ஆலிவர் வெண்டெல் ஹோம்ஸ்

விக்கிமேற்கோள் இலிருந்து
1910 ஆண்டைய ஹோம்சின் ஒளிப்படம்

ஆலிவர் வெண்டெல் ஹோம்ஸ் (Oliver Wendell Holmes Sr.) (29 ஆகத்து 1809 - அக்டோபர் 8, 1894) ஒரு அமெரிக்க மருத்துவர், எழுத்தாளர், கவிஞர் ஆவார்.

மேற்கோள்கள்[தொகு]

அன்பு[தொகு]

  • நன்மை செய்ய வேண்டும் என்ற உணர்ச்சியிருந்தால் அத்துடன் தீயகுணங்கள் அதிகமான அளவில் சேர்ந்திருக்க முடியாது; சுயநலத்தோடு சில நற்குணங்கள் கூடச் சேர்ந்திருப்பதில்லை.[1]

அறிவு[தொகு]

  • நூலறிவு பேசும் - மெய்யறிவு கேட்கும்.[2]

ஆன்மா[தொகு]

  • ஆன்மாவின் கதவை ஒரு விருந்தாளிக்கு ஒருமுறை திறந்து விட்டால், பின் யாரெல்லாம் உள்ளே வந்து புகுவர் என்று கூறிவிட முடியாது.[3]

இலட்சியம்[தொகு]

  • ஒருவனுடைய லட்சியம் இதுவென்று அறிந்து விட்டால், பின் அவனைப் பற்றி அறிந்துகொள்ளுதல் கஷ்டமான காரியம் அன்று.[4]

உணர்ச்சி[தொகு]

  • சிரிப்பும் கண்ணீரும் உணர்ச்சி என்னும் ஒரே இயந்திரத்தை ஓட்டுகின்றன. ஒன்று. காற்றின் வலிமையாலும், மற்றது தண்ணீரின் வலிமையாலும் ஓட்டுகின்றன. அவ்வளவுதான்.[5]

உண்மை[தொகு]

  • முரணில்லாதிருக்க முயல்க. உண்மையாயிருக்க மட்டுமே உழைத்திடுக.[6]

கல்வி[தொகு]

  •  பிறர் உவக்கும் வண்ணம் நடந்து கொள்வதற்கான ஆசையும் அறிவும் ஏற்படுத்துவதே குழந்தைகளை கெளரவமானவராக வளர்ப்பதன் சாரமாகும்.[7]

செல்வம்[தொகு]

  • நான் லட்சுமி தேவியிடம் பிரார்த்திப்பதெல்லாம் நான் செலவு செய்யவேண்டியதை விடச் சிறிது அதிகமாக அளித்தருள வேண்டும் என்பதே.[8]

சொற்கள்[தொகு]

  • சிலேடை உபயோகிப்பவர் இருப்புப் பாதையில் கற்களை வைத்து மகிழும் விஷமச் சிறுவர்களை ஒப்பர்.[9]

நூற் சுவை[தொகு]

  • ஒரு கருத்தை ஆயிரம் முறை கூறினாலும் அது அநேக சமயம் புதிய தாகவே இருக்கும். [10]

பக்தி[தொகு]

  • பக்தியுடன் முழங்கால் பணிந்தால், எல்லாம் புனிதமாகிவிடும்.[11]

மதம்[தொகு]

  • மதப் பிடிவாதியின் மனம் கண்ணை ஒக்கும், அதிக ஒளி பட்டால் அதிகமாக இடுக்கும்.[12]

குறிப்புகள்[தொகு]

  1. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 78-81. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  2. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/அறிவு. நூல் 52- 61. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  3. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/ஆன்மா. நூல் 44- 46. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  4. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/இலட்சியம். நூல் 46- 50. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  5. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 118-120. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  6. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/வாய்மை. நூல் 23- 29. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  7. பொ. திருகூடசுந்தரம் (1959). அறிவுக் கனிகள்/கல்வி. நூல் 150-157. காந்தி நிலையம். Retrieved on 13 மே 2019.
  8. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/செல்வம். நூல் 99- 106. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  9. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/சொல். நூல் 85- 87. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  10. பொ. திருகூடசுந்தரம் (1959). அறிவுக் கனிகள்/நூற் சுவை. நூல் 172-174. காந்தி நிலையம். Retrieved on 13 மே 2019.
  11. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 250-251. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  12. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/மதம். நூல் 38-42. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
"https://ta.wikiquote.org/w/index.php?title=ஆலிவர்_வெண்டெல்_ஹோம்ஸ்&oldid=22040" இலிருந்து மீள்விக்கப்பட்டது