விக்கிமேற்கோள்:இன்றைய மேற்கோள்/ஆகஸ்ட் 20, 2014

விக்கிமேற்கோள் இலிருந்து


ஒரு படைப்பாளியும் மனிதனே. இன்னும் சொல்லப் போனால், மற்ற மனிதர்களைவிட சற்று முழுமை பெற்ற மனிதன், தன் வாழ்க்கைச் சூழலிலிருந்தும், அதோடு பின்னிப் பிணைந்திருக்கும் அன்றாடக் காரியங்களில் இருந்தும் முழுமையாகத் தன்னைப் பிரித்துக் கொள்வதென்பது அவனால் முடியாத காரியம். எனவே எந்த ஒரு படைப்பிலும், ஏதோ ஒரு வகையில் இந்த சமூகப் பிரக்ஞை என்பது இடம் பெற்றே தீரும்.தனது படைப்புகள் மூலம், அந்த சமூகப் பிரச்சனைகள் பற்றிய பிரக்ஞையை மக்களிடையே ஏற்படுத்துவதுதான் படைப்பாளி பிரச்சனைகளைத் தொடுவதன் நோக்கம். பிரக்ஞையடைந்த மக்கள் தமக்கான தீர்வுகளைத் தாமே சிந்தித்து முடிவு செய்வார்கள்.

~ சத்யஜித் ராய் ~