ஜவகர்லால் நேரு
Jump to navigation
Jump to search
ஜவகர்லால் நேரு (நவம்பர் 14,1889 – மே 27,1964) இந்தியாவின் முதல் பிரதமர் (தலைமை அமைச்சர்). இவர் பண்டிட் நேரு, பண்டிதர் நேரு என்றும் அழைக்கப்பெற்றார்.
பொருளடக்கம்
திராவிடர்[தொகு]
- ஆரியர்கள் இந்தியாவிற்குள் நுழையும் முன்னர், இந்தியா முழுதும் பரவியிருந்தவர்கள் திராவிடர்கள். அவர்கள் எகிப்து, மெசபடோமியா நாடுகளோடு வணிகம் செய்து வாழ்ந்த பழைய நாகரிகத்துக்கு சொந்தக்காரர்கள்.[1]
- இந்தியாவின் எதிர்கால முன்னேற்றம், குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் கல்வியை மேம்படுத்துவதில் தான் இருக்கிறது.
கடவுள்[தொகு]
- நான் விஞ்ஞானக் கோயிலில் அறிவைத் தேடும் ஒரு பக்தன். வெறுமனே ஆன்மிகம் என்று பேசிக்கொண்டிருக்க மாட்டேன்
- பசியால் பரிதவிக்கும் ஓர் ஆணுக்கோ பெண்ணுக்கோ கடவுள் என்பது ஒரு பொருட்டல்ல. அவர்களுக்கு உணவு வேண்டும். இந்தியா பசியும் பட்டினியும் மலிந்த நாடு. இங்கு சோற்றுக்கே அல்லாடுகிற கோடானு கோடி மக்களிடம் சத்தியம் - கடவுள் - மறுவாழ்வு - அருட்செல்வம் - பற்றியெல்லாம் பேசுவது கேலிக்கூத்து. அவர்களுக்கு உணவு, உடை, உறைவிடம், கல்வி, நல்வாழ்வு போன்ற தேவைகளைத் தேடித் தர வேண்டியது நமது கடமை. விஞ்ஞான அறிவும் நவீன தொழில்நுட்பமுமே இவற்றைச் சாதிக்கும்.
இறுதி ஆசை[தொகு]
- நான் இறந்த பிறகு எனது உடலை எரியூட்ட வேண்டும். எந்த விதமான மதச்சடங்குகளும் செய்யக் கூடாது. அவற்றில் எனக்கு நம்பிக்கையும் உடன்பாடும் இல்லை. கொஞ்சம் சாம்பலை எடுத்து கங்கையிலே கரையுங்கள். கங்கையில் கரைக்கச் சொல்வது மத நம்பிக்கையினால் அல்ல. கங்கை நான் நேசித்த ஜீவநதி. அதனோடு சங்கமிக்க விரும்புகிறேன். மிச்சமிருக்கிற சாம்பலை இந்தியாவின் வயல்கள் எங்கும் தூவுங்கள். உழவர்கள் உழுது தானியங்களை விளைவிக்கும் அந்த மண்ணோடு மண்ணாக, இந்தியத் திருநாட்டின் காற்றோடு காற்றாகக் கலந்து கிடக்க விரும்புகிறேன்.[2]
பாரத மாதா[தொகு]
- இந்த நாட்டை பாரத மாதா என்கிறோம். பாரத மாதா அழகான, ஆனாதரவான தாயாக, அவளுடைய கூந்தல் பூமியைத் தொடுவதாகச் சில ஓவியங்கலில் தீட்டியுள்ளனர். அது பாரத மாதவின் உண்மையான தோற்றமல்ல.[3]
- பாரதமாத வாழ்க பாரதமாதா வாழ்க என்று நாம் கூறும் மாதா யார். ஓவியங்களில் தீட்டப்பட்டிருக்கின்ற கற்பனையான மாதா அல்ல, இந்திய நிலப்பரப்பும் அல்ல, இந்திய மக்களைத்தான் வாழ்க என்று சொல்லுகிறோம்.[4]
அரசியல்வாதி[தொகு]
- அரசியல்வாதி எல்லா விசயங்களைப் பற்றியும் பேச விரும்புகிறார். அவர் தனக்குத் தெரிந்ததைக் காட்டிலும் அதிகமான அறிவுள்ளவரைப்போல எப்பொழுதும் பாசாங்கு செய்கிறார்- ஜவகர்லால் நேரு[5]
மதம்[தொகு]
- மதமானது அநேகமாக எப்போதுமே குருட்டு நம்பிக்கை, பிற்போக்கு, வறட்டுக் கோட்பாடு, வெறியுணர்ச்சி, முடநம்பிக்கை, சுரண்டல், உடமையாளர்களின் நலன்களைப் பாதுகாத்தல் ஆகியவற்றை ஆதரிப்பதாகத் தோன்றுகிறது. ஜவகர்லால் நேரு[6]
- மதமானது தெளிவான சிந்தனைக்கு எதிரியாக எனக்குத் தோன்றுகிறது. ஏனெனில் அது மாற்றப்பட முடியாத சில தத்துவங்களையும் கோட்பாடுகளையும் மறுப்பில்லாமல் ஏற்றுக்கொள்வதை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது.[7]
- மதத்திலிருந்துதான் எதேசதிகாரம் பிறக்கிறது, மக்கள் அடிமைகளாக்கப்படுகின்றனர். [8]
- மதம் மனிதனுடைய சுதந்திர தாகத்தைக் குறைக்கின்ற அபீனாக கடந்த காலத்தில் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டது.[9]
இந்திய தேசிய காங்கிரஸ்[தொகு]
- காங்கிரஸ் அரசியல் ஜனநாயகத்தை ஆதரிக்கிறது என்பதைத் தவிர விரிவாகப் பதிலளிக்க இயலாது. இதற்குமேல் எந்த முடிவும் செய்யப்படவில்லை. இன்று நிலவுகின்ற அமைப்பில் எவ்விதமான மாற்றத்தையும் செய்வதற்கு அது விரும்பவில்லை என்பது இதன் பெரும்படியான அர்த்தம்.- [10]
சிறைச்சாலை[தொகு]
- நாட்டிலிருந்து வெளியேற்றப்படுகின்ற, சிறையில் அடைக்கப்படுகின்ற நபர்கள் பிழைத்துக்கொண்டால், ஏன் உயிரோடு இருக்கிறேன் என வேதனைப்படுவார்கள். ஆனால் இலக்கியவாதி அந்த நாட்களை தன் வாழ்க்கையிலேயே மிகவும் இனிமையானவை என கருதுவான் - ஜவகர்லால் நேரு[11]
சான்றுகள்[தொகு]
- ↑ தமிழ் மொழியின் சிறப்பைக் கூறும் மேற்கோள்கள்
- ↑ திரு.வீரபாண்டியன் (2016 நவம்பர் 14). இந்தியாவின் ஆன்மாவில் கலந்த நேரு!. கட்டுரை. தி இந்து. Retrieved on 14 நவம்பர் 2016.
- ↑ ஜவகர்லால் நேரு போராட்டகாலச் சிந்தனைகள், அர்ஜுன் தேவ், தமிழில் நா. தர்மராஜன், நேஷனல் புக்டிரஸ்ட், இந்தியா, பதிப்பு 2010, பக்கம் 108
- ↑ ஜவகர்லால் நேரு போராட்டகாலச் சிந்தனைகள், அர்ஜுன் தேவ், தமிழில் நா. தர்மராஜன், நேஷனல் புக்டிரஸ்ட், இந்தியா, பதிப்பு 2010, பக்கம் 109
- ↑ ஜவகர்லால் நேரு போராட்டகாலச் சிந்தனைகள், அர்ஜுன் தேவ், தமிழில் நா. தர்மராஜன், நேஷனல் புக்டிரஸ்ட், இந்தியா, பதிப்பு 2010, பக்கம் 405
- ↑ ஜவகர்லால் நேரு போராட்டகாலச் சிந்தனைகள், அர்ஜுன் தேவ், தமிழில் நா. தர்மராஜன், நேஷனல் புக்டிரஸ்ட், இந்தியா, பதிப்பு 2010, பக்கம் 225
- ↑ ஜவகர்லால் நேரு போராட்டகாலச் சிந்தனைகள், அர்ஜுன் தேவ், தமிழில் நா. தர்மராஜன், நேஷனல் புக்டிரஸ்ட், இந்தியா, பதிப்பு 2010, பக்கம் 226
- ↑ ஜவகர்லால் நேரு போராட்டகாலச் சிந்தனைகள், அர்ஜுன் தேவ், தமிழில் நா. தர்மராஜன், நேஷனல் புக்டிரஸ்ட், இந்தியா, பதிப்பு 2010, பக்கம் 88
- ↑ மேற்படி
- ↑ ஜவகர்லால் நேரு போராட்டகாலச் சிந்தனைகள், அர்ஜுன் தேவ், தமிழில் நா. தர்மராஜன், நேஷனல் புக்டிரஸ்ட், இந்தியா, பதிப்பு 2010, பக்கம் 275-276
- ↑ ஜவகர்லால் நேரு போராட்டகாலச் சிந்தனைகள், அர்ஜுன் தேவ், தமிழில் நா. தர்மராஜன், நேஷனல் புக்டிரஸ்ட், இந்தியா, பதிப்பு 2010, பக்கம் 404