ஆலிவர் கோல்ட்ஸ்மித்

விக்கிமேற்கோள் இலிருந்து
அதிர்ஷ்டம் தராததை யெல்லாம் திருப்தியிடமிருந்து பெறுவோமாக.

ஆலிவர் கோல்ட்ஸ்மித் (10 நவம்பர் 1728 - 4 ஏப்ரல் 1774) ஒரு ஐரிஷ் புதின எழுத்தாளர், நாடக ஆசிரியர், கவிஞர் ஆவார்.

மேற்கோள்கள்[தொகு]

== அச்சம்

  • நன்றியைக்காட்டிலும் கடமையைச் செய்ய அச்சமே தூண்டுகின்றது. ஒழுக்கத்தை விரும்பியோ, எல்லாப் பொருள்களையும் அளித்துள்ள இறைவனுக்கு நன்றி செலுத்தவோ நேர்மையாக நடப்பவன் ஒருவன் என்றால், தண்டனைக்கு அஞ்சி நேர்மையாக நடப்பவர்கள் ஆயிரக்கணக்கில் இருக்கிறார்கள்.[1]

அற்ப விஷயம்[தொகு]

கருத்துடன் கற்றல்[தொகு]

  • ஒரு பையன் தனியாக ஐந்து ஆண்டுகள் படிப்பதைவிட பொதுப் பள்ளியில் ஓர் ஆண்டிலேயே அதிகமாக அறிவைப் பெற்றுவிடுவான். இளைஞர். உலகியல் அறிவை ஆசிரியர்களிடமிருந்து பெறுவதைக்காட்டிலும் தமக்குச் சமமாயுள்ள இளைஞர்களிடமிருந்து அதிகமாய்க் கற்கின்றனர்.[3]

குற்றம் காணல்[தொகு]

  • சில தோஷங்கள் குணங்களுடன் உறவுகொண்டவை; அதனால் மறத்தைக் களையும் பொழுது அறத்தையும் அழிக்க நேரிட்டு விடலாம்.[4]

சட்டம்[தொகு]

  • ஆங்கிலேயரின் சட்டங்கள் குற்றத்தைத் தண்டிக்கின்றன: சீனர்களின் சட்டங்கள் இன்னும் அதிகமாய்ச் செய்தின்றன, அவை நன்மையைப் பாராட்டிப் பரிசளிக்கின்றன. [5]
  • சட்டங்கள் ஏழைகளைக் கசக்கிப் பிழிகின்றன. பணக்காரர்களோ சட்டத்தை ஆட்சி செய்கின்றனர்.[5]

சிரிப்பு[தொகு]

சுறுசுறுப்பு[தொகு]

  • தேனீயைப் போல, நமது வேலையை நாம் இன்பமயமாக்கிக கொள்வோம்.[7]

செல்வம்[தொகு]

  • மண்ணுலகில் மனிதருக்கு வேண்டுவது வெகு சொற்பம். அதுவும் சின்னாட்களுக்கே.[8]

தவறுக்கு வருந்துதல்[தொகு]

  • தடுக்கி விழாமலே இருப்பதில் நமக்குத் தலைசிறந்த பெருமையில்லை. ஆனால், நாம் விழுந்த பொழுதெல்லாம் மீண்டும் எழுதலில் இருக்கின்றது. [9]

நீதி[தொகு]

  • பலவிதமான சட்டங்களை இயற்றி நீதியைக் கட்டுபபடுத்துவதும், நீதிபதிகளையே அதிகம் நம்பி விட்டுவிடுவதும். ஒன்றுக் கொன்று எதிர்ப்பக்கங்களிலுள்ள இரண்டு பாறைகள்: இந்தப் பாறைகளின்மீதே சட்டங்களியற்றுவோரின் அறிவு மோதி உடைந்துவிடுகின்றது. முதல் விஷயத்தில், போர்வைகளால் மூச்சுத் திணறி இறந்து போன சக்கரவர்த்தியை உதாரணமாய்க் கூறலாம்; குளிரைக் காப்பதற்காகவே அவருக்குப் போர்வைகள் போடப்பெற்றிருந்தன; மற்ற விஷயத்தில், எதிரிகளிடம் தன் கோட்டைகளை விட்டுவிட்ட நகரத்தை உதாரணமாகக் கூறலாம். அந்நகர மக்கள் தாங்கள் தைரியத்தை மட்டுமே நம்பியிருப்பதாகக் காட்டிக்கொள்ளவே அப்படிச் செய்தார்களாம்.[10]

புதினம்[தொகு]

  • எல்லாவற்றிற்கும் மேலாக, உங்களுடைய மகன் புதுமைக் கதையான ஒரு நாவலைத் தீண்டிவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.[11]

மன நிறைவு[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 11-12. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  2. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 75-77. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  3. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 153. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  4. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/குற்றம் காணல். நூல் 71- 73. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  5. 5.0 5.1 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 171-173. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  6. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/சிரிப்பு. நூல் 96- 98. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  7. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 188-189. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  8. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/செல்வம். நூல் 99- 106. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  9. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 191. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  10. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 239-241. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  11. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 230-231. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  12. பொ. திருகூடசுந்தரம் (1959). அறிவுக் கனிகள்/திருப்தி. நூல் 143-146. காந்தி நிலையம். Retrieved on 13 மே 2019.
"https://ta.wikiquote.org/w/index.php?title=ஆலிவர்_கோல்ட்ஸ்மித்&oldid=21915" இலிருந்து மீள்விக்கப்பட்டது