குற்றம் காணல்

விக்கிமேற்கோள் இலிருந்து

குற்றம் காணல் குறித்த மேற்கோள்கள்

  • தன்னைக் காண்பதுவே மிகக் கடினமான காரியம். பிறர் செயல்களில் குற்றம் காண்பதுவே மிக எளிதான காரியம். -தேல்ஸ்[1]
  • தீயோர் தம் குற்றங்களைத் தாமே மன்னித்து விடுவர்; நல்லோர் இனிமேல் அத்தகைய குற்றங்கள் செய்யாதிருப்பர்; முதற் குற்றத்தைச் சரியென்று சாதிப்பவன் மூன்றாவது குற்றம் செய்தவனாகின்றான். -பென் ஜான்ஸன்[1]
  • பிறர் குற்றம் காண்பதும் தன் குற்றம் மறப்பதுமே மடைமையின் விசேஷ லட்சணம். -ஸிஸரோ[1]
  • பிறர் குற்றங்களை நம் கண் முன் வைத்துக் கொள்கிறோம். நம் குற்றங்களை நம் பின்புறம் வைத்துக் கொள்கிறோம்.-ஸெனிக்கா[1]
  • ஒருவனிடம் குறைகாண்பது கடவுளிடம் குறை காண்டதாகும். கடவுள் அவனிடம் விளங்க விரும்பாத பொழுது நாம் ஏன் மனிதனைக் குறை கூற வேண்டும்? -பால் ரிச்சர்ட்[1]
  • நாம் பிறரிடம் கண்டு பரிகாசம் செய்யுங் குற்றங்கள் நமக்குள் நம்மையே பரிகாசம் செய்யும். -ப்ரெளண்[1]
  • எல்லா விஷயங்களிலும் நல்ல அம்சத்தைக் காணவே எப்பொழுதும் முயல்க. அநேகமாக ஒவ்வொரு விஷயத்திலும் நல்ல அம்சம் உண்டு. -ஆவ்பரி[1]
  • பிறர் குற்றம் கூறினால் அதை எதிர்க்கவும் முடியாது. காப்பாற்றிக் கொள்ளவும் முடியாது. அதை அலட்சியம் செய்ய முடியும். அப்படிச் செய்தால் அது தானாக வந்து அடிபணிந்து விடும். -கதே[1]
  • யாரேனும் குறை கூறினால் அது உண்மையாயின் திருந்திக்கொள். பொய்யாயின் நகைத்துவிடு. -எபிக்டெட்டஸ்[1]
  • அனாமதேயமாய்ப் பிறரைப் பழிப்பவன் ஒருவரும் அறியாத தன் சொந்தப் பெயரை ஒவ்வொருவரும் சூட்டும் 'கோழை' என்னும் பெயராய் மாற்றிக் கொள்கிறான். -பெடிட்-லென்[1]
  • ஏளனம் என்பது சிறியோர் இதயத்தில் எழுகின்ற நச்சுப்புகையாகும். -டெனிஸன்[1]
  • குறை கூறுவது பிறர் மூலம் நம்மைச் சிறுமை என்பது செய்து கொள்வதேயாகும். -பால்ரிச்சர்ட்[1]
  • உரோமம் ஒன்றாகயிருந்தாலும் அதற்கும் நிழல் உண்டு. -பப்ளியஸ் ஸைரஸ்[1]
  • உபகாரத்தைவிட அனுதாபமே அதிக உதவி செய்வதாகும். -ஆவ்பரி[1]
  • என்னைப்ப்ற்றி அவதூறு பேசுபவன் என்னுடைய சிறந்த நண்பன். ஏனெனில் அவன் என்னைக் கீழானவனிடமிருந்து விலகச் செய்யும் சல்லடையை ஒப்பான். -பால் ரிச்சர்ட்[1]
  • ஒரு குற்றம் செய்து விட்டு அதை மறைக்கப் பொய் கூறுகிறவன் குற்றங்கள் ஒன்றுக்கு இரண்டு செய்தவனாகி விடுகிறான். -வாட்ஸ்[1]
  • குழந்தைகள் கற்கும்பொழுது கடினமான மொழிகளைக் கவனியாமல் கடந்து செல்வதுபோல் சிலர் தம்முடைய குறைகளைக் கவனியாதிருந்து விடுகின்றனர். -லெய்ட்டன்[1]
  • சில தோஷங்கள் குணங்களுடன் உறவுகொண்டவை; அதனால் மறத்தைக் களையும் பொழுது அறத்தையும் அழிக்க நேரிட்டு விடலாம். -கோல்ட்ஸ்மித்[1]
  • குறைகளைக் கண்டு மகிழ்ந்தால் குணங்களைக் கண்டு பெறும் நன்மையை இழந்து விடுவோம். -லா புரூயர்[1]
  • தான் பரிகசிப்பதைத் திரித்துக் கூறுபவன் தான் திரித்துக் கூறுவதைப் பரிகசிப்பதில்லை. -ஹாட்ஜஸன்[1]
  • பொய்யும் சூதும் முளையாத தேசமில்லை. அவற்றிற்கு எந்த சீதோஷ்ண ஸ்திதியும் ஆகும். - அடிஸன்[1]
  • குறை காண்போர் அநேக சமயங்களில் புழுக்களைக் களையும் பொழுது பூக்களையும் களைந்து விடுகின்றனர். - ரிக்டர்[1]
  • பிறருடைய தவறுகளையும், குற்றங்கனையும் விவரித்துக் கூறிக்கொண்டே இராதே. அதைவிட உன்னையே நீ எண்ணிப்பார்; உன் குற்றங்களை உற்று நோக்கித் தவிர்த்துவிடு! அதுதான் சிறந்த வழி! -கான்பூசியசு[2]

பழமொழிகள்[தொகு]

  • கண்ணாடி வீட்டில் வாழ்பவர் கற்களை எறியக் கூடாது. -ஆங்கிலப் பழமொழி[1]

குறிப்புகள்[தொகு]

  1. 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 1.11 1.12 1.13 1.14 1.15 1.16 1.17 1.18 1.19 1.20 1.21 1.22 என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/குற்றம் காணல். நூல் 71- 73. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  2. என். வி. கலைமணி (2000). கன்பூசியஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள். நூல் 7-25. சாந்தி நிலையம். Retrieved on 7 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=குற்றம்_காணல்&oldid=18786" இலிருந்து மீள்விக்கப்பட்டது