நூற் சுவை

விக்கிமேற்கோள் இலிருந்து

நூற் சுவை குறித்த மேற்கோள்கள்

  • நல்ல மேற்கோள் அறிவாளி கை வைர மோதிரம், அறிவிலி கைக் கூழாங்கல். -ஜே.ரூ.[1]
  • ஒரு கருத்தை ஆயிரம் முறை கூறினாலும் அது அநேக சமயம் புதிய தாகவே இருக்கும். -ஹோம்ஸ்[1]
  •  சுவையின் தூய்மைக்கு உறைகல் எது வெனில் தூய விஷயங்கள் சிலவற்றிலன்றி அனைத்திலும் சுவை காண்பதுவே. -ரஸ்கின்[1]
  • நற்சுவை கற்பிப்பதே நல்லொழுக்கம் அமையச் செய்வதாகும். -ரஸ்கின்[1]
  • நூற்சுவை அறிவு என்பது யாது? நூல்களின் குணங்களைச் சந்தோஷத்தோடும், குற்றங்களை வருத்தத்தோடும் காணும் மனப்பான்மையே ஆகும். -அடிஸன்[1]
  • நல்ல சுவையறிவு குறைகளைப் பாராது, நியாயமான சுவையறிவு குணங்களைத் தேடும். நல்ல சுவையறிவு குறைந்தோ கெட்டோ போகலாம். நியாயமான சுவையறிவு நாளுக்கு நாள் அதிகமாக வளரும். -ஜேமிஸன்[1]
  • சுவையறிவு இல்லாத கற்பனை சக்தியைப்போல பயங்கரமான தொன்றும் கிடையாது. -கதே[1]

பழமொழிகள்[தொகு]

* நல்ல சுவையறிவு குணங்களைக் காணும், நியாயமான சுவையறிவு அவற்றின் அளவைக் கணிக்கும்.[1]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 பொ. திருகூடசுந்தரம் (1959). அறிவுக் கனிகள்/நூற் சுவை. நூல் 172-174. காந்தி நிலையம். Retrieved on 13 மே 2019.
"https://ta.wikiquote.org/w/index.php?title=நூற்_சுவை&oldid=17063" இலிருந்து மீள்விக்கப்பட்டது