சொற்கள்
Jump to navigation
Jump to search
சொற்களை (Words) என்பவை ஏதொன்றையும் குறிக்க பயன்படும் அடிப்படை மொழிக் கூறு. உலகில் உள்ள மிகப்பெரும்பாலான மொழிகளில் சொற்களைக் கோர்த்து ஒரு சொற்றொடர் வழி ஒரு கருத்தோ செய்தியோ தெரிவிக்கப் படுகின்றது.
மேற்கோள்கள்[தொகு]
- சூரிய கிரணங்கள் போன்றவையே சொற்கள்; அதிகமாக ஒருமுகப்பட்டால் அக்கினியாய்ச் சுடும். -ஸதே[1]
- நன்றாய்ப் பேசும் ஆற்றல் இன்மையும், நாவை அடக்கும் ஆற்றல் இன்மையும் பெரிய துர் அதிர்ஷ்டங்களாகும் -லா புரூயர்[1]
- சபையில் பேசாத காரணம் என்ன? முட்டாளாய் இருப்பதா, மொழிகள் கிடைக்கவில்லையா? -முட்டாள் ஒருநாளும் நாவை அடக்க முடியாது. -டிமாரட்டஸ்[1]
- பேச வேண்டிய காலம் அறியாதவன் பேச வேண்டாத காலமும் அறியான். -பப்ளியஸ் ஸைரஸ்[1]
- மனிதனுக்கு மட்டுமே பேசும்சக்தி உளது; அதன் முதல் உபயோகமும் இறுதி உபயோகமும் கேள்விகள் கேட்பதே. -அர்னால்ட் பென்னட்[1]
- இந்த வாக்கியத்தின் பின்னால் ஒரு மனிதன் உள்ளனரா. இல்லையா? இது ஒரு ஆன்மாவைப் பிரதிபலிக்கின்றதா, இல்லையா? இதைப் பொறுத்ததே அதன் ஆற்றல். -எமர்ஸன்[1]
- மொழிகள் இலைகளை ஒக்கும்; தழை நிறைந்த மரத்தில் சத்துள்ள பழங்கள் இரா. -போப்[1]
- நன் மொழி கூறலும், ஒருவித நற்செயலே ஆயினும் மொழிகள் செயல்கள் ஆகா. -ஷேக்ஸ்பியர்[1]
- சொற்கள் சுருங்கினால், பயன் வீணாவதில்லை. - ஷேக்ஸ்பியர்[2]
- மொழிகள் என்பவை அறிவு உபயோகிக்கும் நாணயங்களேயாகும். சர்க்காரிடம் பொருளில்லையெனில் நாணயங்கள் செலாவணியாகா, அதுபோல் பொருளில்லாத மொழிகளும் பயன்படா. -கோல்ட்டன்[1]
- மொழிகள் சாதனமேயன்றி லட்சியமன்று. கருத்தைக் கூறுவதே நம் நோக்கம். அதற்குரிய ஆயுதமே பாஷை, -ரெய்னால்ட்ஸ்[1]
- நாவன்மை என்பது ஆன்மாவின் இடையீடில்லாத இயக்கமேயாகும். அலங்காரமாய்ப் பேசுவோர் நாவலர் அல்லர். பல சொல் அடுக்கிப் பாமரரை மயக்கப் பழக்கப் படுத்தப்பட்ட நாவினரேயாவர். -ஸிஸரோ[1]
- கருத்து பழையதாயுமிருக்கலாம். பலர் கூறிய தாயுமிருக்கலாம். ஆயினும் அது உயர்ந்த முறையில் அழகாய்க் கூறுபவனுக்கே உரியதாகும் - லவெல்[1]
- நமக்கு ஆண்டவன் நா அளித்திருப்பது இன்சொல் இயம்புவதற்கே. - ஹீன்[1]
- சிலேடை உபயோகிப்பவர் இருப்புப் பாதையில் கற்களை வைத்து மகிழும் விஷமச் சிறுவர்களை ஒப்பர். - ஹோம்ஸ்[1]
- வீண்சொற்கள் விஷயங்களை வியர்ந்த மாக்குகின்றன. -பிஷப் ஆண்ட்ரூஸ்[1]
- பொருளில்லாத சொற்கள் கருத்தில்லாத செயல்களாகும்; சொற்கள் செயல்களின் சிறகுகள். - லவேட்டர்[2]
- உன்சொற்கள் எப்படி இருக்கின்றனவோ. அந்த அளவுக்கு உன் அன்பு மதிக்கப்பெறும் உன் அன்பின் தன்மைக்கு ஏற்றபடி உன் செயல்கள் இருக்கும். உன் செயல்களுக்கு ஏற்றபடி உன் வாழ்க்கை இருக்கும். -சாக்ரடீஸ்[2]
- ஆயிரம் சொற்கள் சேர்ந்தாலும், ஒரு செயலைப் போல் மனங்களில் பதிவதில்லை. -இப்ஸன்
- ஒரு மனிதன் ஒரு செயலைச் செய்ய வேண்டாமென்று நீ கருதினால், அதைப்பற்றி அவனைப் பேசும்படி செய்; ஏனெனில், மனிதர்கள் எவ்வளவு அதிகமாய்ப் பேசுகின்றனரோ, அந்த அளவுக்கு அவர்கள் வேறு எதையும் செய்வதில்லை.[2]
குறிப்புகள்[தொகு]
- ↑ 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 1.11 1.12 1.13 1.14 என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/சொல். நூல் 85- 87. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
- ↑ 2.0 2.1 2.2 2.3 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 198-199. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.