சென்று அவர் துன்பத்தைக் களைவதே உண்மையான நட்பு.

பிறர்[தொகு]

  • நேர்மையானவர்களிடம் வைக்கும் நட்பு. உண்மையானவர்களிடம் கொள்ளும் நட்பு, எதையும் பொறுமையாக, கூர்ந்து நோக்குபவர்களாக உள்ள சுபாவமுடையோர் நட்பு என்றும் நன்மையையே தரும்! -கான்பூசியசு[6]
  • தானென்ற அகந்தையுடன் தான்தோன்றியாகத் திரிபவன் நட்பு, ஆட்சி செய்யும் அதிகாரத் தோரணையர் நட்பு; 'நா' அடக்கம் இல்லாதவரின் நட்பு, இந்த சுபாவமுடையோர் நட்பு என்றும் நாசமே தரும். -கான்பூசியசு[6]
  • முகநகப் பழகாதே! அகநகப் பழகும்போது, அந்த நண்பனை அன்புடன் கண்டிக்கத் தயங்காதே! உனது கண்டிப்புக்கு அவன் இணங்காவிட்டால் அவனை விட்டு அகன்று விடு அதற்காக, நீ பழிபாவங்களுக்கு ஆளாகாதே. -கான்பூசியசு[6]
  • வகுப்பில் இரண்டு கெட்டிக்காரர்கள் இருந்தால், இரண்டு பேர்களுக்கும் நட்பு ஏற்படுவது இயற்கை; பகைமை ஏற்படுவதும் சகஜம். இவை இரண்டும் அற்று இருப்பது விதிக்கு விலக்கு. -புதுமைப்பித்தன்[7]
  • மூன்று நண்பர்கள் இருந்து, அவர்களை இழந்தவனுக்கு நீ நான்காவது நண்பனாகச் சேர வேண்டாம்- -லவேட்டர்[8]
  • வாழ்க்கைப் பாதையில் சென்றுகொண்டிருக்கையில் ஒரு மனிதன் புதிய நண்பர்களைப் பெறாவிட்டால், அவன் விரைவிலேயே தனியாக விடப்படுவான். - ஸான்ஸன்[8]
  • முன் கவனமுள்ள ஒரு நண்பனைப்போல வாழ்க்கையில் வேறு பாக்கியமில்லை. - யூரிபிடிஸ்[8]
  • ஆடவன் பெண்ணிடம் கொள்ளும் காதல் சாதாரணமானது. இயல்பானது. ஆரம்பத்தில் அது உணர்ச்சியால் ஏற்படுவது. ஒருவன் தானாகத் தேர்ந்து ஏற்படுத்திக்கொள்வதன்று. ஆனால் மனிதனுக்கு மனிதன் அமைத்துக்கொள்ளும் உண்மையான நட்பு எல்லையற்றது. நித்தியமானது. -பிளேட்டோ[8]
  • செல்வ நிலையைப் பார்க்கினும் வறுமையிலுள்ள நண்பனிடம் குறித்த நேரம் தவறாமல் நீ செல்லவேண்டும். - கிலோ[8]
  • நட்பு, மாலை நிழல் அது வாழ்க்கைக் கதிரவன் அஸ்தமிக்கும் பொழுது வலிமையடையும். - லாக்பான்டெயின்[8]
  • பரிசுகள் கொடுத்து நண்பர்களைச் சேர்க்காதே நீ கொடுப்பது நின்றால், அவர்கள் அன்பு செலுத்தாமல் நின்றுவிடுவர். -ஃபுல்லர்[8]
  • வாழ்க்கை பல நட்புறவுகளாகிய கோட்டைகளால் பாதுகாப்புப் பெற வேண்டும். அன்பு கொள்வதும், அன்பு பெறுவதும் வாழ்க்கையில் முதன்மையான இன்பங்கள். -ஸிட்னி ஸ்மித்[8]
  • நம்மைப் பாராட்டி மதிப்பதைவிட நம்மிடம் அதிகமாக அன்பு செலுத்தி, நமது பெரிய வேலையில் உதவி செய்பவன் நம் நண்பன். -சான்னிங்[8]
  • ஒரு நண்பனை இழத்தல் ஓர் அங்கத்தை இழப்பது போன்றது. காலம் புண்ணின் வேதனையைக் குணப்படுத்திவிடும். ஆனால், அந்த நஷ்டத்தை ஈடு செய்ய முடியாது. -ஸதே[8]

நண்பர்கள் பற்றிய பொன்மொழிகள்[தொகு]

• நட்பு என்பது நமது ஆரோக்கியம் போன்றது. அதை இழந்த பிறகுதான் அதன் அருமையை உணர்வோம்.

• புத்தகங்கள்தான் நம்முடன் பேசும் மெளன நண்பர்கள்.

• எந்த ஒரு காயத்திற்கும் நண்பன் மருந்தாவான். ஆனால் நண்பன் ஏற்படுத்தும் காயத்திற்கு மருந்தே இல்லை.

• உன் நண்பனுக்காக எதை வேண்டுமானாலும் விட்டுக் கொடு. ஆனால் ஒரு போதும் நண்பனை மட்டும் விட்டுக் கொடுத்து விடாதே.

• வாழ வைப்பவன் இறைவன், வாழத் தெரிந்தவன் மனிதன், விழ வைப்பவன் துரோகி, தூக்கி விடுபவன் நண்பன்.

• உரிமை கொண்டாடும் உறவை விட, உறவைக் கொண்டாடும் நட்பே சிறந்தது.

• உன் நண்பர்களைக் காட்டு.. உன்னைப் பற்றிச் சொல்கிறேன்.

• பெருமைக்காரன் கடவுளை இழப்பான், பொறாமைக்காரன் நண்பனை இழப்பான், கோபக்காரன் தன்னையே இழப்பான்.

• நமது நண்பர்கள் தான் நமது உண்மையான சொத்துக்கள்.

• வேறு எதுவும் கிடைக்காவிட்டாலும் நீ எங்கிருந்தாலும் உன் நண்பன் உன்னை அடைவான்.

• ஒவ்வொரு நண்பர்களும் புதிய உலகத்தின் வாயிற்கதவுகள்.

• சிறந்த நண்பர்களாக நிறைய நாட்கள் பிடிக்கும்.

• உன்னைப் பற்றி முழுதாக அறிந்திருந்தும் உன்னை விரும்புபவனே உன் நண்பன்.

• ஒரு சில சமயம் உன் நண்பர்களை நீ தேர்ந்தெடுக்கிறாய். சில சமயங்களில் அவர்கள் உன்னைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.

• நமது வாழ்க்கையில் பலர் கடந்து செல்கின்றனர். ஆனால் நண்பர்கள்தான் அழியாத சுவடுகளை ஏற்படுத்திவிடுகின்றனர்.

• புதியவர்கள்தான் நண்பர்களாகின்றனர். ஆனால் அந்த காலம் வரும் வரை காத்திருக்க வேண்டும்.

• புதியவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளுங்கள். பழைய நண்பர்களையும் தொடர்பில் வையுங்கள். புதியவர்கள் வெள்ளி என்றால், பழையவர்கள் தங்கம்.

சான்றுகள்[தொகு]

  1. திருக்குறள் 782
  2. திருக்குறள் 784
  3. திருக்குறள் 785
  4. திருக்குறள் 786
  5. திருக்குறள் 788
  6. 6.0 6.1 6.2 என். வி. கலைமணி (2000). கன்பூசியஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள். நூல் 7-25. சாந்தி நிலையம். Retrieved on 7 ஏப்ரல் 2020.
  7. முல்லை பிஎல். முத்தையா (1998). புதுமைப்பித்தன் உதிர்த்த முத்துக்கள். நூல் 29. முல்லை பதிப்பகம். Retrieved on 22 ஏப்ரல் 2020.
  8. 8.00 8.01 8.02 8.03 8.04 8.05 8.06 8.07 8.08 8.09 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 226-227. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.

வெளி இணைப்புக்கள்[தொகு]

நட்பு பற்றிய மேற்கோள்கள்

நண்பர்கள் தின மேற்கோள்கள்

Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


Wiktionary
Wiktionary
விக்சனரியில் இருக்கும் நட்பு என்ற சொல்லையும் பார்க்க.
"https://ta.wikiquote.org/w/index.php?title=நட்பு&oldid=36860" இலிருந்து மீள்விக்கப்பட்டது