நாவடக்கம்

விக்கிமேற்கோள் இலிருந்து

நாவடக்கம் குறித்த தேற்கோள்கள்


  • பேசாத மொழி உறையிலுள்ள வாள். பேசிவிட்டால் வாளைப் பிறன் கையில் கொடுத்து விடுகிறாய். -குவார்ல்ஸ்[1]
  • முட்டாளின் உயர்ந்த ஞானம் மெளனம். அறிஞனின் பெரிய சோதனை பேச்சு. -குவார்ல்ஸ்[1]
  • வாள் தரும் புண்ணினும் நா தரும் புண்ணே கொடியது. வாள் தரும் புண் உடலை மட்டுமே பாதிக்கும், நா தரும் புண்ணோ ஆன்மாவையும் பாதித்துவிடும். -பித்தகோரஸ்[1]
  • இதயமே தீயனவற்றின் உற்பத்திசாலை, தீயனவற்றை விற்குமிடம் நா. -லெய்ட்டன்[1]
  • உபயோகிக்க உபயோகிக்க அதிகக் கூர்மை பெறும் ஆயுதம் தீய நா ஒன்றே. -இர்விங்[1]
  • அறிவு பெற விரும்பினால் நாவை அடக்கும் அறிவைப் பெறுவாய். -லவாட்டர்[1]
  • நாவைப் பரிசோதித்து வைத்தியர் உடல் நோயை அறிவர். அறிஞர் ஆன்ம நோயை அறிவர். -ஜஸ்ட்டின்[1]
  • பிறர் நாவை தாம் அடக்கமுடியாது; ஆனால் பிறர் மொழிகளை நாம் அலட்சியம் செய்யமுடியும். -கேட்டோ[1]
  • மூடனுக்கு 'மேளனமாயிரு' என்பதைவிட உயர்ந்த உபதேசம் கிடையாது. அதன் நன்மையை அறிந்து விட்டால் அவன் மூடனாயிரான். -ஸா அதி[1]
  • மெளனம் என்பது மூடர்கள் பெற வேண்டிய அறிவு. அறிஞர் குணங்களில் ஒன்று. -பாய்லோ[1]
  • சகல குணங்களிலும் மெளனம் சிறந்ததாகும். அதன் மூலம் பிறர் குறைகளை அறியவும் நம் குறைகளை மறைக்கவும் முடியும். -ஜீனோ[1]
  • ஒருவனைச் சந்தித்தால் அவன் வாய் திறவாதிருந்தால் அவனை அறிவுமிகுந்தவன் என்று எண்ணுவேன். இரண்டாம் முறையும் பேசாதிருந்தால் ஜாக்கிரதை உடையவன் என்று கருதுவேன். ஆனால் மூன்றாம் முறையும் மெளனம் சாதித்தால் அறிவு சூன்யம் என்று சந்தேகிப்பேன். -கோல்ட்டன்[1]
  • இரண்டு காதிருந்தும் ஒரு நாவே இருப்பதால் பேசுவதைவிடக் கேட்பதே அதிகமாயிருக்க வேண்டும். -பழமொழி[1]
  • இன்சொல் கூறுதல் எளிதே. ஆனால் தீயசொல் கூறாதிருக்க மெளனம் ஒன்றே தேவை. அதற்கு விலையொன்றும் தரவேண்டியதில்லை. -டிலட்ஸன்[1]
  • அறிவு,மெளனம் கற்பிக்கும்; அன்பு பேசக் கற்பிக்கும். -ரிக்டர்[1]
  • அறிவுள்ளவனே நாவைக் காக்கும் ஆற்றலுள்ளவன். -லுக்காஸ்[1]
  • மொழியாத மொழி ஒருநாளும் தீங்கு செய்வதில்லை. -காஸத்[1]
  • காலமறிந்து மெளனமாயிருத்தல் கடினமான பாடமே. ஆனால், வாழ்வில் அறியவேண்டிய பாடங்களில் அதுவும் ஒன்றாகும்.- செஸ்ட்டர்பீல்டு[1]
  • மெளனமாய் இருக்க முடியாதவன் பேசுவது எப்படி என்பதை அறியான். செய்வது எப்படி என்பதையோ, அதை அறியவே மாட்டான். -லவாட்டர்[1]
  • அறிஞர் சில மொழிகளில் பல கூறிவிடுவர். மூடர் பலமொழிகளில் சிலவே கூறுவர். -ரோஷிவக்கல்டு[1]
  • விஷயமில்லாத பொழுது விஷயமில்லை என்பதை வெளிக் காட்டாதவன் பாக்கியவான். - ஜார்ஜ் எலியட்[1]
  • எறும்பைப்போல் உபதேசிப்பவர் யாருமில்லை; ஆனால் எறும்போ பேசுவதே இல்லை. -பிராங்க்ளின்[1]
  • பயனில் சொல்லுக்குப் பொறுப்பாவதுபோல் பயனில் மெளனத்துக்கும் பொறுப்பாவோம். -பிராங்க்ளின்[1]
  • நா தான் மனிதனிடமுள்ள நல்ல அம்சம் கெட்ட அம்சமும் அதுவேதான். அது நம் வசமானால் அதைவிட உயர்ந்த பொருளில்லை. நாம் அதன் வசமானால் அதைவிடத் தீய பொருளில்லை. -அனார்காரிஸ்[1]
  • பேச்சு பெரியதே. ஆனால் மெளனம் அதனினும் பெரியதாகும். -கார்லைல்[1]
  • எங்கும், எப்போதும், எவரிடமும் நாவடக்கத்தோடு நடந்து கொள்ளவேண்டும். நமது முன்னோர்கள் அவ்வாறு நடந்து காட்டியே வாழ்ந்தார்கள். நாமும் அப்படித் தானே நடக்க வேண்டும்? இது உலகியல். -கான்பூசியசு[2]
  • அதிகமாக வாத்தைகளைக் கொட்டாதே; அதிகப்படியான குற்றங்களை அது உருவாக்கி விடும்! அது போலவே ஒரே நேரத்தில் பல காரியங்களில் மூக்கை நுழைக்காதே. சூழ்நிலை இடையூறுகள் உன்னைச் சூழ்ந்து கொள்ளும். -கான்பூசியசு[2]

குறிப்புகள்[தொகு]

  1. 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 1.11 1.12 1.13 1.14 1.15 1.16 1.17 1.18 1.19 1.20 1.21 1.22 1.23 1.24 என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/நா' அடக்கம். நூல் 87- 88. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  2. 2.0 2.1 என். வி. கலைமணி (2000). கன்பூசியஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள். நூல் 7-25. சாந்தி நிலையம். Retrieved on 7 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=நாவடக்கம்&oldid=18796" இலிருந்து மீள்விக்கப்பட்டது